Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘racism’ Category

Sports in 2007 – Recap, Timeline, Incidents, News, Flashback: Cricket, India, Hockey

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

விளையாட்டு

ஜனவரி

ஜன.1: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் லாங்கர் ஓய்வு.

* 2700 ஈலோ புள்ளிகளை கடக்கும் இந்தியாவின் 2 வது செஸ் வீரர் என்ற சாதனையை சசிகிரண் படைத்தார்.

ஜன.3: சர்வதேச கிரிக்கெட்டில் ஷேன் வார்ன் 1000 விக்கெட்டுகளை எட்டினார்.

ஜன.5: ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 50 என கைப்பற்றியது.

ஜன.6: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 21 என வென்றது.

ஜன.7: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பட்டத்தை பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ் கைப்பற்றினார்.

* பிரிமியர் ஹாக்கி லீக் பட்டத்தை பெங்களூரு லயன்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டது. பைனலில் 30 என ஐதராபாத் சுல்தான்சை வென்றது.

ஜன.18: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா 36, 26 என்ற செட்களில் ஜப்பானின் அய்கோவிடம் வீழ்ந்தார்.

ஜன.20: தேசிய பெண்கள் ஜுனியர் கால்பந்து கோப்பை இறுதி போட்டியில் மணிப்பூர் 50 என தமிழகத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

ஜன.21: 19 வயதுக்குட்பட்டோருக்கான வினு மன்கட் கிரிக்கெட் கோப்பையை 96 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து மகாராஷ்டிரா கைப்பற்றியது.

ஜன.26: ஈரானை 1929 என வீழ்த்தி இரண்டாவது கபடி உலக கோப்பையை இந்திய அணி வசப்படுத்தியது.

* மூனிச்சில் நடந்த ஆண்கள் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் 10 மீ.,ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜாகிர்கான் தங்கம் வென்றார்.

* யு.ஈ.எப்.ஏ.,தலைவர் தேர்தலில் பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் மைக்கேல் பிளாட்டினி வெற்றி பெற்றார்.

ஜன.27:ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வென்றார்.

பிப்ரவரி

பிப்.3: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த”டுவென்டி20′ போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

பிப்.8: பாரிஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் வென்றார்.

பிப்.9: 33 வது தேசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தியில் துவங்கியது.

பிப்.17: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 21 என வென்றது.

பிப்.18: தேசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்தன.

* பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரில் யரோஸ்லோவா சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

பிப்.21: ஐ.சி.சி.,ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தோனி 2 ம் இடத்துக்கு முன்னேறினார்.

மார்ச்

மார்ச் 1: வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் புறப்பட்டு சென்றனர். பயங்கரவாதிகளின் மிரட்டலையடுத்து முதன் முறையாக வீரர்கள் தேசிய பாதுகாப்பு படையுடன் சென்றனர்.

மார்ச் 4: ஸ்குவாஷ் தர வரிசையில் இந்தியாவின் சவுரவ் கோஷல் 45 வது இடத்துக்கு முன்னேறினார்.

மார்ச் 6: நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 182 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மார்ச் 8: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு போட்டிகளை “டிடி’யில் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்ற மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப் பட்டது.

மார்ச் 9: வெஸ்ட் இண்டீசுக்குஎதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மார்ச் 12: உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் துவங்கின.

* செஸ் தரவரிசையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதலிடத்தை கைப்பற்றினார்.

மார்ச் 13: உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 54 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மார்ச் 16: வங்கதேச கிரிக்கெட் வீரர் மஞ்சுரல் இஸ்லாம், பைக் விபத்தில் பலியானார். மிகக் குறைந்த வயதில் (22) பலியான டெஸ்ட் வீரர் இவர்தான்.

* நெதர் லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடித்து சாதனை.

மார்ச்17: வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

* உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் கத்துக்குட்டி அயர்லாந்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வென்றது.

மார்ச் 19: சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்சமாம் அறிவித்தார்.

*பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் 413 ரன்கள் எடுத்த இந்திய அணி உலக கோப்பையில் அதிக பட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனை நிகழ்த்தியது.

மார்ச் 23: இலங்கைக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

மார்ச் 24: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 66 பந்தில் சதம் அடித்த ஆஸ்திரேலியாவின் ஹைடன், உலக கோப்பையில் அதி வேக சதம் அடித்த வீரர் என்ற சாதனை.

மார்ச் 29: உலக கோப்பையில் படுதோல்வியடைந்த இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்.

* அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மார்ச் 30: ஒரு நாள் போட்டிகளிலிருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் கும்ளே ஓய்வு.

ஏப்ரல்

ஏப்.4: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை சாப்பல் ராஜினாமா.

ஏப்.14: ஏ1 கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில் இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் ஐந்தாம் இடம் பிடித்தார்.

ஏப்.21: தேசிய அளவில் நடத்தப்பட்ட அறிமுக “டுவென்டி20′ தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஏப்.27: நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை பிளமிங் ராஜினாமா செய்தார்.

ஏப்.28: உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. பைனலில் இலங்கை அணியை வென்றது.

* பீஜிங் ஒலிம்பிக் தொடருக்கான ஜோதி மும்பை வந்தடைந்தது.

மே

மே 2: உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தபால் தலை வெளியிடப்போவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு.

மே 5 : முதல் தரப் போட்டிகளிலிருந்து தமிழக வீரர் சரத் ஓய்வு.

மே 6 : சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் ஓய்வு.

* இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த முறையை ரத்து செய்த பி.சி.சி.ஐ., செயல்பாடுகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்போவதாக அறிவிப்பு.

மே 13: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஜான் ஹோவர்ட் தடை விதித்தார்.

மே 14: இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டாம்மூடி விலகல்.

மே 15: வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 20 என கைப்பற்றியது.

* ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.

மே 21: பிரேசில் கால்பந்து வீரர் ரொமாரியோ டி சவுசா ஆயிரம் கோல் அடித்த இரண்டாவது கால்பந்து வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

மே 23: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 21 என வென்றது.

* போதை மருந்து பயன்படுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மணிந்தர் சிங் கைது.

மே 26: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தினேஷ் கார்த்திக், ஜாபர், டிராவிட், சச்சின் என நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்சில் சதம் கடந்து புதிய சாதனை படைத்தனர்.

மே 27: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.

மே 29: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரேக் புளுவட் சர்வதேச போட்டிகளியிலிருந்து ஓய்வு.

ஜூன்

ஜூன் 8: ஐ.சி.சி., தற்காலிக தலைவராக தென் ஆப்ரிக்காவின் ரே மாலி தேர்வு.

ஜூன் 9: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூன் 10: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரெஞ்சு ஓபன் தொடரை வென்று, ஸ்பெயினின் ரபேல் நடால் சாதனை.

ஜூன் 11: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க கிரஹாம் போர்டு மறுப்பு.

ஜூன் 12: சேவக், ஹர்பஜன் மற்றும் முனாப், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணியிலிருந்து நீக்கம். தோனி துணைக் கேப்டனாக நியமனம்.

ஜூன் 16: இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்தில் தோனி மற்றும் யுவராஜ் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம். சேவக், ஹர்பஜன், லட்சுமண் மற்றும் பதான் “பி’ பிரிவுக்கு தள்ளப்பட்டனர்.

ஜூன் 18: ஆசிய தடகள கிராண்ட்பிரிக்சில் இந்தியா 3 தங்கம் உட்பட 12 பதக்கம் வென்றது.

ஜூன் 19: இங்கிலாந்து தொடரில் பேட்டியளிக்க இந்திய வீரர் களுக்கு தடை.

* 30 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி., டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான “டாப்10′ பட்டியலுக்குள் நுழைந்த முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மான்டி பனேசர் பெற்றார்.

ஜூன் 21: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் பாட்டீல், இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் இணைந்தார்.

ஜூன்28: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வி.

ஜூலை

ஜூலை1: அயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்றது.

* பெல்ஜியத்தில் நடந்த சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு வெண்கலம்.

ஜூலை 2: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக் கான பாகிஸ்தான் அணியி லிருந்து முன்னணி வீரர்கள் முகமது யூசுப், அப்துல் ரசாக் நீக்கம்.

ஜூலை 3: ஸ்காட்லாந்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்த ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து.

ஜூலை7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்க போவதில்லை என சச்சின், கங்குலி, டிராவிட் அறிவிப்பு.

* விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன்.

ஜூலை8: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனை.

ஜூலை 9: ஸ்பெயினில் நடந்த லியோன்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் “ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூலை 13: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வென்ற ஒரு நாள் தொடர் கோப்பை காணாமல் போனது.

ஜூலை 16: பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஜெப் லாசன் நியமனம்.

ஜூலை 17: டெஸ்ட் போட்டிக்கான ஐ.சி.சி., தரவரிசை பட்டியலிலிருந்து ஜிம்பாப்வே நீக்கப்பட்டது.

ஜூலை 20: இத்தாலி கால்பந்து வீரர் பிரான்சிஸ்கோ டோட்டி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

ஜூலை 28: இங்கிலாந்துக்கு எதிரான டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்டில் சச்சின் 11,000 ரன்கள் கடந்தார். இச்சாதனை செய்யும் மூன்றாவது வீரராவார்.

ஜூலை 29: இங்கிலாந்தின் சிறந்த விளையாட்டு வீரராக இந்திய வம்சவாளி வீரர் மான்டி பனேசர் தேர்வு.

