Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Patna’ Category

Life term for RJD MP Shahabuddin in kidnapping case

Posted by Snapjudge மேல் மே 9, 2007

ஆள் கடத்தல்: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை – அப்பீல் செய்வதற்கு 3 மாத அவகாசம்

சைவான், மே 9: லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகம்மது சகாபுதீன் மீது தொடரப்பட்ட ஆள் கடத்தல் வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சைவான் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி ஞானேஸ்வர் பிரசாத் ஸ்ரீவாஸ்தவா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

சகாபுதீன் அமைதி: தீர்ப்பைக் கேட்ட சகாபுதீன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் மெüனமாக இருந்தார். நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த காவல் போடப்பட்டிருந்தது. பிகாரில் ராப்ரி தேவி ஆட்சியின்போது சகாபுதீன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதெல்லாம் ஏராளமான ஆதரவாளர்கள் நீதிமன்றம் எதிரில் திரண்டு நிற்பார்கள். சகாபுதீனைப் பார்த்ததும் ஆரவாரம் செய்வார்கள். அவருக்கு ஆதரவாக கோஷம் போடுவார்கள். ஆனால் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற வளாகம் அமைதியாக இருந்தது. இப்போது நிதீஷ்குமார் தலைமையில் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடப்பதால், சகாபுதீனின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் எதிரில் கூடவில்லை.

தூக்கில் போட்டிருக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியின் தொண்டர் சோட்டே லால் என்பவரை 1999 பிப்ரவரி 7-ம் தேதி கடத்திச் சென்றது தொடர்பானது இந்த வழக்கு. (சோட்டே லால் இப்போது உயிருடன் இல்லை). சகாபுதீனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டு அவருடைய தந்தை தீனநாத் குப்தா அதிருப்தி தெரிவித்தார். சகாபுதீன் செய்த அட்டூழியங்களுக்கு அவரை தூக்கிலேயே போட வேண்டும் என்றார். அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தால் எங்கள் குடும்பத்துக்கு திருப்தி ஏற்பட்டிருக்கும் என்று சோட்டே லாலின் மனைவி ரேணுவும் கூறினார்.

30-க்கும் மேல் வழக்குகள்: சைவான் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சகாபுதீன் மீது 30-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 29 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 8 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

  • கொலை,
  • கொலை முயற்சி,
  • கொலை செய்வதற்காக ஆளைக் கடத்துதல்,
  • ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்று மிரட்டுவதற்காகக் கடத்துவது,
  • சட்டத்துக்கு விரோதமாக மறைவிடத்தில் ஒருவரை அடைத்து வைப்பது,
  • திருட்டு,
  • கலவரம் செய்தல்,
  • ஆயுதங்களுடன் சென்று கலவரம் செய்தல்,
  • உரிய அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருத்தல்,
  • வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துதல்,
  • ஆயுதங்களால் மற்றவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்துதல் என்று பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

லாலு பிரசாதின் வலது கரம் போன்றவர் என்பதாலும் சிறுபான்மைச் சமூக மக்களிடையே செல்வாக்கு படைத்தவர் என்பதாலும் பத்திரிகைகளும், பிற எதிர்க்கட்சிகளும் சகாபுதீனையே குறிவைத்து செய்திகள் தருகின்றன.

பதவியைப் பறிக்க வேண்டும்: சகாபுதீன் அரசியல்வாதி அல்ல, முழுக்க முழுக்க கிரிமினல், அவருடைய எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பிகார் மாநில செயலர் நந்தகிஷோர் பிரசாத் வலியுறுத்தினார்.

இதே கோரிக்கையை பிகார் மாநில பாஜக தலைவர் ராதா மோகன் சிங்கும் வலியுறுத்தினார்.

போராட்டம்: சோட்டே லாலை மட்டும் அல்ல வேறு 18 மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தொண்டர்களையும் சகாபுதீன் கடத்திக் கொன்றிருக்கிறார். அவருடைய எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்கத் தவறினால் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று நந்தகிஷோர் பிரசாத் எச்சரித்தார்.

