Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Planning’ Category

Tamil Nadu Public Works Department (PWD) – Villages’ infrastructure facilities & Support systems for TN river basin resources

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

பொதுப்பணித்துறைக்கு மூடுவிழாவா?

நீதி. செங்கோட்டையன்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டல்ஹெüசி பிரபுவால் 1849-ம் ஆண்டு இந்தியாவில் பொதுப்பணித்துறை துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரயில், பேருந்து, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கோடு துவக்கப்பட்ட இத்துறை, நாளடைவில் வேளாண் தொழிலின் உயிரோட்டமான நீர்நிலைகளைச் சீரமைக்கும் தலையாய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

அந்தவகையில் மத்திய பொதுப்பணித்துறையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியாக மாநிலப் பொதுப்பணித்துறையும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை ரெகுலர் பிரிவு, தாற்காலிகப் பிரிவு (திருச்சி, வேலூர் ஆகிய இரு வட்ட அலுவலகங்களின் கீழ் பல கோட்ட அலுவலகங்கள்) என இரு பிரிவுகளாகப் பொதுப்பணித்துறை செயல்படுகிறது.

இதில் ரெகுலர் பிரிவு ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளின் நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண் தொழிலுக்கு வேண்டிய நீர்வளத்தைப் பெருக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

தாற்காலிகப் பிரிவானது, ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதிகளில் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது.

முக்கியமாக ஏரிப்பாசனத்தில் தமிழகம் முன்னிலையில் திகழ இந்த தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவின் பங்கு அளப்பரியது.

இதுபோன்ற முக்கியப் பணியை ஆற்றிவரும் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு தமிழக அரசு மூடுவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், தங்கள் தலையில் இடி விழுந்தது போல் உணர்கின்றனர்.

தென் மாவட்டங்களின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாகத் திகழ்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், பிழைப்புத் தேடி நகர்ப்புறத்துக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவு மூடப்பட்டால், ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணியில் மேலும் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அத்துடன், ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி தடைபட்டுப் போனாலும் போகலாம் என்ற அச்ச உணர்வும் பெரும்பாலான விவசாயிகளின் மனத்தைக் கவ்விக் கொண்டுள்ளது.

பொதுப்பணித்துறை ரெகுலர் பிரிவு வேளாண் கட்டமைப்பு தொடர்பான பணிகளை எப்போதுமே குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிப்பதில்லை.

இதனால் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா என்ற செய்தி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதைத் தவிர்த்து, ரெகுலர் பொதுப்பணித்துறை பிரிவில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் சுய ஆதாயத்தில்தான் அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். அதாவது, தங்களுக்கு கணிசமான கமிஷனை அள்ளிக் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே அதிகாரிகள் தனிப்பட்ட சுறுசுறுப்பும் உற்சாகமும் கொண்டுள்ளனர் என்பதையே விவசாயிகள் துணிவாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தவரிசையில், தற்போது தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா நடத்தும் நிலைக்கு தள்ளியது கூட, இந்த ரெகுலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கமிஷன் ஆசைதான் என்றும், அவசியம் ஏற்பட்டால் இதை எந்த இடத்திலும் தாங்கள் சொல்லத் தயார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதாவது ஒருகாலத்தில் ஆற்றுப்பாசனப் பகுதியில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியை மட்டுமே செய்து வந்த பொதுப்பணித்துறையின் ரெகுலர் பிரிவு, அண்மைக்காலமாக ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதியிலும் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது. ரெகுலர் பிரிவின் இந்த முனைப்புக்கு கமிஷன் தான் காரணம் என்பது தவிர எவ்வித நல்ல நோக்கமும் இல்லை.

மாநிலத்தில் மொத்தம் 39,000 ஏரிகள் உள்ளன. ஏரிப்பாசனத்தின் கீழ் 22 சதவீத நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் விவசாயத்தின் உயிரோட்டமான நீராதாரத்தைப் பெருக்குவதில் அரசு அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

குறிப்பாக விவசாயத்தின் ஜீவாதாரங்களான ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றைச் சீர்படுத்தி அவற்றை எப்போதும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது பொதுப்பணித்துறையின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகப் பொதுப்பணித்துறையின் செயல்பாடோ திருப்திகரமாக இல்லை.

இதேபோன்று மெத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் தென்மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து, இன்னொரு “விதர்பாவாக’ உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதற்கிடையில், “நதிகளை இணைப்போம்’ என்று அடிக்கடி கூறி வரும் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி இல்லாததால்தான் பொதுப்பணித்துறையின் தாற்காலிகப் பிரிவுக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளதாக உலா வரும் செய்திகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

Posted in Agriculture, basin, Dams, Duraimurugan, facilities, Farmers, Farming, Flyovers, GIS, Govt, Hydrology, infrastructure, Irrigation, Lakes, Management, Mgmt, Planning, Plng, Projects, Public, PWD, Resources, Rivers, service, Suicides, support, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichy, Vellore, Vidarba, Vidharbha, Vitharbha, Water | Leave a Comment »

TN Govt will accord priority to housing, water scheme: The Governor of Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஜனவரி 23, 2008

தைமுதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம்

40 சமத்துவபுரங்களிலும் தந்தை பெரியார் சிலை!

கல்வி, வேலை வாய்ப்பு, சமூகநீதி, தொழில்வளம், வேளாண்மை,
மகளிர் நலம், மருத்துவம்… … அடுக்கடுக்கான திட்டங்கள்

ஆளுநர் உரையில் மின்னும் ஒளிமுத்துகள்!


சென்னை, ஜன. 23- தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், 240 சமத்துவ புரங்களிலும் தந்தை பெரியார் சிலை உள்ளிட்ட அரிய அறி விப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.
தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் இன்று காலை 10 மணியளவில், தமிழ்நாடு சட்டமன்றப் பேர வையில் ஆற்றிய உரை வரு மாறு: (ஆளுநரின் ஆங்கில உரையைத் தொடர்ந்து சட்ட மன்றப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் அவர்கள் அவ் வுரையைத் தமிழில் படித்தார்). அமைதி தவழும் மாநிலம்
நமது நாட்டின் பிற மாநி லங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு அமைதி தவழும் மாநிலமாக விளங்கி வருகிறது.

மாநிலத்தில் தீவிரவாத நட வடிக்கைகள் எவையும் நடை பெறாவண்ணம் இந்த அரசு தொடர்ந்து விழிப்புடன் கண் காணித்து வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து நமது மாநிலத்திற்குள் தீவிரவாதம் ஊடுருவதற்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கூலிப்படையினருக்கு எதிராக இந்த அரசு கடும் நட வடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாய வளர்ச்சி காண்பதும், வறு மையை ஒழிப்பதுமே சாதிப் பூசல்களுக்கும், தீவிரவாதத் திற்கும் நிரந்தரத் தீர்வுகளாகும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது.

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கலாம்

நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வான தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை மத் திய அரசு செயல்படுத்தவேண் டுமென்றும், அதன் முதற்கட் டமாக, தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை உட னடியாகச் செயல்படுத்தவேண் டுமென்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் கூட, மாநிலங்களிடையே ஒரு மித்த கருத்து எதுவும் எட் டப்படாத நிலையே உள்ளது. எனவேதான், மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக் கும் திட்டத்தையாவது செயல் படுத்திட, மத்திய அரசு பதி னொன்றாவது அய்ந்தாண்டுத் திட்ட காலத்தில் நிதியுதவி வழங்கவேண்டுமென்று தமிழக அரசு கோரியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை யில், மேலும் தாமதமின்றி இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை இந்த அரசு விரைந்து மேற்கொள்ளும். மேலும், பருவ காலங்களில் தமிழக நதிகளின் உபரி நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, வறட்சியான பகுதிகள் வளம் பெறும் வகையில் நிலத் தடியில் சேமித்துப் பயன் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, இந்த அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைக்கும். நமது மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதி களில், ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் வீணாகும் நீரைத் தடுப்பணைகள் மூல மாகச் சேமித்து, ஆண்டு முழு வதும் வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்குப் பயன்படுத்து வதற்கான பெருந்திட்டம் ஒன்று வரும் நிதியாண்டிலி ருந்து செயல்படுத்தப்படும்.

சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்

தமிழக மக்களின் நீண்ட காலக் கனவாக விளங்குவதும் – 1860 ஆம் ஆண்டுமுதல் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே ஆய்வு நடத்திடத் தொடங்கப் பெற்று, பொறியியல் மேதை களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, சாத்தியக் கூறுகள் கண் டறியப்பட்டு, சான்றோர்கள் ஆன்றோர்களால் வரவேற்கப் பட்டதுமான – உலகத் தொடர் புகள், வணிகத் தொடர்புகள் விரிவாக்கப்பட்டு நம் நாடு மேலும் வளமும், வலிவும் பெறுவதற்குப் பயன்படக் கூடி யதுமான சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிடத் தொடங்கி, தற்போது அரசியல் ஆதாயத்திற்காக ஒரு சிலர் முன்னுக்குப் பின் முரணாக எழுப்புகிற வாதங்களுக்கு செவிசாய்த்து திட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி விடா மல் தமிழக மக்களின் எதிர் காலத்தை, ஏற்றமும் வளமும் மிக்க காலமாக மாற்றிடுவதி லிருந்து பின்வாங்காமல் – அந்த அரிய ஆக்கப்பூர்வமான திட் டத்தை நிறைவேற்றிட வேண் டுமென்று மத்திய அரசினை இந்த அரசு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

240 சமத்துவபுரங்களிலும் பெரியார் சிலை

தந்தை பெரியார் சிலை ஒன் றினை 95 அடி உயரத்தில் அமைக்கவேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களின் வேண் டுகோளினை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுள்ள நிலையில், ஓரிடத்தில் சிலை அமைப் பதைக் காட்டிலும், பெரியார் பெயரால் மேலும் 95 சமத்துவ புரங்களை அமைத்து; அனைத்து சமூகத்தினரும் சகோதர பாசத் துடன் ஒருமித்து வாழ்கின்ற அந்த ஒவ்வொரு சமத்துவபுரக் குடியிருப்பு முகப்பிலும் தந்தை பெரியார் அவர்களின் சிலையை அமைப்பதால், அவருடைய தலையாய கொள்கையான சமுதாயச் சமத்துவக் கொள்கை பரவுவதற்கு வழி ஏற்படும் என்பதற்காக அந்தப் பணியை இந்த அரசு தொடங்க முடிவு செய்துளள்து. ஏற்கெனவே இவ்வரசு அமைத்துள்ள 145 சமத்துவபுரங்களுடன் சேர்த்து, இப்பணி முடிவுற்ற பின் பெரியார் சிலையுடன் கூடிய 240 சமத்துவபுரங்கள் தமிழ கத்தில் அமையும்.

தைத்திங்களே தமிழ்ப் புத்தாண்டு

பெரும் புலவரும், தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்று வித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில், அய்ந் நூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921 ஆம் ஆண்டு சென்னை – பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி, தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெய ரில் தொடர் ஆண்டு ஒன் றினைப் பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு என்று கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவு எடுத் தார்கள். அந்தக் கருத்தினை, முப்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பே மாண்புமிகு முதல மைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, 1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அர சிதழிலும் நடைமுறைப்படுத் திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக் கம் என்பது, ஒட்டு மொத்த மாக எல்லாத் தமிழ் அறிஞர் களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால், தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக் கம் என அறிவித்து நடை முறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி – தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச் சியுடன் கொண்டாடும் வகை யில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்க ளிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன் மானம் போற்றிப் பாடியும் ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச் சியால் அன்பை அள்ளிப் பொழிவர்.

திட்ட ஒதுக்கீடு இரு மடங்கு

கடந்த பத்தாவது அய்ந் தாண்டுத் திட்ட காலத்தின் திட்ட ஒதுக்கீடான ரூபாய் 40,000 கோடியை இரு மடங் குக்கும் மேலாக உயர்த்தி, ரூபாய் 85,344 கோடி அளவில், வரும் பதினொன்றாவது அய்ந் தாண்டுத் திட்டக் காலத்தில் திட்டப் பணிகளை மேற் கொள்ள ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இத்திட்டக் காலத்தில், வேளாண்மைத் துறைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதோடு, சமூகநீதியை உறுதி செய்யும் வகையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல் படுத்தப்படும்.

மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் தமிழும்!

இந்த அரசின் இடைவிடாத முயற்சியின் காரணமாக மய்ய அரசு தமிழைச் செம்மொழி யாக அறிவித்துப் பெருமைப் படுத்தியது மட்டுமன்றி, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தையும் சென்னையில் அமைத்து வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாட மாக்குவதற்கான சட்டம் இயற் றப்பட்டு, அனைவரும் தமிழ் பயில இவ்வரசு வழிவகுத்துள் ளது. தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கச் செய்யவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளில் தமிழையும் வழக்கு மொழி யாக்கவும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.

விவசாயிகளின் நலன்

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் மூலமாக, விவசாயிகளின் வரு வாயைப் பெருக்க இவ்வரசு முனைப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கால்நடை மற்றும் மீனளம் வாயிலாகக் கூடுதல் வருவாயை ஈட்டுதல் ஆகியவை மூலமாகவே இது சாத்திய மாகும். உலக வங்கியின் உத வியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள நிலவளத் திட் டத்தின்கீழ், பொதுப்பணித் துறை, வேளாண் துறை, கால் நடைத் துறை, மீனளத் துறை போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து திட்டப் பணிகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயக் கூட் டுறவுக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தன் வாயிலாக, தமிழக விவசாயிகள் மீண்டும் கடன் பெற வழிவகுக்கப்பட் டுள்ளது. தற்போது அதிகரித் துள்ள உற்பத்திச் செலவு களுக்கு ஏற்ப, விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகை யில், மத்திய அரசு அறிவித்த 100 ரூபாய் ஊக்கத் தொகையோடு சேர்த்து, மாநில அரசின் கூடு தல் ஊக்கத் தொகையாக 50 ரூபாய் வழங்கி, இந்த அரசு சன்ன ரக நெல்லுக்கான கொள் முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 825 ஆக உயர்த்தியுள்ளது.

மூன்று லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்

தரிசு நிலங்களைப் பண் படுத்தி, அவற்றை நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங் களுக்கு இலவசமாக அளிக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு இலட்சத்து 38 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவச மாக வழங்கியுள்ளது. மேலும், குடியிருக்க இடமற்ற ஏழை எளியவர்களுக்கு 3 லட்சம் இலவச வீட்டு மனைப் பட் டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் புறம்போக்கு நிலங் களில் பத்து ஆண்டுகளாக வீடுகள் கட்டிக் குடியிருப் போருக்குப் பட்டா வழங் கப்படும் என்பதைத் தளர்த்தி, வருமான வரம்பையும் விலக்கி, அய்ந்தாண்டுகளுக்கு மேலாகக் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா கிடைத் திட இந்த அரசு வழிவகுத் துள்ளது.

மின் உற்பத்தி

மத்திய மின் உற்பத்தி நிலை யங்களிலிருந்து பெறப்படும் மின் சக்தியின் அளவு குறைந் ததால், நமது மாநிலத்தில் மின் விநியோகத்தில் அண்மையில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட் டன. பழுப்பு நிலக்கரித் தட் டுப்பாடு காரணமாக, நெய் வேலி மின் உற்பத்தி நிலையம் ஒப்புக்கொண்ட அளவிற்கு மின் சக்தியை அளிக்க இயல வில்லை. இதேபோன்று, கல் பாக்கம் மற்றும் கைகா அணு மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறையால் அவற்றின் உற்பத்தித் திறனுக் கேற்ப மின் உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, மத்திய மின் உற்பத்தி நிலை யங்களின் மின் உற்பத்தியை அதிகப்படுத்துமாறு சம்பந்தப் பட்ட துறைகளை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத் துக் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் ரூபாய் 925 கோடி மதிப்பீட் டில் 185 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப் படும்.

இவை 18 மாதங்களுக் குள் இயங்கத் தொடங்கும். இதுதவிர, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத் துள்ளது. வட சென்னை, மேட் டூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கூடுதல் மின் உற்பத்தி நிலையங்களை நிறு வுவதற்கான ஆயத்தப் பணி களை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வரு கிறது. மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மய்ய அரசு தமிழ்நாட்டிற்கு மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது.

கல்வியில் கணினிமயம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கடந்த தி.மு. கழக ஆட்சிக் காலத்தின்போதுதான், 1999-2000 ஆம் ஆண்டில் கணினிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட் டது. கடந்த ஒன்றரை ஆண்டு களில் மாநிலத்தில் உள்ள 1,880 அரசு மேல்நிலைப் பள்ளி களுக்கும், 1,525 அரசு உயர் நிலைப் பள்ளிகளுக்கும் கணி னிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில், எஞ்சி யுள்ள 100 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 606 உயர் நிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்படும். மேலும், பதினொன்றாவது அய்ந்தாண்டுத் திட்டக் காலத்திற்குள், மாநிலத்தில் உள்ள 6,650 அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் அளிக்கப்பட இந்த அரசு ஆவன செய்யும். இதுமட்டுமன்றி, தமிழ்வழிக் கல்வியில் பயின்று 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 1,000 மாணவ மாண வியருக்கு ஊக்கப் பரிசாக கணினிகள் அளிப்பதற்கான திட்டம் ஒன்றையும் இந்த அரசு செயல்படுத்தும்.

திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்

கோயம்புத்தூரில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறு வனம் ஒன்றையும் (அய்.அய். எம்.), மதுரையில் இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனம் (அய்.அய்.டி.), திருச்சியில் அறி வியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (அய்.அய்.எஸ். இ.ஆர்.) ஒன்றையும் அமைக் குமாறு, மத்திய அரசை, தமிழக அரசு கோரியுள்ளது. தமிழ் நாட்டில் தற்போது ஒரு மத்தியப் பல்கலைக் கழகம் கூட இல்லாத குறையை நீக்க, மாநிலத்தில் மத்திய பல்கலைக் கழகம் ஒன்றை அமைக்கு மாறும் மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை, முதல மைச்சர் அவர்கள் இதுகுறித்து சந்தித்துப் பேசியுள்ளார்கள். முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோள் குறித்து நம் பிக்கையூட்டும் வகையில் மத்திய அமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள். இந்த மத்தியப் பல்கலைக் கழகம் திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும்.

மருத்துவத் துறை

அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெற இய லும். இதை மனதில் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் தேவையான பணியாளர்களும், அனைத்து வசதிகளும் கிடைக் கச் செய்ய இந்த அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த பணியிடங் களில் 2,167 மருத்துவர்கள் மற்றும் 2,341 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு, 468 புதிய மருத்துவப் பணி யிடங்களும், 1,059 புதிய செவி லியர் பணியிடங்களும் தோற் றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. கிராமப்புறத்தில் உள்ள மகளிருக்கு 24 மணி நேரமும் மகப்பேறு சிகிச்சைக் கான வசதி கிடைக்கும் வகை யில், 1,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று செவிலியர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி, ரூபாய் 597 கோடி ரூபாய் மதிப்பீட்டி லான உலக வங்கி உதவியுடன் கூடிய தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின்கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து வட்ட மற்றும் மாவட்ட மருத் துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவ தற்கான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

இவ் வாறு நமது மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதற்குச் சான்றாக, தனியார் மருத்துவ மனைகளில் நடைபெறும் பிள்ளைப் பேறுகளின் எண் ணிக்கை குறைந்து, அரசு மருத் துவமனைகளில் பிள்ளைப் பேறுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வருமுன் காப் போம் திட்டத்தின்கீழ் இது வரை நடத்தப்பட்டுள்ள 4,872 முகாம்களில் 51 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்த அரசு பொறுப்பேற்ற பின், மோட்டரோலா, டெல் கம்ப்யூட்டர்ஸ், சாம்சங், ரெனோ-நிஸ்ஸான் போன்ற பல பெரும் தொழில் நிறுவனங் களுடன் ரூபாய் 15,083 கோடி மதிப்பீட்டிலான 12 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்திடப்பட்டு, அவற்றில் நான்கு தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள் ளன. இதனால் 1,37,140 பேர் களுக்கு நேரடி மற்றும் மறை முக வேலை வாய்ப்புக் கிடைக்கும்.

தொழிற்கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி

ரூபாய், 4,000 கோடி மதிப்பீட்டில் ஹூண்டாய் கார் தொழிற்சாலை ஆண் டொன்றுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு விரிவாக் கப்பட்டு வருகிறது. மேலும் ரூபாய், 1800 கோடி மதிப்பீட் டில் போர்டு கார் தொழிற் சாலை ஆண்டொன்றுக்கு கூடுதலாக இரண்டு இலட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு விரிவாக்கம் செய் யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமைந்துள்ள இவ்விரு தொழிற்சாலைகளும், தங்களது பெரும் விரிவாக்கத் தையும் நமது மாநிலத்திலேயே மேற்கொள்வதானது, இந்த அரசின் தொழிற்கொள்கைக் குக் கிடைத்த நற்சான்றித ழாகும்.

கப்பல் கட்டும் தளங்கள்

கடந்த வரவு – செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட் டது போன்று, சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் ரூபாய் 3,068 கோடி முதலீட் டில் லார்சன் அண்டு ட்யூப்ரோ நிறுவனம் கப்பல் கட்டும் தளம் ஒன்றினை அமைக்கும். இதன் மூலமாக சுமார் பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்புப் பெறு வார்கள். கடலூர் மாவட்டத் தில், இன்னொரு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற் கான ஆயத்தப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

24,58,411 வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டிகள் இலவசம்

தி.மு.க., தேர்தல் அறிக்கை யில் அறிவிக்கப்பட்டவாறே, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாதோர் அனைவருக்கும் அவற்றை வழங்கும் திட்டம் இவ்வரசால் செயல்படுத்தப்பட்டு, இது வரை 24,58,411 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றா வது கட்டமாக, 34 இலட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஆணைகள் அளிக்கப்பட்டுள் ளன. சர்வதேச ஒப்பந்தப் புள்ளி வாயிலாக சட்டமன்ற கட்சி களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் ஒப்புதல் பெற்று, ஒளிவு மறைவற்ற முறையில் கொள்முதல் செய்யப்பட்டு, எவ்விதப் பாகுபாடுமின்றி மாநி லத்தின் அனைத்துப் பகுதிகளி லும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்கள் மூலமாக, ஏழை எளிய குடும்பங்களுக்கு இவை வழங்கப்பட்டு வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத் தப்பட்டு, இந்தியாவிலேயே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து வீடு களிலும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம்தான் என்ற சாத னையை விரைவில் எட்டு வோம்.

மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை – மாநகர்ப் பகுதி தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகின்றது. இப் பகுதியின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு உடனடி யான மற்றும் நிலையான தீர்வுகள் தேவைப்படுகின்றன. இந்த முக்கியப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, ரூபாய் 9,757 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை டில்லி மெட்ரோ இரயில் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி யின் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசிற்கு அனுப்பப் பட்டுள்ளது. இத்திட்டத்திற் கான ஆரம்பக் கட்டப் பணி கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு லட்சம் புதிய வீடுகள்

குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் ஆகியோருக்கு, நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டு வசதி அளிப்பதற்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். பல்வேறு நகர்ப்புற மேம் பாட்டுத் திட்டங்களின்கீழ், மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் வீட்டு வசதித் தேவையைக் கருத்தில் கொண்டு, பொதுத் துறை – தனியார் துறை கூட்டு முயற் சியின் வாயிலாக மாநகராட்சி களுக்கு அருகில் உள்ள பகுதி களில் வீட்டு வசதித் திட் டங்கள் செயல்படுத்தப்படும். இதுமட்டுமன்றி, வீட்டு வசதித் திட்டங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியை குறைந்த வருவாயு டைய மக்களுக்காக ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனை யின்படி, திட்டங்களைச் செயல்படுத்தும் கட்டட அமைப்பாளர்களுக்கு, அதிக தரைப் பரப்புக் குறியீட்டள விற்கு இந்த அரசு அனுமதி யளிக்கும்.

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்

மத்திய அரசின் மிகப் பெரும் சாதனைத் திட்டமான தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், தமிழகத்தில் தற்போது 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநி லங்களிலும் இத்திட்டத்தின் செயல்பாட்டை சமூக ஆய்வு வாயிலாக ஆய்ந்து வரும் குழு வினர், தமிழகத்தில் இத்திட் டம் மிகச் சிறப்பாகச் செயல் படுத்தப்படுவதாகவும், இத் திட்டத்தின்கீழ் பணிபுரிவோ ருக்கு நாளொன்றுக்கு எண்பது ரூபாய் ஊதியமாக வழங்கப் பட்டு வருவதாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் இத்திட் டத்தின்கீழ் பெண்களே 82 சதவிகிதம் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளதாகவும் குறிப் பிட்டு பாராட்டியுள்ளனர். இத்திட்டத்தை, மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தியுள்ளதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் நிதியாண்டு முதல் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப் படும்.

நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதாரப் பகுதி

தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியே- அப்பகுதியில் சமுதாயப் பூசல் கள் எழாமல் இருக்க உதவும் அடிப்படையில், இம்மாவட் டங்களின் தொழில் வளர்ச்சிக் கான பல முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. நாங்கு நேரியில் சிறப்புப் பொருளா தாரப் பகுதி அமைப்பதற்கு குறுக்கிட்ட தடைகள் நீக்கப் பட்டுள்ள நிலையில், 2,500 ஏக்கர் பரப்பளவில் பல் தொழில் சிறப்புப் பொருளா தார மண்டலம் ஒன்று விரை வில் அமைக்கப்படும்.

இதைப் போன்றே, கங்கை கொண்டா னில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண் டலம் ஒன்றை ஏற்படுத்தவும், மதுரையைச் சுற்றியுள்ள பகுதி களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கவும் எல்காட் நிறுவனம் நட வடிக்கை எடுத்து வருகிறது. அண்மையில், கங்கைகொண் டான் மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களுக்கு நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. இம்மாவட்டங் களில் உள்ள படித்த வேலை யற்ற இளைஞர்கள் பெரு மளவில் வேலை வாய்ப்புப் பெறவும், இப்பகுதிகள் பொரு ளாதார வளர்ச்சி அடையவும் இந்த நடவடிக்கைகள் பெரி தும் உதவும் என நம்புகிறேன்.

மகளிர் நலன்

நமது சமுதாயத்தில் பெண் கள் தமது முழு உரிமைகளைப் பெறவும், உரிய பங்கினை ஆற்றவும் இந்த அரசு எப் பொழுதுமே உறுதுணையாக இருந்துள்ளது. பெண்களுக்கு சமச் சொத்துரிமையையும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு வேலை வாய்ப்பு களில் இட ஒதுக்கீட்டையும் வழங்கி பெண்ணுரிமை காத் தது இந்த அரசுதான் என்பதை அனைவரும் அறிவர். இந்த வகையில், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதி நிதித்துவம் அளிக்கப்பட வழி வகுக்கும் சட்டத்தை, திருமதி சோனியா காந்தி அவர்களின் சீரிய வழிகாட்டுதலுடன், மாண்புமிகு பிரதமர் மன் மோகன்சிங் அவர்கள் தலை மையில் நடைபெறும் அய்க் கிய முற்போக்குக் கூட்டணி அரசு விரைவில் நிறைவேற் றிடும் என நம்புகிறோம்.

சுய உதவிக் குழுத் திட்டம்

1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் இந்த அரசால் தொடங்கப் பெற்ற சுய உதவிக் குழுத் திட்டம், இன்று நமது மாநிலத்தில் உள்ள மகளிருக்கு சமூகப் பொருளாதாரச் சுதந் திரம் அளிக்கும் மாபெரும் மக்கள் இயக்கமாக உரு வெடுத்துள்ளது. இதுவரை கிராமப் பகுதிகளில் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த சுழல் நிதி உதவியை, முதன்முறையாக மாநிலத்தின் நகரப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக் கும் இந்த அரசு வழங்கத் தொடங்கியுள்ளது. தற்போது மாநிலத்தில் சுமார் 58 இலட் சம் உறுப்பினர்களைக் கொண்ட மூன்று இலட்சத்து அறுபதாயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வரு கின்றன. இக்குழுக்கள் ரூபாய் 1,639 கோடி சேமித்துள்ள தோடு மட்டுமன்றி, ரூபாய் 2,566 கோடி வங்கிகளிடமி ருந்து கடனுதவி பெற்றுள்ளன.