ஆகஸ்ட்

ஆக.5: <உலக கோப்பை வில்வித்தை தொடரில் இந்தியாவின் டோலா பானர்ஜி “ரிகர்வ்’ பிரிவில் தங்கம் வென்றார்.

ஆக. 7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

ஆக.11: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கேப்டன் மைக்கேல் வானை வீழ்த்தி சர்வதேச அரங்கில் 900 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை கும்ளே பெற்றார்.

ஆக.13: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.

ஆக.16: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அனுப் ஸ்ரீதர் முன்னேற்றம்.

ஆக.20: ஐம்பதாவது ஏ.டி.பி., பட்டம் வென்று பெடரர் அசத்தல்.

ஆக.23: ரயில்வே மைதானங்களை ஐ.சி.எல்., அமைப்பு பயன்படுத்தி கொள்ள மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஒப்புதல்.

ஆக.24: ஐ.சி.எல்., அமைப்புக்குசவாலாக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,), இந்திய கிரிக்கெட் போர்டு அறிமுகப்படுத்தியது.

ஆக. 26: ஐ.பி.எல்., அமைப்பில் தமிழக வீரர் பதானி இணைந் தார்.

ஆக. 29: அஞ்சும் சோப்ரா(கிரிக்கெட்), சுனிதா குல்லு (ஹாக்கி), கே.எம்.பீனு (தடகளம்), விஜய குமார்(துப்பாக்கி சுடுதல்), சேட்டன் ஆனந்த (பாட்மின்டன்) உள்ளிட்ட 14 பேருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அர்ஜுனா விருது வழங்கினார்.

செப்டம்பர்

செப். 2: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 20 கோல் அடித்து இத்தொடரில் புதிய சாதனை படைத்தது.

* தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ஹால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

செப். 4: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை வீரர் உபுல் சந்தனா ஓய்வு.

செப். 7: சகவீரர் ஆசிப் தொடையில் தாக்கிய அக்தர் “டுவென்டி20′ உலக கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கம்.

செப். 8: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 34 என பறி கொடுத்தது.

செப். 9: யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.

செப். 10: யு.எஸ்., ஒபனில் கோப்பை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 12வது கிராண்ட்ஸ்லாம் வென்றார்.

செப். 11: முதல் “டுவென்டி20′ உலக கோப்பை தொடர் தென் ஆப்ரிக்காவில் துவங்கியது. துவக்க ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல், “டுவென்டி20’ல் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

* ஐ.சி.சி.,யின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி தட்டிச் சென்றார்.

செப். 12: நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு.

செப். 13: “டுவென்டி20′ உலக கோப்பையில் வங்கதேசத்திடம் தோல்விய டைந்த வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலே வெளியேறியது.

செப். 14: கேப்டன் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் திடீர் ராஜினாமா.

செப். 18: ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு.

செப். 26: உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு.

* கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு குவிய, ஆசிய கோப்பை ஹாக்கி வென்ற இந்திய வீரர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிப்பு.

செப். 27: பி.சி.சி.ஐ.,யின் புதிய சம்பள ஒப்பந்த அறிவிப்பில் ஜாகிர் கான் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம்.

செப். 28 : ஆசிய கோப்பை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலா ரூ. 5 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு.

* தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய தலைவராக ரவி சாஸ்திரி நியமனம்.

அக்டோபர்

அக். 1: இந்தியன் கிரிக்கெட் போர்டு நடத்தும் ஐ.பி.எல்., அமைப்பில் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா இணைந்தார்.

அக். 3: பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் பவுச்சர் (396)அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார்.

அக். 4: இலங்கை அதிரடி மன்னன் ஜெயசூர்யா 400வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

அக். 5: உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் பரிசு .

அக். 6: ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

அக். 8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடிய சச்சின் ஒரு நாள் போட்டிகளில் அதிக அரைசதம் கடந்தவர் என்ற சாதனை படைத்தார்.

அக். 11: சகவீரர் ஆசிப்பை தொடையில் தாக்கிய விவகாரத்தில் பாகிஸ்தானின் அக்தருக்கு 13 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

அக். 12: சர்வதேச போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஓய்வு.

அக். 17: இந்தியாவுடனான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 42 என வென்றது.

அக். 21: உலக ராணுவ விளையாட்டு போட்டியில் இந்தியா 19வது இடம்பிடித்தது.

அக். 27: பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து டிராவிட் நீக்கம்.

நவம்பர்

நவ.1: இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆசிப் விலகினார்.

* ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது தொடர்பாக சர்ச்சை வெடிக் கவே, சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து சுவிட் சர்லாந்தின் ஹிங்கிஸ் ஓய்வு.

நவ.2: மக்காவ் நகரில் நடந்த ஆசிய உள்ளரங்கு போட்டிகளின் செஸ் பிரிவில் இந்தியாவின் சசிகிரண் தங்கம் வென்றார்.

நவ.3: ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு வார்ன் முரளிதரன் கோப்பை என பெயரிடப் பட்டது.

நவ.5: இந்தியபாகிஸ்தான் அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் கவுகாத்தியில் துவங்கியது.

* பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரை அர்ஜென்டினாவின் நள்பாந்தியன் கைப்பற்றினார். பைனலில் ஸ்பெயினின் நாடலை வீழ்த்தினார்.

நவ.6: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சச்சின் மறுப்பு.

* இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப் பட்டன.

நவ.8: டெஸ்ட் அணிக்கான இந்திய கேப்டனாக கும்ளே நியமிக்கப்பட்டார்.

நவ.12: மாட்ரிட் ஓபன் தொடரில் பெல்ஜியத்தின் ஹெனின் பட்டம் வென்றார்.

* முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கே.சி.இப்ராகிம் மரணமடைந்தார்.

நவ.13: தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக உலகின் “நம்பர்1′ டென்னிஸ் வீரராக சுவிட்சர்லாந்தின் பெடரர் தேர்வு செய்யப்பட்டார்.

நவ.17: டெஸ்ட் அரங்கில் 100 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கில்கிறிஸ்ட் படைத்தார்.

நவ.20: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 20 என கைப்பற்றியது.

நவ.24: பாகிஸ்தான் வீரர்களுக்கு பயங்கரவாதிகள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

நவ.30: இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகள் பஞ்சகுலாவில் துவங்கின.

டிசம்பர்

டிச. 5: லால் பகதுõர் பெண்கள் ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

டிச. 6: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் துவங்கின.

* ஐ.சி.சி.,டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சங்ககரா முதலிடம் பிடித்தார்.

டிச. 7: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

டிச. 10: காமன்வெல்த் வலுதுõக்குதல் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டிச. 12: 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்திய அணி கைப்பற்றியது.

அ. சிறப்பு தகவல்கள்

1. உல்மர் மரணம்

முன்னாள் இங்கிலாந்து வீரரும், பாகிஸ் தான் பயிற்சியாளருமான பாப் உல்மர், மார்ச் 18 ம் தேதி கிங்ஸ்டனில் உள்ள ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2. முடி சூடா மன்னன்

ஆஸ்திரேலிய ஓபன் தொடரை தொடர்ந்து மூன்றாம் முறையாக “நம்பர்1′ வீரரான சுவிட்சர்லாந்தின் பெடரர் கைப்பற்றினார். இறுதி போட்டியில் சிலியின் பெர்னாண்டோ கோன்சாலசை வீழ்த்தினார். டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னனாக வலம் வருகிறார்.

3. கபில் தலைமையில் ஐ.சி.எல்.,

வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து, பி.சி.சி.ஐ.,அமைப்புக்கு சவாலாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,)என்ற அமைப்பை “ஜீ’ டிவி உருவாக்கியது. இதன் செயற்குழு தலைவராக முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டார்.

4. கோப்பை உற்சாகம்

உள்ளூரில் சூரப்புலிகள் என்பதை இந்திய அணி மீண்டும் ஒரு முறை நிரூபித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரை 31 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. வதோதராவில் நடந்த நான்காவது போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கோப்பையுடன் டிராவிட்.

5. சைமண்ட்ஸ் சர்ச்சை

இந்தியாவுக்கு எதிரான வதோதரா போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கறுப்பு இன வீரரான சைமண்ட்சை “குரங்கு’ என ரசிகர்கள் கேலி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. அடுத்து நடந்த நாக்பூர் போட்டியிலும் ரசிகர்களின் கேலி தொடர, கிரிக்கெட்டில் மீண்டும் இனவெறி சர்ச்சை வெடித்தது.

6. முதன் முறையாக…

அயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் அன்னிய மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை முதன் முறையாக வென்று சாதித்தது. கோப்பையுடன் உற்சாக “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.

7. உயரிய விருது

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் மானவ்ஜித் சிங் சாந்து 2006ம் ஆண்டு நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். இவரை கவுரவிக்கும் வகையில் 200607ம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் பதக்கத்தை பெற்றுக் கொள்ளும் மானவ்ஜித்.

