Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Pondicherry’ Category

Shankar, Rajni & AVM’s Sivaji release details in Puthuseri & Karnataka

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

சினிமா டிக்கெட் வெளியிட்ட புதுவை முதல்வர்

ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தின் டிக்கெட்டை புதன்கிழமை வெளியிடுகிறார் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி (வலது). உடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

புதுச்சேரி, ஜூன் 14: புதுச்சேரியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாக ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான சிவாஜி பட டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இந்த இரு கோஷ்டியினரின் டிக்கெட்டுகளையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் பிரபலமான நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதும் ரசிகர் மன்றக் காட்சியின்போதும் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இதனை அடுத்து புதுச்சேரி திரையரங்குகளில் ரசிகர் மன்றக் காட்சிகளைத் தடை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

ஆனால் பெரும் வரவேற்புடன் வரும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று திரையரங்குகளில் சிவாஜி படம் வெளியாவதால் ஆங்காங்கே கட்-அவுட்கள், பேனர்கள் என்று வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் புதுச்சேரியில் புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு கோஷ்டியாகவும், புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றனர்.

நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கூறுகின்றனர். நாங்கள்தான் முறையாகத் தலைமையின் உத்தரவுப்படி செயல்படும் அமைப்பு என்று புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சிவாஜி படம் திரையிடப்படும் மூன்று திரையரங்குகளிலும் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரஜினிசங்கர் உள்ளிட்டோர் வந்து ஒரு திரையரங்குக்கான ரசிகர் மன்றக் காட்சிக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனை புதுவை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து புதுவை மாநில அனைத்து ரஜினிகாந்த் மன்றங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானேவேல், கோபி, காமராஜ் உள்ளிட்டோர் மற்றொரு குழுவாக வந்து மற்ற இரு திரையரங்குகளின் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமியே வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இரு தரப்பினரும் ரஜினிகாந்த் திரைடப்படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ரங்கசாமிக்கு மாலை அணிவித்தனர்.

ரஜினிகாந்த் ரசிகர்கர்கள் திரையரங்கில் சேர்களை உடைத்தல், திரைகளை கிழித்தல், குறிப்பிட்ட காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்ப திரையரங்கு ஊழியர்களை வற்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ரசிகர் மன்றங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் ரசிகர் மன்றக் காட்சி டிக்கெட்டுகளின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

——————————————————————————
சிவாஜி திரைப்படத்தை கர்நாடகத்தில் நான்கு தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம்: கன்னட சங்கத் தலைவர் அறிவிப்பு

பெங்களூர், ஜூன் 14: நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தை கர்நாடகத்தில் 4 தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரக்ஷணா வேதிகே அறிவித்துள்ளது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ~ ஷ்ரேயா நடித்த “சிவாஜி’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் உலகம் முதல் திரையிடப்படுகிறது.

சங்கர் இயக்கத்தில் இப்படம் பல கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருப்பதால் இப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை கன்னட சங்கங்கள் சில மாதங்களாக தடுத்து வந்தன.

இதையும் மீறி தமிழ் படம் திரையிட்ட திரையரங்குகள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

அண்மையில்தான் தமிழ்ப்படங்கள் கர்நாடகத்தில் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது.

இந் நிலையில் சிவாஜி படத்தை திரையிட கர்நாடகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இவர்களது படங்கள் திரையிடப்படும்.

ஆனால் சிவாஜி படத்தை கர்நாடகம் முழுவதும் நான்கு தியேட்டர்களிலேயே திரையிட வேண்டும் என்று கன்னட ரக்ஷணா வேதிகே கூறி வருகிறது.

இதுகுறித்து ரக்ஷணா வேதிகேயின் தலைவர் நாராயண கெüடா கூறியதாவது:

பிறமொழிப்படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது சில கட்டுப்பாடுகளை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ளது.

இதன்படி கர்நாடகத்தில் திரையிடப்படும் கன்னடம் அல்லாத பிற மொழிப்படங்களை நான்கு தியேட்டர்களில் மட்டுமே திரையிட வேண்டும்.

மேலும் சுவரொட்டிகள் கன்னடத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு ஒட்டப்பட வேண்டும். இதுபோல் பிற விளம்பரங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் கன்னடத்திலேயே வெளியிடப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகள்படி ரஜினிகாந்த் படத்தை திரையிட நாங்கள் எதிர்க்கவில்லை.

