Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Public’ Category

Tamil Nadu Public Works Department (PWD) – Villages’ infrastructure facilities & Support systems for TN river basin resources

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

பொதுப்பணித்துறைக்கு மூடுவிழாவா?

நீதி. செங்கோட்டையன்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டல்ஹெüசி பிரபுவால் 1849-ம் ஆண்டு இந்தியாவில் பொதுப்பணித்துறை துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரயில், பேருந்து, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கோடு துவக்கப்பட்ட இத்துறை, நாளடைவில் வேளாண் தொழிலின் உயிரோட்டமான நீர்நிலைகளைச் சீரமைக்கும் தலையாய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

அந்தவகையில் மத்திய பொதுப்பணித்துறையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியாக மாநிலப் பொதுப்பணித்துறையும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை ரெகுலர் பிரிவு, தாற்காலிகப் பிரிவு (திருச்சி, வேலூர் ஆகிய இரு வட்ட அலுவலகங்களின் கீழ் பல கோட்ட அலுவலகங்கள்) என இரு பிரிவுகளாகப் பொதுப்பணித்துறை செயல்படுகிறது.

இதில் ரெகுலர் பிரிவு ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளின் நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண் தொழிலுக்கு வேண்டிய நீர்வளத்தைப் பெருக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

தாற்காலிகப் பிரிவானது, ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதிகளில் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது.

முக்கியமாக ஏரிப்பாசனத்தில் தமிழகம் முன்னிலையில் திகழ இந்த தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவின் பங்கு அளப்பரியது.

இதுபோன்ற முக்கியப் பணியை ஆற்றிவரும் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு தமிழக அரசு மூடுவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், தங்கள் தலையில் இடி விழுந்தது போல் உணர்கின்றனர்.

தென் மாவட்டங்களின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாகத் திகழ்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், பிழைப்புத் தேடி நகர்ப்புறத்துக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவு மூடப்பட்டால், ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணியில் மேலும் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அத்துடன், ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி தடைபட்டுப் போனாலும் போகலாம் என்ற அச்ச உணர்வும் பெரும்பாலான விவசாயிகளின் மனத்தைக் கவ்விக் கொண்டுள்ளது.

பொதுப்பணித்துறை ரெகுலர் பிரிவு வேளாண் கட்டமைப்பு தொடர்பான பணிகளை எப்போதுமே குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிப்பதில்லை.

இதனால் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா என்ற செய்தி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதைத் தவிர்த்து, ரெகுலர் பொதுப்பணித்துறை பிரிவில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் சுய ஆதாயத்தில்தான் அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். அதாவது, தங்களுக்கு கணிசமான கமிஷனை அள்ளிக் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே அதிகாரிகள் தனிப்பட்ட சுறுசுறுப்பும் உற்சாகமும் கொண்டுள்ளனர் என்பதையே விவசாயிகள் துணிவாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தவரிசையில், தற்போது தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா நடத்தும் நிலைக்கு தள்ளியது கூட, இந்த ரெகுலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கமிஷன் ஆசைதான் என்றும், அவசியம் ஏற்பட்டால் இதை எந்த இடத்திலும் தாங்கள் சொல்லத் தயார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதாவது ஒருகாலத்தில் ஆற்றுப்பாசனப் பகுதியில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியை மட்டுமே செய்து வந்த பொதுப்பணித்துறையின் ரெகுலர் பிரிவு, அண்மைக்காலமாக ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதியிலும் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது. ரெகுலர் பிரிவின் இந்த முனைப்புக்கு கமிஷன் தான் காரணம் என்பது தவிர எவ்வித நல்ல நோக்கமும் இல்லை.

மாநிலத்தில் மொத்தம் 39,000 ஏரிகள் உள்ளன. ஏரிப்பாசனத்தின் கீழ் 22 சதவீத நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் விவசாயத்தின் உயிரோட்டமான நீராதாரத்தைப் பெருக்குவதில் அரசு அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

குறிப்பாக விவசாயத்தின் ஜீவாதாரங்களான ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றைச் சீர்படுத்தி அவற்றை எப்போதும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது பொதுப்பணித்துறையின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகப் பொதுப்பணித்துறையின் செயல்பாடோ திருப்திகரமாக இல்லை.

இதேபோன்று மெத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் தென்மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து, இன்னொரு “விதர்பாவாக’ உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதற்கிடையில், “நதிகளை இணைப்போம்’ என்று அடிக்கடி கூறி வரும் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி இல்லாததால்தான் பொதுப்பணித்துறையின் தாற்காலிகப் பிரிவுக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளதாக உலா வரும் செய்திகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

Posted in Agriculture, basin, Dams, Duraimurugan, facilities, Farmers, Farming, Flyovers, GIS, Govt, Hydrology, infrastructure, Irrigation, Lakes, Management, Mgmt, Planning, Plng, Projects, Public, PWD, Resources, Rivers, service, Suicides, support, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichy, Vellore, Vidarba, Vidharbha, Vitharbha, Water | Leave a Comment »

Orient-Express snubs Tata, says Indian tag tacky: Is India Bad for Jaguar?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�

எங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.

ஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.

நிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

உருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.

ஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.

ஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.

இன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.

இந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.

“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.

இப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.

இன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.

போர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

இத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.

எத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.

இவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.

மேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.

அறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.

அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.

பின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.

மற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.

இத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.

அண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.

அமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.

இப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன? இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா?

இது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.

கொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.

தமிழில்: ஜி. கணபதி

Posted in acquisition, Analysis, Arcelor, Auto, Automobile, Banks, Brand, Capitalization, Cars, CEO, Citi, CxO, Discrimination, Economy, England, Equity, Finance, Ford, Govt, Hotels, Image, India, Jaguar, Law, Luxury, M&A, Manufacture, Manufacturing, markets, Mergers, Mittal, MNC, NRI, Offshoring, Orient Express, Outsourcing, Private, Protection, Public, racism, Reverse, Rich, rules, Shares, Steel, Stocks, Supremacy, TATA, Tax, Wealthy, White | Leave a Comment »

PMK Ramadoss to lead protest against NLC land acquisition

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

கேள்விக்குறியாகும் என்.எல்.சி.யின் எதிர்காலம்

என்.முருகவேல்

நெய்வேலி, அக். 16: பல தேசியத் தலைவர்களின் தொலைநோக்குப்பார்வையாலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனம் தற்போது பழுப்பு நிலக்கரி தோண்டி எடுப்பதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் என்.எல்.சி.யும் ஒன்று. 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந் நிறுவனம் ஒரு சுரங்கத்தையும், ஒரு மின் நிலையத்தையும் கொண்டு 600 மெகாவாட் மின்னுற்பத்தியுடன் செயல்படத் துவங்கி, இன்று சுரங்கம் 1ஏ, 2-ம் சுரங்கம், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கம், 2-ம் அனல்மின் நிலையம் என வளர்ந்து, தற்போது 2,500 மெகாவாட் மின்னுற்பத்தி செய்து தென் மாநிலங்களுக்கு விநியோகம் செய்துவருகிறது.

இதுதவிர ராஜஸ்தான், ஒரிசா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கியுள்ளது. இதில் சுமார் 25 ஆயிரம் பேர் படிப்படியாக ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை அழைத்து தனது பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடி, ஊழியர்களுக்கு பொன்விழா ஆண்டு வெகுமதியையும் அளித்தது. இவ்விழாவின் போது, நெய்வேலியில் ரூ.4,200 கோடி செலவில் அமையவுள்ள 2-ம் சுரங்க விரிவாக்கம் மற்றும் 2-ம் அனல்மின் நிலையம் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.

2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் 50 சதம் முடிந்துள்ளது. அதேநேரத்தில் 2-ம் சுரங்கம் விரிவாக்கத்துக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு, அதன் இயந்திரக் கட்டுமானப் பணிகளும் வேகமாக நடைபெறுகின்றன.

இதனிடையே சுரங்கம் தோண்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் தற்போது பிரச்னை எழுந்துள்ளது. முதல் சுரங்கத்துக்குத் தேவையான 250 ஏக்கர் நிலங்கள் கெங்கைகொண்டான் பகுதியில் அளவீடு செய்து, சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், மாற்றுக் குடியிருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அப்பகுதியிலிருந்து காலிசெய்ய மறுக்கின்றனர். இன்னும் 6 மாதத்துக்குள் இப்பகுதியை கையகப்படுத்தவில்லையெனில் முதல் சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி தடைபட நேரிடும்.

இதேபோன்று சுரங்கம் 2-ம் மற்றும் 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி, கோட்டகம், கோ.ஆதனூர், கம்மாபுரம், சாத்தப்பாடி உள்ளிட்ட 69 கிராமங்களில் இருந்து சுமார் 25,000 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து, இவற்றில் ஒரு சிலருக்கு இழப்பீட்டுத் தொகையை என்.எல்.சி. வழங்கியுள்ளது.

இந்நிலையில் சுரங்க விரிவாக்கத்துக்கு அளவீடு செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நில உரிமைதாரர்கள் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும், மேலும் பல நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட பகுதியில் நிலத்தை கையகப்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதனால் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணியின் தொடக்கம் தடைபட்டுள்ளது.

இதனிடையே நிறுவன தலைவர் எஸ்.ஜெயராமன், நிறுவன அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து, நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை விளக்கியுள்ளார். இதனால் தொழிற்சங்கத் தலைவர்கள் சற்று அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இன்னும் 6 மாதத்திற்குள் சுரங்கத்துக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தவில்லை எனில் நிறுவனம் தொடர்ந்து செயல்படுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல் படி தான் இழப்பீடு வழங்கமுடியும், நிர்வாகமாக எதையும் செய்ய இயலாது. தற்போது கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கு கோரப்படும் இழப்பீட்டுத் தொகையை கொடுத்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க இயலாது.

மேலும் நிறுவனத்தை முன்னிறுத்தித்தான் சுற்றுப்புற கிராம நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய போட்டி உலகில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே கையகப்படுத்தும் நிலங்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை உயர்த்த மத்திய அரசைத்தான் வலியுறுத்த வேண்டும்

“”மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண விகிதப்படி தான் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிலையில் உள்ளோம். அதற்கேற்றபடி தான் இழப்பீடு, நிவாரண உதவிகள் வழங்க முடியும். எனவே நிறுவன நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். கடந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் சொற்ப அளவைத் தான் எட்டியுள்ளது” என்றும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

இதற்கு தொழிற்சங்கத் தலைவர்களும் சில சந்தேகங்களையும் எழுப்பத் தவறவில்லை. நிறுவனத்தின் நிலையை நிறுவனத் தலைவரே வெளிப்படையாக அதிகாரிகளிடமும், தொழிற்சங்க நிர்வாகிகளிடமும் பகிர்ந்து கொண்டிருப்பது நிறுவன வரலாற்றில் இதுதான் முதல்முறை.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த காலங்களில் பல பிரச்னைகளை நிர்வாகம் கையாண்டிருந்தாலும், இன்றைய சூழலில் அரசியல் கட்சிகளை சமாளிப்பதில் நிறுவனத்தின் தற்போதைய உயரதிகாரிகளுக்கு போதிய அனுபவம் இல்லை என்றே சொல்லலாம்.

கடந்த காலங்களில் நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமைதாரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் கிராமங்களில் உள்ள மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய மறைமுக தொடர்பாளர் ஒருவரை நியமித்து அதன்மூலம் பல்வேறு உதவிகளையும் மாற்றுக் குடியிருப்பையும் என்.எல்.சி. செய்துவந்ததால் இந்த அளவுக்கு எதிர்ப்பு எழவில்லை.

ஆனால் தற்போது வேலைவாய்ப்பு கிடையாது, அப்படியே வழங்கப்பட்டாலும், மிகுந்த சிரமத்திற்கு இடையே ஒப்பந்தப் பணி மட்டுமே வழங்கப்படுகிறது. சுற்றுப்புற மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதன்மூலம் சாலை, குடிநீர் வசதி, பள்ளிக் கட்டட வசதி செய்து கொடுத்தாலும், அவை முழுமையாக பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித் தரவேண்டும், என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச மருத்துவ வசதி செய்து தரவேண்டும் என்பது போன்ற அடிப்படை வசதிகளே கிராம மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடும், மாற்றுக்குடியிருப்பும் வழங்கியாயிற்று, அதன் பின்னர் அவர்கள் யாரோ நாம் யாரோ என்ற எண்ணம் உதித்ததன் விளைவுதான் இன்று நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்.

இந் நிறுவனத்தை நிர்வகித்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் சுற்றுப்புற கிராம மக்களை அனுசரித்து, அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்திசெய்து, நிறுவனத்தை பொன்விழா ஆண்டு கொண்டாடும் நிலைக்கு உயர்த்தி வந்துள்ளனர்.

அடுத்து இந்நிறுவனம் வைரவிழா ஆண்டையும் கொண்டாட வேண்டும் எனில், நிலம் கையகப்படுத்துதலில் நிர்வாகம் கடந்த காலங்களில் கையாண்ட உத்திகளை மீண்டும் தொடர வேண்டும். காலத்திற்கேற்ப எவ்வாறு தொழில் துறையில் மாற்றம் ஏற்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளையும் இன்றைய காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்பட நிர்வாகம் முன்வரவேண்டும்.

நிர்வாகத் திறன் படைத்தவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர அவற்றிலிருந்து விலகிச் செல்ல முற்படுவது அழகல்ல. தமிழகம் மட்டுமன்றி, தென் மாநிலங்களுக்கும் ஒளி வழங்கும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலப் பிரச்னை ஒரு கேள்விக்குறியாக இருந்து விடக்கூடாது. இந் நிறுவனத்தை நம்பி இன்று ஒரு லட்சம் பேர் வாழ்கின்றனர். நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மாநில அரசும், மத்திய அரசும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சரியான வழிகாட்டவேண்டும்.

அதேநேரத்தில் சுமார் 19,000 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நிறுவனத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கவேண்டும் என்பதே பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.

———————————————————————————————————————————

நிலத்திற்கு நிலம்!

கே.எஸ். அழகிரி

அரசின் பொது நோக்கங்களுக்காகவும், தனியார் துறையின் தொழிலியல் நோக்கங்களுக்காகவும், அரசு மூலம் நிலங்களைக் கையகப்படுத்தும் நிகழ்வு, சமீபகாலங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வானது, போராட்ட குணம் நிறைந்த இடதுசாரிகளையே திகைக்க வைத்துள்ளது.

விவசாயியைப் பொருத்தவரை, நிலம் என்பது அவனுடைய உயிருக்கும் மேலானது. சொத்துடமையின் சின்னமே நிலம்தான். சமூகத்தின் மரியாதை, அவனுக்குள்ள நில உடமையை வைத்தே இன்னும் கிராமங்களில் அளவிடப்படுகிறது.

ஒரு விவசாயி தன்னுடைய சொத்துகளை விற்கவேண்டிய நிலை வரும்போது நிலத்தைத் தவிர பிற சொத்துகளை விற்கவே விருப்பப்படுகிறான்.

நிலத்தை இழந்து விட்டால் தன்னுடைய இருப்பையே இழந்துவிட்ட உணர்வு விவசாயிக்கு ஏற்படுகிறது. எனவே நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அரசுகள் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்காக, தனக்கிருக்கிற ஒரே ஆதாரமான நிலத்தையும் தனது குடிசையையும் இழந்து எவ்வாறு வாழ்வது என்ற கவலை விவசாயியை நிலைகுலையச் செய்து விடுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஓர் ஆக்கத்திற்காக ஓர் இருப்பை அழித்துவிடக் கூடாது.

ஆலைகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்துதல் கூடாது எனில், நாம் மீண்டும் களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குத்தான் செல்ல வேண்டி வரும். இதற்கான மாற்று வழிதான் என்ன? நிலத்திற்குப் பதில் நிலம்!

1957-ல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் எடுத்தபோது, ஏக்கருக்கு ரூ. 250 முதல் ரூ. 500 வரை ஈட்டுத்தொகையும், குடும்பத்திற்கு 10 சென்ட் வீட்டுமனையும், அதுபோக, குடும்பத்திற்கு இரண்டரை ஏக்கர் மாற்று நிலமும் கூரைப்பேட்டை, மெகாசா பரூர், பூவனூர் போன்ற இடங்களில் கொடுத்தனர். இன்று அந்த நிலங்கள் ஏக்கர் 10 லட்சம்வரை விலைபோகின்றன. எனவே அப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று வசதியாக வாழ்கின்றனர்.

ஆனால் இரண்டாம் சுரங்கம் தோண்டும்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு புன்செய் நிலத்துக்கு ரூ. 3000-மும் நன்செய் நிலத்துக்கு ரூ. 7000-மும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. இந்தத் தொகை போதுமானதல்ல என்று கங்கைகொண்டான் ராமசாமி நாயுடு, ஊமங்கலம் ரங்கசாமி ரெட்டியார் ஆகியோர் நிதிமன்றம் சென்று ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் ஈட்டுத்தொகை கோரி தீர்ப்பு பெற்றனர்.

ஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்று ரூ. 60 ஆயிரத்துக்குப் பதில் ரூ. 30 ஆயிரம் என்று குறைத்து ஒரு தீர்ப்பைப் பெற்றுவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அந்தப் பகுதி விவசாயிகளின் ஏழ்மைநிலை இடம் தரவில்லை. மேலும் அப்போது அவர்களுக்கு விழிப்புணர்வோ, போராட்டக்குணமோ இல்லை.

அதன் பிறகு, மறைந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி இரண்டாம் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாழ்க்கைநிலை குறித்து ஆய்வு நடத்தியபோது அச்சமூட்டும் உண்மை வெளிப்படத் தொடங்கியது. நிலம்கொடுத்தவர்களில் 90 சதவிகிதத்தினர் கூலித்தொழிலாளிகளாக மாறியுள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக, தேசிய விவசாயிகள், தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் நெய்வேலி ஜான் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சிகளின் தலைவர்கள் விவசாயிகளின் பிரச்னைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்க நிலம் கொடுத்தவர்களின் வாழ்வு இருண்டுபோகக் காரணம் திட்டமிடலில் உள்ள குறைபாடா, மனசாட்சியற்ற அதிகாரவர்க்கமா என மக்கள் மன்றம் தீர்மானிக்க வேண்டும்.

நெய்வேலி விவசாயிகளின் பிரச்னையை 1996-ல் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் எழுப்பினேன். பிரச்னையின் பரிமாணத்தை முதல்வர் கருணாநிதி புரிந்துகொண்டு என்னையும், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் குழந்தை தமிழரசனையும் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தார். உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஈட்டுத்தொகையை ரூ. 70 ஆயிரமாக அறிவித்து, விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் திளைக்க வைத்தார்.

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் காந்திசிங்கை சென்னைக்கு வரவழைத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து, மூன்று மாதத்தில் விவசாயிகளுக்கு பணத்தையும் வழங்கச் செய்தார். அரசுகளின் ஆமைவேக நடைமுறைகளில் மாறுபட்ட இந்த துரித செயல், மாபெரும் புரட்சியாக அன்று விவசாயிகளால் கருதப்பட்டது.

ஆயினும்கூட, இந்தப் பணத்தைக் கொண்டு விவசாயிகளால் அன்றைய நிலையில் மாற்று நிலங்களை வாங்க முடியவில்லை.

ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது ஈட்டுத்தொகையாக மாற்று நிலங்களைக் கொடுத்து, ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கித் தருவதே விவசாயக் குடும்பங்களைக் காக்கும் நல்வழியாகும். திட்டச் செலவோடு இந்தச் செலவையும் இணைத்தே, திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

நிலத்திற்கு இணையாக மாற்று நிலம் வழங்க முடியாத சூழ்நிலையில், தற்போது வழங்குவதுபோல் பத்து மடங்கு வழங்குதல் வேண்டும்.

பொதுவாகவே ஒரு நிலத்தை விற்கும் போது மாவடை மரவடை என்று பத்திரத்தில் சேர்த்து எழுதுவார்கள். நிலத்தின் மதிப்பு வேறு. நிலத்தில் உள்ள மதிப்புமிக்க மரங்களின் விலை தனி. எனவே நிலத்தில் உள்ள மாவடை மரவடைக்குத் தனியாக விலை தருதல் வேண்டும். அந்தவகையில், நெய்வேலியில் நிலங்களுக்கு அடியில் உள்ள பழுப்பு நிலக்கரிக்கும் ஏதாவது ஒரு விலையை நில உடமையாளர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

விவசாயிகளின் குடும்பங்களில் படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி படித்தவர்களிலும் 10-ம் வகுப்பைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவு. எனவே நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு வேலை அளிக்க வேண்டும். வேலைபெறத் தகுதியற்ற குடும்பங்களுக்கு ஓர் ஈட்டுத்தொகையை நிலத்தின் விலையோடு சேர்த்து வழங்குதல் வேண்டும். படிப்பறிவற்ற குடும்பங்களை விட்டுவிடக் கூடாது.

இவ்வளவு நிபந்தனைகளை விதித்தால் தொழில் வளருமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். தொழில்வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி; தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களது சொத்தை அளித்தவர்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் இந்தக் கோரிக்கைகளின் மையக்கரு ஆகும்.

அணைகள் கட்ட நிலம் கொடுத்த பழங்குடி விவசாயிகள் – அனல்மின் நிலையம் கட்ட, சுரங்கம் வெட்ட, தொழிற்சாலைகள் அமைக்க நிலம் கொடுத்த விவசாயக் குடும்பங்கள் அனைத்துமே, குடும்ப அமைப்பு சிதைந்து – புலம் பெயர்ந்த நாடோடிக் குடும்பங்களாக மாறியுள்ள அவலம்தான் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல்வேறு துறைகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. நாடு முழுவதும் முக்கியப் பிரச்னையாக உருவாகிவரும் “நிலம் கையகப்படுத்துதலை’ விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ள வழிவகை காண வேண்டும்.

(கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்)

Posted in acquisition, Agriculture, Anbumani, arbitrary, Arbitration, Asset, Ban, Bengal, Coal, Commerce, Compensation, Deplete, Depletion, Economy, Electricity, Employment, Farmer, Fight, Govt, Industry, Insurance, Irrigation, Jobs, Land, Lignite, Management, Megawatt, Mgmt, Mine, Minerals, MW, Nandigram, Neiveli, Neyveli, Neyveli Lignite Corporation, peasants, PMK, Power, Private, Protest, Public, Ramadas, Ramadoss, resettlement, rights, Rural, Security, Settlement, Stocks, Strike, Thermal, Trade Union, TU, Union, Uzhavar Paadhukappu Peravai, Valuation, Village, villagers, WB, Work, Worker | Leave a Comment »

Law on protection of waterbodies vs Govt buildings encroachment – Environment

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசு கட்டடங்கள்

வி. கிருஷ்ணமூர்த்தி

தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழி வகுக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சுமார் 38 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசித்து வருவதாகத் தெரிய வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நீர்நிலைகளின் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் வகையில் பல்வேறு அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.

நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக்கூடங்கள், நூலகங்கள், பஸ் நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் நீர்நிலைகளையொட்டியே அமைந்துள்ளன.

மதுரை உலகனேரி கண்மாயில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள அத்திகுளம், செங்குளம் கண்மாயில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அப்போதைய தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஏரி என பல்வேறு நீர்நிலைகளில் அரசு பள்ளி உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

2006 ஆகஸ்டில் சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கத்தில் “ரெட்டைக் குளத்தை’ வணிக வளாகமாக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “”அரசியல் சட்டத்தின் 51-ஏ (ஜி) பிரிவின்படி ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. எனவே, அவற்றில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்காமல், ஏற்கெனவே இடம்பெற்றிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்” என்றனர்.

இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2005 ஜூன் 27-ல் ஆக்கிரமிப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இப்போது போலவே அப்போதும் கால வரம்பு நிர்ணயித்தனர்.

1997-ல் உச்ச நீதிமன்றம், நீர்நிலைகளை பொதுப் பயன்பாடு என்ற காரணத்துக்காக எடுப்பதும் தவறு என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

2005 ஜூனில் ஏரி பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கற்பகவிநாயகம், சி. நாகப்பன் ஆகியோர் மேற்கூறிய தீர்ப்பை தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டி நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளை நீதித்துறையினரும், நீர்நிலைகளில் அரசு சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தங்கள் அலுவலகங்களாக ஏற்றுக்கொள்ளும் நீதித்துறையினரை அதிகாரிகளும் எப்படி பார்க்கிறார்கள் என்பதே மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அரசும் குறிப்பாக, வருவாய்த்துறையினரும் ஆர்வம் காட்டுவதில்லை. தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாததும் ஒருவகையில் நீதிமன்ற அவமதிப்பே. எனவே, இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளின் செயலை நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து, அவமதிப்பு வழக்காக ஏன் எடுத்துக்கொள்வதில்லை?

எத்தனை தீர்ப்பு வந்தாலும், எத்தனை சட்டம் போட்டாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உறுப்பினர்களும் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். இதற்கு அதிகாரம் அளிப்பதற்காகவே தற்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏழைகள் என்பதற்காக ஏரி, குளங்களை ஆக்கிரமித்தவர்களை விட்டுவிட முடியாது. என்றாலும், அவர்களுக்கு உரிய விலையில் உறைவிட வசதிகளை அரசு அளிக்கத் தவறுவதே, பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். அதேவேளையில், நீர்நிலைகளைப் பொதுப் பயன்பாட்டுக்காக அரசுத் துறைகள் ஆக்கிரமிப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்கவும் கூடாது.

விவசாயம், நீர்ப்பாசனம் என்பதோடு நிற்காமல் நிலத்தடி நீர் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சமநிலை ஆகியவையும் இந்த நீர்நிலைகளைச் சார்ந்தே இருக்கிறது. ஏரி, குளங்களை நமது முன்னோர் உருவாக்கியது ஏன் என்பதை அனைவருக்கும் குறிப்பாக, நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. அரசு கட்டடமோ, தனியார் குடியிருப்போ எதுவாக இருந்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் புதிய ஆக்கிரமிப்புகள் வராமல் தடுப்பதும்தான் தற்போதைய அவசர, அவசியத் தேவை.

————————————————————————————–

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் மவுனம்: ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்துமா அரசு?


சென்னை: ஏரி, குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு விதித்துள்ள ஐகோர்ட் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது ஒட்டு மொத்த பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குடிநீர் ஆதாரமாக 300 ஏரிகள் உள்ளன. இதில், சென்னை நகரில் 30 ஏரிகளும், புறநகரில் 270 ஏரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் குறைந்தபட்சம் நுõறு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்டது.

ஏரிகள் அனைத்தும் “மராமத்து’ முறையில் அந்தந்த கிராம மக்களே துõர்வாரி, கரையை பலப்படுத்தி வந்தனர். இப்பணி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 30 ஆண்டுகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதி அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது. குடியிருப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. இதன் விளைவாக விவசாய நிலங்கள் அனைத்தும் பட்டா நிலங்களாக மாற்றப்பட் டன.

ஏரியை சுற்றி குடியிருப்புகள் வளர்ந்ததால் ஒவ்வொரு ஆண்டு பருவ மழைக்கும் ஏரி நிரம்பி உபரி நீர் கலங்கலில் வெளியேறி போக்கு கால்வாய் வழியாக கடலில் கலந்தது.

ஏரிகள், நீர் இல்லாமல் தரிசு நிலம் போல காட்சியளித்தன. அரசும் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள சில ஏரி நிலங்களின் ஒரு பகுதியை வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் என பல தரப்பட்ட துறைக்கு பிரித்து கொடுத்தது. ஏரியின் பரப்பளவு மூன்றில் ஒரு பங்காக சுருங்கியது. இதைப் பார்த்த அரசியல்வாதிகள், உள்ளூர் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களுக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழி கிடைத்தது.

சென்னை புறநகரில் உள்ள பல ஏரிகளின் ஒரு பக்க கரையை உடைத்து ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த இடங்கள் கூறு போட்டு அப்பாவி பொதுமக்களுக்கு சொற்ப விலைக்கு விற்கப்பட்டன. ஆக்கிரமித்த இடங்களுக்கு பல துறையினர் “மாமுல்’ பெற்று சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்டவை வழங்கி ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருக்க அனுமதியும் அளிக்கப் பட்டது.

இதனால், சென்னை மற்றும் புறநகரில் நீர்நிலைகளுக்கு ஆதாரமாக உள்ள பல நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஏரிகள் காணாமல் போயின. மிகப்பெரிய ஏரிகளாக விளங்கிய வேளச்சேரி ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் பல மடங்கு சுருங்கின.அதேபோல, ஒவ்வொரு ஏரிக் கும் கலங்கல் இருந்தது. அந்த கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர் கடலில் கலக்க நுõறடிக்கும் மேற்பட்ட அகலம் கொண்ட போக்கு கால்வாய் இருந்தது.

சில ஆண்டுகளாக மழை பொய்த் ததால் பெரும்பாலான வாய்க் கால்கள் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து விட்டனர். நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஐகோர்ட் காலக்கெடு விடுத்துள் ளது. ஐகோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு மதித்து ஏரிகள், போக்கு கால் வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாவண்ணம் ஏரி யை கம்பிவேலி போட்டு பாதுகாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இதனால், குடிநீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஆக்கிரமிப்புகள் அகற்ற கெடு:

ஏரியை காப்பாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுநல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

* நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் நவம்பர் மாதத்திற்குள் ஒரு திட்டம் இறுதி செய்யப்பட வேண்டும்.

* ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு பரிசீலிக்கலாம்.

* நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை சிவில் கோர்ட் அனுமதிக்கக்கூடாது.

* பாதிக்கப்பட்டவர் ஐகோர்ட் டை அணுகலாம்.

* நீர் நிலைகளை ஆக்கிரமித்து நிலங்களை விற்றவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* எதிர்காலத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நோட்டீஸ் வழங்காமலே ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்.

* ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்து வரும் 2008ம் ஆண்டு ஜூன் 15ம் தேதிக்குள் பொதுப்பணித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Posted in activism, Activists, Adambakkam, Agriculture, Assets, Boundary, Buildings, Civic, Drink, Drinking, encroachers, encroachment, encroachments, Enforcement, Environment, Evict, Eviction, Farmers, Govt, Ground water, groundwater, harvest, harvesting, Irrigation, KANCHEEPURAM, Lakes, Land, Law, Order, Original, Pallavaram, peasants, Peerkankaranai, penal, Private, Protection, Public, Rain, Rajakilpakkam, resettlement, rice, River, structures, Tambaram, Tanks, Temple, Ullagaram, Water, waterbodies, waterbody | Leave a Comment »

State of India – Public Policy, Planning commission goals, Regional Development: N Vittal

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

மக்களுக்காகவே நிர்வாகம்!

என். விட்டல்

இந்தியா என்ற ஒரு தேசத்தை இணைப்பது எது என்று கேட்டு தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது ஒரு பத்திரிகை. இந்தியச் சுதந்திர தினத்தின் வைர விழாவையொட்டி இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியாவை இணைப்பது அதன் கலையா, கலாசாரமா, பண்பாடா, வரலாறா என்று பல கேள்விக் கணைகளை எழுப்பின அக்கட்டுரைகள்.

சுதந்திரம் அடைந்த பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அழைக்கிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை 1. பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. 2. பிரிட்டிஷ் மகாராணியைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமாக ஆட்சி நடத்திய 600 சுதேச சமஸ்தானங்கள். 3. வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், வட-கிழக்கு மாநிலங்கள். இங்கு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி கிடையாது. ஒரு ஏஜெண்ட் மட்டும் இருந்தார். வட-மேற்கும் வட-கிழக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

மாகாணங்கள் என்ற அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்டதே சுவையான வரலாறு. வட இந்தியாவில் வசித்தவர்கள், விந்திய மலைக்குத் தெற்கில் வசித்த அனைவரையும் மதறாசி என்ற ஒரே பெயரில் அழைத்தனர். மதறாஸ் மாகாணம் என்பதில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் சேர்ந்திருந்தன. எனவே மலையாளி, தெலுங்கர், கன்னடியரைக்கூட மதறாசி என்றே வட இந்தியர்கள் அழைத்தனர்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. தங்களுடைய தாய்மொழி மீது கொண்ட பற்றினால் மக்கள் இப்படி மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதை விரும்பினர். அப்படிப் பிரித்ததே சில இடங்களில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அது, கலாசார ரீதியாகக் குறுகிய மனப்பான்மையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. இன, பிராந்திய அடையாளங்கள் புதிதாக உருவாயின.

தனி நாடு கோரிய திமுக, சீனப்படையெடுப்புக்குப் பிறகு “திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டது. அதே சமயம், “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை முன்னே வைத்தது. இப்போது மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியான காங்கிரஸýடன் இணைந்து மத்தியில் கூட்டணி அரசு அமைத்துள்ளன. திமுகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதாகக் கூட இதைக் கருதலாம்.

தேசப் பாதுகாப்பு, தனி மனிதப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய மூன்றும் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை எல்லா அரசுகளும் எல்லா தனி மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். 1991-க்குப் பிறகு பொருளாதார தாராளமயம் அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு மிகவும் அவசியம். இவற்றை அளிக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது.

அடித்தளக் கட்டமைப்பு என்றவுடன் தொலைத்தொடர்புத் துறைதான் முதலில் நினைவுக்கு வருகிறது. அது எப்படி வளர்ந்து பரவிவிட்டது! அடுத்தது ரயில்வே துறை. சரக்குகளைக் கையாள்வதில் திறமையும் வருவாய் ஈட்டுவதில் சாமர்த்தியமும் காட்டி, உபரி வருவாயைப் பெற்றுள்ளது ரயில்வேதுறை.

ரயில்வேயும் தொலைத்தொடர்புத் துறையும் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவை. இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத பல துறைகளில் வளர்ச்சி திருப்திகரமாகவும் சீராகவும் இல்லை. மின்சாரத்துறையையே எடுத்துக் கொள்வோம். என்.டி.பி.சி., பவர் கிரிட் என்ற இரு மத்திய நிறுவனங்களும் திறமையான செயல்பாடு, குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பது ஆகிய சிறப்புகளுக்காகப் புகழ் பெற்றவை. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார வாரியங்கள் நிதி நிலைமையில் மிகவும் பின்தங்கியும், ஏராளமான கடன் சுமையிலும் தள்ளாடுகின்றன. இதற்குக் காரணம் அந்த மின்வாரியங்கள் அல்ல. இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் அவற்றின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாகிவிட்டன.

வாக்குவங்கியைக் குறிவைத்துச் செயல்படும் மாநில அரசியல்கட்சிகளால் மின்சார வாரியங்கள் பலிகடாவாகிவிட்டன. மிக முக்கியமான மின்னுற்பத்தித் துறையை இப்படி விடுவது சரிதானா? ரயில்வே, தொலைத் தொடர்பு போல மின்சாரத்துறையையும் மத்திய அரசே தன் பொறுப்பில் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதற்காகக் கூறப்படும் யோசனை அல்ல. பொருளாதார வளர்ச்சிக்காகவே கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர்வளத்துறையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி நிதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு வலுவாகத் தலையிட முடியும்.

வளர்ச்சிக்கு அடுத்தபடியாக ஆனால் வளர்ச்சியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மனிதனின் உயிருக்குப் பாதுகாப்பு தருவது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் விவகாரம் அல்லது குற்றச்செயல் என்றால் உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது வழக்கமாகிவருகிறது. சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலப் போலீஸôர் மீது நம்பிக்கை இல்லை, மத்திய துணை நிலை ராணுவப் படைகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி இருக்க, மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை விசாரிக்க, ஃபெடரல் போலீஸ் படை இருந்தால் நன்றாக இருக்குமே?

மாநில உணர்வு, சொந்த அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிந்தால் அந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கக் கூடாது. நன்மை செய்யும் என்று நினைத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் தீமை அதிகம் வந்தால், எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. நிர்வாகம் என்பது மக்களுக்காகத்தானே தவிர, நிர்வாகத்துக்காக மக்கள் இல்லை.

சாலை வசதி, மின்னுற்பத்தி, தண்ணீர் வளம் ஆகிய முக்கிய பிரச்னைகளில் மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய அதிகாரத்தை மத்திய அரசுக்கு ஒப்புக்கொடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை சி.பி.ஐ. விசாரிக்க புது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது தனி மனித பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாற்றம் பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர்)

Posted in 50, 60+, 75, Andhra, AP, Bengal, Budget, Caste, Center, Centre, China, Commerce, Common, Communication, Community, Consruction, Country, Courts, Culture, Democracy, Development, Districts, Division, DMK, Economy, Electricity, Federal, Finance, Freedom, GDP, Govt, Growth, Heritage, Hinduism, Independence, India, infrastructure, Justice, Language, Law, Linguistics, National, North East, Northeast, Order, Pakistan, Patel, Planning, Power, Private, Province, Provinces, Public, Railways, Region, Religion, Resources, River, Roads, Sardar, Security, Sharing, Speak, Speech, States, TamilNadu, Telecom, Terrorism, Terrorists, TN, Tradition, Transport, Transportation, Water | Leave a Comment »

State of public transit – Chennai Metro: Electric Trains

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

காற்று வாங்கும் ரயில் நிலையங்கள்; வீணாகும் ரூ. 8 கோடி

சென்னை கடற்கரையில் இருந்து அண்ணாநகர் நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் பயணிகள் இல்லாமல் காத்தாடுகின்றன. குறிப்பாக, பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை 10 பேர் வரைதான் பயன்படுத்துகின்றனர். இதனால், அந்த ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதன் மூலம், அவற்றுக்கு செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் ரூ. 8 கோடி வீணாகி வருகிறது.

சென்னை கடற்கரை-அண் ணாநகர்-கடற்கரை மார்க்கத்தில் தினமும் 5 ரயில்கள் இயக்கப்படு கின்றன. காலை 7 மணிக்கு அண் ணாநகரில் இருந்து முதல் ரயில் கிளம்புகிறது. இதையடுத்து, பிற் பகல் 12 மணிக்கே அடுத்த ரயில் புறப்படுகிறது.
இதே நேரங்களில் தான் கடற்கரையில் இருந்தும் அண்ணாநக ருக்கு ரயில் புறப்படுகிறது. பிற்பகல் ரயிலுக்குப் பிறகு இரண்டு மணி நேர இடைவெளியில் இரண்டு ரயில்களும், அதன் பின்பு, 4 மணி நேரத்துக்குப் பின்பு கடைசி ரயிலும் விடப்படு கிறது.
சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, வியா சர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லி வாக்கம், பாடி வழியாக அண் ணாநகரை அடைகிறது.
“கடற்கரையில் இருந்து வில்லி வாக்கம் வரை ஓரளவு பயணிகள் ஏறுவார்கள். அதுவும் 100 முதல் 150 வரை தான் இருக்கும்.
வில்லிவாக்கத்துக்குப் பின்பு பாடி, அண்ணாநகரை ரயில் அடையும் போது வெறும் வண் டியாகத் தான் இருக்கும். ஆயி ரம் பேர் வரை ஏறக் கூடிய ரயி லில் வெறும் 100 பேர் பயணம் செய்தால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும்” என்றார் ரயில்வே பணியாளர் ஒருவர்.
பொட்டல் காடாகக் காட்சி அளிக்கும் ரயில் நிலையங்கள்: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை மக்கள் பயன்ப டுத்தாத காரணத்தால், அவை பொட்டல் காடாகக் காட்சி அளிக்கின்றன.
“”காலை 7 மணிக்குப் புறப்படும் முதல் ரயிலுக்குப் பின்பு உடனடி யாக ரயில் இயக்கப்படுவ தில்லை. நெரிசல் மிகுந்த நேரங்க ளில் ரயில்களை இயக்கினால் பயணிகள் அதிகமாக வருவார் கள். ஆனால், அதைச் செய்வ தில்லை. பாடி, அண்ணாநகரில் ரயில்வே இருப்புப்பாதை போடப்பட்டது என்பதற்காக, ரயிலை விட்டுக் கொண்டிருக்கி றார்கள்” என்றார் ரயில் நிலைய அதிகாரி.
வீணாகும் ரூ. 8 கோடி: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்கள் கடந்த 3 ஆண்டுக ளுக்கு முன்பு அமைக்கப்பட் டன. இந்த திட்டத்துக்கு ரூ. 8 கோடி வரை செலவிடப்பட் டன. மக்கள் பயன்பாட்டில் இல் லாததால், இரண்டு ரயில் நிலை யங்களும் முடங்கியுள்ளன.
ரயில் நிலையங்களின் கழிவ றைகளுக்கு பூட்டுப் போடப்பட் டுள்ளந. குடிநீர் குழாய்கள் மரச் சக்கைகளால் அடைத்து வைக் கப்பட்டுள்ளன.
“”மாதத்தின் தொடக்கத்தில் டிக்கெட் மூலம் தினமும் ரூ. 500 வரை வருவாய் கிடைக்கும்.
மாதக் கடைசியில் ரூ. 150 கிடைத்தாலே ஆச்சர்யம் தான்.
பயணிகள் யாருமே வராத நிலை யில் நாங்கள் என்ன செய்வது.
ஓய்வெடுக்க வேண்டியது தான்” என்றார் அண்ணாநகரில் உள்ள ரயில்வே ஊழியர்.
“”சென்னை கடற்கரையில் இருந்து வில்லிவாக்கத்துக்கு ரயி லில் 20 நிமிடப் பயணம் தான்.
இதற்கு ஒரு ரயில் என்பதை ஏற் றுக் கொள்ள முடியாது. கோயம் பேடு வரை ரயில் சேவையை நீட் டித்திருந்தால் பயணிகளுக்கு பெரும் பயன் அளித்திருக்கும்” என்றார் பஸ் – ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் வழக்கறி ஞர் ரவிக்குமார்.
அலட்சியமே அனைத்துக் கும் காரணம்: தற்போது நடைமுறையில் இருக்கும் திட் டத்தால் யாருக்கும் எந்தப் பய னும் இல்லை என பல்வேறு தரப் பினரும் கருத்து தெரிவித்துள்ள னர். சென்னை கடற்கரையில் இருந்து அண்ணா நகருக்குப் பதி லாக, கோயம்பேடுக்கு ரயில் சேவையைத் தொடங்கி இருக்க வேண்டும்.
இதைச் செய்ய ரயில்வே நிர்வா கம் தவறி விட்டது. இதைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் அடுத்தகட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டி வருகி றது. இந்த அலட்சியமே தற் போது நடைமுறையில் இருக் கும் திட்டம் வீணாகுவதற்கு முக் கிய காரணம்.

சென்னை அண்ணாநகர் ரயில் நிலையத்துக்கு பயணிகள் மிகக் குறைவாக வருவதால், வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ள கழிப்பறை . மதிய உணவை முடித்து விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் .

Posted in Anna Nagar, Annanagar, Annangar, Beach, Chennai, City, Commute, Commuter, Electric, Express, Fast, Madras, Metro, Paadi, Padi, Public, Railways, Rapid, Station, Suburban, Trains, transit, Transport, Transportation, Work, Worker | Leave a Comment »

Corruption & Kickbacks Charge on Congress (I) – Job opportunity plan implementation in Indian states

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல்! * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’

Dinamalar.Com

மத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

மத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்!’