8. கும்ளே சதம்

ஓவல் டெஸ்டில் பிரமாதமாக பேட் செய்த கும்ளே முதல் சதம் கடந்து அசத்தினார். தலைசிறந்த பேட்ஸ்மேனை போல் விளையாடிய இவர் 110 ரன்கள் எடுத்து டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள் வரிசையில் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

9. விடைபெற்றார் ஜோன்ஸ்

ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் அதற்காக அமெரிக்க மக்களிடமும் தனது ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

10. தங்க மங்கை

பெண்கள் செஸ் அரங்கில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பியின் ஆதிக்கம் தொடர்ந்தது. மக்காவ் நகரில் 22 நாடுகள் பங்கேற்ற இரண்டாவது ஆசிய உள்ளரங்கு செஸ் போட்டிகள் நடந்தன. இதில் உலகின் “நம்பர்2′ வீராங்கனையான ஹம்பி தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.

11. ஹாக்கியில் கலக்கல்

சென்னையில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, கொரியாவை 72 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்று, கோப்பை கைப்பற்றியது. தேசிய விளையாட்டான ஹாக்கியில் கோப்பை வென்ற உற்சாகத்தில் “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.

12. சென்னை சூப்பர்ஸ்டார்ஸ்

அரியானா மாநிலம் பஞ்சகுலாவில் ஐ.சி.எல்., அமைப்பு நடத்திய “டுவென்டி20′ தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் லயன்சை வீழ்த்தி கோப்பை வென்றது. மகிழ்ச்சியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணியினர்.

Posted in 20, 20-20, 2007, 2020, America, athletics, Aus, Australia, baseball, Century, championships, Chronology, Commonwealth, Cricket, Cup, Dhoni, Disqualify, Dope, Faces, Flashback, Football, Games, Ganguly, Hockey, ICC, ICL, Incidents, Jones, Kapil, Kumble, Lara, Losers, Matches, Mirza, Monkey, Murali, Muralidharan, Muthiah, News, Notable, ODI, people, Players, Race, racism, Racists, Recap, Records, Sachin, Sania, Soccer, Spectator, Sports, steroids, Symonds, T20, Tendulkar, Tennis, Tests, Timeline, TV, US, USA, Warne, Winners, Zee | Leave a Comment »

Orient-Express snubs Tata, says Indian tag tacky: Is India Bad for Jaguar?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�

எங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.

ஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.

நிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

உருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.

ஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.

ஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.

இன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.

இந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.

“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.

இப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.

இன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.

போர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

இத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.

எத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.

இவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.

மேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.

அறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.

அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.

பின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.

மற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.

இத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.

அண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.

அமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.

இப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன? இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா?

இது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.

கொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.

தமிழில்: ஜி. கணபதி

Posted in acquisition, Analysis, Arcelor, Auto, Automobile, Banks, Brand, Capitalization, Cars, CEO, Citi, CxO, Discrimination, Economy, England, Equity, Finance, Ford, Govt, Hotels, Image, India, Jaguar, Law, Luxury, M&A, Manufacture, Manufacturing, markets, Mergers, Mittal, MNC, NRI, Offshoring, Orient Express, Outsourcing, Private, Protection, Public, racism, Reverse, Rich, rules, Shares, Steel, Stocks, Supremacy, TATA, Tax, Wealthy, White | Leave a Comment »

Ven Kushtam? Disorder Awareness – Melanin deficiency

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

விழிப்புணர்வு: வெண்குஷ்டம் அல்ல… வெண்புள்ளிகள்

ரவிக்குமார்


“”எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் நீண்ட காலமாக சருமத்தில் வெண்புள்ளிகளுடன் இருப்பவர்களை, இன்னமும் இந்தச் சமூகம் “வெண்குஷ்டம்’ வந்தவர்கள் என்ற தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறது. இதை வெண்புள்ளிகள் என்று அழைப்பதுதான் சரி. நோயே இல்லாத இதை தொழுநோய் என்று அழைப்பது தவறு.” என்று தன்னுடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார், கே.உமாபதி. இவர், “வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா’ என்னும் அமைப்பின் பொதுச் செயலாளர். இவரும் இந்தப் பாதிப்போடு இருப்பவர்தான். வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் ஏற்படுத்துவதுடன், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தகுந்த சிகிச்சை முறைகளை அறிவுறுத்தி வருகிறார் கே.உமாபதி. வெண்புள்ளிகள் இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”நம் உடலின் மிகப் பெரிய உறுப்பே தோல்தான். தோலில் உள்ள “மெலனின்’ என்ற நிறமி இழப்பினால் சருமத்தில் உண்டாவதுதான் இந்த வெண்புள்ளிகள். இந்த மெலனினை நம் உடலில் உற்பத்தி செய்வது தோலில் உள்ள “மெலனோûஸட்’ என்ற பெயருடைய அணுக்களின் வேலை.

நம் உடலில் கிருமிகளின் பாதிப்பு வரும்போது, அதை எதிர்ப்பது ரத்த வெள்ளை அணுக்களின் வேலை. இதனால் இந்தச் செல்களை “மிலிட்டரி செல்கள்’ என்று அழைப்பர். இந்த மிலிட்டரி செல்கள், கிருமி என நினைத்து “மெலானோûஸட்டை’ அழிக்கின்றன. அவ்வாறு மெலனோûஸட் செல்கள் அழிக்கப்படும் இடங்களில் வெண்புள்ளிகள் தோன்றி அது அப்படியே பரவத் தொடங்கும்.

இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு எந்த வயதிலும், யாருக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் வெண்புள்ளிகள் பாதிப்புக்கு உள்ளானோர்கள் 18 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பார்கள். இந்தியா முழுவதும் சுமார் 4 கோடி பேருக்கு இருக்கும். உலக மக்கள் தொகையில் இரண்டு சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருக்கின்றது.

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்களே வித்தியாசமாக நடத்தும் நிலை மாறவேண்டும். குறிப்பாக இந்தப் பாதிப்புடன் இருக்கும் பெண்களை குடும்பத்தின் விசேஷங்களில் பங்கேற்காமல் ஒதுக்கி வைப்பது, தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தால் அவர்களிடமிருந்து விலகி இருப்பது போன்ற செயல்களால், உளவியல்ரீதியாகப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெண்புள்ளிகள் தொற்றக்கூடியதோ, பரம்பரையாகத் தொடரும் பிரச்சினையோ இல்லை என்பதை மக்கள் கூடும் பொதுஇடங்களிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்துவருகிறோம். வெண்புள்ளிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகளை விளக்கும் வகையில், சமீபத்தில் கூட, பள்ளி மாணவர்களைக் கொண்டு 9 கி.மீ. தூரத்துக்கு மனிதச் சங்கிலி அமைத்தோம்.

ஓர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிக்கு இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கோ, அவரின் இரண்டு பெண்களுக்கோ இந்தப் பாதிப்பு இல்லை. ஒரு பெண் எம்.பி.ஏ.வும், இன்னொரு பெண் எம்.சி.ஏ.வும் படித்திருந்தனர். அப்பாவுக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பதால் அவரின் பெண்களுக்கு பல வருடங்களாகத் திருமணம் ஆகாமலேயே இருந்தது. மனம் வெறுத்துப் போன அந்தப் பெண்களின் தந்தை, “”உங்கள் திருமணம் தடைபடுவதற்குக் காரணமாக நானே இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லி திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இப்படி வெண்புள்ளிகளின் பாதிப்பால் விளைந்த வேதனையான நிஜச் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால் பெண்கள் அவர்களை அனுசரித்துப் போவதைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது. அதுவே பெண்ணுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடுகிறது. வேலை வாய்ப்பில் தொடங்கி, திருமணம் ஆவதற்கே கூட தடையாக இருக்கிறது. இதனால் நாங்கள் வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பவர்களுக்குள்ளாகவே பேசி, இதுவரை எட்டு திருமணங்களை நடத்தியிருக்கிறோம். வெண்புள்ளி பாதிப்பு இருந்தாலும் இந்த சாதியில்தான் பெண் வேண்டும், பையன் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு நாங்கள் உதவமுடியாதுதான். வெண்புள்ளிகளை விடவும் சமூகத்தில் புரையோடிப் போயிருப்பது சாதிதானே!

வெண்புள்ளி பாதிப்பிற்கு என்னைப் பொறுத்தவரையில் அலோபதி மருத்துவம் சரிப்படாது. சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை வைத்தியம் போன்ற வைத்திய முறைகளில் இதை பரவாமல் தடுப்பதற்கு வழியிருக்கிறது. அதிலும் பஸ்பம் (மெட்டல்) கலக்காத மருந்தைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம். சித்தா மற்றும் பரம்பரையாக மருத்துவம் பார்க்கும் நிபுணர்களை ஒன்றிணைத்து உருவாக்கியிருக்கும் மருத்துவக் குழுவினரின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளை எங்களிடம் ஆலோசனைக்கு வருபவர்களுக்குப் (தொலைபேசி எண்: 044-65381157) பரிந்துரைக்கிறோம்.

பல நிறுவனங்களோடு பேசி வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம். வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் யாரிடமும் நன்கொடை பெறக்கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. எங்களுக்கு எந்த வகையிலாவது உதவவேண்டும் என்று நினைப்பவர்கள், வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்துகளை, இந்த பாதிப்பு இருப்பவர்களிடமும், இல்லாதவர்களிடமும் கூட கூறுங்கள். விழிப்புணர்வு- பாதிப்பு இருப்பவர்களுக்கும் தேவை. இல்லாதவர்களுக்கும் தேவைதானே!” என்றார் உமாபதி.

