சென்னையில் இன்று முதல் சர்வதேச திரைப்பட விழா: 40 நாடுகளைச் சேர்ந்த 102 படங்கள் திரையிடப்படுகின்றன
சென்னை, டிச.15:சென்னையில் டிச.15 முதல் 22 வரை நான்காவது சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 40 நாடுகளைச் சேர்ந்த 102 படங்கள் திரையிடப்படுகின்றன.
இவ்விழாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெள்ளிக்கிழமை (டிச.15) மாலை 6 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் தொடங்கி வைக்கிறார். மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஐசிஏஎஃப் தலைவர் எஸ்.சி.நாயக், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.
இவ்விழா உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்குகளிலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கிலும் நடைபெறுகிறது.
இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ஐசிஏஎஃப்), தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் இணைந்து இத்திரைப்பட விழாவை நடத்துகின்றன. பல நாடுகளைச் சேர்ந்த பிரபல இயக்குநர்களின் சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன. அந்தப் படங்களில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் இவ்விழாவுக்காக சென்னை வந்துள்ளனர்.
இந்தியா சார்பாக
- “சிருங்காரம்’,
- “ஜோமதி’,
- “பாங் கனெக்ஷன்’,
- “மை டாட்டர்’ போன்ற படங்கள் திரையிடப்படுகின்றன.