ராஜிநாமாவுக்கு அவசியம் இல்லை: இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டிருந்தாலும் அப்பீல் செய்ய 3 மாதம் அவகாசம் தரப்பட்டிருக்கிறது. உயர் நீதிமன்றம் இத் தீர்ப்புக்கு தடை ஆணை வழங்கினால், அவர் பதவியில் நீடிக்க எந்தத் தடையும் இல்லை. தீர்ப்பு கூறிய உடனேயே சகாபுதீன் பதவி விலக வேண்டும் என்று சட்டத்தில் ஏதும் இல்லை என்று அவருடைய வழக்கறிஞர் ஒய்.வி. கிரி தெரிவித்தார்.

அப்பீல் செய்வார்: இந்தத் தீர்ப்பை எதிர்த்து சகாபுதீன் அப்பீல் செய்வார் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாதும், சகாபுதீனின் உதவியாளர் அஜய் குமாரும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். தீர்ப்பு நகல் கிடைத்ததும் அப்பீல் செய்வார்கள் என்று தெரிகிறது.

தேர்தலில் போட்டியிட முடியாது: சகாபுதீன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்காவிட்டால், மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலத்துக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 (3)-வது பிரிவு கூறுகிறது.

Posted in abuse, Bihar, Chhote Lal Gupta, Communist, CPI, CPI(M), CPI(ML), Criminal, Lalloo, Laloo, Lalu, Leninist, Marxist, ML, MP, Murder, nexus, Patna, Politics, Power, RJD, Sahabuddin, Sahabudhin, Shahabuddin, Shahabudhin, Yadav | Leave a Comment »

Bihar Government to keep tabs on doctors through a specially-designed website

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 17, 2007

பிகாரில் டாக்டர்களை கண்காணிக்க இணைய தளம்: முதல்வர் நிதீஷ் அறிவிப்பு

பாட்னா, பிப். 17: பிகாரில் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அன்றாட பணிகள் என்ன, மருந்து சரியாக கொடுக்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் அனைவரும் பணிக்கு வருகிறார்களா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க புதிய இணைய தளத்தை அமைக்க உள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்த இணைய தளம் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்படும். இதன்மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, மருந்துப் பொருள்களின் கையிருப்பு ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் நவீன ஆய்வகங்கள், கதிரியக்கக் கருவிகள் ஆகியவற்றை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை புதுபிக்கவும், விரிவாக்கம் செய்யவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.

4 அரசுக் கல்லூரிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதேபுரா, நாலந்தா, பெட்டியா ஆகிய பகுதிகளிலும், பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் கழகத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in activism, Attendance, Bihar, Chief Minister, Complaints, Corruption, doctors, Government, Healthcare, Hospitals, Indian, Instruments, Law, Machines, Madhepura, Malpractice, medical colleges, Medicine, Nalanda, Nalandha, Nitish Kumar, Patna, PHCs, PIL, public health centres, punctuality, sadar hospitals, solutions, state-run hospitals, Tracking, Web, Website | Leave a Comment »

Military men abuse train passengers in Patna get arrested by Railway Police

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

ரயில் பயணிகளிடம் தவறாக நடந்ததாக 4 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் கைது

பாட்னா(பிகார்), ஜன. 26: ரயில் பயணிகளை அடித்ததாகவும், அவர்களின் உடமைகளை தூக்கி வீசியதாகவும், பெண் பயணிகளிடம் தவறாக நடந்ததாகவும் 4 ராணுவ வீரர்கள், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 9 பேரை பாட்னா ரயில்வே போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இது குறித்து பிகார் ரயில்வே டிஜஜி அஜய் வர்மா கூறியதாவது: புது தில்லியிலிருந்து குவாஹாட்டிக்கு செல்லும் வடகிழக்கு மாநிலங்களுக்கான விரைவு ரயில் புதன்கிழமை இரவு புறப்பட்டது. இதில் பொதுப்பெட்டியில் ஒரு குழுவாக ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படை வீரர்களும் பயணம் செய்தனர். முகல்சராய் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது ரிசர்வ் பெட்டிக்குள் நுழைந்த அவர்கள் அந்த பெட்டி தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் பயணிகளை வெளியேறுமாறும் கூறினர்.

