Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு
புதுடெல்லி, ஆக. 8-
2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.
இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.
தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.
மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:
சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)
அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.
சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)
சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.
நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).
தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).
சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)
சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)
சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)
சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)
சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)
சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).
சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)
சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)
சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).
தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.
சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.
டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.
ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.
ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007
திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.
திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.
இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.
இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.
Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007
‘‘சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’’
நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் கந்த சஷ்டிகவசத்தை அதிகாலையில் கேட்கும்போது அந்த முருகனே நம்மை நேரில் வந்து தட்டி எழுப்புவது போன்று ஒரு சிலிர்ப்பான உணர்வு ஏற்படும். வரிகள் மட்டுமல்ல, கவசத்தை உச்சரிக்கும் அந்தத் தேன் குரல்களும் நம்மை இனம்புரியாத ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்வது நிஜம்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் காதுகளில் ஒலிக்கும் அமுதகீதம் அது. பாடலைக் கேட்கும்போதே சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமியும், ராஜலட்சுமியும் மின்னலாக நம் நினைவிற்கு வருவார்கள். சமயத்தில் அது இரண்டு குரலா அல்லது ஒரே குரலா என்ற சந்தேகம் கூட ஏற்படும். அத்தனை ஸ்ருதி சுத்தம். அத்தனை புரிந்துகொள்ளுதல்! அது கர்நாடக சங்கீதமாக இருந்தாலும் சரி, மெல்லிசை பக்திப் பாடல்களாக இருந்தாலும் சரி இவர்கள் குரலில் ஒரு தெய்வீகத் தன்மை இருக்கும்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் சூலமங்கலம்! அந்த ஊர் கர்ணம் ராமசாமி ஐயர் _ ஜானகி தம்பதிக்குப் பிறந்த சகோதரிகள்தான் ராஜலட்சுமியும், ஜெயலட்சுமியும். மூத்தவர் ஜெயலட்சுமி. இளையவர் மறைந்த ராஜலட்சுமி. சகோதரிகளில் கடைக்குட்டி சரஸ்வதி! தங்கள் சங்கீத வாழ்க்கையில் இவர்கள் குடும்பம் சந்தித்த கடுமையான போராட்டங்களும், சோகமான நெருக்கடிகளும் ஏராளம்! ஆனால், எந்தக் கட்டத்திலும் அவர்கள் தாங்கள் நேசித்த சங்கீதத்தை விட்டுவிடவில்லை. எட்டு வயதில் குடும்பச் சுமையை சுமக்கப் போகிறோம் என்பது சின்னப் பெண் ராஜலட்சுமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!
மாயவரம் பக்கத்திலுள்ள திருச்செம்பொன்பள்ளி மாரியம்மன் இவர்கள் குலதெய்வம். அங்கு சின்ன வயதில் ராஜலட்சுமி கூட்டத்தில் காணாமல் போய்விட்டாராம். உறவினர்கள் அனைவரும் ஆளுக்கொரு மூலையில் தேடியபோது, ஒரு கிராமத்தின் வயல் பரப்பில் ஒரு பெண், குழந்தை ராஜலட்சுமியை கையில் பிடித்து கொண்டிருந்தாராம். ஓடி குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டபோது அந்த அம்மாளைக் காணவில்லை. மாரியம்மனே தன் குழந்தையைக் காப்பாற்றியதாக உணர்ந்த அவர்கள், குழந்தை ராஜலட்சுமியை ‘மகமாயி பிச்சை’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
சூலமங்கலம் கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை ராதா கல்யாண உற்சவம் பத்து நாட்கள் அமர்க்களமாக நடக்கும். இந்த விழாவில் பாட, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரிய பெரிய சங்கீத மேதைகள் வருவார்கள். இவர்களது கச்சேரிகளைக் குழந்தைகள் ஜெயலட்சுமியும், ராஜலட்சுமியும் தனது பெற்றோருடன் சென்று கேட்பது வழக்கம். இதனால் இவர்கள் சின்ன வயதிலேயே இசையால் ஈர்க்கப்பட்டார்கள். பெற்றோர் குழந்தைகளின் இசை ஆர்வத்தைப் பார்த்து கிராமத்தில் இருந்த வைத்தியநாத பாகவதரிடம் சங்கீதம் கற்க அனுப்பி வைத்தார்கள்.