Posted in Advice, AIDS, albinism, Awareness, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bias, Blood, cancer, Cells, Color, Colour, cure, Deficiency, disadvantage, Discoloration, Disease, Disorder, Dots, genes, Genetic, Hereditary, HIV, hypomelanism, hypomelanosis, inferiority, Kushtam, Leper, Leprosy, medical, Melanin, melanocytes, Oppression, pigment, privilege, Race, racialism, racism, Racist, RBC, Skin, Society, Status, superiority, unaani, Unani, Venkushtam, Vennkushtam, WBC, White, Yunaani, Yunani | 20 Comments »

Shilpa Shetty – Racism – Celebrity Big Brother victory – Buzz creation & Reality Drama

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

நெட்டில் சுட்டதடா…: ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு கெட்டி!

ராமன் ராஜா

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் மகாத்மா காந்திக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது; இரண்டு பேருமே வெள்ளைக்காரர்களால் கடுமையாக ராகிங் செய்யப்பட்டவர்கள். ஆனால் காந்தியை அன்று அவர்கள் ரயிலிலிருந்து பிடித்துத் தள்ளி விட்டபோது அதைத் தட்டிக் கேட்பதற்கு நாதியில்லை. இன்றைக்கு ஷில்பா ஷெட்டியை ஆதரித்து ஆயிரக்கணக்கான குரல்கள் எழும்பியிருக்கின்றன. விவகாரம் பிரிட்டிஷ் பார்லிமென்ட் வரை எதிரொலித்திருக்கிறது. அதுதான் வித்தியாசம். ஆனால் ஆங்கிலேயர்களின் பார்வையில் மட்டும் எந்த மாறுதலும் இன்றி, இன்னும் நாம் பாம்பாட்டிகளாகத்தான் தெரிகிறோம் என்று தோன்றுகிறது.

பிரிட்டனில் சானல்-4 என்ற பிரபல டி.வியில் ஒரு பிரபல கேம் ஷோ. ஆணும் பெண்ணுமாக ஒரு பத்திருபது பேர் சேர்ந்து ஒரு பங்களாவில் பல வாரங்கள் வசிக்க வேண்டும். அங்கேயே சமையல், சாப்பாடு எல்லாம். வெளியே போகக் கூடாது; ஹவுஸ் அரெஸ்ட் மாதிரிதான். அவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை வீடு முழுவதும் டஜன் கணக்கான காமிராக்கள் இருபத்து நாலு மணி நேரமும் கண்காணிக்கும். இதை வேலை வெட்டியில்லாத ஆயிரக்கணக்கான நேயர்கள் டி.வியில் பார்த்து ரசிப்பார்கள். (இப்போது இந்த அசட்டுப் பொழுது போக்கெல்லாம் இந்தியத் தொலைக்காட்சி வரை வந்து சேர்ந்துவிட்டது.) பெரியண்ணன் (க்ஷண்ஞ் க்ஷழ்ர்ற்ட்ங்ழ்) என்ற இந்த ஷோவில் கலந்து கொள்வதற்காக பாம்பே பார்ட்டி ஷில்பா ஷெட்டியும் லண்டன் போனார். அவரை வரவேற்றுப் பன்னீர் தெளித்தார்கள்; காமிரா வீட்டிற்குள் அனுப்பிக் கதவைப் பூட்டினார்கள். அப்போது ஆரம்பித்தது வேதனை.

வீட்டுக்குள் வசித்த வெள்ளை நிறத்தினர் எல்லாம் ஷில்பாவை விரோதமாகவே எதிர்கொண்டார்கள். விரைவிலேயே சின்னச் சின்ன வன்கொடுமைகள் ஆரம்பித்தன. ஷில்பா ஓர் இந்தியர் என்பதற்காகப் பரிகாசம் செய்திருக்கிறார்கள். “இந்தியன் இந்தியன்’ என்பதையே இளக்காரமான குரலில் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் “நாயே பேயே’ என்பது வரை போய் விட்டார்களாம். அதுவும் மூன்று லங்கிணிப் பெண்கள் கேங்க் ஆகச் சேர்ந்து கொண்டு ஷில்பாவைப் படாத பாடு படுத்தி எடுத்திருக்கிறார்கள். அவருடைய ஆங்கில உச்சிரிப்பைக் கிண்டலடித்திருக்கிறார்கள். “”உங்கள் ஊரில் உருப்படியாக வீடு, கீடு ஏதாவது கட்டிக்கொண்டு வசிக்கிறாயா அல்லது எல்லா இந்தியர்களையும் போலத் தகரக் கொட்டகை, சாக்குப்படுதாவா?” என்ற ரீதியில் ஓர் ஊசி. கிச்சனில் போய் சிக்கன் செய்து எடுத்து வந்தால் அது சரியாக வேகவில்லை என்று ஒரு மாபெரும் கலாட்டா. ஒரு நடிகையைப் போய் நிஜமாகவே சமைக்கச் சொன்னால் அவர் என்ன செய்வார் பாவம்… டைரக்டர் கட் சொல்லும் வரைதானே கரண்டியால் கிளறிப் பழக்கம்?

ஷில்பாவுக்கு நடப்பதெல்லாம் அவ்வப்போது டெலிவிஷனில் ஒளிபரப்பாக, இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் கொதித்து எழுந்தார்கள். தாங்கள் தினமும் தெருவில் அனுபவிக்கும் வேதனைகளைத் தங்கள் அபிமான நடிகையும் சந்திப்பதைக் கண்டவுடன் அவர்களுக்கு எங்கோ மிச்சமிருக்கும் தேசபக்தி ஊற்றெடுத்து விட்டது. சானல்-4க்கு ஆயிரக்கணக்கில் கண்டனக் கடிதங்கள் வந்து குவிந்தன. டாக் ஷோ ரேடியோ நிகழ்ச்சிகள், இன்டர்நெட் அரட்டை அறைகள் எங்கும் பிலுபிலுவென்று இதேதான் பேச்சாகிவிட்டது. ஷில்பா பிராணிவதைத் தடுப்பு சங்கத்தில் உறுப்பினர். எனவே, சங்கத்தின் அங்கத்தினர்களெல்லாம் லண்டன் குளிரில் சட்டையைத் துறந்து உடம்பெங்கும் சிறுத்தைப் புலி பெயின்ட் அடித்துக்கொண்டு “”வெள்ளையனே, ஓர் அப்பாவி இந்தியப் பிராணியை வதைக்காதே!” என்று காந்திகிரி செய்தார்கள். கடைசியாக வந்த தகவலின்படி ஷில்பா ஷெட்டி விவகாரம் ஒருவழியாக சமாதானம் பேசி முடிவாயிருக்கிறது. எது எப்படியோ, பெரியண்ணாவுக்கு இதனால் நல்ல வியாபாரம். சானல்-4 டி.வியின் டி.ஆர்.பி ரேட்டிங் எங்கோ எகிறிவிட்டது.

ஷில்பாவுக்கு நடந்த சில்மிஷங்களெல்லாம் பொதுவாக, ஆசிய, ஆப்பிரிக்கர்கள் எல்லாருக்கும் அங்கே நடப்பதுதான். உதாரணமாக ஷில்பாவை அவர்கள் “”பாக்கி பாக்கி” என்று ரேக்கி எடுத்தார்கள். (பாக்கிஸ்தான்காரி என்பதன் சுருக்கம்). இந்தியத் துணைக் கண்டத்தினரை இகழ்வதற்காகவே அவர்கள் கண்டுபிடித்துள்ள வட்டார வசவுச் சொல் இது. அவர்களைப் பொறுத்தவரை சற்று மாநிறமாக யாராவது தெருவில் போனாலே பாகிஸ்தானி என்று சொல்லிவிடுவார்கள். இந்த மாதிரி பற்பல இனவெறிச் சொற்ரொடர்கள், சாராயக் கடைகளிலும் ஹைஸ்கூல் மாணவர்களிடையிலும் தினமும் ஏராளமாகப் புழங்குகின்றன.

இங்கிலாந்தில் இனவெறி எந்த அளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை அறிய, பிபிசி நிருபர் ஒருவர் ஒரு சின்ன பரிசோதனை செய்தார். பேப்பரில் வந்திருந்த அத்தனை வாண்ட்டட் விளம்பரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு சரமாரியாக வேலைக்கு விண்ணப்பம் போட்டார். ஆனால் இரண்டு செட் அப்ளிகேஷன் அனுப்பினார். ஒன்று ஜான், பீட்டர் என்பதுபோல் வெள்ளைக்காரத்தனமான பெயரில். மற்றொன்று -ஜாங்கியா சிங், சலீம் அலி என்பது போன்று வெள்ளையடிக்கப்படாத பெயரில். மற்றபடி கல்வித் தகுதி, அனுபவம் எல்லாம் இரண்டு அப்ளிகேஷன்களிலும் ஒரே மாதிரிதான். ஆங்கிலேயப் பெயரில் போட்டவற்றுக்கெல்லாம் பெரும்பாலும் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தது. மற்ற விண்ணப்பங்கள் போன இடம் தெரியவில்லை. நேரடியாக டாய்லெட் பேப்பர் செய்வதற்கு மூலப் பொருளாக அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது.

