Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Quotes’ Category

Theodore Bhaskaran, Thamizharuvi Manian, Vasanthidevi, Ra Nallakkannu, Judge Chandru & Kunrakkudi Ponnambala Adigalaar

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

என்று சொன்னார்!

ஆர். நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
ஒரு வெள்ளைக்கார அழகியின் ரோஸ் நிற கன் னத்தில் அழகு ததும்பும் மச்சம். இரண்டு கவிஞர் களுக்கிடையில் அந்த மச்சத்தை வர்ணிக்கிற போட்டி. “செழித்து வளர்ந்திருக்கும் ரோஜாத் தோட்டத்தில் ஒரு கறுப்பு வண்டு தேன் அருந்து கிறது’ என்றார் வெள்ளைக்காரக் கவிஞர்.
“வெள்ளைக்காரன் தோட்டத்தில் அடிமையாக வேலை செய்தே களைத்துப்போன ஒரு கறுப்ப னைப் போல இருக்கிறது அந்த மச்சம்’ எனச் சொன்னார் கறுப்பர் இனக் கவிஞர்.
————————————————————————————————————————————-

தமிழருவி மணியன்.

பூனை குட்டி போட்டால், தாய்க்கு அதிகக் கவலை, பொறுப்பு! பத்திரமாக, வலிக்காமல் நம் மைத் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் தாய் என்கிற தைரியத்தில் இருக்கும் பூனைக்குட்டி! ஆனால் குரங்கினம் அப்படியில்லை. “தன்னைப் பெற்றவள் எந்த நேரத்திலும் எந்த மரத்துக்கும், எந்தக் கிளைக்கும் தாவிவிடுவாள்; உஷாராக இருக்க வேண்டியது நம் பொறுப்பு’ என்று தாய் மடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் குரங்குக்குட்டி. குரங்கிலிருந்து வந்த மனிதன், பூனை மனோபாவத்துக்கு வந்துவிட்டான். எல் லாவற்றையும் அடுத்தவர்கள் பார்த்துக் கொள் வார்கள் என்கிற பொறுப்பின்மையை வளர்த்துக் கொண்டுவிட்டான்.
————————————————————————————————————————————-

வசந்திதேவி, கல்வியாளர்.

தேவையற்ற அநாகரிகங்களை மேலைநாடுகளி லிருந்து காப்பியடிக்கிற நாம், அவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைக் கற்பதில்லை.

முதலாளித்துவ நாடுகளின் சிறப்பே, எல்லோ ருக்கும் சமமான கல்வி முறை என்பதுதான். மந் திரியின் மகனுக்கும், மாடு மேய்ப்பவரின் மக னுக்கும் ஒரே வகுப்பறைதான். அனைவருக்கும் தரமான, கல்வி கிடைக்க அரசுதான் செலவு செய் யும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தனி யார் பள்ளிகள் என்று சொன்னாலே சிரிக்கிறார் கள். “கல்வி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், பிறகு எதற்காக அரசாங்கம்” என்று கேட்கிறார் கள்.

————————————————————————————————————————————-

தியோடர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் ஆர்வலர்.

இன்றைய குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டால் “ஆம்லெட்’ என்று சிரிக்கி றது. முட்டை ஓர் உயிர் வளர்கிற இடம் என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவதே இல்லை. டால்பினை வெளிநாட்டிலிருந்து இறக்கு மதியான உயிராகப் பார்க்கிற நமக்கு, அதை “ஓங் கில்’ என்று நம் முன்னோர்கள் அழைத்த விவரம் தெரியாது. காட்டில் வாழ்கிற உயிரினங்களைக் குறிப்பிடும்போது “கொடிய விலங்கு புலி’ என்று அறிமுகப்படுத்தபட்டால் எப்படிக் குழந்தைக ளுக்கு விலங்குகள் மேல் நேசம் வரும்? “கொடூரக் காடு’ என்று கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் கதா சிரியர்கள். சென்னையில் சாலையில் ஓரமாக நடந் துபோனால், உயிருடன் திரும்புவதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை.
————————————————————————————————————————————-

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

தொலைக்காட்சி பெட்டியை நாக்கூசா மல் “இடியட் பாக்ஸ்’ என்று அழைக்கி றோம். புத்திசாலித்தனமான அந்த அறி வியல் கண்டுபிடிப்பைத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளாமல், ராசிக்கல் பலன் பார்ப்பது நாம்தானே தவிர, அந் தக் கண்டுபிடிப்பு அல்லவே! இப்படி நாம் செய்யும் தவறுகளுக்குக்கெல்லாம் மற்றவர்களின் மீது பழிபோட்டு, நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதே நம் வழக்கமாக இருக்கிறது. ஆன்மிகத் தைப் புரிந்துகொள்ளாமல் சடங்குக ளின் பின்னால் சென்று சடங்குகளையே ஆன்மிகமாக்கி விட்டோம்.
————————————————————————————————————————————-

நீதிபதி சந்துரு. 

