Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007
07.06.07
குமுதம் ரிப்போர்ட்டர்
வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?
தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.
‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி?
‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்தது. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’
ராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா?
‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்யாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.
இந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து Êஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’
ராஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா?
‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’
நீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே?
‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.
நான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’
இந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாமே?
‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’
போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா?
‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப்பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.
இந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’
நீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே?
‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’
எப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்?
‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’
நீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா?
‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’
உங்களுக்கும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு?
‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடிகையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’
– புஷ்கின் ராஜ்குமார்
Posted in Abscond, Arms, Blasts, Bombs, bootlegging, Capture, Cera, Chennai, Chera, Cocaine, Corruption, Courts, Crime, Criminal, Dacoit, Dada, Dalit, Death, Don, Drugs, Encounter, fraud, Gamble, gambler, Gambling, gang, Godfather, Heroin, Hitman, Illegal, informers, Interview, Judge, Justice, Kidnap, kidnapping, Kumudam, Law, law-enforcement, Leader, Loan-sharking, LSD, Madras, mafia, maphia, Marijuana, Murder, Narcotics, nexus, Order, organized-crime, Police, Politics, prostitution, Rajkumar, ransom, Ravi, Reporter, rival, rivalry, Robber, Robbery, Rowdy, Rowdyism, Sandal, Sandalwood, secrecy, Sera, smuggler, Sopranos, Substance, Surrender, Theft, Thief, traffickers, Trafficking, Veerappan, Vellai Ravi, Violence, Weapons | 3 Comments »
Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007
நடிப்பதற்கு ஒத்திகை பார்ப்பதாக கூறி தயாரிப்பு நிர்வாகியுடன் படுக்கையில் புரண்ட தென்இந்திய அழகி கைது
சென்னை, ஜன. 24-
சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சங்கரபாண்டியனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலை பேசியில் ரகசிய தகவல் வந்தது.
அதில் பேசிய நபர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, வீட்டில் நடிகைகள் சிலர் பலான தொழிலில் ஈடுபடுவதாகவும் சிலர் கார்களில் அங்கு வந்து செல்வ தாகவும் புகார் கூறினார்.
இதையடுத்து உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் அந்தப் பகுதியில் மாறு வேடத்தில் கண்காணித்தனர். பின்னர் அதிரடியாக சம்பந்தப்பட்ட வீட்டினுள் நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நீலிமா நாயுடு ஒரு வாலிபருடன் கட்டிபுரண்டு கிடந்தார். நீலிமா நாயுடு தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அறையில் ஆழ்வார் பேட்டையை சேர்ந்த டி.வி. நடிகை மீனாட்சி ஒரு நடுத்தர வயது ஆணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மீனாட்சி பிரபல ஜவுளி கடையின் விளம்பர டடத்தில் நடித்துள்ளார்.
பெண் போலீசார் உதவியுடன் விபசார தடுப்பு பிரிவு போலீசார் 2 ஜோடிகளையும் கையும், களவுமாக மடக்கினர். இதில் 2 அழகிகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் சரவணன் போலீஸ் பிடியில் சிக்கினார்.
மேலும் நீலிமா நாயுடுவிடம் உல்லாசமாக இருந்தவர் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி. மீனாட்சியுடன் இருந்தவர் பிரபல தனியார் தொலை காட்சி ஊழியர். இவர்கள் 2 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இதையடுத்து போலீசார் நீலிமா நாயுடுவிடம் விசாரித்தனர். அவர் போலீசில் கூறியதா வது:-
நான் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய அழகையும், இளமையையும் பார்த்த பல சினிமா டைரக்டர்கள் என்ëனை நடிக்க அழைத்தனர். நான் ஐதராபாத்தில் மாடலிங் செய்து வந்தால் அங்குள்ள ஆண் நண்பர்கள் மூலம் நிறைய புதிய தொடர்புகள் ஏற்பட்டது.
அதில் சரவணனும் ஒருவர். அவ்வப்போது அழகி போட்டிகளில் பங்கு பெற பெங்களூர், மும்பை என செல்வேன். அப்போது சரவணனும் என்னுடன் வருவார். ஆரம்பத்தில் தொழில் முறை நண்பராக பழகிய அவர் எங்கள் குடும்ப நண்பரானார். அதோடில்லாமல் எனது லைனில் அக்கறை உள்ளவர் போல் நடந்து கொண்டார். இதனால் நான் அவரை முழுமையாக நம்பினேன்.
வாரத்திற்கு ஒரு முறை என்னை சில தொழில் அதிபர்கள் சந்திக்க வருவார்கள். அவர்களை சரவணன்தான் அழைத்து வருவார். அவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்வேன். அப்படி வந்த சினிமா தயாரிப்பு நிர்வாகி ஒருவர் சென்னை வந்தால் சினிமாவில் நடிக்க எளிதில் வாய்ப்பு கிடைக்கும். உனது உடற்கட்டு, தமிழக ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உள்ளது.
