தென்னிந்திய சினிமா, “டப்பிங்’ கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி
சென்னை, செப். 11: தென்னிந்திய சினிமா மற்றும் பின்னணி குரல் (டப்பிங்) கலைஞர்கள் சங்கத் தலைவராக ராதாரவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கான தேர்தல், சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செயலராக கே.செல்வராஜ், பொருளாளராக ராஜாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக சத்யப்பிரியா, சவிதா உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
துணைத் தலைவர்களாக வீரமணி, ராம்குமார், மோகன்குமார் உள்ளிட்டோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.