Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘pipeline’ Category

Iran to India Natural Gas Pipeline vs Indo-US Nuclear Accord: Ka Ragunathan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

அணுசக்தி உடன்பாடா, அமைதிக் குழாய் திட்டமா?

க. ரகுநாதன்

இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசும், ஆட்சியா-ஒப்பந்தமா என்று இடதுசாரிகள் கேட்டால், ஆட்சிதான் முக்கியம் என்று இறங்கி வருவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

இந்தக் களேபரத்தில் முக்கியமான இன்னொரு திட்டத்தைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை. அது ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (ஐபிஐ) எரிவாயுக் குழாய் பாதைத் திட்டம். ரூ.28,000 கோடியிலான இத் திட்டம் அமைதிக் குழாய் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

2007-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் (ஐபிசிசி) தலைவரான ஆர்.கே.பச்செüரி, ஈரானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி ஷாம்ஸ் அர்டேகனி ஆகியோர் 1989-ம் ஆண்டு இத் திட்டத்தை வரைந்தனர். பின்னர் பல்வேறு பேச்சுகளைக் கடந்து 2005-ம் ஆண்டு இத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் போடுவது என முடிவானது.

ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வரை மொத்தம் 2,670 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதித்து 2012-ல் இருந்து எரிவாயு வழங்குவதே இத் திட்டம்.

பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், திட்டம் துவங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. எரிவாயுவின் விலையைத் தீர்மானிப்பதில் இந்தியா-ஈரான் இடையே தொடர்ந்து வரும் இழுபறி நிலையே இதற்குக் காரணம் என்று மத்திய அரசு கூறியது.

இதனால் ஓரிரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா பங்கேற்கவில்லை. மார்ச் மாத கடைசியில் நடைபெறும் பேச்சுவார்த்தையே இறுதியானது; அதில் இந்தியா விலகுவதாகக் கூறினால் சீனா உதவியுடன் நிறைவேற்றுவோம் என ஈரானும் பாகிஸ்தானும் கூறியுள்ளன. ரஷியாவின் காஸ்ப்ரோம் நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வற்புறுத்தலால் இந்தியா தேவையற்ற காலதாமதம் செய்வதாகவும் அந்நாடுகள் கூறுகின்றன.

ஈரான், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான அரசியல் உறவுகளே இத்திட்டம் தாமதமாவதற்குக் காரணம்.

அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் உள்ளதாக அமெரிக்காவுக்கு ஈரான் மீது கோபம். தீயசக்திகளின் அச்சாணி எனக் கூறி போர் தொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதால் ஈரானுக்கு அமெரிக்கா மீது எரிச்சல்.

தன்னைச் சுற்றிலும் இராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் உள்ளதால் தன்னைக் காத்துக் கொள்ள சீனா, ரஷியா, இந்தியாவுடனான நட்பு உதவும் என்பது ஈரானின் எண்ணம்.

2025-ல் இந்தியாவுக்கு தற்போதைய தேவையைப் போல 4 மடங்கு எரிசக்தி தேவை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எங்கிருந்தாவது எரிவாயு கிடைத்தால் போதும் என்பது இந்தியாவின் நிலை.

இத் திட்டத்தை நிறைவேற்றினால் கிடைக்கும் பணத்தை அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் பயன்படுத்தும். அதனால் முக்கிய நாடான இந்தியா, இதில் பங்கேற்கக் கூடாது என்பது அமெரிக்காவின் எச்சரிக்கை.

பாகிஸ்தான் பழங்குடியினத் தீவிரவாதிகளால் குழாய் பாதைக்கு ஆபத்து எனக் கூறியது அமெரிக்கா. அதற்குப் பதில் துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வழியிலான குழாய் பாதைத் திட்டத்தை ஆதரித்தது. ஆனால் அல்-காய்தா தலைமையிடம் ஆப்கனில் உள்ளதை வசதியாக மறந்துவிட்டது!.

இந் நிலையில் எரிசக்தி தேவையை நிறைவேற்ற 2005-ல் இந்தியாவுக்கு அமெரிக்கா கூறியதே “123′ ஒப்பந்தம்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் உடன்பாட்டை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு அணுசக்தி உடன்பாட்டை இறுதி செய்யாவிட்டால் உலக அளவில் இந்தியாவின் நம்பகத்தன்மை கெடும் என அமெரிக்கா கூறுகிறது.

அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பயந்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூட்டத்தில் ஈரான் மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளித்தது.

இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி ஈரான் ஒரு மில்லியன் யூனிட் எரிவாயுவுக்கு 7.2 அமெரிக்க டாலர் கேட்டது. இந்தியா 4.2 டாலர் மட்டுமே தரமுடியும் என்றது. பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் 4.93 டாலர் தருவதாக முடிவானது.

எப்படியும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தால் அதிகம் பயனடைவது இந்தியாதான். இதனால் பாகிஸ்தானில் இருந்து எரிவாயு கொண்டு செல்ல ஆகும் கட்டணத்தை முடிந்தவரை இந்தியாவிடம் இருந்து அதிகமாகக் கறந்துவிடுவது என்பது பாகிஸ்தானின் ஆசை. இதனாலும் இழுபறி நீடிக்கிறது.

ஆனால் திட்டத்தைக் கைவிடவில்லை. இழுபறிக்குக் காரணம் வணிக ரீதியிலான பிரச்னையே தவிர அமெரிக்க நிர்பந்தம் அல்ல என பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி உடன்பாட்டையும் அமைதிக் குழாய் திட்டத்தையும் ஒன்றாக நிறைவேற்ற முடியாது என உறுதியாகத் தெரிவித்துவிட்டது அமெரிக்கா.

இந்தியா இல்லாவிட்டால் இன்னொரு நாடு என்ற நிலைக்கு ஈரானும், பாகிஸ்தானும் வந்துள்ளன. சீனா இத் திட்டத்தில் இணையத் தயாராக உள்ளது. ஆனால், இது குறித்து எந்தத் தகவலும் இல்லை என மத்திய அரசு கூறுகிறது.

அணுசக்தி உடன்பாடு இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கும் எதிரானது என இடதுசாரிகளும், எதிர்க் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், ஈரானுடனான அமைதிக் குழாய் திட்டம் தாமதம் ஆவது ஏன் என்று குறைந்தபட்ச கேள்விகள் கூட எழுப்புவதில்லை என்பதுதான் புதிராகவே உள்ளது.

Posted in Accord, Afghan, Afghanistan, Afghanisthan, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, America, Atomic, China, Diesel, Electricity, energy, Gas, Gulf, India, Indo-US, Iran, Natural, Nuclear, oil, Pakistan, Persia, Petrol, Petroleum, pipeline, Power, Ragunathan, Resources, Russia, US, USA, USSR | Leave a Comment »

Neeraja Chowdhry – Pranab’s Iran & Pakistan visit a signal to the US

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 13, 2007

பாகிஸ்தான், ஈரான் பயணத்தில் பிரணப் சாதித்தது என்ன?

நீரஜா செüத்ரி

தமிழில்: சாரி.

வெளியுறவுக் கொள்கையில் மீண்டும் நடுநிலைப் பாதைக்குத் திரும்பியிருக்கிறார் பிரணப் முகர்ஜி.

சமீபத்தில் தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாதுக்கும் சென்று திரும்பிய அவர், “”உள்நாட்டு அரசியல் தேவைகளுக்கு ஏற்ப” வெளிநாட்டுக் கொள்கையை வழிநடத்தும் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார்.

இன்றைய உலகில் ஒரெயொரு வல்லரசுதான் (அமெரிக்கா) ஆதிக்கம் பெற்றுத் திகழ்கிறது. அத்தோடு ஒத்திசைவாகச் செல்வதால் எத்தனை ஆதாயங்கள் கிடைக்கும் என்ற உண்மை காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும்; எனினும் உள்நாட்டில் 15 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காங்கிரûஸயே எப்போதும் ஆதரிக்கும் வாக்கு வங்கிகளாகத் திகழ்கிறார்கள் என்பதை அதனால் ஒதுக்கித்தள்ள முடியாது.