அங்கே பல காலமாக கறுப்பு இனத்தவர்கள் வேலையில்லாதிருப்பது -பிழைப்புக்காகக் குற்றங்களில் ஈடுபடுவது -அதனால் வேலை வாய்ப்புக் கதவுகள் மேலும் இறுக மூடிக் கொள்வது என்பது விஷ வட்டம் போலத் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறது. மைனாரிட்டி வகுப்பு மக்கள் வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கியிருப்பதற்குக் காரணமே, வேலை கொடுப்போரின் இனவெறி மனநிலைதான். இனப் பாகுபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் கமிஷன்கள் எல்லாம் அமைத்து வரைப்படங்கள் வரைந்து அறிக்கைகள் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதன்படி கல்வி, வேலை, சம்பாத்தியம், குழந்தை இறப்பு விகிதம் இப்படி எந்தப் புள்ளிவிவரத்தை எடுத்துக்கொண்டாலும் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், முஸ்லிம்கள் எல்லாருமே, ஜாதி வெள்ளயர்களை விட இரண்டு படி கீழேதான் இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் நீங்கள் கார் ஓட்டும்போது சற்றே ஆக்ஸிலேட்டரை மிதித்துவிட்டாலும் ஓவர் ஸ்பீட் போனதற்காகப் போலீஸ்காரர் பிடித்து அபராதம் தீட்டிவிடுவார். அதே வேகத்தில் பக்கத்தில் ஒரு “வெள்ளைக்காரர்’ போனால் வெறும் அதட்டலுடன் தப்பித்து விட அவருக்கு சான்ஸ் அதிகம். அதுவும் சந்தேகத்துக்கிடமான நபர் ஆப்பிரிக்கர் என்றால் ஆன் தி ஸ்பாட்டிலேயே அடி உதை கூடக் கிடைக்கலாம். வெள்ளை போலீசார் கறுப்பர்களைத் தெருவில் போட்டு மிதிக்கும் காட்சிகளை எவ்வளவோ தற்செயல் காமிராக்கள் படம் பிடித்திருக்கின்றன.

இனவெறிப் பிரச்சினைகளில் இந்த அரசியல்வாதிகளாவது தங்கள் திருவாயைத் திறக்காமல் இருந்து தொலைக்கலாம். இருப்பார்களா என்ன? முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் வழக்கம் பற்றி அங்கே ரொம்ப நாளாகவே ஒரு விவாதம் இருக்கிறது. ஒரு நாள் பாராளுமன்றத் தலைவர் ஜாக் ஸ்ட்ரா ஒரு வாய் முத்து உதிர்த்தார். “”முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்க வேண்டுமானால் பர்தா போன்ற தங்கள் தனிப்பட்ட அடையாளங்களைத் துறந்துவிட வேண்டும்” (ஜாக் ஸ்ட்ரா என்ற வார்த்தைக்குக் கொடும்பாவி என்று அர்த்தம்!) இதற்குக் கை மேல் பலன் கிடைத்தது. நாடு முழுவதும் பர்தாப் பெண்கள் தெருவில் நடக்கவே முடியாமல் ஏளனம், சீண்டல், வம்பர்கள் அவர்கள் மீது பேப்பர் ராக்கெட் வீசினார்கள்; முக்காட்டைப் பிடித்து இழுத்தார்கள்.

இந்த அக்கிரமக்காரர்களெல்லாம் பக்கா ஜென்டில்மேன்கள் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது, மற்ற சிலருடைய நடவடிக்கைகள். பாலத்தடியில் குந்தி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்கும் முரட்டு இளைஞர் கூட்டங்கள், அவ்வப்போது ஆசியர்களை அடித்துத் தாக்கி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கின்றன. இதற்குச் சிகரம் வைத்ததுபோன்ற நிகழ்ச்சி நடந்த வருடம் 1993. ஸ்டீபன் லாரன்ஸ் என்ற பதினெட்டே வயதான இளைஞர். கண் நிறைந்த கனவுடகளுடன் இருந்த ஆப்பிரிக்க மாணவர். நன்றாகப் படித்துக் கொண்டிருந்தார். அவர் செய்த ஒரே குற்றம், கறுப்புத் தோல் போர்த்தியிருந்தது. லண்டனில் பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்த போது அந்த ஏரியாவில் அலப்பறை பண்ணிக்கொண்டு திரிந்த வெள்ளைக் கும்பல் ஒன்றின் கண்ணில் பட்டுவிட்டார். திடீரென்று அவர்கள் காரணமின்றி ஸ்டீபன் மீது பாய்ந்து நீண்ட கத்தியால் சரமாரியாகக் கிழிக்க ஆரம்பித்தார்கள். தப்பித்து ஓட முயன்ற ஸ்டீபன் நூறு அடி ஓடுவதற்குள்ளாகவே தன் கறுப்பு ரத்தம் அனைத்தையும் வெள்ளையர் பூமியில் காலி செய்துவிட்டு உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த உடனே டெலிபோனில் ஆள் அடையாளத்துடன் தகவல் கிடைத்தும் பிரிட்டிஷ் போலீஸ் குற்றவாளிகளைப் பிடிப்பதில் முனைப்புக் காட்டாமல் காலம் கடத்தியதும், அடுத்து பத்து வருடத்திற்கு ஸ்டீபனுடைய பெற்றோர்கள் நம்பிக்கையிழக்காமல் கதவு கதவாகத் தட்டியதும், பெரும் போராட்டத்துக்குப் பிறகு கடைசியில் ஒரு வழியாகப் பாதி நீதி வென்றதும் -பிரிட்டனில் வசிக்கும் கறுப்பு இனத்தவருக்குக் கட்டபொம்மன் கதை மாதிரி ஒரு வீர வரலாறு.

அதன்பிறகு தொடர்ச்சியாக வருடத்துக்கு ஐந்து இனவெறிப் படுகொலைகளாவது பிரிட்டனில் நடக்கின்றன. அதிலும் 2005 ஜூலையில் லண்டனில் குண்டு வெடித்த நிகழ்ச்சிக்குப் பிறகு முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குவது அதிகரித்துவிட்டது. எனவே நீங்கள் தாடி கீடி வைத்திருந்தால், இருட்டின பிறகு தயவு செய்து இங்கிலாந்துத் தெருக்களில் நடக்காதீர்கள்.

லண்டன் டி.வி. நிகழ்ச்சியில் ஷில்பா வெற்றி: கோடிக்கணக்கில் பணம் குவிகிறது

லண்டன், ஜன. 30: லண்டன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த “பிக் பிரதர்’ என்ற கேம் ஷோவில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் பணமும், பரிசுப் பொருள்களும், ஹாலிவுட் பட வாயப்புகளும் குவிகின்றன.

இதுகுறித்த விவரம்:

இங்கிலாந்தின் “சேனல் 4′ தொலைக்காட்சி நிறுவனம் “செலிபிரிட்டி பிக் பிரதர்ஸ்’ என்ற நிகழ்ச்சியை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதில் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளின் பிரபலங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு வீட்டில் தங்க வைப்பார்கள்.

அங்கு அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளைப் படமாக்கி ஒளிபரப்பு செய்வார்கள். அதைப் பார்க்கும் நேயர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொருவராக அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவரார்கள். இறுதி வரை யார் அங்கு இருக்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

சர்ச்சை: கடந்த 3-ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் பங்கேற்றனர். முதன்முறையாக இந்தியா சார்பில் நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்றார். முதல் வாரம் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த நிகழ்ச்சி, சக போட்டியாளர்கள் ஷில்பாவிடம் நடந்துகொண்ட முறையால் பலரின் கவனத்தையும், கண்டனத்தையும் பெற்றது.

ஷில்பாவை வெளியேற்றும் நோக்கத்தில் சக போட்டியாளரான ஜேட் கூடி ஷில்பாவை “நாய்’ என்றும், மற்ற இருவர் “அருவறுக்கத்தக்கவர்’, “ஆங்கிலம் பேசத் தெரியாதவர்’ என்றும் கருத்து தெரிவித்தனர். இதனால் ஷில்பா கண்ணீர் விட்டு அழுதார்.

புகார்: சக போட்டியாளர்கள் சிலரின் மரியாதைக் குறைவான செயல்களைத் தொலைக்காட்சியில் பார்த்த நேயர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன பாகுபாடு காரணமாகவே ஜேட் கூடி அவமரியாதையாக நடந்துகொண்டார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ மெயில் மூலமாகப் புகார் தெரிவித்தனர்.

ஆதரவு: இதன் காரணமாக ஜேட் கூடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு ஷில்பாவுக்கு ஆதரவு அதிகரித்தது. 14 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு ஷில்பா, மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன், டிர்க் பெனடிக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வெற்றி: இறுதிச் சுற்றில் ஒவ்வொருவரும் பெற்ற வாக்குகள் விவரம் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டி 63 சதவிகித வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றார். மற்றவர்கள் மிகக் குறைந்த சதவிகித வாக்குகளையே பெற்றனர்.

ஆனந்தக் கண்ணீர்: வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்டதும் ஷில்பா ஷெட்டி ஆனந்தக் கண்ணீரோடு அறையை விட்டு வெளியே வந்தார். அங்கு திரண்டு நின்ற ஆயிரக்கணக்கானோர் அவரை கரகோஷத்துடன் வரவேற்றனர்.

`பிக்பிரதர்’ வெற்றியால் ஷில்பா ஷெட்டிக்கு ரூ.45 கோடி குவிந்தது 

மும்பை, ஜன.30- இங்கிலாந்தில் சானல்4 டிவி நடத்திய பிக்பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி அபார வெற்றி பெற்றார். இன வெறியால் அவமானப்படுத்தப்பட்ட அவருக்கு 67 சதவீத ஆதரவு கிடைத்தது. இந்த வெற்றியால் நடிகை ஷில்பா ஷெட்டியின் புகழ்-அந்தஸ்து ஒரே நாளில் உலக அளவில் உயர்ந்து விட்டது.