இந்த இளைஞர்களுக்கான பல்வேறு பயிற்சித் திட்டங் களை இந்த அரசு செயல் படுத்தி வருகிறது. மேலும், பொது அறிவு, கணினி அறிவு, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறன் மற்றும் நேர்முகத் தேர்வு களில் பங்கேற்கும் திறன் ஆகிய வற்றை இளைஞர்கள் பெற இந்த அரசு ஆவன செய்யும். பயிற்சி பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் அதிக அளவில் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் பெருமள வில் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்கான திட் டம் ஒன்று இந்த அரசு செயல்படுத்தும்.

மாதாந்திர ஓய்வு உதவி

தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் அளிக்கப்பட்ட வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில், 2006-07 ஆம் ஆண்டில் முதி யோர், ஆதரவற்றோர் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு அளிக்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ரூ 200 லிருந்து ரூ 400 ஆக இந்த அரசு உயர்த்தியது. தற்போது வறு மைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து முதியோருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மறைந்த பாரதப் பிரதமர் திரு மதி இந்திரா காந்தி அம்மை யாரின் பிறந்த நாளான 19-11-2007 அன்று இந்தத் திட்டம் நமது மாநிலத்தில் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள் ளது. இத்திட்டத்தின் வாயி லாக, ஆண் வாரிசுகளின் ஆத ரவுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி, 65 வயதுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள சுமார் 10 இலட்சம் முதியோர்கள் பயன் அடைவார்கள்.

ஊனமுற்றோருக்கு வழங் கப்படும் உதவித் தொகையை ரூ 200 -லிருந்து ரூ 400- ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு வழங் கப்படும் உதவித்தொகையை ரூ 200-லிருந்து ரூபாய் 500-ஆகவும் இந்த அரசு கடந்த ஆண்டு உயர்த்தியுள்ளது. தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள் ளக்கூட இயலாத மன வளர்ச்சி குன்றியோருக்கு, முன் எப் போதும் இல்லாத வகையில், வருமான வரம்பு மற்றும் எண்ணிக்கை வரையறை யின்றி, மாதாந்திர உதவித் தொகையாக 500 ரூபாய் வழங்க இந்த அரசு ஆணை யிட்டது. இதன் அடிப்படை யில், இதுவரை 30,000 பேருக்கு இத்தொகை வழங்கப்பட் டுள்ளதோடு, இவர்களுக்கு சிறப்புக் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வசதிகளும் கிடைத்திட இந்த அரசு ஆவன செய்துள் ளது.

ஒரு வகையில் ஊனமுற் றோர் என்றே கருதப்பட்டு, சமுதாயத்தின் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அரவாணி களின் நலனில் எப்பொழுதுமே இந்த அரசு அக்கறை கொண் டுள்ளது. சமூக அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகளை இவர்கள் எதிர் கொள்வதைக் கருத்தில் கொண்டு, குடும்ப அட்டை களை வழங்குதல், அரசு மருத்துவமனைகளில் இலவச அறுவை சிகிச்சை அளித்தல் போன்ற பல்வேறு திட்டங் களை இந்த அரசு செயல் படுத்தி வருகிறது. இவர்களின் மீது இந்த அரசு கொண்டுள்ள பரிவின் காரணமாக இவர் களுக்கென புதிய நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.

நமது மாநிலத்தில், ஏன் நமது நாட்டிலேயே, எங்கும் முன்னர் எப்போதும் வழங்கப் படாத அளவில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த தாய்க் குலத்திற்கு திருமணம் மற்றும் மகப்பேறு உதவிகளை இந்த அரசு வழங்கி வருகிறது. இந்த உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும்போது, அதில் குறுக்கே புகுந்து ஆதாயம் தேடும் நோக்கத்தோடு, சில இடைத் தரகர்களும் அலுவ லர்களும் தவறான செயல்களில் ஈடுபட இந்த அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இத் தகைய கயவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

அமைப்பு சாராத் தொழிலாளர்கள்

அமைப்பு சாராத் தொழிலா ளர்களின் நலனுக்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்துள்ளது. 1996-2001 ஆண்டு காலத்தில், இந்த அரசு தான் அமைப்பு சாராத் தொழி லாளர் நல வாரியங்களை அமைத்து நலத்திட்ட உதவி களை வழங்கியது. இடையில் கலைக்கப்பட்ட இந்த வாரி யங்களை இந்த அரசு மீண்டும் அமைத்துள்ளது. இந்த வாரி யங்களின் மூலமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், 2,20,043 அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சுமார் ரூபாய் 56 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவி களைப் பெற்றுள்ளனர்.

சென்னை சங்கமம் கலை விழா

நாட்டுப்புறக் கலைஞர் களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக தனி நல வாரியம் ஒன்றை இந்த அரசு அமைத்துள்ளது. நமது தொன்மையான கலைகளை வாழவைக்கும் அரும்பணியாக, நாட்டுப் புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் ஆர்வத்திற்கு ஆதரவு நல்கிடும் வகையிலும், சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ் மையம் – சென்னை சங்கமம் கலை விழா, மாநகர் முழுவதும் வெற்றிகரமாகவும், மக்களின் பேராதரவுடனும் நடைபெற் றதை யொட்டி; வரும் ஆண்டு களிலும் படிப்படியாக தமிழ கம் முழுவதும் இவ்விழாவை நடத்துவதற்கு இந்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்.

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மாநில அளவிலான உயர்நிலை ஆலோசனைக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்.

இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் தொடர்வதைக் கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக நிலவிவரும் இந்தப் பிரச்சி னைக்கு விரைவில் சுமுகமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்த அரசு, மைய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில், அவர் களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தியும், இலவச மின்சாரம் அளித்தும் பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ரூபாய் 256 கோடி செலவில், மாநிலத் தில் உள்ள 3 கோடியே 28 இலட்சம் ஏழை எளிய மக் களுக்கு இலவச வேட்டி, சேலைகள் அளிக்கும் திட்டம், நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தப் படும்.

என்றும் மீனவர் நலனுக்கு உயர் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்துள்ளதோடு, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் மீனவர்களுடைய குடும்பங் களுக்கு உதவுவதற்கான திட் டம் ஒன்றையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் செல் லும்போது அவர்களுக்கு ஏற் பட்டு வரும் இன்னல்களைக் களையத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து எடுக் கும்.

துப்புரவுப் பணியாளர்களின் நலம்

துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மனிதக் கழிவை எடுத் துச் செல்லும் தொழிலில் ஈடு பட்டு இருந்தோரின் சமூகப் பொருளாதார முன்னேற் றத்திற்கு இந்த அரசு உறு துணையாக இருக்கும். இந்த நோக்குடனேயே, இவர்களின் நலனுக்காக தனி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் களுக்கு மறுவாழ்வுஅளிக்க வும், மாற்றுத் தொழில்களை மேற்கொள்ள உதவவும் தேவை யான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அருந்ததியர் வகுப்பினர் சமூகப் பொருளாதார நிலை யில் அடித்தளத்தில் இருப்ப தால், அவர்தம் முன்னேற்றத் திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி, தற்போது ஆதிதிராவி டருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்க ளுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி, அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோ சித்து முடிவு செய்ய இந்த அரசு கருதியுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைவதற்கு, இப்பிரிவுகளைச் சேர்ந்தோர் அனைத்துத் துறைகளிலும் உயர் வேலை வாய்ப்புகளைப் பெறுவது அவசியம் என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்துள் ளது. இதனையொட்டி, தற் போது மாநிலத்தில் பெருமள வில் உருவாகிவரும் வேலை வாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின இளை ஞர்கள் பெறும் வகையில், 2007-08 ஆம் ஆண்டிற்கான சிறப்பு மாநில உதவி ரூபாய் 25 கோடி தொகையையும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப் பதற்கே இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கல்வி அறிவிலும், சமுதாய முன்னேற்றத்திலும் சிறுபான் மையினர் பின்தங்கியுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு கிடைத்திட இந்த அரசு வழி வகுத்துள்ளது. மேலும், அவர்களது முன்னேற் றத்தில் தனி கவனம் செலுத்து வதற்காக இந்த அரசு ஒரு தனி இயக்குநரகத்தையும் அமைத் துள்ளது.

தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு

இந்த அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத் தும் எப்போதும் சமூக நீதி என்ற குறிக்கோளை மையப் படுத்தியே செயல்படுத்தப் பட்டு வந்துள்ளன. நீதிக்கட்சி யின் வழி வந்த திராவிட முன் னேற்றக் கழக அரசு, சமூக நீதியை நிலை நாட்டுவதில் இந்த நாட்டிற்கே முன்னோடி யாகத் திகழ்ந்து வந்துள்ளதை அனைவரும் அறிவர். இந்த வகையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் தனி யார் துறை வேலை வாய்ப்பு களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

இந்த அரசின் கொள்கை கள், செயல்பாடுகள், சாதனை கள் மற்றும் எதிர்காலத் திட் டங்கள் ஆகியவற்றை உங்கள் முன் விரிவாக எடுத்துரைத்து உள்ளேன். இன்று தமிழகம் கண்டுவரும் ஒப்பற்ற வளர்ச்சி யின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்ற டையச் செய்யவும், நலிவுற் றோர் நலம் பேணவும், ஜன நாயக ஒளி பரவிடவும், மத நல்லிணக்கம் வலுப்பெறவும், சமூகநீதியை நிலை நாட்டவும் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலை மையிலயான இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இவை யாவும் செவ்வனே நிறைவேற, நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.

– இவ்வாறு ஆளுநர் உரை யாற்றினார்

Posted in Agriculture, Barnala, Budget, DMK, Economy, Electricity, EVR, Farming, Finance, Governor, Govt, Housing, Industry, MK, Periyar, Planning, Power, priority, Schemes, SEZ, TN, Viduthalai, Water | Leave a Comment »

Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் திசெம்பர் 13, 2007

தணிக்கை முறையில் தப்புக் கணக்கு!

இரா. செழியன்

இந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.

குறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.

இந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்பு என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கிறது.

இந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”

தணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அரசமைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.

ஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

ஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS – Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS – Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.

ஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு – தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முறைக்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.

உலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.

இங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு – தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.

ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் – துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.

ஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”

1954 ஆம் ஆண்டு மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 – 2006-இல் மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவின் அளவு ரூ. 15,92,000 கோடி.

அப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.

அரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.

அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்?

தணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.

தற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் – அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் – அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.

சரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.

சரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

உச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.

அதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

—————————————————————————————————————————————————————-

பொதுத்துறையில் புதிய பார்வை!

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் பொருளாதாரச் சீர்திருத்தவாதிகளின் முதல் கோஷமாக இருந்தது. ஏதோ, நல்ல புத்தி தோன்றி, நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களின்மீது மத்திய அரசு கைவைக்காததன் பலன், இப்போது பல நிறுவனங்கள் லாபகரமாக நடக்கின்றன. இதற்கு, தனியார்மயமாக்கப்படுவோம் என்கிற பயம் காரணமா அல்லது நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது காரணமா என்று தெரியவில்லை.

தற்போது சுமார் 250 பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவைகளில் 120 நிறுவனங்கள் மட்டும்தான் லாபகரமாக இருந்தன. சமீபத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட 215 நிறுவனங்களில் 157 நிறுவனங்கள் லாபகரமாக நடப்பதாகத் தெரிகிறது. 35 நிறுவனங்களின் தணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்தப் புள்ளிவிவரங்கள் சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை, தேசத்தின் சமச்சீர் வளர்ச்சியையும், நாட்டின் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில்கொண்டு நிறுவப்பட்டவை. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், இந்தியன் ஏரோநாட்டிக்ஸ், செய்ல், ஆயுதத் தொழிற்சாலை போன்றவை, இந்தியாவின் தன்னம்பிக்கையை வளர்த்தன என்பது மட்டுமல்ல, நாம் சுயசார்புடைய நாடாக வளர வழிவகுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பதுபோல, பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவுக்கு அமைத்துத் தந்த கலப்புப் பொருளாதாரத்தின் பலன்தான் இப்போது இந்தியா உலகமயமாகி இருக்கும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்க வழிகோலியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திருச்சி, ராஞ்சி, போபால், புணே, ரூர்கேலா, நாசிக் போன்ற நகரங்களைத் தொழில் நகரங்களாக உருவாக்க முடிந்ததன் காரணம், அங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டதால்தான்.

ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தொடர்ந்தன என்பதும், லாபம் ஈட்டும் நவரத்னங்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும்கூட, தங்களது முழுமையான உற்பத்தித் திறனை எட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால், அதற்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடும், அரசியல் தலையீடும், தொழிலாளர்கள் மத்தியில் காணப்பட்ட மெத்தனமும்தானே தவிர, அந்த நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்ததால் அல்ல. அதைத்தான், இந்த நிறுவனங்களின் தற்போதைய அதிகரித்த உற்பத்தித் திறனும், லாபமும் நிரூபிக்கின்றன.

இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அவைகளின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப்போல, லாப நோக்குடனும், திறமையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்பதும், மக்கள் வரிப்பணம் இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய வீணடிக்கப்படக் கூடாது என்பதும் உறுதி. அதற்கு வழி இந்த நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதல்ல. தனியார் முதலீடுகளை குறிப்பிட்ட அளவு வரவேற்பதும், அரசு அதிகாரிகள் மட்டுமன்றி முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் நிர்வாகத்தில் பங்கு பெறுவதும்தான்.

முப்பது அல்லது நாற்பது சதவிகிதம் பங்குகளைத் தனிநபர்களுக்கு பங்குச்சந்தை வழியே விற்பதன் மூலம் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பங்குதாரர்கள் கேள்வி கேட்க முடியும் என்பதும், நிர்வாகத்தில் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இயக்குநர்களாகப் பங்கு பெற முடியும் என்பதும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, பங்குகளை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் லாபம் காட்ட வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்படும். நிறுவனத்தை நவீனப்படுத்த முதலீடும் கிடைக்கும்.

சிறிய அளவில் நமது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் அவை உண்மையிலேயே மக்கள் நிறுவனமாகச் செயல்படும். அதுமட்டுமல்ல, இந்த நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் அபாயமும் தவிர்க்கப்படும்!

—————————————————————————————

அரசியல்வாதிகளுக்கும் நடத்தை நெறிமுறைகள்

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்


கடந்த வாரம் நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்கள் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவைக் காவலர்களுடன் கடுமையாக மோதும் காட்சியை ~ கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவைக் காவலர்களுக்குக் குத்து விடும் காட்சியை ~ தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் மல்யுத்தப் போட்டி போல இருந்தது அது.

நமது கவனத்தைக் கவர்ந்த மற்றொரு செய்தி, 35-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் 8 மாதங்களாக, ஆம்; எட்டு மாதங்களாக தான், குண்டர் படைத் தலைவர்போல தலைமறைவாக இருந்துகொண்டிருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பானதாகும்.

அந்த ஜம்மு ~ காஷ்மீர் எம்எல்ஏவை ஒரு தொலைக்காட்சி சேனல் பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அவரது கேவலமான நடவடிக்கைக்காக ஒரு துளி வருத்தத்தைக்கூட அப்போது அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறே நடப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறினார் அந்த எம்எல்ஏ. ஒருவகையில் பார்த்தால், சட்டம் ~ ஒழுங்கைப் பராமரிக்கின்ற காவல் துறையினரைப் போன்றவர்கள்தான் சட்டப் பேரவைக் காவலர்களும். அவையின் கண்ணியத்தைக் காக்கவும் அவைக்குள் நன்னடத்தையை உறுதிசெய்யவும் அவைத் தலைவரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுப்பவர்கள் அவர்கள். எனவே அவைக் காவலரை ஓர் எம்எல்ஏ தாக்குவதென்பது, காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலரை பொதுஜனம் ஒருவர் தாக்குவதற்குச் சமமாகும். அப்படிச் செய்திருந்தால் பொதுஜனத்துக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த எம்எல்ஏவோ எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பிவிடக்கூடும். எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஒரு குற்றவியல் சட்டம், சாதாரண மக்களுக்கு வேறொரு குற்றவியல் சட்டமா அமலில் இருக்கிறது?

8 மாதங்களாகத் தலைமறைவாகி ஓடிக்கொண்டிருந்த அந்த எம்.பி., அலாகாபாதில் உள்ள ஃபூல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு காலத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவைத் தேர்ந்தெடுத்த பெருமைக்குரியது அத் தொகுதி. அதே தொகுதியின் பிரதிநிதியாக இன்று, நாட்டின் பிரச்னைகளை விவாதித்து முடிவெடுக்கக்கூடிய தேசத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்துக்கு குற்றப் பின்னணியைக் கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்கிறார் என்றால் அது காலக்கொடுமைதான்.

அரசியல்வாதிகள் மீதும் சாதாரணப் பொதுமக்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு அதிகாரத்தில் இருப்பவர்களால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் தொடரப்படுவதும் நடக்காமல் இல்லை.

தனக்கு எதிராக 35-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், ஓர் எம்.பி. தொகுதியின் பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய கெüரவத்தை ஒருவர் பெற்றிருப்பதென்றால் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான்! ஒருவர் எம்எல்ஏயாகவோ, எம்.பி.யாகவோ ஆக விரும்பினால், அவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது இது. ‘கெüரவமான’ நடுத்தர வர்க்கத்தினர், தொழில் நிபுணர்கள் மற்றும் இதைப் போன்ற சமுதாயத்தின் இதர பிரிவினரெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும் அரசியல் களத்துக்குள் ஏன் வர விரும்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தின் கணிசமான பகுதியினர் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு ஒரு மோசமான நிலைமையை அரசியலில் உருவாக்கி விட்டார்கள்.

அந்த எம்.பி., எம்எல்ஏவைப் பற்றி அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெயந்தி நடராஜனும் பங்குகொண்டிருந்தார். அச் சம்பவங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஒருவர் குற்றவாளி என்பது நிரூபணமானால், சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார் அவர். சாதாரணமாகப் பார்க்கும்போது, அவர் கூறியது நியாயமானதுதான், சரியானதுதான் என்று தோன்றக்கூடும். அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அதன் அர்த்தம் சரிதானா என்பதைப் பார்ப்போம்.

மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மீதான எத்தனையோ வழக்குகள் எத்தனையோ நீதிமன்றங்களில், வெவ்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாக, ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக்கூட விசாரணையில் இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கை சுமார் 20 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த அரசியல்வாதிகள் அவ் வழக்குகளில் தண்டிக்கப்படவும் இல்லை, அதிலிருந்து விடுதலை ஆகவுமில்லை. இதைப்போல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

எடுத்துக்காட்டாக சுக்ராம் வழக்கை எடுத்துக்கொள்வோம். அவரது வீட்டிலிருந்து ரொக்கமாகப் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அரசிடம் அத்தனை புலன்விசாரணை அமைப்புகள் இருந்தபோதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரூபிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியோ சட்டையைக் கழற்றி மாட்டுவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சிக்குத் தாவிக்கொண்டு சந்தோஷமாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். மிகப் பலவீனமான புலனாய்வு அமைப்புகள், ஓட்டைகளுடன்கூடிய அரசுத் தரப்பு இயந்திரங்கள், மென்மைப் போக்கு கொண்ட (வளைந்து கொடுக்கக்கூடிய என்றுதான் குறிப்பிட நினைத்தேன்) நீதித் துறை இவற்றாலெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எதிரான எந்த வழக்கையும் விசாரணை நடத்தி, அதை உரிய வகையில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.

ஓர் அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், உடனடியாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவது நடைமுறை விதியாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த காலத்தில் ~ வருமானம், பதவி உயர்வு போன்ற ~ இழந்தவையெல்லாம் இழந்ததுதான். அதாவது, மக்கள் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது அவர்கள் அரசுப் பணியை ஆற்றுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். ஆனால், அரசியல்வாதிகள் விஷயத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால், அமைச்சர்களும் எம்எல்ஏ, எம்.பி.க்களும்கூட மக்கள் பணியாளர்கள்தான்; அரசாங்க ஊழியர்களையும்விட கூடுதலாக மக்கள் பணியாளர்கள் அவர்கள். (பலர் தம்மை மாமன்னர்களாகவும் நவாபுகளாகவும் நினைத்துக்கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்). எனவே, அரசு ஊழியர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே கொள்கை, அரசியல்வாதிகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை ஆகும் வரையில் அரசுப் பதவிகளை அவர்கள் வகிப்பதற்கும், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான பணியை ஆற்றுவதற்கும் அவர்களை அனுமதிக்கக் கூடாது. இந்த ஒரே நடவடிக்கை மூலமாகவே சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் குறிப்பிடத் தக்க அளவுக்குத் தூய்மைப்படுத்தப்பட்டுவிடும்.

அரசுப் பதவிகளை வகிப்போர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க தனி நீதிமன்றங்களையோ, பிரத்தியேக நீதி அமைப்புகளையோ ஏற்படுத்த வேண்டும் என்று பலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணக் குடிமகனாக இருந்தாலும், சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் சட்டம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; எனவே ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. இது சரியானதுபோலத் தோன்றினாலும் உண்மையில் தவறானதாகும்.

முதலாவதாக, சாதாரணக் குடிமகனுக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டியது அவசியம்தான். ஏராளமான வழக்குகள் பல பத்தாண்டுகளாக நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஏராளமான விசாரணக் கைதிகள் சிறையில் இருந்துகொண்டு இருக்கின்றனர். கடைசியில் அவர்களில் பலர் வழக்கில் விடுதலை செய்யப்படக்கூடும் அல்லது மிகக் குறைந்த அளவு தண்டனை விதிக்கப்படவும்கூடும்.

இரண்டாவதாக, நமது சமுதாயத்தில் செல்வாக்குடன் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதி நடைமுறைகள் போன்றவற்றின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களாவர் என்பதே உண்மை. அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க முடியாமல் இருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக, குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பதவியில் இருக்க அனுமதிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை பல ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதியில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், கறைபடிந்த ஒருவரை அரசின் உயர் பதவியில் அமரவும் அதன் மூலம் சமுதாயத்தின் செல்வாக்கு செலுத்தவும் அனுமதித்தவர்களாகிவிடுவோம் நாம். இந்தக் காரணங்களால்தான் அரசியல்வாதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை என வலியுறுத்தப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய முறைகேடு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு ஆகிய ‘முன்மாதிரியான’ செயல்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல என்று இன்றைய அமைப்பு முறை முடிவு செய்துவிட்டது.

இத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த நமது அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பிகள், எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் போனது நமது துரதிருஷ்டம்தான். அரசியல்வாதிகளெல்லாம் தம்மைப்போல நியாயவான்களாக, சுயநலமற்றவர்களாக, சுத்தமானவர்களாக இருப்பார்கள் என்று ஜவாஹர்லால் நேரு நினைத்திருக்கலாம். அன்று அவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்யாமல் போனதற்கான விலையை நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள்கூட வகுக்கப்படவில்லை. அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவில் ஜனநாயகப் பாரம்பரியம் என்று ஏதும் இருந்ததில்லை. நமது அரசியல்வாதிகளும் தம்மை முகலாயச் சக்கரவர்த்திகளைப்போல் நினைத்துக்கொள்கின்றனர்.

ஜனநாயக உணர்வுகளும் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்படவும் இல்லை; மாற்றங்களை உருவாக்கும் வகையில் மக்களின் கருத்துகள் நெறிப்படுத்தப்படவும் இல்லை. எனவே, அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டியது அவசியமாகும். ஆனால் அதை யார் செய்வதென்பதே கேள்வி.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்.)

Posted in Accountant General, Accounts, Admin, Administration, AGO, Allegations, Arms, Audit, BHEL, Bribes, Cabinet, Capitalization, Collector, Collectorate, Commission, Committee, Corruption, Deficit, Economy, Employment, Finance, financial, Funds, Globalization, Govt, HAL, Hindustan, Hindusthan, IAL, IAS, IMF, Income, Inquiry, Jobs, Lokpal, markets, NLC, parliament, Planning, Poor, Private, PubAd, Pubic, Public Administration, Rich, SAIL, service, SEZ, Shares, Statements, Statistics, Statz, Stocks, Verification, Wages, WB, Wealth, Weapons | Leave a Comment »

Backward Region Grant Fund: Appraisal of Panchayat Raj by Mani shankar Iyer – Failure of local governments

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

மக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி?

க. பழனித்துரை

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

பணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.

வாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை,

  • திருவண்ணாமலை,
  • கடலூர்,
  • விழுப்புரம்,
  • திண்டுக்கல்,
  • நாகப்பட்டினம்,
  • சிவகங்கை

ஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.
வட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இப்படி மத்திய அரசு தரும் நிதியை,

  • பஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,
  • இந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,
  • பாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,
  • புதிய கட்டடம் கட்டுதல்,
  • பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு,
  • விளையாட்டு மேம்பாட்டிற்கு வசதிகள்,
  • கழிப்பறை,
  • சுற்றுச்சுவர்,
  • மேஜை, நாற்காலி வாங்குதல்
  • மதிய உணவு சமையலறைக் கட்டடம்

உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.
மத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.

இந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.

பின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.

கருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.

ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.

அரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.

ஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.

இந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.

மாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.

—————————————————————————————————————————————————

ஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன?

 எம். ரமேஷ்

ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.
ஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.
இந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.
அந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.
10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.
இலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.
இதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.
தொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.
மாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.
2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.
22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.
அனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.
தமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.
இதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.
அதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.
முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.

ஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.

எம். ரமேஷ்

Posted in 5, Administration, ADMK, Allocation, Appraisal, backward, Biz, BPO, Budget, Buildings, Caste, Census, Center, City, Community, Computer, Control, Council, Development, DMK, Economy, Education, Expenses, Exports, family, Finance, Fund, GDP, Governments, Govt, Grant, Growth, Homes, Housing, Hygiene, Improvements, Inaction, Income, Info, InfoTech, infrastructure, investments, IT, ITIS, JJ, Kalainjar, Karunanidhi, Kids, KK, local, Mani, Mani shankar, ManiShankar, Measures, Metrics, Money, NGO, Outsourcing, Panchayat, Panchayat Raj, Panchayath, parliament, Planning, Plans, Play, Playgrounds, Policy, Poor, Population, Progress, Refer, Reference, Region, Residences, Resources, Restrooms, Rich, Rural, Sanitary, Schools, Sector, Services, Software, Spend, Spending, Sports, Stalin, State, Statistics, Statz, Students, TamilNadu, Teach, Teachers, Technology, Telecom, TN, Toilets, Villages, Zones | Leave a Comment »

Lightening the load of 10th Standard Tamil Textbook: State of Tamil Nadu Education

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

தமிழுக்கு அநீதி!

ச. செந்தில்நாதன்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் “சுமை’ அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

அரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.

அரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.

10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து

  1. “புகழ்’,
  2. “வெகுளாமை’,
  3. “இடனறிதல்’,
  4. “ஊக்கமுடைமை’

என நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள் “இடனறிதல்’, “ஊக்கமுடைமை’ ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் – அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன. நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா? திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே? குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும்? இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா?
நீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி? திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே!

கவிஞர் தமிழ் ஒளியின் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும்? இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா? நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்?

உரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் “விடிவதற்குள்’ என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.

தண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.

முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் “மண்ணாசை’ நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.

பட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.

அவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.

இந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில் “மண்ணாசை’ கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க “திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்’ என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.

மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.

தமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)

Posted in 10th, Ami, Answers, Asokamithiran, Asokamithran, Asokamitran, Avoid, Books, Conservative, Couplets, Decrease, Delete, Education, Exams, Fiction, Kural, Kurunthogai, Kurunthokai, Language, Learn, Lessons, Liberal, Life, Lighten, Literature, Load, Main, Non-detail, Obsolete, PAK, papers, Planning, Poems, Poet, Questions, Read, Reduce, Sample, Sangam, Schools, Second, Songs, standard, State, Students, Tamil, Tamil Nadu, TamilNadu, Teach, Teachers, Tenth, Textbook, Textbooks, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TV, Valluvar | Leave a Comment »

India to curb foreign funds deluge – Volatile stock market & Participatory note policy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!

பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.

கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.

இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?

Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »

Women and reservation – 33% Allocation & Benami Prohibition

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

உள்ளாட்சி அதிகாரத்தில் பெண்களா, பினாமிகளா?

வீர. ஜீவா பிரபாகரன்

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…’ என்று பெண்கள் விடுதலை குறித்துப் பாடினார் பாரதி. நாட்டின் குடியரசுத் தலைவராக, பிரதமராக, முதல்வராக, அரசியல் கட்சிகளின் தலைவர்களாக உயரிய பொறுப்புகளுக்குப் பெண்கள் வந்துள்ளனர்.