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வகையில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:

மேற்கு வங்கம்:

எல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.

ஆந்திரா:

இந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.

சட்டீஸ்கர்:

திட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.

ஜார்க்கண்ட்:

கிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.

மத்தியப்பிரதேசம்:

பயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.

ஒரிசா:

கிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.

உத்தரப்பிரதேசம்:

மிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Posted in Andhra, AP, Bengal, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Compensation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Contractors, Corruption, Employment, Females, Guarantee, Implementation, India, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jobs, kickbacks, Lady, MadhyaPradesh, Madyapradesh, Manmohan, Metro, MNC, MP, NGO, Orissa, Party, Planning, Politics, Poor, Private, Public, Rahul, Reddy, Rural, Scheme, Sonia, State, Suburban, UP, Utharpradesh, UttarPradesh, Villages, WB, Women, YSR | Leave a Comment »

The Future of Public Sector Undertaking – Govt, Private Organizations & Management

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்காலம்

எஸ். கோபாலகிருஷ்ணன்
(முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

உணர்வுபூர்வமாக பொதுத்துறை நிறுவனங்களை உயர்த்திப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது, நிறுவனங்களின் செயல்பாடு, திறன், லாப – நஷ்டக் கணக்கு ஆகிய அம்சங்களைப் பொருத்துதான், அவற்றின் பயன்பாடு மதிப்பிடப்படுகிறது.

1931-ம் ஆண்டில் – இந்திய தேசிய காங்கிரஸின் கராச்சி மாநாடு ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது. “”பொதுத்துறை மூலமே, இந்தியா தொழில் வளம் பெற்றிட இயலும்” என்பதே அது.

இதற்கேற்ப, நாடு சுதந்திரம் அடைந்தபோது, தொழில் வளர்ச்சியிலும் அறிவியல், தொழில் நுட்பத்திலும் மிகவும் பின்தங்கியிருந்தது. தொழில், விவசாயம், போக்குவரத்து ஆகியவற்றுக்குத் தேவையான சாதனங்களையும், தளவாடங்களையும் தயாரிக்க நம் நாட்டில் தொழிற்சாலைகள் அப்போது இல்லை. தனியாரிடம் அத்தகைய தொழில் கூடங்களை அமைப்பதற்கான முதலீடோ, அனுபவமோ இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, அரசுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டினார்.

கனரக இயந்திரங்கள் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண பொருள்கள்வரை, அனைத்தும் தட்டுப்பாடில்லாமல் நியாயமான விலைக்குக் கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

1951-ல் 5 நிறுவனங்களே பொதுத்துறையில் இருந்தன. முதலீடு ரூ. 29 கோடி. 1961-ல் 48 நிறுவனங்களாகவும், 1971-ல் 100 ஆகவும் 1983-ல் 209 ஆகவும் இவை வளர்ந்தன. இப்போது கிட்டத்தட்ட 250 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு சுமார் ரூ. 3 லட்சம் கோடி.

இந்நிறுவனங்களின் மூலம் தொழில் வளர்ச்சியும் கணிசமான அளவு வேலைவாய்ப்புகளும் பெருகின. 1970-களில் 27 சதவிகித வேலைவாய்ப்புகளும் 1980களில் 37 சதவிகித மேலைவாய்ப்புகளும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கிடைத்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றோருக்கும் வேலைவாய்ப்பு அளித்து சமூக நீதி காப்பதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் முன்னிலை வகித்தன.

இறக்குமதிப் பொருள்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், சுமார் 250 நிறுவனங்களில் 125 நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டுகின்றன. மற்றவை நஷ்டத்தில் இயங்குகின்றன. இத்துறையில் அரசு செய்துள்ள மிகப்பெரிய முதலீட்டுத் தொகையிலிருந்து வெறும் 3.5 சதவிகித லாபம்தான் கிடைக்கிறது.

திறமையின்மை, மெத்தனப்போக்கு, ஊழல், ஊதாரித்தனம், தேவையற்ற தாமதம் ஆகியவை பொதுத்துறை நிறுவனங்களின் அடையாளங்களாக அமைந்துவிட்டன. பல நிறுவனங்கள் 75 சதவிகித உற்பத்தித் திறனுடன்தான் இயங்குகின்றன.

இவை போதாதென்று, அரசு அதிகாரிகளின் கெடுபிடி, அரசியல்வாதிகளின் தேவையற்ற குறுக்கீடுகள், உள்ளூர்ப் புள்ளிகளின் தலையீடு ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களின் செம்மையான செயல்பாட்டுக்குக் குந்தகமாக உள்ளன.

இவற்றையெல்லாம்மீறி மிகச்சில நிறுவனங்கள் திறம்படச் செயல்பட்டு “நவரத்தினங்களாக’ மிளிருகின்றன. ஆனால் அவை அனேகமாக ஏகபோக நிறுவனங்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

“”பவர் கிரிட் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா” (டர்ஜ்ங்ழ் எழ்ண்க் இர்ழ்ல்ர்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் ஐய்க்ண்ஹ) என்னும் நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகள், சில தினங்களுக்கு முன், பொதுச் சந்தையில் விற்பனைக்காக வெளியிடப்பட்டன. இந்தப் பங்குகளை வாங்குவதற்கு, பங்குகளின் நிர்ணயிக்கப்பட்ட விலையைப் போல் 64 மடங்கு அதிகமாக தொகை வந்து குவிந்தது.

இதில் சரித்திரம் படைத்த விஷயம், இதுவரை வேறு எந்த இந்திய பங்குகளின் விற்பனைக்கும் இல்லாத அளவு வெளிநாடுகளிலிருந்து வந்து குவிந்த தொகைதான்! அதாவது 30 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் நூறு கோடி) இத்தனைக்கும் இந்த நிறுவனம் ஒரு முழு “”நவரத்தினம்” அல்ல; “”மினி நவரத்தினம்”தான்.

இந்நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகளின் விற்பனை மூலம் மத்திய அரசு கஜானாவுக்கு ரூ. 994.81 கோடி கிடைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் உள்ளார்ந்த வலுவைக் காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் திறம்படச் செயல்பட வேண்டுமெனில், சில வணிகரீதியிலான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்திப் பொருள்களை மாற்றி அமைத்தல்; உற்பத்தி முறைகளை நவீனமயமாக்குதல்; தாமதங்களைத் தவிர்த்து பணவிரயத்தைக் குறைத்தல்; தேவைக்கு அதிகமான மூலப்பொருள்களை இருப்பில் வைத்து கோடிக்கணக்கான பணத்தை முடக்குவதைத் தவிர்த்தல்; தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகம் செய்தல்; ஊழியர்களின் ஊதியத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்துகையில், கூடவே உற்பத்தித் திறனையும் உயர்த்துவதற்கு வழிவகை காணுதல்; ஊழல் மற்றும் நிதி விரயத்தைக் களைவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட செயல்திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் கொண்டுவர வேண்டும்.

நிறுவனங்களின் தலைவர்களாக, சாதனை வேட்கை கொண்ட துடிப்பான நிர்வாகிகளையே நியமிக்க வேண்டும். அவர்கள் எம்.பி.ஏ. போன்ற மேலாண்மை படிப்பும் பயிற்சியும் கொண்டவர்களாக இருப்பது பொருத்தமாக இருக்கும்.

பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பணிஓய்வு பெற்ற பின், உடனுக்குடன் புதிய தலைவர்களை நியமிக்காமல் அரசு காலம் தாழ்த்தும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

சிறப்பான சாதனைகளுக்கு பதவிஉயர்வு போன்ற ஊக்குவிப்பு; தோல்விக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்பு ( அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) என்ற நியதி, மூத்த நிர்வாகிகளுக்கும், தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்கும் செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது தனியார் துறையில் மூத்த நிர்வாகிகளின் சம்பளங்கள் உச்சத்தில் உள்ளன. அந்த அளவுக்கு அரசுத்துறையில் கொடுக்க முடியாது எனினும், தகுதிமிக்க நிர்வாகிகளுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதில் சற்று தாராளம் காட்டலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் தேவையற்ற குறுக்கீடுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமற்ற குறுக்கீடுகளுக்கு அண்மைக்கால உதாரணம் – பி.எஸ்.என்.எல். நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். அதற்கு முன்பு ஓ.என்.ஜி.சி.யில் நிகழ்ந்ததையும் குறிப்பிடலாம்.

என்ன செய்தாலும், சில பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைக்க இயலாது. நஷ்டத்தையும் தவிர்க்க முடியாது. அவற்றால் எந்த பொதுநன்மையும் ஏற்படாது என்ற நிலையிருந்தால், அவற்றை மூடுவதில் தவறில்லை. அதேசமயம் லாபத்தில் இயங்கும் சிறப்பான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.

கடந்த ஜூலை மாதம், பிரதமர் மன்மோகன் சிங், ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுய அதிகாரம் வழங்கி, அவை சிறப்பாகச் செயல்பட வழி செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். பிரதமரின் இந்த யோசனை பரவலாக வரவேற்கப்பட்டது. ஆனால், பிரதமர் அவ்விதம் கூறி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில், இந்த இலக்கில், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை நாடு வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

Posted in acquisition, Assets, Balance, Commerce, Compensation, Consultant, Contractors, Corporations, Corruption, Economy, employees, Employment, Fulltime, GDP, Govt, Growth, Hire, Industry, Investment, Jobs, kickbacks, Lethargy, Loss, Machinery, Management, markets, ONGC, Organizations, Permanent, Power, Private, Productivity, Profits, PSU, PSUs, Public, Reservation, rights, Science, Shares, Society, Stocks, Tamil, Tech, Technology, Undertaking | Leave a Comment »

State Chennai Metropolitan Transport Corporation – Opportunity for Improvements

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

பிரச்சினை: ஓரம்போ… ஓரம்போ!!

க. ஆனந்த பிரபு

டபுள் டக்கர், வெஸ்டி புல், பளபளக்கும் நீல, சிவப்பு பஸ்கள் என புதுப்புது பஸ்களாகப் பறக்க விட்டாலும், கடைசி மூச்சை விடுவதற்காக காத்திருக்கும் “தள்ளுராஜா… தள்ளு’ பஸ்களும் சென்னையில் அதிகம் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

அவை டெர்மினஸிருந்து முக்கி முனகிப் புறப்பட்டு லொடக்லொடக்கென்று ஓடி, போகிற வழியில் பிரேக் டவுனாகி வேறு பஸ் பிடித்து போவதற்குள் இன்டர்வியூவே முடிந்துபோகிற சோக அனுபவங்களும் பலருக்குத் தொடரத்தான் செய்கிறது.

ஒரு கற்பனைக்காக, எல்லாருமே புகைபிடிப்பதை விட்டு விட்டாலும், பஸ்கள் புகைபிடிப்பதை விடாது போலிருக்கிறது.

தேய்ந்துபோன டியூப் அடிக்கடி பஞ்சராகிக்கொண்டே இருப்பது போல போக்குவரத்துறையில் மட்டும் இதுபோன்ற கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க காரணம் என்ன?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அன்பழன் சொல்கிறார் :

சென்னை மாநகரத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 554 பஸ்கள் இருக்கின்றன. இதில் சுமார் ஆயிரத்து 700 முதல் ஆயிரத்து 800 பஸ்களே இயங்கும் நிலையில் உள்ளன. மீதமுள்ள சுமார் 700 பஸ்கள் பழுதடைந்து இயங்காத நிலையில் உள்ளன.

மத்திய அரசு போக்குவரத்துச் சட்டத்தின்படி ஒவ்வொரு பேருந்தும் அதிகபட்சமாக 6 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 6 ஆண்டு காலம் மட்டுமே இயக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்துப் பஸ்களும், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 6 லட்சம் கிலோ மீட்டரைத் தாண்டியும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாகவே மாநகர பஸ்கள், பாதி வழியிலே நின்று விடுவதும், நிறைய பஸ்கள் புகைகளைக் கக்குவதுமாக இருக்கிறது. இது பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

மாநகரப் பேருந்துகளைப் பராமரிக்க போதுமான அளவு ஊழியர்கள் இல்லாமையாலும் போதுமான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இல்லாமையாலும் போக்குவரத்து கழகம் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி நடத்தி வருகிறது.

இதுமட்டுமல்லாமல் பேருந்துகளுக்கு ஏற்ற உதிரிப்பாகங்களும் இல்லை. அப்படியிருந்தாலும் அவற்றின் தரம், நிலைப்புத்தன்மை வெறும் பெயரளவிலேயே இருக்கிறது.

1970-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு ஒரு வண்டிக்கு 7.5 பேர் வீதம், பணியாளர்களை நியமிக்கப் பட வேண்டும் என்று அப்பொழுதே மத்திய அரசால் அமைக்கப்பட்ட பட்டாபிராமன் குழு பரிந்துரை செய்தது. ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆள் குறைப்பின் காரணமாக அதை ஒரு வண்டிக்கு ஒரு நபர் வீதம் குறைத்து 6.5 பேர் வீதம் பணியாளர்களை மட்டும் வைத்து இன்றளவும் இயக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை எழுத்து மூலமாகவும், போராட்டம் மூலமாகவும் எடுத்துக்கூறியும் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கத் தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது.” என்கிறார் அவர்.

இவரின் குரல்போலவே ஒரு பேருந்தில் பயணிக்கிறபோது நாம் கேட்ட சில ஆதங்கக் குரல்களையும் இங்கே தருகிறோம்:

“”பஸ் டிக்கெட் விலை ஏத்தலைன்னு சொல்லுறாங்க. ஆனா சாதா கட்டண பஸ்ûஸக் கண்ணுலையே காணோம். கூடுதல் காசு கொடுத்து போறதைத் தவிர எங்களுக்கு வேற வழி என்ன இருக்கு?” என்றனர் கோயம்பேட்டில் காய்கறி மார்க்கெட்டிற்குப் போகும் இரு பெண்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் ஆவேசத்தோடு, “”ராத்திரி பத்து மணிக்கு மவுண்ட்ரோடே கூட பஸ் இல்லாம அஸ்தமித்துப் போகிறது. ஒன்பதரைக்கே நைட் சர்வீஸ் ஆரம்பித்து ரெட்டைப் படி பிடுங்கிறது என்ன நியாயம்? எங்கே கூட்டம் அதிகம் இருக்கிறதோ அங்க குறைவான பஸ்ûஸ விடுறாங்கன்னா பாருங்களேன். தொழிலாளர் கூட்டம் நிரம்பி வழியும் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து தாம்பரத்துக்குப் போக ஒரே ஒரு பஸ்தான். அதுவும் ராத்திரியிலதான் தெரியுமா?” என்று உரக்கக் கத்தினார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரும் தங்கள் சோகக் கதைகளை ஆவேசமாகச் சொல்லிக்கொண்டே இருந்தனர். லொடக்லொடக் என பஸ் போய்க்கொண்டே இருந்தது.

—————————————————————————————————

தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் டவுன் ஸ்களில் டிக்கெட் எந்திரம் அறிமுகம்

சென்னை, ஜுலை. 17-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. ஓட்டை உடைசலான பஸ்கள் ஒதுக்கப்பட்டு நவீன சொகுசு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

பயணிகள் நீண்ட தூரம் சொகுசாக பயணம் செய்ய ஏதுவாக `அல்ட்ரா டீலக்ஸ்’ பஸ்கள் விடப்பட்டுள்ளது.

டவுன் பஸ்கள் சொகுசு இருக்கைகளுடன் தற்போது விடப்படுகின்றன. சென்னை யில் புதிதாக விடப்பட்டுள்ள டவுன் பஸ்கள் அனைத்திலும் நவீன தொழில்நுட்பத்துடன் புகையை வெளியேற்றாத பாரத் நிலை மூன்று மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடக, கேரளா மாநில அரசு போக்குவரத்து கழகங்களில் கண்டக்டர்கள் டிக்கெட் கையால் எழுதியோ, அச்சடித்த டிக்கெட்டை கிழித்தோ கொடுப்பது இல்லை. சாப்ட் வேர் பொருத்தப்பட்ட கையடக்கமான சிறிய எலக்ட்ரானிக் எந்திரம் மூலம் டிக்கெட்

வழங்கப்படுகிறது.இந்த முறையை தமிழக அரசு போக்குவரத்து கழகங் களிலும் பின்பற்ற அமைச்சர் கே.என்.நேரு முடிவு செய்தார். அதன்படி பரீட்சார்த்த முறையில் சென்னையில் 5 பஸ்களில் டிக்கெட் எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

கண்டக்டர் எளிதாகவும், விரைவாகவும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க உதவும் இந்த மெஷினின் மதிப்பு ரூ.8000. அரை கிலோ எடை கொண்ட மெஷினில் உள்ள பட்டனை அழுத்தினால் டிக்கெட் வெளிவரும்.

ஒவ்வொரு `ஸ்டேஜ்’-க்குரிய கட்டணம் அதில் சாப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கும். பயணிகள் எத்தனை டிக்கெட் கேட்டாலும் விரைவாக கொடுக்க முடியும்.

ஒவ்வொரு ஸ்டேஜ்க்கு உரிய கட்டணமும் தானாக மாறிக் கொண்டே இருக்கும். தனி நபருக்கு டிக்கெட் கொடுப்பதாக இருந்தாலும் குடும்பத்துக்கும் மொத்தமாக டிக்கெட் கொடுப்பதாக இருந் தாலும் இந்த முறை மிக எளிது. ஒரே டிக்கெட்டில் எத்தனை பேர் பயணம் செய்யவும் அதில் குறிப்பிட முடியும்.

கண்டக்டர் ஒவ்வொரு ஸ்டேஜிலும் வினியோகம் செய்யப்பட்ட டிக்கெட் எத்தனை, ஏறிய பயணிகள் விவரம் போன்றவற்றை எழுத தேவையில்லை. மெஷின் மூலம் டிக்கெட் வழங்கும் போது அதில் அனைத்து விவரங்களும் பதிவாகி விடும். டிக்கெட் பரிசோதகர் கூட மெஷினில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் பயணிகள் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்ற விவரம் தெரிந்து விடும்.

டவுன் பஸ்களில் எவ்வளவு பேர் பயணம் செய்தாலும் நவீன டிக்கெட் மெஷின் மூலம் விரைவாக டிக்கெட் கொடுக்க இயலும்.

இந்த புதிய திட்டத்தை அனைத்து போக்குவரத்து கழகங்களிலும்நடை முறைப்படுத்த அமைச் சர் கே.என்.நேரு உத்தர விட்டுள்ளார். முதல் கட்டமாக 10 ஆயிரம் டவுன் பஸ்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.

அதைத்தொடர்ந்து புறநகர் பஸ்களிலும், விரைவு பஸ் களிலும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்களில் இருந்து டிக்கெட் மெஷின் கொள்முதலுக்கான டெண்டர் கோரப்படுகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் எந்திரம் கொடுக்கும் போது, அதை கையாள்வது குறித்த பயிற்சியும் கண்டக்டர்களுக்கு அளிக் கப்படும். இந்த மெஷின் மூலம் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை ஒரு நாளைக்கு வழங்க முடியும்.

————————————————————————————————–

நிறுத்தத்தில் நிற்க முடியாமல் பயணிகள் ஒதுங்கிச் செல்கின்றனர்.

ஆக்கிரமிப்புகளின் பிடியில் பஸ் நிறுத்தங்கள்

சென்னை, ஆக. 30: சென்னை நகரில் பெரும்பாலான பஸ் நிலையங்களும், நிறுத்தங்களும் ஆக்கிரமிப்புகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.

பஸ் நிறுத்தங்களில் இருந்தும் விலகி நிற்கும் பயணிகள், பஸ்களை விரட்டிச் சென்று பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த பஸ் நிறுத்த ஆக்கிரமிப்புகளால், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினத்தோறும் அவதிப்படுகின்றனர்.

சென்னை நகரில் 1,200-க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பவை 364. மீதமுள்ளவை போக்குவரத்துத் துறையின் கீழ் வருகின்றன.

ஆனால், உண்மையில் இவற்றில் பெரும்பாலான பஸ் நிறுத்தங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் சிக்கியிருக்கின்றன.

கடைகளும், வாகனங்களும்… சென்னையில் ஜாம்பஜார், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல இடங்களில் கடைகளை ஒட்டியபடி, பஸ் நிறுத்தங்கள் அமைந்துள்ளன.

இதனால், கடைகளுக்கு வருவோர் மற்றும் அந்தக் கடைகளைச் சேர்ந்தவர்கள் தங்களது வாகனம் மற்றும் பொருள்களை பஸ் நிறுத்தத்திலேயே விட்டுச் செல்கின்றனர். இதனால் பஸ்

“”பஸ் நிறுத்தங்களை பைக்குகள் மட்டும் ஆக்கிரமிக்கவில்லை. ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களும் ஆக்கிரமிக்கின்றன. குறிப்பாக, எழும்பூர், கடற்கரை ரயில் நிலைய பஸ் நிறுத்தங்களில் நிற்பது ஆட்டோக்கள் தான்.

இதைக் காரணமாக வைத்துக் கொண்டு, பஸ் டிரைவர்கள் பஸ்ûஸ சிறு தூரம் தள்ளி நிறுத்துகின்றனர். இதை எதிர்பார்க்காத பயணிகள் ஓடிச் சென்று ஏறுகின்றனர். இன்னும் சில பஸ்கள் சாலையின் நடுவில் நிறுத்தப்படுகின்றன. இதனால், “திடீர்’ போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார் ரயில் – பஸ் பயணிகள் நலச் சங்க தலைவர் ரவிக்குமார்.

குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட பெண்கள் அதிகம் வரும் இடங்களுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களில், அவர்கள் அமர்வதற்குக்கூட இடம் இருப்பதில்லை.

