Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Potato’ Category

2008 – International year of sanitation, languages, planet Earth and the potato

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 2008

இதற்கு முந்தைய ஆண்டுகளை விட புதிய 2008ம் ஆண்டு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது.

  • சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு,
  • சர்வதேச மொழிகள் ஆண்டு,
  • சர்வதேச புவி ஆண்டு மற்றும்
  • சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாக 2008ம் ஆண்டை ஐ.நா., அறிவித்து, பெருமைப்படுத்தியுள்ளது.

இந்த நான்கு முக்கிய நோக்கங்களுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐ.நா., முயற்சி செய்து வருகிறது. சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு: நாம் வாழும் பகுதியை துாய்மையாக வைத்திருந்து சுகாதாரம் பேணுவதே 2008ம் ஆண்டின் நோக்கமாக ஐ.நா., அறிவித்துள்ளது. உலகில் 260 கோடி மக்களுக்கு கழிப்பிட மற்றும் சுகாதார வசதி இது வரை கிடைக்கவில்லை.

இவர்கள் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 41 சதவீதம். இதனால், 20 கோடி டன் மனிதக்கழிவுகள் திறந்த வெளியில் நோய் உற்பத்திக் கூடங்களாக உள்ளன. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும், இது பிரச்னையாகவே உள்ளது. இது போன்ற சுகாதார சீர் கேட்டால் எளிதில் தவிர்த்துவிடக்கூடிய வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்றுக் நோய்களுக்கு ஏழைகள் ஆளாகிறார்கள். இந்த பிரச்னையால், உலக அளவில் 20 வினாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. தடுக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க முடியும். 2015ம் ஆண்டுக்குள் உலகில் அடிப்படை சுகாதார வசதி இல்லாத மக்களில் பாதிப்பேருக்காவது அந்த சுகாதார வசதி கிடைக்க செய்ய வேண்டும் என்ற ஐ.நா.,வின் மில்லினிய இலக்குக்காகத்தான் இந்த ஆண்டை கடைபிடிக்க 2006ம் ஆண்டிலேயே ஐ.நா., முடிவு செய்தது.
சர்வதேச மொழிகள் ஆண்டு: உலகின் பல்வேறு மொழிகளை சிறப்பிக்கும் வகையில் சர்வதேச மொழிகள் ஆண்டாக 2008ஐ கடைபிடிப்பது என ஐ.நா., பொதுச்சபை முடிவு செய்துள்ளது. உலகின் வேறுபட்ட கலாசாரம், பன்முகத்தன்மையை இது வளர்க்கும் என்று ஐ.நா., நம்புகிறது.

  1. அரபு,
  2. சீனம்,
  3. ஆங்கிலம்,
  4. பிரெஞ்சு,
  5. ரஷ்யன் மற்றும்
  6. ஸ்பானிஷ்

ஆகிய ஆறு மொழிகள் ஐ.நா.,வின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. இந்த ஆறு மொழிகளுடன் இந்தி மற்றும் போர்ச்சுக்கீசிய மொழிகளுடன் மொத்தம் 8 மொழிகள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றன.உலகம் முழுவதும் 6 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.இவற்றில் பெரும்பாலான மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. 417 மொழிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றை அளவிடும் அளவுகோல்களாக மொழிகள் கருதப்படுகின்றன. மொழி அழிவது ஒரு சமூகம் அழிவதையே குறிப்பிடும். ஆகவே, அவற்றை காப்பாற்றும் பொறுப்பு அரசுகளுக்கு உண்டு. இதையடுத்து யுனெஸ்கோ நிறுவனம், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் அழியும் நிலையில் உள்ள மொழிகளை காப்பாற்ற அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச புவி ஆண்டு: சர்வதேச புவி ஆண்டாக 2008 அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட முக்கிய விஷயங்களில், இந்த ஆண்டு கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இயற்கை மற்றும் மனித முயற்சிகளால் நாம் வாழும் உயிர்கோளத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது.

இயற்கை மாற்றத்தால் உடல்நலப் பாதிப்புகளை தவிர்ப்பது, மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது.

ஒரு குறிப்பிட்ட இயற்கை வளத்தை அதிகமாக பயன்படுத்தி, இயற்கை சேதப்படுத்துவதை விட, புதிய இயற்கை வளங்களை கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்வது.

நகர்ப்புறங்களில், மக்கள் வாழ்வதற்கு தகுந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவது.

பருவ நிலை மாற்றத்தால் வாழும் மக்களுக்கு நன்மை விளைய வேண்டும். தீமைகளை தவிர்க்க முயற்சி செய்வது.

