Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘pilot’ Category

Neeraja Chowdhury – Encouraging signs by 5 new MPs: Lok Saba Politics

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007

புதிய பாதை காட்டும் 5 இளம் எம்.பி.க்கள்!

நீரஜா செüத்ரி

அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்று “”கோரம்” மணி ஒலிக்கிறது; நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் உறுப்பினர்களை உள்ளே வருமாறு கூவிக்கொண்டே, அழைத்துச் செல்ல நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சர் பரபரப்பாக ஓடி வருகிறார்.

காபியை குடித்துக் கொண்டும், சாம்பாரில் ஊறிய வடையை ஸ்பூனில் எடுத்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டும் உறுப்பினர்கள், நாட்டு நடப்பு குறித்து தங்களுக்குள் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

  • “”இந்த அர்ஜுன் சிங்குக்கு எதையாவது செய்து பேப்பரில் பெயர் வரவழைப்பதே வேலை” என்கிறார் ஒருவர்,
  • “”நீதிமன்றங்கள் வரம்போடு இருக்க வேண்டும்பா” என்கிறார் மற்றொருவர்.
  • “”இந்த மூக்குக் கண்ணாடி வெளிநாட்டில் வாங்கியதா?” என்று அக்கறையோடு விசாரிக்கிறார் மற்றொருவர்.
  • ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் பற்றி இத்தனை சந்தடிக்கிடையிலும் ஒருவர் கிசுகிசுக்கிறார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சராக பிரமோத் மகாஜன் இருந்த காலத்திலிருந்தே இதுதான் மைய மண்டபக் காட்சி. முக்கியமான விவாதங்களின்போதுகூட உள்ளே இருக்க பல உறுப்பினர்கள் விரும்புவதில்லை.

இந்தப் பின்னணியில்தான் அந்த 5 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சிப் பரவசத்தையும் ஏற்படுத்தியது. பொழுது விடிந்தும் விடியாத காலை நேரத்தில் 5 இளம் எம்.பி.க்கள் வியர்க்க விறுவிறுக்க கைகளில் பெட்டிகளுடன் புது தில்லி ரயில் நிலையத்துக்கு ஓடி வருகின்றனர். ரயில் புறப்படுவதற்கு முன்னதாக வந்துவிட்டதை உறுதி செய்துகொண்டு நிம்மதியாக ஆசுவாசப்படுகின்றனர்.

வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்த 5 பேரும் அதிகாலையிலேயே ரயிலைப் பிடிக்க வந்திருப்பதற்குக் காரணம் அரசியல் அல்ல, அவர்களுடைய தொகுதிப் பிரச்சினையும் அல்ல. அதைத் தெரிந்து கொண்டபோதுதான், கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகளைப் பின்பற்றி செய்தி சேகரிக்கும் எனக்கு பூரிப்பு ஏற்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில், குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைவுக்குக் காரணம் என்ன? அரசின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் எந்த அளவுக்குப் பயன் தருகிறது? அதை வெற்றியடைய வைக்க என்ன செய்யலாம் என்று நேரில் அறிந்துவரத்தான் அவர்கள் இப்படி ஒன்றாகக் கிளம்பிவிட்டனர்.

காங்கிரஸ், பாரதீய ஜனதா என்று எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அவர்கள்.

காலை 6.15 மணிக்குப் புறப்படும் குவாலியர் “சதாப்தி’ எக்ஸ்பிரûஸப் பிடிக்க காலை 5.45-க்கு வரவேண்டும் என்று தீர்மானித்த

  1. சச்சின் பைலட்,
  2. சுப்ரியா சுலே,
  3. ஷாநவாஸ் உசைன்,
  4. ஜெய பாண்டா,
  5. பிரேமா கரியப்பா என்ற அந்த 5 பேரும் 5.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டனர். முதல் வகுப்பில் இலவசமாகவே செல்லலாம் என்றாலும் குளிர்பதன வசதியுடன் கூடிய “சேர்-கார்’ வகுப்பிலேயே அமர்ந்து கொண்டனர். அவர்களுடன் கஜல் பாடகர் பினாஸ் மசானி, நடிகர் கெüர் கர்ணிக் ஆகியோரும் மும்பையிலிருந்து வந்து சேர்ந்து கொண்டனர்.

