Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Paranki’ Category

Mooligai Corner – Herbs & Naturotherapy: Parangikkai

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

மூலிகை மூலை: பறங்கி விதையால் பறக்கும் நோய்கள்!

அகன்ற தடிமனான இலைகளைக் கொண்டது. பற்றுக் கம்பிகளையும் மஞ்சள் நிறப் பூக்களையும் உருண்டையான பெரிய சதைப் பற்றுள்ள மஞ்சள் நிறக் கனிகளையும் உடைய படர் கொடி இனமாகும். விதையும், காயின் தோலுமே மருத்துவப் பயனுடையது. காய், பழம் உடல் நலத்துக்கு நல்லது அல்ல. விதை காமம் பெருக்கவும், உடல் வெப்பு நீக்கவும் பயன்படும். தமிழகம் எங்கும் பயிரிடப்படுகின்றன.

வேறு பெயர்கள்: சர்க்கரைப் பறங்கி, பூசணை, பூசணி, சர்க்கரைப் பூசணை, சர்க்கரைப் பறங்கி, பூழிய பலம்.

வகைகள்: கோடைப் பூசணை (குழிப் பறங்கி)

மருத்துவக் குணங்கள்: பறங்கி விதையை 30 கிராம் எடுத்து அதேயளவு சர்க்கரைச் சேர்த்து இரவில் உண்டு காலையில் விளக்கெண்ணெய் சிறிது குடிக்கப் பேதியாகி தட்டைப் புழு, மலப் புழுக்கள் வெளியேறும்.

பறங்கி விதையைத் தோல் நீக்கி உலர்த்திப் பொடி செய்து 2 சிட்டிகையளவு எடுத்து அத்துடன் சீரகப் பொடி 1/4 சிட்டிகை கலந்து சிறிது வெல்லத்துடன் சாப்பிட்டு வர இரத்த வாந்தி, இரத்தப் பித்தம் குணமாகும்.

பறங்கி விதை 30கிராம், வெள்ளரி விதை 15 கிராம், பூனைக் காலி விதை 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவரச் சிறுநீர்க் கோளாறுகள் குணமாகும்.

பறங்கிப் பட்டையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்துவர சொற்ப வாய்வு, சூளை கரப்பான், குட்டம், கிராந்தி குணமாகும்.

பறங்கி உட்சதையை விதை நீக்கி வேகவைத்து பிசைந்து புண்களின் மீது வைத்துக்கட்ட, துர்நாற்றம் நீங்கிச் சதை வளர்ச்சி உண்டாகும்.

பறங்கியின் உற்சதையை விதை நீக்கி வெயிலில் நன்றாகக் காய வைத்து இடித்து லேகியமாக்கிக் கொடுக்க இரத்த வாந்தி, கோழையை அகற்றும்.

பறங்கியின் பழுத்த காயின் காம்பை எடுத்து நன்றாக உலர்த்தி நீரில் அரைத்துக் கொடுக்க நஞ்சுகள் நீங்கும்.

பறங்கியின் சதையை உலர்த்திச் சீரகம் சேர்த்து இடித்து சிறிது கற்கண்டுடன் சேர்த்து உண்ண வேனிற்காலத்தில் வெப்பத்தால் உண்டாகும் அழற்சி தணியும்.

பறங்கியின் விதை 10 கிராம் எடுத்து வறுத்து சர்க்கரை கலந்து இரவு படுக்கைக்குப் போகும் முன் தின்று மறுதினம் காலையில் ஆமணக்கெண்ணெய் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர தட்டைப் புழு செத்துவிடும்.

பறங்கி விதையை 15 கிராம் அளவு எடுத்து 300 மில்லி நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வெள்ளை நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Fruits, Herbal, Herbs, Medicinal, Mooligai, Moolikai, Natural, Naturotherapy, Parangi, Parangikkai, Paranki, Poosani, Poosanikkai, Pumpkin, Pusani, Squash, Sweet Pumpkin, Vegetables | Leave a Comment »