நிலத்தடி நீர் வளத்தை முறையாக பயன்படுத்துதல். தற்போது உலகம் முழுவதும் 4 லட்சம் புவி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளனர். இவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழகங்களில் புவி தொடர்பான அறிவியல் பாடங்களை அதிகமாக அறிமுகம் செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு அரசுகள் பொறுப்புடன் நடந்து கொண்டு உயிர் வாழ்வதற்கு உள்ள இந்த ஒரே உயிர்கோளத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஐ.நா., தெரிவித்துள்ளது.


சீனாவுக்கு இயற்கை விடும் சவால்!

க. ரகுநாதன்


கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறை பனியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.

சீனாவின் மத்திய, தெற்கு மாகாணங்களில் பனி படர்ந்த சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. இருக்கும் ஒரே வழி ரயில்வே மட்டுமே.

பிப்.7-ம் தேதி தொடங்கிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இப்பகுதியில் இருந்து சென்ற லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்துப் போயினர். 4 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் ரயில்களே இயக்கப்பட்டன. மின் உற்பத்தி பாதிப்பால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் சீன அரசு உள்ளது.

ஒருபுறம் தனது பொருளாதார வலிமை, உள்கட்டமைப்பு பிரமாண்டம் ஆகியவற்றை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் பொன்னான வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியை சீனா கருதுகிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகள் சீன அரசின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தயாராகி வருகின்றன. இன்னொரு புறம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

ஒலிம்பிக் வீரர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாரத்தான் போன்ற ஒரு சில போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனால் காற்று மாசடைவதைத் தடுக்க சீன சுற்றுச்சூழல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், போட்டியின்போது மழை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க அரசும், விஞ்ஞானிகள் குழுவும் தயாராகி வருகின்றன. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

கடும் உறை பனிக்கு “லா நினோ’ எனும் கடலடி குளிர் நீரோட்டமே காரணம் என்று அரசு கூறினாலும், இதற்கு புவி, வெம்மை அடைவதுதான் முதன்மைக் காரணம் எனலாம்.

உலகின் ஓரிடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றோரிடத்தில் நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைப் போன்ற காலநிலை மாறுபாடுகள் உதாரணம்.

உலகில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் எழும் புகை ஆகியவற்றால் வெளியேறும் கரியமில வாயு வளிமண்டத்தில் டன் கணக்கில் கலந்துள்ளது. இவைதான் புவி வெப்பம் அதிகரிக்க மூல காரணம். இது கடலடி நீரோட்டத்தையும் பாதிப்பதால் நிலப் பகுதியில் இது போன்ற பருவநிலை மாறுபாடு ஏற்படுகிறது.

பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க 1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் உலக நாடுகளால் கொண்டு வரப்பட்டது. அது 2012-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.

மரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதை 2008-12ம் ஆண்டுக்குள் 5 சதவீத அளவுக்கு வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பது முக்கிய விதி.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டாலும், தொழிலதிபர்கள் நிர்பந்தம், அரசியல் காரணங்களால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறப்படவில்லை (கடந்த டிசம்பரில் செனட் சபை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது). இதனால் அதை நிறைவேற்றும் நிர்பந்தம் அரசுக்கு இல்லை. இதை நிறைவேற்றினால் தங்களது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.

உலக அளவில் இந்தியாவும், சீனாவும் 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், உலக பசுமைக்குடில் வாயுவை 10 சதவீதமே வெளியேற்றுகின்றன. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் 42 சதவீதம் வெளியிடுகின்றன.

வாயுக்கள் வெளியாவதைக் குறைப்பதற்காக தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையான கொள்கைகளை ஏற்க வளரும் நாடுகள் தயங்குகின்றன. வளர்ந்த நாடுகளும் (குறிப்பாக அமெரிக்கா) தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன. இதனால் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு எத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யாமல் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த பருவநிலை மாறுபாட்டுக்கான மாநாடு முடிந்துள்ளது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், விவசாய மானியத்தைக் குறைக்கக் கோரும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களை வற்புறுத்தி உலக நாடுகளைப் பணியவைக்கும் அமெரிக்கா, உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற மறுப்பது வேடிக்கையானது.

எல்லாவற்றிலும் தனது முன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெம்மையைக் குறைக்க முன்வர வேண்டும்.

உலக வெம்மை அதிகரிப்பால் புயல், பெரும் மழை வெள்ளம், கடும் வறட்சி, கடும் உறை பனி, அதன் காரணமாக உணவு உற்பத்தி பாதிப்பு, பஞ்சம் என்று பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்திக்க வேண்டி வரும். இவை முதலில் பாதிக்கப்போவது ஆப்பிரிக்க, ஆசியக் கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளைத்தான்.

பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது, நாம் வாழும் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பது. இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெறும் சமுதாயம் நீண்ட காலம் நிலைக்காது. எனவே இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால உலக நலனுக்கு உகந்தது என்பதை வளரும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளும் உணர வேண்டும்.

இல்லாவிடில் காதல் போயின்…காதல் போயின்…மட்டுமல்ல, பசுமை போயினும் சாதல்தான்!

Posted in 2007, 2008, 2009, 3899810, Arabic, Carbon, China, Chinese, Culture, Earth, emissions, Environment, France, French, Heritage, Hindi, International, Languages, Latin, Mandarin, Nature, Pollution, Portugese, portuguese, Potato, Russia, Russian, sanitation, Spanish, Tamil, UN, UNICEF, Year | Leave a Comment »

Impact of MNCs and pricing pressures by Govt. Policy – Harming the local farmer

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2007

ஊருக்கு இளைத்தவன்…

உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.

உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

தோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.

தில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.

உலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

உலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.

10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.

வாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.

யூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.

கார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.

கார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.

இந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.

கோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.

மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.

Posted in Agriculture, Banana, Biz, Brookebond, Brookebonds, Business, Cadburys, Chips, Commerce, Consumer, Copyrights, Customer, Dalit, Deflation, DNA, Doha, Economy, Exports, Farmer, Farming, Fertilizer, Food, Foodgrains, Genetic, harvest, Imports, Inflation, markets, MNC, Monsanto, Natural, Needy, organic, peasant, Poor, Potato, Prices, Pricing, Recession, rice, Rich, Seeds, Shares, Shopping, Shweppes, Sivaji, Statistics, Stats, Stocks, Subsidy, Suicide, Suicides, Talks, Tax, Tea, Trade, Trademark, Unilever, Urea, Vidharaba, Vidharabha, Vitharabha, Wal-Mart, Walmart, Wealthy, Weeds, Wheat, WTO | Leave a Comment »

London Diary – Era Murugan: Jacket Potato

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

லண்டன் டைரி: ஜாக்கெட் பொட்டேடோ!

இரா. முருகன்

“”இது யேது கண்றாவியை வில்க்கறதுக்குக் கடய் பரத்தியிருக்கானாம்?” அழுத்தமான பாலக்காட்டு உச்சரிப்பில் தமிழ்க்குரலைக் கேட்டபடி கோவண்ட் கார்டன் ஆப்பிள் மார்க்கெட் பகுதியில் நுழைகிறேன். காஞ்சிபுரம் பட்டுப் புடவை. காலில் கான்வாஷ் ஷூ, ஸ்வெட்டர், தலையில் பனிக்குல்லாய் தரித்த பாலக்காட்டு மாமி மெல்ல நடந்துகொண்டிருக்கிறார். இரண்டு பக்கத்திலும் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போவது ஜீன்ஸ், பிளேசர் அணிந்த மருமகளும் மகனும்.

முன்னால் “ஜாக்கெட் பொட்டேடோ -ஹாட் ஹாட்’ என்று சாக்குக் கட்டியில் பலகை வைத்த கடையில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. நானும் அதில் கலக்கிறேன்.

“”போன வாரம் ஸ்காட்லாந்துலே இப்படித்தான் எய்ட் யார்ட்ஸ்னு போர்ட் போட்ட கடைக்குப் போனது ஓர்மை இருக்கோ. இதென்னவாக்கும் ஆறு கெஜமும் இல்லாதே, ஒன்பது கெஜமும் இல்லாதே நடுவாந்திரமா எட்டு கெஜத்திலே புடவையான்னு பார்த்தால், ஆம்பிளைகள் கட்டிக்கற பாவாடை விக்கற இடமாம்”.