அவர்கள் “பொய்’ சொல்கிறார்கள் என்பதை உணர்ந்த பயணிகள் பெட்டியை விட்டு இறங்க மறுத்தனர். இந்நிலையில் ரயில், அந்ந நிலையத்தை விட்டு புறப்பட்டது. ராணுவ வீரர்கள் பயணிகளிடம் தகராறு செய்து வந்தனர். தினா ரயில் நிலையம் அருகே ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படைவீரர்களும் பயணிகளை அடித்தனர். மேலும் அவர்களது உடமைகளை தூக்கி வெளியே வீசினர். பெண் பயணிகளிடம் தவறாக நடந்தனர்.

ரயிலை விட்டு இறங்கிய பயணிகள் சிலர் இது குறித்து தினா ரயில்வே போலீஸôரிடம் புகார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக 4 ராணுவ வீரர்கள், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

Posted in abuse, Bihar, Border Protection Force, Defense, Military, Patna, Power, Railways, Trains | Leave a Comment »

Serial killer ‘Laden’ arrested in Bihar – Child Assassin

Posted by Snapjudge மேல் ஜனவரி 8, 2007

பிகாரில் 9 சிறுவர்களை கொன்றதாக இளைஞர் கைது

பாட்னா, ஜன. 9: உ.பி.யில் நிதாரி கிராமத்தில் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில் பிகாரில் போலீஸôரிடம் பிடிபட்ட லேடன் (25) என்ற இளைஞர் 9 சிறுவர்களை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நட்புடன் பழகி விருந்துக்கு அழைத்து பின்னர் அவர்களை தீர்த்துக்கட்டுவது லேடனின் யுக்தியாக இருந்துள்ளது.

பிகார் தலைநகர் பாட்னாவில் காந்தி மைதானம் காவல் நிலையப் பகுதியில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக சுபோதன்குமார் என்கிற லேடனை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். விசாரனையில் 1995 முதல் 9 பேரை கொலை செய்ததாக லேடன் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொலை நடந்த விதம் குறித்து காந்தி மைதான போலீஸôர் கூறியதாவது:

இளம் வயதினரை தேர்வுசெய்து அவர்களுடன் முதலில் நட்பை வளர்ததுக்கொள்வதும், பின்னர் கேளிக்கை விருந்துக்கு அழைப்பதும் லேடனின் வழக்கம்.

விருந்துக்குப் பிறகு அந்த நபர் மறைவிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பிணையத் தொகை கேட்டு மிரட்டப்படுவார். பிணையத் தொகை கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி போலீஸôரிடம் சிக்கும் வாய்ப்பை தவிர்க்க அந்த நபர் கொல்லப்படுவார்.

சமீபத்தில் கடந்த செப்டம்பரில் பாட்னாவின் போஸ்டல் பார்க் பகுதியில் பிரவேஷ்குமார் (15) என்ற சிறுவன் லேடனால் கடத்தப்பட்டான். பிரவேஷின் பெற்றோர் பணம் தர மறுக்கவே அச்சிறுவன் கொல்லப்பட்டதாக லேடன் ஒப்புக்கொண்டான். இதையடுத்து அழுகிய நிலையில் பிரவேஷின் உடல் கைப்பற்றப்பட்டு, அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

பாட்னா, நாளந்தா, சரன் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட 10 குற்றச்செயல்களில் லேடன் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவனது கூட்டாளிகள் 40 பேரில் 10 பேர் தற்போது சிறையில் உள்ளனர் என்று போலீஸôர் தெரிவித்தனர்.

Posted in Abductions, Bihar, Criminals, Extortion, India, Laden, Law, Nalanda, Order, Patna, Police, ransom, Sandalpur, Serial Killer, Subodhan Kumar | Leave a Comment »

Satyendra Dubey Murder Accused Recaptured in Gaya

Posted by Snapjudge மேல் ஜனவரி 5, 2007

இந்தியாவில் ஊழலை வெளிப்படுத்தியவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கொலையான பொறியாளர் சத்தியேந்திர தூபே
கொலையான பொறியாளர் சத்தியேந்திர தூபே

இந்தியாவின் வடமாநிலமான பீகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு ஒரு பெரிய அளவிலான நிர்மாணப் பணியில் ஊழல் இடம்பெற்றதை வெளிபடுத்திய பொறியாளர் சத்தியேந்திர தூபே கொல்லப்பட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக அந்த மாநிலப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய அந்த நபரான உதய்குமாரை தனது சொந்த ஊரான கயாவில் மீண்டும் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் மாநிலத் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றத்தின் போலீஸ் காவலில் இருந்த போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