பஸ் நிலையங்களில்… பஸ் நிறுத்தங்கள் மட்டுமின்றி, சென்னை நகரின் சில பஸ் நிலையங்களும் கடும் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கின்றன. பிராட்வே பஸ் நிலையத்தின் உள்ளே இப்போது ஏராளமான கையேந்தி பவன்கள்.

கடையில் உள்ளவர்கள் தங்களது பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களைக் கழுவி பயணிகள் நிற்கும் இடத்திலேயே ஊற்றுகின்றனர். பஸ் நிலையத்தில் பெரும்பாலான கடைகள் இந்த முறையைத்தான் பின்பற்றுகின்றனர். இதைக் கண்டு, மிரளும் பயணிகள் வேறு இடம் நோக்கிச் செல்கின்றனர். பஸ் வரும் நேரத்தில் ஓடிவந்து ஏறுகின்றனர்.

பஸ் நிறுத்தங்கள் இல்லாமல் அவதி: பூந்தமல்லி, குமணன்சாவடி, போரூர் போன்ற சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் பஸ் நிறுத்தமே இல்லை என்பதும் மற்றொரு குறை.

காஞ்சிபுரம், வேலூர் போன்ற ஊர்களுக்குச் செல்ல பூந்தமல்லி விக்னேஸ்வரா தியேட்டர் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் காத்திருக்கின்றனர்.

இந்த நிறுத்தத்தில் நிழற்குடை உள்பட எந்த அடிப்படை வசதியும் கிடையாது. வெட்ட வெளியில் தான், நிற்க வேண்டிய அவலம் என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

புதிய பஸ் நிறுத்தங்கள் எப்போது?: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பஸ் நிறுத்தங்களை இடித்து விட்டு, புதிய பஸ் நிறுத்தங்கள் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கிறார் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி.

இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போதுதான் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

இந்த விஷயத்தில் மாநகராட்சியின் பணிகள் மந்தம் என்றால், பெரும்பாலான பஸ் நிறுத்தங்களைக் கையில் வைத்திருக்கும் போக்குவரத்துத் துறையோ கவலையே படாமல் இருக்கிறது. பஸ் பயணிகளின் பிரச்னையை புரிந்து கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் துறைகளை “உசுப்பி’ விடுமா அரசு நிர்வாகம்?.

———————————————————————————————–
ஏ.சி. வால்வோ பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் பஸ்களைவிட இரண்டரை மடங்கு கட்டணம்

சென்னை, செப். 13: தமிழகத்திலேயே முதன் முறையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அதி நவீன குளிர்சாதன “வால்வோ’ பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

சென்னை கோயம்பேடு புறநகர் பஸ்நிலையத்தில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பஸ் சேவையைத் தொடங்கி வைக்கிறார். தடம் எண் 21ஜி (தாம்பரம்-பிராட்வே), தடம் எண் 19ஜி (பிராட்வே-கோவளம்), தடம் எண் 70 (தாம்பரம்-ஆவடி), சென்னை விமான நிலையம்-பிராட்வே உள்ளிட்ட வழித்தடங்களில் முதல் கட்டமாக 5 பஸ்களும், பின்னர் 5 பஸ்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

முதல்வர் பார்வை:

இந்த நவீன பஸ்களில் இரண்டு பஸ்கள் செவ்வாய்க்கிழமை மாநகரப் போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்கு அருகில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் புதன்கிழமை தலைமைச் செயலகத்துக்கு வந்த பஸ்களை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார்.

ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என். நேரு, ஆர்க்காடு வீராசாமி, மாநகரப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ஆர். பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.

இரண்டரை மடங்கு கட்டணம்:

ஏ.சி. பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் பஸ்களைக் காட்டிலும், இரண்டரை மடங்கு கட்டணம் வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 10-ம், அதிகபட்சம் ரூ. 50-ம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு வழித்தடத்திலும் இந்த பஸ்களை 12 நடைகள் இயக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டிங் மெஷின்கள் அறிமுகம்:

இந்த பஸ்கள் அனைத்திலும் டிக்கெட் வழங்குவதற்கு “டிக்கெட்டிங் மெஷின்கள்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளன. படிப்படியாக அனைத்து மாநகர பஸ்களிலும் டிக்கெட்டிங் மெஷின்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவீன கேமராக்கள்:

இந்த பஸ்ஸின் நடுப்பகுதி கதவு மற்றும் பின் பகுதியில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்.ஈ.டி. திரை டிரைவர் இருக்கைக்கு முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ்ஸில் ஏறி, இறங்கும் பயணிகளையும், பின் பகுதியில் வரும் வாகனங்களையும் டிரைவர் கவனித்து, பஸ்ûஸ எளிதாக இயக்க முடியும்.

இந்த பஸ்களில் சென்சாருடன் கூடிய தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கதவுகள் மூடும்போது பயணிகளின் கை, கால், உடமைகள் சிக்கிக் கொண்டால் உடனே கதவுகள் தானே திறந்துவிடும்.

டிஜிட்டல் வழித்தட பலகைகள்:

பஸ்ஸின் முன் பகுதி, பின் பகுதி மற்றும் இடது பக்கவாட்டில் நவீன எல்.ஈ.டி. டிஜிட்டல் வழித்தடப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை அளிக்கும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 41 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

மொபைல் ரீசார்ஜ் செய்ய வசதி:

இந்த பஸ்களில் லேப்டாப் உபயோகிப்பவர்களுக்காக சிறப்பு வசதியும், மொபைல் ரீசார்ஜ் செய்துகொள்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளுக்கு அவ்வப்போது தகவல்களை அளிக்கும் வகையில் மைக் மற்றும் ஆம்பிளிபையர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இனிமையான இசை ஒலிக்கவும் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

45 டிரைவர்களுக்கு பயிற்சி:

தானியங்கி கியர் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட இந்த பஸ்களை திறம்பட இயக்குவதற்காக மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 45 டிரைவர்களுக்கு, வால்வோ நிறுவனம் 15 நாள்கள் பயிற்சி அளித்துள்ளது. இந்த டிரைவர்களுக்கு தொப்பியுடன் கூடிய தனிப்பட்ட சீருடை வழங்கப்பட்டுள்ளது.

இணையதள முன்பதிவு:

ஏ.சி. வால்வோ பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் அதே நாளில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இணையதள முன்பதிவு முறையும் அறிமுகப்படுத்ப்பட உள்ளது.

Posted in Analysis, Ashok Leyland, Auto, Automation, Bus, car, Chennai, Commute, Commuter, Conductor, Driver, Engines, Environment, Express, Fares, Govt, Home, Improvements, Insights, Internet, Interview, Madras, Maintenance, Metro, Motors, MTC, Nehru, Non-stop, Nonstop, Office, Operations, Opportunity, Pallavan, Pollution, PP, Private, Public, Railways, Repair, Rikshaw, Share autos, solutions, Spare parts, Spares, Suburban, Suggestions, TATA, Terminus, Ticket, Tickets, Trains, Transport, Transportation, Volvo, Work | Leave a Comment »

Why the pass percentage is better in the Higher Secondary – Plus Two exams

Posted by Snapjudge மேல் மே 15, 2007

“பாஸ் மார்க்’ நிர்ணயிப்பதில் சாதகமான புதிய விதி: பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிபெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறை (பிராக்டிகல்) தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் (தியரி) தேர்வுகளில் 40 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறைத் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் தேர்வுகளில் 30 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இதேபோல சில தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் (கிரேஸ் மதிப்பெண்கள்) வழங்கவும் அரசு உத்தரவிட்டது.

இதன் பயனாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 81 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது.

Dinamani

———————————————————————————–

தூக்கி நிறுத்தும் முயற்சி?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் 81 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

தேர்வு எழுதிய 5,55,965 மாணவ, மாணவியரில் 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மேலும் மகிழ்ச்சி தருகிறது.

ஆனால் இந்த தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதற்குக் காரணம் மாணவர்கள் சிறப்பாகக் கற்றுத் தேர்வு எழுதியதால் அல்ல; தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் மாற்றப்பட்டதுதான் என்ற உண்மை, இந்த மகிழ்ச்சியைக் குறையுடையதாகச் செய்துவிடுகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் செய்முறைக்கு 30 மதிப்பெண், கருத்தியல் தேர்வில் 40 மதிப்பெண் குறைந்தபட்சம் பெற வேண்டும் என்ற விதிமுறை இந்த ஆண்டு மாற்றப்பட்டது. மாணவர் தேர்ச்சிக்குக் குறைந்தபட்சமாகக் கருத்தியல் தேர்வில் 30 மதிப்பெண், செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை ஒரு வரமாக அமைந்துவிட்டது.

அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த புதிய முறையால் அதிகம் பயனடைந்துள்ளவை அரசுப் பள்ளிகள்தான் என்பதைக் காண முடிகிறது. அடுத்த நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பயன்பெறுகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் பெரிய மாற்றத்தைக் காண முடியவில்லை.

மாநிலத்தில் 21 ஆண்டுகளாகத் தேர்ச்சி விகிதத்தில் முதன்மை வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், மிகவும் பின்தங்கிய கல்வி மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 47 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக (18 சதவீதம்) உயர்ந்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 69 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஆச்சரியம் தரும் மாற்றம்!

வழக்கமாகச் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் அந்தந்தப் பள்ளி அளவிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. கருத்தியல் தேர்வு விடைத்தாள்கள் மட்டுமே வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு திருத்தப்படுகின்றன. தேர்ச்சிக்குக் குறைந்தபட்சம் 30 மதிப்பெண் பெற்றால் போதும் என்பதாலும், ஒவ்வொரு வினாத்தாளிலும் ஒரு சொல் விடை அல்லது கோடிட்ட இடங்களை நிரப்புதல் போன்ற ஒரு மதிப்பெண் விடைக்கான 30 கேள்விகள் இருப்பதாலும் தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் எளிதானதாக மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கல்வித் தரம் சரிந்துவருவதாகக் கருத்து நிலவும் இன்றைய வேளையில், மாணவர்கள் எதையும் படிக்காமல் கடைசி நேரத்தில் அதிகபட்சம் 100 ஒரு மதிப்பெண் கேள்விகளை மட்டும் படித்துவிட்டுத் தேர்ச்சி பெற முடியுமெனில், அது பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க உதவலாம், ஆனால் அந்த மாணவனின் தனிப்பட்ட வாழ்க்கை நலனுக்கு உதவுமா என்ற கேள்வி எழுகிறது.

கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் தற்போது தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. குறைந்தபட்சம் 90 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குத்தான் இத்தகைய கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 90 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையை மாவட்டவாரியாகத் தமிழகக் கல்வித் துறை வெளியிடுமானால், இந்தத் தேர்ச்சி விகித உயர்வால் உண்மையான பயன் கிடைத்துள்ளதா என்பதை அலசிப் பார்க்க முடியும்.

———————————————————————————————————————————————-

தமிழகத்தில் சீரான தேர்வுத்தாள் முறை வருகிறது?

சென்னை, நவ. 4: சமச்சீர் கல்வி முறைக்கான அறிக்கை அண்மையில் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர் நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கல்வி முறைக்கும் ஒரே மாதிரியான தேர்வு முறையை அமல்படுத்துவது குறித்து அரசு யோசித்து வருகிறது.

இதன்படி முதல் கட்டமாக மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய அனைத்து வகை தேர்வு முறைகளிலும் ஒரே சீரான மதிப்பெண் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தற்போது, தேர்வுத் தாள்களில் சீரான நடைமுறையைக் கொண்டு வரலாமா என்பது குறித்தும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொழிப் பாடங்களுக்கு இரு தாள்கள், கணிதம், அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு ஒரு தாள் கொண்டு வரலாமா என்பது குறித்து யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சராசரியாக 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் மெட்ரிகுலேஷன் தேர்வை சுமார் ஒரு லட்சம் பேரும், ஆங்கிலோ இந்தியன் தேர்வை சுமார் 5 ஆயிரம் பேர், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,200 பேரும் எழுதுகிறார்கள்.

இவ்வாறு வெவ்வேறு வகையான பாடத் திட்டங்களுக்கு வெவ்வேறு வகையான தேர்வுத் தாள்கள், மதிப்பெண் முறை உள்ளன.

மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் வரும் மாணவர்கள் தமிழில் (அல்லது ஏதாவது மொழிப் பாடம்) இரு தாள்கள், ஆங்கிலத்தில் இரு தாள்கள், கணிதம், அறிவியல், சமூகவியல் என ஐந்து பாடங்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.

மாணவர்கள் மொத்தம் 7 நாள் தேர்வை எழுத வேண்டும்.

மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதுவோர் தமிழ் அல்லது ஏதாவது மொழிப் பாடம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இரு தாள்கள் எழுத வேண்டும்.

அது போல் அறிவியலுக்கும் இரு தாள்கள் உண்டு. அறிவியல் முதல் தாள் என்று ஒரு தாளையும், தாவரவியல் – விலங்கியல் கொண்ட அறிவியல் இரண்டாம் தாளையும் எழுதவேண்டும்.

இது தவிர, புவியியல் – பொருளாதாரம் ஒரு தேர்வுத் தாளும், வரலாறு – குடிமையியல் (சிவிக்ஸ்) கொண்ட ஒரு தேர்வுத் தாளும் எழுத வேண்டும்.

மெட்ரிக் தேர்வு எழுதும் மாணவர்கள் 10 நாள்கள் தேர்வை எழுத வேண்டும்.

ஆங்கிலோ இந்தியன் தேர்வில் தமிழ் அல்லது ஏதாவது ஒரு மொழிப் பாடத்துக்கு ஒரே ஒரு தாள்தான் உண்டு. ஆங்கிலத்துக்கு இரு தாள்கள் உள்ளன.

மெட்ரிகுலேஷன் தேர்வைப் போல் கணிதத்துக்கும், அறிவியலுக்கும் தலா இரு தாள்கள் உண்டு. இவை தவிர புவியியல் ஒரு தாள், குடிமையியல் (சிவிக்ஸ்) ஒரு தாள் எழுத வேண்டும். இந்த மாணவர்கள் 9 நாள் தேர்வை எழுத வேண்டும்.

இத்துடன் ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவோர் கூடுதலாக சம்ஸ்கிருதம் அல்லது அரபு மொழிப் பாடத்துக்கான தேர்வை எழுத வேண்டும்.

இவை அனைத்தையும் சீராக்கி, ஆங்கிலத்துக்கு இரு தாள்கள், மொழிப் பாடத்துக்கு இரு தாள்கள், இதர பாடங்களுக்குத் தலா ஒரு தாள் என்று கொண்டு வருவது குறித்து யோசனை அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாநிலக் கல்வித் திட்ட மாணவர்களின் தேர்வுத் தாள்கள் அனைத்துக்கும் சேர்த்து அதிகபட்சமாக மொத்தம் 500 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதர தேர்வுகளுக்கு அதிகபட்சமாக 700, 1000 என மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் சீராக்கி ஒரே மாதிரியாக 500 மதிப்பெண்ணுக்கு என்று நிர்ணயிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

Posted in +2, Analysis, Anglo-Indian, City, Colleges, Education, Evaluation, fail, Govt, HSC, Marks, Marksheet, Matriculation, Metric, Metriculation, Oriental, OSLC, pass, Percentage, Plus Two, PlusTwo, Private, Public, Rural, Sanskrit, Schools, Students, Study, Suburban, Teachers, Urdu, Urudu, Village | 1 Comment »

Waiver of dues a fillip to civic works: Mayor

Posted by Snapjudge மேல் மே 8, 2007

நகராட்சிகளின் கடன் தள்ளுபடியால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினை இருக்காது: அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, மே 8: நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நகராட்சி மன்றங்களின் கடன் தொகைகளைத் தள்ளுபடி செய்ததற்காக தமிழ்நாடு நகர் மன்றத் தலைவர்கள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் பேசியது:

நகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களின் கடனுக்கான வட்டி வீதத்தை 13.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தபோது, வட்டியை மட்டுமல்லாமல் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதன்படி அனைத்து நகராட்சி மற்றும் 5 மாநகராட்சிகளின் கடன் தொகையான ரூ.793 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.

உள்ளாட்சி அமைப்பில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடே கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிகளின் சுமை குறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சிறப்பாக செயலாற்றி அரசுக்கு நற்பெயரை நகராட்சிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது.

மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாகப் பயன்படுத்தினாலே நகராட்சிகளின் தேவைகள் இனி நிறைவேற்றப்பட்டுவிடும் என்றார் அவர். விழாவில் தமிழ்நாடு நகர்மன்றத் தலைவர்கள் பேரவைத் தலைவர் ஆர்.எஸ். பாரதி, மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் நகர் மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.

Posted in Bonds, Budget, Civic, CMDA, Corporation, Councillor, CRR, Development, DMK, Economy, Finance, Funds, Government, Govt, Home, Interest, Internal Affairs, Loans, Local Body, Mayor, Metropolitan, MLC, Municipality, Public, Rajesh Lakhoni, Rates, Services, Stalin, Subramaniam, Subramanian, Tiruchi, Trichy, Waiver | Leave a Comment »

How to stop Corruption using Law and Order – Formation of higher level Committees

Posted by Snapjudge மேல் மே 3, 2007

ஊழலை ஒழிக்க உயர்நிலை அமைப்புகள்

கே.வீ. ராமராஜ்

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு ஒப்பந்தமானது கடந்த 2005 டிசம்பர் 5 அன்று நடைமுறைக்கு வந்தது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது. எனவே ஊழல் ஒழிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமையாகும்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழு இந்தியாவில் “லோக்பால்’, “லோக் ஆயுக்தா’ அமைப்புகளை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

  • திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது
  • மறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.
  1. பதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,
  2. விதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,
  3. நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,
  4. சுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,
  5. ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல்,
  6. பொது நலனுக்கு ஊறு விளைவித்தல் போன்ற வகைகளில் ஊழல் நடைபெறுகிறது.

இத்தருணத்தில் “லோக்பால்’ அமைப்பைக் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதும் அலசி ஆராய்வதும் அவசியமாகும். “லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமை வகித்த நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1966 ஆம் ஆண்டு தமது அறிக்கையில் தேசிய அளவில் “லோக்பால்’, மாநில அளவில் “லோக்ஆயுக்தா’ என்ற இரு வகையான லஞ்சத்தை களையும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.

இதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்

  • கர்நாடகம்,
  • மத்தியப் பிரதேசம்,
  • ராஜஸ்தான்,
  • பஞ்சாப்,
  • அசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை.

இதனால் தேசிய அளவிலும் மாநிலங்களிடையேயும் ஒத்துழைப்பும் தகவல் தொடர்பும் மிக்கதாக உள்ள வகையில் “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ என்ற இரண்டடுக்கு முறையை நாடாளுமன்றச் சட்டம் மூலம் உருவாக்க வேண்டிய காலம் இதுவாகும். இவ்வமைப்பு முறையை உருவாக்கத் தேவைப்பட்டால் அரசியல்சாசன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளலாமென அரசியல்சாசன மறு ஆய்வு குழு தெரிவித்துள்ளது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

“லோக்பால்’ மூலம் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் உயர் பதவி வகிப்பவர்கள் உள்ளிட்டோர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகளையும் “லோக்ஆயுக்தா’ மூலம் முதல்வர், மாநில அமைச்சர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வழி செய்வதன் மூலமாக நாடு முழுவதும் லஞ்சத்தை ஒழிப்பதற்கான ஒருமித்த அமைப்பு முறை உருவாகும். இத்தகைய அமைப்பு முறையை உருவாக்க 40 ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தபோதிலும் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் முழுமையான ஆதரவு இல்லாததால்தான் இம் மசோதா நிறைவேறவில்லையென மாநில “லோக்ஆயுக்தா’ அமைப்புகளின் ஏழாவது மாநாட்டில் மத்தியப் பிரதேச “லோக்ஆயுக்தா’ அமைப்பு தெரிவித்துள்ளது.

“லோக்பால்’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உச்ச நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் “லோக்ஆயுக்தா’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உயர் நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் குறையாத தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

தேவைக்கேற்ப மத்தியிலும் மாநிலத்திலும் “உப லோக்பால்’, “உபலோக் ஆயுக்தா’ அமைப்புகளை நியமிக்கலாம். இவர்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமனம் செய்ய வேண்டும். இப்பதவிகளில் காலியிடம் ஏற்படும்போது நீண்ட காலம் யாரும் பணியில் அமர்த்தப்படாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் காலக்கெடுவும் மாற்றுத் திட்டமும் சட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் சூழ்நிலை ஏற்படுமானால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் கையாளும் விசாரணை முறையைப் பின்பற்றலாம்.

“லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தன்னாட்சி பெற்றவைகளாக விளங்குவதோடு இவற்றின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளும் செயல்பாடுகளில் நீதிமன்றக் குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வமைப்புகளுக்குத் தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். இப் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு எத்தகைய அரசுப் பணியும் வழங்கப்படக் கூடாது.

மாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது. இதைப்போல உத்தேசிக்கப்பட்டுள்ள “லோக்பால்’ அமைப்புகள் செயல்படக் கூடாது. மாறாக “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு நீதிமன்றத் தீர்ப்புகளைப் போன்ற சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். இப் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் மட்டுமே மேல் முறையீடு செய்யும் வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும். தம்மிடம் தாக்கல் செய்யப்படும் முறையீடுகள் மீது ஓராண்டுக்குள் தீர்வு காண சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது மத்திய அரசின் கடமையாகும்.

வேலியே பயிரை மேய்வதுபோல அரசு மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் கடமையைச் செய்யாமல் இருப்பதாலும் பிறர் கடமைகளில் குறுக்கிடுவதாலும் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துவதாலும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. நேர்மையான அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் தவறு செய்பவர்களை இனம் காண உதவ வேண்டும்.