குட்டிப் பெண் ராஜலட்சுமியின் இசை ஞானத்தை அப்போதே பலர் பிரமிப்புடன் பார்த்தனர். ஏழு வயதிலேயே மேடை ஏறி கச்சேரி செய்தார். சுற்று வட்டாரங்களில் குழந்தையின் பாடலைக் கேட்க பலர் ஆர்வத்தோடு வந்தார்கள். எட்டு வயது இருக்கும்போது ராஜலட்சுமியின் தந்தை மரணம் அடைந்தபோது, அந்தக் குடும்பம் நிலை குலைந்துபோனது. வீட்டில் எல்லாருமே சின்னஞ்சிறுசுகள்! ராஜலட்சுமியின் தங்கை சரஸ்வதிக்கு ஆறு வயது. தம்பி சேதுராமனுக்கு மூன்று வயது. நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு, என்ன செய்வதென்று புரியாமல் ராஜலட்சுமியின் தாயார் ஜானகிஅம்மாள் தவித்துப் போனார். அந்த நேரம் அவருடைய சகோதரர் ராணுவத்தில் உயர்பதவியில் இருந்தார். குழந்தைகளை வைத்துக்கொண்டு தனது சகோதரி தடுமாறுவதைப் பார்த்து சகோதரர் தனது வேலையை ராஜினாமா செய்தார். உடனே சூலமங்கலத்திலுள்ள வீடு, நிலங்களை விற்று தன் சகோதரி குடும்பத்தாரை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். சென்னை மைலாப்பூரிலுள்ள நாட்டு சுப்புராய முதலி தெருவில் குடியேறினார்கள்.
இதனால் ராஜலட்சுமிக்கு ஸ்கூல் படிப்பு பாதியோடு நின்றது. சென்னையில் வைத்தியநாத அய்யர், நாரதர் ஸ்ரீனிவாசராவ் ஆகிய இருவரும் அந்தக் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்தனர். சகோதரிகள் இருவரையும் பத்தமடை கிருஷ்ணனிடம் (பாரதியார் மருமகன்.) முறைப்படி சங்கீதம் கற்க வைத்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கற்றுக்கொண்டனர். மாலை நேரங்களில் சின்னச் சின்ன கோயில்களில் ராஜலட்சுமியின் கச்சேரி நடக்கும். கூடவே அக்காள் ஜெயலட்சுமியும் சேர்ந்து பாடுவார். சிறுமி ராஜலட்சுமி பாடியது அனைவரையும் கவர்ந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கச்சேரிகளில்கூட பாடும் வாய்ப்புக் கிட்டியது. கச்சேரிகள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றினார்கள். கூடவே கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் புகழ் பரவ ஆரம்பித்தது. குழந்தைகளின் பாட்டைக் கேட்டு பாராட்டாதவர்களே இல்லை.
ஒருமுறை நாரதர் சீனிவாசராவ் நடத்திய கண்காட்சியில் சூலமங்கலம் சகோதரிகள் பாடினார்கள். அப்போதுதான் சிறையிலிருந்து வெளியே வந்திருந்த தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் இவர்களின் கச்சேரியைக் கேட்க வந்திருந்தார்கள். சகோதரிகள் பாடும் திறமையைக் கண்டு அசந்து போய்விட்டார்களாம். பாகவதர், சிறுமி ராஜலட்சுமியை அழைத்து பல தீட்சிதர் கிருதிகளைப் பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்தப்பட்டார். பி.யூ.சின்னப்பா தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகளின்போது சிறுமி ராஜலட்சுமியை அழைத்து, அவரைப் பாடச்சொல்லி, தான் கஞ்சிரா வாசிப்பது வழக்கமாகவே ஆகிவிட்டது.
லேனா செட்டியார் தயாரித்த ‘கிருஷ்ணபக்தி’ (1948) படத்தில் வரும் ‘கடவுளைக் கண்டேன், கண்ணன் மேல் காதல் கொண்டேன்’ என்ற பாடல்தான் ராஜலட்சுமி பாடிய முதல் சினிமா பாடல். அப்போது அவருக்கு வயது பன்னிரண்டு. அந்த வயதில் அவருக்கிருந்த ஞானமும் மனோதைரியமும் பலரைக் கவர்ந்தது. இதைத் தொடர்ந்து பல பாடல்களுக்குப் பாடும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன.
‘கொஞ்சும் சலங்கை’யில் ‘காணக் கண் கோடி வேண்டும்’, ‘படிக்காத மேதை’யில் ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா…’ ‘குங்குமம்’ படத்தில் ‘குங்குமம், மங்கள மங்கையர் குங்குமம்..’ என்று நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி தமிழ்த் திரை இசை உலகிற்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தார்.
1957_ல் ராஜலட்சுமிக்குத் திருமணம் நடந்தது. அப்போது சினிமா துறையில் உதவி இயக்குநராக இருந்த பாலகிருஷ்ணனைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அடுத்த ஆண்டே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையனின் பெயர் முரளி.
பழனியில் பங்குனி உத்திரம் தங்கத்தேர் அன்று இவர்கள் கச்சேரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ‘பழனி என்னும் ஊரிலே பழனி என்னும் பேரிலே, பவனி வந்தான் தேரிலே, பலனும் கண்டான் நேரிலே…’ என்று பாடும்போது தங்கத்தேரில் சரியாக முருகன் உலா வருவாராம். பக்தர்கள் இவர்கள் பாடலையும் முருகனையும் ஒரு சேர தரிசிப்பதைப் பாக்கியமாகக் கருதினார்கள்.
