ஒரே நேரத்தில் தயாராகும் 25 புதிய படங்கள்: கருணாநிதி தொடங்கி வைக்கிறார்
சென்னை, பிப். 12-
முதல்-அமைச்சர் கருணாநிதியின் வரிச்சலுகைகள் திரைப்படத்துறைக்கு புதிய வாசலை திறந்து விட்டுள்ளதால் இந்த ஆண்டு 25 புதிய படங்கள் தயாரிக்கப்படும் என்று தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் அறிவித்துள்ளார். பிரமிட் சாய் மிரா தியேட்டர்கள் நிறுவனம் சார்பில் இவை தயாரிக்கப்படுகின்றன. நீண்ட அனுபவம் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் சிறந்த டைரக்டர்களை வைத்து இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இதற்கான மொத்த செலவு ரூ.200 கோடி.
திரையுலகம் மேம்பட தயாரிப்புத்துறை, விநி யோகஸ்த துறை, பட வெளியீட்டுத்துறை என எல்லா பிரிவினருக்கும் பல சலுகைகளை அறிவித்துள்ள முதல்- அமைச்சர் கருணாநிதியை அழைத்து இப்படங்களுக்கான தொடக்க விழா நடத்தப்படும் என்று பிரமிட் சாய்மிரா தலைவர் நடராஜன் தெரிவித்தார்.
முந்தைய காலங்களில் ஆண்டுக்கு 150 படங்கள் தயாராயின. அவை 100 படங்கள் என குறைந்து தற்போது 80 படங்கள் என ஆகி விட்டன. பிரமிட் தியேட்டர் நிறுவனம் அதிக படங்கள் தயாரிக்கும் பணியில் இறங்கி இருப்பதால் இனி பழைய மாதிரி வருடத்துக்கு 150 படங்கள் ரிலீசாகும் என்றும் தெரிவித்தார்.
இந்நிறுவனம் சார்பில் இந்தியாவில் 230 தியேட்டர்கள் நடத்தப் படு கின்றன. மலேசியா விலும் இது கால் பதிக்கிறது. சென்டி ரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அங்கு 150 புதிய தியேட்டர்களை திறக்கிறது.
தென்னிந்திய மொழி படங்களுக்கு அத்திரைப் படங்களை தயாரித்து முடிப்பதற்கான உறுதியை தருகின்ற வகை யில் மும்பையை சேர்ந்த இன்பினிட்டி இந்தியா அட்வைசர் நிறுவனத்தின் கிளை அமைப்பான `இன்பினிட்டி பிலிம் கம்ப்ளீஷன் சர்வீஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை பிரமிட் மேற் கொண்டுள்ளது. இதன் மூலம் புதிய படங்களுக்கு தாராளமாக நிதி கிடைக்கும் என்று பிரமிட் நிர்வாக இயக்குனர் பி.எஸ். சாமிநாதன் தெரிவித்தார்.