லஞ்சத்தைக் களைய வேண்டுமாயின் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலே போதுமானது. நாடு தன்னிறைவு அடையவும் வல்லரசாக மாறவும் நாம் கனவு காணும்போது லஞ்சத்தை ஒழிக்க “லோக்பால்’ போன்ற அமைப்புகளை நம் நாட்டில் இன்னும் உருவாக்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல. மேலும் லஞ்ச லாவண்யமற்ற அரசைப் பெறும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு உண்டு என்றால் மிகையல்ல.

சரியான பணிகளை முடிப்பதில்கூட அரசு அலுவலகங்களில் ஏற்படும் கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கிறது. ஆட்சி நிர்வாக அமைப்பில் எந்தவொரு நிலையிலும் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது என்பதே நல்லாட்சித் தத்துவம்.

முதலாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையை போலவே இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களும் தன்னார்வ அமைப்புகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஒசூர் நகர வழக்கறிஞர்.)

—————————————————————————————-

நிர்வாகத்தில் பொறுப்புணர்வு!

கே. ராமமூர்த்தி
“”நிர்வாகத்தில் பொறுப்புணர்வு” என்பது இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம். அரசு நிர்வாகத்தின் மீது இப்போது பொதுவாகவே எல்லோருக்கும் அதிருப்தி நிலவுகிறது; அத்துடன் ஜனநாயக உரிமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பதால் இந்த விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.

“மேலை நாட்டவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் பொறுப்புணர்வு; அலுவலகத்திலோ, நிர்வாகத்திலோ உங்களுடைய நிலை எதுவாக இருந்தாலும் உங்களுடைய வேலைக்கு நீங்கள்தான் பொறுப்பு. இந்தியாவிலோ, உயர் பதவியில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு பொறுப்பு குறைவு!

மத்திய அரசில் முக்கிய பதவியில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகக் கூறினார், “”வருமான வரி செலுத்த வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மறந்துவிட்டேன்” என்று. அதற்குப் பிறகும் தண்டனை, நடவடிக்கை ஏதும் இல்லாமல் அவர்பாட்டுக்கு செயல்பட்டு வந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அரசுத்துறை நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், ஒரு தலைமை நிர்வாகிமீது கூட இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை!

அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதாலேயே, அரசியல் சட்டத்தில் அதற்கு உரிய ஏற்பாடுகளை நமது முன்னோர் செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட அரசாங்கம் என்பதே அதிகபட்ச திறமை, அதிகபட்ச பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான். அரசின் வரவு, செலவுகளை ஆராய்ந்து நாட்டு மக்களுக்கும் தெரிவித்து, அரசையும் தட்டிக்கேட்கத்தான், “”தலைமைக் கணக்கு – தணிக்கையாளர்” என்ற உயர் கண்காணிப்புப் பதவி அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம் என்பது பொதுக்கணக்குக்குழு என்ற அமைப்பைக் கொண்டு இதே பணியைச் செய்கிறது. அதற்கு தலைமைக் கணக்கு தணிக்கையாளர் நண்பனாய், நல்லாசிரியனாய், வழிகாட்டியாய் செயல்படுகிறது.

“நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் செலவுகள் முறையாகச் செய்யப்படுகின்றனவா, திட்டங்கள் ஒழுங்காக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொதுக் கணக்குக்குழுவுடன், மதிப்பீட்டுக் குழு, அரசின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் குழு போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசுத்துறை நிறுவனங்களின் பொறுப்புணர்வை உறுதி செய்ய, கம்பெனிகள் சட்டத்தில் 1956-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி மன்றங்களைப் பொருத்தவரை சிறப்பு தணிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிர்வாகமே தனது ஊழியர்களின் பொறுப்புணர்வைச் சோதிக்கவும், மேம்படுத்தவும் அக அமைப்புகளையும் வழி முறைகளையும் கொண்டுள்ளது. புற ஏற்பாடாக, பொதுமக்களுடன் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் சந்திப்பு, புகார்-ஆலோசனைகளைப் பெறுவதற்கான நேரடி சந்திப்புக் கூட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது.

அரசு நிர்வாகத்தின் உள்ளேயும் வெளியேயும் இத்தனை ஏற்பாடுகள் இருந்தபோதும், அரசுத்துறையிலும் அரசு நிறுவனங்களிலும் யாருமே பொறுப்பானவர்கள் இல்லை என்ற எண்ணம்தான் மக்களிடம் வலுத்திருக்கிறது.

ஒரு வேலையை எடுத்தால் குறிப்பிட்ட நேரத்துக்குள் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உணர்வு ராணுவத்தில்தான் அதிகமாக இருக்கிறது; நீதித்துறையில்தான் அது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதில் அதிகாரக் கட்டமைப்பு மட்டும் இந்த வேறுபாட்டுக்குக் காரணம் அல்ல, அமைப்பு ரீதியாகவே செய்துள்ள ஏற்பாடும், நிர்வாக நடைமுறைகளும்தான் இதற்கு முக்கியக் காரணம்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உள்ள ஏற்பாடுகள் அனைத்தும் “”பெயரளவுக்குத்தான்” செயல்படுகின்றன என்றே மக்கள் கருதுகின்றனர். தவறுகளையும் தாமதத்தையும் தண்டிக்கவோ, கண்டிக்கவோ, திருத்தவோ நிர்வாகத்தில் எந்தவித ஏற்பாடும் இல்லை என்பதே அவர்களுடைய மனக்குமுறல்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அமைப்புகளின் செயல்பாட்டில் பளிச்செனத் தெரியும் அம்சங்கள் இரண்டு.

பொறுப்பாக்குவதும் தணிக்கை செய்வதும், சம்பவம் நடந்து முடிந்த பிறகு தரும் ஆய்வறிக்கையாகவே இருக்கின்றன. எனவே, தவறு நடந்துவிடுகிறது அல்லது உரிய காலத்தில் நடைபெறாமல் மிகவும் தாமதமாக நடக்கிறது. இதற்குக் காரணமானவர்களை அல்லது தவறு செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குக்கூட நீண்ட காலம் பிடிக்கிறது.

ஒரு செயலுக்கு யார் பொறுப்பு என்பதை அறிய, மறைமுகமாக கேள்விகளைக் கேட்பதும், அதையும் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்காமல் -அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களைக் கேட்பதாகவும் இருக்கிறது.

இந்தியாவில் பொது நிர்வாகத்தின் மீது நாடாளுமன்றத்துக்கு உள்ள கட்டுப்பாடு குறித்து 1952-1966 வரை மேற்கொண்ட ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

“”அரசியல்சட்டப்படி, அரசு நிர்வாகத்தின்மீது நாடாளுமன்றத்துக்கு முழு கட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை. அப்படியே அதற்கு அதிகாரம் இருந்தாலும் அதை அமல் செய்யும் உள்ள உறுதி அதனிடம் இல்லை.

இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. நிர்வாகத்தை முழுமையாக ஆராய்ந்து, தவறுகளைக் கண்டுபிடித்து, உரிய திருத்த நடவடிக்கைகளையோ, தண்டனை நடவடிக்கைகளையோ எடுக்க நாடாளுமன்றத்துக்கு அவகாசம் இல்லை. நீண்ட நேரம் அமர்ந்து பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஆராயவோ, விவாதிக்கவோ அவை உறுப்பினர்களுக்கு ஆர்வம் இல்லை. அவையின் கூட்ட நேரத்தை அதிகப்படுத்த அரசுக்கும் விருப்பம் இல்லை. அவை நடவடிக்கைகளில் உறுப்பினர்களுக்கு ஆர்வம் குறைவு; இதனாலேயே பல நேரங்களில் அவையில் குறைந்தபட்ச (மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம்) “”கோரம்” கூட இல்லை என்று மணி அடிக்கப்படுகிறது. பெரும்பாலான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பயிற்சியோ, அரசியல் விழிப்புணர்வோ, நிர்வாகத்தை நாடாளுமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமோ கிடையாது.

நிர்வாகத்தின் நெளிவுசுளிவுகளைத் தெரிந்துகொண்டு அதன் செயல்களை ஆராய்ந்து குறைகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலருக்குக் கிடையாது. நிர்வாகத்தின் பிரச்னைகள், அமைப்புமுறை, நிர்வாக நடைமுறை போன்றவை பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுயேச்சையான சிந்தனை உணர்வும் கிடையாது. இந்த அறிக்கை வந்து 40 ஆண்டுகள் ஆனபிறகும் கூட, நிலைமை பெருமளவுக்கு மாறிவிடவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல்படி செய்யப்படும் தொகுதி வளர்ச்சி நிதி என்ற செலவினத்தை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். 1993-ல் தலா ரூ.5 லட்சம் என்று மொத்தம் ரூ.37.5 கோடி ஒதுக்கப்பட்டது. 1994-ல் தலா ரூ.1 கோடி என்று உயர்த்தப்பட்டு ரூ.790 கோடியானது. பிறகு அதுவே ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இதே திட்டம் சட்டமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இந்த திட்டங்களிலும் இறுதிப்பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதில் 25% தான் போய்ச் சேருகிறது என்று தெரியவருகிறது.

இந்த நிலைமாற பின்வரும் பரிந்துரைகளைப் பரிசீலிக்கலாம்:

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதற்கு முரணாக உள்ள, அரசு ரகசியங்கள் காப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் தகவல் அறியும் சட்டம் வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே அது உருவான விதம், அதற்காக முதலில் மதிப்பிடப்பட்ட தொகை, செலவழிக்கப்பட்ட தொகை, அடைந்த பயன், திட்டம் தோல்வியா, வெற்றியா, சாதகம் அதிகமா பாதகம் அதிகமா என்பதைத் தொகுத்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

நிர்வாக நடுவர் மன்றம் போன்றவை வலுப்படுத்தப்பட்டு, விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். மனித வள மேம்பாட்டை அளக்கும் வழிமுறையைப் பின்பற்றி, ஒவ்வொரு சமூக நலத் திட்டத்தின் வளர்ச்சியையும் அளக்க வேண்டும். அரசு என்ற அமைப்புக்குப் பதிலாக, சமூகம் என்பதை ஊக்குவித்து அவர்களின் நன்மைக்கான திட்டங்களை அவர்களைக் கொண்டே அமல்படுத்தும் நவீன முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

காலாவதியாகிவிட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர தனிச்சட்டம் இயற்ற வேண்டும். ஆம்புட்ஸ்மேன், லோக்பால் என்பது வெறும் புகார்களைப்பெறும் அமைப்பாக நின்றுவிடாமல், நிர்வாகத்தினரைப் பதில்சொல்ல வைக்கும் அமைப்பாகச் செயல்பட வலுப்படுத்தப்பட வேண்டும். பொறுப்பாக்குதல் என்ற பெயரில் அரசு நிர்வாகப்பணியாளர்களின் செயல்பாட்டுச் சுதந்திரம், திறமை, நேர்மை, நியாயமான அணுகுமுறை ஆகியவற்றை நசுக்கும்படியான கட்டுப்பாடுகளைத் திணித்துவிடக்கூடாது.

(கட்டுரையாளர்: உறுப்பினர் – மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்.)

———————————————————————————————-

ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேட்டை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை: ப.சிதம்பரம் வேதனை

திண்டுக்கல், ஜூலை 10: ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதுதான் நம்முடைய மிகப் பெரிய தோல்வி என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரை:

கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவிகிதத்துக்கும் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், நமது மக்களிடம் எப்படி இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதுதான் அனைவரிடமும் உள்ள முக்கியக் கேள்வி.

உலகமயமாக்குதலின் பயன்கள் கிராமப்புற இந்தியாவையும் சென்று அடைந்திருப்பது தெளிவு. பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக் கணிப்புகளில் இந்தியாவின் ஏழ்மை விகிதம் கிராமப்புறங்களில் 37.3 சதவிகிதத்தில் இருந்து 28.3 சதவிகிதமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்று வேலைவாய்ப்பும், குறிப்பாக மகளிர் வேலைவாய்ப்பு கிராமப்புறங்களில் அதிகரித்து இருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகி உள்ளது.

கிராமப்புறங்களில் வளர்ச்சி இருந்தாலும், அது உணரும்படியாக இல்லாததற்குக் காரணம் மாற்றம் மிக மெதுவாக நடைபெற்று வருவதுதான். வளர்ச்சியை வேகப்படுத்துவதுதான் நம்முன் இருக்கும் சவாலாகும். இதற்கு முக்கியமாக கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள், நல்ல கல்வி, கூடுதலான வருவாய் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

இந்திய கிராமங்களில் குறைவான தொழில் முதலீடு, குறைந்த தொழில்நுட்ப வசதி, சந்தையை தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவைதான் தடைக்கற்களாக உள்ளன.

ஒதுக்கப்பட்ட கோடிகள் எங்கே?

  • கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 7 லட்சம் கிராமங்களுக்காக ரூ. 1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 88 ஆயிரம் கோடியும்,
  • குடிநீர் வசதிக்காக ரூ. 21 ஆயிரம் கோடியும்,
  • தரிசு நில மேம்பாட்டுக்காக ரூ. 5 ஆயிரம் கோடியும்,
  • பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்காக ரூ. 6,700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சராசரியாக இதன் மூலம் 7 லட்சம் கிராமங்களுக்கும் தலா ரூ. 17 லட்சம் கிடைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பள்ளி, குடிநீர் வசதி, கிராமச் சாலைகள் எளிதாக ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், உண்மையில் அவ்வாறு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன? பதில் கிடைக்க வேண்டும்.

கிராமப்புற இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்கி பாரத் நிர்மாண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 1.74 லட்சம் கோடி செலவில் 2009-ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

இத் திட்டத்தின் மூலம் கூடுதலாக நீர்ப்பாசன வசதியுடன் ஒரு கோடி ஹெக்டேர் பயிர் நிலத்தை உருவாக்கவும், 1,000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களுக்கு இணைப்புச் சாலை வழங்கவும், 60 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரவும் இன்னும் குடிநீர் வசதி பெறாத 74 ஆயிரம் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வசதி செய்து தரவும், மின் இணைப்பு இல்லாத 2.3 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும், தொலைபேசி வசதி இல்லாத 66,822 கிராமங்களுக்குத் தொலைபேசி வசதி செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நமது தவறுகள்

சாலைகளைப் போடுகிறோம். ஆனால், அவற்றைப் பராமரிக்க நிதி ஒதுக்குவதில்லை. மின்சாரத்தை வழங்குகிறோம். ஆனால், மின் திருட்டைத் தடுக்கவோ, மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கவோ தவறுகிறோம். வீடுகளைக் கட்டித் தருகிறோம். ஆனால், அவை குடியிருப்பதற்கு தகுதியில்லாத அளவுக்குக் கட்டப்படுகின்றன.

நீர்ப் பாசனத் திட்டங்களை உருவாக்குகிறோம். ஆனால், அதில் மக்கள் பங்களிப்பு இல்லை.

எல்லாவற்றையும்விட நாம் ஒதுக்கும் நிதியை தவறாக செலவிடுபவர்கள் மற்றும் முறைகேடு செய்பவர்களைக் தண்டிப்பதில்லை. அதோடு ஊழல், நிர்வாகச் சீர்கேடு மற்றும் திறமையின்மை ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டோம்.

புதிய நிர்வாக முû

மாநில அரசு என்பது மிகப் பெரிய நிர்வாகம் ஆகவும், ஊராட்சி மிகச் சிறிய நிர்வாகமாகவும் இருப்பதால் இடைப்பட்ட ஒரு நிர்வாகம் தேவை. எனவே ஒவ்வொரு 10 லட்சம் மக்கள்தொகைக்கும் ஒரு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான 10 உறுப்பினர்களை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், சாலைகள், குடிநீர் போன்ற அனைத்துத் துறைகளையும் மாவட்ட நிர்வாகம் கவனிக்கும். தேவைப்படும் நிதியை அரசு ஒதுக்கும். இதை நடைமுறைப்படுத்த அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை.

மத்திய, மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் போதும் என்றார் அமைச்சர் ப. சிதம்பரம்.

—————————————————————————————————————————

ஊழல் விசாரணை பணிகளுக்கும் “அவுட் சோர்சிங்’ மகாராஷ்டிராவில் புரட்சி

மும்பை: நிறுவனங்கள், வங்கிகள் உட்பட பல நிறுவனங்களும், தங்கள் பணிகளில் சிலவற்றை இன்னொரு நிறுவனத்திடம், ஒப்படைத்து, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம்; ஆனால், அரசு ஊழியர் நடத்தை, ஊழல் குறித்து விசாரிக்கும் பொறுப்பை, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வது பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், இப்படி ஒரு புரட்சியை செய்துள்ளது மகாராஷ்டிர அரசு.

இதனால், ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை கொந்தளித்துள்ளனர். இந்த அமைப்பு, முழு சுதந்திரமாக இயங்கும். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் தலைமையில் இயங்கும். அவருக்கு உதவ, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு சம்பளம் தரப்படும். இந்த அமைப்பிடம், எல்லா துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விவகாரங்களும் ஒப்படைக்கப்படும். அதை விசாரித்து, அரசின் ஊழியர் நலத்துறைக்கு அறிக்கையை அனுப்பிவிடும். அதன் பேரில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை, ஊழியர் நலத்துறை வெளியிட்டவுடன், ஊழியர்கள் பலரும் கொதித்தனர். “அரசுக்கு தொடர்பே இல்லாத மாஜி அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தினால், நியாயம் கிடைக்காது. மேலும், ஊழல் தான் அதிகரிக்கும்’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் சொல்வதை ஏற்க அரசு தயாரில்லை. பல துறைகளில் உள்ள விசாரணை பிரிவுகளை அரசு கலைத்துவிட்டது. “ஊழியர்கள் பற்றிய எந்த ஒரு விசாரணையும் புதிய அமைப்பிடம் தான் ஒப்படைக்க வேண்டும்’ என்று துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

——————————————————————————————————-
தூய்மையாகுமா பொதுவாழ்க்கை?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

“”முறையற்ற செயல்களை மேற்கொண்டு குடிமக்களை வருத்தும் அரசன் கொலைகாரர்களைவிட கொடியவன்.” – என்ற குறட்பாவின்படி ஆட்சியாளர்களுடைய நேர்மையின் கீழ்தான் நாடு நலம் பெறும்.

ஆளவந்தவர்களும் நிர்வாகத்தில் இருப்போரும் மக்களுக்குப் புகார் அற்ற தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும்.

இன்றைக்கு பொது வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றும் தங்களால், தங்களுக்காக ஆளப்படுகின்ற ஆட்சி என்ற நோக்கிலும் அரசை நடத்துகின்றனர்.

இந்த அவலப்போக்கை மாற்ற லோக்பால் மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் ஆகாமல் நின்றுபோனது. ஆனால் ஒப்புக்கு நாடாளுமன்றத்தில் பலமுறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக மேல்தட்டில் இருக்கின்றவர்களையும் தட்டிக் கேட்கின்ற மசோதா இன்றைய சூழலில் அவசியம் தேவை. பொது வாழ்வில் தூய்மையை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான அரசியல் வளரவும் இம்மசோதா வழிசெய்யும்.

பங்குபேர ஊழல், சர்க்கரைப்பேர ஊழல், டெலிகாம் ஒப்பந்த ஊழல், ஹவாலா ஊழல் என்று தொடங்கி இந்தியாவில் சர்வநிலையிலும் புரையோடிவிட்டது.

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது கூறப்பட்ட ரூ. 950 கோடி தீவன ஊழல் இந்தியாவையே ஆட்டி வைத்தது.

முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மருமகளுக்கு சட்டத்திற்குப் புறம்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களை சதீஷ் சர்மா ஒதுக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றம் மூலம் உண்மை எனத் தெரியவந்தது. இன்று சரத்பவார் மீது கோதுமை இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்திய வரலாற்றில் ஊழல்கள் தொடர் கதையாக இருக்கின்றன. பஞ்சாப் மாநில அன்றைய முதல்வர் பிரதாப் சிங் கைரான் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரு பிரதமராக இருந்தபோது அதுபற்றி விசாரிக்க எஸ்.ஆர். தாஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.

1958-ஆம் ஆண்டு பெரோஸ் காந்தி மக்களவையில் முந்திரா ஊழல் பிரச்னையை கிளப்பினார். ரூ. 1.25 கோடி மதிப்புள்ள பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் முறைகேடாக விற்பனை செய்தது சம்பந்தமாக ஊழல் குற்றச்சாட்டை பெரோஸ் காந்தி பேசினார். இது சம்பந்தமாக ஆவணங்களை மக்களவையில் வைக்கும்படி வேண்டி அன்றைய மக்களவைத் தலைவர் அனந்தசயன அய்யங்காரிடம் கோரினார். ரகசியக் கோப்புகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அய்யங்கார் முந்திரா ஊழல் சம்பந்தமான ரகசியக் கோப்புகள் அனைத்தையும் அவையில் வைக்கும்படி தீர்ப்பு வழங்கினார்.

இதன் பின்பு, பண்டித நேரு ஆணையின் பேரில் அன்றைய பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சி. சுக்லா இதுகுறித்து விசாரணை நடத்தினார். இறுதியில் பங்கு பேர ஊழலில் முந்திரா சம்பந்தப்பட்டுள்ளார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியில் இருந்து விலகினார். அம்மாதிரி கிருஷ்ணமேனன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிரதாப் சிங் கைரோனுக்குப் பிறகு பக்ஷி குலாம் முகமது மீதும், 1957-ல் கேரளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் அரசு, ஆந்திரத்திலிருந்து அரிசி வாங்கப்பட்ட ஊழல் முதல் இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் வரை செய்த ஊழல்களை ஒரு நீண்ட பட்டியலாக இடலாம்.

புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வி. காமத் மூன்றாவது மக்களவையில் சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் சீராஜின் ஊழலை அம்பலப்படுத்தினார். ஐந்தாவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய வணிகத் துறை அமைச்சர் எல்.என். மிஸ்ரா ஏற்றுமதி உரிமம் வழங்கியதில் ஊழல் செய்துள்ளார் என்ற பிரச்னை எழுப்பப்பட்டது. அன்றைய மக்களவைத் தலைவர் ஜி.எஸ். தில்லான், இது சம்பந்தமான ரகசிய ஆவணங்களைப் பார்வையிட அனுமதி வழங்கினார். இறுதியில், இந்தப் பிரச்னையில் ஊழல் நடந்தது என்று நாடாளுமன்றம் உறுதிபட கூறியது.

பாரத ஸ்டேட் வங்கியில் நடந்த நகர்வாலா ஊழலை அனைவரும் அறிவார்கள். ரூ. 60 லட்சம் தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்தினால் அந்த வங்கியின் அதிகாரி மல்கோத்ரா மூலம் வழங்கப்பட்டது என்ற பிரச்னை நாடு முழுவதும் எதிரொலித்தது.

இந்தச் சூழலில் நகர்வாலா மர்மமாக இறந்துவிட்டார். இந்தக் கிரிமினல் வழக்கு 32 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. யார் குற்றவாளி என்று இதுவரை நீதிமன்றம் தீர்ப்பு தரவில்லை என்பது வேதனையான செய்தி ஆகும். அந்தப் பணம் கொடுத்த வங்கி அதிகாரி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சஞ்சய் காந்தியின் மாருதி கார் தொழிற்சாலையில் பணியில் அமர்த்தப்பட்டார்.

ஐந்தாவது மக்களவையில் மாருதி கார் ஊழல் சம்பந்தமாக பல சட்ட விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்தப் பிரச்னை சம்பந்தமான விவரங்களைத் தொழில் அமைச்சகம் மக்களவையில் வைக்கவிடாமல் தடுத்தது என்ற குற்றச்சாட்டு அன்றைய இந்திரா காந்தி மீது சுமத்தப்பட்டது. அவசர நிலை காலத்தில் ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு ஷா கமிஷன் அமைக்கப்பட்டது.

ஏ.ஆர். அந்துலே, “”இந்திராகாந்தி அறக்கட்டளை அமைப்புக்கு’ பணம் வசூல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இது சம்பந்தமான ஆவணங்கள் மக்களவையில் வைக்கப்பட்டது. இறுதியாக நீதிபதி லின்டன் தீர்ப்பின்படி மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து அந்துலே விலகினார்.

பரபரப்பான போபர்ஸ் ஊழல் நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தது. இதனால் ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை மக்கள் அகற்றினார்கள். இந்த பேரத்தில் அவர் ரூ. 64 கோடி கமிஷனாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. ஒன்பதாவது மக்களவையில் தேசிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது போபர்ஸ் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டது.

போபர்ஸ் ஊழல் விசாரணை முடிவுறாத நிலையில் இன்றைக்கும் நிலுவையில் உள்ளது. குவாத்ரோச்சியை ஆட்சியில் உள்ளவர்கள் தற்போது பாதுகாக்கின்ற நிலை.

செயிண்ட் கிட்ஸ் பிரச்னை, வீட்டு வசதி ஊழல், ஜெ.எம்.எம். ஊழல், யூரியா இறக்குமதி ஊழல், ஹெக்டே மீது கர்நாடகத்தில் நில மோசடி குற்றச்சாட்டு என ஊழல்கள் பட்டியலும் நீண்டு கொண்டுள்ளன.

10-வது மக்களவையில் பங்கு வியாபாரி ஹர்ஷத் மேத்தா நேரிடையாக பல அரசியல் தலைவர்களிடம் பணம் கொடுத்தேன் என்று கூறினார். இறுதியாக, இது சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடப்பட்டது. இப் பிரச்னை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

சர்க்கரை பேர ஊழல், டெலிகாம் ஊழல் விவகாரம் போன்றவை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசப்பட்டன. இது சம்பந்தமாக, அன்றைய அமைச்சர் சுக்ராம் டெண்டர்களை கடைசி நிமிடத்தில் மாற்றி ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ. 20,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெரும் புள்ளிகளும், தொழிலதிபர்களும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாக 5729 நபர்கள் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இன்றும் அந்த ரகசியப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தவறு செய்யும் ஆட்சியாளர்களை விசாரிக்க “லோக்பால்’ போன்ற அமைப்பு தேவை என வலியுறுத்தப்பட்டது. 1960-ம் ஆண்டு கே. சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஊழல்கள் அதிகமாகிப் பரவி வருவதைப்பற்றியும் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் அரசுக்குப் பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தக் குழுக்கள் அனுமந்தையா, வெல்லோடு உன்னிநாதன், மாத்துர் போன்றோர் தலைமையில் அமைக்கப்பட்டன. 1966-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் மக்கள் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஊழல், தவறுகளைப் பற்றிய புகார்களை ஆராய ஓர் அமைப்பு தேவையென வலியுறுத்தியது.

“லோக்பால்’ போன்ற அமைப்பு செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் பிரதிநிதிகள் இதயசுத்தியோடு அணுகவில்லை என்பதே ஆகும்.

மக்கள் மத்தியில் லோக்பால் பற்றி பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டும் நடைமுறைக்கு வராத அளவில் அணை போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம்தான் வலுத்துள்ளது.

“”இதோ புலி வருகிறது…” என்பது போன்று லோக்பால் மசோதாவின் கதையும் உள்ளது. லோக்பாலுக்கு எப்போது விடிவுகாலம் வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in abuse, Chidhambaram, Collector, Commissioner, Corruption, Court, Democracy, Economy, Education, Election, Employment, Finance, Gandhi, GDP, Governor, Govt, Growth, Honesty, IAS, Improvements, Inflation, Influence, infrastructure, IPS, Jobs, Judge, Jury, Justice, kickbacks, Law, Lecture, Lok Ayuktha, Lokpal, Metro, Money, Officer, Order, Party, Planning, Police, Politics, Poor, Poverty, Power, Public, Ramamurthy, Ramaraj, Recession, Republic, responsibility, revenue, Rich, Rural, service, Suburban, Wealthy | Leave a Comment »

No Smoking – Healthcare advisory & Law

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

புகைக்கப் புகைக்க…

உலகில் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களுக்குப் பலியாகின்றனர். புகை பிடிப்பதால் உடலில் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இந்த நிலையில் “நாட்டில் 40 சதவீத சுகாதாரப் பிரச்சினைகள் புகையிலை மூலமே ஏற்படுகின்றன. அதனால் புகையிலை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டியது அவசியமாகும்’ என்று சுகாதார அமைச்சர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதற்காக தனி ஆணையம் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் பஸ் நிறுத்தங்கள், உணவுக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் புகை பிடிப்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இவ்வாறு புகை பிடிப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், மூச்சுத் திணறல் ஆகியன புகையிலை காரணமாக ஏற்படும் முக்கிய நோய்கள். இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று, வடகிழக்கு மாநிலங்களில் புகையிலைப் பொருள்கள் பெருமளவு பயன்படுத்தப்படுவதால் புற்று நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

களைப்பைப் போக்கி உற்சாகம் ஏற்படுத்துவதால் புகை பிடிப்பதாகப் பலரும் கூறுகின்றனர். ஆனால் அறிவியல் ரீதியில் இது நிரூபிக்கப்படவில்லை.

புகைப் பழக்கத்துக்கு உலகில் சுமார் 130 கோடி பேர் அடிமையாகி உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் மாணவரிடையே இது பரவலாக வளர்ந்து வருவது மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. கல்வி நிலையங்களின் வாயில்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் இவை தாராளமாகக் கிடைப்பதால், கிடைக்கும் நேரத்தில் புகைப்பது அவர்களுக்கு எளிதாகி விட்டது.

இது போதாதென்று தொலைக்காட்சிகளில் புகை பிடிப்பது தொடர்பான விளம்பரங்கள் மறைமுகமாக இடம்பெறுகின்றன. அதுவும் பிரபலங்கள் மூலம் அவை விளம்பரப்படுத்தப்படுவதால் இளைஞர்களை அது எளிதில் தொற்றிக் கொள்கிறது. இத்தகைய விளம்பரங்களைத் தடுக்குமாறு செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்குப் பல முறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளது மக்கள் ஆரோக்கியத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு எவ்வளவு அக்கறை உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. புகையிலை தொழில் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதால் இவ்வாறு கண்டும் காணாததுபோல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்க கோடிக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்துடன் குட்கா போன்ற புகையிலைப் பொருள்களும் பெருமளவு புழக்கத்தில் உள்ளன. இவற்றின் உறைகள் மீது மண்டை ஓடு, எலும்புக்கூடு எச்சரிக்கையுடன் படங்களை வெளியிட்டு நுகர்வோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், “குடி குடியைக் கெடுக்கும், குழந்தைகளைப் பட்டினி போடும்’ என்ற வாசகங்கள் மதுக்கடைகளின் முன்னே உள்ளன. இருந்தும் மது விற்பனை மாதத்துக்கு மாதம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. சிகரெட் பிடிப்பது உடலுக்குத் தீங்கானது என்ற வாசகம் பாக்கெட்டுகளில் கண்ணுக்குத் தெரியாத அளவில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் காரணமாக விற்பனை குறைந்ததாகத் தெரியவில்லை. எனவே, உற்பத்தி, விற்பனை நிலையிலேயே அவற்றைக் கட்டுப்படுத்தினாலன்றி எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.

Posted in Anbumani, cancer, Cigar, Cigarette, Enforcement, Freedom, Govt, Healthcare, Law, Passive, pipe, Public, Rajini, Rajni, smoking | Leave a Comment »

Free education & other Tamil Nadu Budget policy analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

கல்லூரிவரை கல்வி இலவசம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள பல அறிவிப்புகள், ஏற்கெனவே முதல்வர் கருணாநிதியால் பல்வேறு நிகழ்வுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்டவை.

உதாரணமாக, மனவளர்ச்சி குன்றியோருக்கும் ஊனமுற்றோருக்கும் உதவித்தொகை, புதிதாக இரு மருத்துவக் கல்லூரிகள், மேலும் 5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க ரூ.100 கோடி, சிறுபான்மையினர் நலன்காக்க தனி இயக்ககம் போன்றவை.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் திமுக அரசில் எப்போதுமே உள்ளவை. மற்ற திட்டங்கள் நிர்வாக வளர்ச்சி சார்ந்தவை. இருப்பினும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு மேலதிகமான கவனம் தரப்பட்டுள்ளது.

அரசுக் கலைக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏழைகளுக்கு இலவச உயர்கல்வி இன்றைய இன்றியமையாத் தேவை. இந்தச் சலுகையை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தினால் இத்திட்டம் நிறைவானதாக இருக்கும்.

பிளஸ்2 படிப்பு வரை தமிழ் வழியில் படிப்போருக்கு தேர்வுக் கட்டணம் மிகக் குறைவானது என்றபோதிலும் அதையும்கூட செலுத்த முடியாத ஏழைகள் பலர் கிராமங்களில் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலில் அரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் ஏழைகளுக்காகத்தானோ என்ற நிலைமை உள்ளதால் இந்தத் தேர்வுக் கட்டண ரத்து பயன் தரும்.

கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் சிறப்புப் பயிற்சிக்காக ரூ.1.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், இப் பயிற்சியில் மீண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கலாம். பதிலாக, சிறப்பாகச் செயல்படும் தனியார் பள்ளி ஆசிரியர்களை இத் திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய ஆசிரியர்களின் புதிய பயிற்றுமுறையினால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

பள்ளி, கல்லூரிப் பேருந்துகளுக்கு வரி குறைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கு இந்த நிர்வாகங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் அதிகமாக உள்ளன. வரியைக் குறைப்பதுடன் பள்ளி, கல்லூரி வாகனத்தில் செல்லும் மாணவர்களுக்கான கட்டணங்களையும் கணிசமாகக் குறைக்க யோசனை கூறினால் பெற்றோருக்குப் பயன் கிடைக்கும்.

அத்தியாவசியப் பண்டங்களின் மீது வரிக் குறைப்புகள் ஏதும் நேரடியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் வழங்க முடியும் என்று அரசு நம்புகிறது. இது எந்த அளவுக்குப் பயன்தரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சத்துணவில் அளிக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களில் முட்டைகள் சிறியனவாகவும் அழுகியும் இருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. முட்டைக்குப் பதிலாக சத்துமாவு உருண்டை கொடுக்கலாம். இந்த சத்துமாவு உருண்டைகளை அந்தந்த சத்துணவுக் கூடங்களைச் சேர்ந்த குழந்தைகளின் தாய்மார்களைக் கொண்ட சுயஉதவிக் குழு மூலம் தயாரித்துப் பெறலாம். இந்தத் தாய்மார்களையே கோழி வளர்ப்பின் மூலம் முட்டையையும் வழங்கச் செய்யலாம்.

மருந்துகளின் விலை உயர்வும், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளன. இதனை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த முயற்சியும் அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

Posted in Analysis, Budget, College, Commerce, Dean, DMK, doctors, Education, Educators, Engineering, Expenses, Finance, Free, Funds, Government, Govt, Guides, Health, Healthcare, Income, Instruction, Instructors, Karunanidhi, Loss, medical, Medicine, Medium, Op-Ed, Policy, Politics, Private, Professors, Profit, Public, Schools, Students, Tax, Teachers, Technology, TN, University, Votes | 3 Comments »

Indian Budget 2007-08 : Details, Information, Analysis, Perspectives

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 28, 2007

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, விவசாயம் மற்றும் சுகாதாரத்துக்கு அதிக ஒதுக்கீடு

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், வரவு செலவுத் திட்டத்தில் விவசாய, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளார்.

இந்திய அரசின் 2007-08 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக தனது பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து வெளியிட்டார்.

விவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு
விவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

இந்த வரவு செலவு திட்டத்தில் விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுகளுக்கான ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. விவசாயத் துறையின் வளர்ச்சியை 2.3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பட்ஜெட் ஏமாற்றமே அளிக்கிறது என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மின்சாரம் போன்ற துறைகளில் உற்பத்தியை பெருக்க எந்த திட்டமும் அதில் இல்லை என தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

பணவீக்கத்தை குறைக்க பட்ஜெட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.

செல்வந்தர்களிடையே வரிகளைக் கூட்டி கூடுதலான ஆதரங்களை திரட்ட திட்டங்கள் ஏதும் இந்த அறிக்கையில் இல்லை என்றும், தொடர்ந்து நேர்முக வரிகளை அதிகப்படுத்துவதில் அரசுக்கு தயக்கம் இருப்பது தெரிகிறது எனவும் பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஒட்டு மொத்தமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்து வருகிறது எனக் கூறினாலும், நாட்டின் ஆதாரமான வேளான் துறையில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.


BBC Specialஎழுச்சியுறும் இந்தியா

 

எழுச்சியுறும் இந்தியா
எழுச்சியுறும் இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் அதி வேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது.

இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது.

குடும்பம் நிச்சயிக்கும் திருமணங்கள் குறித்த பெட்டகம்


இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் உலகில் மூன்றாவது இடத்தை எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1991ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவால் தொடங்கப் பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சிறப்பானதொரு சாட்சி கோயம்புத்தூர்.

கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 1

கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 2


இந்தியாவின் இந்த வேகமான பொருளாதார வளர்ச்சி அதன் அண்டைய நாடுகளிலும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

அந்த வகையில் அது இலங்கையின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.


குறையில்லை; நிறைவுமில்லைபட்ஜெட் என்றவுடன் வரி உயர்வும் வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வும்தான் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இரு பொது விஷயங்கள்.அண்மைக்காலமாக அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், வருமான வரிவிலக்கு வரம்பும் கூடுதலாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களிடையே இருந்தது.மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டது. இதுவரை ஒரு லட்சம் ரூபாயாக இருந்த வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.1.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் வரி செலுத்துவோருக்கு ரூ.1000 வரை பயன் கிடைக்கும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டாலும், வருமான வரியுடன் செலுத்த வேண்டிய கல்வித் தீர்வை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் நிதியமைச்சர் குறிப்பிடும் பலன் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்தாவிட்டாலும்கூட, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் ஒவ்வொரு தனி மனிதனின் வருமானத்தில் பெரும்பகுதியை விழுங்குவதைக் கருத்தில்கொண்டு, இச்செலவுகளில் குறிப்பிட்ட வரம்பு வரை 20 சதவீத வருமான வரிக் கழிவு அளித்திருந்தால் மாத வருவாய்ப் பிரிவினருக்கு மகிழ்ச்சி தருவதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கும்.சந்தை வணிகத்தில் நிரந்தர வருமான வரி எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும் என்பது இந்த பட்ஜெட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க, வரவேற்புக்குரிய மாற்றம். இதனால் கருப்புப் பணப் புழக்கம் குறையும். இருப்பினும், ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட எந்த வர்த்தகமும் காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும் என்ற கட்டாய நிலைமையும் ஏற்பட்டால்தான் சந்தையில் கருப்புப் பணத்தின் புழக்கம் முற்றிலும் மறையும்.

இந்த பட்ஜெட்டில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வேளாண்மையில் 4 சதவீத வளர்ச்சிக்கு உறுதி கூறப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் தோட்டப் பயிர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு கவனம் மற்ற வேளாண் பயிர்களுக்கு அளிக்கப்படவில்லை. அரிசி, கோதுமை மீதான முன்ஒப்பந்த பேரங்கள் இனி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது நடைமுறையில் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் பயன் அமையும்.

பாசன மேம்பாட்டுக்காக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பல பாசனத் திட்டங்களை நடப்பாண்டில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலத்தை பாசனத் திட்டங்களில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட கூடுதலாக 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 8-ம் வகுப்பு முதலாக கல்வி உதவித்தொகை வழங்கும் முடிவும் மகிழ்ச்சியானவை.

சிகரெட் மீதான வரி வழக்கம்போல உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், புகையிலை இல்லாத பான்மசாலாவுக்கான வரியை 66 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக குறைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். புகையிலையைவிட மோசமானது அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள். இவை புற்றுநோய்க்கு காரணமானவை. “மவுத் ரெப்பிரஷர்’ என்ற பெயரில் இவை மீண்டும் சந்தையில் அதிக அளவில் நுழைவதற்கு தற்போதைய வரிக்குறைப்பு ஆதரவாக அமைந்துவிடும்.

ஜவுளி மேம்பாட்டு நிதியில் கைத்தறியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கைத்தறிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், அதற்கான கருவிகளை வரியின்றி இறக்குமதி செய்யவும் அதற்கான மானியக் கடன் பெறவும் நெசவாளர்களுக்கு எளிதாக இருக்கும். தமிழக நெசவாளர்கள் இதை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை விளக்கி, பயன்படுத்திக்கொள்ளச் செய்யும் பொறுப்பு தமிழக கைத்தறித் துறைக்கு உள்ளது.

சூரியகாந்தி சமையல் எண்ணெய்க்கு 15 சதம் வரி குறைப்பும் பெட்ரோல் டீசலுக்கான தீர்வையை 2 சதவீதம் குறைத்துள்ளதும் இன்றியமையா பண்டங்களின் விலையைக் குறைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


வருமான வரிஎன்.வி.பாலாஜி (Dinamani Op-Ed pages)அடுத்த நிதியாண்டுக்கான (2007-08) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. பட்ஜெட் என்பது அடுத்த ஓராண்டுக்கான நிதியாதாரங்களை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டமிடலாகும். இந்தத் திட்டமிடல் அரசு மக்களுக்குத் தெரிவிக்கும் மிகமுக்கியமான சாதனமும் கூட . இது அரசியல் சட்டம் நமக்களித்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் பட்ஜெட் என்ற ஒன்று இல்லாதபோது அரசு தன் செலவினங்களைக் கூட செய்ய முடியாமல் போகும்.பட்ஜெட்டின் மூலம் அப்படி என்னதான் நிதியாதாரங்கள் வந்து விடுகின்றன? முக்கிய ஆதாரம் மத்திய அரசு விதிக்கும் வரிகள். 2006-07 ஆம் ஆண்டிற்கான மத்திய வரிகள் மட்டும் 4.4 லட்சம் கோடிகள். இதில் தனிநபர் வருமான வரி 76 கோடியாகும். கம்பெனிகளுக்கான வருமான வரி 133 லட்சம் கோடியாகும். ஆக வருமான வரி சட்டத்தின் மூலம் அரசு மக்களிடமிருந்து பெறுவது 210 லட்சம் கோடியாகும். இந்த வருமான வரிக்கும் ஒரு சரித்திரம் உண்டு.சிப்பாய் கலகத்தை அடக்க அரசு அதிக செலவை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விளைவு, மிகச்சிறிய அளவில் மக்களின் வருமானத்தின் மீது வரி விதிக்கும் சட்டம் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்டது. முதல் உலகப்போர் காலகட்டத்தில் அது மேலும் விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின், வருமான வரிச் சட்டம் (1961) உருவெடுத்தது.இந்த வருமான வரிச் சட்டத்தின் மூலம் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வருமானங்கள் பல்வேறு பிரிவுகளாக, சம்பளம், வீட்டு வாடகை, தொழில் மூலம் ஈட்டும் லாபம், முதலீட்டிலிருந்து திரட்டும் வருவாய், இதர பிரிவு என தனித்தனியாகக் கணக்கிடப்படுகிறது.இப்படி ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வரும் வருமானத்துக்கு சில கழிவுகளுக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. கழிவுகளுக்குப் பின் உள்ள நிகர வருவாய் ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த வருவாயிலிருந்து பல்வேறு பொதுக் கழிவுகள் பெறுவதற்கான வழி வருமான வரிச் சட்டத்தில் உள்ளது. இந்த நிகர வருமானமே மொத்த வருவாயாகக் கொண்டு அதன் மீது வரி விதிக்கப்படுகிறது.


