Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rahul Gandhi’ Category

Laloo, Vasundhara Raje, Jaswanth Singh – Dynasty Politics: Some Samples for Indian Monarchy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007

வாரிசு மீன்கள்

லாலு குடும்பம்: ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில், மனைவி ராப்ரி தேவி, மைத்துனர்கள் சாது, சுபாஷ் என ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது.

ராஜஸ்தான் முதல்வர் (பா.ஜ) வசுந்தரா ராஜேவின் மகன் எம்.பி.யாக உள்ளார்.

பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் வாரிசும் அரசியல் களத்தில் உள்ளார் என்கிறார் தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளர் டி.பி.திரிபாதி.

Posted in Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), DMK, dynasty, Examples, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Jasvanth, Jaswanth, King, Kingdom, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Leaders, Monarchy, Politics, Rahul, Rahul Gandhi, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rulers, Samples, Sonia, Sonia Gandhi, Sonia Gandi, VasundaraRaje, Vasundhara, Vasundhara Raje, VasundharaRaje, Vasundhra, Vasundhra Raje, Vasunthara, VasuntharaRaje, Yadav | Leave a Comment »

Uttar Pradesh Elections – Anlaysis: Neeraja Chowdhry on Rahul Gandhi Politics

Posted by Snapjudge மேல் மார்ச் 26, 2007

சர்ச்சைக்கு வித்திட்ட ராகுல் காந்தியின் பிரசாரம்!

நீரஜா செüத்ரி

“”இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் பாபர் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார்கள்” என்று ராகுல் காந்தி பேசியதை நியாயப்படுத்தவும், விளக்கம் அளிக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் எந்தெந்த வகையிலோ முயல்கின்றனர்; ஆனால் தனிப்பட்ட முறையில் பேசும்போது தருமசங்கடத்தில் நெளிகின்றனர்.

உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி, எதிர்க்கட்சியினரைத் தாக்குவதாக நினைத்து சொந்தக் கட்சிக்காரர்களையே தாக்கிவிட்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பி.வி. நரசிம்மராவ்தான் பிரதமராக இருந்தார். உத்தரப் பிரதேச அரசைக் கலைக்கவும் தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், மத்திய அமைச்சரவை என்று பல்வேறு அமைப்புகளும் அவருக்கு முழு அதிகாரத்தை அளித்திருந்த நிலையிலும் மசூதி இடிக்கப்பட்டதைத் தடுக்க அவரால் முடியவில்லை.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்திருந்தால் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார் என்பது உண்மையே. ஆனால், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலைகளை வைக்க, கதவுகளின் பூட்டைத் திறக்க உத்தரவிட்டதும் அவரே; ஷா பானு வழக்கில் அவருடைய கணவரே ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை செல்லாததாக்க ஒரு மசோதா கொண்டுவந்ததும் அவரே. இவ்விரு செயல்களும் மக்களை மத அடிப்படையில் அணி திரள வைத்தன. மூடப்பட்ட இந்த அத்தியாயங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்யவே ராகுல் காந்தியின் கருத்து உதவியிருக்கிறது. இந்நிலையில், ராகுலின் இக்கருத்து பாரதீய ஜனதாவுக்குத்தான் அரசியல் லாபத்தை அள்ளித்தரும். பாபர் மசூதி இடிப்பு என்ற விவகாரம் ஹிந்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் “”நடந்து முடிந்துபோன” ஒரு விஷயம்தான்.

அவ்வப்போது, “”ராமருக்குக் கோயில் கட்டுவோம்” என்று அரற்றிக் கொண்டிருந்தாலும், அயோத்தி விவகாரம் இனி தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படாது என்பதை சங்கப் பரிவாரங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவேதான் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு என்று பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

மத ரீதியாக மக்களைத் திரட்டும் பிரச்சினைகளைப் பேசினால் அதனால் பலன் அடைவது பாரதீய ஜனதாவும் சமாஜவாதி கட்சியும்தான். ஹிந்துத்துவா கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தும் பாஜக கூட இப்போது, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாதது குறித்தும், அரசின் நிதி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியது குறித்தும்தான் கண்டனம் தெரிவித்து வருகிறது.