31வயதாகும் ஷில்பா ஷெட்டி இது வரை 37 படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியதால் இந்தி பட உலகம் அவ்வளவாக அவரை கண்டு கொள்ளாமல் இருந்தது. எனவே எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஆர்வம் காட்டி வந்தார்.

மும்பை செம்பூரில் வசித்து வரும் ஷில்பா ஷெட்டி பெரும் பணக்காரர் என்று சொல்லும் அளவுக்கு மிக, மிக உயர்ந்த பொருளாதார நிலையில் இல்லாமல் இருந்தார். ஆனால் இன்று பிக்பிரதர் வெற்றிக்கு பிறகு அவர் கோடீஸ்வரர் விஐபிக்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார். அதோடு இது வரை இந்திய நடிகைகள் யாருக்கும் கிடைக் காத பப்ளிசிட்டியும், புகழும் அவருக்கு கிடைத் துள்ளது.

`பிக்பிரதர்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் அவருக்கு ரூ.5கோடி கிடைத்தது. இது தவிர பரிசுப் பொருட் களும் குவிந்தன. உலகின் பல நிறுவனங்கள் ஷில்பாவை தங்கள் விளம் பரகாரர்ஆக்கு வதற்காக பரிசுகளை அள்ளி, அள்ளிக் கொடுத்தப்படி உள்ளன.

பிரபல நிறுவனங்கள் மூலம் மட்டும் ஷில்பாவுக்கு ரூ.10 கோடி வரை கிடைத்துள்ளது. பிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தன் புதிய ஆலிவுட் படத்தில் ஷில்பாவை ஒப்பந்தம் செய்ய முன் வந்துள்ளது. பிபிசியில் காமெடி தொடர் ஒன்றில் முக்கிய வேடம் ஒன்றுக்கு ஷில்பாவை கேட்டுள்ளனர்.

வசனசர்த்தா சஞ்சீவ் பாஸ்கர் இது தொடர்பாக ஷில்பாவின் தாய் சுனந் தாவுடன் பேசி வருகிறார். இந்த காமெடி தொடர் மூலமாகவும் ஷில்பாவுக்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும். இவை தவிர புத்தகங்கள் எழுதுவது, கிரிக்கெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, விருது நிகழ்ச்சியில் பங்கேற்பது, டி.வி டாகுமெண்டரியில் நடிப்பது போன்றவற்றுக்கு ஷில்பா ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

லண்டனில் புகழ் பெற்ற ஆடை, அலங்கார, நகை டிசைன் நிறுவனங்கள் ஷில்பா விடம் ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு வருகின்றன. இத்தகைய முதல் ரவுண்டி லேயே ஷில்பா ஷெட்டிக்கு ரூ.45 கோடி குவிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஷில்பாவை இன்று வரை வெளிநாட்டு நிறுவனங் கள்தான் முற்றுகை யிட்டு மொய்த்தப்படி உள்ளன. அவர் இந்தியா திரும்பியதும், அவருக்கு கிடைக்கப் போகும் பப்ளி சிட்டியைப் பொறுத்து ஷில்பாவுக்கு புதிய ஒப்பந் தங்கள் கிடைக்கலாம்.

எனவே இந்தியாவிலும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்துள்ளது. சினிமாவில் தான் ஒரே பாடல் காட்சியில் கதாநாயகனின் அந்தஸ்து உயர்ந்து, அவன் பணக்காரனாகி விடுவதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் உண்மையிலேயே `பிக்பிரதர்’ வெற்றி மூலம் நடிகை ஷில்பா ஷெட்டி ஒரே நாளில் ரூ.45 கோடி குவித்து சாதனை படைத்து விட்டார்.

Posted in Actress, Big Brother, Docu Drama, London, Movies, racism, Reality Drama, Shilpa Shetty, Tamil Actress, UK | Leave a Comment »

Shilpa Shetty Wins Celebrity Big Brother With 67 Percent of Votes

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

பிக்பிரதர் நிகழ்ச்சி: ஷில்பா ஷெட்டி அபார வெற்றி

லண்டன், ஜன. 29-

இங்கிலாந்தில் “சானல் 4” தொலைக்காட்சி “பிக்பிரதர்” என்ற வித்தியாசமான டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. தனி அறையில் 26 நாட்களுக்கு 14 பிரபலங்களை தங்க வைத்து, அவர்களது தினசரி நடவடிக்கைகளை ஒளிபரப்பு செய்தனர். இதில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார்.

கடந்த 3-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடு களின் நேயர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. திடீரென இந்த நிகழ்ச்சி டி.வி. நடிகை ஜேக்கூடியால் சர்ச் சைக்குள்ளானது.

நடிகை ஷில்பா ஷெட்டியை ஜேக்கூடி “நாய்” என இன வெறியுடன் திட்டினார். பப்படம், ஆங்கிலம் பேச தெரியாது என்றும் ஷில்பாவை அவர் கிண்டல் செய்தார். இந்த இனவெறி பேச்சுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

ஜேக்கூடியை கண்டித்து சுமார் 45 ஆயிரம் பேர் புகார் செய்தனர். இந்த நிலை யில் போட்டி விதிகளின் படி நேயர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

குறைந்த ஓட்டு பெறுபவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டனர்.

ஷில்பா ஷெட்டியை திட்டிய காரணத்தால் நேயர்களிடம் வெறுப்பை சம்பாதித்திருந்த ஜேக்கூடிக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இதனால் நடிகை ஜேக்கூடி “பிக்பிரதர்” நிகழ்ச்சியில் இருந்து வெளி யேற்றப்பட்டார்.

ஜேக் கூடியுடன் சேர்ந்து ஷில்பா ஷெட்டியை கிண்டல் செய்த ஜோ ஓமிரா, டேனிலி லாயிட் ஆகியோரும் அடுத்தடுத்து நேயர்களிடம் ஆதரவு பெற இயலாமல் வெளியேற்றினர். இதனால் நடிகை ஷில்பா ஷெட்டி மிக, மிக எளிதாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

14 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு 6 பேர் தகுதி பெற்றனர். நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மையன் ஜாக்சன், டிர்க்பெனடிக், இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயிட், ஜேக்டுவிட் ஆகியோர் அந்த 6 பேராகும். இவர்களில் இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயட், ஜேக்டுவிட் ஆகிய மூவரும் சனிக்கிழமை நீக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மைன் ஜாக்சன், டிர்க் பெனடிக் ஆகிய மூவரிடமும் பலத்த போட்டி நிலவியது. இவர்களில் இங்கிலாந்து நேயர்களிடம் அதிக ஓட்டு பெறப்போவது யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவியது.

பெரும்பாலானவர்கள் டிர்க் பெனடிக் இறுதிச் சுற்றில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதினார்கள். ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் ஆசிய நாட்டுக்காரர்களும், இங்கிலாந்து நாட்டுக்காரர்களும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு அவரை வெற்றி பெறச் செய்தனர்.

`பிக்பிரதர்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் ஒவ்வொரு வருக்கும் கிடைத்த ஓட்டுகள் விவரம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டி 63சதவீத ஓட்டுக் கள் பெற்று பிக்பிரதர் நிகழ்ச் சியில் முதல் இடத்தைப் பிடித்து அபார வெற்றி பெற்றார்.

இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் இந்த கவுரவத்தை பெறுவது இதுவே முதல் தடவையாகும். 2-வது இடத்தை ஜெர்மைன் ஜாக்சன் பிடித்தார். இவர் பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஆவார்.

3-வது இடத்தை டிர்க் பெனடிக் பெற்றார். போட்டி யில் வெல்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட இவரை மக் கள் 3-வது இடத்துக்கு தள்ளி விட்டனர். ஷில்பா ஷெட் டியுடன் ஒப்பிடுகையில் 2-வது, 3-வது இடத்தை பிடித்தவர்களுக்கு மிக, மிக குறைவான வாக்குகளே கிடைத்திருந்தன.

தோல்வி அடைந்த இயன் வாட்கின்ஸ் 5.3 சதவீதம், டேனிலி லாயிட் 3.3 சதவீதம், ஜேக் டூவிட் 3.2 சதவீதம் ஓட் டுக்களையே பெற முடிந்தது.

63 சதவீத ஓட்டுக்களுடன் ஷில்பா முதல் இடத்தைப் பிடித்து இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் ஷில்பா `ஓ’ என்று ஆச்சரியத்தில் குரல் எழுப்பியபடி கைக்கூப்பி வணங்கினார்.

“சிக்கன் கறி வென்று விட்டது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.

அவர் கண் களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது. ஜெர்மைன் ஜாக்சனும், டிர்க் பெனடிக்கும் ஷில்பாவை கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதையடுத்து ஷில்பா ஷெட்டி 26 நாட்களுக்குப் பிறகு தன் வீட்டு அறைக்குள் இருந்து வெளியில் வந்தார். ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு நின்று ஷில்பாவை வரவேற்றனர். இவை அனைத்தும் சானல்-4ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

`பிக்பிரதர்’ டி.வி. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷில்பா ஷெட்டிக்கு பரிசுத் தொகையாக ரூ.3 கோடி (300,000 pounds (600,000 dollars)) வழங்கப்படுகிறது. இது தவிர அவருக்கு ஏராளமான நிறுவனங்கள் பரிசுகளை வாரி வழங்குகின்றன. புதிய ஒப்பந்தங்களும் ஷில்பாவுக்கு கிடைக்கும். குறைந்த பட்சம் ரூ.40 கோடி அளவுக்கு அவருக்கு பரிசுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஷில்பாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும் குவிந்தபடி உள்ளன. இது அவரை திக்குமுக்காட வைத்துள்ளது.