எனினும், அரசியல், பொதுத் தொண்டில் பெண்கள் ஈடுபடுவதில் தயக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பெண் பிரதிநிதிகளின் பினாமிகளாக கணவர் மற்றும் குடும்பத்தினர் செயல்படுவது தொடர்கதையாகிறது.

1993-ம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 4700 பேரிடம் இருந்த அரசியல் அதிகாரம், 73, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்குப் பின்னர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குப் பரவலாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக – உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பு, பணிகளைத் தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தேசிய அளவில் 10 லட்சம் பெண்களும், தமிழகத்தில் மட்டும் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாக உள்ளனர்.

பெரும்பாலான மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வு என்பது, வெறும் காகிதப் பூவாகவே உள்ளது.

உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்ட 29 துறைகளைச் சார்ந்த பணிகள், பணியாளர், நிதி ஆகிய மூன்று நிலைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தும் அதிகாரம், கர்நாடகம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இத்தகைய அதிகாரப் பகிர்வு முழுமை அடையவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பெண் பிரதிநிதிகளின் நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்து வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், மாவட்ட, ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என, பல பதவிகளை பெண்கள் அடைந்துள்ளது சிறந்த சமூக மாற்றத்துக்கான அடிப்படையாக விளங்குகிறது.

ஆனால், பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைச் செலுத்தும் பினாமிகளாக கணவர், உறவினர்கள் நீடிப்பது பெரும்பாலான இடங்களில் தொடர்கிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குப் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்க, பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களுடைய கணவர்களே செல்கின்றனர்.

இந்நிலைக்கு, பெண்களின் கூச்ச சுபாவம், போதிய கல்வி அறிவின்மை, பதவிக்குரிய பணி பற்றிய தெளிவின்மை, ஆண் ஆதிக்கத் தலையீடுக்கு உட்படல், பொதுப் பிரச்னையைக் கையாளுவதில் பயம், தாழ்வு மனப்பான்மை, வன்முறையை உள்ளடக்கிய அரசியல் தலையீடு, குடும்பம், சமூகம், பொருளாதாரச் சூழல் சார்ந்த இடர்ப்பாடுகள் ஆகியவை முக்கியக் காரணங்கள் என பல்வேறு அமைப்பினர் நடத்திய அனுபவ ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இக் குறைபாட்டைப் போக்கும் வகையில், தற்போது தமிழக அரசு தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக உள்ள ஏ.எம். காசிவிஸ்வநாதன், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களுடைய கணவர்களோ, உறவினர்களோ நிர்வாகப் பணிக்கு வரக்கூடாது என்பதைக் கட்டாயமாக்கினார்.

இது, மாவட்ட அளவில், பெண் பிரதிநிதிகளின் சுயச்சார்பையும் தன்னம்பிக்கையையும் அரசு அதிகாரிகளிடம் கூச்சமின்றி கருத்துகளை வெளிப்படுத்தும் திறனையும் உருவாக்கியது.

எனினும், பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது பணிகளில் தலையீடு ஒருபுறம் உள்ளது; உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் அரசு முத்திரையுடன் அளிக்கும் கடிதம், விளம்பரங்களில்கூட அவர்களுடைய கணவர்களின் படங்களும் இடம்பெறுகின்றன. அரசு அதிகாரிகள் எவரும் அதைக் கண்டுகொள்வதில்லை.

இதுபோன்று பல்வேறு சமூகத் தடைகளையும் தாண்டி சுதந்திரமாகச் செயல்பட்டு, சாதனை படைக்கும் பெண் பிரதிநிதிகள் விதிவிலக்காக ஓரிரு இடங்களில் மட்டுமே உள்ளனர். அவர்களும் மகளிர் சுய உதவிக் குழுவின் அடிப்படையில் தேர்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான இடங்களில் சட்டம் வழங்கிய பொறுப்பும் கடமையையும் பெண்களின் பெயரில் இருந்தாலும் அதிகாரத்துக்குப் பினாமிகளாக ஆண்களே நீடிக்கின்றனர்.

இந்நிலையை மாற்றுவதே பெண்களுக்கான உண்மையான அதிகாரப் பகிர்வாக இருக்கும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் பிரதிநிதிகளுக்கு முழுமையான நிர்வாகப் பயிற்சி, சுயச்சார்ப்புப் பயிற்சியைத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.

அதுவே, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் போது அவர்களின் சிறந்த செயல்பாட்டுக்கும் பாலியல் சமத்துவத்துக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும்.

Posted in 33, Benaami, Benami, City, Collector, Council, Councillor, Elections, Female, Feminism, Govt, Lady, Leaders, Legislative, Party, Percent, Percentage, Pinaami, Pinami, Planning, Policy, Politics, Polls, Power, Reservations, Rural, service, She, TNPSC, Village, Women | Leave a Comment »

State of India – Public Policy, Planning commission goals, Regional Development: N Vittal

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

மக்களுக்காகவே நிர்வாகம்!

என். விட்டல்

இந்தியா என்ற ஒரு தேசத்தை இணைப்பது எது என்று கேட்டு தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது ஒரு பத்திரிகை. இந்தியச் சுதந்திர தினத்தின் வைர விழாவையொட்டி இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியாவை இணைப்பது அதன் கலையா, கலாசாரமா, பண்பாடா, வரலாறா என்று பல கேள்விக் கணைகளை எழுப்பின அக்கட்டுரைகள்.

சுதந்திரம் அடைந்த பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அழைக்கிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை 1. பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. 2. பிரிட்டிஷ் மகாராணியைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமாக ஆட்சி நடத்திய 600 சுதேச சமஸ்தானங்கள். 3. வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், வட-கிழக்கு மாநிலங்கள். இங்கு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி கிடையாது. ஒரு ஏஜெண்ட் மட்டும் இருந்தார். வட-மேற்கும் வட-கிழக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

மாகாணங்கள் என்ற அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்டதே சுவையான வரலாறு. வட இந்தியாவில் வசித்தவர்கள், விந்திய மலைக்குத் தெற்கில் வசித்த அனைவரையும் மதறாசி என்ற ஒரே பெயரில் அழைத்தனர். மதறாஸ் மாகாணம் என்பதில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் சேர்ந்திருந்தன. எனவே மலையாளி, தெலுங்கர், கன்னடியரைக்கூட மதறாசி என்றே வட இந்தியர்கள் அழைத்தனர்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. தங்களுடைய தாய்மொழி மீது கொண்ட பற்றினால் மக்கள் இப்படி மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதை விரும்பினர். அப்படிப் பிரித்ததே சில இடங்களில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அது, கலாசார ரீதியாகக் குறுகிய மனப்பான்மையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. இன, பிராந்திய அடையாளங்கள் புதிதாக உருவாயின.

தனி நாடு கோரிய திமுக, சீனப்படையெடுப்புக்குப் பிறகு “திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டது. அதே சமயம், “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை முன்னே வைத்தது. இப்போது மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியான காங்கிரஸýடன் இணைந்து மத்தியில் கூட்டணி அரசு அமைத்துள்ளன. திமுகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதாகக் கூட இதைக் கருதலாம்.

தேசப் பாதுகாப்பு, தனி மனிதப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய மூன்றும் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை எல்லா அரசுகளும் எல்லா தனி மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். 1991-க்குப் பிறகு பொருளாதார தாராளமயம் அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு மிகவும் அவசியம். இவற்றை அளிக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது.

அடித்தளக் கட்டமைப்பு என்றவுடன் தொலைத்தொடர்புத் துறைதான் முதலில் நினைவுக்கு வருகிறது. அது எப்படி வளர்ந்து பரவிவிட்டது! அடுத்தது ரயில்வே துறை. சரக்குகளைக் கையாள்வதில் திறமையும் வருவாய் ஈட்டுவதில் சாமர்த்தியமும் காட்டி, உபரி வருவாயைப் பெற்றுள்ளது ரயில்வேதுறை.

ரயில்வேயும் தொலைத்தொடர்புத் துறையும் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவை. இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத பல துறைகளில் வளர்ச்சி திருப்திகரமாகவும் சீராகவும் இல்லை. மின்சாரத்துறையையே எடுத்துக் கொள்வோம். என்.டி.பி.சி., பவர் கிரிட் என்ற இரு மத்திய நிறுவனங்களும் திறமையான செயல்பாடு, குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பது ஆகிய சிறப்புகளுக்காகப் புகழ் பெற்றவை. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார வாரியங்கள் நிதி நிலைமையில் மிகவும் பின்தங்கியும், ஏராளமான கடன் சுமையிலும் தள்ளாடுகின்றன. இதற்குக் காரணம் அந்த மின்வாரியங்கள் அல்ல. இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் அவற்றின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாகிவிட்டன.

வாக்குவங்கியைக் குறிவைத்துச் செயல்படும் மாநில அரசியல்கட்சிகளால் மின்சார வாரியங்கள் பலிகடாவாகிவிட்டன. மிக முக்கியமான மின்னுற்பத்தித் துறையை இப்படி விடுவது சரிதானா? ரயில்வே, தொலைத் தொடர்பு போல மின்சாரத்துறையையும் மத்திய அரசே தன் பொறுப்பில் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதற்காகக் கூறப்படும் யோசனை அல்ல. பொருளாதார வளர்ச்சிக்காகவே கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர்வளத்துறையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி நிதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு வலுவாகத் தலையிட முடியும்.

வளர்ச்சிக்கு அடுத்தபடியாக ஆனால் வளர்ச்சியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மனிதனின் உயிருக்குப் பாதுகாப்பு தருவது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் விவகாரம் அல்லது குற்றச்செயல் என்றால் உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது வழக்கமாகிவருகிறது. சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலப் போலீஸôர் மீது நம்பிக்கை இல்லை, மத்திய துணை நிலை ராணுவப் படைகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி இருக்க, மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை விசாரிக்க, ஃபெடரல் போலீஸ் படை இருந்தால் நன்றாக இருக்குமே?

மாநில உணர்வு, சொந்த அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிந்தால் அந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கக் கூடாது. நன்மை செய்யும் என்று நினைத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் தீமை அதிகம் வந்தால், எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. நிர்வாகம் என்பது மக்களுக்காகத்தானே தவிர, நிர்வாகத்துக்காக மக்கள் இல்லை.

சாலை வசதி, மின்னுற்பத்தி, தண்ணீர் வளம் ஆகிய முக்கிய பிரச்னைகளில் மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய அதிகாரத்தை மத்திய அரசுக்கு ஒப்புக்கொடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை சி.பி.ஐ. விசாரிக்க புது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது தனி மனித பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாற்றம் பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர்)

Posted in 50, 60+, 75, Andhra, AP, Bengal, Budget, Caste, Center, Centre, China, Commerce, Common, Communication, Community, Consruction, Country, Courts, Culture, Democracy, Development, Districts, Division, DMK, Economy, Electricity, Federal, Finance, Freedom, GDP, Govt, Growth, Heritage, Hinduism, Independence, India, infrastructure, Justice, Language, Law, Linguistics, National, North East, Northeast, Order, Pakistan, Patel, Planning, Power, Private, Province, Provinces, Public, Railways, Region, Religion, Resources, River, Roads, Sardar, Security, Sharing, Speak, Speech, States, TamilNadu, Telecom, Terrorism, Terrorists, TN, Tradition, Transport, Transportation, Water | Leave a Comment »

Corruption & Kickbacks Charge on Congress (I) – Job opportunity plan implementation in Indian states

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல்! * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’

Dinamalar.Com

மத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

மத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்!’

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வகையில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:

மேற்கு வங்கம்:

எல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.

ஆந்திரா:

இந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.

சட்டீஸ்கர்:

திட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.

ஜார்க்கண்ட்:

கிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.

மத்தியப்பிரதேசம்:

பயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.

ஒரிசா:

கிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.

உத்தரப்பிரதேசம்:

மிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Posted in Andhra, AP, Bengal, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Compensation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Contractors, Corruption, Employment, Females, Guarantee, Implementation, India, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jobs, kickbacks, Lady, MadhyaPradesh, Madyapradesh, Manmohan, Metro, MNC, MP, NGO, Orissa, Party, Planning, Politics, Poor, Private, Public, Rahul, Reddy, Rural, Scheme, Sonia, State, Suburban, UP, Utharpradesh, UttarPradesh, Villages, WB, Women, YSR | Leave a Comment »

Education as basic right

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

அடிப்படை உரிமையாகுமா கல்வி?

எஸ். சையது இப்ராஹிம்

“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.

கல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.

கரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடியில் நடைபெற்று வருகின்றன.

பண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.

இவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.

ஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.

இதன் விளைவு என்ன? பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.

ஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.

——————————————————————————————————————-
உயர்கல்வியில் குளறுபடி!

தமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.

எண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.

அரசிடம் எந்த மானியமும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.

அவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.

அரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.

அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது? அரசு சில வரன்முறைகளை விதித்து, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.

தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன? தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும்? இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.

பயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது!

—————————————————————————————————————-
மனித உரிமைக் கல்வி!

ஆர். நடராஜ்

வழக்கமாக நாம் காணும் ஒரு காட்சி – காலையில் சீவி முடித்து, சீருடை அணிந்து ஆரவாரத்துடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்; கிராமப்புறங்களில் இக்காட்சி இன்னும் அழகு. அணிஅணியாய் நடந்து செல்லும் காட்சி மனதுக்கு ரம்யமானது, நிறைவைத் தருவது.

“”பள்ளிக்குச் செல்வோம்”, என்று குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டியதை அறிவுறுத்தும் அரசு விளம்பரப்படம் எல்லோரையும் கவர்ந்திருக்கும். கல்விச் செல்வத்தின் சிறப்பினை திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.

10 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் உள்ள தனிமனிதனின் சுதந்திரம்பற்றி விவரிக்கும்பொழுது, தரமான கல்வி இந்த அடிப்படை உரிமையில் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, அரசியல்சாசனத்தில் 21-ஏ பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயதுவரை குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று முக்கிய அடிப்படை உரிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது, கல்வியானது, மனித உரிமைகளில் மிகவும் முக்கியமானது என்று பிரகடனப்படுத்தியுள்ளது.

கட்டாயக்கல்வி அடிப்படை உரிமை என்பதோடு, 14 வயதுக்கு உள்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத் தடையை மீறி, சிறுவர்களைப் பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் சில இடங்களில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, வேதனை அளிக்கிறது.

சம்பந்தப்பட்ட அமலாக்கப்பிரிவு, குற்றம்புரிவோர்மீது நடவடிக்கை எடுத்தாலும், சமுதாயத்திற்கும் பொறுப்பு உள்ளது. சட்டத்துக்குப்புறம்பாகச் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் நிறுவனங்களின் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சிறார் தொழிலாளர் உள்ள உணவு விடுதிகளை ஆதரிக்கக்கூடாது. உள்ளாட்சித்துறைக்குப் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

தமிழகத்தில், ஆரம்பப் பள்ளிகள் 34,208, நடுநிலைப் பள்ளிகள் 8,017, உயர்நிலைப் பள்ளிகள் 5,046, மேல்நிலைப் பள்ளிகள் 4,536 உள்பட மொத்தம் 51,807 பள்ளிகள் உள்ளன. அடிப்படை வசதியோடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியிலும், மென்பொருள் வடிவமைப்பிலும் இந்தியர்கள் உலக அளவில் தலைசிறந்து விளங்குகிறார்கள். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலை, ஒவ்வொரு துறையிலும் வியாபித்துள்ளது. 2020-ல் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்றத்தால் எல்லோரும் பயனடைய வேண்டும்; இந்த அபரிமித வளர்ச்சியின் நன்மைகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்தால்தான் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஆங்காங்கே நிகழும் தீவிரவாத சம்பவங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விரக்தியின் பிரதிபலிப்பு என்பதை உணர வேண்டும்.

தரமான கல்வி மூலம் இளைஞர்களின் மேன்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியால் பெறக்கூடிய முன்னேற்றமும் வாய்ப்புகளும் சாமானியர்களைச் சென்றடைய வேண்டும். சாதாரண கல்வி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்ற நிலையை மட்டும் உருவாக்கும். ஆனால் இன்றைய தேவை, தரமான கல்வி.

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்கள் பலர், பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்காக, விநாயகர் சிலைகளைக் கடலுக்குள் நீந்திச்சென்று கரைத்தனர். அச்சிறுவர்களில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை, சென்றவர்கள் பாதியில் நிறுத்தியவர்கள்.

இவர்களது எதிர்காலம் என்ன? இவர்களின் நிலை உயர்வது எப்போது? இம்மாதிரி படிப்பை நிறுத்தியவர்களைக் கணக்கிட்டு, மேல்படிப்பைத் தொடர்வதற்கும், படிப்பை நிறுத்தாமல் பாதுகாப்பதையும் ஓர் இலக்காகக் கல்வித்துறை கொண்டுள்ளது. இருந்தாலும் இவ்விஷயத்தில் சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் மிகவும் முக்கியம்.

திசை தெரியாமல், சமுதாய முன்னேற்றத்தில் பங்குபெறாமல் பரிதவிக்கும் இளைஞர்கள் தீயசக்திகளின் வலையில்சிக்கிச் சிதைவதோடு, சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கும் நிலை ஏற்படும்.

கல்வி தனி மனிதனின் சொத்து அல்ல; சமச்சீர் கல்வி எல்லோருடைய பிறப்புரிமை. அதைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதும், விரிவடைய உதவாமல் இருப்பதும் ஒருவகை ஏகாதிபத்தியமே.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம், மனித உரிமைக் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டை மனித உரிமைக் கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. மனித உரிமைக் கல்வி மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மேலும் பத்து ஆண்டுகள் முயற்சி தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டால், உரிமைகள் பறிக்கப்படும்பொழுது கேள்வி கேட்கும் உணர்வு ஏற்படும்.

உள்நாட்டு அமைதியைப் பாதுகாப்பதில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், சில மனித உரிமைமீறல் சம்பவங்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பிகார் மாநிலம் பாகல்பூரில் குற்றவாளியின் கண்களைக் குடைந்த சம்பவம், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரிலும் எழுந்துள்ள மனித உரிமைப் பிரச்னைகள், பிகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர், குற்றவாளியை மோட்டார்சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற சம்பவம், குஜராத்தில் “”சோராபுதீன் மர்ம மரணம்” – இவ்வாறு தொடர்ந்து மனித உரிமை மீறல் பிரச்னைகள் தலைதூக்குவது, காவல்துறைக்கு தலைக்குனிவு, சமுதாயத்திற்குப் பாதிப்பு.

மனித உரிமைகளைக் காக்கவேண்டிய காவல்துறையினரே மனித உரிமைகளை மீறினால் எப்படி? சீருடை அணிந்த காவல்துறையினர் சீறாமல், சீராகப் பணிபுரிய வேண்டும்; சீறிப்பாய்ந்தால்தான் மக்கள் மதிப்பர் என்பது தவறான அணுகுமுறை.

காவல்துறையின் செயல்பாடுகள் சீராகவும் மனிதநேயத்தை அடிப்படையாகவும் கொண்டிருக்க வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி பெறவேண்டும்.

எழுத்தறிவில் பின்தங்கிய இடங்களில் மனித உரிமை மீறல் பற்றி முறையிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்காது. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஆண்டுதோறும் சராசரி 8,000 மனுக்கள் பெறப்படுகின்றன.

பொதுமக்களை அவமதிப்பது, குறைகளைக் கேட்க மறுப்பது, உரிய தகவல்தராமல் தட்டிக் கழிப்பது, வேண்டியவர்களுக்கு வசதிசெய்து தருவது, கையூட்டு பெறுவது, விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது, அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை பெற்றுத்தராமல் இருப்பது போன்றவையும் ஒருவகை மனித உரிமை மீறல்கள்தான்.

மக்கள் புகார் செய்வார்கள் என்ற நிலை இருந்தால்தான் அரசுத் துறைகளில், மனித உரிமை மீறல்கள் கூடாது என்ற உணர்வு மேலோங்கும். மனித உரிமை மீறல்களும் நாளடைவில் குறையும். இதற்கு அடிப்படை – கல்வி, எழுத்தறிவு, மனித உரிமை குறித்த கல்வியே!

(கட்டுரையாளர்: காவல்துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).

Posted in Allocation, Analysis, BE, Bihar, Boards, Budget, Colleges, Doctor, DOTE, Education, Engg, Engineering, Expenses, Fees, Finance, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, MBBS, medical, Medicine, Planning, Price, Professors, Rajasthan, rights, Sarasvathi, Sarasvathy, Saraswathi, Saraswathy, Schools, Slates, Statistics, Stats, Statz, Students, Study, Teachers, Tech, Technology, University | 1 Comment »

President Abdul Kalam: ‘Journalists can partner national development’ – Ramnath Goenka Excellence in Journalism Awards Speech

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!

“பத்திரிகைத் துறையில் சிறந்த சேவைபுரிந்தமைக்காக ராம்நாத் கோயங்கா பெயரிலான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுகளையும் விழாவில் பங்கேற்கும் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு, பத்திரிகைச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு, பத்திரிகைகளுக்குத் தணிக்கை என்ற நெருக்கடியான காலகட்டத்தில்கூட பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அஞ்சாமல் பாடுபட்டவர் ராம்நாத் கோயங்கா. சுதந்திரப் போராட்ட வீரர், தொழில் அதிபர், பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அயராது பாடுபடுபவர் என்று பன்முகச் சிறப்பு பெற்றவர் ராம்நாத் கோயங்கா.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பிறகும் அவர் வெளியிட்ட பத்திரிகைகள் அனைத்துமே அவருடைய நாட்டுப்பற்றுக்கும், அச்சமின்மைக்கும் சான்றாகத் திகழ்கின்றன. 1932-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபரானார். பிறகு வெவ்வேறு இந்திய மொழிகளிலும் பத்திரிகைகளைத் தொடங்கினார். அவருடைய சீரிய வழிகாட்டுதலில் எல்லா பத்திரிகைகளும் மக்களால் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாக வெளிவந்தன.

“”பத்திரிகையாளர்கள் தேச வளர்ச்சியின் பங்குதாரர்கள்” என்ற தலைப்பில் இன்று உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.

1944-ல் எனக்கு 13 வயது. இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய அண்ணன் சுதேசமித்திரன், தினமணி ஆகிய நாளிதழ்களுக்கு துணை முகவராக இருந்தார். வேலைக்காக அவர் இலங்கை சென்றதால், ராமேஸ்வரத்தில் இவ்விரு பத்திரிகைகளையும் விநியோகிக்கும் பொறுப்பை நான் ஏற்க நேர்ந்தது. மாணவனாக இருந்த நான், உலகப் போர் குறித்த செய்திகளை ஆர்வமாகப் படித்து வந்தேன். முதலில் தினமணி நாளிதழை வாங்கியதும், ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை ஆர்வமாகப் படிப்பேன். விமானவியலில் எனக்கு ஆர்வத்தை விதைத்ததே தினமணிதான். உலகம் முழுவதுமே மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் அன்றாடம் ஆயிரம் நடக்கலாம். பத்திரிகையாளர்கள் அவற்றை ஊன்றிக் கவனித்து உரிய வகையில் செய்தியாகத் தர வேண்டும்.

1999-ல் டெல் அவிவ் நகருக்குச் சென்றேன். ஹமாஸ் போராளிகள் லெபனான் எல்லையில் ராணுவத்துக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டனர் என்று தொலைக்காட்சியில் முக்கிய செய்தியை அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பத்திரிகைகளை வாங்கியபோது, இந்தச் செய்தியை முதல் பக்கத்திலேயே காண முடியவில்லை. ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த ஒரு விவசாயி, பாலைவனப் பகுதியில் மூன்று ஆண்டுகளாகத் தங்கி காய்கறி, பழச்சாகுபடியை அமோகமாக மேற்கொண்டு சாதனை படைத்திருப்பது குறித்த செய்திதான் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. மக்களும் அச்செய்தியைத்தான் ஆர்வமாகப் படித்தார்கள். பத்திரிகைத் துறையின் சிறந்த பங்களிப்பு என்றே அச் செய்தியை நானும் கருதுகிறேன்.

எல்லா பத்திரிகைகளிலும் ஆராய்ச்சிப் பிரிவு இருக்க வேண்டும். செய்திகளைத் தர, ஆய்வுசெய்ய, முக்கியமானவற்றை எடுத்துரைக்க இதைப் பயன்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் உள்ள பத்திரிகையியல் ஆய்வுப்பிரிவுடன் இந்தப் பிரிவு இணைக்கப்பட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அது ஏன், எதனால் ஏற்படுகிறது, அதற்கு நீண்டகால, குறுகியகால தீர்வு என்ன என்று அறிய இது உதவும். மூத்த பத்திரிகையாளர்களும் இளைஞர்களும் இதில் சேர வேண்டும். இதனால் பத்திரிகையின் தரமும் உயரும்.

வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதை ஆய்வுப்பிரிவுக்கு அனுப்புகின்றனர். அயல்பணி ஒப்படைப்பு என்ற அவுட்-சோர்சிங் முறை குறித்து அமெரிக்காவில் கடுமையான ஆட்சேபம் எழுந்தபோது, ஆய்வு செய்து செய்தி தர ஒரு பத்திரிகையாளர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார். அயல்பணி ஒப்படைப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகள், சாதனங்களில் 90% அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து, செய்தியாக அளித்தார். அது அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு வியப்பை அளித்தது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) எப்படி வளர்ந்திருக்கிறது என்று அறிய “டிஸ்கவரி’ சேனலின், தாமஸ் ஃப்ரீட்மேன் இந்தியாவுக்கு வந்து பெங்களூர் போன்ற ஊர்களில் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கினார். “”தி வேர்ல்ட் ஈஸ் ஃபிளாட்” (உலகம் தட்டையானது) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கும் இப் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியப் பத்திரிகையாளர்களும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யலாம்.

பத்திரிகைகள் சமுதாயத்துக்குப் பயன் தரும் வகையில் செயலாற்ற முடியும் என்பதற்கு இரண்டு சமீபத்திய உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மகாராஷ்டிரத்தில் விதர்பா பகுதிக்கு கடந்த மாதம் சென்றேன். அங்கு விவசாயிகளின் பிரச்னை குறித்து விவசாயிகள், அதிகாரிகள், வேளாண்துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் ஆகியோருடன் விவாதித்தேன். இதேபோல பத்திரிகைகளின் ஆய்வுக்குழுவும் நேரடியாகவே அந்தந்த இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தால் பிரச்னையை அடையாளம் காணவும், அரசுக்கு தீர்வுக்குண்டான வழிகளைச் சொல்லவும் உதவியாக இருக்கும்.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்துக்குச் சென்றேன். பீட்டா காட்டன் என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதியவகை பருத்தியைச் சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் அந்த மாவட்ட விவசாயிகள் மனம் நொந்த நிலையில் இருந்தனர். வறட்சி காரணமாக மகசூல் குறைந்தது; அல்லது சாவியாகிப் போயிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து கிடைத்துவந்தால்தான் பீட்டா காட்டன் விதைகளால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற உண்மை அவர்களுக்கு அனுபவம் வாயிலாகத்தான் கிடைத்தது. இதுவே முன்கூட்டி தெரிந்திருந்தால் அவர்களின் நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியும். தரமான விதை, சாகுபடி முறையில் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, உரிய நேரத்தில் வங்கிக் கடன், விளைபொருளை உடனே சந்தைப்படுத்த நல்ல வசதி, மழை இல்லாமல் போனால் பாசன நீருக்கு மாற்று ஏற்பாடு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு முற்றியிருக்காது.

அடுத்தது பாசனத் தண்ணீர் பற்றியது. வாய்க்கால்களை வெட்டுவது, மடையை மாற்றுவது ஆகிய வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆறே இல்லாத இடங்களில் தண்ணீரை எப்படிக் கொண்டுவருவது? மழைக்காலத்தில் எந்தெந்த வழிகளில் எல்லாம் நீரைச் சேமிக்கலாம் என்பதை விவசாயிகளுக்குச் சொல்லித்தந்து உடன் இருந்து அமல் செய்தால் வறட்சி காலத்தில் அது கைகொடுத்து உதவும். இவை மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகளும் சாகுபடியாளர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு அவர்களுடைய விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்கும் வசதி செய்யப்பட வேண்டும். கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்காமல் இருக்க, எல்லா கிராமங்களுக்கும் வங்கிகளின் சேவை கிடைக்க வேண்டும்.