“”ஊட்டச்சத்து குறைவுக்கு எதிரான மக்கள் கூட்டணி” என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு இப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நம் நாட்டில் 3 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேர் ரத்த சோகை நோயால் அவதிப்படுகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் 60 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் காணப்படுகிறது. முதலில் பாஜக ஆளும் மாநிலத்துக்குப் போனாலும் அடுத்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரம், அடுத்து பாஜக-பிஜு ஜனதா தளம் ஆளும் ஒரிசா என்று எல்லா மாநிலங்களுக்கும் செல்ல இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

குறைகளைக் கண்டுபிடித்து அதை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தாமல், அரசுக்கு நல்ல யோசனைகளைக் கூறுவதே இவர்கள் நோக்கம். மகாராஷ்டிரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்களுடன் சேர்ந்து இதில் செயல்பட ஆரம்பித்ததால் நல்ல பலன்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

சதாப்தி எக்ஸ்பிரஸ் குவாலியரை அடைந்ததும் ரயில் நிலையத்தில் திரண்ட காங்கிரஸ் இளைஞர்கள் பட்டாளம் ஒன்று, “”சச்சின் பைலட் வாழ்க” என்று விண் அதிர கோஷமிட்டது. தருமசங்கடத்தில் நெளிந்த பைலட், அவர்களைக் கையமர்த்தி, “”அரசியல் விஷயமாக நான் இங்கே வரவில்லை, என் பின்னால் வராதீர்கள்” என்று அடக்கமாகக் கூறிவிட்டு, பாஜகவின் ஷாநவாஸ் உசைனை அருகில் அழைத்து அணைத்தபடி நின்றார். தொண்டர்கள் அதைப் புரிந்துகொண்டு உற்சாகமாக கை அசைத்து விடை பெற்றனர்.

கலிங்க நகர், சிங்குர், நந்திகிராமம், விவசாயிகளின் தற்கொலை என்று பத்திரிகைகளில் அடிபடும் செய்திகள் அனைத்துமே, “”நாட்டில் வளர்ச்சி இருந்தாலும் அது சமத்துவமாக இல்லை” என்பதையே காட்டுகிறது. இந்தியாவின் குழந்தைகளில் சரிபாதி ரத்த சோகையுடன் இருந்தால் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?

ஐந்து இளம் எம்.பி.க்கள் சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இது முதல் அடிதான். இவர்களுடைய ஒற்றுமையும், லட்சியமும் மேலும் வலுவடைந்து, இது மாபெரும் இயக்கமாக மாறுமா, மாரத்தான் ஓட்டமாக உருவெடுக்குமா, இவர்களுக்கு அதற்குண்டான தெம்பு இருக்குமா என்பதெல்லாம் காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.

ஆனால் இந்த முயற்சி, நம் அனைவராலும் மனமாரப் பாராட்டப்பட வேண்டியது என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழில்: சாரி.

Posted in Anganvadi, Appearance, Assembly, Biju Janata Dal, BJD, BJP, Children, Congress, Delhi, Female, Field, Food, Gwalior, Hygiene, Janata Dal, Jaya Panda, Kariappa, Kid, Lok Saba, Madhya Pradesh, maharashtra, Malnutrition, MP, NCP, Neeraja, Neeraja Chowdhury, New Delhi, NGO, Non-profit, Nutrition, Orissa, Panda, parliament, pilot, Politics, Pramod, Pramod Mahajan, Prema Kariyappa, Promotion, Sachin Pilot, Shanavaz, Shanawaz Hussein, Shatabdi, Shupriya Sule, Tour, Trip, Women | 1 Comment »

IAF pilot killed in air show rehearsals crash

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: விமானி சாவு

 பெங்களூர் எலகங்கா விமானப் படை பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கிக் கிடக்கும் விமானப் படை ஹெலிகாப்டர். இவ் விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார்.

