Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Pain’ Category

Vijayarajan: Mooligai Corner – Herbs & Naturotherapy: Maavilingam

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

மூலிகை மூலை: வாதக் காய்ச்சலைப் போக்கும் மாவிலிங்கம்!

விஜயராஜன்

மூன்று கூட்டு இலைகளையும் விரல்களைப் போன்ற வடிவம் உள்ளதும், மலர்ந்ததும் மஞ்சள் நிறமாக மாறும் வெள்ளைப் பூக்களையும், சிவப்பு நிற உருண்டையான சதைக் கனிகளையும் உடைய வெண்மை நிற மர இனமாகும் மாவிலிங்கம். இலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. இலை பசியைத் தூண்டும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். பட்டை மலச்சிக்கலைப் போக்கும். வேர் நோயை நீக்கி உடலுக்கு வலுவைக் கொடுக்கும். தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள்: குமார கன சுவேத புசுப்பி, சாருகாவிகம், எழும்பலதிச்சுடரும், வன்னி, தீபனி, மாவிலங்கு.

ஆங்கிலத்தில் : Crataeva religiosa; Forst; Eapparida

இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:

மாவிலிங்க இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு, அத்துடன் சுக்கு 1 துண்டு, சீரகம் ஒரு சிட்டிகையளவு பொடியாக்கிச் சேர்த்துப் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.

மாவிலிங்க இலையை அரைத்துப் பற்றுப் போட அனைத்து வீக்கங்களும் கரையும்.

மாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.

மாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாகக் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் 100 மில்லியளவு தேங்காய்ப் பால் கலந்து 4 வேளை குடித்துவர முடக்கு வாதம் குணமாகும்.

மாவிலிங்கப்பட்டை ஒரு பங்கும் அதில் பாதியளவிற்குப் பூண்டும், மிளகு கால் பங்கும் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர முடக்கு வாதம் குணமாகும்.

மாவிலிங்கப் பட்டை 40 கிராம், சுக்கு, திப்பிலி, சதகுப்பை வகைக்கு 20 கிராம், சித்திர மூலவேர், மூங்கிலிலை வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை 150 மில்லியளவு குடித்து அத்துடன் கால் பாகம் அன்னாசிப் பழத்தை தோல் சீவி சர்க்கரை கலந்து சாப்பிட்டு சூடான அரிசிக் கஞ்சியும் இஞ்சித் துவையலும் சேர்த்துச் சாப்பிட இளம் சூடு கரையும்.

மாவிலிங்கப் பட்டையை 40 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியாக 2 வேளை குடித்து வரக் கால் வீக்கம், நீர்க்கட்டு, கல்லடைப்பு, வெட்டை, சூலை, மாதவிலக்குப் பிரச்சினைகள், வயிற்றுப் புண், கண்டமாலை, புண்கள், விஷக்கடி குணமாகும்.

மாவிலிங்கப்பட்டை, உள்ளி, மிளகு சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு 3 நாள் காலையில் கொடுக்க மாதவிலக்கு உண்டாகும்.

மாவிலிங்கம் சமூலத்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர காய்ச்சல், வெட்டை, சூலை, கல்லடைப்பு, நீரடைப்பு நீங்கும்.

மாவிலிங்க இலையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க காய்ச்சல், செரியாமை குணமாகும்.

மாவிலிங்க இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றிட வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும்.

மாவிலிங்கப் பட்டையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை தொடர்ந்து குடித்துவர கல்லடைப்பு குணமாகும்.

மாவிலிங்கப் பட்டையை வெட்டி உட்புறமாக வைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.

மாவிலிங்கப் பட்டையை வட்டமாக வெட்டி அரையாப்புக் கட்டி மீது வைத்து அதன் மீது ஓர் ஈயத் தகட்டை வைத்துக் கட்ட கட்டி அமுங்கிவிடும்.

மாவிலிங்கப் பட்டையை நன்றாக நசுக்கி, எருக்கம் இலையை தொன்னை தைத்து அதில் முப்பிணி கண்டவர்களுக்குத் தலையில் வைத்துக் கட்ட குணமாகும்.