மேக்கப் டெஸ்ட் எடுப்பதற்கு என்று எனக்கு தெரிந்த பலர் சென்னை அண்ணா நகரில் உள்ளனர் என்று கூறி இங்கு அழைத்து வந்தார்.
இங்கு நான் தங்கியிருந்த அறைக்கு, டி.வி.நடிகை மீனாட்சி சில மணி நேரத்திற்கு முன்பு வந்தார். உடலை எப்படி இளமை பொலிவுடன் வைத்துக் கொள்வது என 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது சரவணன் 2 பேரை அழைத்து வந்தார். அதில் ஒருவர் ஏற்கனவே அறிமுகமான தயாரிப்பு நிர்வாகி, மற்றொருவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்றும் கூறி என் அருகில் அமர்ந்தனர்.
சிறிது நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்த அவர் மீனாட்சியை அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்று விட்டார். எனது அறையில் இருந்த தயாரிப்பு நிர்வாகி என்னிடம் சிறிய அளவிலான வண்ண வண்ண ஆடைகளை உடுத்தச் சொல்லி மேக்கப் டெஸ்ட் எடுத்தார்.
தனது செல்போன் காமிராவால் பல கோணங்களில் படம் பிடித்தார். ஒரு கட்டத்தில் நெருக்கமான பாடல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என ஒத்திகை பார்ப்பதாக கூறி என்னை இறுக்கி அணைத்தார். அவர் பிடியில் என்னை இழந்தேன். பின்னர் தான் தெரிந்தது சரவணன் என்னை நடிக்க வைப்பதாக கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது.
நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தப்பி செல்ல முயன்றேன். அதற்குள் 2-வது முறையாக என்னை பிடித்து வலுக்கட்டாய படுக்கையில் தள்ளி பலவந்தப்படுத்தினார்.
இவ்வாறு கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
ஆனால் சரவணனோ நீலிமா நாயுடு தாமாக விரும்பிதான் சினிமா தயாரிப்பு நிர்வாகியோடு படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறினார். இதற்கிடையே போலீசிடம் இருந்து தப்பி சென்ற தயாரிப்பு நிர்வாகியும், தனியார் தொலைக்காட்சி ஊழியரும் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு சரவணனை விடுவிக்க நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து சரவ ணனிடம் இருந்து ரூ.22 ஆயி ரம் ரொக்கப் பணத்தை கைப்பற்றிக் கொண்டு போலீ சார் அவரை எச்சரித்து அனுப்பினர். தென் இந் திய அழகி நீலிமா நாயுடு, டி.வி.நடிகை மீனாட்சி ஆகிய 2 பேரையும் விபசார வழக் கில் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Posted in Age Restriction, Andhra Pradesh, Anna Nagar, Casting Couch, Consensus Sex, Films, Hyderabad, Illegal Sex, Legal Sex, Meenakshi, Movies, Neelima Naidu, Pictures, Prostitutes, prostitution, Raid, Saravanan, TV | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006
புதுச்சேரி ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை, அக்.13: புதுச்சேரி ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சியை நடத்த லைசன்ஸ் வழங்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
சில ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டிருந்த லைசன்ûஸ புதுச்சேரி அரசு புதுப்பிக்க மறுத்துவிட்டது. புதிய லைசன்ஸ் கேட்போரின் விண்ணப்பத்தையும் நிராகரித்துவிட்டது.
இதை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
புதுச்சேரி அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை எதிர்த்து புதுச்சேரி அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் பி.சதாசிவம், எஸ்.மணிகுமார் ஆகியோர் இந்த அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
தீர்ப்பு விவரம்:
பாரம்பரிய நடனம் உள்பட இந்திய நடன நிகழ்ச்சிகளை முழுவதுமாக தடை செய்வது சட்ட விரோதம். அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) பிரிவுக்கு இது எதிரானது. அதே நேரத்தில் நடன நிகழ்ச்சிகள் ஆபாசமானதாக இருந்தால் அதை போலீஸôர் அனுமதிக்கக் கூடாது.
ஒரு சில இடங்களில் ஆபாச நடனம் நடத்தப்பட்டதால், அனைத்து நடன நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கக் கூடாது. இது போன்று தடை விதிக்க சட்டம் இயற்றப்படாத நிலையில், அதிகாரிகளே இத்தகைய உத்தரவை பிறப்பிக்க முடியாது. நடன நிகழ்ச்சி நடத்தும் லைசன்ûஸ யாராவது தவறாக பயன்படுத்தினால் அந்த லைசன்ûஸ போலீஸôர் ரத்து செய்யலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Posted in Bars, Clubs, Court, cultural conditioning, girls, Hotel, License, moral policing, Nude, Order, Police, Pondicherry, pondichery, Pondycherry, prostitution, Puthuchery | Leave a Comment »