பிக்பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது குறித்து ஷில்பா ஷெட்டி டயரி ரூமில் அமர்ந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் நாடு (இந்தியா) பெரு மைப்படும் வகையில் வெற்றிக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி.

இந்த போட்டி உண்மையில் ராட்டினத்தில் பயணம் செய்வது போல இருந்தது. உயர்வும், தாழ்வும் எனக்கு பல விஷயங்களை உணர்த்தின. நான் ஏதோ பிரச்சினையை ஏற்படுத்தி விட்டதாக இங்குள்ளவர்கள் கருதக்கூடாது.

என்னை ஜேக்கூடி இன வெறியுடன் திட்டியதாக கூறியது தவறு. அவர் இன வெறி பிடித்தவர் அல்ல. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

ஜேக்கூடி சற்று ஆவேசமாக பேசக்கூடியவர். எளிதில் கோபப்படுபவர். அதுதான் அவருக்கு எதிராக பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது. இதை இனி அனைவரும் மறந்து விட விரும்புகிறேன்.

எவ்வளவு தான் பிரபல மானவராக இருந்தாலும் தவறு செய்வது சகஜம்தான். எல்லோரும் மனிதர்கள் தானே. நாம் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எனவே ஜேக்கூடியை குறை சொல்லக்கூடாது.

இங்கிலாந்தில் உள்ள எந்த ஒரு நபருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு நான் என் நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை.

இவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டி கூறினார்.

Posted in Actress, Big Brother, Britain, Celebrity, Drama, London, racism, Reality Show, Shilpa Shetty, UK | Leave a Comment »

Hema Malini rubs north Indians the wrong way

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

மும்பை, ஜன. 26: நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி (படம்), வட இந்தியர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.

இதுகுறித்த விவரம்:

மும்பை உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஹேமமாலினியிடம்

“மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ஹேமமாலினி

“அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’

என பதிலளித்திருந்தார். ஹேமமாலினியின் இந்த பதிலால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஹுசைன் தல்வாய் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:

ஹேமமாலினி முதலில் தான் ஒரு பொறுப்புள்ள எம்.பி. என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் நடிகை. அவருடைய கணவர் -நடிகரும், எம்.பி.யுமான தர்மேந்திரா வட இந்தியர்தான்; அவருடைய மகள்களும் பாதி வட இந்தியர்கள்தான். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து ஹேமமாலினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரிலிருந்து குடியேறிய வட இந்தியர்கள்தான் மும்பை மக்கள் தொகையில் ஏராளமானோர் என்பதும், ஹேமமாலினி தமிழில் அறிமுகமாகி இந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட இந்தியர்கள் பற்றி நான் கூறிய கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளது: ஹேமமாலினி

மும்பை, ஜன. 27: வட இந்தியர்கள் குறித்து தான் கூறியதாக தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், தொலைக்காட்சி நிருபர்கள் சிலர், வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு அவர், அவர்களுக்கு பிரச்சினை என்றால் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’ என்று பதிலளித்தார். ஆனால் இதற்கு பல தரப்பிலும் பலத்த கண்டனம் எழுந்தது.

இதையடுத்து இந்த சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்து அவர் கையெழுத்திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது. அதில் கூறியுள்ளதாவது:

வட இந்தியர்கள் குறித்து நான் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் தவறாக திரித்துக்கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயம் ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தபோது, சில தொலைக்காட்சி நிருபர்கள் என்னை அணுகி கருத்து கேட்டனர். அப்போது மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு சத்தமாக இருந்ததால் தொலைக்காட்சி நிருபர்கள் கேட்ட கேள்வி எனக்கு சரியாக கேட்கவில்லை. இருப்பினும் அந்த சமயத்தில் நான் சிரித்துக்கொண்டேதான் அவர்களுக்கு பதிலளித்தேன்’ என்றார்.

வட இந்தியர்களை அளவுக்கதிகமான மரியாதையுடன் உயரிய இடத்தில் வைத்துள்ளேன். மும்பையை விட்டு அவர்களை வெளியேற சொல்லவோ அல்லது அவர்களுக்கு ஆலோசனைக் கூறும் அதிகாரமோ எனக்கில்லை.

இதற்குமேலும் அரசியல் கட்சிகள் நான் கூறியதாக தெரிவித்த கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்றார்.

Posted in Bharatiya Janata Party, BJP, Bombay, Brihanmumbai Municipal Corporation, Civic Polls, Elections, Hema Malini, Hemamalini, India, Local Body Polls, Mumbai, north India, Polls, Quote, racism, Racist, Rajya Sabha | Leave a Comment »

British Asians campaign for Shilpa – Racism row: UK police to probe emails

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

‘ஷில்பா ஷெட்டி மீது இனவாத ஏளனம்’- இந்தியா கண்டனம்

திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி
திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி

பிரிட்டனில் செலிபிரிட்டி பிக் பிரதர் எனப்படும் யதார்த்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பங்குபெறும் மும்பையைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி இனப்பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய அரசு விசாரித்து வருவதாகக் கூறிய இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒருவர்- ஷில்பா ஷெட்டியின் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டதால், அவரை இந்தியர் என அழைத்தார்.

இந்த நிகழ்ச்சி குறித்து பிரிட்டனிலுள்ள ஆயிரக் கணக்காணவர்கள் புகார் கூறியுள்ளார்கள்.

அதேவேளை இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இது குறித்து பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேரின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் கேட்ட போது, தாம் இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்றும், ஆனால் நிறவெறிக் கொள்கை என்பது எந்த வகையில் இருந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

லண்டன் டி.வி. நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு குவிகிறது- உரிய நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகம்

புதுதில்லி, ஜன.18: “பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெருமளவில் ஆதரவு குவிகிறது. இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்த விவரம்:

இங்கிலாந்தில் ஒளிபரப்பாகி வரும் “சேனல் 4′ டி.வி.யின் பிரபல நிகழ்ச்சி “பிக் பிரதர்’. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் ஓர் தனியறையில் சில நாள்கள் தங்கவைக்கப்படுவர்.

அங்கு அவர்களுடைய தினசரி வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதையும், சக போட்டியாளர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக ஒளிபரப்புகிறார்கள்.

ஒவ்வொருவரின் நடவடிக்கைகளுக்கும் நேயர்கள் ஓட்டளிப்பார்கள்; அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு இறுதி வரை தாக்குப்பிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்றார். இதற்காக அவர் சுமார் சுமார் ரூ.3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

அதில் ஷில்பா ஷெட்டியை அவருடைய சக போட்டியாளர்களில் ஒருவர் “நாய்’ என்றும், மற்றொருவர் “அருவருப்பானவர்’ என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ஷில்பா கண்ணீருடன் வெளியேறினார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான டி.வி. நேயர்கள் டி.வி. நிர்வாகத்துக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கும் அமைப்புக்கும் புகார் தெரிவித்தனர்.

சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் குவிந்தன. இன பாகுபாடு காரணமாகவே ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்டுள்ளதாக பலரும் தங்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

இங்கிலாந்து அரசு நடவடிக்கை: தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி.கீத் வாஸ் இப்பிரச்சினையை லண்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. “சேனல் 4′ தொலைக்காட்சி நிறுவனமும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

இந்திய அரசு நடவடிக்கை: இந்தியா இனம், மொழி என்ற பாகுபாடின்றி செயல்பட்டு வருவது உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2-ம் இடத்தில் ஷில்பா: இந்நிலையில் ஷில்பா ஷெட்டிக்கு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அவர்களுடைய ஓட்டின் அடிப்படையில், இந்தப் போட்டி நிகழ்ச்சியில் தற்போது ஷில்பா ஷெட்டி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். காமெடி நடிகை கிளேயோ ரோக்காஸ் முதலிடத்தில் இருக்கிறார். ஷில்பா ஷெட்டி முதலிடத்தைப் பெறுவார் என்று பல இங்கிலாந்து பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகை ஷில்பா ஷெட்டி விவகாரம் குறித்த எதிர்ப்பு வலுக்கிறது

பிரிட்டனில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் கலந்துகொள்ளும், இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி, அவருடன் கூட கலந்துகொள்பவர்களால், இனரீதியாக ஏளனம் செய்யப்பட்டதைக் கண்டிக்கும் முறைப்பாடுகள் குவியும் அதே வேளையில், அந்தத் தொடருக்கான விளம்பர அனுசரணை வழங்கிய நிறுவனம் அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.

ஒரு மாளிகையில் வைக்கப்பட்டு, ஒளித்து வைத்த கமெராக்கள் மூலம் ஒளிபரப்பப்படும், ‘பிக் பிரதர்’ என்னும் இந்த யதார்த்தத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சக நடிக, நடிகைகளின் நடாத்தை, மீண்டும், மீண்டும் தமக்கு கவலையைத் தந்துள்ளதாக, இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய கார் போன் வேர்ஹவுஸ் என்னும் நிறுவனம் கூறியுள்ளது.