இதை மீறி பல தியேட்டர்களில் திரையிட்டால் அந்த தியேட்டர்களில் படச்சுருளை கன்னட ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் பறிமுதல் செய்வர்.

இயக்குநர் சங்கரின் 23-வது புலிகேசி திரைப்படம் கர்நாடகத்தைச் சேர்ந்த புலிகேசி மன்னனை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

இதனால் இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட நாங்கள் அனுமதிக்கவில்லை.

அதுபோல் சிவாஜி திரைப்படத்திலும் ஏதாவது ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால் அதற்கு எங்களது எதிர்ப்புகளைத் தெரிவிப்போம்.

இதற்காக ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் டிக்கெட் எடுத்து தியேட்டருக்குச் சென்று கண்காணிப்பார்கள் என்றார் அவர்.

13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை: இதற்கிடையே சிவாஜி படத்தை பெங்களூரில் 13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 13 தியேட்டர்களிலும் வியாழக்கிழமை முன்பதிவு செய்யப்படுகிறது.

Posted in ARR, AVM, Bangalore, Cauvery, Cinema, Fans, Films, Kannada, Karnataka, Kaviri, Movies, Mysore, Pondicherry, pondichery, Pondy, Pondycherry, Previews, Pudhucherry, Puducherry, Puthucehrry, Puthucherry, Puthuchery, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Rehman, release, River, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Sreya, Sriya, State, Theaters, Theatres | 2 Comments »

Puducherry Chief Minister N. Rangasamy: Govt. seeks land for runway expansion

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

கருணாநிதியுடன் ரங்கசாமி சந்திப்பு: புதுவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு தமிழக பகுதியில் இடம் கேட்டு கடிதம்

புதுச்சேரி, மார்ச். 7-

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று காலை சென்னை சென்றார். கோபாலபுரத்தில் உள்ள தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.

அப்போது அவரிடம் ஒரு கடிதம் கொடுத்தார்.அதில் கூறி இருப்பதாவது:-

புதுவையில் விமானத்தளம் விரிவாக்கப்பணி நடைபெற உள்ளது. இதற்கு போதுமான பகுதிகளை தமிழக அரசு அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.

கோட்டக்குப்பம் பகுதி யில் இணைப்பு சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்தப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

சென்னையில் புதுவை விடுதி கட்ட, உரிய இடம் ஒதுக்கித்தர வேண்டுகிறோம். திருக்கனூர் பகுதியில் தமிழகப்பகுதி சாலைகள் குறுகலாக உள்ளன. அவற்றை தமிழக அரசு அகலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தை பெற்றுக் கொண்ட கருணாநிதி, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி காரில் புதுவை திரும்பினார்.

Posted in Administration, Airport, Chief Minister, CM, Congress, East Coast Road, ECR, Expansion, Government, Govt, Karunanidhi, Kottakkuppam, Kottakuppam, Land, Pondicherry, Pondy, Project, Puducherry, Puthucherry, Rangasami, Rangasamy, Rengasami, Rengasamy, runway, Siddhandar Koil, Siddhandar Kovil, Siddhandar Temple, Tamil Nadu, Thirukanoor, Thirukanur, Thirukkanoor, Thirukkanur, TN | 2 Comments »

Bharati in Puthiya Kalacharam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 18, 2006

ஜூனியர் விகடனில் ரவிக்குமார் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து நீங்கள் (ஹரியண்ணா) எழுதியிருந்ததைப் படித்தேன். ரவிக்குமார் கட்டுரையை படிக்க வில்லை, ஆதலால் என்னவென்று புரியவில்லை. இதோ ‘புதிய கலாச்சாரம்’ இதழில் வந்திருக்கும் ஒரு கட்டுரை

அன்புடன்
சாபு
துபாய்
—————-
கட்டபொம்மனைப் பாடாத பாரதி

பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமர்சிக்கும் போதெல்லாம், ‘பாரதியை அவனது வரலாற்றுப் பின்புலத்தில் ¨¨த்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்” என்று கூறி விமர்சிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.

சரி வரலற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசிலிப்போம். பாரதி சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக்கிறான், கோகலே தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதிராய் போன்ற வட இந்திய தலைவர்களப் பற்றி பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம்,ரசிய்யா வைப்பற்றி எல்லாம் பாடியிருக்கிறார். காக்கை,குயில்,கிளி மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்..

ஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலக்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனை பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை.சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்று இலக்கிய அறிவோ,உலக ஞானமோ இல்லாத அப்பகுதி மக்கள் கட்ட பொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங்களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் பாடதது ஏன்?

ஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.

“எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து எட்டப்பனின் வாரிசான மண்ணுக்குத் தோழனாக இருந்து அவனை அண்டிப்பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம்மனைப் பற்றி எப்படி எழுத முடியும்? என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக் கூடும்.

“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி, அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்” அடேயப்பா ஈட்டி போல் பாயும் சொற்கள் பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய நேர்மைத் திறத்தைப் பற்றி பாரதி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலியினர் தம்முடைய ஆய்வுக்ளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருகிறார்களா?

வே.மணிக்கம் எழுதிய ‘தானபதிப்பிள்ளை வரலாறு” என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

“கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைபற்றியோ பாஞ்சாலக்குறிச்சிப் பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியிலிருந்து மீண்டு மிகுந்த நலிவுற்று பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1909 ல் ஓலைத்தூக்கும் சீட்டுக்கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில் ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய “விம்சமணி தீபிகை'(1878) நூலை செம்மைபடுத்தி தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கட்டபொம்மனைப்பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்

அதாவது எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வெங்கடாசலபதி.அத்தகைய தீயூழிலிருந்து பரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்.

புதிய கலாச்சாரம்
நவம்பர் 2006
ஆசிரியர் வி. வல்லபேசன்
puthiyakalacharam@rediffmail.com

————————————————————————————————-
முழுமையான சுதந்திரக் கவி

கா. செல்லப்பன்

“சுதந்திரம் நமது பிறப்புரிமை; அதை நாம் அடைந்தே தீருவோம்’ என்று சூளுரைத்தார் பாலகங்காதர திலகர். அதை அடைந்துவிட்டதாகவே, அன்றே ஆனந்தகூத்தாடியவர் தீர்க்கதரிசனக் கவி பாரதியார். “சுதந்திரத்தை மற்றவர்கள் தந்து பெற்றுக் கொள்ளப் போவதில்லை. அதை எப்போது வேண்டுமோ அப்போது நானே எடுத்துக் கொள்வேன்’ என்று ஓர் ஐரிஷ் விடுதலைப் போராட்ட வீரர் கூறினார்.

ஒவ்வொரு மனிதனும் சுதந்திரத்தைத் தன் ஆத்மாவின் உண்மையான நிலை என உணரும்போது, “விட்டு விடுதலையாகி’ விடுகிறோம் என்று பாரதியார் கருதினார். அதேபோல, ஒரு தேசம் தன்னை உணர்ந்து கொள்ளும்போது, அது அகவிழிப்பு பெற்று ஆற்றலுடன் எழுச்சி பெறும்போது, உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்குகிறது. அந்த விழிப்பையும் எழுச்சியையும் மக்களின் மொழியிலேயே அற்புதக் கவிதையாக்கியவர்தான் மகாகவி பாரதியார்.

சுதந்திர பூமியைக் கவிஞன் வலம் வந்து, வணங்கி வாயார வாழ்த்தும்போது அதைத் தன் சொற்களால் சொந்தமாக்கிக் கொள்கிறான். “வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம், மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்று தனது பிரம்மாண்ட தேசத்தில் கம்பீரமாக உலவுவதாகவும், மலையையும் கடலையும் மனித ஆற்றலால் வெல்வதாகவும் கவிஞர் கூறுகிறார்.

ஆனால் ஒரு தேசம் பிறப்பது, வெறும் பூகோளம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; அது மனித பந்தங்களாலும் வரலாற்றுச் சொந்தங்களாலும் உருவாவது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்ததுமிந்நாடே; அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே’ என்று தன்னை ஒரு வரலாற்றுச் சங்கிலியோடு இணைத்து, அதனை “வந்தே மாதரம்’ என்ற புதிய மந்திரத்தால் வணங்குகிறார்.

