Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Police Commissioner’ Category

Bhogi, Chain Snatcher Thieves, Auto Rikshaw ripoffs – Police Commissioner Lathikha Charan

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் டிரைவர்கள் மீது நடவடிக்கை: லத்திகா சரண் சென்னை, ஜன. 12: பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேலாக கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.

“போகி’ பண்டிகையின்போது டயர், ரப்பர் உள்ளிட்ட பழைய பொருள்களை தீயிட்டு எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், திருட்டு போன பொருள்களை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது போலீஸ் கமிஷனர் லத்திகா சரண், நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், ராயபுரத்தில் உள்ள சாந்தி காலனியைச் சேர்ந்த சீனிவாசன் (எ) பர்மா சீனு (38) மற்றும் பாபு (21) உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

60 பவுன் பறிமுதல்: இவர்களிடம் இருந்து 60 பவுன் தங்க நகைகள், 9 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.2,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.6.89 லட்சமாகும்.

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம்: ஆட்டோக்களில் கூடுதல் கட்டண முறை வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக போக்குவரத்து போலீஸின் “103′ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

டயர் எரித்தால் நடவடிக்கை: போகி பண்டிகையின் போது டயர், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் உள்ளிட்ட பழைய பொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. எனவே, பழைய பொருள்கள் எரிப்பவர்கள் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸôர் ரோந்து வாகனங்களில் வந்து கண்காணிப்பர்.

காணும் பொங்கலை முன்னிட்டு போலீஸôர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், குடிசைப் பகுதிகளில் வாழும் சிறுவர்களிடையே விளையாட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விமான நிலைய பாதுகாப்பு: விமான நிலையத்தில் தீவிரவாதச் செயல்களை தடுப்பதில் போலீஸôர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். வாகனங்கள் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனங்களின் எண்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றார் லத்திகா சரண்.

Posted in Auto, Auto Drivers, Auto Rikshaw, Bhogi, Chennai, Lathiga Saran, Lathika Charan, Latika Charan, Madras, Police Commissioner, ripoffs, Tyres | Leave a Comment »

Police Force – History, Perspectives, Evolution & Backgrounders : Human Rights

Posted by Snapjudge மேல் ஜனவரி 5, 2007

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?

ஆர். நடராஜ்

ஆண்டு 1860. ஆகஸ்ட் 17-ம் நாள்.

இது இந்திய காவல் துறை சரித்திரத்தில் மிக முக்கியமான நாள். அன்றுதான் முதல் போலீஸ் கமிஷன் எம்.எச். கோர்ட் தலைமையில் அப்போதைய மதராஸ் காவல் துறைத் தலைவர் டபிள்யூ. ராபின்ஸன் உள்ளிட்ட ஆறு நபர் குழாம் அமைக்கப்பட்டது.

இந்தக் கமிஷனின் பரிந்துரையின் பேரில் இந்திய காவல் சட்டம் 1861 இயற்றப்பட்டது. இது இந்தியாவில் உள்ள காவல் துறை அமைப்பை இன்றுவரை நிர்ணயிக்கும் சட்டம்.

இந்தச் சட்டத்துக்கு அடித்தளம் 1859-ல் இயற்றப்பட்ட மதறாஸ் சட்டம் 27 – இது அப்போதிருந்த மதறாஸ் மாகாணத்தின் காவல் துறை அமைப்பை நிர்ணயித்தது. இந்தச் சட்டத்துக்கு முன்னோடியாக இருந்தது 1856ல் இயற்றப்பட்ட சென்னை மாநகர காவல் அமைப்புச் சட்டம்.

ஆம், சென்னை நகர காவல் சட்டம் பிரிவு XIII 1856 பின்பு வளர்ந்த காவல் அமைப்புகளுக்கு வழிகாட்டி என்பதுதான் உண்மை.

1856 சென்னை நகர காவல் சட்டப்படி போல்டர்சன் முதல் ஆணையாளராகப் பொறுப்பேற்றார். குற்றவியல் நீதித்துறை தலைவர் அந்தஸ்து அவருக்குத் தரப்பட்டது.

1856 முதல் சுதந்திரமாகச் செயல்பட்ட நகர காவல் துறை, 1867ல் மாகாண காவல் துறைத் தலைவர் ஆளுமையில் கொண்டு வரப்பட்டு, பின்பு 1887 முதல் கைல்ஸ் குழுவின் பரிந்துரையின் பேரில் தனிப்பிரிவாக அரசின் பிரத்தியேக அதிகாரத்தின் கீழ் செயல்பட்டது.