Posted in Advice, Alternate, appetite, appetizers, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Crataeva religiosa, Eapparida, Fever, Forst, Herbs, Hunger, Hungry, Maavilingam, Maavilinkam, Mavilingam, Mavilinkam, medical, Mooligai, Naturotherapy, Pain, paralysis, rheumatism, Vijaiyarajan, Vijayarajan | 1 Comment »

Ayurvedha Corner: Alternate Therapy – Hip hip hooray

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்புத் தண்டுவடத்தை வலுப்படுத்த…

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

எனது மகளுக்கு 41 வயது ஆகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் வயலில் நெல் நாற்று கத்தைகளைக் கலைத்துப் போடும்போது பின்புறம் இடுப்பில் தண்டுவடத்திற்கு அருகில் ஒரு நரம்புப் பகுதியில் “கட்’ ஆகிவிட்டது. அலோபதி வைத்தியம் பார்த்து சரியாகவில்லை. ஆழியார் வேதாத்திரி மகரிஷி வைத்தியப் பிரிவில் சில மூலிகைத் தைலம் கொடுத்து தேய்க்கச் சொன்னார்கள். தைலப்பசை இடுப்பில் இருக்கும்போது வலி இல்லை. தைலம் தடவாமல் விட்டுவிட்டால் வலி வந்து விடுகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் என்ன மருந்து இருக்கிறது?

முதுகுத் தண்டுவட எலும்புப் பகுதியில் ஓர் எலும்பு அடுத்த எலும்புடன் உராயாமலிருக்கவும், வேகமான நடை, வண்டிப் பயணம், குதித்தல் போன்ற செய்கைகளில் ஏற்படும் அதிர்வலைகளைச் சமாளித்து ஒரு குஷன் போல செயல்படும் வில்லைகள் இருக்கின்றன. உங்கள் மகள் அதிக நேரம் குனிந்து கொண்டு வேலை செய்யும்போது, இந்த வில்லைகளில் அழுத்தம் அதிகரித்திருக்கக் கூடும். அது மாதிரியான நிலையில் பதட்டத்துடன் திடீரென்று திரும்புவது, இடுப்பில் ஏற்படும் வலியால் தடாலென்று தரையில் அமர்வது, குளிர்ந்த தண்ணீரை அதிக அளவில் குடிப்பது; “சில்’ என்று இருக்கும் தண்ணீரில் நிற்பது போன்ற செய்கைகளினால் நீங்கள் கூறும் நரம்பு பிய்த்துக் கொண்ட நிலை ஏற்படலாம். “பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். வீட்டில் காலிங்பெல் அடித்தவுடன், விருட்டென்று தலையைத் திரும்பிப் பார்ப்பதன் விளைவாக கழுத்து எலும்பின் வில்லை இடம் பிசகி, கடும் வலியை ஏற்படுத்துவதைப் போல தங்கள் மகளுக்கும் வில்லைப் பகுதி இடுப்பில் பிசகி இருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன.

மூலிகைத் தைலத்தின் தேய்ப்பால் வலி குறைவதாகக் கூறியுள்ளீர்கள். தேய்க்கவில்லையென்றால் வலி கூடுகிறது. எலும்புகளின் உராய்வைத் தைலப்பசை தடுப்பதை இது காட்டுகிறது. வில்லை செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை செய்கிறது. வில்லை நிரந்தரமாகச் செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை தற்காலிகமாகச் செய்கிறது. வில்லை தன் இருப்பிடத்திற்குத் திரும்பி, தான் இழந்த ஊட்டத்தைப் பெற்று மறுபடியும் எலும்புகளைத் தாங்கி நிறுத்தும் சக்தியைப் பெற பசும்பாலில் வேக வைத்த பூண்டு உதவும். 50 கிராம் தோல் உரித்த சுத்தமான பூண்டு எடுத்து லேசாக நசுக்கி 400 மிலி பசும்பாலுடன் சேர்க்கவும். ஒரு லிட்டர் 600 மில்லி லிட்டர் தண்ணீர் கலந்து அடுப்பில் ஏற்றி, 400 மிலி அதாவது பால் மீதம் ஆகும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டவும். இந்தப் பாலை, வெதுவெதுப்பாக காலை மாலை வெறும் வயிற்றில் 200 மில்லி லிட்டர் சாப்பிடவும். இதில் தான்வந்திரம் 101 எனும், நெய் மருந்தை 10 சொட்டு கலந்து சாப்பிட மிகவும் நல்லது.

வில்லைகளுக்கு ஏற்படும் ஊட்டத் தடையை மாற்றி போஷாக்கை ஏற்படுத்தும் இம்மருந்தைத் தொடர்ந்து 21 நாள்கள் முதல் 48 நாள்கள் வரை சாப்பிடலாம்.