தன் மூதாதையர்களை, அர்ஜுனனை, இராமனை, சகுந்தலையின் மகன் பரதனை நினைவுகூர்ந்து, பாரதத்தை ஒரு புதிய தொன்மமாகப் படைக்கிறார். தொன்மங்கள்தான் (ஙஹ்ற்ட்ள்) ஒரு சமூகத்தைப் பிணைக்கும், சமுதாயத்தின் கனவுகள். பாரதி ஒரு புதிய தேசியத் தொன்மத்தை உருவாக்குகிறார். இந்தத் தொன்மம், பழங்கதையல்ல; ஒரு சமுதாயத்தின் உயிர்ப்பாற்றல். பாரத மாதாவுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடி, சமயக் குறியீடுகளுக்குச் சமூக அர்த்தங்களைத் தந்தவர் பாரதி.

பாரதி, இந்த மண்ணின், மக்களின் ஆற்றலைப் பாரத சக்தியாகவும் பராசக்தியாகவும் உருவகித்தார். பாரதியின் பராசக்தி வழிபாடு, மக்களின் அடிமன ஆற்றலை வெளிப்படுத்தும் வீரவழிபாடாகவே தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, அவர் பெண் கடவுள்களைப் போற்றியது, இந்த மண்ணும் பெண்ணும் விலங்கொடிந்து விடுதலை பெற விழைந்ததால்தான். அவர் பாஞ்சாலி சபதம் இயற்றியதும் பெண்ணடிமையையும் மண்ணடிமையையும் போக்குவதற்கே. இந்த இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாரதி உணர்ந்தார்.

வீட்டிலே பெண்களைப் பூட்டி வைத்த சமுதாயம், அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. பாண்டவர்கள் பாஞ்சாலியைப் பணயம் வைத்திழந்தபோது, தங்களது மண்ணை மட்டுமல்ல, உள்ளாற்றலையும் இழந்தனர். “தன்னை இழந்த தருமன், என்னை இழப்பதற்கு உரிமை இல்லை’ என்று பாஞ்சாலி வாதாடும்போது, பாரதத் தாயின் குரலை, இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக அடக்கப்பட்டிருந்த பெண்மையின் வீர முழக்கத்தைக் கேட்கிறோம்.

பெண் விலங்கறுத்து வீறுபெற்று எழுந்தால்தான், இந்த மண் மாண்பு பெறும் என பாரதி பாடினார். எனவேதான் “பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்’ – பாரினில் வந்ததாகப் பெண்களே பேசுவதாக மகாகவி அன்றே கூறினார்.

பாரதியின் சுதந்திரம், பாரத சமுதாயத்தின் முழுமைக்குமான பொதுவுடைமை. இங்கு வாழும் அத்தனை பேருக்கும் – மறவருக்கும் – பறையருக்கும் – புலையருக்கும் விடுதலை, விடுதலை என வீர முழக்கமிட்டார். சுதந்திரத்தின் இன்னொரு கூறாகச் சமத்துவத்தைக் கண்டார். எனவேதான், “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’ என்று கூறினார். நாம் “எல்லோரும் ஓர்குலம்; எல்லோரும் ஓர் விலை, ஓர் நிறை’ என உறுதிபடக் கூறினார்.

சுதந்திரத்தை உலக நாடுகள் அனைத்தும் அனுபவிக்க வேண்டும் என பாரதி விழைந்தார். அதனால்தான் பெல்ஜியத்துக்கு வாழ்த்து பாடினார். புரட்சியை மாகாளி பராசக்தியாக உருவகித்த கவிஞர், ரஷியாவில் ஜார் மன்னன் வீழ்ந்ததை, “”ஆகாவென எழுந்தது பார் யுகப் புரட்சி, அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன்’ என்று ஆர்ப்பரித்துப் பாடினார். “தனியொருவனுக்கு உணவிலை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சூளுரைத்தபோது அவரது சர்வதேசச் சமத்துவச் சிந்தனை வெளிப்பட்டது.

பாரதி, இந்த மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மட்டுமன்றி, விண்ணில் பறக்கும் பறவைகளுக்கும் சுதந்திர கீதம் பாடிய கவிஞன். “”காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்” என்று பிரபஞ்சத்தில் எங்கும், எதிலும் தன்னையே தன் கூட்டத்தையே கண்டு, அத்வைதத்தை ஓர் அகன்ற ஏகத்துவமாக விளக்கிக் காட்டினார். குருவி, விடுதலையுணர்வுக்கும் காக்கை, சமத்துவ உணர்வுக்கும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியும் வலுவும் அதன் எல்லாப் பகுதிகளும் ஏற்றத்தாழ்வின்றி, இணைந்து வாழ்வதைப் பொருத்தது என அவர் கருதினார். “கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’ என்று புதிய பண்டமாற்றுத் தத்துவம் பேசுகிறார். அனைத்துக்கும் மேலாக, மாநிலங்களிடையே நீர்ப் பங்கீடு தேவை என அன்றே உணர்ந்த கவிஞர், “வங்கத்தின் ஓடிவரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’ என்று பாடினார். இந்த ஒற்றுமையுணர்வு இன்னும் வராதது, சுதந்திரத்தின் பலன்களை முழுமையாக நுகர்வதற்குத் தடையாக உள்ளது.