பொது இடங்களில் கழிப்பிடங்களில் செல்லும்போது “ஆண்கள்-பெண்கள்’ என்று தமிழில் எழுதியிருப்பதையே படிக்கத் தெரியாமல் வரைந்திருக்கும் ஆண், பெண் படங்களைப் பார்த்து தெரிந்துகொள்கிற மக்கள் இருக்கிற நாட்டில், மக்களின் மொழியை நீதிமன் றமே புறக்கணிக்கிறது. தன் வழக்கு பற்றி என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைப் பாமரன் புரிந்துகொண்டால் வாய்தா வாங்குவதும், இழுத்தடிப்பதும் பெருமளவு குறையும்.

Posted in Authors, Comparisons, Courts, Education, Environment, Evolution, Famous, Fun, Impress, Incidents, Interesting, Judge, Justice, Law, Life, Metaphors, Observations, Order, Quotes, Read, Religion, Rituals, Society, Speech, Study, Wow, Writers | Leave a Comment »

Kanshiram & BSP : Goals & Achievements – ‘Viduthalai Siruthaigal’ Ravikkumar

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

ஒரு ஜனநாயகப் போராளி

ரவிக்குமார்

இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கான்சிராம் அமரர் ஆகிவிட்டார். அம்பேத்கருக்குப் பிறகு இந்திய அளவில் தலித் மக்களின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர் அவர். 1934 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் பஞ்சாபில் “ரவிதாஸி சீக்கிய’ சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கான்சிராம். நான்கு பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் கொண்ட அவரது குடும்பத்தில் அவர் மட்டுமே பட்டப்படிப்பு வரை படித்தார். நில அளவைத் துறையில் வேலைக்குச் சேர்ந்து பின்னர் புனேவில் உள்ள வெடிமருந்துத் தொழிற்சாலைக்கு மாற்றலாகிப் போனார்.

அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்த கான்சிராம், 1965ஆம் ஆண்டில் அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு விடுமுறை தரும் வழக்கத்தை அரசு கைவிட்டபோது அதனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஈர்க்கப்பட்டார். சாதியவாதிகளின் வெறுப்பு அவரை அதிர வைத்தது. அம்பேத்கர் எழுதிய “”சாதி ஒழிப்பு” என்ற நூலை ஒரே இரவில் மூன்று முறை படித்தபோது சாதியவாதிகளின் வெறுப்புணர்வுக்கான காரணம் விளங்கியது. தாம் மேற்கொள்ள வேண்டிய பயணம் குறித்த தெளிவும் ஏற்பட்டது. அப்போது தொடங்கிய பயணம் நாற்பது ஆண்டுகள் நிற்காமல் தொடர்ந்தது.

கான்சிராமுடன் பணிபுரிந்த டி .கே. கபார்டே என்பவர்தான் அவருக்கு அம்பேத்கரின் சிந்தனைகளை அறிமுகம் செய்தவர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக உழைப்பதெனத் தீர்மானித்த கான்சிராம் தனது நண்பர் கபார்டேவுடன் சேர்ந்து அதற்கான ஆதரவாளர்களைத் திரட்ட ஆரம்பித்தார்.

சமூகப் பணியில் தோய்ந்த மனம் அரசாங்க வேலையில் லயிக்க மறுத்தது. திருமண வாழ்வில் அவருக்கு விருப்பமே இல்லாமல் போயிற்று. 1971-ல் அவர் அரசுப் பணியைத் துறந்தார். அதே ஆண்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கென நலச்சங்கம் ஒன்றை உருவாக்கினார். 1973ல் மேலும் சில நண்பர்களோடு சேர்ந்து “அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பை (BAMCEF) உருவாக்கினார்.