அந்தப் பொறியாளர், நான்கு இளைஞர்களால் ஒரு சிறிய அளவிலான திருட்டு தொடர்பான சம்பவத்தில் கொல்லப்பட்டதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை கூறுகிறது, ஆனால் இந்த மரணம் ஒரு திட்டமிட்ட ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என தூபேயில் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

Posted in Bihar, BITS, CBI, Central Bureau of Investigation, Clean, contractor, Convict, Corruption, Dube, escape, Expose, Gaya, Government, IIT, India, mafia, nexus, Officer, Officials, Patna, Politics, Sathyendhra Dube, Sathyendra Dubey, Satyendra Dube, Uday Paswan | Leave a Comment »

Railways to serve ‘Veggie Salad’ to passengers

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

ரயில் நிலையங்களில் “காய்கறி சாலட்’: லாலுவின் புதிய அறிமுகம்

புதுதில்லி, நவ. 8: ரயில்நிலையங்களில் மண் குடுவையில் தேநீர், மோர் ஆகியவை அறிமுகப்படுத்திய மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இப்போது “காய்கறி சாலட்’ என்ற சுவையான தின்பண்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு “லிட்டி சோகா‘ என்று பெயராம்.

ரயில் பயணிகளிடம் “லிட்டி சோகாவுக்கு’ காய்கறிகள் நிறைந்த சாலட் உணவுப் பண்டத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அடுத்து ரயில் நிலையங்களில் இதற்கென ஸ்டால் அமைக்க லாலு உத்தரவிட்டுள்ளதாக தலைமை வர்த்தக மேலாளர் கே.கே.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

இந்தியன் ரயில்வே பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் உணவு வகைகளை தயாரித்து விற்று வருகிறது. இது தவிர ரயில்களிலும் உணவுப் பண்டங்கள் விற்கப்படுகின்றன. இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவும் இதில் அடங்கும்.

பாட்னா ரயில் நிலையத்தில் முதன் முறையாக காய்கறி சாலட் விற்பனை செய்யும் ஸ்டால் தொடங்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் முக்கிய ரயில்நிலையங்களில் இதேபோன்ற ஸ்டால்கள் நிறுவப்பட உள்ளன என்றார் ஸ்ரீவாஸ்தவா.

Posted in Chief Commercial Manager, Dhanbad, Dosa, Fruits, Gaya, Hajipur, healthy snacks, Idli, Indian Railway, KK Srivastava, Kulhad, Laloo, Lalu prasad Yadav, Litti Chokha, Mattha, Mughal Sarai, Muzaffarpur, Patna, Railways, Samastipur, snack, Train, Vegetables, Veggie Salad | Leave a Comment »

9th & 10th century Bronze Statues Stolen in Bihar

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2006

பீஹாரில் விலைமதிக்க முடியாத சிலைகள் திருடு

பீஹார் காவல்துறையினர்
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரையும் கைது செய்யவில்லை

இந்தியாவின் பீஹார் மாநிலத்தின் தலைநகர் பட்னாவில் இருக்கின்ற முக்கிய அருங்காட்சியகத்தில் இருந்து, கடந்த வார இறுதியில், விலைமதிக்க முடியாத 18 சிலைகள் திருடப்பட்டிருப்பதை மாநில அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று கூறும் மாநிலக் காவல்துறையினர், இந்தச் சம்பவத்தின் பின்னணியில், முக்கிய சர்வதேச குற்றக்குழுக்கள் இருந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சர்வதேச பொலிஸாரை உதவிக்கு அணுகுவது என்று செவ்வாயன்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வெண்கலத்தால் ஆன பழமை வாய்ந்த இந்தச் சிலைகள், 9ஆம் 10ஆம் நூற்றண்டுகளைச் சேர்ந்தவை என்றும், அவை பல லட்சம் டாலர்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருந்தன என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

Posted in Art, Bihar, Bronze, Heritage, Interpol, Museum, Old, Patna, Statue, Steal, Tamil | Leave a Comment »