விவசாயிகள் வேளாண் உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ளவும், விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெறவும் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

பஞ்சாபின் கேரி புத்தார் என்ற இடத்தில் விவசாயிகள், தொழில்துறையினர், ஆய்வு நிலையம், கல்விக்கூடம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பால் பருத்திவிதையின் உற்பத்தித்திறன் இருமடங்காகப் பெருகியது. விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் திட்டங்களை யாருக்குத் தர வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து குறிப்பிட்ட காலவரம்புக்குள் அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிர்வாக அமைப்பும், திட்ட நிறைவேறலுக்கு இன்னின்னார்தான் பொறுப்பு என்ற நிர்வாக நடைமுறையும் அவசியம். விதர்பாவில் பிரச்னை என்ன, தீர்வு என்ன என்பதை பத்திரிகைகளின் ஆய்வுக்குழுக்கள் கண்டுபிடித்து எழுத முடியும்.

போரிலும், உள்நாட்டுக் கலவரங்களிலும் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளிலும் பிற நெருக்கடிகளிலும் இறப்பவர் எண்ணிக்கை நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இப்படி இறப்பவர்கள் அல்லது காயம்படுகிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த 10 லட்சம் பேரைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த, உதவித் திட்டம் அவசியம். ஆந்திர மாநிலத்தில் அப்படியொரு திட்டம் அற்புதமாகச் செயல்படுத்தப்படுகிறது. நெருக்கடிகால மேலாண்மை-ஆய்வு என்ற அமைப்பு ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

சாலை விபத்து, பிரசவ காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் ஆபத்துகள், கிரிமினல் நடவடிக்கைகளால் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்து, வீடுகளில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் ஏற்படும் தீ விபத்து, மின்சார விபத்து, ரசாயன விபத்து, நில நடுக்கம், ஆழிப் பேரலை, மிருகங்களால் விபத்து என்று எதுவாக இருந்தாலும் தகவல் கிடைத்த 30 நிமிஷங்களுக்குள் அந்தப் பகுதிக்கு முதலுதவி ஆம்புலன்ஸ்களுடன் சென்று சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றி, உயர் சிகிச்சைக்குத் தாமதம் இன்றி, அமைப்பின் தகவல் தொடர்பு-வாகன வசதிகளைப் பயன்படுத்தி கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இந்த முறை. இதற்கு முதல்படியே, நெருக்கடி காலத்தில் 108 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு என்ன நெருக்கடி, எந்த இடம் என்ற தகவலைச்சுருக்கமாக, தெளிவாகச் சொன்னால் போதும், மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த அமைப்பு ஏற்பட்ட பிறகு ஆந்திரத்தின் 23 மாவட்டங்களில் 380 ஆம்புலன்ஸ்கள் அவசர உதவி, மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன. இதுவரையில் 11,500 பேரின் உயிர் உரிய நேரத்தில் உதவிகள் அளித்து காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் வாரம் முழுவதும் கிடைப்பது இதன் தனிச்சிறப்பு. இச் சேவையைப் பிற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் அரசும், தனியார் நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் இதில் முக்கியத் தொடர்பாளர்களாக இருந்து சேவை புரியலாம்.

பத்திரிகை என்பது வாசகர்களுக்குத் தகவல்களையும் கல்வியையும் அளிப்பது. பத்திரிகைகள் நன்கு செயல்பட்டால் தேசம் வலுவடையும். பரபரப்பு செய்திக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் தரக்கூடாது. துணிச்சலாக, உண்மையாக, உத்வேகம் ஊட்டுகிற வகையில் செய்திகளைத் தருவதுதான் உண்மையான பத்திரிகையியலாகும். அது தேசத்தின் பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு உதவும். பத்திரிகைகளால் இளைஞர்களின் மனத்தை மாற்ற முடியும் என்பதால், ஆக்கபூர்வமாகச் செயல்படுவது மிகமிக அவசியம்.

100 கோடி இந்தியர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, பத்திரிகையியலுக்கான ராம்நாத் கோயங்கா விருதில் மேலும் 2 பிரிவுகளையும் தொடங்க வேண்டும்.

1. ஊரக வளர்ச்சிக்கு உதவும் வகையில் செய்தி தருவதற்கும்,

2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்கும்

என்று 2 விருதுகளை 2007-08 முதல் வழங்க வேண்டும்.

(ராம்நாத் கோயங்கா பெயரிலான பத்திரிகையியல் விருதுகளை வழங்கி தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் சுருக்கம்)

————————————————————————————————-
பெருமைக்குப் பெருமை…

“எந்தவொரு பதவிக்கும் அதற்கான பெருமையோ, அதிகாரமோ கிடையாது. அதை அலங்கரிக்கும் நபர்கள் நடந்துகொள்ளும் விதத்தால்தான் பதவிகள் பெருமைகளையும் அதிகாரங்களையும் பெறுகின்றன’ – இந்த வாசகங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை உலகத்துக்கு உணர்த்தி இருக்கிறார் இன்று தனது பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறும் நமது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

இந்தியக் குடியரசின் தலைவர்களாக இருந்த ஒவ்வொருவரும் அந்தப் பதவிக்குச் சில கௌரவங்களைச் சேர்த்தார்கள். அவர்களது தனித்தன்மையால் அந்தப் பதவி மேலும் பரிமளித்தது. ஓரிரு சம்பவங்களைத் தவிர, பெரிய அளவில் இந்தியக் குடியரசின் தலைமைப் பதவி அதை அலங்கரித்தவர்களால் களங்கப்பட்டதில்லை. களங்கம் என்று அரசியல் பார்வையாளர்களால் குறிப்பிடப்படும் சம்பவங்களும்கூட, அன்றைய ஆட்சியாளர்களின் தவறால் நிகழ்ந்தவையே தவிர குடியரசுத் தலைவராக இருந்தவரால் ஏற்படவில்லை.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், எந்த அளவுக்கு இந்தப் பதவிக்கு கௌரவம் சேர்ப்பார் என்று தெரியாத நிலையில்தான் அந்தப் பதவியில் அமர்ந்தார் அப்துல் கலாம். ஐந்து ஆண்டுகள் கடந்து இப்போது பதவியிலிருந்து அவர் ஓய்வுபெறும்போது, இப்படி ஒரு குடியரசுத் தலைவர் இனி இந்தியாவுக்கு எப்போது கிடைக்கப்போகிறார் என்ற ஆதங்கத்தை அனைவரது இதயங்களும் வெளிப்படுத்தும் அசாதாரணப் புகழோடு விடைபெறுகிறார்.

அரசியல்வாதி அல்லாத ஒருவர், குழப்பமான அரசியல் சூழ்நிலையில் செயல்பட முடியுமா என்பதற்கு விடையளித்திருப்பதுதான் அப்துல் கலாமின் முதல் வெற்றி. அரசியல்வாதிகள் மீது அதிகரித்து வரும் அதிருப்திக்கு நடுவிலும், நாளைய இந்தியா பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தனது குடியரசுத் தலைவர் பதவியைத் திறம்பட நிர்வகித்தது அப்துல் கலாமின் அடுத்த வெற்றி. இனிமையாகவும் எளிமையாகவும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் செயல்பட்டு, ஓர் உண்மையான மக்களின் குடியரசுத் தலைவராக வாழ்ந்து காட்டியது அவரது மிகப்பெரிய வெற்றி.

குடியரசுத் தலைவரின் ஆணைப்படி ஒரு விஷயம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை ரகசியமாகக் காக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அவரைச் சந்தித்து அவருடன் ஒரு சில நாள்கள் தங்கிப்போக விழைந்தனர் அவரது உறவினர்கள். குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின்படி, ராமேஸ்வரத்திலிருந்து புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவரது 53 உறவினர்களும், குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்களால் வரவேற்கப்பட்டு, ஊர் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கான எல்லா உபசரிப்புகளுடனும் கவனிக்கப்பட்டனர். ஒரு வாரம் தங்கியிருந்து விடையும் பெற்றனர்.

அவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக, ஒருமுறைகூட அரசு வாகனம் பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல, அவர்களது உணவுக்கான செலவைக்கூடத் தனது தனிப்பட்ட கணக்கில் சேர்த்து அதற்கான கட்டணத்தை வசூலித்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார் குடியரசுத் தலைவர். தனது சம்பளப் பணத்திலிருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாயை அரசுக் கணக்குக்கு மாற்ற உத்தரவிட்டார் ஒரு குடியரசுத் தலைவர் என்று நாளைய குடியரசுத் தலைவர் மாளிகை ஆவணங்கள் இதை வெளிப்படுத்தும்.

இரண்டே இரண்டு பெட்டிகளுடன் வெளியேற இருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெருமையை இந்திய வரலாறு பக்கம் பக்கமாக எழுத இருக்கிறது. அந்த அளவுக்கு, அந்தப் பதவிக்கு அவர் பெருமை சேர்த்ததற்குக் காரணம், அவரது நேர்மையும் எளிமையும்; தனது மனதுக்குத் தவறு என்று பட்டதை தைரியமாக வெளிப்படுத்திய உள்ளத்தூய்மை. நாளைய தலைமுறைக்கு நம்பிக்கை அளித்தவர் என்பதுதான் இந்தியக் குடியரசுக்கு அப்துல் கலாமின் மிகப்பெரிய பங்களிப்பு.

இவரைத் தொடர்ந்து இனி யார் அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திச் செல்வது – அப்துல் கலாமின் தனி முத்திரை. இதுவரை குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் பதவி ஓய்வுபெற்ற பிறகுதான் “பாரத ரத்னா’ பட்டம் பெற்றார்கள். “பாரத ரத்னா’ குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முன்னுதாரணம் அப்துல் கலாமால்தான் நிகழ்ந்தது.

இவர்போல இன்னொருவர்…? வருவார், வரவேண்டும். அதுதான் அப்துல் கலாமின் எதிர்பார்ப்பும். அது பொய்த்துவிடலாகாது!

——————————————————————————————————————–
அப்துல் கலாமின் 10 கட்டளைகள்

புது தில்லி, ஜூலை 25: வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற, 10 கட்டளைகளைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாம் (75).

மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம்-ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

5 ஆண்டு பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகழ்த்திய கலாம் பேசியதாவது:

“நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து, “”நம்மால் முடியும்” என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன்.

பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.

இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

1. நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.

2. அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.

3. மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

4. அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

5. அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக் கூடாது.

6. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.

7. எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.

8. நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை: விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான-பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

9. ஏழைகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.

10. மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது, மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது, பழைய மரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.

நம் நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும், படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும்-குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.

திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடிவரும் வகையில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் கல்வி: சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பு தரப்பட வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முப்படையினர் தியாகம்: நமது ராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால், நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன்; சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். “”சுகோய்-30” ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய ராணுவ வீரர்களின் அறிவு, திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டேன்.

ஆப்பிரிக்க தொலைத்தகவல் தொடர்பு: ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல்-தொழில்நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க, “”அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்” என்ற இணையதள வசதியைச் செய்துதரும் இந்திய அரசின் திட்டம் மகோன்னதமானது.

இதன் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாசார வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்; இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்’ என்றார் கலாம்.

Posted in 10, Abdul Kalaam, Abdul Kalam, Analysis, APJ, APJ Abdul Kalaam, APJ Abdul Kalam, Attention, Awards, Bharat Ratna, Bharath, Bharath Rathna, Bharath Ratna, Biosketch, Dev, Development, Education, Excellence, Express, Faces, Freedom, Future, Goenka, Honest, Honesty, Independence, Indian Express, Integrity, Journal, journalism, journalist, Journalists, Kalam, Mag, magazine, Media, MSM, Nation, News, Newspaper, Op-Ed, Opportunity, Path, people, Plan, Planning, Politician, Politics, President, Principle, Prizes, Profits, Ramnath, Ramnath Goenka, Ratna, Reporter, responsibility, revenue, RNG, sales, Sensation, Sensationalism, solutions, Suggestions | Leave a Comment »

Neeraja Choudhry: Manmohan Singh’s Three Year Anniversary – Achievements

Posted by Snapjudge மேல் மே 21, 2007

மன்மோகன் அரசின் மூன்றாண்டு சாதனைகள்!

நீரஜா சௌத்ரி

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு நல்ல உதாரணமாக, திமுகவைச் சேர்ந்த வி. ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற விதம், சூழ்நிலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்தடுத்து கிடைத்த தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்திருப்பதையும், அதனால் இந்தக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகள் நாளுக்குநாள் தங்களுடைய நெருக்குதலை அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்ட இந்த ஒரு சம்பவமே போதும்.

பிரதமரின் அதிகாரம் குறைந்துகொண்டே வந்து, “”இன்று யார் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடுகிற நிலைமைக்கு” வந்து விட்டதையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை மாறி எது நடந்தாலும் “”சகித்துக் கொள்வது” என்கிற பரிபக்குவ நிலையை அவர் எய்திவிட்டதையுமே இது உணர்த்துகிறது.

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய தயாநிதி மாறனுக்குப் பதிலாக, திமுக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர் யார், அவருடைய இலாகா எது, பதவியேற்பு நாள் என்றைக்கு என்பதையெல்லாம் தீர்மானம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை!

ராதிகா செல்விதான் அடுத்து இணை அமைச்சராகப் பதவி ஏற்பார், உள்துறை அமைச்சகம்தான் அவருக்கு வழங்கப்படும், பதவியேற்பு இந்தத் தேதியில் நடைபெறும் என்பதெல்லாம் முதலில் சென்னையில்தான் அறிவிக்கப்படுகிறது, தில்லியில் அல்ல!

மத்திய அரசில் தங்கள் கட்சி சார்பில் இடம்பெறப் போவது யார் என்று பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிப்பது இது முதல்முறையல்ல. 1996-ல் எச்.டி. தேவ கெüடா பிரதமரானதிலிருந்தே இதுதான் நடைமுறையாக இருக்கிறது. அவரது அரசையே, “”முதலமைச்சர்களின் அரசு” என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.

கூட்டணி அரசில் தோழமைக் கட்சிகள் முக்கியமான இலாகாக்களைக் கேட்டு வாங்குவதும் இது முதல்முறையல்ல. ஆதரிக்கும் கட்சியின் வலுவுக்கு ஏற்ப இதில் “”தீவிரமான பேரமே” நடைபெறுவது வழக்கம்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியம் என்னவென்றால், மத்திய திட்டக்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதமர், தமிழக முதலமைச்சரிடமிருந்து இரண்டு கடிதங்களைக் கொண்டுவந்த தூதரை (மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி) வரவேற்க கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து வெளியே வருகிறார்.

குடியரசுத் தலைவரோ, சோனியா காந்தியோ பிரதமருடன் பேச விரும்பினால்கூட, அது முன்கூட்டியே அவருக்குத் தெரிவிக்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது. பிரதமர் அப்படி நேரம் ஒதுக்கிச் சந்திக்கும்வரை காத்திருக்க முடியாத அந்தத் தூதர் உடனே சந்திக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்; சிறிது நேரம் கழித்து சந்திக்கிறேனே என்று பிரதமரால் அவரிடம் சொல்ல முடியவில்லை!

மே 22-ம் தேதியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாட பெரிய விழா எடுப்பதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை; கடந்த ஆண்டைப் போல ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் அறிக்கையையும் காணவில்லை.

சாதகமான அம்சம் எதுவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டே வந்து இப்போது 9% ஆகியிருக்கிறது. அன்னியச் செலாவணி கையிருப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர யாரும் தீவிரமாக முயற்சிக்காவிட்டாலும், முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன்பு இந்தியாவிடமும் ஆலோசனை கலக்கின்றனர்.

நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அங்கும் இங்கும் வன்செயல்கள் நிகழ்கின்றன. ஹைதராபாத் நகரின் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது சமீபத்திய நிகழ்வாகும். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்களுக்கும் தேரா பாபா ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் நடப்பது கவலைதரும் அம்சமாகும். காலிஸ்தான் கிளர்ச்சி கால வன்முறைச் சம்பவங்கள் நினைவைவிட்டு நீங்காததால், இந்த மோதல் எங்கே பெரிதாகிவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே வழக்கமாக இருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இப்போது பரவலாக எல்லா மாநிலங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்தியில் கூட்டணி அரசு ஆட்சி செய்வது இதுவே முதல் முறை. 2004-ல் தொடங்கப்பட்ட இந்த கூட்டணி அரசு ஏற்பாட்டில், அரசியல் அதிகாரம் தனியாகவும் (சோனியா), ஆட்சி நிர்வாகம் (மன்மோகன்) தனியாகவும் பிரிக்கப்பட்டது. தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜவாதி கட்சி ஆகியவை அரசை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்து விலகிய போதிலும் கவிழாத அளவுக்கு “”நிலையான அரசாக” ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கிறது.

இந்த ஆட்சியில் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன; ஆளும் கூட்டணியில் உள்ளவர்களுக்கு இது கலக்கத்தையே அளித்துவருகிறது. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது; கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. பணக்காரர்களைப் பாதுகாக்கத்தான் காங்கிரஸ் கட்சி என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றி வருகிறது.

பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டே வருகிறது; சமீபத்திய தோல்வி உத்தரப்பிரதேசத்தில். பஞ்சாப், உத்தரகண்ட், மும்பை-தில்லி மாநகரமன்றத் தேர்தல்கள் இதற்கு முந்தையவை. இதே ரீதியில் போய்க்கொண்டிருந்தால் 2009 மக்களவை பொதுத் தேர்தலில் அது இரட்டை இலக்கத்தில்தான் எம்.பி.க்களைப் பெற முடியும்.

பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் அது மக்களுக்குப் பயன்படவில்லை என்று காங்கிரஸ்காரர்களே இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். 60% மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைத்துறை 2% வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையோ (ஐ.டி.) குதிரைப் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும் பின்தங்கிய பகுதிகளும், உள்நாட்டுப் பகுதிகளும் தொடர்ந்து வறுமையில் ஆழ்ந்துகிடக்கின்றன.

சீனா, ஜப்பானைவிட அதிக அளவில் புதுக் கோடீஸ்வரர்கள் உருவாகும் நாடாக இந்தியா மாறி வருகிறது; அதே வேளையில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினர் பரம ஏழைகளாக வறுமையில் வாடுகின்றனர்.

பணக்காரர்களுக்கு சாதகமான கட்சி என்ற தோற்றத்தை விலக்க, அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம், நகர்ப்புற மீட்சித்திட்டம் போன்றவற்றை அமல்செய்ய ஆரம்பித்தும் எதிர்பார்த்த “”அரசியல் விளைவை” அந்தத் திட்டங்களால் ஏற்படுத்த முடியவில்லை.

முஸ்லிம்களின் ஆதரவைத் திரும்பப்பெற, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளைப் பெற்று அதை பகிரங்கப்படுத்துவது, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்களை ஒதுக்குவது போன்ற அதன் “”அரசியல் முடிவுகளும்” எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. இட ஒதுக்கீட்டு முடிவால் அதற்குக் கிடைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைவிட, காங்கிரஸ் கட்சி இழந்த முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள்தான் அதிகம் என்பதையே உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சியின் முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்தாற்போலத் தெரியவில்லை. ஈரான் விவகாரத்திலும், சதாம் ஹுசைனை இராக்கில் தூக்கில் போட்ட விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதம் அவர்களை நோகவைத்தது. சமத்துவம், சம நீதி என்பவை கட்சிக்கும் அரசுக்கும் இப்போது பெரிய சவாலாகத் திகழ்கின்றன. கூட்டணியிலேயே பெரியது காங்கிரஸ் கட்சிதான் என்பதால், எந்தத் தோல்விக்கும் அதன் தலையில் பழியைப் போடுவது தோழமைக் கட்சிகளுக்கு மிக எளிதாக இருக்கிறது. எல்லாம் விபரீதமாகிவருகிறது என்று காங்கிரஸýக்குத் தெரிகிறது, ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை.

===================================================

மன்மோகன் அரசின் சாதனைகள்-2

நீரஜா சௌத்ரி

உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதில் வேகம் வேண்டாம், அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டாம் என்றெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.

திறமைசாலிகளான மத்திய அமைச்சர்கள் “”அரசியல்” விளைவுகளைக் கருதி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குவதால் நிலைமை மோசமாக இருக்கிறது. நிதி அமைச்சகத்தை நிர்வகிப்பதில் திறமைசாலியான ப. சிதம்பரம் விலைவாசி உயர்வுக்காகக் கண்டிக்கப்படுகிறார். தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருக்கிறது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்த உடனேயே கட்சித்தலைவர்கள், “”தோல்விக்குக் காரணம் விலைவாசி உயர்வுதான்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் அம்பிகா சோனியும் ஜெயந்தி நடராஜனும் இப்படிப் பேசியிருக்க வழியில்லை.

“”விலை ஏன் உயருகிறது என்று இனிமேல் விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் அந்த வேலையைச் செய்யுங்கள்” என்று விவசாய அமைச்சர் சரத் பவாரிடம், நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினாராம். வேளாண் விளைபொருள்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற பேச்சு வந்தபோது, அவர் இப்படிக் கூறினாராம்.

திறமையான நிர்வாகி என்றாலும், கோதுமை இறக்குமதி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்காமல், சந்தையில் விலை அதிகரித்த பிறகு எடுத்ததற்காக பவாரையும் கட்சியினர் கண்டித்தனர். வெற்றிகரமான வர்த்தக அமைச்சராகக் கருதப்பட்ட கமல்நாத், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நந்திகிராமம் போன்ற ஊர்களில் கிடைத்த “”வரவேற்பினால்” சிக்கலில் ஆழ்ந்திருக்கிறார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி எந்த நாட்டையும் சாராமல் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க முற்பட்டுள்ளார். அமெரிக்காவுடனான ஆக்கச் செயலுக்கான அணு உடன்பாட்டை அரசு நியாயப்படுத்திவரும் அதே வேளையில் ஈரானுடனான உறவை வலுப்படுத்த அந்த நாட்டுக்குச் சென்றுவந்தார். பிரணப் முகர்ஜி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், மத்திய அரசே கவிழ்ந்துவிடும் என்ற அளவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய முக்கியத்துவம் குறித்துப் பேசுகின்றனர்.

ரயில்வே துறையில் நிதிநிலைமையை மேம்படுத்திய லாலு பிரசாதின் வெற்றியின் ரகசியம் என்ன என்று அறிய ஹார்வர்டின் மேலாண்மையியல் மாணவர்கள் தில்லிக்கு வருகின்றனர். திறமையான அதிகாரிகளை ஊக்குவித்து, அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததே லாலுவின் வெற்றி ரகசியமாகும். சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல், (பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது) மணி சங்கர ஐயர் ஆகியோர் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களாகப் பாராட்டப்படுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இல்லாததே, பேரவைத் தேர்தலில் தோல்விக்குக் காரணம் என்று சோனியா காந்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். 2004-05-ல் மேல் சாதியினரும் முஸ்லிம்களும் ஆதரித்த நிலையிலும்கூட கட்சியை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை காங்கிரஸ் கோட்டைவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) திருத்தியமைக்கப்படவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்த 3 பேர் அமைச்சர்களானதால் காலியான அந்தப்பதவிகள் இன்றுவரை நிரப்பப்படவில்லை. பல மாநிலங்களில் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் திருத்தியமைக்கப்படவில்லை.

வேட்பாளர்களை மாயாவதி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிவு செய்கிறார். தில்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவே இன்னமும் இரண்டே நாள்கள்தான் இருக்கின்றன என்ற நிலையில்தான் வேட்பாளர்களையே காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.

சோனியா காந்திக்கு மக்களுடனான தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது. ஒரு பிரச்னை குறித்தோ, தீர்மானம் குறித்தோ தீவிரமாக விவாதித்து முடிவெடுக்கும் போக்கு கட்சியில் குறைந்து வருகிறது.

இரு கூட்டணிகளை மையமாகக் கொண்டுதான் தேசிய அரசியல் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தாலும் தேசியக் கட்சிகளுக்குத் தேவையே இல்லை என்கிற நிலைமை குறித்து காங்கிரஸ், பாஜக இரண்டும் கவலைப்பட்டாக வேண்டும். இதனால்தான் இருகட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முன்முயற்சி, உத்தரப்பிரதேச வெற்றிக்குப் பிறகு மாயாவதியின் கைக்குப் போய்விட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் இரண்டு ஆண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சியினரும் மக்களும் ஒருவித பரிதாபத்துடன் பேசினர். இப்போது அவரை, “”மகாகனம் பொருந்திய அமைச்சரவைச் செயலர்” என்று ஏளனமாகக் கூறுகின்றனர்.

அரசிடமிருந்து எல்லாவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கும் “”கையேந்தி முதலாளித்துவம்” கூடாது என்று ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பிரதமர் மன்மோகன் சாடியிருக்கிறார். ஆட்சி அதிகாரம் தோழமைக் கட்சிகளிடமும் சோனியா காந்தியிடமும்தான் இருக்கிறது என்ற விரக்தியால் வந்த விமர்சனம் அது.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதால் மன்மோகன் சிங்குக்கு மறைமுகமாக ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் ராகுல் காந்தியைப் பிரதமராக்கு, அல்லது அமைச்சராக்கு என்ற கோஷம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்திருக்கும். சோனியாவும் மன்மோகனும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன் நின்று தலைமை வகித்திருந்தால் வெற்றி கிட்டியிருக்கும். என்ன நடக்கிறதோ அதற்கேற்ப செயல்படலாம் என்ற நினைப்பே தோல்விக்குக் காரணம்.

கட்சியின் முன்னாலும் ஆட்சியின் முன்னாலும் உள்ள பிரச்னைகளை தொலைபேசி மூலம் தனித்துப் பேசி விவாதிக்கும் நிலையில் இருவருமே இல்லை.

2004-ல் பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்த்துக் கூட்டணி அமைத்து, முன்னிலையில் இருந்து பிரசாரம் செய்து வெற்றியை ஈட்டினார் சோனியா. ஆட்சிக்கு வந்த பிறகு பின்னணியில் இருந்து ஆட்சியை வழிநடத்த முற்பட்டார். ஆனால் அதில் முனைப்பும், தீவிர முயற்சியும் இல்லாததால் தொய்வு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால் காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், 2009 இவர்கள் எதிர்பார்ப்பதுபோல அமையாது.

தமிழில்: சாரி
———————————————————————————————–

எல்லா துறையிலும் காங். கூட்டணி அரசுக்கு தோல்வி: பாஜக 66 பக்க கண்டன அறிக்கை

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3 ஆண்டுக்கால பதவி நிறைவையொட்டி, பாரதீய ஜனதா தயாரித்த 66 பக்க அறிக்கை தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் (இடமிருந்து 3-வது) இதை வெளியிட்டார். ஐ.மு.கூ. ஆட்சியில் சாமான்ய மனிதனுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பட்டியலிடுகிறது அறிக்கை.

புது தில்லி, மே 23: “”பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 3 ஆண்டுக்கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோற்றுவிட்டது” என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக 66 பக்க அறிக்கையை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

“நல்ல பொருளாதார நிர்வாகத்துக்கு அடையாளமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏழைகளும், நடுத்தர மக்களும் நலமாக வாழ முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

உள்நாட்டு பாதுகாப்பிலும் கோட்டைவிட்டுவிட்டது அரசு. பயங்கரவாதிகளையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் கட்டுக்குள் வைக்கத்தான் “”பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அயோத்தி, பெங்களூர், காசி, தில்லி, மும்பை, மாலேகாம், ஹரியாணாவில் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜம்மு மற்றும் இப்போது ஹைதராபாத் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளனர். இவற்றைத் தடுக்கத்தான் முடியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களை அதன் பிறகு பிடிப்பதிலும் இந்த அரசு கோட்டைவிட்டுவிட்டது.

கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானிக்குச் சலுகை காட்ட வேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் “”ஒருமனதாக” தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; தில்லியில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாகக் கருதியே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

ஆந்திரம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சல்களை ஒடுக்க முடியவில்லை.

அரிசி, கோதுமை, பருப்புவகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பெட்ரோல், டீசல், சிமெண்ட், இரும்பு ஆகிய எல்லாவற்றின் விலையும் கடந்த 3 ஆண்டுகளாக விஷம் போல ஏறி வருகின்றன.

நாட்டின் நிதி நிலைமை உபரி என்ற நிலையிலிருந்து பற்றாக்குறை என்ற அளவுக்கு இப்போது சரிந்துவிட்டது.

பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது வீடுகட்ட 6% வட்டியில் கடன் தரப்பட்டது. இப்போது அந்த கடனுக்கான வட்டி வீதம் 12% என்று இருமடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் மனித உரிமைகளை மீறினால் இந்த அரசால் சகித்துக் கொள்ள முடியாது என்று முழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்; பயங்கரவாதிகள் மக்களைத் தாக்கினால் சகித்துக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டார்களா என்று கேட்க விரும்புகிறோம். பாகிஸ்தானில் இன்னமும் 59 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே கூறியிருக்கிறார். அந்த முகாம்கள் தொடர்பாக பாகிஸ்தானிடம் என்ன பேசினார்கள் என்று தெரிய வேண்டும்.

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடிகளுடன் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சிக்கு உரைகல்லாகத் திகழ்கிறது’ என்று ராஜ்நாத் சிங் வெளியிட்ட குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

“பிரதமர் பதவியே வேண்டாம் என்று தியாகி போல நடித்த சோனியா காந்திதான் இந்நாட்டின் உண்மையான அதிகாரம் உள்ள பிரதமர் என்பது நாடறிந்த ரகசியம். அப்படிக் கூறியவர் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் என்ற பதவியை காபினெட் அமைச்சர் அந்தஸ்தில் அவசர அவசரமாக ஏற்றார். அதை பிரதமரின் அலுவலகத்துக்கு இணையாக உருவாக்கினார்கள். ஜெயா பச்சனை அரசியல் ரீதியாகப் பழிவாங்க, ஒருவருக்கு இரு பதவியா என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய வைத்து, பிறகு அதே அஸ்திரம் தன் மீதும் பாய வருகிறது என்று தெரிந்ததும் முதலில் மக்களவை உறுப்பினர் பதவியையும் பிறகு தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்து தியாக நாடகத்தை முடித்தார்’ என்றும் அந்த அறிக்கை கடுமையாகச் சாடுகிறது.
———————————————————————————————–

07.06.07
குமுதம் ரிப்போர்ட்டர்

சோலை – காங்கிரஸ் ஆட்சி: அலசல்

சென்ற ஆண்டுத் தொடக்கத்தில் மன்மோகன் சிங் அரசு பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தலென்றால், ஐக்கிய முன்னணி 400 இடங்களுக்கு மேல் பெறும். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்தக் கணிப்பு தெரிவித்தது.

அதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் _ காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் முகவரியே காணாமல் போகும் என்பதற்கு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் சாட்சியாக அமைந்துவிட்டது.

மன்மோகன் சிங் அரசு மூன்றாண்டுகளை முடித்துவிட்ட நிலையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனம் இப்போது கருத்துக் கணிப்பு நடத்தியது. மன்மோகன் சிங் அரசு மோசம் என்று 47 சதவிகிதம் பேர் தீர்ப்பளித்திருக்கின்றனர். ஏதோ பரவாயில்லை என்று 7 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். நல்ல ஆட்சி என்று இரண்டு சதவிகிதம் பேர்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் சாம்ராஜ்ய அதிபதிகளாக இருக்கலாம்.

என்ன காரணம்? இந்த அரசின் சாதனைகள், சாதாரண மக்களை எட்டவில்லை என்று மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரே சொல்லிவிட்டார்.

ஐயோ! விலைவாசி உயர்கிறது என்று மூன்று ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சிகள் குரல் கொடுத்துப் பார்த்தன. தொண்டை வறண்டு புண்ணாகிப் போனதுதான் கை கண்ட பலன். ஆமாம். பணவீக்கம் _ விலைவாசி உயர்வுதான் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்று மன்மோகன் சிங் இப்போது கூறுகிறார்.

விலைவாசியை உயர்த்துவதில்தான் தொழில் அதிபர்கள் போட்டி போடுகிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார். காலம் கடந்து ஞானம் பிறந்திருக்கிறது.

உணவு தானியங்களைத் தனியார் கொள்முதல் செய்ய அனுமதித்தது _ ஆன்_லைன் யூக பேர வணிகத்தை வளர்த்தது ஆகிய பல காரணங்கள்தான் விலைவாசி உயர்விற்குக் காரணம் என்பது பாமர மக்களுக்கும் புரியும். அவற்றை, திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியாவே குரல் எழுப்பிவிட்டது. ஆனால், தொழிலதிபர்கள், பெரிய வணிகர்கள், பதுக்கல்காரர்கள், கொள்ளை லாபக்காரர்களுக்கு ஆதரவான இந்த நடைமுறைகளைக் கைவிட இன்றுவரை மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது.

செயற்கையாக உணவுத் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனைக் காரணம் காட்டி, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்கிறார்கள். அவற்றின் இறக்குமதி வரிகளைக் குறைக்கிறார்கள். விளைவு என்ன? இந்தியாவில் உற்பத்தியாகும் அதே பொருள்களின் விலை வீழும்; உற்பத்தி பாதிக்கும்.

வளர்ந்து வரும் மேலை நாடுகள் எப்படிச் சாதாரண மக்கள் மீது வரிகளைப் போடுகின்றன என்று தெரிந்து கொள்கிறார்கள். அந்த வரிகள்தான் இங்கு நம்மீது விதிக்கப்படுகின்றன. தொழிலதிபர்கள், பொருளாதார மண்டலவாதிகள், பன்னாட்டு நிதிநிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் ஆகிய அனைத்திற்கும் வரிச் சலுகைதான்.

ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் ஆகியோர் சேவை வரியால் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். அநேகமாக அவர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுக்கும், சிதம்பரம் அந்த வரியைத் திணித்து விட்டார். அந்த வரி ஆண்டுதோறும் உயர்வதோடு, புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றது.

மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, ஒரு மூட்டை சிமெண்ட் விலை 140 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்னர், நிதி அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது 180 ரூபாய். ‘இதோ… சிமெண்ட் விலை குறையப்போகிறது’ என்றார்கள். இன்றைய சிமெண்ட் விலை மூட்டை 230 ரூபாய். குதியாட்டம் போட்டு உயருகிறது.

குறிப்பிட்ட சில சிமெண்ட் கம்பெனிகளின் பகாசுரக் கோடீசுவரர்கள்தான் சிமெண்ட் விலையை நிர்ணயிக்கிறார்கள். ‘மயிலே மயிலே இறகுபோடு’ என்று அவர்களிடம் மன்மோகன் சிங் கெஞ்சுகிறார் _ சிதம்பரம் கொஞ்சுகிறார். ‘இன்னும் விலையை உயர்த்துவோம். என்ன செய்வீர்கள்?’ என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். லாபத்தைக் குறைக்க மாட்டோம் என்கிறார்கள்.

சீனாவும் பாகிஸ்தானும் மூட்டை 130 ரூபாய் என்று நமக்கு சிமெண்ட் இறக்குமதி செய்யத் தயாராக இருக்கின்றன. இறக்குமதி செய்வோம் என்றனர். ஆனால், அறிவிப்பு, செயல் வடிவம் பெறவில்லை. இன்னொரு பக்கம் நமது சிமெண்ட் துறை கோடீசுவரர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.

சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது, ஒரு டன் இரும்புக் கம்பி விலை 26,000 ரூபாய். விலைவாசி தொப்பென்று விழப் போகிறது என்றார்கள். ஆனால், இன்றைக்கு இரண்டே மாதங்களில் 31 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

நாடு தழுவிய அளவில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாததால், மன்மோகன் சிங் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் மவுனப் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதனைத்தான் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம்?

கடந்த மே தினத்தன்று வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகாசில் கடல் போல் மக்கள் கூட்டம். அந்த நாட்டின் அதிபர் ஹீகோ சாவோஸ் அற்புதமான சில பிரகடனங்களை வெளியிட்டார்.

அமெரிக்காவின் ஆளுகையில் உள்ள உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எஃப்) ஆகிய அமைப்புகளுக்கு இன்று முதல் விடை தருகிறோம் என்றார். இந்த நிதி நிறுவனங்கள் _ ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் மீது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்துகிற நங்கூரங்கள் என்றார்.

இதேபோல், கடந்த மே தினத்தன்று இன்னொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவும் உலக வங்கிக்கு விடை கொடுத்தது.

உலக வங்கிக்கு விடை கொடுக்கும் இன்னொரு நாடு நிகாரகுவா. வளரும் நாடுகளின் வாழ்வைச் சூறையாட அன்னிய முதலீடுகளைத் திணிக்கும் புரோக்கர்தான் உலக வங்கி என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.

உலக வங்கியின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும்தான் தங்கள் நாடுகள் சீரழிந்ததற்குக் காரணம் என்பதனை இப்போது சின்னஞ்சிறிய நாடுகள்கூட உணர்ந்து வருகின்றன. அவற்றின் விடுதலைக் குரலைக் கேட்கிறோம். ஆனால், இங்கே உலக வங்கிக்கு உடுக்கை அடிக்கும் பூசாரிகளைப் பார்க்கிறோம்.

பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தையும் வெனிசுலா, பொலிவியா, நிகாரகுவா, சிலி ஆகிய நாடுகள் நாட்டுடைமையாக்கிவிட்டன. அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்களுக்கு முடிசூட்ட வரவில்லை; முள்கிரீடம் சூட்ட வந்தவை என்று பொலிவியா அதிபர் மோல்ஸ் அறிவித்திருக்கிறார்.

ஆனால், அன்னிய நிறுவனங்களின் வருகையும் அவற்றின் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும்தான் நாட்டின் வளர்ச்சி என்று இங்கே பட்டியல் போடுகிறார்கள்.

அமெரிக்க ஆதிக்கத்திலிருந்த எண்ணெய், எரிவாயு வயல்களை, சென்ற ஆண்டு பொலிவியா தேசிய மயமாக்கியது. இந்த ஆண்டு வெனிசுலா தேசிய மயமாக்கியது. எண்ணெய் விலை வீழ்கிறது.

தங்கள் நாட்டுத் தண்ணீரையே எடுத்து தங்களுக்கு விற்பனை செய்த இத்தாலிய எடிசன் கம்பெனியை பொலிவியா வழி அனுப்பி வைத்துவிட்டது.

பொலிவியாவின் டெலிபோன் துறை முழுக்க முழுக்க இத்தாலிய நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அதில் 50 சதவிகிதப் பங்குகளை அரசு எடுத்துக் கொண்டது. அடுத்து தேசியமயமாக்குகிறது.

ஆமாம். அங்கே சரித்திரச் சக்கரம் முன்னோக்கிச் சுழல்கிறது. இங்கே அந்தச் சக்கரத்தை மன்மோகன் சிங் அரசு பின்னோக்கிச் சுழற்றுகிறது. அதுதான் உலக வங்கி சொல்லிக் கொடுத்த பாடம்.

எண்ணெய் வளத்துறை இங்கே தேச உடைமையாகத்தான் இருந்தது. விரட்டப்பட்ட அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களும் அந்தத் துறையை இப்போது கபளீகரம் செய்கின்றன.

தொலைத்தொடர்புத் துறையில் 74 சதவிகித அன்னிய முதலீடுகளை அனுமதிக்க நிதியமைச்சர் சிதம்பரம் தயாராகிவிட்டார்.

அநேகமாக இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியா முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விடும்.

விழித்துக் கொண்ட தென் அமெரிக்க நாடுகள் துரத்துகின்ற எல்லா அன்னிய நிறுவனங்களுக்கும் இங்கே பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். இன்னொரு பக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை கோடீசுவரர்கள் உருவாகியிருக்கிறார்கள்? என்று ஏடுகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றன. லட்சாதிபதிகள், கோடீசுவரர்களாகிறார்கள். கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகிறார்கள். 34 கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் பலர் பங்குச் சந்தைச் சூதாட்டங்களில் வளர்ந்து வருபவர்கள்.

பொருளாதாரம், நிர்வாகம், முதலீடுகள் தொடர்பாக உலக வங்கி தரும் யோசனைகள்தான் செயல்படுத்தப் படுகின்றன. அதனால் விலைவாசி உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் வளரும். சமூக முரண்பாடுகள் விரிவடையும்.

அந்த உலக வங்கிச் சுனாமி சுழன்றடித்து வெளியேறிய நாடுகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. உலக வங்கி, அன்னிய முதலீடுகள் அனைத்தும் ஓடுகின்றன. வெளிச்சம் தெரிகிறது. நெருப்புப் பறவைகள் சிறகடிக்கின்றன. விலைவாசி வீழ்கிறது.

இங்கே அதே அன்னிய முதலீடுகளும் உலக வங்கியும் நமது மயில்களின் கால்களை ஒடித்து சூப்பு வைத்துக் குடிக்கின்றன. விலைவாசி உயருகிறது. வேதனை பெருகுகிறது. நாடு நன்றாகவே இருளில் நடைபோடுகிறது.

—————————————————————————-

துக்ளக் 6.6.2007 இதழில் சோவின் தலையங்கம்

வியந்து பாராட்டுகிறோம்! இது ஒரு சாதனைதான்; மன்மோகன் சிங்கின் அரசு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டது. ‘ மற்ற சாதனைகள் என்ன?’ என்று கேட்டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா? பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள்? தி.மு.க. ஒரு உதாரணம் போதுமே?

‘வேண்டிய இலாகாக்கள் கிடைக்கா விட்டால், எதுவுமே வேண்டாம் போ’ என்று அடம் பிடித்து, வேண்டிய இலாகாக்களைப் பெற்றதிலிருந்து, இன்று வரை அவர்கள் மன்மோகன் சிங்கை பிரதமராகவா மதித்திருக்கிறார்கள்? ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு?’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே! அர்ஜுன்சிங்கைப் பொறுத்த வரையில், பிரதமர் ஒரு தொந்தரவு; அவ்வளவுதான். சில சமயங்களில், அவரிடம் பேச வேண்டியிருக்கும், என்பதைத் தவிர வேறு பிரச்சனை இல்லை.

மற்ற காங்கிரஸ் அமைச்சர்கள், பிரதமரை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். லாலு பிரஸாத் யாதவ், ‘நானும் ஒரு நாள் பிரதமர் ஆகப்போகிறவன்தானே!’ என்று கூறி, இன்றைய பிரதமரை அவ்வப்போது மட்டம் தட்டுகிறார். இப்படி பார்த்துக்கொண்டே போனால், பிரதமரை பிரதமராக மதிக்கிற அமைச்சர் யாராவது ஓரிருவர் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. சோனியா காந்தியின் தயவில் பணிபுரிகிறவர், என்கிற முத்திரை பலமாக விழுந்திருக்கிறது. இதெல்லாம் போதாதென்று, இடது சாரிகள் வேறு அவ்வப்போது மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

சிதம்பரம், அலுவாலியா (திட்டக் கமிஷன்) போன்ற பொருளாதாரம் அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டும் கூட, மன்மோகன் சிங்கினால், முழுமையான பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. எதைச் செய்தாலும், இடது சாரிகள் முரண்டு பிடிக்கிறார்கள்; ‘அமெரிக்காவின் அடிமையாகி விடாதே’ என்று பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் இவ்விதமாக இருக்க, தீவிரவாதிகள் விஷயத்தில் தாராள மனப்பான்மையைக் காட்ட வேண்டியிருக்கிறது.

அதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்று இடதுசாரிகளும், சோனியா காந்தியும் கூறுகிறபோது, பாவம் பிரதமர் என்ன செய்வார்? ஊழல் விஷயத்திலோ, கேட்கவே வேண்டாம். அந்தந்தத் துறை, அந்தந்த அமைச்சரின் சாம்ராஜ்யம். ஏற்கனவே கிரிமினல் குற்றச்சாட்டு உடையவர்கள்  லாலு பிரஸாத் யாதவ் உட்பட  அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒரு மந்திரி, கொலைக்குற்றத்திற்காக இப்போது நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருக்கிறார். அதற்கு முன்னால் அவர் தலைமறைவாக கொஞ்ச நாட்கள் இருந்தார். அப்போதும் மந்திரிதான்.

தலைமறைவு மந்திரியைக் கொண்ட முதல் மத்திய அரசு  என்ற ‘புகழை’ மன்மோகன் சிங் அரசு பெற்று மகிழ்ந்தது. பிரதமர் நினைத்து, ஒரு மந்திரியை நீக்கவோ, வைக்கவோ, இலாகாவை மாற்றவோ முடியாது; அது அந்தந்தக் கூட்டணிக் கட்சியின் இஷ்டம்; சம்பந்தப்பட்டவர் காங்கிரஸ்காரரானால், சோனியாவின் இஷ்டம். ஒரு பொருளாதார சீர்திருத்தத்தை, பொருளாதார நிபுணரான பிரதமரால் செய்துவிட முடியாது; அதற்கு இடதுசாரிகளின் அனுமதி தேவை.

தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது; அதற்கு சோனியாவின் ஒப்புதல் அவசியம். கிரிமினல் பேர்வழிகளை கிட்டே சேர்ப்பதில்லை என்ற முடிவைக்கூட, பிரதமரால் எடுக்க முடியாது; அது கூட்டணி தர்மத்திற்கு விரோதம். இந்த நிலையில், ‘மூன்று வருட சாதனை என்ன? என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ  என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம்!.

நன்றி : துக்ளக்
—————————————————————————-

Posted in Achievements, Agriculture, Analysis, Anniversary, Baba, Backgrounder, Banks, BJP, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Deflation, dera, Deve Gowda, DMK, Economy, Education, Elections, Evaluation, Execution, Finance, Goals, Govt, IMF, Inflation, Islam, IT, Madani, Madhani, Manmohan, Manmohan Singh, Maran, Millionaire, Muslim, Naxal, NDA, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Opposition, Party, Planning, Politics, Polls, POTA, Principles, Process, Radhika Selvi, RadhikaSelvi, Recession, Report, Rich, Sachar, Sonia, TADA, Terrorism, UDA, WB | 1 Comment »

Mayawati takes Uttar Pradesh – Biosketch

Posted by Snapjudge மேல் மே 11, 2007

உ.பி.யில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி: பள்ளி ஆசிரியையாக பணி புரிந்தவர்

லக்னெü, மே 12: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி (51).

இவர் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவிய கான்சி ராமின் நிழலில் வளர்ந்தவர். அவரிடம் இருந்து அரசியல் பாடம் கற்றவர். எதிரிகளின் கூட்டணியை தனி ஆளாக நின்று சமாளித்தவர்.

உ.பி. சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பிராமண வகுப்பைச் சேர்ந்த 94 பேருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

முந்தைய மூன்று முறையும் கூட்டணி ஆட்சியை நடத்திய மாயாவதி, தற்போது அசுர பலம் பெற்று கூட்டணி தயவு தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

தில்லியில் தபால்-தந்தி துறை ஊழியரின் மகளாக பிறந்த மாயாவதி, உ.பி.யின் முதல்வராக 1995-ல் அரியணை ஏறினார். அப்போது அவரால் 4 மாதமே பதவியில் நீடிக்க முடிந்தது. சமாஜவாதி கட்சியின் முலாயம் சிங்குடனான கூட்டணி திடுமென முடிந்ததே அதற்கு காரணம்.

பின்னர் இரண்டாவது முறையாக 1997-ல் முதல்வரானார். இம்முறை 6 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தார். அப்போது பாஜகவுடன் “விரும்பத்தகாத’ ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்ததால் மாநிலத்தில் அரசியல் குழப்பமே மிஞ்சியது.

ஊழல் வழக்கில் சிக்கியதால் ராஜிநாமா

மூன்றாவது முறையாக 2002-ல் முதல்வரானார். பாஜகவின் ஆதரவுடன் 18 மாதங்கள் ஆட்சி செய்தார். இருப்பினும் தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து 2003-ல் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் மாயாவதிக்கு ஏற்பட்டது.

மாயாவதிக்கு 6 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். பள்ளி பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறு வயது முதலே இருந்தது.

தில்லியில் 1977 முதல் 1984வரை பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அப்போதே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பின் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

1984 முதல் தீவிர அரசியல்

1984-ம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். கான்சி ராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும் தோற்றார்.

இருப்பினும் மனம் தளராமல் 1988-ல் மூன்றாவது முறையாக பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தார். 1994-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்தார்.

கல்லூரி நாள்களில் மேல்சாதி மாணவர்கள் அவரை ஏளனமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பலவீனப் பிரிவினருக்காக போராட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாம். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாயாவதி, சட்டப்படிப்பையும், பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார்.
———————————————————————-
வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் – ஊழல், குற்றம், அச்சம் அடியோடு ஒழிக்கப்படும்: மாயாவதி

லக்னெü, மே 12: உத்தரப் பிரதேசத்தில் ஊழல், கிரிமினல்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதி, லக்னெüவில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

மக்கள் அச்சமின்றி வாழவும், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத வகையில் புதிய அரசு ஆட்சி புரியம். அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். இத்தேர்தலில் உயர்சாதியினரும், முஸ்லிம்களும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை முஸ்லிம்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்துள்ளனர். மாஃபியா, தீவிரவாத மற்றும் காட்டு ராஜாக்களின் ஆதிக்கம் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை

உ.பி.யில் சமாஜவாதி ஆட்சியில் இருந்தபோது நடந்த அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மாயாவதி தெரிவித்தார்.

இது அரசியல் ஆக்கப்படமாட்டாது; எதிரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் அல்ல. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்ற உள்ளோம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆசாம் கான், தனது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். முலாயம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இறந்தபோனவரை மீண்டும் கொல்லமுடியாது. மக்கள் அவருக்கு தண்டனை வழங்கிவிட்டனர்’ என்றார்.
———————————————————————————-

உத்தரப் பிரதேச முதல்வரானார் மாயாவதி: 50 உறுப்பினர்களுடன் அமைச்சரவை பதவிஏற்பு

லக்னௌ, மே 14: உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி (51) பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருடன் 50 உறுப்பினர்கள் கொண்ட மிகப் பெரிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.

உ.பி. முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ள மாயாவதி, இம்மாநிலத்தின் 40-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாயாவதி உள்பட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அக் கட்சித் தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பதவி ஏற்பு முடிந்ததும் மாயாவதி தனது பெற்றோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிராமணர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த அக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ர மட்டும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மாயாவதியுடன் அமர்ந்திருந்தார்.

பகுஜன் சமாஜ் தேசிய செயலர் சித்திக், மாநிலத் தலைவர் லால்ஜி வர்மா, மூத்த தலைவர்கள் சுவாமி பிரசாத் மெüர்யா, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி கட்சிகளின் தயவை நாடாத தனி ஒரு கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாயாவதி.

தேர்தலில் மேல்சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றிக்கொடி நாட்டிய மாயாவதி, அமைச்சரவையில் மேல்சாதியினர் பலருக்கும் இடம் அளித்துள்ளார்.

7 பிராமணர்கள், 6 தாக்கூர்கள், 5 முஸ்லிம்கள், யாதவ குலத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.

50 பேர் கொண்ட மிகப்பெரிய அமைச்சரவையில் 19 பேர் கேபினட் அந்தஸ்துடையவர்கள்; 21 இணை அமைச்சர்களுக்கு தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; 9 பேர் இணை அமைச்சர்கள்.

மாநிலத்தின் 40-வது முதல்வர்

1993-ல் உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற போது இந்தியாவின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் முதல்வர் பதவி ஏற்கும் 40-வது முதல்வர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

என்.டி. திவாரிக்கு இணையாக..

உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி 4 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு இணையாக மாயாவதியும் 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாயாவதி, இன்னும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பகுஜன் சமாஜ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை ஒருமனதாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.

403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.

———————————————————————————————————

ஆட்டம் போட்டவர்கள் கொட்டம் அடங்கியது

லக்னோ:உ.பி.,யில் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்ட அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.

முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடினார் மாயாவதி. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உ.பி., முதல்வராக நேற்று பதவியேற்ற உடன் மாயாவதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • உ.பி., சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முலாயம் சிங் தலைமையிலான அரசு எடுத்த நிர்வாக முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
  • இதில், ஜாகர் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்தது,
  • அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தது,
  • ஷாபி கிராமத்துக்கு (முலாயமின் சொந்த கிராமம்) ரூ.10 கோடி ஒதுக்கியது ஆகிய நிர்வாக முடிவுகள் உட்பட பல முடிவுகள் ரத்து செய்யப்படும்.
  • மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். கிரிமினல்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.
  • முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட துப்பாக்கி லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.

எனது அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாநிலத்தின் நலனே அனைத்திலும் முதன்மையானது.

  • சமாஜ்வாடி பொதுச்செயலர் அமர் சிங் தலைமையிலான உ.பி., மேம்பாட்டு கவுன்சில் கலைக்கப்படுகிறது.
  • அம்பேத்கர் பூங்காவை முறையாக பராமரிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
  • உயர் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர் மாயாவதி கூறினார்.உ.பி., மேம்பாட்டு கவுன்சில் மூலம் தான் நடிகர் அமிதாப் பச்சன், மாநிலத்தின் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும், பல கலாசார நிகழ்ச்சிகள் பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, இதற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.

இந்த கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அமர் சிங் நேற்று முன்தினமே ராஜினாமா செய்து விட்டார். பதவியேற்ற முதல் நாளே பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றி முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முலாயம் சிங்கின் நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் தாத்ரி மின் திட்டம் தொடருவது குறித்து முதல்வர் மாயாவதி எதிர்ப்பாக எதுவும் கூறவில்லை. “இப்போது தான் பதவியேற்றுள்ளேன். இது குறித்து பதிலளிக்க இப்போது முடியாது’ என்று கூறி விட்டார்.

அதுபோல, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “இப்போது தான் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், உங்களிடம்(நிருபர்கள்) கண்டிப்பாக கூறுவேன்’ என்று மாயாவதி தெரிவித்து விட்டார்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்த உடன், உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பி.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்டவர் கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தவிர கேபினட் செயலர் என்ற புதிய பதவியையும் மாயாவதி உருவாக்கியுள்ளார்.

எம்.எல்.ஏ., தாராளம்:

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ., சுபாஷ் பாண்டே. இவர், தனது எம்.எல்.ஏ., பதவிக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் பதவிக்காலம் முடியும் வரை புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக அளிக்க முன்வந்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கடவுளிடம் உறுதி கூறியிருந்தேன். அதன்படி இப்போது அறிவிப்பு செய்துள்ளேன்’ என்று சுபாஷ் பாண்டே கூறினார்.
————————————————————————————————–

மாயாவதிக்கு சாதனை, காங்கிரஸýக்கு சோதனை

நீரஜா செüத்ரி:

தமிழில்- ஜி.கணபதி

மாயாவதி பிறரது ஆதரவு இன்றித் தனித்து நின்றே வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை உற்சாகமூட்டித் தட்டி எழுப்பப் போகிறது.

சமூகத்தில் நசுக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டி ஆளப்போகிறார்.

இது அரசியல் அம்சங்களையும் சமூக உறவையும் மாற்றப் போகிறது. மாயாவதிக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியல் இனி என்ன வடிவத்தை எடுக்கும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.

தலித்துகள், பிராமணர்களை உள்ளடக்கி மாயாவதி அமைத்த வெற்றிக் கூட்டணியில் முஸ்லிம்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் இணைந்தனர். இத்தகைய கூட்டணி புதிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இருந்துள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களிடம் பேசும்போது, தனக்கு உறுதுணையாக இருந்த

  • சதீஷ் சந்திர மிஸ்ர (பிராமணர்),
  • நசீமுதீன் சித்திக்கி (முஸ்லிம்),
  • பாபு சிங் குஷ்வஹா (மிகவும் பிற்பட்ட வகுப்பு) ஆகியோருக்குத் திறந்த மனதுடன் வெளிப்படையாக நன்றி தெரிவித்தன்மூலம் இது பல வண்ணக் கூட்டணி என்பதை மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டியின்போது அவர்களைத் தனக்குப் பக்கத்திலும் அமரச் செய்திருந்தார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சாதி கண்ணோட்ட அடிப்படையில் அது அமையவில்லை.

அயோத்தி இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தபோது தம் பக்கமாக பிராமணர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தபோதிலும் உயர்சாதி உணர்வை வெளிப்படையாகத் தட்டி எழுப்பி ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்யவில்லை.

ஆனால் இப்போதுதான் பிராமணர்கள் வகுப்பு அடிப்படையில் வெளிப்படையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பிராமணர்கள் மாநாட்டை, மாவட்ட நிலையில் நடத்திய மாயாவதி லக்னெüவில் மாபெரும் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

இப்போதைய முக்கிய கேள்வி இதுதான். பாஜகதான் பிராமணர்களின் புகலிடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உயர் சாதியினர், மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனரே? இது ஏன் என்பதே.