மகாராஷ்டிரத்தின் சிறு நகரங்களையும் கான்சிராம் விட்டு வைக்கவில்லை. அவரது செல்வாக்கு மகாராஷ்டிரத்தைக் கடந்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் என விரிந்தது. 1980ல் அவர் நடத்திய “அம்பேத்கர் மேளா’ என்ற ஊர்திப் பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திப் பலரையும் அவரை நோக்கி ஈர்த்தது. அதன் விளைவாக “தலித் சோஷித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி’ என்ற அமைப்பை அவர் துவக்கினார். DS4 என சுருக்கமாக அறியப்பட்ட அந்த இயக்கமே 1984ல் அவர் பகுஜன் சமாஜ் கட்சியைத் துவக்குவதற்கு இட்டுச் சென்றது.

கான்சிராம் ஒரு கவர்ச்சியான பேச்சாளரல்ல, ஆழ்ந்த சிந்தனையாளரெனவும் அவர் அறியப்பட்டதில்லை. மாறாக, அவர் நல்ல அரசியல் ராஜதந்திரி. எளிய மக்களை அமைப்பாகத் திரட்டத் தெரிந்தவர். இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மூலம் தலித் மக்களை விடுதலை பெறச் செய்ய முடியாது. அரசியல் அதிகாரமே அவர்கள் முன்னேறுவதற்கு ஒரே வழி என அவர் கருதினார்.

காங்கிரஸின் வாக்குவங்கியாக இருந்த தலித் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கான்சிராமை நோக்கி நகர்ந்தனர். அவர் கனவு கண்டதுபோல 1995ல் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அவரது கட்சி ஆட்சி அமைத்தது, மாயாவதி முதலமைச்சர் ஆனார்.

அம்பேத்கருக்குப் பிறகான இந்திய நாடாளுமன்ற அரசியலில் தலித் மக்களை “பேரசக்தி’ உள்ளவர்களாக மாற்றிய பெருமை கான்சிராமையே சாரும். அரசியல் அதிகாரம் சாதியை ஒழித்து விடாது என்பது உண்மைதான். ஆனால் அது வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் என்பதை எவரும் மறுக்க முடியாது. தலித்துகளை மற்ற அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்த வரலாற்றை மாற்றி தலித்துகள் மற்ற கட்சிகளை உபயோகித்துக் கொள்ள முடியும் என்பதை சமாஜ்வாதி, பாரதீய ஜனதா கட்சிகளோடான அவரது கூட்டணி எடுத்துக்காட்டியது.

கான்சிராம் எவருக்கும் பணிந்து போனதில்லை. தன்னைச் சிறுமைப்படுத்த முயன்ற எவரையும் தண்டிக்காமல் விட்டதில்லை. “ஸ்திரத்தன்மைதான் வளர்ச்சிக்கு ஆதாரம்’ என்ற கருத்துக்கு மாறாக, “ஸ்திரமற்ற அரசியல் சூழல்தான் தலித்துகளின் வளர்ச்சிக்கு நல்லது’ என்பதை அவர் மெய்ப்பித்துக் காட்டினார். வலிமையான அரசு பலவீனமான சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பானதல்ல என்பதை அவர்தான் முதலில் கூறினார்.

கான்சிராம் இந்த நாட்டை ஜனநாயகப்படுத்த முயற்சித்த சமூகப் போராளி ஆவார். பெரும்பான்மையின் ஆட்சி என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை அப்படியே இந்தியாவுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால் மேலை நாடுகளில் இருப்பது மாறும் தன்மை கொண்ட அரசியல் பெரும்பான்மை (political Majority). இந்தியாவில் இருப்பதோ பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் வகுப்புவாதப் பெரும்பான்மை (Communal Majority்) என அம்பேத்கர் கூறினார். இந்தியாவில் அரசியல் பெரும்பான்மையின் ஆட்சியை உருவாக்கவே கான்சிராம் பாடுபட்டார்.

வகுப்புவாதத்தின் கை ஓங்கியிருந்த காலத்தில் சாதி ஒழிப்பின் அடிப்படையில் புதிய கேள்விகளை, புதிய அரசியலை முன்வைத்து அதைப் பலவீனப்படுத்தியவர் கான்சிராம். மதவாத எதிர்ப்பு என்பது சாதிப் பிரச்சினையைப் புறக்கணித்துவிட்டு சாத்தியமல்ல என்பதை அவர் எடுத்துக் காட்டினார். தலித் மக்களின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதைவிடவும் அவர்கள் “”பணிய மறுக்க வேண்டும்” என்பதே கான்சிராம் தந்துவிட்டுப் போயிருக்கும் முதன்மையான செய்தியாகும். அந்தச் செய்திதான் அவரை தலித் மக்களின் அரசியல் குறியீடாகவும் ஆக்கியிருக்கிறது.