இறுதியாக, இன்றைய உலகமயச் சூழலில், எந்த நாடும் தனித்தியங்க இயலாது. அதேநேரத்தில் நாம் மற்ற நாடுகளோடு கொள்ளும் உறவுகளும் செய்யும் ஒப்பந்தங்களும் நம்முடைய சுதந்திரத்துக்கு எள்ளளவும் பாதகமாக அமையக் கூடாது. கண்ணீரும் செந்நீரும் விட்டு வளர்த்த சுதந்திரத்தை, கண்ணின் மணிபோல காப்பது நம் கடன்.

சுதந்திரமில்லாமல், சொர்க்க பூமியில் வாழ்வதைவிட, சுகங்களேயில்லாத சுதந்திர பூமியில் வாழ்வது மேல். இதுதான், “விதந்தரு கோடியின்னல் விளைந்தெனை யழித்திட்டாலும், சுதந்திர தேவி, நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்று பாடிய மகாகவியின் நிரந்தரச் செய்தி.

(இன்று பாரதியார் நினைவுநாள்) (கட்டுரையாளர்: பேராசிரியர்)

Posted in Aa Raa Venkatachalapathy, AR Venakatachalapathi, Award, Barathi, Bharathiyaar, Bharathy, British, Females, Feminism, Fighter, Freedom, French, Harikrishnan, Independence, India, Integration, Kattabomman, Kavithai, Liberation, Literature, Mahakavi, Nationalism, Panchali, Panjali, Poems, Poet, Pondicherry, Prize, Puthiya Kalacharam, Puthucherry, Ravi kumar, Ravikkumar, Saabu, Spirit, Tamil-Ulagam, V Vallabesan, Women | Leave a Comment »

PMK to fight against acquisition of agricultural lands for SEZs

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2006

தமிழக பகுதியில் விளைநிலங்களை எடுத்தால் மக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்

விழுப்புரம், நவ. 4: புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக தமிழக பகுதியில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தினால் பாமக போராட்டம் நடத்தும் என்று திண்டிவனம் எண்.பி கோ.தன்ராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அவர் கூறியது:

புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் உள்ள நிலங்களை ஆர்ஜிதம் செய்யப்போவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில எல்லையையொட்டி உள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் தென்னந்தோப்புகளும், விவசாய விளைநிலங்களும் உள்ளன. இந்த விளைநிலங்களை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் எடுத்துக்கொண்டால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

விளைநிலங்களை வர்த்தகரீதியான விமான நிலையத்திற்காக எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது. இப்பகுதி விவசாயிகள், இது குறித்து என்னிடம் முறையிட்டுள்ளதோடு, கையகப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தினர்.

ஆகவே இந்த முயற்சியை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இந்த விளைநிலங்களை கையகப்படுத்த முயன்றால், பொதுமக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகே நகர் கிராமத்தில் இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்ட பிரம்மாண்ட விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் தரைப்பகுதி முழுவதும் காங்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி அருகே உள்ள இந்த பழைய விமான நிலையத்தை வர்த்தகரீதியான விமானப் போக்கு வரத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் புதுச்சேரி மற்றும் தமிழக மக்கள் பலனடைவார்கள்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் சுற்றுலா மற்றும் கலாசார குழுவின் உறுப்பினர் என்ற முறையில் இது குறித்து மத்திய அரசிற்கு ஏற்கெனவே பல கடிதங்கள் எழுதியுள்ளேன்.

புதுச்சேரி விமான நிலையத்திற்காக கோட்டக் குப்பம் பகுதியில் நில ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை உடனடியாக கைவிடுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன் என்றார் அவர்.