உள்நாட்டு முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலக ஆரம்பித்துள்ளனர்; “”இந்தியா இப்போது அமெரிக்காவுக்குச் சாதகமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டது” என்ற எண்ணம் முஸ்லிம் நாடுகளிடையே எழ ஆரம்பித்திருக்கிறது. இந்த இரண்டையும் சரி செய்யத்தான் அவருடைய இஸ்லாமாபாத், தெஹ்ரான் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பிரணப் முகர்ஜியின் பாகிஸ்தான் பயணத்தால் அசாதாரணமான முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது என்று அனைவருக்குமே தெரியும் என்றாலும், அது ஏதோ அதிமுக்கியமான பயணம் என்ற பிரமை ஊட்டப்பட்டது. பிரதமருடன் செல்வதைப் போல தில்லியிலிருந்தே 30 சிறப்பு நிருபர்கள் இஸ்லாமாபாத் சென்றனர். ஒரே நாளில் போய்த் திரும்ப வேண்டிய பயணம் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

பாகிஸ்தானுடனான பேச்சில் ஏதேனும் முக்கிய திருப்பம் நேரிட்டுவிட்டால் ஹிந்து-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பதற்றம் கணிசமாகக் குறைந்துவிடும்; மக்கள் மத அடிப்படையில் அணி திரள்வது தடுக்கப்பட்டுவிடும். ஆனால் சியாச்சின் உள்பட எந்த விஷயத்திலும் அப்படி அதிரடியாக சுமுகத் தீர்வு காண நிலைமை இடம் தரவில்லை. அப்படி ஏதும் முயற்சி செய்யக்கூடாது என்பதை நமது ராணுவ தலைமை தளபதி ஜே.ஜே. சிங் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார். வெளியுறவு அமைச்சரான பிரணப் முகர்ஜியும் படிப்படியாகத் தீர்வு காண்பதையே விரும்புகிறார். எனவே இப்பயணம் முஸ்லிம்களைச் சமாதானப்படுத்தவே என்பது தெளிவு.

அடுத்தது, ஈரானுக்கு பிரணப் மேற்கொண்ட பயணம். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பாரம்பரிய உறவையும், பாகிஸ்தான் வழியாக பெட்ரோலிய எரிவாயுவை இந்தியா வாங்கும் சாத்தியத்தையும் பற்றி பிரணப், தெஹ்ரானில் சுட்டிக்காட்டினார். அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்குப் பயன்படுத்த ஈரானுக்கு எல்லா உரிமையும் உண்டு என்று கூட அடித்துப் பேசினார். அதே வேளையில், அணு ஆயுதப் பரவல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை ஈரானும் மதித்து நடக்க வேண்டும் என்று அடிக்குரலில் கூறி முடித்தார்.

இவை அத்தனையையும் அமெரிக்கா உற்று கவனித்துக் கொண்டிருந்தது. அதை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் மல்போஃர்டு தில்லியில் ஒளிவுமறைவில்லாமல் தெரிவித்தார். “”பயங்கரவாதத்துக்கு துணை போவதாகக் கருதப்படும் ஈரானுடன் பெட்ரோலிய எரிவாயுவுக்கான உடன்பாட்டை இந்தியா செய்துகொள்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்று மென்று விழுங்காமல் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

சரி அதனால் என்ன, அடுத்த மாதம் வாஷிங்டனுக்குச் சென்று அமெரிக்கத் தலைவர்களையும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து, “”இரு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த” ஏதாவது பேசி சமாதானப்படுத்தினால் ஆயிற்று என்றுகூட பிரணப் நினைத்திருக்கலாம்.

வெளியுறவுக் கொள்கையில் இடைப்பாதையை பிரணப் எடுத்ததற்குக் காரணம் சோனியா காந்தியாகவும் இருக்கலாம். பிரணப் கூறி சோனியா கேட்கிறாரா, சோனியா சொல்வதை பிரணப் கேட்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாதுக்கும் செல்வதற்கு முன், தனியாக சோனியாவுடன் அவர் நீண்ட நேரம் பேசிவிட்டுத்தான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுடன் சுமுக உறவுக்காக, எதையாவது விட்டுக்கொடுத்து உடன்பாடு செய்து கொண்டால், அதையே ஒரு பெரிய பிரச்சினையாக்கி, அரசியல் ஆதாயம் அடைய பாரதீய ஜனதா தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் காங்கிரஸýக்கு இருக்கிறது. அதேசமயம் உத்தராஞ்சல், உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத் போன்ற முக்கிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற வேண்டியிருக்கிறது. அங்கு கணிசமான எண்ணிக்கையில் வாழும் முஸ்லிம்களைக் கவர வேண்டிய கட்டாயமும் காங்கிரஸýக்கு இருக்கிறது.

முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருப்பதாலும், பிறகு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்குவதாலும் ஏழைகளுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் நெருக்கமான கட்சியாக காங்கிரûஸ சித்திரிக்க வேண்டிய கடமை சோனியாவுக்கு இருக்கிறது.