1902 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட போலீஸ் கமிஷன், சென்னை, மும்பை, கோல்கத்தா நகரங்கள் மற்றும் மாகாணங்களில் செயல்பட்ட காவல் துறையின் செயல்பாடுகளை ஆராய்ந்து காவல் துறை சீரமைப்புத் திட்டத்தை வகுத்தது. அதன்படி மீண்டும் மாநகர காவல் துறை மாகாணத்தின் காவல் துறையின் ஆளுமையின்கீழ் கொண்டு வரப்பட்டது.

1886ஆம் ஆண்டு சென்னை “மக்கள் பூங்கா’வில் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. ஒரு மிகப்பெரிய பொருள்காட்சி இந்த மைதானத்தில் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் 372 பேர் உயிரிழந்தனர்.

இம்மாதிரி மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக அதிக காவலர்கள் தேவைப்பட்டதால், அண்டை மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். “மொஹரம்’ சமயச் சடங்குகள் சமயத்தில் சென்னையில் அடிக்கடி சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டது. உயிரிழப்பும் ஏற்பட்டது. இதைக் கருதி “சேமைப்படை’ உருவாக்கப்பட்டது. “மாகாண சேமைப்படை’யும் நிறுவப்பட்டது.

மேற்கூறிய தீவிபத்து மற்றும் அசாதாரணமாக நிகழும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு சென்னை நகர காவல் சட்டம் பிரிவு XIII 1888 அமலாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் சென்னை நகர காவல் துறை இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்பு கொடுப்பது காவல் துறையின் பணி என்பதை கருத்தில்கொண்டு இம்மாதிரி கேளிக்கை இடங்களுக்கு ஆணையாளரிடமிருந்து உரிமம் பெற வேண்டும் என்று இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

விபசாரம் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது இன்றைய நிலை. ஆனால் அன்று இது ஒரு சமூகத்தில் உறைந்துள்ள தீயொழுக்கம் என்று கருதப்பட்டது. 1887 ஆம் ஆண்டில் சென்னையில் 620 அங்கீகரிக்கப்பட்ட விலை மாதர்கள் இருந்தனர். உரிமம் பெற்ற 237 சாராயக் கடைகளும், 343 கள்ளுக்கடைகளும், 139 போதைப் பொருள்கள் விற்பனை இடங்களும் இருந்தன என்பது அப்போது இருந்த சமுதாய நிலையைப் பிரதிபலிக்கிறது.

1946ல் இருந்து சென்னை மாநகர விரிவாக்கம் தொடங்கப்பட்டு, புறநகர்ப் பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து படிப்படியாக இணைக்கப்பட்டன.

2005ல் சென்னை நகரத்தின் பரிணாம வளர்ச்சியைச் சமாளிக்க சென்னைப் பெருநகர காவல் துறை உருவாக்கப்பட்டு, மேலும் பல புறநகர்ப் பகுதிகள் சென்னையோடு இணைக்கப்பட்டன. இன்று 121 காவல் நிலையங்கள் மற்றும் 34 மகளிர் காவல் நிலையங்களும் இயங்குகின்றன. சென்னை துறைமுகப் பாதுகாப்புக்காக பிரத்தியேக மிதக்கும் கடலோர காவல் நிலையம் இயங்குவது இந்தியாவிலேயே சென்னையில் மட்டும்தான் என்பது சென்னை மாநகர காவல் துறையின் மற்றொரு சிறப்பு.

சென்னை ஆணையாளராக முதலில் பதவி பெற்றவர் போல்டர்சன். பராங்குசம் நாயுடு முதல் இந்தியராக இந்தப் பதவியை அலங்கரித்தவர்.

சமீபகாலத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, ரோந்து வண்டிகளுக்கு பூகோள நிர்மாணிப்புக் கருவி பொருத்தப்பட்டு செயல்முறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.

சமுதாய காவல்பணி மேலும் மேம்படுத்தப்பட்டு ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் சமுதாய காவல்பணி மையங்கள் அமைக்கப்பட்டன.

குற்றத்தடுப்பு நடவடிக்கை, நடந்த குற்றங்களைக் கண்டுபிடிக்க பிரத்தியேக முயற்சி, மீட்கப்பட்ட பொருள்களை உரியவரிடம் ஒப்படைத்தல், நடந்த குற்றங்களைத் துரிதமாகப் புலனாய்வு செய்து முடித்தல், போக்குவரத்தை சீரமைத்தல், தானியங்கி சமிஞ்கை நிறுவுதல், சைபர் குற்றங்களை எதிர்கொள்ளல், பொதுமக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து மனித நேயத்தோடு தீர்வு காணுதல், குழந்தைகள் குற்றங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க சிறார் மன்றங்களை நிறுவுதல் போன்ற பல ஒருங்கிணைந்த பணிகள் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல சென்னை மாநகர பதினைந்து காவல் நிலையங்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் பெறப்பட்டது.