Posted in acquisition, Agitation, Agriculture, Airport, Expansion, Farmers, Fight, PMK, Pondicherry, Projects, Puthucherry, SEZ, Tamil, workers | Leave a Comment »

Dance Bars Reopened – Puthuchery Hotel Clubs to benefit

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006

புதுச்சேரி ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை, அக்.13: புதுச்சேரி ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சியை நடத்த லைசன்ஸ் வழங்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

சில ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டிருந்த லைசன்ûஸ புதுச்சேரி அரசு புதுப்பிக்க மறுத்துவிட்டது. புதிய லைசன்ஸ் கேட்போரின் விண்ணப்பத்தையும் நிராகரித்துவிட்டது.

இதை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

புதுச்சேரி அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து புதுச்சேரி அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் பி.சதாசிவம், எஸ்.மணிகுமார் ஆகியோர் இந்த அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

தீர்ப்பு விவரம்:

பாரம்பரிய நடனம் உள்பட இந்திய நடன நிகழ்ச்சிகளை முழுவதுமாக தடை செய்வது சட்ட விரோதம். அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) பிரிவுக்கு இது எதிரானது. அதே நேரத்தில் நடன நிகழ்ச்சிகள் ஆபாசமானதாக இருந்தால் அதை போலீஸôர் அனுமதிக்கக் கூடாது.

ஒரு சில இடங்களில் ஆபாச நடனம் நடத்தப்பட்டதால், அனைத்து நடன நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கக் கூடாது. இது போன்று தடை விதிக்க சட்டம் இயற்றப்படாத நிலையில், அதிகாரிகளே இத்தகைய உத்தரவை பிறப்பிக்க முடியாது. நடன நிகழ்ச்சி நடத்தும் லைசன்ûஸ யாராவது தவறாக பயன்படுத்தினால் அந்த லைசன்ûஸ போலீஸôர் ரத்து செய்யலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Posted in Bars, Clubs, Court, cultural conditioning, girls, Hotel, License, moral policing, Nude, Order, Police, Pondicherry, pondichery, Pondycherry, prostitution, Puthuchery | Leave a Comment »

Puthucehrry’s First CM – Pakkiri Saami Pillai

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

சொந்தச் செலவில் இலவச அரிசி வழங்கிய முதல்வர்

சோ. முருகேசன்

முதன்முதலில் ஏழைகளுக்கு இலவச அரிசியைத் தனது சொந்தச் செலவில் வழங்கினார் ஒரு முதல்வர். அவர் புதுவையின் முதலாவது முதலமைச்சரான சா. பக்கிரிசாமிப்பிள்ளை. 1955இல் ஏகமனதாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1906ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி காரைக்காலில் பிறந்தவர்.

பிரெஞ்சிந்திய விடுதலைக்குப்பின், 1955 ஜூலையில் நடந்த புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களையும், மக்கள் முன்னணி 21 இடங்களையும் கைப்பற்றின. பின்னர் சில உறுப்பினர்கள் அணி மாறியதன் விளைவாக இறுதியாகக் கட்சிகளின் பலம் – காங்கிரûஸ ஆதரித்து 20 உறுப்பினர்கள், மக்கள் முன்னணியை ஆதரித்து 19 உறுப்பினர்கள் என்ற நிலை ஏற்பட்டது.

அப்போது புதுச்சேரியில் கூடிய சட்டசபை காங்கிரஸ் கமிட்டி சா. பக்கிரிசாமிப்பிள்ளையைக் கட்சித் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது. புதுச்சேரி மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பிள்ளையவர்கள் ஆகஸ்ட் 13இல் பதவியேற்றார். அவருடன் ஐவர் அமைச்சராகப் பணியேற்றனர் –

  1. எதுவார் குபேர்,
  2. தியாகராஜ நாயக்கர்,
  3. சந்திரசேகர செட்டியார்,
  4. முகமது யூசுபு,
  5. எஸ். தட்சணாமூர்த்தி முதலியார் ஆகியோர்.

1955இல் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கிரிசாமிப்பிள்ளை 1946ஆம் ஆண்டு முதல், காரைக்கால் கொம்யூன் மேயராகத் தொடர்ந்து பணியாற்றி மக்களிடம் பெயரும் புகழும் பெற்றவராவார்.