ஸ்காட்லாந்து தேசிய உடையான எட்டு முழநீள கில்ட் விற்கிற கடையில் பாலக்காட்டம்மாள் நிற்கிறதைக் கற்பனை செய்தபடி இரண்டு பவுண்ட் கொடுத்து ஜாக்கெட் பொட்டேடோ வாங்குகிறேன். கையில் சுடச்சுட பிளாஸ்டிக் வட்டிலில், வேகவைத்த உருளைக்கிழங்கும் தயிரும். தோலை உரிக்காமல் வேகவைத்த உருளைக்கிழங்குதான் ஜாக்கெட் பொட்டேடோ என்ற பெயர் ரகசியம் புலனாகிறது…

நடைபாதையில் பரத்திய கடைகளும், கட்டடத்தில் அடுக்கிய கடைகளுமாக கோவண்ட் கார்டன் சனிக்கிழமை பிற்பகல் பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறது. ஜூப்ளி மார்க்கெட், ஆப்பிள் மார்க்கெட் என்று பிரிந்த பகுதிகளில் சட்டென்று கண்ணில் படுவது சாப்பாடு விற்கும் கடைகள்தான். மார்க்கெட்டிலும், சுற்றுவட்டாரத் தெருக்களிலுமாகக் கிட்டத்தட்ட ஆயிரம் இடங்களில் வயிற்றுக்குத் தீனி கிடைக்கும் என்று நம்பகமான வட்டாரங்கள் திருப்தியாக ஏப்பம் விட்டபடி தகவல் தெரிவிக்கின்றன.

பியாஸô என்ற விஸ்தாரமான மார்க்கெட் முன் சதுக்கத்தில் ஆற அமர நடக்கிறேன். எல்லா ஐரோப்பிய நாட்டுத் தலைநகரங்களிலும், மாநகரங்களிலும் ரொட்டீன் விஷயமான இந்தமாதிரி நடைபாதை லண்டனுக்கு ரொம்பவே தாமதமாக, 1630-ல் தான் வந்தது. இனிகோ ஜோன்ஸ் என்ற கட்டடக்கலை நிபுணர் கோவண்ட் கார்டனை வடிவமைத்தபோது அதில் முக்கிய அங்கமானது பியாஸô. சாயந்திரம் ஒயிலாக நடைபயில இந்த விதானம், கடைகள், கோவண்ட் மார்க்கெட் பிரதேசம் முழுவதும் அமைந்த நாடகக் கொட்டகைகள், ஏற்கனவே சொல்லப்பட்ட சாப்பாட்டுக் கடைகள்…இப்படியான சமாச்சாரங்களுக்காகவே இந்தப் பகுதி அப்புறம் பிரசித்தமானது. அந்தப் பிரபலம் முன்னூறு வருடம் கழித்தும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மார்க்கெட் வளாகத்தில் ஒரு கடை வாசலில் “விர்ஜின் ஆலிவ் ஆயில்’ விளம்பரம். அறுபது வருடமாக அங்கே கன்னித்தன்மை மாறாத ஆலிவ் எண்ணெய் விற்கிறார்களாம். மேல்விவரம் அறிய உள்ளே நுழைகிறேன். விர்ஜினிட்டி என்ற சொல் கன்னிமை ஆலிவ் எண்ணெயின் பரிசுத்தத்தைக் குறிக்கும் பரிபாஷையாம். “நயம் ஆலிவ் எண்ணெய் விலை சகாயமாகக் கிடைக்குது. வாங்கிட்டுப் போங்க’ என்கிறாள் கடையில் விற்பனைப் பெண். வாங்கி? “”சமைக்கலாம். மாலிஷ் செய்து குளிக்கலாம்.” சரிதான், சீயக்காய்த் தூள் இருக்கா என்று விசாரிக்கிறேன். இல்லையாம்.

“”மந்திரமில்லே, மாயமில்லே..” ஆங்கிலத்தில் உரக்கக் குரல் விட்டுக் கொண்டு கோட்டு சூட்டு அணிந்த ஒரு வித்தைக்காரர் கோவண்ட் கார்டன் நடைபாதையில் கூட்டம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் சின்னதாக ஒரு பழைய பெட்டி. “” சிகரெட் குடிக்கிறவங்க ஆளுக்கு ஒரு சிகரெட்டை விட்டெறியுங்க.” வித்தைக்காரர் கேட்டுக்கொண்டபடி ஏழெட்டு சிகரெட் முன்னால் விழுகிறது. எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அதில் ஒன்றைப் புகைத்து உள்ளங்கையில் வைத்து அழுத்துகிறார். கையை விரிக்கும்போது சிகரெட் மாயமாக மறைந்துவிட்டிருப்பதைப் பார்த்துக் கூட்டம் கை தட்டுகிறது. பெட்டியில் பத்து பென்ஸ், ஐந்து பென்ஸ் என்று சில்லறை விழுகிற சத்தம். “” பாதி வித்தைக்கு நடுவிலே போகாதே…” நழுவுகிற பார்வையாளர்களைப் பார்த்துச் சத்தம் போடுகிறார் வித்தைக்காரர். “”போனா, ரத்தம் கக்கிச் செத்துடுவீங்க, ஆமா!” நான் சேர்த்துக் கொள்கிறேன். அடுத்த தாயத்து விற்பனை தொடங்குவாரோ என்று யோசித்தபடி நடையை எட்டிப் போடுகிறேன்.