பாஜகவை விட்டு விலகி உயர்சாதியினர் நீண்ட தொலைவு சென்று விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் பாஜகவின் 2002 தேர்தல் வெற்றி முடிவுடன் ஒப்பிடுகையில் தற்போதைக்கு அதன் வெற்றிக் கணக்கு பாதியாகக் குறைந்திருக்காதே.

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மேல்சாதியினர் விரும்பினர். மேலும் அந்தக் கட்சிக்கு மாற்றாக மாயாவதியைக் கருதினர். உயர்சாதியினரை அலறவைத்த குண்டர்கள் ராஜ்ஜியம், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்திருந்தார் மாயாவதி.

ஆரம்பம் முதலே முலாயம், அமர்சிங் ஆகியோரைக் கடுமையாகச் சாடி வந்தார் மாயாவதி. ஆனால், பாஜகவோ சமாஜவாதி மீது மெத்தனம் காட்டியது. இதை பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

2003-ல் முலாயம்சிங் தலைமையில் ஆட்சி அமைய உதவியது, பகுஜன் சமாஜ கட்சி இரண்டாக உடைந்தபோது அதை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரான கேசரிநாத் திரிபாதி (பாஜக) அங்கீகரித்தது ஆகியவை உயர்சாதியினர் மத்தியில் சந்தேகம் எழ வைத்தது. உள்ளுக்குள் சமாஜவாதி கட்சியுடன் பாஜக ரகசிய உறவை வைத்துக்கொண்டதோ என்ற கண்ணோட்டம் ஏற்படச் செய்தது. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பலவீனப்படுத்தப்படுவதாகவும் அநீதி இழைக்கப்படுவதாகவும் பிராமணர்கள் வேதனைப்பட ஆரம்பித்தனர்.

தலித்துகள், ஜாட் வகுப்பினர், யாதவர், குர்மிஸ் ஆகிய எல்லா வகுப்பினருக்குமே அரசியல் புகலிடம் உள்ளது. சமாஜவாதியின் அமர்சிங், வெளிப்படையாகவே, தாக்குர் வகுப்பினர் நலனுக்காகப் பாடுபட்டார். ஆனால் பிராமணர்கள் பற்றி யாரும் வாய் திறந்ததில்லை. அதைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய மாயாவதி “சர்வஜன சமாஜ்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.

இந்நிலையில், பிராமணர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக சதீஷ் சந்திர மிஸ்ர உயர்ந்தார்.

வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் சிறந்த பிராமணத் தலைவராகக் கருதப்பட்ட வாஜபேயியையும் மிஞ்சினார் மிஸ்ர.

மாயாவதியுடனான அவரது நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மாநிலத்தை ஆட்சி செய்ய வழி கிடைத்துள்ளது என்ற எண்ணம் பிராமணர்கள் மத்தியில் ஏற்பட்டது.

தாக்குர் இனத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் பாஜகவைவிட விரும்பப்பட்டவரானார் மாயாவதி. லோத் இனத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.

2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு சாதி அடிப்படையில் அரசியல் சமூகம் மண்டல் மயமாகி உள்ளதை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. பிராமணர்களும் வைசியர்களும் சிறந்த வியூகத்துடன் வாக்களித்துள்ளனர்.

சில வழியில் வகுப்புவாத கண்ணோட்டத்துக்கு சாதி நோக்கம் வலிமை சேர்த்துள்ளது என்று கூறலாம். முஸ்லிம் விரோத பிரசார சி.டி. அல்லது அப்சல் குரு விவகாரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி ஆதாயம் பெற முயன்றது பாஜக. ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஹிந்து மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் பலன் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல.

இந்த ஆண்டு பிற்பகுதி வாக்கில் குஜராத்தில் நடக்கவுள்ள தேர்தலில் இது தெரிந்துவிடும்.

மாயாவதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது மக்கள் நாடித்துடிப்பை அறிந்து சமூக சக்திகளை ஒன்றிணைத்து அவர் வகுத்த கூட்டணி.

வெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனோதிடமும் அவரிடம் ஓங்கிக் காணப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடக்கிய அவர் நன்கு திட்டமிட்டு தொகுதி, தொகுதியாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இத்தகைய நடவடிக்கைகளில் பாஜகவும் காங்கிரஸýம் தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்புதான் இறங்கின. மேலும் வேட்பாளர்கள் தேர்வைப் பிறரைவிட முன்கூட்டியே முடித்துவிட்டார் மாயாவதி.

பாரம்பரியமாகத் தமக்கு ஆதரவு தந்து வந்தவர்களின் மன கண்ணோட்டம் பற்றித் தப்புக்கணக்கு போட்டது பாஜக. தனக்கு ஆதரவாக ஹிந்துக்களை அணி திரள வைக்கவும் அது தவறிவிட்டது. கணிசமான முஸ்லிம்கள் முலாயம் நோக்கி அலறி அடித்து ஓடும் வகையிலும் செயல்பட்டது. இவை, முலாயமின் வேகமான வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவியுள்ளன.

மாயாவதி பெற்றுள்ள வெற்றி இதர மாநிலங்களில் குறிப்பாக, 2008ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் தீவிர தொடர்விளைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.

தில்லியில் பகுஜன் சமாஜ கட்சி வேர் விட்டுள்ளது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்ததே காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஜூலையில் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை மாயாவதி ஆதரவுடன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. என்றாலும் மாயாவதியின் வளர்ச்சி நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸýக்கு தொல்லை தரக்கூடியதுதான்.

———————————————————————————————-

.மாயாவதி வெற்றியின் பின்னணியில் மூன்று முகங்கள்!

உ.பி., சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மூன்று பேர் முக்கிய தளபதிகளாகச் இருந்துள்ளனர். இவர்களின் உதவியுடன் பிராமணர்கள், வைசியர்கள் செயல்பட்டதால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து மாயாவதி வெற்றியை அள்ளிக் குவித்து விட்டார்.

எஸ்.சி.மிஸ்ரா: உ.பி.,யில் சீனியர் வக்கீலாக இருப்பவர் எஸ்.சி.மிஸ்ரா. பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் அனுபவம் சிறிதும் கிடையாது. முன்பு 1976ல் எச்.என்.பகுகுணாவிடம் தேர்தல் மேலாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். உ.பியில் பகுகுணா செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர். பின் நீண்ட இடைவெளக்குப் பின் 2004ல் மாயாவதி முதல்வர் பதவியை துறந்த போது, அவரது கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார் மிஸ்ரா.

இது குறித்து மிஸ்ராவிடம் கேட்ட போது “தாஜ்மகால் வழக்கில் மாயாவதியை பா.ஜ., மிரட்ட தொடங்கியது. ஆனால், அதற்கு மாயாவதி அடிபணியவில்லை. அவரது போராட்ட குணம் எனக்கு பிடித்து விட்டது. எனவே தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்றார்.

இந்த தேர்தலில் பிராமணர்களின் ஓட்டுகளை கட்சிக்கு பெற்று தரும் பணி மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான களப்பணியை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணி ஒன்றை நடத்தி மிஸ்ரா முதலில் துவக்கினார். “பா.ஜ., “கமண்டல’த்தை விட்டு விட்டு “மண்டல்’ பிரச்னையை கையில் எடுத்து விட்டது. எனவே மாற்று கட்சியை பிராமணர்கள் தேட தொடங்கினர். அவர்களின் எண்ணத்தை நான் பூர்த்தி செய்தேன்’ என்று மிஸ்ரா இப்போது கூறுகிறார்.

அந்த ஆண்டில் மட்டும் பிராமணர்கள் பங்கேற்ற 21 பேரணிகளை நடத்தினார். இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும், பிராமணர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் அடங்கிய கமிட்டியையும் உருவாக்கினார். அவரது செயல்பாட்டை அப்போது பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், இறுதியில் மிஸ்ரா வெற்றி பெற்று காட்டி விட்டார். இதற்கு பரிசாக மிஸ்ராவை அட்வகேட் ஜெனரலாக, மாயாவதி நியமிக்க உள்ளார்.

“பிராமணரான என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது ஏன்?’ என்று மிஸ்ராவே வினோதமாகக் கேட்கிறார். அதற்கு மாயாவதி பதிலாக “நான் ஜாதியை பார்த்து பதவியை தருவதில்லை. தகுதியை பார்த்து தான் தருகிறேன்’ என்று கூறி விட்டார்.

நசீம்முதீன் சித்திக்: மாயாவதியின் தீவிர விசுவாசி நசீம்முதீன் சித்திக். அரசியல் உலகை தவிர வெளியுலக தொடர்பே இவருக்கு இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓடி விடுவார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.இந்த தகுதிகளின் காரணமாகவே மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார். சித்திக்.

“பேகன்ஜி'(மாயாவதி) சொல்வதை மட்டுமே செய்வார். மாயாவதி 1980ம் ஆண்டுகளில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகமானவர் சித்திக். மாயாவதியை பாதுகாக்கும் பொறுப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. அது முதல் மாயாவதியின் நிழல் போலவே இருந்து வருகிறார்.

இந்த தேர்தலில் முஸ்லிம்களை கட்சிக்கு பெற்று தரும் பொறுப்பு சித்திக்கிடம் வழங்கப்பட்டது. இதற்காக கட்சியின் முஸ்லிம் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் உலாமாக்களை சந்தித்து பேசி, அவர்களின் ஆதரவை பெறும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற பெரிய பணியை சித்திக் ஏற்பது இதுவே முதல் முறை. இருப்பினும், அதை சிறப்பாகவே செய்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார். இந்த முயற்சி இறுதியில் அவருக்கு மட்டும் அல்ல, மாயாவதிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.

சுதீர் கோயல்: உ.பி.,யில் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தலைவர் சுதீர் கோயல். ஜெய்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் முதலில் தொடர்பு கொண்டவர் . பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த, முதல் உயர் ஜாதி வகுப்பு தலைவர் என்ற பெருமைக்கு உரியவர். கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர்.

டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுதீர் கோயல் பணியாற்றினார். பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகி, பிற கட்சிகளின் தகவல்களை அறிவது இவரது பணி. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தகவல்களை சிறிது கூட கசிய மாட்டார். அந்த அளவுக்கு உஷார் பேர்வழி சுதீர் கோயல். இது தவிர உ.பி.,யில் ஓரளவுக்கு பெரும்பான்மையாக உள்ள வைஸ்ய சமுதாயத்தினருடன் நெருங்கி பழகும் படி சுதீர் கோயல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இந்த சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சமாஜ்வாடி கட்சிக்கும், மற்றொரு பகுதியினர் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் சுதீர் கோயல் பயணம் செய்து வைஸ்ய சமுதாயத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திருப்பினார்.

குறிப்பாக அலகாபாத் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வெற்றிக்கு வைஸ்ய சமுதாயத்தினர் அளித்த ஆதரவே காரணம் . “மாயாவதி மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் வைஸ்ய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டு விட்டது’ என்று இதற்கு சுதீர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக கோயலை கேபினட் அமைச்சராக்கியுள்ளார் மாயாவதி.

———————————————————————————————–

“மனுவாதி-மாயாவாதி’ உடன்பாடு!

எஸ். குருமூர்த்தி

“”பத்திரிகைகளை அந்த அம்மா மதிப்பதே இல்லை” என்று நிருபர்கள் புலம்புகின்றனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சியாகவே பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட பிறகும் அதே நிலைதான்!

பேட்டி தருமாறு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் விடுத்த அழைப்புகளை ஏற்று பதில்கூட தரவில்லை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அந்த நிறுவனங்கள் தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுக்காதா என்று ஏங்கும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர்; ஆனால், மாயாவதி அப்படியல்ல.

“”தேர்தல் அறிக்கை என்று எதையுமே அந்த அம்மா வெளியிடவில்லையே” என்பது சிலரின் அங்கலாய்ப்பு! தேர்தல் களத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வாக்காளர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவதொரு வாக்குறுதியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தன்னைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஏழை மக்களுக்கு, 2 வேளை சாப்பாடு, வறுமைக் கோட்டிலிருந்து விடுபட உற்ற வழி என்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் இருந்தபோதிலும் மாயாவதி எந்தவித இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை.

“”ஆட்சிக்கு வந்தால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, புடவை, வேஷ்டி, இலவச கேஸ் ஸ்டவ், கடன் தள்ளுபடி” என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த எல்லாச் சலுகைகளும் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள்தான் அவருடைய ஆதரவாளர்கள்.

மற்றவர்கள் இலவசங்களை அறிவித்து ஆசை காட்டினாலும் அந்தப் பக்கம் போக விரும்பாத அளவுக்கு அவர்கள் ஏன் அவருக்குப் பின்னே நின்றார்கள்?

இதற்கான விடை, பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி.) வரலாற்றில் இருக்கிறது. மாயாவதியின் அரசியல் குருவான கான்ஷிராம், சமூகப் படிநிலையில் 5-வது, 6-வது இடத்தில் இருந்த சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் கொண்டு கட்சியை நிறுவினார். தங்களையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஏக்கம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அவர்களுடைய அந்த ஏக்கமே தன்னுடைய கட்சியின் ஆன்மாவாகத் திகழ்வதை கான்ஷிராம் உறுதி செய்தார். பகுஜன் சமாஜத்தின் ஆன்மாவை இலவச டி.வி.க்கள் மூலமோ, புடவைகள் மூலமோ பிற கட்சிகளால் வாங்கிவிட முடியாது.

அது அவர்களுக்கு வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூகத்தின் படிநிலையில் முதல் 3 இடங்களில் உள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான, வலிமை மிகுந்த ஆயுதமாகும். இந்த 3 சாதியினரையும் மாயாவதி வெளிப்படையாகவே “”மனுவாதிகள்” என்று சாடி வந்தார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் போர் முழக்கமாகவே இருந்தது. சாதிய அமைப்பு முறையையே ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார். கடைசியில், ஒரு பிரிவு சாதிக்கு எதிராக மற்றொரு பிரிவு சாதியினரைக் கொண்டு வலுவான அரசியல் கட்சியை உருவாக்கிவிட்டார்.

சாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன.

“”கீழ்ச் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மேல்நோக்கி முன்னேறுவதற்கு சாதி என்பது ஜனநாயகத்தில் ஒரு தடையல்ல, ஒரு வாகனம்” என்று அவர் முதலில் உணர்ந்தார். ஜனநாயகம் இல்லாத சமூகங்களில்தான் சாதிய அடையாளம், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

இப்படித்தான் கோபத்திலும் வெறுப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிறந்தது. அது வளர்ந்தபோது அதன் கோபமும் வளர்ந்தது. வெகுவிரைவிலேயே பகுஜன் சமாஜ் அபார வெற்றி கண்டு, அதன் ஆதரவு சக்திகளிடையே அபார செல்வாக்குப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை என்ற இலக்கைத் தொட அதற்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, வெளியில் யாரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று அது பார்த்தது.

“”லட்சியத்தை நிறைவேற்றப் பேயுடனும் கூட்டு சேர்ந்தாக வேண்டும்” என்பதுதான் ஜனநாயகத்தின் பாலபாடம். பகுஜன் சமாஜ் விஷயத்தில், இதுநாள்வரை அது பேயாகக் கருதிய, தனது எதிரியான “”மனுவாதிகளோடு” கூட்டு சேர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. இது காரியசாத்தியமில்லாத விஷயமாகவே கருதப்பட்டது. ஆனால் மாயாவதி இதை வெகு எளிதாகச் செய்து முடித்துவிட்டார்.

“”மனு”வாதிகளுக்கும் “”மாயா”வாதிகளுக்கும் உள்ள பொதுவான வேராக ஹிந்து மதம் திகழ்வதை அவர் வலியுறுத்தினார். மேல்சாதியினருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனை, பேச்சு எல்லாம் “”போதை தரும் விஷயம்” என்ற பலவீனத்தை அவர் புரிந்துகொண்டார்.

“”பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் வெறும் யானை அல்ல, கணேசப் பெருமான்தான்” என்று ஒரே போடாகப் போட்டார். இணைப்புக்கு ஒரு கடவுள் போதவில்லை, எனவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்) என்ற மூவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்று ஒரு காலத்தில் சொன்னதால் மனுவாதிகளுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு ஒரே ஒரு செயல்மூலம் மருந்து போட்டுவிட்டார். மனுவாதிகளுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட கடவுளர்கள், மத்தியஸ்தர்களாக இருந்தனர்.

மாயாவதியின் இச்செயல் பிராமணர்களை முதலில் திருப்திப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 14% வாக்குவங்கியான பிராமணர்களை முதலில் வசப்படுத்தியது மாயாவதியின் மிகப் பெரிய வெற்றி.

உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “”பிராமண மகாசபை” கூட்டங்களை நடத்தி, ஹிந்துக் கடவுளர்கள் மீது தங்களுக்கிருக்கும் மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். இப்படித்தான் மனுவாதி-மாயாவாதி (பிராமணர், தலித்) கூட்டணி உருவானது.

பிராமணர்களுக்கு 80 தொகுதிகளையும் பிற மேல்சாதியினருக்குக் கணிசமான தொகுதிகளையும் கூட்டணியில் ஒதுக்கியிருப்பதை ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மறக்காமல் அவர் கூறினார். இப்படியெல்லாம் கூறவோ, செயல்படவோ காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகளால் கனவிலும் முடியாது. மாயாவதியால் மட்டுமே அப்படிச் செய்யவும் முடியும், அதை பகிரங்கமாகச் சொல்லவும் முடியும்.

இப்படித்தான் பகுஜன் சமாஜின் முக்கிய எதிரிகளாகத் திகழ்ந்த மனுவாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளானார்கள். தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாயாவதியை அரவணைக்கும் தலைவராக ஜனநாயகம்தான் மாற்றியது.

உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை இது கட்சிகளின் கூட்டணி இல்லை, சாதிகளின் கூட்டணி. “”குறைந்தபட்ச பொது செயல்திட்டம்” (சி.எம்.பி.) அல்ல, கடவுளர்கள்தான் இங்கு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுள்ளனர். மனுவாதிகளும் மாயாவாதிகளும் செய்துகொண்ட தொகுதி உடன்பாடு அரசியல்ரீதியாக லாபகரமான பலன்களைத் தந்தது.

நீதி: உத்தரப்பிரதேசத்தில் மனுவாதி-மாயாவாதிகள் இடையிலான கூட்டணி ஜனநாயகத்தால் உருவானது, கடவுளர்களால் இணைக்கப்பட்டது. அது கடைசியில் மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. மனுவாதிகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த பகுஜன் சமாஜ், மிதவாத கட்சியாக மாறிவிட்டது; இனி அது எந்தக் காலத்திலும், பழையபடி “”அனல் கக்கும்” மனுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது.

———————————————————————————————

கங்கா தீரமும் காவிரி ஓரமும்…

செ.கு. தமிழரசன்

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கியே திரும்பியுள்ளது.

இழுபறி அமைச்சரவைதான் ஏற்படும், குதிரை பேரம் நடக்கும், விரைவில் மறுதேர்தலும் வரலாம் என்ற ஐயப்பாடுகளுக்கு எல்லாம் சற்றும் இடம்தராமல், கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மக்கள் திரளின் மகத்தான ஆதரவுடன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன், ஒரு கட்சி ஆட்சியை நிறுவியுள்ளார் தலித் சமூகத் தலைவி மாயாவதி. இது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடுதான், சந்தேகமில்லை.

இந்த அளவிற்கு அனைத்து அரசியல் சக்திகளையும், திறனிழக்கச் செய்யக் காரணம் மாயாவதி கையாண்ட தேர்தல் சாதுர்யம்தான் என்று எல்லா ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. எனவே அவர் அப்படி என்னதான் புதிய வழிமுறையைத் தேர்தல் வியூகமாக வகுத்தார் என்று பார்த்தாக வேண்டும். ஏனெனில் இன்று மாயாவதியின் வெற்றியை மற்ற மாநிலத் தேர்தலுக்கும் முன்னுதாரணமாக்கும் போக்கு வலுக்கிறது.

பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை வழியில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி நிற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்தால், நமது ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கான்ஷிராமின் சித்தாந்தம், உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அவரது “பகுஜன் சமாஜ் கட்சி’ ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்தது.

கான்ஷிராமின் அரசியல் பார்வையின் அடிப்படையிலேயே முந்தைய தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. 1993 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்ட மாயாவதி 1996-ல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியையும் அரங்கேற்றிப் பார்த்தார்.

ஆனால் ஒவ்வொரு முறையும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் தனக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டு, எதிர் அணிக்குத் தாவி தங்களது சாதிய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். தனது முதுகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் குத்திய வலியை அவரால் மறக்க முடியவில்லை. தலித் – பிற்பட்டோர் ஒற்றுமை என்பது, ஆட்சித்தலைமைத் தேர்வின்போது, நல்ல குதிரைபேர வியாபாரத்திற்கே வழிவகுக்கிறது என்ற அப்பட்டமான உண்மை வெட்ட வெளிச்சமாகியது.

எனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மாற்றுவழியைத் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் மாயாவதி. பார்ப்பன, க்ஷத்ரிய, பனியாக்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற அவரது முழக்கம், ஆட்சி அதிகாரப் பகிர்வின்போது, தன்னிடமே செய்முறை விளக்கப் பயிற்சி பெறுவதை உணர்ந்தார். இனி பிற்படுத்தப்பட்டவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.

இதுவரை மேல்மட்ட வர்க்கத்தை மட்டந்தட்ட வேண்டிய எதிரிகளாகவே பாவித்த மாயாவதியின் போக்கில், ஒரு மாறுதல் தோன்றியது. அவர்களையும் அரவணைக்கும் எண்ணம் உதயமாயிற்று.

இதற்கேற்றபடி, பிராமணர், வைசியர், தாக்கூர் ஆகிய இந்து இனச் சமூகங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியோ, மத்தியில் வலுவிழந்து, மாநிலத்தில் மரியாதையிழந்து, அவ்வப்போது இந்துத்துவா, ராமர் கோயில் என்று ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியோ, காந்தியின் காலத்திலிருந்து தனது வாக்குவங்கியாக வைத்திருந்த இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஓட்டுகளை பெரும்பாலும் இழந்து கட்சியும் கரைந்துவிட்டிருந்தது.

ஆகவே மேல்தட்டு வர்க்கமான பிராமண, வைசிய, தாக்கூர் சாதியினர் எங்கே போவது, யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு இயல்பாகவே வந்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் மாயாவதியின் மனமாறுதல் அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நெருங்கச் செய்தது.

மாயாவதியும் பிற்படுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு முற்படுத்தப்பட்டவர்களை ஆதரிக்க முன்வந்தார்; வரவேற்று 83 பேரை வேட்பாளர்களாக்கினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பயன்களை, யாதவ் மற்றும் குர்மி சாதியினர் மட்டுமே அனுபவிப்பதைப் பார்த்துப் பொருமும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மாயாவதியின் பின்னால் அணிவகுக்க முற்பட்டனர்.

ஆக, பகுஜன் சமாஜ் கட்சிக்குரிய வாக்கு வங்கியான தலித் மக்கள், புதுவிருந்தாளியான மேல்தட்டு வர்க்கம், இதோடு இஸ்லாமிய சமூகம் மற்றும் யாதவ், குர்மி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய புதிய ஐக்கியம் தேர்தலில் பதியமிட்டது. நல்லாட்சி அமைகிறதோ இல்லையோ, ஒரு ஸ்திரமான ஆட்சி, அதாவது ஐந்தாண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு நடைபெறும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மக்களிடையே பரவிக் கிடந்தது. அதற்கு கண்முன் நிற்கும் சாட்சியாக “பகுஜன் சமாஜ் கட்சி’ காட்சியளித்தது. மக்கள் வாக்களித்தனர். மாயாவதி வெற்றி பெற்றார்.

அண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரித்தபடியே ஒரு கட்சி, தன் ஆட்சியை நிறுவியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இது நிலைத்து நீடிக்குமா?

மாயாவதியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்திலுள்ள அம்பேத்கரிய இயக்கவாதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பரிசோதனை எடுபடுமா?

இங்கு “”தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர்” ஐக்கியம் என்ற சிந்தனை உருவாக்கம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. அந்த அடிப்படையில்தான் இங்கு 40 ஆண்டுகாலமாக ஆட்சியே நடைபெறுகிறது. ஆனால் என்ன ஒரு வேறுபாடு என்றால், தாழ்த்தப்பட்டோரும் முதல்வராக வந்ததில்லை. பிற்படுத்தப்பட்டோரிலும், பெரும்பான்மைச் சமூகங்களைச் சார்ந்த எவரும் முதல்வராக வந்ததில்லை. தமிழகத்தில் பெரும்பாலான சாதிகள் (70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், முற்பட்ட மக்கள் பலம் மிகவும் குறைவு. எனவே, உ.பி. பாணியில் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் – அந்தணர் ஐக்கியம் எந்த மாற்றத்திற்கும் வித்திட்டு விடாது. ஏமாற்றத்திற்கே இலக்காகும்.

மேலும், மாயாவதியின் “வெற்றிசூட்சுமம்’ ஏதோ அவரால் மட்டுமே கண்டுபிடித்து கையாளப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாயை என்பதை முதலில் புரிந்துகொண்டாக வேண்டும்.

அகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

ஆனால் இதற்கு மாயாவதி கொடுத்துள்ள விலை அதிகம் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும். அதற்கான அடையாளங்கள் இப்போதே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.

அண்ணல் அம்பேத்கரின் கொள்கைவழியில் தோன்றியதாகத் தென்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இன்று அதே அண்ணலின் எதிர்நிலையான இந்துத்துவாவை தூக்கிச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உருவாக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி, இனி எல்லா இனமக்களுக்குமான சர்வஜன சமாஜ் கட்சியாகச் செயல்படும் என்று பொய் வேடம் புனைய வேண்டிய நிலைக்கு மாயாவதி ஆளாகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றவுடன் புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த சமூகரீதியான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு என்று மாயாவதி அறிவித்ததன் மூலம், சமூகநீதியையே வஞ்சித்துவிட்டார்.

மேலும் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் மாயாவதியின் 206 எம்.எல்.ஏக்களில் ஒரு தலித் எம்.எல்.ஏ.கூட பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுதான் தலித் – பிராமண ஐக்கியத்தின் லட்சணம். இத்தகைய நிலையில், இங்கு தமிழ்நாட்டில் மாயாவதியின் சூத்திரத்தை அமல்படுத்த முயற்சிக்கலாமா என்று சிந்திப்பதே ஆரோக்கியமானதல்ல என்றே தோன்றுகிறது.

மாயாவதியின் வெற்றி மகத்தானதுதான். அது, உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை. அதைத் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க நினைத்தால் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்ட கதையும், எதையோ பார்த்து எதுவோ ஆடவந்த கதையும்தான் அரங்கேறும்.

(கட்டுரையாளர்: இந்திய குடியரசுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலர், அதன் தமிழ் மாநிலத் தலைவர்.)

—————————————————————————————
உ.பி. முதல்வர் மாயாவதிக்கு ரூ.52 கோடி சொத்து

லக்னெü, ஜூன் 26: உத்தரப்பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

ரூ.12.88 கோடியை பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.52.27 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் விலை மதிப்பு உள்ள ஓவியங்கள் ஆகியவை தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுதில்லியில் தனக்கு சொந்தமாக 3 வணிக வளாகங்கள், 2 வீடுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.82 கோடி என்றும் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் வாகனங்களும் இல்லை என்றும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
—————————————————————————————
உ.பி.யில் இடைத்தேர்தல்: மாயாவதி வேட்புமனு தாக்கல்

லக்னெü, ஜூன் 26: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பி.ஆர்.வர்மா, சமாஜவாடி கட்சி உறுப்பினர் விக்ரமாதித்ய பாண்டே ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.

இதையடுத்து வர்மாவின் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாயாவதி தாக்கல் செய்தார். அவரது மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன்28-ந் தேதி கடைசி நாளாகும்.

மாயாவதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—————————————————————————————

Kumudam Reporter – Solai

08.07.07

இனி, மையத்திலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசியல் இப்படி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது என்று அரசியல் விற்பன்னர்கள் அறிவித்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி ஆட்சி கண்ட உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. எப்படி?

அந்த மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்று அனைத்து அரசியல் ஆரூடக்காரர்களும் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைப்பதில் மாயம் செய்த மாயாவதி, தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைத்திருக்கிறார். என்ன காரணம்?