‘முருகனுக்கொரு நாள் திருநாள்’ உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தன் சகோதரியோடு பாடியிருக்கிறார் ராஜலட்சுமி. ‘தேவரின் தெய்வம்’ படத்தில் ‘வருவான்டி, தருவான்டி’ பாடல்தான் ராஜலட்சுமி பாடிய கடைசி சினிமா பாடல்.
கந்தசஷ்டி கவசத்தை ராஜலட்சுமி, தன் சகோதரி ஜெயலட்சுமியுடன் பாடிப் பதிவு செய்து வெளியிடவேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால், பல கிராமபோன் ரிக்கார்டு கம்பெனிகள் முதலில் மறுத்தன. ‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் வீண் முயற்சி’’ என்றார்கள். ஆனால் ராஜலட்சுமி விடவில்லை. அக்கா ஜெயலட்சுமியுடன் சேர்ந்து இந்த கந்தசஷ்டி கவசத்திற்கு எப்படி டியூன் போட்டுப் பாடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்து முதலில் ‘ஆபேரி’ அடுத்து ‘சுப பந்துவராளி’. அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’. இப்படி நான்கு ராகத்தில் பாடல் பாடப்பட்டு 1970_ல் ரிக்கார்டு செய்யப்பட்டது. முதலில் 500 எல்.பி. ரிக்கார்டுதான் போடப்பட்டது. பிறகு, அதுவே ரிக்கார்டு விற்பனையில் மிகப் பெரிய சாதனையாக மாறிவிட்டது.
1992_ல் ஜூன் மாதம் மஞ்சள் காமாலை நோய் வந்து சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ராஜலட்சுமி. சிகிச்சை பலனளிக்காமல் தனது 54 வயதில் ராஜலட்சுமி மரணம் அடைந்தார்.
மந்தைவெளியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில்தான் இன்றைக்கும் ராஜலட்சுமியின் அக்காள் ஜெயலட்சுமியும், தங்கை சரஸ்வதியும் வாழ்கிறார்கள். ‘‘தங்கை ராஜலட்சுமி இறந்தபிறகு நான் பாடுவதையே நிறுத்திவிட்டேன். சின்ன வயசிலிருந்தே அவளுக்கு அவ்வளவு இசைஞானம். சகோதரிகளுக்குள் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை. அவள் அடிக்கடி என்னைப் பார்த்துச் சொல்லுவாள், ‘நீ இராமனாக நடந்துகொண்டு இருக்கிறே… நான் சீதையாகப் பின் தொடர்வேன்’ என்பாள். இப்போது எனக்கு முன்னால் சென்றுவிட்டாள்’’ என்றபோது குரல் கரகரத்தது. ‘‘கந்த குரு கவசம்’ ரிக்கார்டு செய்து கொண்டு இருந்தோம். இது கேசட்டில் கந்த சஷ்டி கவசத்திற்கு அடுத்த பக்கம் வருவது. இருவரும் ஒரு பத்து பன்னிரண்டு வரி பாடியிருப்போம். திடீரென்று ராஜலட்சுமிக்கு வீரஆவேசம் வந்துவிட்டது. தனியாகவே பாட ஆரம்பித்தாள். நான் பாடுவதை நிறுத்திக்கொண்டேன். இறுதியில் முடிக்கும்போது சேர்ந்தே பாடிமுடித்தோம்’’ என்று பழைய நினைவலைகளில் மூழ்கிவிட்டார் ஜெயலட்சுமி.
ஜெயலட்சுமிக்கும் சரஸ்வதிக்கும் குழந்தை பிராப்தம் இல்லை. ராஜலட்சுமியின் மகன் முரளியைத்தான் தங்கள் மகனாக நினைக்கிறார்கள். முரளி_ வசந்தி தம்பதியருக்கு ஒரே பையன் விஷால். இன்ஜினீயரிங் படிக்கிறார்.
நாம் விடைபெறும் நேரம் ஜெயலட்சுமியிடம், ‘‘ராஜலட்சுமியுடன் சேர்ந்து பாடிய திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடலை எங்களுக்காகப் பாடுங்களேன்’’ என்றபோது சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாடினார். பல்லவியை முடித்துவிட்டு, அனுபல்லவியில் ‘‘பழனியிலே இருக்கும் கந்தப்பழம்! உன் பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்!’’ என்கிறபோது அவர் குரல் உடைகிறது. ‘‘ராஜலட்சுமி இந்த இடத்தில் என்னமாய் பாடுவா!’’ என்று சொல்லும்போது, ஜெயலட்சுமியின் கண்களில் நீர் முட்டுகிறது. அதற்குமேல் அவரால் பாட முடியவில்லை. அவர்கள் மட்டுமே உணரக்கூடிய பாசம் அது.
Posted in Audio, Biography, Biosketch, Cinema, Faces, Jayalakshmi, Kandar, Kandha, Kavacam, Kavacham, Kavasam, Kumudam, Lady, Movies, music, people, Playback, Rajalakshmi, Refer, Reporter, Saravanan, Sashti, Series, She, Singer, Sisters, Soolamangalam, Soolamankalam, Sulamangalam, Sulamankalam, Talent, Thiruvengimalai, Women | 4 Comments »