ராகுல் காந்தியின் கருத்தால் முஸ்லிம்கள், காங்கிரஸýக்கு மீண்டும் ஆதரவு தருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, முஸ்லிம்களின் வோட்டு சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக தளம், ஜன மோர்ச்சா என்று ஐந்து வெவ்வேறு கட்சிகளுக்குப் பிரிந்து போகும்.

அதே சமயம், மேல் சாதியினரின் வாக்குகள் பாஜகவுக்கு குவியும். சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவும், உத்தரகண்ட் பேரவைத் தேர்தல் முடிவும், மேல் சாதியினர் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதையே உணர்த்துகின்றன.

இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதி உள்ள குடும்பம் “”நேரு-காந்தி” குடும்பம்தான் என்பதையே ராகுலின் பேச்சு வலியுறுத்துகிறது. குடும்ப ஆட்சி என்றாலே எழும் கண்டனக் குரல்கள் இப்போது அடங்கி வருகின்றன. இப்போது இதுதான் நடைமுறை என்றாகி வருகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் 500 குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுவிடலாம். இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 4-வது இடம்தான் கிடைக்கும் என்று பேசப்படும் நேரத்தில், ராகுலின் கருத்து காரணமாக காரசாரமான விவாதங்கள் தொடங்கிவிட்டன. ராகுல் பேசியது சரியே என்று காங்கிரஸ் தொண்டர்கள் வீறாப்போடு எதிர்வாதம் செய்கின்றனர். சாரமற்று, விறுவிறுப்பற்று இருந்த தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. அந்த வகையில் ராகுலின் பேச்சு வரவேற்கத்தக்கதே.

ராகுல் காந்தி வளர்ந்துவரும் இளம் தலைவர்; இளைய சமுதாயத்தின் பிரதிநிதி. அந்த வயது மக்களின் கனவுகளை, ஆசைகளை, நியாயங்களை பிரதிபலிக்கும் கருத்துகளை அவர் எடுத்துவைக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பு பிரச்சினை செத்துவிட்டது. நரசிம்மராவும் மறைந்துவிட்டார். நடந்த சம்பவத்துக்கு சோனியா காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். முஸ்லிம்களை ஈர்க்கவும், நம்பிக்கை ஊட்டவும் வேறு வழிகள் உள்ளன. வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்க, தான் மேற்கொள்ளவிருக்கும் உத்திகளை, லட்சியங்களை ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் முன் நிறுத்த வேண்டும்.

தமிழில்: சாரி.

=========================================================
உ.பி. தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியில் அதிக அளவில் கிரிமினல்கள் போட்டி

லக்னெü, ஏப். 11: உத்தரப்பிரதேச மாநில பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் அதிக குற்றப்பின்னணி கொண்டவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் கொடுத்த தகவல்களை உத்தரப்பிரதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆராய்ந்தது.

அதன்படி

  1. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் (33.33%) அதிக குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.
  2. பாஜகவினர் (27.03%) 2-ம் இடத்திலும்,
  3. சமாஜவாதி கட்சியினர் (26.5%) 3-ம் இடத்திலும்,
  4. காங்கிரஸ் கட்சியினர் (20.17%) 4-ம் இடத்திலும்,
  5. ராஷ்டிரீய லோக்தளம் கட்சியினர் (18.31%) 5-ம் இடத்திலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல

  1. சமாஜவாதி கட்சியினரில் அதிகம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
  2. இரண்டாம் இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரும்,
  3. பாஜக,
  4. காங்கிரஸ் ஆகிய கட்சியினர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு (PAN Number) நிரந்தர கணக்கு எண் இல்லை.

=========================================================

Dinamani – May 8

மாயாவதிக்கு உ.பி. மேல்சாதியினர் ஆதரவு!