“”ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கலாம்” என்ற எண்ணமே நாட்டில் ஏற்படாத காலத்தில், மழைக்காலங்களில் பசியால் அவதியுறும் ஏழை மக்களுக்கு இலவசமாக இவரது சொந்தச் செலவில் அரிசி விநியோகம் செய்து மக்களின் உள்ளத்தில் இடம்பெற்றவர் பிள்ளையவர்கள். தீபாவளியின்போது ஏழைகளுக்கு இலவச வேட்டி, புடவை வழங்குதல் இவரது வாழ்க்கையில் ஓர் அங்கம்.

இதேபோன்று ஆண்டுதோறும் இவர் நடத்தும் கிருஷ்ணஜெயந்தி விழாவின்போது, அரண்மனை போன்ற தனது வீட்டின் உள்ளே ஏழை, பணக்காரர், உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும், நெய் சொட்டச் சொட்ட சர்க்கரைப் பொங்கல் சமபந்தி போஜனம் நடத்தியவர் பிள்ளையவர்கள்.

1947இல் நடந்த சேனாத்தேர் (செனட்டர்) தேர்தலில் பக்கிரிசாமிப்பிள்ளை வெற்றி பெற்று, பாரீசிலுள்ள மேல்சபை உறுப்பினராக 1954 வரை சிறந்த பணியாற்றியுள்ளார். இவர் சேனாத்தேராக இருந்த காலத்தில் பிரெஞ்சிந்தியாவின் அரசியலமைப்பு சட்டங்களில் பல மக்களாட்சிக் கொள்கைகளைப் புகுத்தியுள்ளார்.

இவரது சேனாத்தேர் பதவிக் காலத்தில்தான், பிரெஞ்சிந்திய விடுதலை பற்றிய பேச்சுவார்த்தைகள் இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே பாரீசில் நடைபெற்றன. அமைதியான முறையில் “”கத்தியின்றி ரத்தமின்றி”ப் பிரெஞ்சிந்தியா புதுச்சேரி மாநிலமாக மாறியது இவரது இராஜதந்திரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இக்காலக்கட்டத்தில், பண்டித நேருவின் நெருங்கிய தொடர்பையும், அவரது நன்மதிப்பையும் பெற்றார்.

பிள்ளையவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் மறக்க முடியாத பல செயல்கள் செய்துள்ளார். அவைகளில் “”எல்லோருக்கும் கல்வி” என்ற அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள எல்லா குக்கிராமங்களிலும், சரியான போக்குவரத்து இல்லாத எல்லா சிற்றூர்களிலும் நூற்றுக்கணக்கில் “”ஓராசிரியர் பள்ளிகள்” புதுச்சேரியிலும், காரைக்காலிலும், மாஹேயிலும், ஏனாமிலும் தொடங்கப்பட்டன. இந்த ஓராசிரியர் பள்ளிகள் இன்று உயர்நிலைப் பள்ளிகளாகவும், மேனிலைப் பள்ளிகளாகவும் காட்சியளிக்கின்றன!

பிள்ளையவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்த மற்றொரு மாபெரும் சிறப்பு நிகழ்ச்சி, பாரதப் பிரதமர் பண்டித நேரு 1955 அக்டோபர் 3இல் காரைக்காலுக்கு வருகை தந்ததாகும். அன்று மாலை தோமாஸ் பிள்ளைத் திடலில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய பண்டித நேரு, இம்மாநில வளர்ச்சிக்கும், மக்கள் மகிழ்ச்சிக்கும் நடுவண் அரசு அனைத்தையும் செய்யும் என்று உறுதியளித்தார். இம் மாநிலத்தில் பன்னெடுங்காலமாக நிலவி வரும் பிரெஞ்சு மொழி மற்றும் பண்பாடு, மாநிலத்தில் நிலவி வந்த தனிச்சலுகைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என முழக்கமிட்டார்.

புகழேணியின் உச்சியில் வீற்றிருந்த பக்கிரிசாமிப்பிள்ளை, 1956 ஜனவரி 13இல், நகராட்சி மன்றத்தில் தனது கடமைகளை ஆற்றிவிட்டு வீடு திரும்பியவர் திடீரென மாரடைப்பால் பகல் 1.30 மணியளவில் காலமானார்.

(இன்று பிள்ளையவர்களின் நூற்றாண்டு நாள்.)

Posted in Biography, Biosketch, CM, Colony, Congress, France, French India, Lifesketch, Makkal Munnani, Memoir, Pakkiri Saami Pillai, Pondicherry, Puthucehrry, Senator, Tamil | 1 Comment »