இன்று நவீன மயமாக்குவதில் மேலும் ஒரு மைல்கல், பல தொழில் நுட்ப உபகரணங்கள் கொண்ட ரோந்து வாகனங்கள். இம்மாதிரி 100 ஹூண்டாய் வாகனங்கள் தமிழக முதல்வரால் சென்னை மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டன. இந்தியாவில் வேறு எந்த ஒரு நகரத்திலும் இம்மாதிரியான நவீன வாகனங்கள் இல்லை.

காவல் துறையினரிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது நேர்மை, கண்ணியம், கடமை உணர்வு, காவல் நிலையங்களில் அனுசரணையான அணுகுமுறை. பாரம்பரிய வளம் பெற்றது தமிழக காவல் துறை. தமிழக காவலர்கள் நல்லொழுக்கத்துக்கு எடுத்துக்காட்டு. எவ்வளவோ சவால்களையும், சுமைகளையும் கடந்து புடம் போட்ட தங்கமாக மிளிர்வது நமது காவல் துறை. தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? ஆயிரக்கணக்கான காவலர்களின் வியர்வையில் வளர்ந்தது இந்தத் தல விருட்சம். அதனை மேலும் மேம்படுத்துவது ஒவ்வொரு காவல் துறை ஆளுநரின் கடமை.

சென்னை காவல் துறை, 150-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், காவல் துறைக்கு நற்பணியாற்றிய பல சிகரங்களை எட்டிய பெரியவர்களின் பணிகளை நினைவு கூர்வோம். சமுதாயப் பணிக்காக உயிரைக் கொடுத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செய்வோம்.

“”நேசமான அணுகுமுறை, பொறுப்புணர்ச்சி, வெளித் தலையீடுக்கு அடிபணியாதிருத்தல், பரிவோடு நம்பிக்கை வரும் வகையில் நடத்தல், திறமையான உயர்தர ஆளுமை காவல் துறையின் எல்லா மட்டத்திலும் பரிமளித்தல் ஆகிய நல்லியல்புகள் காவல் துறை மேன்மை அடைய இன்றியமையாதவை’ என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ள அறிவுரைக்குச் செயல்வடிவம் கொடுப்போம். இதுவே ஒவ்வொரு காவல் துறையினரின் குறிக்கோளாகவும் அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: காவல் துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).

Posted in Arrack, Correctional Force, Cyber Crime, DGP, Drugs, History, Human Rights, IG, Law, Legal Sex, Madras Police, MH Court, Order, Parangusam Naidu, Polderson, Police Commissioner, Prostituition, R Nataraj, Sex, Society, Toddy Shops, W Robinson | Leave a Comment »

Indian Military vs West Bengal Police in Calcutta

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2007

பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய இராணுவத்தினர்- கொல்கத்தாவில் சம்பவம்

இந்திய இராணுவத்தினர்
இந்திய இராணுவத்தினர்

புத்தாண்டுக் கேளிக்கை கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்டத்திர ஒட்டலுக்கு சென்ற இந்திய இராணுவத்தின் மேஜர் மற்றும் கேப்டன் தர அதிகாரிகள் இருவர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த இரண்டு அதிகாரிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு – காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதையறிந்த, அந்த இரு அதிகாரிகள் பணிபுரியும் 3 ஆவது மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப் கேணல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும், சில சிப்பாய்களும், தானியங்கி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று, தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளை விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல் நிலையத்தையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.

இதில் 11 காவலர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்ட வேறு சிலர் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க அரசு இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.

சீரழிந்துவரும் ஒழுங்கு நிலை, பொதுமக்களின் ஏமாற்றம், குற்றப்பிரிவினர் செயற்படாதமை, நாட்டில் குற்றம் புரிந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பது போன்ற நிலைமைகளில் உருவாகின்ற இராணுவத்தினர் மத்தியிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கர்ணல். ஹரிகரன் கூறியுள்ளார்.

இராணுவத்தினர் செய்யும் சில பாதகமான நடவடிக்கைகள் மாத்திரமே செய்திகளாக வெளிவருவதாகவும், அவர்கள் செய்யும் நல்ல செயல்கள் எதுவும் வெளிவருவதில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

Posted in Army, Calcutta, Captain, Captain Mahesh, Colonel, Demolition, Government, Incidents, India, Jail, jawans, Kolkata, Lieutenant-Colonel Pratap Singh, Madras Regiment, Major, Major Chandra Pratap Singh, Major Kavi, Military, Misbehaviour, Molest, Negative, New Year, officers, Park Street, Police, Police Commissioner, Police Station, Prison, Protest, raiders, ransacking, WB, West Bengal | 2 Comments »