பாதிக்கப்பட்டுள்ள இடுப்பு தண்டுவடப் பகுதியில் மூலிகைத் தைலத்தைத் தேய்ப்பதைவிட ஊற வைப்பதே நல்லது. ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய முறிவெண்ணெய்யுடன் சிறிது தான்வந்திரம் தைலத்தைக் கலந்து இரும்புக் கரண்டியில் சூடாக்கி, சிட்டிகை உப்பு, எண்ணெய்யில் கரைத்த பிறகு பஞ்சில் முக்கி வலி உள்ள இடத்தில் போடவும், சுமார் ஒரு மணிநேரம் ஊறிய பிறகு வேறு ஒரு துணியால் துடைக்கவும். காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக இதுபோலச் செய்யவும்.

ஆஸனவாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகைத் தைலமும், கஷாயமும் குடல்காற்றை அடக்கி இடுப்பு எலும்பு மற்றும் வில்லைகளுக்கு வலிவூட்டும் சிகிச்சை முறைகளாகும். இப்படி வாய்வழியாகவும், ஆஸனவாய் வழியாகவும், தோல் வழியாகவும் முதுகு தண்டுவடத்தை பலமாக்கி, வில்லைகளை நேராக்கி, வலியிலிருந்து விடுபடலாம்.

ஆயுர்வேத மருந்துகளில் சஹசராதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், க்ஷீரபலா 101 போன்ற மருந்துகள் சாப்பிட நல்லதாகும்.

மூலிகை இலைகளால் ஒத்தடம் கொடுத்தல், பாலில் வேகவைத்த நவர அரிசியினால் தேய்த்து விடுதல், உணவில் பருப்புப் பண்டங்களைக் குறைத்தல், பளுவான பொருட்களைத் தூக்காதிருத்தல், குனிந்த நிலையில் வேலை செய்யாதிருத்தல் போன்றவற்றின் மூலமாகவும் இடுப்புத் தண்டுவடத்தை வலுபடுத்தலாம்.

Posted in Aches, Alternate, Aspirin, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bones, Herbs, Hip, Muscles, Natural, Pain, Sprain, Strain, Therapy, Tylenol | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to stregthen the Legs

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கால்கள் வலுப்பெற…

என் வயது 80. நாற்பது ஆண்டுகளாக மலக்கட்டு உள்ளவன். மூன்று ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. ஆங்கில மருத்துவமனையில் 15 நாள் இருந்தேன். குணமான பின் இடுப்புக்குக் கீழ் இரு கால்களும் வலுவிழந்துவிட்டது. கோலூன்றி நடக்கின்றேன். கால்கள் பலம்பெற வழிகள் என்ன?

தலைக்கும் காலுக்கும் நரம்பு மூலம் நேர்முகமான ஓர் இணைப்பு இருப்பதை மேல்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேதம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அடிப்படையின் மேல் ஆரோக்கிய பாதுகாப்பு முறைகளை உபதேசித்துள்ளது.

கால்களை அடிக்கடி பரிசுத்தமாய் அலம்பிக் கொள்ளுதல், கால்களுக்கு எண்ணெய் தேய்த்தல், பூட்ஸ் -செருப்பு போன்ற காலணிகளை அணிந்து கொண்டு நடத்தல் போன்ற பாதுகாப்பான நடவடிக்கைகளால் பாதங்கள் பாதுகாக்கப்படுகின்றன. பாதங்களின் பராமரிப்பால் உடலின் மற்ற அங்கங்களுக்கும் பலவிதமான நன்மை ஏற்படுகின்றன. அதிலும் கண்களுக்கு விசேஷமான பலத்தையும் தெளிவையும் அளிக்கின்றன. பாதங்களை இவ்விதம் கவனிக்காமல், எண்ணெய்த் தேய்க்காமல், செருப்பில்லாமல் நடப்பதினால், உடலின் மற்ற அங்கங்களில் கெடுதல் அதிகம் விளையும். சுத்தமான தண்ணீரால் கால்களை அடிக்கடி அலம்புவதால் தலையில் இருக்கும் மூளையின் மேதா சக்தியை வளர்க்கிறது. “”தாரணாவதீ தீ: மேதா”- ஒரு தரம் படித்ததைக் கேட்டதை ஸ்திரமாய் நினைவில் வைத்திருக்கும் புத்தி சக்தி -மேதை.

கால் பெருவிரலின் உள் பக்கவாட்டிலிருந்து மூளைக்கும், கண்கள் முதலிய தலைக்குள்ளிருக்கும் இந்திரியங்களுக்கும் நேர் இணைப்பு கொண்ட நாடி இருப்பை மிகப்பழைய ஆயுர்வேதம் கூறுவதால், நீங்கள் கால்கள் வலுப்பெற, மூளை நரம்புகளை வலுப்பெறச் செய்யவேண்டும். ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய க்ஷீரபலா அல்லது சுத்தபலா தைலத்தைத் தலையில் தடவி, சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து, இடுப்பு கால் பகுதியில் பலா அஸ்வகந்தாதி குழம்பு அல்லது மஹாமாஷ தைலத்தை இளஞ்சூடாக மேலிருந்து கீழாகத் தேய்த்து ஊறவிடவும். மூளைக்கும் கால் நரம்புகளுக்கும் நல்ல பலத்தை இந்த மூலிகைத் தைலங்கள் ஏற்படுத்தித் தரும்.