அதனாலேயே, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்துவதிலும், சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களை அனுமதிப்பதிலும் எச்சரிக்கை தேவை என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பிரணப் முகர்ஜியின் இடைப்பாதை என்பதும் இதை அடியொற்றித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில்: சாரி.

Posted in Congress, Congress (I), Defense, Digniatry, energy, External Affairs, Foreign Relations, Gas, Indira Congress, Iran, Islam, Islamabad, JJ Singh, Kashmir, Liquefied Natural Gas, LNG, Mani Shankar Aiyar, Military, Muslim, natural gas, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Niraja Chowdhry, NPT, Nuclear, oil, Pakistan, Petrol, Petroleum, petroleum and natural gas, pipeline, Prana, Pranab Mukherjee, Siachen, Sonia Gandhi, Tehran, United States, US, US ambassador, USA, Visit | Leave a Comment »

India, Pakistan, Iran narrow down differences on gas price

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

குழாய்ப் பாதை கேஸ் விலை நிர்ணயம்: ஈரான், பாகிஸ்தான், இந்தியா பேச்சு தோல்வி

புது தில்லி, ஜன. 26: ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் குழாய்ப் பாதை அமைத்து வழங்கத் திட்டமிட்டுள்ள கேஸýக்கு விலை நிர்ணயிப்பதற்காக நடைபெற்ற முத்தரப்பு பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கான பேச்சு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.

இதில், பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் தனிச் செயலர் அனில் ரஸ்தான் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்றது.

ஈரான் சார்பில் தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்தின் (என்ஐஓசி) சர்வதேச விவகாரங்கள் பிரிவு இயக்குநர் ஹஜ்ஜதுல்லா கனீமிபார்த் கலந்துகொண்டார்.

கேஸ் விற்பனை செய்யும் நாடு என்ற முறையில் ஈரான் தெரிவித்த விலைக்கும், வாங்கும் நாடுகள் என்ற முறையில் பாகிஸ்தானும் இந்தியாவும் கோரிய விலைக்கும் பெரும் இடைவெளி இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவ்வப்போது நிலவும் கச்சா எண்ணெய் விலையில் 10 சதவீதத்துக்கு நிகரான விலையுடன், நிலையான விலையாக 1.20 டாலர் சேர்த்து தர வேண்டும் என்று ஈரான் கேட்டது. ஒரு மில்லியன் பிரிட்டிஷ் அனல்மின் யூனிட் கேஸýக்கான (எம்பிடி யூனிட்) விலை இது.

தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 50 டாலராக உள்ளது. இதில் 10 சதவீதம் 5 டாலர். இதன் அடிப்படையில் கணக்கிட்டால், ஒரு எம்பிடி யூனிட் கேஸ் விலை 6.20 டாலர் என்று ஆகிறது.

பாகிஸ்தான் எல்லையில் ஈரான் சப்ளை செய்யும் கேஸýக்கான விலை இது. அதற்கு அப்பால் கேûஸ கொண்டு செல்ல ஆகும் செலவையும் சேர்த்தால் விலை இன்னும் அதிகமாகும்.

விலையை நிர்ணயிப்பதற்கான இந்த சூத்திரத்தை பாகிஸ்தானும், இந்தியாவும் ஏற்கவில்லை.

தங்கள் எல்லையில் சப்ளை செய்யப்படும் கேஸ் விலை ஒரு எம்பிடி யூனிட்டுக்கு 4.25 டாலருக்கு மேல் போகக் கூடாது என பாகிஸ்தானும், இந்தியாவும் வலியுறுத்தின. இதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சு தோல்வி அடைந்தது. பின்னர் ஒரு தேதியில் மீண்டும் கூடிப் பேசுவது என தீர்மானிக்கப்பட்டது.

ஈரானில் இருந்து 2,700 கி.மீ. தொலைவுக்கு, ரூ.3,500 கோடி செலவில் குழாய்ப் பாதை அமைத்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் கேஸ் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Posted in barrel, Border, Brent crude, British thermal units, BTU, Diesel, External Affairs Minister, Gaffney Cline and Associates, Gas, India, Iran, Iran-Pakistan, IRNA, Islamic Republic News Agency, mBtu, natural gas, Pakistan, Petrol, Petroleum, pipe, pipeline, Price, trans-national, Transport costs | Leave a Comment »