நாடு விடுதலை பெற்றாலும் தலித் மக்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளெல்லாம் அவர்கள் வீட்டு வாசலை எட்டிப் பார்த்ததில்லை. எனவே, அந்தச் சமுதாயத்தின் எழுச்சிக்காக அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். அதன் வழியில் தலித் மக்களுக்காக கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சியில் அவருக்கு அடுத்த தலைவராக மாயாவதி உயர்ந்தார். டெல்லி மின் வாரியத்தில் லைன் மேனாகப் பணி செய்த ஒரு தலித்தின் புதல்விதான் அவர்.

தமிழகத்தில் எப்படி பிராமண சமுதாயத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே போல் உத்தரப்பிரதேசத்துப் பிராமண சமுதாயத்தையும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா அமைப்புகளையும் எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.

உத்தரப்பிரதேச வாக்காளர்களில் பிராமணர்களும் இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பகைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினால் ஆட்சி என்பது கனவாகத்தான் இருக்கும் என்பது மாயாவதியின் கணிப்பு.

எனவே, அந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதில் மாயாவதி நாட்டம் கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பிராமணரை மாயாவதி நியமித்தார். அவர் சட்டமேதை. உத்தரப்பிரதேச அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர்தான் இன்றைக்கு மாயாவதிக்கு அரசியல் வழிகாட்டி.

ஒரு காலத்தில் உத்தரப்பிரதேச அரசியல், அலகாபாத் நேரு பவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. பிராமணர்களே காங்கிரஸ் முதல்வர்களாக வந்தனர். இஸ்லாமிய மக்களும் தலித் மக்களும் காங்கிரஸ் அரசுகளின் காவலர்களாக இருந்தனர்.

இப்போது பிராமண சமுதாய மக்களும் இஸ்லாமிய மக்களும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரணாக மாறியிருக்கின்றனர். இவைதான் மாயாவதி செய்த மாயம்.

‘தலித் மக்களுக்கான கட்சி பகுஜன்’ என்றால் மாயாவதிக்கே கோபம் கொப்புளிக்கிறது. ‘சர்வ சமூகத்தினருக்கான கட்சி என்று சொல்லுங்கள்’ என்கிறார்.

தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன தனி ஒதுக்கீடு? முற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் பொருளாதார ரீதியாக தலித்துகளை விடப் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களை விட, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அழுந்திக் கிடக்கின்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த வாதம் முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து எந்த அளவிற்கு மாயாவதி இறங்கிப் போக முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி வந்து அதிகார அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக இருந்தது. அடுத்து பி.ஜே.பி. ஒரு சக்தியாக உருவானது. அந்தக் கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பின்னர், அந்த வலிமையைப் பெற்றது. அதனைத் தடுக்க மையத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தவறியது. எனவே, இஸ்லாமிய மக்கள் காங்கிரஸ் உறவைக் கத்தரித்துக் கொண்டது மட்டுமல்ல; கடுங்கோபமும் கொண்டனர். அதனை, இன்னொரு சக்தியாக எழுந்த முலாயமின் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது.

காங்கிரஸ் மீது இஸ்லாமிய மக்கள் கோபம் கொண்டது போல தலித் மக்களும் ஆவேசம் கொள்ளவே செய்தனர். தங்கள் சமுதாயத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் கட்சி தங்களைக் கரம் கொடுத்துத் தூக்கி விடவில்லை என்று அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி.சிங் முன்வந்தார். அந்த அறிக்கையை ஆதிக்க சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதமாக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதே சமயத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸைப் போல் பி.ஜே.பி.யும் பெரிய சரிவைச் சந்தித்தது. ஒருமுறை தனியாகவும் இருமுறை கூட்டணியாகவும், அரசு கண்ட பி.ஜே.பி., பிற்படுத்தப்பட்ட மக்களைத் திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஆகவே, முப்பது சதவிகிதமாக இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகம் அதனை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அவர்கள் இன்றைக்கு மாயாவதியை நம்புகிறார்கள்.

அதே சமயத்தில், இதற்கு முன் பிருந்த முலாயம் சிங் ஆட்சி ஊழலின் உறைவிடம் என்று முத்திரை பெற்றுவிட்டது. அந்தக் கட்சியை அரியணைக்கு அழைத்துச் சென்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் விழி பிதுங்கி நின்றனர். மாநில அரசே முலாயம் சிங் குடும்பத்தின் மொத்தக் குத்தகையானது.

இந்தச் சூழலில், தலித் அரசியலைப் பரண் மீது வைத்து விட்டு, ஜாதி வாரியாக மாயாவதி மாநாடுகளை நடத்தினார். மாவட்டம் தோறும் பிராமணர் மாநாடு, வைசியர் மாநாடு என்று ஆரம்பித்து அனைத்து ஜாதியினருக்கும் மாநாடு நடத்தினார்.

முற்படுத்தப்பட்ட சமுதாயம் (30 சதவிகிதம்), தலித் சமுதாயம் (21 சதவிகிதம்), இஸ்லாமிய சமுதாயம் (17 சதவிகிதம்) என்று எழுதப்படாத அணி உருவானது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளையும் இதே அளவில் பிரித்து அளித்தார்.

வெற்றிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். விகிதாச்சாரப்படி அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சியில் கூட இவ்வளவு பேர் இடம் பெற்றதில்லை. அதே சமயத்தில், தலித் சமுதாயத்தைத் திருப்திப்படுத்த 19 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 11 பேரும் இஸ்லாமியர்கள் ஐவரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

இப்படி தேர்தல் வெற்றிக்கு ஜாதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாயாவதி, ஜாதிகளுக்குமேல் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமா? வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா? இப்படி மாயாவதியின் வெற்றி ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மாயாவதி முதன்முதலாக நிருபர்களைச் சந்தித்தார். ‘பிராமணர்களில் ஏழைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றார் பி.ஜே.பி.கூடத் துணிந்து இப்படிக் கேட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் மயானத்திற்கு அனுப்பி விட்டார். உறங்கிய உண்மைகளைத் தட்டி எழுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.

‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் பிறப்பால் முற்படுத்தப்பட்டவர்தான். அவர்களது பிள்ளைகள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்தான். ஆனால், அவர்கள் வீட்டில் காரோட்டும் சங்கர அய்யர் எப்படி? பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்…? தலித்துகளின் நிலைதான் அவரது நிலையும்’ என்கிறார் மாயாவதி.

இத்தகைய வாதங்கள் அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியிருக்கின்றன. கசப்பான உண்மைகளைக் கூறுகிறார் என்பதா? பகுஜன் சமாஜ் கட்சி முற்போக்கு சமுதாயங்களின் முரசமாகிவிட்டது என்று சொல்வதா?

எதிர்கால அரசியல் ஜாதிக் கூட்டணிகளுக்குத்தான் என்று சொல்வதா? அடுத்து மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இல்லைதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அமைத்த ஜாதிக் கூட்டணியை அமைக்க மாயாவதி முயற்சிப்பார். ஏனெனில், அவருடைய இலட்சியம் மாநில முதல்வர் என்பதல்ல; நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான்!

——————————————————————————————-

உத்தரபிரதேசம் முழுவதும் மாயாவதி சிலைகள்: கன்சிராம் விருப்பம் நிறைவேறுகிறது

லக்னோ, ஆக. 6-

உத்தரபிரதேசத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். கன்சிராமின் கொள்கை கள், திட்டங்கள் அனைத் தையும் நிறைவேற்ற முதல்- மந்திரி மாயாவதி ஏராள மான திட்டங்களை அறிவித் துள்ளார்.

கன்சிராம் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. “கன்சிராம் மாணவர் சுவா பிமான் விருது” என்ற பெயரில் ரூ.2.5 லட்சம் பரிசு வழங் கப்படும் என்று மாயாவதி கூறி உள்ளார்.

கன்சிராம் பெயரில் மிகப் பெரிய மருத்துவம் மற்றும் வீட்டு வசதி திட்டத்தையும் மாயாவதி அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்படும். அங்கு 40 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

வீட்டு வசதி திட்டங்கள் “கன்சிராம் நகர்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சாதி யினருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

4 ஆண்டுகளுக்கு முன்பு, மரணம் அடைவதற்கு முன்பு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய கன்சிராம், உத்தரபிரதேசம் முழுவதும் என் சிலை அருகில் மாயாவதியின் சிலைகளும் நிறுவப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார். அவரது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான கன்சிராம் சிலை கள் அருகில் மாயாவதி சிலைகள் வைக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது. லக்னோவில் கன்சிராம் நினைவிடத்தில் மாயாவதி சிலை நிறுவப்படும்.

—————————————————————————————————————————–
“சோனியாவை விட நானே பெரிய தலைவர்’
புதுதில்லி, ஜன.16: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விட நான்தான் பெரிய தலைவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் பதவியை அடைய ஆசைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

“எனது போராட்டமும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயணமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி கூறியுள்ளார். சுமார் 1000 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தை தனது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.1100.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் எழுதி தனது பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்களுக்காக வெளியிடுவேன் என்றார் அவர்.

சோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விட நான் உயர்ந்த தலைவர் என்று மாயாவதி தனது புத்தகத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

2006-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தல் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சோதனைக் காலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு தருவதாக 2003 ல் பா.ஜ.க. உறுதி அளித்தது. அப்போது பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் 60 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டது. இதுதான் எனக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சதியின் ஆரம்பம் என்று தனது புத்தகத்தில் மாயாவதி கூறியுள்ளார்.

அரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் நான் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து, அந்த சமுதாயத்தின் சுயமரியாதை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து, மக்களுக்கு சமூக மாற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் தர வேண்டும் என்பது என் நோக்கமாகும்.

நியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்ட, பெரிய பொறுப்பில் உள்ள உலகின் முக்கிய 8 பெண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இத்தகைய கெüரவம் கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு எதிரான சதியை அச்சமின்றி எதிர்கொண்டது, நானும் என் இயக்கமும் வளர உதவியது.

நாம் வாக்களிக்க மற்றவர்கள் ஆட்சி செய்யும் முறை, இனிமேல் நடக்காது. நாம் நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று சாதாரண மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் சிலை, நாடாளுமன்றத்தை நோக்கி கையைக் காட்டுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மேல்ஜாதியில் ஏழைகளாக இருப்போர், கிளர்ந்தெழுந்து, வாக்குப் பெட்டிகள் மூலமாக ஆட்சியைப் பிடித்து, தங்களது அடிமைத் தனத்தை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் சிலை நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.

காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும், தற்போதுள்ள சமூக நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் ஆகும். அக்கட்சிகளின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அரசியல் நிலையை மாற்ற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று தனது சுயசரிதையில் மாயாவதி கூறியுள்ளார்.

———————————————————————————————————————————————————
உத்தரபிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க ஆதரவு
பிறந்தநாள் விழாவில் முதல்-மந்திரி மாயாவதி அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.17-

உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் 52-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர், உத்தரபிரதேச மாநிலத்தை 3 மாநிலங்களாக மத்திய அரசு பிரித்தால் ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்தார்.

பிரமாண்ட கேக்

உத்தரபிரதேச முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் 52-வது பிறந்தநாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லக்னோ நகரமே, அவரது கட்சி கொடியின் நிறமான நீல வண்ணம் பூசியது போல இருந்தது.

நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான `கேக்’கை மாயாவதி வெட்டினார். அவருடைய தந்தை, குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உட்பட மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அனல் மின்திட்டம்

பிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் மாயாவதி தொடங்கி வைத்தார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நொய்டா-பாலியா விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ரூ.1,600 கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.

இது தவிர, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, மாநில அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார். மேலும் லலித்பூர் என்ற இடத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதற்கிடையே, மாயாவதி பிறந்தநாளுக்காக செய்யப்படும் பிரமாண்டமான செலவு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து மாயாவதி கூறியதாவது:-

இது தலித் சமுதாயத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் செய்துவரும் அவதூறு பிரசாரம் ஆகும். பிறந்தநாளுக்கு அரசு பணம் எதையும் செலவழிக்கவில்லை. பிறந்தநாள் `கேக்’ கூட பணம் கொடுத்து வாங்கியதுதான். பொதுத்துறை மற்றும் மின்சார துறைக்கு கட்சியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.

3 மாநிலங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், இன்னமும் உத்தரபிரதேசம்தான் பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே, இதை பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், ஹரித் பிரதேசம் என 3 மாநிலங்களாக பிரிப்பதற்கு பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.

சிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு சம்மதித்தால், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முடிவு காண்பது, மத்திய அரசு கையில்தான் உள்ளது.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

மத்திய அரசு ஆதரவு

ஆனால், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங் கூறுகையில், `உத்தர பிரதேசத்தை சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பாக முதலில் மாநில அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும்’ என்று தெரிவித்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு மாயாவதி, டெல்லி சென்றார். அங்கு மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கேட்டபோது, `தற்போது, எனக்கு அதிக அலுவல்கள் இருக்கின்றன. எனவே, இது குறித்து முடிவு எடுப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கட்சித்தலைவர்கள் விரைவில் கூட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்.

இதற்கிடையே, மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு குறித்து பதிலளித்த மாயாவதி, `கட்சியினர் கொடுத்த பணம்தான் என்னிடம் உள்ளது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, Action, Aiswarya, Allahabad, Alliance, Allocations, Amar Singh, Amarsingh, Ambani, Amitab, Amitabh, Anil, Assembly, Assets, Ayodhya, Ayodya, Bachan, Bahuguna, Bahujan Samaj Party, Biosketch, BJP, Brahmin, Brahmins, Bribes, BSP, Caste, Casteism, CM, Congress, Constituency, Corrupt, Corruption, Creamy, Creamy Layer, Dalit, Delhi, Disproportionate, Economic, Election, Elections, Faces, Free, Goel, Govt, Gujarat, Guru, Gurumoorthy, Gurumurthy, Health, Healthcare, Hindu, Hinduism, Hindutva, Homes, Hospitals, Hosuing, IAS, IPS, Islam, Jaiprakash, Jaiprakash Narain, Jats, JP, Kanshi, Kanshi ram, Kanshiraam, Kanshiram, Kansi ram, Kansiraam, Kansiram, kickbacks, Kurmis, Land, Lucknow, Mandal, Manifesto, Manu, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MBC, medical, Medicine, Mishra, Misra, Moslem, Mulayam, Muslim, Naseemuddin, Naseemudhin, Nasimuddin, Nasimudhin, New Delhi, OBC, Op-Ed, people, Plan, Planning, Poll, Polls, Power, PRO, promises, Property, Rajnath, Rajnath Singh, Ramjenmabhoomi, Ramjenmabhumi, Ramjenmaboomi, Ramjenmabumi, Reliance, Religion, Reservation, Reservations, Reserved, Rowdy, Rule, Sathish Chandra Mirs, SathishChandra Miras, SC Mishra, Siddik, Siddiq, Sidhik, Sidhiq, Slum, SP, Statue, Students, Study, Sudhir, Sudir, Taj, Taj mahal, Thakur, Thakurs, UP, Uttar Pradesh, Vaisya, Vajpayee, Vajpayi, Varanasi, Yadavs | 2 Comments »

Reserve Bank of India’s Loan Policy – Updates, Analysis, Options

Posted by Snapjudge மேல் மே 7, 2007

ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கை

எஸ். கோபாலகிருஷ்ணன்

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டுக்கான நிதி மற்றும் கடன் கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி ஏப்ரல் 24-ம் தேதி அறிவித்தார்.

நிதித்துறையில் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுவது ரிசர்வ வங்கியின் கடன் கொள்கையே. இது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கியின் நடைமுறையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தொழில் துறையினரின் தேவைகள், விலைவாசி நிலவரம், பணவீக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப, கடன் கொள்கையில் உடனுக்குடன் சிறு, சிறு மாற்றங்களை அறிவித்து விட்டு, தொலைநோக்கு மாற்றங்களை மட்டுமே அரையாண்டு நிதி மற்றும் கடன் கொள்கையில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால், இப்போது நிதிக் கொள்கை அறிவிப்பில் பரபரப்பான அம்சங்கள் இடம்பெறுவதில்லை.

நிதி மற்றும் கடன் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டு, தொழில், விவசாயம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடன் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

தற்சமயம், உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அவசரத் தேவை. எனினும் அண்மையில் அறிவிக்கப்பட்ட கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கியின் பிரதானமான விகிதங்கள் மாற்றப்படவில்லை.

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் 6 சதவிகிதமாகவே தொடர்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு 6.5 சதவிகிதமாகவே இருக்கும்.

அதேபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால அவசரக் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.75 சதவிகிதமாகவே உள்ளது.

மாறாக, இந்த விகிதங்கள் உயர்த்தப்பட்டிருந்தால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கு வட்டி உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். சி.ஆர்.ஆர். எனப்படும் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் அரை சதவிகிதம் உயர்த்தி இருந்தாலும், வங்கிகளின் நிதி ஆதாரத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முடக்கப்பட்டிருக்கும்.

அதே அளவுக்கு பொது மக்களுக்குக் கடன் கொடுப்பது குறைந்திருக்கும். ஆக, கடன்களுக்கு வட்டி விகிதம் உயராமலும், கடன்தொகை குறையாமலும் புதிய கடன் கொள்கை பார்த்துக் கொண்டது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், வளர்ச்சியின் வேகம் தடைபட்டுவிடக் கூடாது என்பதில் ரிசர்வ் வங்கி உறுதியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, சி.ஆர்.ஆர். மற்றும் ரெப்போ விகிதம் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால அவசரக் கடனுக்கான வட்டி விகிதம்) கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உயர்த்தப்பட்டது. எனவே அவற்றை மேலும் உயர்த்திக் கடன் பெறுவோர்களின் சுமையை இன்னும் அதிகரிக்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என்பது கண்கூடு.

அப்படியானால், இந்தப் புதிய நிதிக் கொள்கையில் என்னதான் சிறப்பு அம்சம்? நிதிக் கொள்கையில் அனைவரும் முக்கியமாக எதிர்பார்ப்பது ஒன்று உண்டு. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை குறித்து ரிசர்வ வங்கியின் கணிப்பு என்ன என்று அறிந்து கொள்வதுதான் அது. அந்தவகையில், ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 2007 – 08-ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அத்துடன், தற்சமயம் 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள பணவீக்கம், 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதே ரிசர்வ் வங்கியின் குறிக்கோள்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலாண்டு தற்போது நடந்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் ஜி.டி.பி. 9 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இலக்கு. எனினும், ரிசர்வ் வங்கி 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று அடக்கி வாசிப்பதற்கு காரணம் என்ன?

உலக அளவில், நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் சற்று குறைவாகவே இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்து, இந்தியாவில் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளின் பலன் வெளிப்பட கொஞ்சம் கால அவகாசம் தேவை.

கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வங்கி டெபாசிட்டுகள் 20 சதவிகிதமாகவும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளன. ஏற்கெனவே இப்படி அதிகரித்துள்ள விரிவான அடித்தளத்தில், மேலும் இதே அளவு வங்கி டெபாசிட்டுகள் அதிகரிக்கும் என்றும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதம் உயரும் என்றும் எதிர்பார்க்க முடியாது. வங்கிக்கடன் 24 அல்லது 25 சதவிகிதமே உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிக் கடன் வட்டி விகிதம் உயர்ந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம். நல்லவேளையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக் கடன்களுக்கு வட்டி உயராது. மாறாக, குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், முதல்முறையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக்கடன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் இதற்காக பெருமிதம் கொள்ளக்கூடும்.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட நமது இறக்குமதிப் பொருள்களுக்குக் குறைந்த ரூபாய் கொடுத்தால் போதுமானது. ஆனால், இன்னொரு பக்கம், ரூபாயின் மதிப்பு வலிவடைவதால், நமது ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். காரணம், அவர்களுக்குக் கிடைக்கும் டாலர்களின் மதிப்பு குறைகிறதல்லவா?

இது நமது ஏற்றுமதியை இரண்டு வகையில் பாதிக்கக் கூடும். ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். இரண்டாவதாக, நஷ்டப்பட்டுக் கொண்டு ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற மனநிலை ஏற்படக்கூடும். இதனால் ஏற்றுமதி அளவு சரியும். ஏற்றுமதி குறைந்தால், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும். இது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும்.

இன்னொரு பக்கம், ஏற்றுமதியாகும் ஒரு பகுதி பண்டங்களின் மூலப்பொருள்கள் இறக்குமதி செய்தவை. இவற்றின் விலை குறைவதால் ஏற்றுமதியாளருக்கு வேறு ஒருவகையில் ஆதாயம் கிடைக்கத்தான் செய்கிறது. ஆகவே, ஏற்றுமதியையும், இறக்குமதியையும் இருவேறு கூறுகளாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

எப்போது ரூபாயின் மதிப்பு ஓர் அளவுக்கு மேல் உயரும்போது, மேற்கூறிய காரணங்களுக்காக, ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதனைச் சீர்படுத்த முனைவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படிச் செய்வதற்கு இதுவரை முன் வரவில்லை. இன்னும் காலம் கனியவில்லை என்று ரிசர்வ் வங்கி கருதுகிறதுபோலும்.

அன்னியச் செலாவணி தளத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது போன்ற மிகச் சிறிய அளவிலான செயல்பாடுகளை காண முடிகிறது. அதேபோல், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

அதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா ஒன்று. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இல்லாமல், விலைவாசியையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதே புதிய நிதிக் கொள்கையின் நோக்கம் என்பது வெளிப்படை.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் செனட் உறுப்பினர்.)

================================================

ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம்: குருமூர்த்தி வலியுறுத்தல்

திருப்பூர், மே 9: டாலர் வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படுவதால், ஏற்றுமதியாளர்கள் ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார். டாலர் வீழ்ச்சி காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், தொடர்ந்து இந்நிலையில் ஏற்றுமதி செய்வதில் ஏற்றுமதியாளர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் கையாளவேண்டிய உத்திகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எஸ்.குருமூர்த்தி ஆலோசனை வழங்கினார்.

குருமூர்த்தி கூறியது: டாலர் வீழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை என ஏற்றுமதியாளர்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. நம்நாட்டில், கடந்த ஒரு ஆண்டாக விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு பெட்ரோல் விலை உயர்வும் காரணமாக உள்ளது. நமது தேவையில் முக்கால் பங்கு பெட்ரோல் இறக்குமதி செய்கிறோம். பஸ் கட்டணம், உரம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் பெட்ரோல் விலை உயர்வு பாதிக்கிறது.

ஆதாரமான பொருளாக இருக்கும் பெட்ரோல் விலை அதிகரிக்கும்போது, அது பொருளாதாரத்தை முழு அளவில் பாதிக்கிறது. பெட்ரோல் விலை 5% உயர்ந்தால், மற்ற பொருள்களின் விலை 10% வரை உயர்ந்துவிடுகிறது. பெட்ரோல் விலை உயர்ந்த நிலையிலும், நமது பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருந்தது. ஆனாலும் அரசு சரியாக நிர்வாகிக்காத காரணத்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. விலைவாசி உயரும் என ரிசர்வ் வங்கிக்கு முன்கூட்டியே தெரியும்.

கடந்த 2 மாதங்களில் டாலர் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் நம்நாட்டில் முதலீடு செய்வதும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தாலும் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகமாக உள்ளது.

ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை வாங்கியதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தது. தொழிலுக்கு தேவையான பணத்திற்கும் கூடுதலாக பணம் வரும்போது, அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். இப்படி, ரூ.2.60 லட்சம் கோடி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி அதிகம் இருப்பதால், அதை அமெரிக்காவிற்கு 2% அல்லது 2.5% என மிகக் குறைந்த வட்டிக்கு கடனாக தருகிறோம். இதனால் ரிசர்வ் வங்கிக்கு நஷ்டம்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அரசை சார்ந்திருக்கும் நிலை இனி இருக்கக்கூடாது. ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடும் நிலை மாறி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அரசுக்கு ஆலோசனை சொல்கின்ற நிலைக்கு வரவேண்டும். இதற்காக, ஏற்றுமதியாளர்கள் சிந்தனைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஏற்றுமதி வர்த்தகத்தை டாலர் மதிப்பில் நிர்ணயித்து வர்த்தகம் செய்வதைவிட ரூபாய் மதிப்பில் நிர்ணயம் செய்து ஏற்றுமதியாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றார்.

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Biz, Bonds, Business, Central Bank, Commerce, Commodity, CRR, Currency, Deflation, Deposits, Dollar, Economy, Employment, Exchange, Export, Exports, FDI, Finance, Foreign, GDP, Growth, House, Housing, Imports, Industry, Inflation, Insurance, Interest, job, Loans, markets, MNC, Money, NRI, Planning, Policy, RBI, Real Estate, Recession, Reserve Bank, Rupee, Rupees, Scheme, SEZ, Shares, Stagflation, Stocks, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tirupur, Value, workers | Leave a Comment »

How to stop Corruption using Law and Order – Formation of higher level Committees

Posted by Snapjudge மேல் மே 3, 2007

ஊழலை ஒழிக்க உயர்நிலை அமைப்புகள்

கே.வீ. ராமராஜ்

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு ஒப்பந்தமானது கடந்த 2005 டிசம்பர் 5 அன்று நடைமுறைக்கு வந்தது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது. எனவே ஊழல் ஒழிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமையாகும்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழு இந்தியாவில் “லோக்பால்’, “லோக் ஆயுக்தா’ அமைப்புகளை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

  • திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது
  • மறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.
  1. பதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,
  2. விதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,
  3. நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,
  4. சுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,
  5. ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல்,
  6. பொது நலனுக்கு ஊறு விளைவித்தல் போன்ற வகைகளில் ஊழல் நடைபெறுகிறது.

இத்தருணத்தில் “லோக்பால்’ அமைப்பைக் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதும் அலசி ஆராய்வதும் அவசியமாகும். “லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமை வகித்த நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1966 ஆம் ஆண்டு தமது அறிக்கையில் தேசிய அளவில் “லோக்பால்’, மாநில அளவில் “லோக்ஆயுக்தா’ என்ற இரு வகையான லஞ்சத்தை களையும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.

இதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்

  • கர்நாடகம்,
  • மத்தியப் பிரதேசம்,
  • ராஜஸ்தான்,
  • பஞ்சாப்,
  • அசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை.

இதனால் தேசிய அளவிலும் மாநிலங்களிடையேயும் ஒத்துழைப்பும் தகவல் தொடர்பும் மிக்கதாக உள்ள வகையில் “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ என்ற இரண்டடுக்கு முறையை நாடாளுமன்றச் சட்டம் மூலம் உருவாக்க வேண்டிய காலம் இதுவாகும். இவ்வமைப்பு முறையை உருவாக்கத் தேவைப்பட்டால் அரசியல்சாசன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளலாமென அரசியல்சாசன மறு ஆய்வு குழு தெரிவித்துள்ளது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

“லோக்பால்’ மூலம் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் உயர் பதவி வகிப்பவர்கள் உள்ளிட்டோர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகளையும் “லோக்ஆயுக்தா’ மூலம் முதல்வர், மாநில அமைச்சர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வழி செய்வதன் மூலமாக நாடு முழுவதும் லஞ்சத்தை ஒழிப்பதற்கான ஒருமித்த அமைப்பு முறை உருவாகும். இத்தகைய அமைப்பு முறையை உருவாக்க 40 ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தபோதிலும் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் முழுமையான ஆதரவு இல்லாததால்தான் இம் மசோதா நிறைவேறவில்லையென மாநில “லோக்ஆயுக்தா’ அமைப்புகளின் ஏழாவது மாநாட்டில் மத்தியப் பிரதேச “லோக்ஆயுக்தா’ அமைப்பு தெரிவித்துள்ளது.

“லோக்பால்’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உச்ச நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் “லோக்ஆயுக்தா’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உயர் நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் குறையாத தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

தேவைக்கேற்ப மத்தியிலும் மாநிலத்திலும் “உப லோக்பால்’, “உபலோக் ஆயுக்தா’ அமைப்புகளை நியமிக்கலாம். இவர்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமனம் செய்ய வேண்டும். இப்பதவிகளில் காலியிடம் ஏற்படும்போது நீண்ட காலம் யாரும் பணியில் அமர்த்தப்படாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் காலக்கெடுவும் மாற்றுத் திட்டமும் சட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் சூழ்நிலை ஏற்படுமானால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் கையாளும் விசாரணை முறையைப் பின்பற்றலாம்.

“லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தன்னாட்சி பெற்றவைகளாக விளங்குவதோடு இவற்றின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளும் செயல்பாடுகளில் நீதிமன்றக் குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வமைப்புகளுக்குத் தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். இப் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு எத்தகைய அரசுப் பணியும் வழங்கப்படக் கூடாது.

மாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது. இதைப்போல உத்தேசிக்கப்பட்டுள்ள “லோக்பால்’ அமைப்புகள் செயல்படக் கூடாது. மாறாக “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு நீதிமன்றத் தீர்ப்புகளைப் போன்ற சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். இப் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் மட்டுமே மேல் முறையீடு செய்யும் வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும். தம்மிடம் தாக்கல் செய்யப்படும் முறையீடுகள் மீது ஓராண்டுக்குள் தீர்வு காண சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது மத்திய அரசின் கடமையாகும்.

வேலியே பயிரை மேய்வதுபோல அரசு மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் கடமையைச் செய்யாமல் இருப்பதாலும் பிறர் கடமைகளில் குறுக்கிடுவதாலும் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துவதாலும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. நேர்மையான அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் தவறு செய்பவர்களை இனம் காண உதவ வேண்டும்.

லஞ்சத்தைக் களைய வேண்டுமாயின் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலே போதுமானது. நாடு தன்னிறைவு அடையவும் வல்லரசாக மாறவும் நாம் கனவு காணும்போது லஞ்சத்தை ஒழிக்க “லோக்பால்’ போன்ற அமைப்புகளை நம் நாட்டில் இன்னும் உருவாக்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல. மேலும் லஞ்ச லாவண்யமற்ற அரசைப் பெறும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு உண்டு என்றால் மிகையல்ல.

சரியான பணிகளை முடிப்பதில்கூட அரசு அலுவலகங்களில் ஏற்படும் கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கிறது. ஆட்சி நிர்வாக அமைப்பில் எந்தவொரு நிலையிலும் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது என்பதே நல்லாட்சித் தத்துவம்.

முதலாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையை போலவே இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களும் தன்னார்வ அமைப்புகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஒசூர் நகர வழக்கறிஞர்.)

—————————————————————————————-

நிர்வாகத்தில் பொறுப்புணர்வு!

கே. ராமமூர்த்தி
“”நிர்வாகத்தில் பொறுப்புணர்வு” என்பது இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம். அரசு நிர்வாகத்தின் மீது இப்போது பொதுவாகவே எல்லோருக்கும் அதிருப்தி நிலவுகிறது; அத்துடன் ஜனநாயக உரிமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பதால் இந்த விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.

“மேலை நாட்டவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் பொறுப்புணர்வு; அலுவலகத்திலோ, நிர்வாகத்திலோ உங்களுடைய நிலை எதுவாக இருந்தாலும் உங்களுடைய வேலைக்கு நீங்கள்தான் பொறுப்பு. இந்தியாவிலோ, உயர் பதவியில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு பொறுப்பு குறைவு!

மத்திய அரசில் முக்கிய பதவியில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகக் கூறினார், “”வருமான வரி செலுத்த வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மறந்துவிட்டேன்” என்று. அதற்குப் பிறகும் தண்டனை, நடவடிக்கை ஏதும் இல்லாமல் அவர்பாட்டுக்கு செயல்பட்டு வந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அரசுத்துறை நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், ஒரு தலைமை நிர்வாகிமீது கூட இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை!

அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதாலேயே, அரசியல் சட்டத்தில் அதற்கு உரிய ஏற்பாடுகளை நமது முன்னோர் செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட அரசாங்கம் என்பதே அதிகபட்ச திறமை, அதிகபட்ச பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான். அரசின் வரவு, செலவுகளை ஆராய்ந்து நாட்டு மக்களுக்கும் தெரிவித்து, அரசையும் தட்டிக்கேட்கத்தான், “”தலைமைக் கணக்கு – தணிக்கையாளர்” என்ற உயர் கண்காணிப்புப் பதவி அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம் என்பது பொதுக்கணக்குக்குழு என்ற அமைப்பைக் கொண்டு இதே பணியைச் செய்கிறது. அதற்கு தலைமைக் கணக்கு தணிக்கையாளர் நண்பனாய், நல்லாசிரியனாய், வழிகாட்டியாய் செயல்படுகிறது.

“நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் செலவுகள் முறையாகச் செய்யப்படுகின்றனவா, திட்டங்கள் ஒழுங்காக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொதுக் கணக்குக்குழுவுடன், மதிப்பீட்டுக் குழு, அரசின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் குழு போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசுத்துறை நிறுவனங்களின் பொறுப்புணர்வை உறுதி செய்ய, கம்பெனிகள் சட்டத்தில் 1956-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி மன்றங்களைப் பொருத்தவரை சிறப்பு தணிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிர்வாகமே தனது ஊழியர்களின் பொறுப்புணர்வைச் சோதிக்கவும், மேம்படுத்தவும் அக அமைப்புகளையும் வழி முறைகளையும் கொண்டுள்ளது. புற ஏற்பாடாக, பொதுமக்களுடன் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் சந்திப்பு, புகார்-ஆலோசனைகளைப் பெறுவதற்கான நேரடி சந்திப்புக் கூட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது.

அரசு நிர்வாகத்தின் உள்ளேயும் வெளியேயும் இத்தனை ஏற்பாடுகள் இருந்தபோதும், அரசுத்துறையிலும் அரசு நிறுவனங்களிலும் யாருமே பொறுப்பானவர்கள் இல்லை என்ற எண்ணம்தான் மக்களிடம் வலுத்திருக்கிறது.

ஒரு வேலையை எடுத்தால் குறிப்பிட்ட நேரத்துக்குள் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உணர்வு ராணுவத்தில்தான் அதிகமாக இருக்கிறது; நீதித்துறையில்தான் அது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதில் அதிகாரக் கட்டமைப்பு மட்டும் இந்த வேறுபாட்டுக்குக் காரணம் அல்ல, அமைப்பு ரீதியாகவே செய்துள்ள ஏற்பாடும், நிர்வாக நடைமுறைகளும்தான் இதற்கு முக்கியக் காரணம்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உள்ள ஏற்பாடுகள் அனைத்தும் “”பெயரளவுக்குத்தான்” செயல்படுகின்றன என்றே மக்கள் கருதுகின்றனர். தவறுகளையும் தாமதத்தையும் தண்டிக்கவோ, கண்டிக்கவோ, திருத்தவோ நிர்வாகத்தில் எந்தவித ஏற்பாடும் இல்லை என்பதே அவர்களுடைய மனக்குமுறல்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அமைப்புகளின் செயல்பாட்டில் பளிச்செனத் தெரியும் அம்சங்கள் இரண்டு.

பொறுப்பாக்குவதும் தணிக்கை செய்வதும், சம்பவம் நடந்து முடிந்த பிறகு தரும் ஆய்வறிக்கையாகவே இருக்கின்றன. எனவே, தவறு நடந்துவிடுகிறது அல்லது உரிய காலத்தில் நடைபெறாமல் மிகவும் தாமதமாக நடக்கிறது. இதற்குக் காரணமானவர்களை அல்லது தவறு செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குக்கூட நீண்ட காலம் பிடிக்கிறது.

ஒரு செயலுக்கு யார் பொறுப்பு என்பதை அறிய, மறைமுகமாக கேள்விகளைக் கேட்பதும், அதையும் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்காமல் -அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களைக் கேட்பதாகவும் இருக்கிறது.

இந்தியாவில் பொது நிர்வாகத்தின் மீது நாடாளுமன்றத்துக்கு உள்ள கட்டுப்பாடு குறித்து 1952-1966 வரை மேற்கொண்ட ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

“”அரசியல்சட்டப்படி, அரசு நிர்வாகத்தின்மீது நாடாளுமன்றத்துக்கு முழு கட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை. அப்படியே அதற்கு அதிகாரம் இருந்தாலும் அதை அமல் செய்யும் உள்ள உறுதி அதனிடம் இல்லை.

இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. நிர்வாகத்தை முழுமையாக ஆராய்ந்து, தவறுகளைக் கண்டுபிடித்து, உரிய திருத்த நடவடிக்கைகளையோ, தண்டனை நடவடிக்கைகளையோ எடுக்க நாடாளுமன்றத்துக்கு அவகாசம் இல்லை. நீண்ட நேரம் அமர்ந்து பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஆராயவோ, விவாதிக்கவோ அவை உறுப்பினர்களுக்கு ஆர்வம் இல்லை. அவையின் கூட்ட நேரத்தை அதிகப்படுத்த அரசுக்கும் விருப்பம் இல்லை. அவை நடவடிக்கைகளில் உறுப்பினர்களுக்கு ஆர்வம் குறைவு; இதனாலேயே பல நேரங்களில் அவையில் குறைந்தபட்ச (மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம்) “”கோரம்” கூட இல்லை என்று மணி அடிக்கப்படுகிறது. பெரும்பாலான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பயிற்சியோ, அரசியல் விழிப்புணர்வோ, நிர்வாகத்தை நாடாளுமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமோ கிடையாது.

நிர்வாகத்தின் நெளிவுசுளிவுகளைத் தெரிந்துகொண்டு அதன் செயல்களை ஆராய்ந்து குறைகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலருக்குக் கிடையாது. நிர்வாகத்தின் பிரச்னைகள், அமைப்புமுறை, நிர்வாக நடைமுறை போன்றவை பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுயேச்சையான சிந்தனை உணர்வும் கிடையாது. இந்த அறிக்கை வந்து 40 ஆண்டுகள் ஆனபிறகும் கூட, நிலைமை பெருமளவுக்கு மாறிவிடவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல்படி செய்யப்படும் தொகுதி வளர்ச்சி நிதி என்ற செலவினத்தை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். 1993-ல் தலா ரூ.5 லட்சம் என்று மொத்தம் ரூ.37.5 கோடி ஒதுக்கப்பட்டது. 1994-ல் தலா ரூ.1 கோடி என்று உயர்த்தப்பட்டு ரூ.790 கோடியானது. பிறகு அதுவே ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இதே திட்டம் சட்டமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இந்த திட்டங்களிலும் இறுதிப்பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதில் 25% தான் போய்ச் சேருகிறது என்று தெரியவருகிறது.

இந்த நிலைமாற பின்வரும் பரிந்துரைகளைப் பரிசீலிக்கலாம்:

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதற்கு முரணாக உள்ள, அரசு ரகசியங்கள் காப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் தகவல் அறியும் சட்டம் வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே அது உருவான விதம், அதற்காக முதலில் மதிப்பிடப்பட்ட தொகை, செலவழிக்கப்பட்ட தொகை, அடைந்த பயன், திட்டம் தோல்வியா, வெற்றியா, சாதகம் அதிகமா பாதகம் அதிகமா என்பதைத் தொகுத்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

நிர்வாக நடுவர் மன்றம் போன்றவை வலுப்படுத்தப்பட்டு, விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். மனித வள மேம்பாட்டை அளக்கும் வழிமுறையைப் பின்பற்றி, ஒவ்வொரு சமூக நலத் திட்டத்தின் வளர்ச்சியையும் அளக்க வேண்டும். அரசு என்ற அமைப்புக்குப் பதிலாக, சமூகம் என்பதை ஊக்குவித்து அவர்களின் நன்மைக்கான திட்டங்களை அவர்களைக் கொண்டே அமல்படுத்தும் நவீன முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

காலாவதியாகிவிட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர தனிச்சட்டம் இயற்ற வேண்டும். ஆம்புட்ஸ்மேன், லோக்பால் என்பது வெறும் புகார்களைப்பெறும் அமைப்பாக நின்றுவிடாமல், நிர்வாகத்தினரைப் பதில்சொல்ல வைக்கும் அமைப்பாகச் செயல்பட வலுப்படுத்தப்பட வேண்டும். பொறுப்பாக்குதல் என்ற பெயரில் அரசு நிர்வாகப்பணியாளர்களின் செயல்பாட்டுச் சுதந்திரம், திறமை, நேர்மை, நியாயமான அணுகுமுறை ஆகியவற்றை நசுக்கும்படியான கட்டுப்பாடுகளைத் திணித்துவிடக்கூடாது.

(கட்டுரையாளர்: உறுப்பினர் – மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்.)

———————————————————————————————-

ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேட்டை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை: ப.சிதம்பரம் வேதனை

திண்டுக்கல், ஜூலை 10: ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதுதான் நம்முடைய மிகப் பெரிய தோல்வி என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரை:

கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவிகிதத்துக்கும் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், நமது மக்களிடம் எப்படி இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதுதான் அனைவரிடமும் உள்ள முக்கியக் கேள்வி.

உலகமயமாக்குதலின் பயன்கள் கிராமப்புற இந்தியாவையும் சென்று அடைந்திருப்பது தெளிவு. பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக் கணிப்புகளில் இந்தியாவின் ஏழ்மை விகிதம் கிராமப்புறங்களில் 37.3 சதவிகிதத்தில் இருந்து 28.3 சதவிகிதமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்று வேலைவாய்ப்பும், குறிப்பாக மகளிர் வேலைவாய்ப்பு கிராமப்புறங்களில் அதிகரித்து இருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகி உள்ளது.

கிராமப்புறங்களில் வளர்ச்சி இருந்தாலும், அது உணரும்படியாக இல்லாததற்குக் காரணம் மாற்றம் மிக மெதுவாக நடைபெற்று வருவதுதான். வளர்ச்சியை வேகப்படுத்துவதுதான் நம்முன் இருக்கும் சவாலாகும். இதற்கு முக்கியமாக கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள், நல்ல கல்வி, கூடுதலான வருவாய் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

இந்திய கிராமங்களில் குறைவான தொழில் முதலீடு, குறைந்த தொழில்நுட்ப வசதி, சந்தையை தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவைதான் தடைக்கற்களாக உள்ளன.

ஒதுக்கப்பட்ட கோடிகள் எங்கே?

  • கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 7 லட்சம் கிராமங்களுக்காக ரூ. 1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 88 ஆயிரம் கோடியும்,
  • குடிநீர் வசதிக்காக ரூ. 21 ஆயிரம் கோடியும்,
  • தரிசு நில மேம்பாட்டுக்காக ரூ. 5 ஆயிரம் கோடியும்,
  • பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்காக ரூ. 6,700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சராசரியாக இதன் மூலம் 7 லட்சம் கிராமங்களுக்கும் தலா ரூ. 17 லட்சம் கிடைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பள்ளி, குடிநீர் வசதி, கிராமச் சாலைகள் எளிதாக ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், உண்மையில் அவ்வாறு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன? பதில் கிடைக்க வேண்டும்.

கிராமப்புற இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்கி பாரத் நிர்மாண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 1.74 லட்சம் கோடி செலவில் 2009-ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

இத் திட்டத்தின் மூலம் கூடுதலாக நீர்ப்பாசன வசதியுடன் ஒரு கோடி ஹெக்டேர் பயிர் நிலத்தை உருவாக்கவும், 1,000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களுக்கு இணைப்புச் சாலை வழங்கவும், 60 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரவும் இன்னும் குடிநீர் வசதி பெறாத 74 ஆயிரம் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வசதி செய்து தரவும், மின் இணைப்பு இல்லாத 2.3 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும், தொலைபேசி வசதி இல்லாத 66,822 கிராமங்களுக்குத் தொலைபேசி வசதி செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நமது தவறுகள்

சாலைகளைப் போடுகிறோம். ஆனால், அவற்றைப் பராமரிக்க நிதி ஒதுக்குவதில்லை. மின்சாரத்தை வழங்குகிறோம். ஆனால், மின் திருட்டைத் தடுக்கவோ, மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கவோ தவறுகிறோம். வீடுகளைக் கட்டித் தருகிறோம். ஆனால், அவை குடியிருப்பதற்கு தகுதியில்லாத அளவுக்குக் கட்டப்படுகின்றன.

நீர்ப் பாசனத் திட்டங்களை உருவாக்குகிறோம். ஆனால், அதில் மக்கள் பங்களிப்பு இல்லை.

எல்லாவற்றையும்விட நாம் ஒதுக்கும் நிதியை தவறாக செலவிடுபவர்கள் மற்றும் முறைகேடு செய்பவர்களைக் தண்டிப்பதில்லை. அதோடு ஊழல், நிர்வாகச் சீர்கேடு மற்றும் திறமையின்மை ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டோம்.

புதிய நிர்வாக முû

மாநில அரசு என்பது மிகப் பெரிய நிர்வாகம் ஆகவும், ஊராட்சி மிகச் சிறிய நிர்வாகமாகவும் இருப்பதால் இடைப்பட்ட ஒரு நிர்வாகம் தேவை. எனவே ஒவ்வொரு 10 லட்சம் மக்கள்தொகைக்கும் ஒரு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான 10 உறுப்பினர்களை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், சாலைகள், குடிநீர் போன்ற அனைத்துத் துறைகளையும் மாவட்ட நிர்வாகம் கவனிக்கும். தேவைப்படும் நிதியை அரசு ஒதுக்கும். இதை நடைமுறைப்படுத்த அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை.

மத்திய, மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் போதும் என்றார் அமைச்சர் ப. சிதம்பரம்.

—————————————————————————————————————————

ஊழல் விசாரணை பணிகளுக்கும் “அவுட் சோர்சிங்’ மகாராஷ்டிராவில் புரட்சி

மும்பை: நிறுவனங்கள், வங்கிகள் உட்பட பல நிறுவனங்களும், தங்கள் பணிகளில் சிலவற்றை இன்னொரு நிறுவனத்திடம், ஒப்படைத்து, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம்; ஆனால், அரசு ஊழியர் நடத்தை, ஊழல் குறித்து விசாரிக்கும் பொறுப்பை, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வது பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், இப்படி ஒரு புரட்சியை செய்துள்ளது மகாராஷ்டிர அரசு.

இதனால், ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை கொந்தளித்துள்ளனர். இந்த அமைப்பு, முழு சுதந்திரமாக இயங்கும். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் தலைமையில் இயங்கும். அவருக்கு உதவ, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு சம்பளம் தரப்படும். இந்த அமைப்பிடம், எல்லா துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விவகாரங்களும் ஒப்படைக்கப்படும். அதை விசாரித்து, அரசின் ஊழியர் நலத்துறைக்கு அறிக்கையை அனுப்பிவிடும். அதன் பேரில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை, ஊழியர் நலத்துறை வெளியிட்டவுடன், ஊழியர்கள் பலரும் கொதித்தனர். “அரசுக்கு தொடர்பே இல்லாத மாஜி அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தினால், நியாயம் கிடைக்காது. மேலும், ஊழல் தான் அதிகரிக்கும்’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் சொல்வதை ஏற்க அரசு தயாரில்லை. பல துறைகளில் உள்ள விசாரணை பிரிவுகளை அரசு கலைத்துவிட்டது. “ஊழியர்கள் பற்றிய எந்த ஒரு விசாரணையும் புதிய அமைப்பிடம் தான் ஒப்படைக்க வேண்டும்’ என்று துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

——————————————————————————————————-
தூய்மையாகுமா பொதுவாழ்க்கை?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

“”முறையற்ற செயல்களை மேற்கொண்டு குடிமக்களை வருத்தும் அரசன் கொலைகாரர்களைவிட கொடியவன்.” – என்ற குறட்பாவின்படி ஆட்சியாளர்களுடைய நேர்மையின் கீழ்தான் நாடு நலம் பெறும்.

ஆளவந்தவர்களும் நிர்வாகத்தில் இருப்போரும் மக்களுக்குப் புகார் அற்ற தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும்.

இன்றைக்கு பொது வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றும் தங்களால், தங்களுக்காக ஆளப்படுகின்ற ஆட்சி என்ற நோக்கிலும் அரசை நடத்துகின்றனர்.

இந்த அவலப்போக்கை மாற்ற லோக்பால் மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் ஆகாமல் நின்றுபோனது. ஆனால் ஒப்புக்கு நாடாளுமன்றத்தில் பலமுறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக மேல்தட்டில் இருக்கின்றவர்களையும் தட்டிக் கேட்கின்ற மசோதா இன்றைய சூழலில் அவசியம் தேவை. பொது வாழ்வில் தூய்மையை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான அரசியல் வளரவும் இம்மசோதா வழிசெய்யும்.

பங்குபேர ஊழல், சர்க்கரைப்பேர ஊழல், டெலிகாம் ஒப்பந்த ஊழல், ஹவாலா ஊழல் என்று தொடங்கி இந்தியாவில் சர்வநிலையிலும் புரையோடிவிட்டது.

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது கூறப்பட்ட ரூ. 950 கோடி தீவன ஊழல் இந்தியாவையே ஆட்டி வைத்தது.

முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மருமகளுக்கு சட்டத்திற்குப் புறம்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களை சதீஷ் சர்மா ஒதுக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றம் மூலம் உண்மை எனத் தெரியவந்தது. இன்று சரத்பவார் மீது கோதுமை இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்திய வரலாற்றில் ஊழல்கள் தொடர் கதையாக இருக்கின்றன. பஞ்சாப் மாநில அன்றைய முதல்வர் பிரதாப் சிங் கைரான் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரு பிரதமராக இருந்தபோது அதுபற்றி விசாரிக்க எஸ்.ஆர். தாஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.

1958-ஆம் ஆண்டு பெரோஸ் காந்தி மக்களவையில் முந்திரா ஊழல் பிரச்னையை கிளப்பினார். ரூ. 1.25 கோடி மதிப்புள்ள பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் முறைகேடாக விற்பனை செய்தது சம்பந்தமாக ஊழல் குற்றச்சாட்டை பெரோஸ் காந்தி பேசினார். இது சம்பந்தமாக ஆவணங்களை மக்களவையில் வைக்கும்படி வேண்டி அன்றைய மக்களவைத் தலைவர் அனந்தசயன அய்யங்காரிடம் கோரினார். ரகசியக் கோப்புகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அய்யங்கார் முந்திரா ஊழல் சம்பந்தமான ரகசியக் கோப்புகள் அனைத்தையும் அவையில் வைக்கும்படி தீர்ப்பு வழங்கினார்.

இதன் பின்பு, பண்டித நேரு ஆணையின் பேரில் அன்றைய பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சி. சுக்லா இதுகுறித்து விசாரணை நடத்தினார். இறுதியில் பங்கு பேர ஊழலில் முந்திரா சம்பந்தப்பட்டுள்ளார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியில் இருந்து விலகினார். அம்மாதிரி கிருஷ்ணமேனன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிரதாப் சிங் கைரோனுக்குப் பிறகு பக்ஷி குலாம் முகமது மீதும், 1957-ல் கேரளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் அரசு, ஆந்திரத்திலிருந்து அரிசி வாங்கப்பட்ட ஊழல் முதல் இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் வரை செய்த ஊழல்களை ஒரு நீண்ட பட்டியலாக இடலாம்.

புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வி. காமத் மூன்றாவது மக்களவையில் சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் சீராஜின் ஊழலை அம்பலப்படுத்தினார். ஐந்தாவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய வணிகத் துறை அமைச்சர் எல்.என். மிஸ்ரா ஏற்றுமதி உரிமம் வழங்கியதில் ஊழல் செய்துள்ளார் என்ற பிரச்னை எழுப்பப்பட்டது. அன்றைய மக்களவைத் தலைவர் ஜி.எஸ். தில்லான், இது சம்பந்தமான ரகசிய ஆவணங்களைப் பார்வையிட அனுமதி வழங்கினார். இறுதியில், இந்தப் பிரச்னையில் ஊழல் நடந்தது என்று நாடாளுமன்றம் உறுதிபட கூறியது.

பாரத ஸ்டேட் வங்கியில் நடந்த நகர்வாலா ஊழலை அனைவரும் அறிவார்கள். ரூ. 60 லட்சம் தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்தினால் அந்த வங்கியின் அதிகாரி மல்கோத்ரா மூலம் வழங்கப்பட்டது என்ற பிரச்னை நாடு முழுவதும் எதிரொலித்தது.

இந்தச் சூழலில் நகர்வாலா மர்மமாக இறந்துவிட்டார். இந்தக் கிரிமினல் வழக்கு 32 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. யார் குற்றவாளி என்று இதுவரை நீதிமன்றம் தீர்ப்பு தரவில்லை என்பது வேதனையான செய்தி ஆகும். அந்தப் பணம் கொடுத்த வங்கி அதிகாரி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சஞ்சய் காந்தியின் மாருதி கார் தொழிற்சாலையில் பணியில் அமர்த்தப்பட்டார்.

ஐந்தாவது மக்களவையில் மாருதி கார் ஊழல் சம்பந்தமாக பல சட்ட விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்தப் பிரச்னை சம்பந்தமான விவரங்களைத் தொழில் அமைச்சகம் மக்களவையில் வைக்கவிடாமல் தடுத்தது என்ற குற்றச்சாட்டு அன்றைய இந்திரா காந்தி மீது சுமத்தப்பட்டது. அவசர நிலை காலத்தில் ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு ஷா கமிஷன் அமைக்கப்பட்டது.

ஏ.ஆர். அந்துலே, “”இந்திராகாந்தி அறக்கட்டளை அமைப்புக்கு’ பணம் வசூல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இது சம்பந்தமான ஆவணங்கள் மக்களவையில் வைக்கப்பட்டது. இறுதியாக நீதிபதி லின்டன் தீர்ப்பின்படி மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து அந்துலே விலகினார்.

பரபரப்பான போபர்ஸ் ஊழல் நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தது. இதனால் ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை மக்கள் அகற்றினார்கள். இந்த பேரத்தில் அவர் ரூ. 64 கோடி கமிஷனாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. ஒன்பதாவது மக்களவையில் தேசிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது போபர்ஸ் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டது.

போபர்ஸ் ஊழல் விசாரணை முடிவுறாத நிலையில் இன்றைக்கும் நிலுவையில் உள்ளது. குவாத்ரோச்சியை ஆட்சியில் உள்ளவர்கள் தற்போது பாதுகாக்கின்ற நிலை.

செயிண்ட் கிட்ஸ் பிரச்னை, வீட்டு வசதி ஊழல், ஜெ.எம்.எம். ஊழல், யூரியா இறக்குமதி ஊழல், ஹெக்டே மீது கர்நாடகத்தில் நில மோசடி குற்றச்சாட்டு என ஊழல்கள் பட்டியலும் நீண்டு கொண்டுள்ளன.

10-வது மக்களவையில் பங்கு வியாபாரி ஹர்ஷத் மேத்தா நேரிடையாக பல அரசியல் தலைவர்களிடம் பணம் கொடுத்தேன் என்று கூறினார். இறுதியாக, இது சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடப்பட்டது. இப் பிரச்னை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

சர்க்கரை பேர ஊழல், டெலிகாம் ஊழல் விவகாரம் போன்றவை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசப்பட்டன. இது சம்பந்தமாக, அன்றைய அமைச்சர் சுக்ராம் டெண்டர்களை கடைசி நிமிடத்தில் மாற்றி ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ. 20,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெரும் புள்ளிகளும், தொழிலதிபர்களும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாக 5729 நபர்கள் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இன்றும் அந்த ரகசியப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தவறு செய்யும் ஆட்சியாளர்களை விசாரிக்க “லோக்பால்’ போன்ற அமைப்பு தேவை என வலியுறுத்தப்பட்டது. 1960-ம் ஆண்டு கே. சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஊழல்கள் அதிகமாகிப் பரவி வருவதைப்பற்றியும் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் அரசுக்குப் பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தக் குழுக்கள் அனுமந்தையா, வெல்லோடு உன்னிநாதன், மாத்துர் போன்றோர் தலைமையில் அமைக்கப்பட்டன. 1966-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் மக்கள் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஊழல், தவறுகளைப் பற்றிய புகார்களை ஆராய ஓர் அமைப்பு தேவையென வலியுறுத்தியது.

“லோக்பால்’ போன்ற அமைப்பு செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் பிரதிநிதிகள் இதயசுத்தியோடு அணுகவில்லை என்பதே ஆகும்.

மக்கள் மத்தியில் லோக்பால் பற்றி பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டும் நடைமுறைக்கு வராத அளவில் அணை போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம்தான் வலுத்துள்ளது.

“”இதோ புலி வருகிறது…” என்பது போன்று லோக்பால் மசோதாவின் கதையும் உள்ளது. லோக்பாலுக்கு எப்போது விடிவுகாலம் வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in abuse, Chidhambaram, Collector, Commissioner, Corruption, Court, Democracy, Economy, Education, Election, Employment, Finance, Gandhi, GDP, Governor, Govt, Growth, Honesty, IAS, Improvements, Inflation, Influence, infrastructure, IPS, Jobs, Judge, Jury, Justice, kickbacks, Law, Lecture, Lok Ayuktha, Lokpal, Metro, Money, Officer, Order, Party, Planning, Police, Politics, Poor, Poverty, Power, Public, Ramamurthy, Ramaraj, Recession, Republic, responsibility, revenue, Rich, Rural, service, Suburban, Wealthy | Leave a Comment »