(கட்டுரையாளர்: விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர்).

Posted in Achievement, Alliance, Ambedkar, Bahujan Samaj Party, Biography, BSP, Dalit, Elections, Kanshiram, Mayawathy, Memoirs, Politics, Quotes, Ravikumar, Thoughts, UP, Uttar Pradesh, Viduthalai Siruthaigal, Vote | Leave a Comment »

Kripunandha Vaariyaar – Thanjai Leo Ramalingam

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

பக்திப் பயிர் வளர்த்தவர்

தஞ்சை லியோ இராமலிங்கம்

விடியற்காலை எழுந்து, நாளும் பூஜை செய்வதையும் தினமும் சொற்பொழிவு நிகழ்த்துவதையும் தவமாகக் கொண்டு வாழ்ந்தவர் வாரியார் சுவாமிகள்!

முருகனின் நாமங்களில் ஒன்றாகிய கிருபானந்த வாரி என்ற பெயரை இவருக்கு இவரின் தந்தையார் சூட்டினார். கிருபை என்றால் கருணை என்று பொருள். ஆனந்தம் என்றால் இன்பம். வாரி என்பதற்கு சமுத்திரம் என்று பொருள். கருணையே உருவான, பிறரை இன்பத்தில் ஆழ்த்திய, இவர் ஓர் தமிழ்க்கடல்! தீர்க்கத் தரிசனமாக இவர் தந்தையார் பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளார்!

இவருக்கு இவரின் தந்தையாரே இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்று இறுதிக்காலம் வரை பலருக்கும் வெண்பாவில் வாழ்த்து எழுதி வழங்கினார். பன்னிரெண்டு வயதிலேயே ஏராளமான பாடல்களை மனப்பாடம் செய்யும் திறன் பெற்றிருந்தார். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார்.

தமிழ் வருடங்கள் அறுபதினையும் அடிமாறாமல் உணர்ச்சியோடு ஒரே மூச்சில் அழகுறச் சொல்லும் திறன் பெற்றிருந்தார். இவரது பேச்சில் சங்கீதத்தை ரசிக்கலாம். நாடகத்தைப் பார்க்கலாம். நகைச்சுவையை அனுபவிக்கலாம். இனிய நல்ல கருத்துகளை அறியலாம். நல்லோர் பலரின் வாழ்வில் நிகழ்ந்த நல்ல சுவையான நிகழ்ச்சிகளையும் தெரிந்து கொள்ளலாம்.

படித்தவர், பாமரர், முதியவர், இளைஞர், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் இவர் பேச்சை விரும்புவர். பலரும் விரும்பும் வகையில் மணிக்கணக்கில் பேசி பக்திப்பயிர் வளர்த்த செந்தமிழ்க் கடல் வாரியார் சுவாமிகள்!

தாய்மாமன் மகளை மணந்து கொண்டாலும் “”கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு என் வாழ்க்கை தொண்டு செய்வதிலேயே கழிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய “நாம் என்ன செய்யவேண்டும்?” என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம்! அந்த நூலைப் படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்றாம். தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினராம். இவர் எழுதிய நூல்கள் பல.

அருளாளர்களின் பாடல்களை நாள்தோறும் படிக்க வேண்டும். தினமும் தியானம் செய்ய வேண்டும் என்றார். பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமலும், வந்த இடையூறுகளை நீக்குவதுமே அறமாகும் என்று அறத்திற்கு விளக்கம் அளித்தார்.

சர்க்கரை இல்லையானால் அங்கு எறும்பு வராது. ஆசையான சர்க்கரை இருந்தால் துன்பங்களான எறும்புகள் வந்து சேரும் என்றார்.

“”மனம் அடங்கிய இடத்திலேதான் உண்மையான நலம் ஊற்றெடுத்து ஓடுகின்றது. அலைகின்ற மனத்தை ஒருபுறம் நிறுத்தி வைத்தால் சுகமுண்டாகும்” என்றார். “”தனக்கென்று யாசிப்பது இகழ். அறப்பணிக்கென்று யாசிப்பது புகழ்” என்ற இவர், தனக்கென்று யாசிக்காமல் அறப்பணிக்கு யாசித்து பல அரிய செயல்களைச் செய்தார்.

திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடிலுக்கும் தாம் பிறந்த காங்கேய நல்லூரில் தம் அன்னையின் விருப்பத்திற்கேற்ப ஏற்படுத்திய அன்ன சத்திரத்திற்கும் பெரும் நிதியைத் திரட்டினார். வடலூர் ஞானசபையின் திருப்பணியையும் செய்தார். தமது சொற்பொழிவை இவற்றிற்கெல்லாம் பயன்படுத்திக்கொண்டார். அறுபது ஆண்டுகாலம் ஆன்மிகப் பணிகளைச் செய்தார்.

நியாயம் அல்லாத வழியில் பொருளைச் சேர்க்காதே. இகழையும் புகழையும் சமமாகக் கருது. அது அமைதியை அளிக்கும். பிறரை வன்சொல்கூறி வையாதே. தாழ்மை தேவை’ என்றார்.

“”அழகை விட ஆரோக்கியம் முக்கியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ விரும்புவானானால் உணவு நியதி அவசியமானது. ஓர் உணவுக்கும் மறு உணவுக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். பிறருடைய விருப்பத்துக்காகவும் வற்புறுத்தலுக்காகவும் இடையில் உண்ணுதல் கூடாது” என்ற இவர் காலையில் எதுவும் உண்ணாமல் இரவில் கொஞ்சம் பால்கலந்த கோதுமைக் கஞ்சியை அருந்தி வந்தார். இறுதிவரை ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்.

“”ஆசையின்றிப் பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வந்து சேரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது, மலரை நாடி வண்டுகள் வருவதுபோல பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்”.

“”இளமை வளமையாக ஒழுக்கமாக அமையவில்லையானால் இடைப்பகுதியும் கடைப்பகுதியும் ஒழுங்காக அமைய மாட்டா”.

“”பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் பெருமையும் பொறுமையுமாகும்”. இவ்வாறெல்லாம் பற்பல நற்கருத்துகளை வழங்கி, கடல்மடை திறந்தாற்போல, ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வந்த வாரியார் சுவாமிகளுக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, தமிழக அரசு விருது அளித்து கௌரவித்தது.

(இன்று வாரியார் சுவாமிகள் நூற்றாண்டு நிறைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.)

Posted in 100, aanmigam, Anniversary, Biography, Biosketch, Books, Dinamani, Kirubunandha Variyar, Kripunandha Vaariyaar, Life, Quotes, Religion, Religious, Tamil, Thanjai Leo Ramalingam, Variyaar | 1 Comment »

Quotes on the Contrary

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 21, 2006

Actions speak louder than words./The pen is mightier than the sword.

Look before you leap./ He who hesitates is lost.

Many hands make light work. (or) Two heads are better than one. / Too
many cooks spoil the broth.

A silent man is a wise one. / A man without words is a man without
thoughts.

Beware of Greeks bearing gifts. / Don’t look a gift horse in the mouth.

Clothes make the man. / Don’t judge a book by its cover. (or) All that
glitters is not gold.

Nothing ventured, nothing gained. / Better safe than sorry.

The bigger, the better. / The best things come in small packages.

Absence makes the heart grow fonder. / Out of sight, out of mind.

What will be, will be. / Life is what you make it.

Cross your bridges when you come to them. / Forewarned is forearmed.

What’s good for the goose is good for the gander. / One man’s meat is
another man’s poison.

With age comes wisdom. / Out of the mouths of babes and sucklings come
all wise sayings.

The more, the merrier./ Two’s company; three’s a crowd.

The best things in life are free. / You get what you pay for.

It never rains, than it pours. / Lightning never strikes twice in the
same place.

Better to ask the way than to go astray. / Ask no questions and hear no
lies.

Never do evil, that good may come of it. / The end justifies the means.

Variety is the spice of life. / Don’t change horses in the middle of a
stream.

There is nothing permanent except change. / There is nothing new under
the sun.

Never too old to learn. / You can’t teach an old dog new tricks.

Everything comes to him who waits. / He who hesitates is lost

Posted in Contradictory, Fun, Quotable, Quotes, Tamil | Leave a Comment »