டீத்தூள் மட்டும் விற்க என்று ஒரு கடை. சீனாவிலிருந்து வந்த மல்லிகைப்பூ வாசம் அடிக்கும் டீ, தாய்லாந்து கிராம்பு டீ, கொழும்பு டீ என்று அடுக்கிய கடையில் இரண்டு பெரிய அலமாரி முழுக்க அசாம், டார்ஜிலிங், நீலகிரி என்று சகலவிதமான இந்திய டீத்தூளும் கொஞ்சம் அதிக விலைக்குக் கிடைக்கிறதாகத் தெரிகிறது. பக்கத்துக் கடையில் சக்கரம் வைத்த வண்டியில் வித்தியாசமாக ஏதோ கண்ணில்பட ஒரு வினாடி நிற்கிறேன். நாற்காலியில் உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருக்கும் வயதான பெண்மணிகள். நாயைக் கையில் பிடித்துக் கூட்டிக்கொண்டு வாக்கிங் ஸ்டிக்கோடு நடக்கிற வயோதிகர்கள், நீளத் தொப்பி தரித்த கனவான்கள், தரையில் புரளும் பாவாடை தரித்த அழகிய கன்னியர். எல்லோரும் நூறு வருடத்துக்கு முற்பட்டவர்கள். முக்கால் அடி உயரத்துக்கு மேல் யாரும் இல்லை. தத்ரூபமான இந்த மரச் சிற்பங்களை வண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் கடைக்காரரை விலை விசாரிக்கிறேன். ஒவ்வொன்றும் முப்பது பவுண்டாம். மூவாயிரம் ரூபாய்க்குப் பொம்மை வாங்கி விளையாடுகிற வயசா என்ன? மேலே நடக்கிறேன்.

கோவண்ட் கார்டனுக்கு மேலதிக அழகு சேர்க்கும் லண்டன் போக்குவரத்து மியூசியம் அடைத்துப் பூட்டியிருக்கிறது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு லண்டன் தெருக்களை அவற்றின் கூட்டம், குதிரை பூட்டிய கோச், டிராம் வண்டிகளோடு தத்ரூபமாகச் சித்திரிக்கும் மியூசியத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆனாலும் மியூசியம் கடை திறந்திருக்கிறது. பழைய சிவப்பு லண்டன் மாநகர பஸ் படம் போட்ட டீ ஷர்ட் விலை விசாரிக்கும்போது -அதுவும் மூவாயிரம் ரூபாய் சொச்சம்தான். கடைக்குள் ஒரு சென்டிமீட்டர் விடாமல் ஆக்கிரமித்துக்கொண்டு சகலமானதும் வாங்குகிறவர்கள் எந்த நாட்டு டூரிஸ்டுகள்?

போக்குவரத்து மியூசிய வாசலில் சீன இசைக் கலைஞர் ஒருத்தர் முன்னால் பெட்டியைத் திறந்துவைத்துவிட்டு, புல்லாங்குழலில் இசை பொழிந்து கொண்டிருக்கிறார். காதல் தோல்வியில் முடிந்த சோகத்தையோ, அல்லது கல்யாணத்தில் தொடர்ந்த மகா சோகத்தையோ உருக்கமாக இசைக்கும் அவருக்கு விழுந்த காசுகள் மொத்தமே ஐம்பது பென்ஸ்தான் என்பது இன்னொரு சோகம்.

ஆனாலும் கோவண்ட் தோட்டத்துக்கு வெளியே, பாதாள ரயில் நிலையத்துக்குப் போகிற வழியில் நிற்கிற சிலைக்கு முன்னால் ஏகப்பட்ட கூட்டம். அலுமினியம் பெயின்ட்டைப் பூசிக்கொண்டு ஆடாமல் அசங்காமல் மணிக்கணக்காகச் சிலையாக நிற்கும் கலைஞருக்கு முன் காசுகள் விழுந்தபடி இருக்கின்றன.

“”உங்க அப்பா திண்ணையிலே பரப்பிரம்மா, அனங்காதே உக்கார்ந்து பேப்பர் வாசிக்கிற மாதிரி இருக்கு, கேட்டியோ..”-பின்னால் குரல். பாலக்காடுதான்.

Posted in Britain, Engaland, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, London Diary, Marketplace, markets, Potato, Sellers, Shops, Tour, Travleog, Travleogue, UK | 1 Comment »