பயனற்ற மானியம்“ஏறினால் இறங்குவதில்லை’ – (17-2-07) தலையங்கம் படித்தேன்.விலைவாசி உயர்வுக்கு பொதுவான காரணம் பணவீக்கம் என்பதை மறுக்க இயலாது.அதேசமயம் உணவு உற்பத்தி சாராத மற்ற தொழில் பொருள்களின் கொள்ளை லாப விலை நிர்ணயமும் பணவீக்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.எனவே உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகுக்காமல், வேளாண் விளைபொருள்களுக்கு விற்பனை நிலையில் மானியம் வழங்குவதும், பிற பொருள்களுக்கு உற்பத்தி வரி, கூடுதல் வரி ஆகியவற்றில் சலுகை வழங்குவதும் உரிய பயனைத் தராது.சீனாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதற்கும், பணவீக்கம் குறைவாக இருப்பதற்கும் முக்கியக் காரணமே, அவர்களின் உற்பத்திச் செலவு கட்டுக்குள் அடங்கி இருப்பதுதான்.எனவே, விலைவாசி கட்டுக்குள் இருக்க வெறும் மானியங்களும் வரிக் குறைப்புகளும் உதவாது.

சோம. நடராஜன், கரூர்.


ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: தா. பாண்டியன்திருவாரூர், மார்ச் 2: விவசாயத் துறை மேம்பாட்டுக்குக் குறிப்பிடத்தக்க அறிவிப்பு இல்லாத மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:விவசாயத் துறையின் சிக்கல்களை தீர்க்கும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயத் துறைக்குப் போதுமான முக்கியத்துவத்தை தரவில்லை.மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்ட விவசாயத் துறைக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு என்பது, விவசாயத்துக்குக் கடன் அளிக்குமாறு நிதி நிறுவனங்களை வற்புறுத்தும் வழிகாட்டல் மட்டுமே. இந்தக் கடன் முழுமையாக கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவை வரியை உயர்த்தி, அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் தொகை மட்டுமே கல்வித் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்குக் கடந்த ஆண்டை விட ரூ. 13 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியைக் குறைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி தேசிய விவாதம் மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வைக் கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கான மத்திய அரசின் தவறான கொள்கையைக் கண்டித்தும் மார்ச் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் தா. பாண்டியன்.


அரசின் வரி வருவாய் அதிகரித்ததால் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்பட்டது நிதிப் பற்றாக்குறை: சிதம்பரம்
புதுதில்லி, மார்ச் 2: செழிப்பான பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசின் வரி வருவாய் அதிகரித்தது ஆகிய சாதக அம்சங்களால், நிதிப் பற்றாக்குறையின் அளவை திட்டமிட்டபடி கட்டுப்படுத்த முடிந்துள்ளது என சிதம்பரம் கூறியுள்ளார்.2006-07 நிதியாண்டுக்கு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3.8 சதவீதமாக கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிடப்பட்டதை விட சிறப்பாக, அது 3.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதேபோல வருவாய் பற்றாக்குறையை 2.1 சதவீதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதுவும் 2 சதவீதமாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், அடுத்த நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை மேலும் குறைந்து மொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவீதமாகவும், வருவாய் பற்றாக்குறை 1.5 சதவீதமாகவும் குறையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.பற்றாக்குறையின் அளவு குறைவதால், அரசு கடனை நம்பியிருக்க வேண்டிய அளவு குறைகிறது. நடப்பு நிதியாண்டின் முடிவில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.83,436 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் இது ரூ.71,478 கோடியாகக் குறையும். இதேபோல நிதிப் பற்றாக்குறை 1,52,328 கோடியில் இருந்து 1,50,948 கோடியாகக் குறையும் என சிதம்பரம் கூறியுள்ளார்.

2007-08 நிதியாண்டுக்கு செலவு ரூ.6,80,521 கோடியாக இருக்கும், வரவு ரூ.4,86,422 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


நாய்களையும் நாய் வளர்ப்போரையும் தவிர யாரையும் மகிழ்விக்காத மத்திய பட்ஜெட்எஸ். குருமூர்த்தி – தமிழில்: லியோ ரொட்ரிகோநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கும் வேளாண் துறை சந்தித்துவரும் நெருக்கடிகளுக்கும் தீர்வுகாணும் திட்டம் எதையும் அளிக்காத தனது படுதோல்வியை 2007~08-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மூடிமறைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். சிந்தனை வறட்சியை வார்த்தை ஜாலத்தால் மூடி மறைத்திருக்கும் அந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை என்பது அதை சாதாரணமாகப் படித்தாலே தெரிகிறது. தனியார் நிறுவன அதிகாரிகள் தமது வரவு ~ செலவுக் கணக்கில் லாபத்தை அதிகமாகக் காட்டுவதற்கு சித்து வேலைகள் செய்வதைப்போலவே, நிதி அமைச்சரும் தனது சாதுர்யத்தைக் காட்டி ஏமாற்றி இருக்கிறார் என்பது பட்ஜெட்டை நுணுக்கமாக ஆராயும்போது தெரிந்துபோகிறது.கவர்ச்சிகரமான வார்த்தைகளையும் திருவள்ளுவரின் குறளையும் பயன்படுத்தி, அது ஏதோ வேளாண்மை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் நிதி அமைச்சர். வெளிப்படையாக தகவல்களைக் கூறுவதற்குப் பதில், பலவற்றை மூடிமறைத்து தனது சாதுர்யத்தை அவர் காட்டியிருப்பது பட்ஜெட்டை கூர்ந்து நோக்கும்போது தெரிந்துவிட்டது. தனது உரையில் 43-வது பத்தியில் இருந்து 65-வது பத்தி வரையிலான பகுதியில், வேளாண் துறைக்கான 18 அம்சத் திட்டத்தைப் பற்றி அறிவித்துள்ளார். அவற்றில் இரு அம்சங்கள் தொடர்பாகக் கூறுகையில், ஒன்றைப் பற்றிய தகவல்களை எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் மற்றொன்றைப் பற்றிக் கூறுகையில், வேளாண்மை தொடர்பான அறிக்கையை ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.பயறு வகை சாகுபடி, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்பாக மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் 7 அம்சங்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவை; அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன; இரண்டே இரண்டு திட்டங்கள்தான் ~ கிராமப்புற ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம், நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்கும் திட்டம் ~ புதியவை. அதிலும்கூட, நீர் சேகரிப்புத் திட்டமானது ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் வெற்றிகரமாக அமல்படுத்திய திட்டமாகும். அதைப் பற்றி நினைவுகூராமல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.

உரத்துக்கு அளிக்கப்படும் மானியத் தொகையைக் கழித்துவிட்டுப் பார்த்தால், வேளாண்மைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகை ரூ.50,112 கோடிதான்.

2006~07-ம் ஆண்டு ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டால் வெறும் 25 சதவீதமே கூடுதல். ஆனால், தனது வார்த்தை ஜாலத்தின் மூலம் ஏதோ வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல மடங்கு அதிகரித்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.

அது மட்டுமல்ல; வங்கிகள் வழங்கும் கடன் தொகைகளை பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் சேர்த்து பெரும் தொகை போலக் காட்டியதன் மூலம், வேளாண்மைக்கு ஏராளமாக ஒதுக்கீடு செய்திருப்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.

ஏரி, குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர் ஆதாரங்களை மராமத்து செய்து, பராமரிக்க 3 ஆண்டுகளில் பட்ஜெட்டில் அவர் ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 100 கோடி ரூபாய். ஆனால், தமது உரையின் 47-வது பத்தியில், “”வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.16,979 கோடி செலவில் சிறப்புத் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுவருகிறது; அதில் ரூ.12,400 கோடியானது நீராதாரம் தொடர்பான திட்டங்களாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், நீராதாரம் தொடர்பான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ.100 கோடி மட்டுமே ஆகும். அதோடு, அது முழுமையாக செயல்படுத்தப்படவும் இல்லை. அதற்கான நிதியை நிதி அமைச்சர் வழங்கப் போவதில்லை; மாறாக உலக வங்கிதான் வழங்கப் போகிறது. அதிலும் தமிழ்நாடுதான் முதலாவதாக உலக வங்கியை அணுகி ரூ.2182 கோடி கடன் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் இன்னும் அதைப் பற்றி விவாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பட்ஜெட் உரையைப் படித்தால் ஏதோ ரூ.12,400 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக அந்தச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும்.

“நபார்டு’ வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் இவ்வாறே பட்ஜெட்டில் காட்டியிருக்கிறார். நிதி அமைச்சரின் உரைக்குக் கீழே புதைந்திருப்பதை ஆராயாமல் யாராலும் இதைக் கண்டுபிடிக்க முடியாது.

தனது பட்ஜெட் உரையில் 15 நிமிடங்களை வேளாண் துறையைப் பற்றிய திட்டங்களுக்கு ஒதுக்கிவிட்டதாக அவரே தனது உரையின் 65-வது பத்தியில் குறிப்பிட்டார். 2004~05-ம் ஆண்டில் வேளாண் வளர்ச்சி விகிதம் அமோகமாக இருந்தது. அந்த ஆண்டிலேயே வேளாண்மைத் திட்டங்களுக்காக தனது உரையில் 1635 வார்த்தைகளை ஒதுக்கி இருந்தார். ஆனால், வேளாண் துறை நெருக்கடியில் சிக்கி இருக்கும் இந்த ஆண்டில், 1899 வார்த்தைகளைத்தான் வேளாண் திட்டங்கள் பற்றி அறிவிக்க ஒதுக்கி இருக்கிறார். அப்பொழுதைவிட 264 வார்த்தைகள்தான் அதிகம்.

கடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்துகொண்டே செல்லும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசு முதலீடு குறைந்துகொண்டு செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகிய வேளாண்மைத் துறை தொடர்பான அதிமுக்கியமான பிரச்சினைகளை அவரது பட்ஜெட்டில் முழுமையாக ஆராயவே இல்லை.

2003~04-ல் உணவு தானிய உற்பத்தி 21.2 கோடி டன்களாக இருந்தது. ஆனால், அது 2006~07-ல் 20.9 கோடி டன்களாகக் குறைந்துவிட்டது. 2004~05-ம் ஆண்டு பட்ஜெட் உரையில், “”உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம்; இனி விவசாயிகள் கோதுமைக்குப் பதில் மலர் சாகுபடி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று, தனக்கு முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாளர்கள் கூறியதையே சிதம்பரமும் கூறினார். ஆனால், அடுத்த பதினெட்டே மாதங்களில் கோதுமையைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவு: விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிட்டன.

பணவீக்க விகிதம் அதிகரித்திருப்பதற்கு உலகச் சந்தையில் விலை அதிகமாக இருப்பதே காரணம் என்று கூறுகிறார்கள். உலகிலேயே அதிக அளவு கோதுமையைப் பயன்படுத்தும் நாடு, பல லட்சம் டன் கோதுமையை வாங்குவதற்காக உலகச் சந்தைக்குச் சென்றால் விலை ஏறாமல் குறையவா செய்யும்? விலைவாசிப் பிரச்சினையை நிதி அமைச்சர் வெறுமனே தொட்டுவிட்டுச் சென்றாரே தவிர, ஆழமாக அலசவில்லை.

நிதிச் சந்தையில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த 12 மாதங்களில் 4800 கோடி டாலர்களை விலைக்கு வாங்கியது குறித்து ஒரு வார்த்தைகூட அவர் தனது பட்ஜெட் உரையில் கூறவில்லை. ஒரு டாலருக்கு ஈடாக ரூபாயின் மதிப்பை ரூ.45 என்ற அளவில் நிலைநிறுத்தி வைப்பதற்காகவே டாலர்களை விலைக்கு வாங்கும் வேலையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. அதன் விளைவாக நிதிச் சந்தையில் பணப் புழக்கம் (ரூபாய்) அதிகரித்தது; இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் விலையும் இதர பொருள்களின் விலைகளும் அதனால் அதிகமாக உள்ளன. வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியதன் மூலம் நிதிச் சந்தையில் இருந்து ரூ.14,500 கோடியை ரிசர்வ் வங்கி ஒருபுறம் உறிஞ்சி எடுத்தது. அதே நேரத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை அதே அளவில் வைத்திருப்பதற்காக 700 கோடி டாலர்களை சந்தையில் இருந்து வாங்குவதற்காக ரூ.30,000 கோடியை நிதிச் சந்தையில் இறக்கியது. இப்படிப்பட்ட முரண்பாடான நடவடிக்கைகளால் எவ்வாறு பணவீக்க விகிதம் குறையும்? அதன் ஒட்டுமொத்த விளைவாக விலைவாசிகள் உயர்ந்தன. இதற்கு எல்லாம் காரணமே ஏற்றுமதியாளர் வட்டாரமே ஆகும். அவர்களின் நெருக்குதலால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது போலியாகக் குறைத்து அதாவது ரூ.45 ஆகக் காட்டப்பட்டுவருகிறது. அதாவது 35 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருக்க வேண்டியது, 45 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று காட்டப்பட்டுவருகிறது. அதுவே ஒரு டாலருக்கு ரூ.35 ரூபாய் என்ற நிலை இருக்குமானால் பணவீக்க விகிதமும் 5 சதவீதத்திலேயே இருந்திருக்கும்.

ஆக மொத்தத்தில், நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார் நிதி அமைச்சர். வெறும் ஆண்டுச் சடங்காக நாட்டின் பட்ஜெட்டை மாற்றிவிட்டார் அவர். நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த கிராமப்புற வளர்ச்சியும் வேளாண் துறையும் பெரும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுவிட்டன; விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறியதன் பயங்கர விளைவுகளை விரைவிலேயே நாம் அனுபவிக்கப் போகிறோம்.

நாய், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளுக்கான உணவின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்திருப்பதால், நிதி அமைச்சரே கூறியதைப்போல, இந்த பட்ஜெட்டால் நாய் வளர்ப்போரையும் நாய்களையும் தவிர வேறு யார் மகிழ்ச்சி அடையப் போகிறார்கள்? ஆனால் முலாயம் சிங் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தெரியும், நாய் வளர்ப்போர் ஓட்டுப் போடப் போவதில்லை; நாய்களுக்கு ஓட்டே இல்லை என்பது.


மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு புதுடெல்லி, பிப். 28-பட்ஜெட்டில் கூறப்பட்டி ருப்பதாவது:-மாதசம்பளம் பெறுவோருக்கான வருமான வரியில் இந்தபட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமானவரி விதிப்பு மற்றும் விரி விகிதத்தில் மாற்றம் இல்லை. ஆனால்சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானவரி இல்லை. இந்த வருமான உச்சவரம்பில் மேலும் ரூ. 10 ஆயிரம் உயர்த் தப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை.

இந்த வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு பெண்களுக்கு ரூ. 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வருமான வரி விலக்கு ரூ.1,95,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006-07-ல் 9.2 ஆக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இது சராசரியாக 8.6 சதவீதம் இருந்தது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது.

சேமிப்பு விகிதம் 32.4 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 33.8 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். 2007-ம் நிதி ஆண்டில் சராசரி பண வீக்க விகிதம் 5.2 முதல் 5.4 சதவீதம் வரையில் இருக்கும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும்.

2006-07 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வங்கிக்கடன் விகிதம் 29 சதவீதமாக உயர்ந்ததது. கோதுமை, அரிசி தொடர்பாக எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்பட மாட்டாது. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதி செய்யப்படும்.

ஊரகப்பகுதிகளில் தொலைபேசியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 54 கிராமங் களில் போன் வசதி செய்யப் பட்டுள்ளது. உடல் நலத்துக்கான நிதிஒதுக் கீடு 21.9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கு 34.2 சதவீதமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு நடப்பாண் டில் கூடுதலாக 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

மேல்நிலைப்பள்ளி கல்விக் கான உதவித்தொகை ரூ. 1837 கோடியில் இருந்து ரூ.3794 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.4680 கோடியில் இருந்து ரூ.5850 கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் புதிதாக 15 லட்சம் வீடுகள் கட்டப்படும். தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8207 கோடியில் இருந்து ரூ.9947 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத் துக்கு ரூ. 969 கோடி நிதிஒதுக்கப்படுகிறது.

நாடெங்கும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை தடுக்க தேசிய அளவில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் படிப்பைத்தொடர தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

போலியோவை முற்றிலு மாக விரட்ட ரூ.1290 கோடி வழங்கப்படும். உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங் களிலும், பீகாரில் 10 மாவட்டங்களிலும் போலியோ ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொது வினியோக முறை கம்ப்ïட்டர்மயமாக்கப்படும். இந்திய உணவுக்கழக செயல் பாடுகள் கம்ப்ïட்டரில் ஒருங்கிணைக்கப்படும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு ரூ.3271 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி.க்கான உதவித்தொகை நிதி ஒதுக்கீடு ரூ.440 கோடியில் இருந்து ரூ.611 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

சிறுபான்மை இன மாணவ-மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெட்ரிக்கில் படிப்பவர்களுக்கு ரூ.72 கோடியும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்கு ரூ.48 கோடியும் வழங்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12041 கோடியில் இருந்து ரூ.14365 கோடியாக உயர்த்தப்படுகிறது. அதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிய தொழில்கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.

பெண்கள் மேம்பாட்டுக் கான நிதிஒதுக்கீடு ரூ.22,282 கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.2,25,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க புதிய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறு வார்கள்.

2006-07-ல் விவசாயி களுக்கு ரூ.1,75,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இது ரூ.1,90,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தேயிலை உற்பத்திக்கு புதிய உத்வேகம் கொடுக்க சிறப்பு நோக்க தேயிலை நிதி உருவாக்கப்படும். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் தொடர்ந்து நடை முறைப்படுத்தப்படும்.

மாநில அரசுகளின் உதவியுடன் சமூகநலத்திட்டங் கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அங்கமாக 70 லட்சம் குடும்பங்கள் எல்.ஐ.சி. திட்டத்தில் இணைக்கப் படுவார்கள். இவர்களுக்கு 50 சதவீத பிரிமீயத்தொகையாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.16,261 கோடி கடனாக வழங்கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ரூ.9955 கோடியில் இருந்து ரூ.12,600 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. டெல்லி, கொல் கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங் களை இணைக்கும் தங்கநாற்கர சாலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டுத்திட்டத்துக்கு ரூ.405 கோடி வழங்கப்படும்.

கைத்தறித்தொழில் மேம்பாட்டு நிதி ரூ.533 கோடியில் இருந்து ரூ.911 கோடியாக உயர்த்தப்படுகிறது. நெசவாளர்களுக்கான சுகா தார காப்பீட்டுத்திட்டம் இதர சிறு தொழில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு ரூ. 241 கோடியில் இருந்து ரூ.321 கோடியாக அதி கரிக்கப்படும்.

கயிறு தொழிற்சாலை நவீனப்படுத்த ரூ. 23.55 கோடி வழங்கப்படும். சுற்றுலாத் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.423 கோடியில் இருந்து ரூ.520 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

நலிவடைந்த பிரிவின ருக்கு கடன் வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அவர்களது வீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5000 கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வராத மாவட்டங்களுக்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சொர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.250 கோடியில் இருந்து ரூ.344 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 12.5 பில்லியன் டாலர்களாக (ரூ.57 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. துறை ரீதியான முதலீடுகள் 6.8 பில்லியன் டாலர்கள் தேசிய மழைநீர் பிடிப்புபகுதி மேம்பாட்டு நிறுவன, திட்டங் களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.96 ஆயிரம் கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ.41,922 கோடியும் அடங்கும். நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நிதிஉதவிகளும் செய்யப்படும்.

பிற்பட்ட மண்டல பகுதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5800 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.

மும்பை நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி மையமாக மாற்ற உயர் அதிகாரக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

உடல்ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண இயற்கை மாற்றத்தின் விளைவை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று ஏற்படுத் தப்படும். பல்வேறு துறை களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,72,728 கோடியாக இருந்தது. 2007-2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,05,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,54,939 கோடி.

20 மாநிலங்களுக்கு ரூ.8575 கோடி கடன் பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 450 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1,20,377 கோடியாக இருந்தது.

அடுத்த நிதி ஆண்டு முதல் தேசிய அளவில் பொருட்கள் மற்றும் சேவைவரி திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டில் நிதிபற்றாக்குறை 3.7 சதவீதமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 2 சதவீதம். மொத்த செலவு ரூ.6,81,521 கோடியாக இருக்கும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேருக்குபயன்

மத்திய பட்ஜெட்டில் பல சேவை வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

இந்த வரி விலக்கு காரண மாக மத்திய அரசுக்கு ஆண் டுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்படும்.

இதுவரை உயர்தர குடி யிருப்போர் நலச் சங்கங்கள் மீது சேவை வரி விதிக் கப் பட்டிருந்தது. புதிய பட் ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கம்பெனிகளுக்கான கார்ப் பரேட் வருமான வரியில் சர்சார்ஜ் (ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு) நீக்கப் படுகிறது.

பாங்கிகளில் போடப்பட்ட பணத்தை எடுக்கும் போது பணபரிமாற்ற வரி (பி.சி.டி.வரி) வசூலிக்கப்பட்டு வந்தது. மத்திய, மாநில அரசு களுக்கு இந்த பண பரிமாற்ற வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனிப்பட்ட ஒருவர் மற்றும் இந்துகூட்டு குடும்பத்தினர் பாங்கியில் பணம் எடுக்கும் போது ரூ.25 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்கும்போது இந்த வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுப்பவர்களுக்கு இந்த பாங்கி பண பரிமாற்ற வரிகிடையாது.


பொது பட்ஜெட் 2007: முக்கிய அம்சங்கள் * சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.* சிகரெட் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது.

