Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Pan Parag’ Category

Defer move to put skull symbols on beedis?

Posted by Snapjudge மேல் மே 9, 2007

புகை நடுவிலே…

புகைபிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பது என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.

புகைபிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். மேலும், புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்க்குச் சிகிச்சை மற்றும் நோயுற்ற காலத்தில் உற்பத்தி இழப்பு என மொத்தப் பொருள் இழப்பு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது.

புகைத்தல் தீங்கானது என்றாலும், பீடி, சிகரெட் தயாரிப்பது அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு தொழிலாக இருக்கிறது. இந்தத் தொழிலில் இந்தியாவில் 1 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். 60 லட்சம் பேர் நேரடியாக இத்தொழிலில் பீடி சுற்றுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். மீதமுள்ளவர்கள் இதற்கான இலை மற்றும் புகையிலை உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள்.

பீடியை சிகரெட் தொழிலோடு சேர்க்கக்கூடாது என்பதும் “சிகரெட்டைவிட பீடி நல்லது. நிகோடின் குறைவு’ என்ற வாதங்களும் ஏற்கக்கூடியவை அல்ல. புகைபிடித்தல் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரமும் அவசியம்தான்.

ஆனால் அந்தப் பிரசாரத்தை மண்டையோடு எச்சரிக்கை மூலம் நடத்த அரசு விரும்புவதும், மண்டையோடு படத்தைப் போட்டால் பீடி விற்பனை சரிந்துவிடும் என்று பீடித் தொழிலாளர்கள் நம்புவதும் – இரு தரப்பினருமே நடைமுறையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.

சிகரெட் பாக்கெட்டுகளில் புகை பழக்கம் உடல்நலத்துக்குக் கேடானது என்று அச்சிட்டுத்தான் விற்கிறார்கள். விற்பனை குறைந்துவிடவில்லை. பீடி பிடிப்போர் அனைவரும் எழுத்தறிவில்லாத சாதாரண ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதனால் பீடி பாக்கெட்டுகளின் மீது எழுத்தால் எழுதுவதைக் காட்டிலும் குறியீடுகளால் மிரட்ட நினைக்கிறது அரசு.

அச்சுறுத்தும் வாசகங்கள், பயங்கர அடையாளங்களால் இத்தகைய பழக்கங்களைத் தடுத்துவிட முடியும் என்பது சரியல்ல. ஏனென்றால் இந்தத் “தப்பு என்பது தெரிந்து செய்வது’.

தகாத உறவினால் எய்ட்ஸ் வரும் என்றால், அரசு பாதுகாப்பான உறவை மட்டுமே பரிந்துரைக்க முடிகிறது. மதுவினால் உடல்நலம் கெடும் என்பது அனைவருக்கும் தெரியும். “மதுப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று எழுதப்பட்டுள்ளதால் விற்பனை சரிந்துவிடவில்லை. மண்டையோடு போட்டால் மட்டும் பீடி விற்பனை சரிந்துவிடும் என்பது சரியான வாதமாக இல்லை.

பீடித் தொழிலாளர்களின் மிகப்பெரும் பிரச்சினை பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள்தான். பீடியின் விலைக்கும் சாதாரண சிகரெட்டின் விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து பீடித் தொழிலை அடியோடு ஒழிப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம்.

நூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு சிகரெட் தொழிலில் அனுமதித்துள்ளது. குறிப்பாக அசாம், திரிபுரா மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவான, நீளம் குறைவான சிகரெட்டுகளை உற்பத்தி செய்து பீடிச் சந்தையை சிதைக்கப் போகின்றன.

இன்றைய முக்கியமான பீடித் தொழிற்சங்கங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவை. மத்திய அரசு இக் கட்சிகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் சிகரெட் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டை தடுத்து நிறுத்துதல், பீடி சுற்றுவதற்கான கூலியை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயித்தல் என சாதித்துக் கொள்ள வேண்டுமே தவிர, மண்டையோட்டுப் பிரச்சினையில் முக்கியமானவற்றை மறந்துவிடக்கூடாது.

பீடிக் கட்டில் மண்டையோட்டை எவ்வளவு பெரியதாக அச்சிட்டாலும், சிகரெட் விலையைவிட பீடி மலிவாக இருக்கும்வரை பீடி விற்பனை குறையாது.

According to the medical journal Lancet, 13 per cent of all deaths in India by 2020 will be because of tobacco.

Posted in AIDS, Anbumani, Ban, Beedi, betelnut, Chew, Cigar, Cigarette, Commerce, Consumer, Cost, Customer, deaths, Economy, Employment, Filter, Finance, Govt, Habits, Health, Healthcare, Income, ITC, Jobs, manufacturers, Manufacturing, MNC, Nicotine, Pan Parag, Passive, Protest, Ramadas, Ramadoss, sales, skull, Smoke, smoking, Symbols, Tax, Tirunelveli, Tobacco, warning, workers, wrappers | Leave a Comment »

Mangalore: Centre should review ban on Gutka: KPRS

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

பாக்கு பொட்டலத்துக்குத் தடை: அமைச்சர் அன்புமணி

பெங்களூர், அக். 26: மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் தன்னிச்சையான அறிவிப்பால், பாக்கு வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

பெங்களூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாக்குப் பொட்டலங்களுக்கு (குத்கா, பான்பராக்) தடை விதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அன்புமணி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அவர் தனிப்பட்ட முறையில் வெளியிட்ட அறிக்கையாகும். இது மத்திய அரசின் முடிவு அல்ல.

மத்திய அமைச்சரின் இந்த அறிக்கையால் பாக்கு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கர்நாடக விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். அன்புமணியின் இந்த அறிவிப்பால் பாக்கு விலை பெருமளவில் சரிந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அவரின் இந்த அறிவிப்பு ஏற்கத்தக்கதல்ல.

இதுபோன்று அறிக்கைகளை வெளியிடும்போது அன்புமணி சம்பந்தப்பட்ட வியாபாரிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை கலந்து பேசி வெளியிட வேண்டும். அவர் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டு விவசாயிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார்.

போதை தரும் பொருள்களை கலந்து விற்பனை செய்யும் பாக்குப் பொட்டலங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

ஆனால் அன்புமணி ஒட்டுமொத்தமாகத் தெரிவித்ததால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதப்படும். அதில் பாக்குப் பொட்டலங்களுக்குத் தடை விதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படும்.

கர்நாடகத்தில்

  • மங்களூர்,
  • உடுப்பி,
  • சிக்மகளூர்,
  • ஷிமோகா, மற்றும்
  • வட கர்நாடகப் பகுதிகளில் அதிக அளவில் பாக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்பகுதி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும், வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு விரைவில் தில்லி செல்ல இருக்கிறோம்.

தில்லியில் மத்திய அமைச்சர் அன்புமணியை சந்தித்து பாக்குப் பொட்டலங்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்வோம். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

Posted in Anbumani, Anbumani Ramadoss, betelnut, Congress (I), Gutka, Gutkha, Karnataka, Karnataka Prantha Raitha Sangha, Pan Parag, Seeval, Vethalai | Leave a Comment »