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் அலாகாபாதில் மாயாவதி பேசிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது பிற்பகல் மணி 3. வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அருகில் “”2 பேர்” நின்றுகொண்டு மேடையையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெயிலோ, மழையோ -சகோதரி மாயாவதியைப் பார்க்க தலித்துகள் காத்திருப்பதில் வியப்பு ஏதும் இல்லை; ஆனால் “”அந்த இருவரும்” தலித்துகள் அல்ல, வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள். முலாயமின் “”அடியாள் அரசு” முடிவுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்தவர்கள்.

பொதுக்கூட்டங்களுக்கு வருகிறவர்கள் எல்லோரும் அந்த கட்சிக்கே வாக்களித்துவிடமாட்டார்கள் என்பது நாம் அனுபவத்தில் அறிந்த பாடம். ஆனால் பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம், தலைவர்களின் செல்வாக்கை எடைபோட உதவுகிறது. மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வருகிறவர்கள், அவர் பேச்சின் முக்கியப் பகுதியில் கைதட்டவும், ஆரவாரம் செய்யவும் தவறுவதே இல்லை.

ராகுல் காந்தியின் பிரசாரத்தின்போது அவருடைய வாகனத்துக்கு இணையாக துடிப்போடு ஓடிவரும் இளைஞர்களைப் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டப்பட்டுவிட்டது என்று புரிகிறது.

அலாகாபாதில் நடந்த அத்வானியின் பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களிடையே பெரிய பரபரப்போ, உற்சாகமோ இல்லை. ஆனால் வந்தவர்கள் அனைவரும் பாஜகவுக்கே வாக்களிக்கத் தீர்மானித்துவிட்டவர்கள் என்பதில் சந்தேகமே வரவில்லை.

மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வந்த 2 வைசியர்களும், உத்தரப்பிரதேசத்தில் மேல் சாதியினரிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றத்தை உணர்த்துகின்றனர். 2007 உ.பி. சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வித்தியாசமாகவே இருக்கப் போகிறது. முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது தங்களுடைய சமூகத்துக்கு இணக்கமானவர்கள் யார் என்று பார்த்து வாக்களிப்பார்கள். உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் இம்முறை அந்த வகையில்தான் வாக்களித்து வருகின்றனர்.

தங்கள் கட்சி சார்பில் பிராமணர்கள் போட்டியிடாத தொகுதிகளில்தான் மாயாவதி கட்சியின் பிராமண வேட்பாளர்களுக்கு பிராமணர்கள் வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. மாயாவதி 86 பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார். எனவே கடைசி 2 சுற்று வாக்குப்பதிவில் அவருடைய கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முந்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக அவருடைய கட்சி வரும் வாய்ப்பும் இருக்கிறது.

மாயாவதி கட்சிக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைத்து, காங்கிரஸ் கட்சிக்கும் 40 இடங்கள் வரை கிடைத்தால், சுயேச்சைகள் ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

இவ்விரு கட்சிகளைத் தவிர பிற கட்சிகளின் கூட்டணி அரசுக்கு வாய்ப்பே கிடையாது. அதிக இடங்களில் வென்ற 2-வது கட்சியாக பாஜக வரும் என்பதால், பாஜக-பகுஜன் சமாஜ் கூட்டணி அரசும் சாத்தியம்தான்! இரு கட்சிகளும் ஏற்கெனவே இருமுறை கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. ஆனால், பாஜக தொண்டர்கள் மாயாவதியுடன் கூட்டணியே கூடாது என்று இப்போது பலமாக எதிர்ப்பதால் இம் முறை அப்படியொரு வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர் கட்சித் தலைவர்கள்.