* தண்ணீர் சுத்திரிக்கும் கருவிகளுக்கு முழு வரி விலக்கு அளிக் கப்படுகிறது.

* பயோ-டீசலுக்கு முழு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

* சிறு தொழில்களுக்கான சுங்க வரி விலக்கு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்கிறது.

* வருமான வரி விலக்கு ஆண்களுக்கு ரூ.1,10,000, பெண் களுக்கு ரூ.1,45,000, மூத்த குடி மக்களுக்கு ரூ.1,95,000 என்ற வகையில் இருக்கும்.

* சூரியகாந்தி எண்ணை மீதான வரி 15 சதவீதமாக குறைக் கப்படுகிறது.

* சமையல் நிலக்கரிக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப் படுகிறது.

* மதிப்பு கூட்டு வரி விதிப்பு காரணமாக மத்திய அரசின் வருவாய் 24.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

* புனேயில் நடைபெற உள்ள காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

* காமன்வெல்த் போட்டியை நடத்த மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.150 கோடி வழங்கப்படும்.

* வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை.

* இயற்கை மாற்றத்தை ஆய்வு செய்ய நிபுணர்குழு.

* உடல் ஊனமுற்றோருக்கு 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* உலகத்தரம் வாய்ந்த நிதி நகரமாக மும்பை மாற்றப்படும்.

* மத்திய விற்பனை வரியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது.

* விவசாய முதலீடு 2 சதவீதம் அதிகரிக்கும்.

* கிராமத்தில் நிலம் இல்லாத குடும்பங்களுக்கு காப்பீடு திட்டம்.

* ராணுவ செலவுகளுக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

* தங்க நாற்கரக திட்டம் நிறைவடைகிறது.

* மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வீட்டு வசதி திட்டம்.

* பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.22,282 கோடி.

====================================================
விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க விவசாயம், தொழில் இரண்டிலும் சமநிலை வளர்ச்சி: பிரணப் வலியுறுத்தல்

கோல்கத்தா, மார்ச் 5: விவசாயம், தொழில் ஆகிய இரு துறைகளிலும் சமநிலையான வளர்ச்சி இருந்தால்தான், விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்கவும், வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் முடியும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி கூறினார்.

மேற்கு வங்கத்தில் சிங்குரிலும், நந்தி கிராமத்திலும் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதால் எழுந்துள்ள பிரச்சினையை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ராஜர்ஹாட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகையில் பிரணப் முகர்ஜி கூறியதாவது:

கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின்போது போதிய முதலீடு இல்லாத காரணத்தால் விவசாயத் துறை இன்று பின்தங்கிக் கிடக்கிறது.

விவசாயத் துறையிலும் தொழில்துறையிலும் சமநிலையான வளர்ச்சியை ஏற்படுத்த இன்னொரு பசுமைப் புரட்சி அவசியம்.

நாட்டில் விவசாயத் துறையில் வளர்ச்சி விகிதம் தற்போது 2 சதவீதமாக இருக்கிறது. தொழில்துறைக்கு நிகராக விவசாயத் துறையைக் கொண்டு வர வேண்டும் எனில், வளர்ச்சி விகிதத்தை குறைந்தபட்சம் 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க முடியும்.

அதே வேளையில், தொழில்மயம் ஆக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டியதும் அரசின் பொறுப்பு என்றார் பிரணப் முகர்ஜி.

====================================================

வரி விதிப்புகளை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – வேளாண்மை, சுகாதாரம், ஊரக வளர்ச்சியும் சீர்திருத்த நடவடிக்கைதான்: ப.சிதம்பரம்

புது தில்லி, மார்ச் 5: வேளாண் துறை வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள்தான்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாடும் அதில் அடங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

மேலும், பட்ஜெட்டில் அறிவித்த வரி விதிப்புகளைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“”ஒரு வரியைத் திரும்பப் பெற்றால், அதற்குப் பதிலாக வேறொரு வரியைத்தான் விதிக்க முடியும். எனவே, ஒருவர் மீதான வரியைத் திரும்பப் பெற்றால் அவர் மகிழ்ச்சி அடைவார். அதையே வேறொருவர் மீது விதிக்கும்போது அவர் வருத்தமடைவார். எனவே, எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் அமல்படுத்தப்பட்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளால் தொழில் துறை நிறுவனங்களும் சேவைத் துறை நிறுவனங்களும் பல ஆண்டுகளாக இரண்டு இலக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன.

நிறுவனங்கள் லாபம் மீதான வரி, இதர சலுகைகள் மீதான வரி, லாப ஈவுத் தொகை மீதான வரி ஆகியவற்றின் மூலம் அரசுக்குச் செலுத்துவது மிகக் குறைந்த தொகையே ஆகும். தொடர்ந்து லாபம் ஈட்டிவரும் தொழில் துறையினர், மற்றவர்களின் நன்மைக்காகவும் சிறிது தொகையை அளிக்க வேண்டும். அதனால் புதிய வரிகளை பெரிய சுமையாக அவை கூற முடியாது.

ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வியை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வி அளிக்கவும் பணம் தரப் போகிறார்களா, இல்லையா என்பதே கேள்வி. “ஆம்’ என்றால், தொழில் துறையினர் வரி செலுத்தித்தான் ஆக வேண்டும்.

எச்ஐவி பாதிப்பு, எய்ட்ஸ் நோய், இளம்பிள்ளைவாத நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்குவது போன்ற பணிகளில் நாம் போதிய கவனத்தைச் செலுத்தாமல் இருந்துவிட்டோம் என்றே கருதுகிறேன்.

நாடு முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட 70 லட்சம் நீர் ஆதாரங்களை சீரமைத்து, பராமரிப்பதும், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான பெரும் திட்டங்களும்கூட பொருளாதார சீர்திருத்தங்களில் அடங்கும்.

வருமான வரி விதிப்புக்கான வருமான வரம்பு ஒரு லட்ச ரூபாயிலிருந்து ரூ.1,10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தவர்கள் செலுத்திவந்த ரூ.5,000 கூடுதல் வரியானது, ரூ.4,120 ஆகக் குறைந்துவிடும். ஆனால், ரூ.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்களில் எத்தனை பேர் வரி கட்டுகிறார்கள்?

நாட்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடி. அவர்களில் 1.20 லட்சம் பேர்தான் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவதாகக் கூறி, வரி கட்டுகிறார்கள்.

பஞ்சாப், உத்தரகண்ட் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே பட்ஜெட் அறிக்கை அச்சாகிவிட்டது. நாலைந்து வார பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு ஓர் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தயாரிக்க முடியாது; தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்படுவதாகும் பட்ஜெட்.

பணவீக்க விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன; பணவீக்கம் கட்டுக்குள் வந்தவுடன் வட்டி விகிதங்களும் குறையத் தொடங்கும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.

====================================================
பணவீக்கத்துக்கு மருந்து

இராம. சீனுவாசன்

“”அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு”. அப்படித்தான் பணமும்.

ஒரு நாட்டில் ஓரளவுக்கு பணவீக்கம் இருந்தால் மட்டுமே உற்பத்தியாளர்களின் லாபம் உயர்ந்து பொருள்கள் உற்பத்தியும் பெருகும். பணவீக்கம் கட்டுங்கடங்காமல் உயரும்போது, பணத்தின் மதிப்பு குறைந்து பொருளாதார உற்பத்தியும் பாதிப்படைகிறது. எனவே, அதிக பணவீக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்பது அடிப்படை பொருளாதாரக் கோட்பாடு ஆகும்.

இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 2007-ல் ரிசர்வ் வங்கி, நாட்டின் பணவீக்கம் 2007 – 08ல் 5 சதவீதம் முதல் 5.5 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டது. இதற்கு ஏதுவாக பண அளிப்பின் அளவு 15 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டது. இதற்கு மாறாக டிசம்பர் 2006 முதல் பணவீக்கம் 5.5 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது 6.73 சதவீதம் என்ற அளவை பிப்ரவரி 3, 2007 அன்று எட்டியது. உயர்ந்து வரும் பணவீக்கம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.

பணவீக்கம் என்பது நாட்டின் பொது விலை மட்டம் உயரும் விகிதம். இது நாட்டில் எல்லாப் பொருள்களின் விலைகளும் சராசரியாக எவ்வளவு சதவீதம் உயர்ந்திருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் பணவீக்கம் ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு, முந்தைய ஆண்டில் அதே வாரத்தில் நிலவிய பணவீக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது.

பணவீக்கத்தின் காரணம் மக்களிடம் உள்ள அதிக பண இருப்பினால், அவர்களின் தேவையும் உயர்ந்து விலைவாசி உயர்வையும் தூண்டுகிறது என்றும், மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி பெருகாமல் இருப்பது பணவீக்கத்தின் காரணம் என்று இரு வேறு காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

அதிக அளவு பண அளிப்பும், தேவையை விட குறைவான உற்பத்தி அளவும் ஆகிய இரண்டு காரணங்களும் பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக்கொள்வதுபோல ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

“ரெப்போ’ என்பது, வங்கிகள் போதிய பணம் இல்லாதபோது, தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை வைத்து ஒரு சில நாள்களுக்குக் கடன் தொகை பெறுவதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் “ரெப்போ ரேட்’ என்று குறிப்பிடப்படும்.

“”ரெப்போ ரேட்” உயரும்போது, வங்கிகள் தாங்கள் கடன் பெறுவதைக் குறைத்து, கடன் கொடுப்பதையும் குறைக்கும். மேலும் வங்கிகள் கொடுக்கும் கடன் மீதான வட்டி வீதம் “ரெப்போ ரேட்டை’விட அதிகமாக இருக்கும்.

“ரிவர்ஸ் ரெப்போ’ என்பது, வங்கிகள் அளவுக்கு அதிகமான பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் ஒரு சில நாள்களுக்கு வைப்புத் தொகையாகக் கொடுத்து அதற்கான வட்டியைப் பெறும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி வீதத்துக்குக் குறைவான வட்டியில் வங்கிகள் மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை.

பண இருப்பு விகிதம்: வங்கி பெறும் வைப்புத் தொகையின் ஒரு பகுதி பணமாக ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட வேண்டும். பண இருப்பு விகித அளவை அதிகப்படுத்தும்போது, வங்கியினால் கொடுக்கப்படும் கடன் அளவு குறைந்து பண அளிப்பும் குறையும்.

பணவீக்கத்தைக் குறைக்க “ரெப்போ ரேட்’ பண இருப்பு விகிதம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மேலும் வங்கிகள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்குக் கடன் கொடுப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு புதிய கட்டளைகளையும் பிறப்பித்தது. இதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், இந்த ஆண்டு தொடக்கம் வரை நாட்டின் மொத்த பண அளிப்பு எதிர்பார்த்த 15 சதவீதத்தைக் கடந்து 20 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவும் 31 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

எனவே ரிசர்வ் வங்கியின் பார்வையில் பொருளாதாரத்தில் பண அளிப்பு உயர்ந்தது பண வீக்கத்துக்கான மிக முக்கியக் காரணம் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்து வந்துள்ள இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் உண்மை வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன்மூலம் மக்கள் கடன் பெறும் அளவும் குறைந்து மொத்த பண அளிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் உடனடியாக பண அளிப்பைக் குறைக்காது என்று ஒருசில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேநேரத்தில் வேறு பலர் தற்போது நிலவி வரும் பணவீக்கத்துக்கு அதிக அளவில் பண அளிப்பு மட்டுமே காரணம் அல்ல, அதைவிட மிக முக்கியமான காரணம் போதுமான அளவிற்கு உற்பத்தி உயராமல் இருப்பதும் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பொருளாதாரத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், உற்பத்தித் திறனை மேலும் குறைப்பதற்கான வழிவகைகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

பணவீக்கத்தின் மிக முக்கியக் காரணம் பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் உற்பத்தி அளவு இல்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயப் பொருள்களின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருவது, பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் அளிப்பு உயர்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றது என்பது ஒருசாராரின் கருத்து.

இதை ஒப்புக்கொள்வதுபோல, உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்துவது, இறக்குமதியை ஊக்கப்படுத்துவது, உணவுப் பொருள்கள் ஊக வாணிபங்களை நிறுத்துவது, எல்லா பொருள்களின் உற்பத்திக்கு அடிப்படையாக உள்ள பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பது, சிமெண்ட், அலுமினியம் மீதுள்ள சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. ஏனெனில் பொருள் உற்பத்தி மற்றும் அளிப்பினை மிகக் குறுகிய காலத்தில் குறிப்பாக விவசாயப் பொருள்களின் அளவை உயர்த்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எனவே, பணவீக்கத்தைக் குறைப்பது ஒரு மிக நீண்ட கால முயற்சியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை 1991 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கத்தோடு பல கொள்கை முடிவுகள், குறிப்பாக வரி, தொழில் துறை மற்றும் வியாபாரம் தொடர்பான கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பொருளாதாரச் சீரமைப்பில் விவசாயத் துறை பங்கெடுக்கவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாகும்.

எனவே, வருகின்ற காலங்களில் விவசாயத் துறையை சீரமைத்து விவசாயப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே, நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

பொருள்களின் தேவைக்கேற்ப உள்நாட்டில் உற்பத்தியை உயர்த்தவும், அதேநேரத்தில் இறக்குமதியை உயர்த்தி மொத்த அளிப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

உள்நாட்டில் பொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமெனில், முதலீடுகள் உயர வேண்டும். இதற்கு வட்டி விகிதம் குறைவாக இருத்தல் வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இது வருகின்ற காலங்களில் புதிய முதலீடுகளை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கும்.

ரிசர்வ் வங்கி பண அளிப்பினைக் குறைக்க வேண்டுமெனில், மற்ற நாடுகளின் செலாவணியுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர வேண்டும். இதனால் இந்தியாவில் அந்நிய நாட்டுப் பொருள்களின் விலை குறைந்து, இறக்குமதி உயரும். இதனால், ரிசர்வ் வங்கியினுடைய பண அளிப்பும் குறையும். இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உண்மை வட்டி விகிதம் குறைந்து, முதலீடுகள் உயர்ந்து, பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, பொருள் உற்பத்தியை உயர்த்துவது மட்டுமே சிறந்த வழிமுறையாக இருக்கும்.

(கட்டுரையாளர்: முழு நேர உறுப்பினர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு).


தனியார் போட்டி அதிகரித்துள்ள நிலையில் தபால் துறை, வானொலி, தூர்தர்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைப்பு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, மார்ச் 6: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தபால் துறை, செய்தி ஒலிபரப்பு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2007-08-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இதில் அரசின் அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டன.

தபால் துறை: இதன்படி, தயாநிதி மாறன் அமைச்சராக உள்ள தபால் துறைக்கு ரூ. 315 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட ரூ. 104 கோடி குறைவாகும்.

மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளதும், தனியார் போட்டிக்கு இடையே நிதி பற்றாகுறையால் தத்தளிக்கும் துறையாகவும் உள்ள தபால் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல தபால் அலுவலகங்கள் சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடங்களிலும், பழைய தாற்காலிக கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

இத் துறையில் ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தபால் அலுவலகங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்று சொந்த கட்டடம் கட்டப்படுகிறது.

இன்னும் பல அலுவலகங்களில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நிதி பற்றாக்குறையே இதற்குக் காரணமாக கூறப்பட்டு வரும் நிலையில் இத் துறைக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது இத் துறை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தெரிவித்தனர்.

கூரியர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ்கள் என தனியார்துறையின் போட்டியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. போட்டியில் தனியார் துறையினர் முந்திச் செல்ல மறைமுகமாக உதவுவதாக அமையும் என்று ஊழியர் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

வானொலி, தூர்தர்ஷன்: தபால் துறைக்கு அடுத்தபடியாக தனியாரின் போட்டியைச் சமாளிக்க வேண்டியுள்ள துறையான அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கியது செய்தி ஒலிபரப்புத் துறையாகும்.

இத் துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விட ரூ. 63 கோடி குறைவாகும்.

இத் துறையில் ஏற்கெனவே பல பிரிவுகள் நிதி பற்றாக் குறையைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது இத் துறையை ஒட்டு மொத்தமாக மூட வழிவகுப்பதாக அமையும் என இத் துறையில் உள்ள ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விமான போக்குவரத்து துறைக்கு அதிக நிதி: சாதாரண மக்களுடன் அதிக தொடர்புள்ள துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ள மத்திய நிதி அமைச்சர், விமான போக்குவரத்து துறைக்கு ரூ. 12 ஆயிரத்து 347 கோடியை ஒதுக்கியுள்ளார். இது இத் துறைக்கு கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட ரூ. 9 ஆயிரத்து 300 கோடி அதிகமாகும்.

காலம் கடந்து விடவில்லை: பட்ஜெட் நிறைவேறுவதற்கு முன்னர் அல்லது திருத்திய மதிப்பீடுகள் அடிப்படையில் அரசு நினைத்தால் தபால்துறை, வானொலி, தூர்தர்ஷன் உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.


வருமான வரி

என்.வி. பாலாஜி (nvbalaji@karra.in)

வருமானம் மற்றும் தொழிலில் இருந்து பெறும் லாபத்திற்கான வரி (முதல் பகுதி)

இந்திய வருமான வரி சட்டத்தில் ஐந்து வகை வருமானங்களில் அதிக பிரிவுகளைக் கொண்டது வணிகம் மற்றும் தொழிலிலிருந்து பெறும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே ஆகும்.

ஒருவர் வணிகத்திலிருந்து ஈட்டும் லாபம் மற்றும் தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு இந்த பிரிவின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது.

வரையறுக்கப்பட்ட செலவுகளை, தொழில்.வணிகத்திலிருந்து ஈட்டும் வருமானத்திலிருந்து கழித்து வரும் தொகை வரிக்கு உட்படுத்த வேண்டிய லாபமாகும்.

இன்று வருமானத்தைப் பற்றி அறிவோம்:

கீழ்க்காணும் வருமானங்கள் இந்த தலைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

1. ஒரு வணிகர் தன் வணிகத்தில் பொருட்களை விற்று ஈட்டும் வருமானம்.

2. ஒரு தொழிலாளர் தன் தொழில் மூலம் ஈட்டும் வருமானம்.

3. ஒரு வணிகத்தை, தொழிலை மாற்றியமைக்க பெறும் இழப்பீட்டுத் தொகை.

4. ஒருவருக்கு வியாபாரச் சங்கத்தின் மூலம் வரும் வருமானம்.

5. குறிப்பிட்ட ஏற்றுமதியாளர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏற்றுமதி, இறக்குமதி உரிமத்தை விற்பதின் மூலம் ஈட்டும் வருமானம்.

6. சுங்க வரி மற்றும் கலால் வரி பாக்கி அரசாங்கத்தால் தளர்த்தப்பட்டால் வருமானமாகக் கருதப்படும்.

7. சுங்க வரி மற்றும் கலால் வரி அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டு, பிறகு திருப்பித் தரப்பட்டால் (தங்ச்ன்ய்க்) வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.

8. ஒரு கூட்டாளி, தன் கூட்டாண்மையிலிருந்து பெறும் சம்பளம், லாபம், பங்கு, ஊக்கத் தொகை போன்றவை வருமானமாகக் கருதப்படும்.

9. ஏற்றுமதிக்காக அரசாங்கத்திலிருந்து பெரும் ரொக்கச் சலுகை, மற்றும் இதர சலுகைகள், எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும், வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.

இந்த வருமானங்களுக்கு எதிராக வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட செலவுகள் பற்றி பிறகு காணலாம்.

வருமானங்கள் மற்றும் லாபங்கள் ஒருவர் தனது கணக்கு புத்தகங்களை சரிவர பராமரித்தால் மட்டுமே கணக்கிடக் கூடும். சிறு தொழிலாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை சரிவர வகுக்க முடியாது. அப்படி உள்ள நிலையில், சிறு தொழிலாளர்கள் தங்களது வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ள நிலையில், தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை லாபமாகக் காட்டி, அதற்கு வரி செலுத்தலாம். இது கீழ் வருபவைகளுக்கு பொருந்தும்.

1. கட்டடம் கட்டுபவர் அல்லது கட்டடம் கட்டுவதற்காக ஆட்களை ஏற்பாடு செய்து தருபவர், தனது மொத்த வருமானத்தில் 8% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.

2. சில்லறை வியாபாரி, தனது வருமானத்தில் 5% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.

3. ஒரு வருடத்தில் 10-க்கு மேற்படாமல் சரக்கு வாகனங்கள் வைத்து இயக்குபவர், தனது வருமானத்தை கீழ்வருமாறு கணக்கிடலாம்.

– ஒரு கனரக சரக்கு வாகனத்திற்கு மாதம் ரூ.3,500.

– இதர வாகனங்களுக்கு மாதம் ரூ.3,150.

இவை அனைத்தும் வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பிரிவின் கீழ் வரும் நபர், தனது லாபம் இப்படி கணக்கிடுவதை விட குறைவாக இருக்கும் என்று எண்ணினால், அதற்கு தகுந்த புத்தகங்களை சமர்ப்பித்து, குறைந்த லாபத்திற்கு வரி செலுத்தலாம்.


Posted in 2007, 2007-08, Accounting, Agriculture, Allocation, Analysis, Assets, Budget, Chidambaram, Commerce, Communist, Congress, CPI, CPI(M), Deflation, Department, Details, Economy, Education, Expenditure, Finance, Government, Gurumoorthy, Gurumurthy, Healthcare, India, Inflation, Information, infrastructure, Mail, markets, Marxist, Minister, P Chidambaram, P Chidhambaram, Pa Chidambaram, Perspectives, Postal, Private, Projects, Public, Radio, Recession, revenue, S Gurumoorthy, S Gurumurthy, Sector, Shares, Statement, Stocks, Tax, TV | 1 Comment »