Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007
காங்கிரஸில் மேலும் ஒரு புதிய கோஷ்டி
சென்னை, ஜூன் 16: ஏற்கெனவே பல்வேறு கோஷ்டிகள் நிறைந்து காணப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு புதிய அணி உதயம் ஆகிறது.
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் இந்த அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை இறங்கினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்
- மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையிலான பழைய த.மா.கா. அணி,
- கட்சியின் மாநிலத் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் அணி,
- மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அணி,
- முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். பிரபு,
- கே.வீ. தங்கபாலு,
- ஜெயந்தி நடராஜன் போன்றவர்களின் தலைமையிலான அணிகள் என்று பல அணிகள் இயங்கி வருகின்றன.
வேற்றுமையில் ஒற்றுமை: மாநிலங்களவைத் தேர்தல், மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கட்சியின் அகில இந்திய மேலிடம் சமீபத்தில் மேற்கொண்டது.
அப்போது இந்தக் கோஷ்டிப் பூசல் பூதாகாரமாக விசுவரூபம் எடுத்தது. வாசனின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக மேலிடம் தேர்வு செய்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் இதர அணிகள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. போளூர் வரதனின் தலைமையில் ஒன்றுபட்டன. ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. வாசன் அணிக்கு எதிராக மேலிடத்தில் புகார்களைத் தெரிவித்தன.
ஆனால், இறுதியில் வாசனின் “கை’யே ஓங்கியது. மாநிலங்களவைத் தேர்தலிலும், மதுரை மேற்கு இடைத் தேர்தலிலும் வாசனின் தீவிர ஆதரவாளர்களுக்கே மேலிடம் வாய்ப்பு அளித்தது.
கட்சிக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், மேலிடத்தின் அறிவுரையை ஏற்றும், வாசன் அணிக்கு எதிரான அணிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் முகாமிட்டு, பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
காமராஜர் இல்லம் அருகே…: இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் காமராஜரின் இல்லத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் புதிய அணியின் மதிய விருந்து -ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
- மூத்த நிர்வாகி தமிழருவி மணியன்,
- மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன்,
- சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி,
- வி.ராஜசேகரன்,
- சட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவாடானை கே.ஆர்.ராமசாமி,
- காரைக்குடி சுந்தரம்,
- முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆ. கோபண்ணா,
- கிருஷ்ணசாமி வாண்டையார்,
- சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் உள்ளிட்ட 20 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
Posted in Analysis, Backgrounders, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Divisions, Elangovan, Elankovan, Elections, Faction, Fights, Ilangovan, Ilankovan, Internal, Jayanthi, Jayanthy, Jeyanthi, Jeyanthy, Kaarthi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthi, Krishnasaamy, Krishnasami, Krishnasamy, Krishnaswamy, Leaders, Madurai, Manmohan, Members, MLAs, MPs, Party, PC, Petty, PMK, Politics, Polls, Sonia, Thangabaalu, Thangabalu, Thankabalu, TMC | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 8, 2007
அமைச்சர் முன்னிலையில் அதிகாரிகளை தாக்க முயன்ற திமுக நிர்வாகி
புதுக்கோட்டை, ஏப். 8: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், மத்திய இணை அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் அலுவலர்களைத் தாக்க முயன்றதாக திமுக மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு திட்டப் பணிகள் தொடக்க விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இவ்விழாவுக்காக அமைக்கப்பட்ட கல்வெட்டில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவரும் திமுக மாவட்ட பொருளாளருமான த. சந்திரசேகரன் பெயர் இடம்பெறவில்லையாம்.
இதனால் விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே விழா மேடையிலிருந்த ஒன்றிய ஆணையர் மாரியப்பனிடம் சந்திரசேகரன், “ஏன் எனது பெயர் இடம்பெறவில்லை’ எனத் திட்டியதோடு தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்: இந்நிலையில், விராலிமலை ஒன்றிய ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கபில்சாரட்கரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
Posted in abuse, Ceremony, Chandrasekaran, Collector, District, District Secretary, DMK, Fame, Function, Government, Local Body, Mariappan, Mariyappan, Minister, Petty, Police, Politics, Power, Raghupathi, Raghupathy, Ragupathi, Ragupathy, Secretary, Viraalimalai, Viralimalai | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2007
அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு
புதுதில்லி, பிப். 4: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்த எய்ம்ஸின் மக்கள் தொடர்பு ஆலோசகருக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
எய்ம்ஸின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த வர் பி.கே.தாஸ். கடந்த ஜன.31-ஆம் தேதி இவர் ஓய்வு பெற்றார். அன்றைக்கே அவரை எய்ம்ஸ் மக்கள் தொடர்பு ஆலோகராக மீண்டும் நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. எய்ம்ஸின் தலைவர் என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்நிலையில் எய்ம்ஸ் அலுவலகத்துக்கு சென்ற தாஸ், சனிக்கிழமை காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
“என்னைத் தடுத்திய நிறுத்திய காவலர்கள், அவ்வாறு செய்யுமாறு எய்ம்ஸ் இயக்குனர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தனர்’ என தாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பி.கே.தாஸ் நியமிக்கப்பட்டவுடன் அவருக்குப் போட்டியாக ராஜு சிங் என்பவரை மக்கள் தொடர்பு அலுவலரின் பொறுப்பைக் கவனிப்பதற்காக நியமித்தார் எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபால். இதையடுத்து தற்போது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இடஒதுக்கீட்டையும் பின்பற்றவில்லை: மருத்துவ பேராசிரியர்கள் நியமனத்தில் விதிகளை மீறிய “எய்ம்ஸ்’
புதுதில்லி, மார்ச் 6: அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்), மருத்துவப் பேராசிரியர்களை நியமிப்பதில், அப்பட்டமாக விதிகளை மீறியுள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2003-ல் எய்ம்ஸ் 164 துணைப் பேராசிரியர்களை நியமித்தது. இதில் 84 பேர் இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
துணைப் பேராசிரியர்கள், வெளிநாடுகளில் உள்பட வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, எய்ம்ஸ் பதவி உயர்வு அளித்துள்ளதாக மத்திய அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில் கூறியுள்ளது.
விதிகளை மீறி சட்டவிரோதமாக 164 பேராசிரியர்களை எய்ம்ஸ் நியமித்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் மார்க்கண்டேய கட்ஜு அடங்கிய பெஞ்ச் உத்தரவின்பேரில் மத்திய அரசு இந்த பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்துள்ளது.
பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய விதிகளும் பின்பற்றப்படவில்லை. எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 13 பேரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 46 பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எஸ்.டி. பிரிவில் 8 பேரும் இதர பிற்படுத்தப்பட்டோர் 17 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணைப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது மற்றும் குறிப்பிட்ட சில துணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை மறுஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
Posted in Agitation, AIIMS, Allegation, Anbumani, Anbumani Ramadas, B K Dash, Chief Public Relations Officer, Clashes, Dean, Education, Educational, Ego, Employ, Employment, Experience, Fights, Government, Health Minister, Health Ministry, Institutes, Instructors, OBCs, P Venugopal, Petty, PMK, Procedures, Prof, Professor, Professors, Promotion, Public Relations, Ramadoss, rules, Teachers, tussle, Venugopal | Leave a Comment »