உத்தரப் பிரதேசமும் பிகார் வழியிலேயே செல்வதாக பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். யாருமே ஆட்சி அமைக்க முடியாமல் மீண்டும் பேரவைக்குத் தேர்தல் நடந்தால், அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியாக வரும் வாய்ப்பு தங்களுக்கே அதிகம் என்று அவர்கள் கணக்கு போடுகின்றனர். எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதை பலமாக எதிர்த்தாலும், உள்ளூர அதை வரவேற்பார்கள் என்று தெரிகிறது. இந்தத் தேர்தலில் 2 தவறுகளைச் செய்துவிட்டதாக பாஜக தலைமை கருதுகிறது. முலாயம் சிங் அரசைத் தீவிரமாக எதிர்க்காதது முதல் தவறு. பிகாரில் நிதீஷ்குமார் அமைத்த சாதிக் கூட்டணியைப் போல, உத்தரப்பிரதேசத்தில் அமைக்காமல் போனது இரண்டாவது தவறு என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஆட்சி அமைக்க சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் தேவை என்ற நிலை மாயாவதிக்கு ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி ஆதரவு தரக்கூடும். அதே சமயம், குடியரசுத் தலைவர் ஆட்சிதான் ஒரே வழி என்றாலும் காங்கிரஸýக்கு மகிழ்ச்சிதான். ஏன் என்றால் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதற்கு 4-வது இடம்தான். குடியரசுத் தலைவர் ஆட்சி என்றாலோ, தில்லியில் உள்ள மத்திய அரசின் மூலம் உத்தரப்பிரதேசத்தை மறைமுகமாக ஆளலாம்.

மாயாவதி ஆட்சி அமைப்பதாக இருந்தால் அதை உடனடியாக, மின்னல் வேகத்தில் செய்வதையே காங்கிரஸ் விரும்பும். நேரம் கடத்திக் கொண்டே இருந்தால், பதவி ஆசை காட்டி பிற கட்சியினர் முதலில் காங்கிரûஸத்தான் உடைப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுபவபூர்வமாகவே தெரியும்.

தமிழில்: சாரி.

Posted in Anlaysis, Assets, BJP, BSP, Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Disclosure, EC, election commission, Elections, Evasion, Income, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Islam, IT, Muslim, Narasimha, Narasimha Rao, Narasimma Rao, Narasmiha Rao, Neeraja, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Pan, Politics, Polls, PVN, Rahul, Rahul Gandhi, Sonia, Tax, UP, Uttar Pradesh | 7 Comments »

CPI hails CPI(M) stand not to associate with Mulayam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

முலாயம் அரசுக்கு எதிராக வி.பி.சிங் 5 நாள் பிரசாரம்

மசூரி, டிச. 8: உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆட்சிக்கு எதிராக 5 நாள் பிரசாரத்தை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் வியாழக்கிழமை துவக்கினார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அவர் இந்தப் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளார். ஜன் மோர்ச்சா கட்சி தலைவரும், நடிகருமான ராஜ் பாப்பரும் இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஜன் மோர்ச்சாவை ஆரம்பித்து அதற்கு தலைவராகி உள்ளார் ராஜ்பாப்பர்.

5 நாள் பிரசார யாத்திரையில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

உ.பி.சட்டசபை தேர்தல்: முலாயம்சிங்கை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம்

புதுடெல்லி, டிச.6- பாராளுமன்ற வளாகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார்.

அங்கு அவர் உத்தரபிரதேச முதல்-மந்திரி முலாயம்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தேசிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே இன்று நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமர்சிங்கை நிருபர்கள் சந்தித்து ஜெயலலிதா-முலாயம்சிங் சந்திப்பு குறித்து கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அமர்சிங் “உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பிரசாரம் செய்யவரும்படி ஜெயலலிதாவை அழைத்தோம். அவர் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டார். எனவே எங்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்” என்றார்.

Posted in AB Bardhan, ADMK, AIADMK, Assembly elections, BSP, Communism, Communist, Communist parties, Communists, CPI, CPI (M), CPI(M), Dalit, Indian Justice Party, Indian Muslims, Jan Morcha, Jayalalitha, Mayavathi, Mayavathy, MGR, Mulayam Singh Yadav, NCP, Rahul Gandhi, Raj Babbar, Raj Bappar, Rajinder Sachar committee report, Samajwadi Party, UP, Uttar Pradesh, Uttaranchal, VP Singh, Women's Reservation Bill | Leave a Comment »