பிக் பிரதர் நிகழ்ச்சியில் சக நடிகர் ஒருவருடன்
பிக் பிரதர் நிகழ்ச்சியில் சக நடிகர் ஒருவருடன்

இந்த நடிக, நடிகர்களின் நடாத்தை விரும்பத்தக்கதாக இல்லை என்று கூறும், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும், சனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி, ஆனால் நடிகை ஷில்பா கூட இந்த நடிகைகளின் நடத்தை இனவாதம் என்பதைவிட, கலாச்சார மற்றும் குடும்பப் படிநிலை வேறுபாடே அதற்குக் காரணம் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து, இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டனின் நிதி அமைச்சர் கோர்டன் பிரவுண் கூட அங்கு இந்தியத் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.

டி.வி.நிகழ்ச்சியில் யாரும் என்னை அவமதிக்கவில்லை: ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி

லண்டன், ஜன. 19-

லண்டனில் உள்ள `சேனல் -4′ என்று நிறுவனம் `பிக்பிரதர்’ என்ற டெலிவிஷன் நிகழ்ச் சியை ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு பிரபல கலைஞர்களுடன் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் கலந்து கொண்டார். அப்போது ஷில்பா ஷெட்டியை மற்ற கலைஞர்கள் அவமதித்ததும், இனவெறியை தூண்டும் வகையில் அவரை திட்டியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவமதிக்கப்பட்ட ஷில்பா கண்ணீர் விட்டு அழுதார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் இது சர்ச்சையை எழுப்பியது. ரசிகர்களிடம் இருந்து இணைய தளம் மூலம் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி அடித்துள்ளார்.

`என்னை ஜேட்கூடி அல்லது வேறு கலைஞர்கள் யாரும் அவமதிக்கவில்லை. இனவெறியை தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளவில்லை என்னை அவமதித்ததாக கூறப்படுவது உண்மை அல்ல என்றே நான் கருதுகிறேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாதம் நடந்தது உண்மைதான். இதில் இனவெறி எதுவும் இல்லை.

இதற்காக யாரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்கும் நிலை வந்தால் அவர்களிடம் நானும் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஷில்பா ஷெட்டி `சேனல்-4′ டி.வி. நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.

ஷில்பா ஷெட்டியை அவமதித்த பென் ஜேட்கூடி மீண்டும் ஷில்பாவிடம் “நான் உனக்கு மரியாதை கொடுக்க தேவையில்லை. நீ இளவரசியாக இருக்கலாம். இது பற்றி எனக்கு கவலை இல்லை” என்று கூறி வாக்கு வாதம் செய்தார்.

ஷில்பா ஷெட்டி அல்லது ஜேட் கூடி இருவரில் யாராவது ஒருவரை நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்களோ வாக்கெடுப்பு மூலம் நீக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தத்தை அதன் விளம்பரதாரர்கள் ரத்து செய்து உள்ளனர்.

ஷில்பா ஷெட்டியை திட்டிய டி.வி.நடிகை நீக்கம்: கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்டார்

லண்டன், ஜன. 20-

இங்கிலாந்தில் சானல் 4 எனும் தொலைக்காட்சி `பிக் பிரதர்’ என்ற டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. இதில் உலகின் 5 பிரபலங்கள் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த அறைக்குள் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? சக போட்டியாளர்களுடன் எப்படி பழகுகிறார்கள் என்பது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். நேயர்களும் ஓட்டுப்போடுவார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக நீக்கப்பட்டு கடைசி வரை தாக்குப் பிடிப்பவருக்கு கோடிக்கணக்கில் பரிசு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பிரபல இந்தி நடிகை ஷில்பாஷெட்டி பங்கேற்றுள்ளார். அவர் இந்த நிகழ்ச்சியில் முதலிடத்தைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளரான டி.வி. நடிகை ஜேக் கூடி தரக் குறைவாக பேசி திட்டினார். அதோடு ஷில்பாவை `நாய்’ என்றும் கூறினார். இதைக் கேட்டு ஷில்பா ஷெட்டி கதறி அழுதார்.

ஷில்பாஷெட்டியை நடிகை கூடி திட்டியபோது இங்கிலாந்து முன்னாள் அழகி டேனியல் லாயிட் சிரித்தார். அதோடு ஷில்பாவை பார்த்து `அருவருப்பானவர்’ என்றார். இது நேயர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷில்பா ஷெட்டியிடம், ஜேக் கூடியும், டேனியல் லாயிட்டும் இனவெறியுடன் நடந்து கொண்டதாக தெரிய வந்தது.

இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் கண்டனம் தெரிவித்து இ-மெயில் அனுப்பினார்கள். ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளில் இருந்து குரல் எழுந்ததால் பிக்பிரதர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அரண்டு போனார்கள்.

இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்ததால் இது அரசியல் ரீதியான பிரச்சினையாக மாறியது. இன வெறியர்களை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

`இனவெறி’ முத்திரை குத்தப்பட்டதால் ஜேக்கூடி, டேனியல் லாயிட்டுக்கு விளம்பரத்துக்கு உதவிய நிறுவனங்கள் விலகிக் கொண்டன. அவர்கள் `மாடலிங்’ செய்திருந்த பொருட்களின் விற்பனைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

நிலமை மோசமாவாதை உணர்ந்த ஜேக்கூடி, டேனியல் லாயிட் இருவரும் நேற்று பணிந்தனர். ஷில்பா ஷெட்டியிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். அதோடு இருவரும் ஷில்பாவை கட்டித் தழுவி கண்ணீர் மல்க அன்பை வெளிப்படுத்தினார்கள்.

இதற்கிடையே போட்டி விதிகளின்படி ஷில்பா, ஜேக் கூடி இருவரில் ஒருவரை நீக்க தொலைக்காட்சி நேயர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் 82 சதவீத நேயர்கள் டி.வி. நடிகை ஜேக்கூடிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர் `பிக்பிரதர்’ நிகழ்ச்சியில் இருந்து இன்று நீக்கப்பட்டார்.

ஷில்பாஷெட்டி நேயர்கள் ஓட்டெடுப்பில் அதிக ஆதரவுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நேற்றிரவு இந்த முடிவு விபரம் அறிவிக்கப்பட்டது.

தனக்கு `கல்தா’ கொடுக்கப்பட்டதை அறிந்ததும் டி.வி. நடிகை ஜேக்கூடி கண்ணீர் விட்டு கதறி அழுதார். `பிக் பிரதர்’ அறையில் இருந்து வெளியில் வந்த அவரிடம் பழைய காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதில் அவர் ஷில்பாவை முறைத்தப்படி திட்டும் காட்சிகளும் இருந்தன.

அதை கண்டதும் ஜேக்கூடி அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்தால் உலகமே தன்னை இனவெறி பிடித்தவர் என்று முத்திரை குத்தி இருப்பதை தெரிந்து மனம் உடைந்து போனார்.

கண்ணீர் மல்க நின்ற அவரை பிக்பிரதர் அமைப்பாளர்கள் டைரி அறைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் ஷில்பாவை பட்டப்பெயர் சொல்லித்தான் பேசினேன். இதை எல்லாரும் தவறாக புரிந்து கொண்டு விட்டனர். பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதால் என்னை உலகமே இனவெறி பிடித்தவள் என்று சொல்லி விட்டது.

எல்லாரும் நினைப்பது போல நான் இனவெறி கொண்டவள் அல்ல. நான் அப்படி வளர்க்கப்படவும் இல்லை. இனவெறியுடன் நான் பேசவே இல்லை. இது ஷில்பாவுக்கு நன்றாக தெரியும்.

நான் இனவெறி பிடித்தவள் அல்ல என்று ஷில்பாவே கூறி உள்ளார். இது எனக்கு ஆறுதலாக உள்ளது. ஆனால் பத்திரிகைகள் என்னை ஒரு இன வெறியாளன் போல காட்டி விட்டனர்.

நேயர்கள் என்னை பிடிக்காமல் வாக்களித்திருந்தால் அதை ஏற்று இருப்பேன். ஆனால் தவறாக காரணம் காட்டி என்னை `பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டனர். இப்படி வெளியேற்றப்படுவது எனக்கு கவலை தருகிறது.

ஷில்பாவை நாங்கள் `அப்பளம்‘ என்றும் `ஆங்கிலம் பேச தெரியவில்லை’ என்றும் சாதாரணமாகத்தான் சொன்னோம். ஆனால் அதுவே எனக்கு வினை ஆகி விட்டது.

நான் பேசிய காட்சிகளை பார்த்தபோது என் வார்த்தைகளால் கவுரவம் இல்லாமல் நடந்து கொண்டதாக நினைக்கிறேன். ஆனால் தவறு செய்யவில்லை என்று ஒரு கட்டத்தில் நியாயப்படுத்தினேன். ஆனால் இதை இனவெறி என நினைத்து விட்டனர். எனக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

பிக்பிரதர் மூலம்தான் என் வாழ்க்கை 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாசமானது. இப்போது அதே பிக்பிரதர் மூலம் என் வாழ்க்கை முடிந்து விட்டது.

இவ்வாறு டி.வி.நடிகை ஜேக்கூடி கூறினார்.

Pap

Posted in abuse, Acting, Anand Sharma, Appalam, Big Brother, British Police, Channel 4, England, Gameshow, Indian, London, Minister of State for External Affairs, Paki, Pakistani, Papad, racism, Racist, Rating, Reality Show, Shilpa Shetty, South Asia, Stage, TV, UK | Leave a Comment »