பெங்களூர், பிப். 3: கர்நாடக மாநிலம், பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானப்படை விமானி இறந்தார்; மற்றொரு விமானி காயமடைந்தார்.

பெங்களூர் எலகங்கா விமானப்படை பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டரில் (ஏஎல்எச்) விமானப்படை விமானிகள் பிரியே சர்மா, வி.ஜெய்டெலே ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டு 9-வது ஓடு பாதையில் தரையில் விழுந்து நொறுங்கியது. உடனடியாக தீப்பிடித்துக் கொண்டது. இதைக் கண்காணித்த விமானப்படையினர் தீயணைப்பு வாகனத்துடன் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரியே சர்மாவையும், ஜெய்டேலேயையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால் பிரியே சர்மா வழியிலேயே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெய்டேலே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்பரை ஓட்டிச் சென்ற விமானிகள் இருவரும் விமானப்படையில் சாகசங்கள் நிகழ்த்தும் “சரங்க்’ படைப்பிரியைச் சேர்ந்தவர்கள்.

பெங்களூரில் பிப்ரவரி 7-ம் தேதி சர்வதேச விமான கண்காட்சி துவங்குவதையடுத்து சரங்க் படைப் பிரிவினர் எலகங்கா விமான பயிற்சி நிலையத்தில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

இதுகுறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நீதிமன்றம் (சிஓஐ) விசாரணை நடத்தும். இந்த விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றார்.

Posted in advanced light helicopter, Air Force, ALH, Bangalore, Chopper, crash, Defense, Dhruv, HAL, Helicopter, Hindustan Aeronautics Limited, IAF, Indian Air Force, pilot, Priye Sharma, rehearsals, Squadron Leader, Training, V Jetley, Wing Commander, Yelahanka | Leave a Comment »

Cheeta Military Helicopter crashes – Pilot and Two Trainees Dead

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பைலட், 2 பயிற்சியாளர் சாவு

நாசிக், செப். 30: நாசிக் அருகே ராணுவ ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய விபத்தில் பைலட் மற்றும் 2 பயிற்சி விமானிகள் உயிரிழந்தனர்.

சீட்டா‘ ரக வகையை சேர்ந்த இந்த ஹெலிகாப்டர், சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸôர் தெரிவித்தனர்.

Posted in Aamir Khan, Cheeta, crash, dead, Helicopter, Madhavan, Military, pilot, Rang De Basanti, Tamil, Trainees | Leave a Comment »

MiG-29 crashes in Ambala, pilot safe

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

ஹரியாணாவில் படைவிமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உயிர் தப்பினார்

அம்பாலா(ஹரியாணா), செப். 29: இந்திய விமானப்படையைச் சேர்ந்த மிக்-29 ரக விமானம் ஒன்று ஹரியாணா மாநிலம் அம்பாலா அருகே வியாழக்கிழமை விழுந்து நொறுங்கியது. விமானி பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினார்.

விமானம் ஒரு வயலில் விழுந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த 12 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அங்கிருந்த ஒரு டிராக்டர், விமானம் மோதியதில் சேதமுற்றது.

வழக்கமான சோதனைக்காக விமானி நாயக் என்பவர் விமானத்தை ஓட்டிச் சென்றார். விமானம் விபத்துக்குள்ளான போது அவர் பாராசூட் உதவியுடன் குதித்து தப்பினார். பின்னர் அவர் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

விமானத்தின் உடைந்த பகுதிகள் அப்பகுதியில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கீழே விழுந்த இடத்தில் 10 அடிக்குப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்

இந்த மிக்-29 ரக விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும். அம்பாலா விமானப்படைத் தளத்திலிருந்து இது புறப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Posted in Aamir Khan, Accident, Ambala, crash, India, Madhavan, MiG-29, Military, pilot, Rang De Basanti, Tamil | Leave a Comment »