உடல் நேராக நிமிர்ந்து தள்ளாடாமல் துவண்டு விடாமலிருக்க தலையின் மூளைப் பகுதியைச் சார்ந்த செரிபெல்லம் எனும் பகுதியும், முதுகுத் தண்டு வடமும் முக்கியமானவை. முதுகுத் தண்டுவடத்தின் உள்வட்டப் பாதை சுருங்கினால் ஸ்பைனல் கார்டில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் கால்கள் வலுவின்றி நடக்கும்போது தள்ளாட்டத்தைத் தரும். வாயு தோஷத்தின் குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, குளிர்ச்சி, மொரமொரப்பு, நுண்ணியது, அசையும் தன்மை ஆகியவற்றால் வயோதிகத்தில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்படுவதால் கூன் விழுதல், எலும்பு பலஹீனம், உடல் தள்ளாட்டம் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. பஞ்சமஹா பூதங்களில் வாயுவும் ஆகாசமும் அதிக அளவில் வாயு தோஷத்தில் உள்ளன. அதைச் சரியான அளவில் நிலைநிறுத்த மற்ற மூன்று மஹா பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு ஆகியவற்றை அதிகம் கொண்ட இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளை உணவில் சமச் சீரான அளவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டும். மேலும் மருந்துகளிலும் இந்த மூன்று மஹாபூதங்களை அதிக அளவில் சேர்த்துள்ள விதார்யாதி கஷாயம், அப்ரக பஸ்மம், தசமூல ரஸôயனம் போன்றவற்றைத் தகுந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு நீங்கள் கால்கள் வலுப்படும்படி செய்து கொள்ளலாம்.

Posted in Aches, Alternate, arthritis, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Body, Calf, diabetes, Head, Heart, heart attack, insulin, Knee, legs, medical, Medicines, Muscles, Natural, oil, Pain, Spasm, Strain, Sugar, Swaminathan | Leave a Comment »

Q&A with Doctor on Shoulder Pain – Medical Options (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

இது புதுசு: முதுகு வலிக்கு இனி முற்றுப்புள்ளி!

ந.ஜீவா

மூக்குள்ளவரை சளி இருக்கும் என்பார்கள்.

இனி முதுகு இருக்கும் வரை முதுகு வலி இருக்கும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது.

அந்த அளவுக்கு முதுகுவலி இன்றைய நவீன உலகில் பரவலான நோயாகிவிட்டது. அதுவும் நாள் முழுக்க நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு முதுகுவலி உடன்பிறவா சகோதரன் போல ஆகிவிட்டது. அலுவலகத்திற்கு லீவு எடுப்பவர்கள் பலமுறை பாட்டியைச் சாகடித்த பின்னால் இப்போது சொல்லக் கண்டுபிடித்திருக்கும் லேட்டஸ்ட் காரணம், “”பேக் பெயின் தாங்க முடியலை சார். டாக்டர்ட்ட போகணும்.”

முதுகுவலி பிரச்சினையை ஆப்ரேஷன் இல்லாமல், ஊசி, மருந்து, மாத்திரை இல்லாமல் தீர்க்க வந்திருக்கிறது ஓர் அதிசய இயந்திரம். ஆசியாவிலேயே… அதுவும் இந்தியாவிலேயே… முதன்முறையாக ஹைதராபாதிலும் இப்போது சென்னையிலும் வந்திருக்கிறது. முதுகுவலி பற்றியும் அந்த இயந்திரத்தின் “மகிமை’ பற்றியும் நம்மிடம் விரிவாகப் பேசினார் சென்னை அண்ணாநகர் தி பேக் அன்ட் நெக் கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் ஹரிஹரன்.

முதுகு வலி இன்று பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?

இன்றைக்கு 13 வயது குழந்தை முதல் 60 வயது தாத்தா வரை முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்குக் காரணம் உடலுழைப்பு இல்லாததே.

என்னுடைய தாத்தா 10 மைல் 15 மைல் என்றாலும் நடந்தேதான் பள்ளிக்குப் போய் படித்தார். வேலைக்கும் போய்வந்தார். என்னுடைய அப்பா சைக்கிளில்தான் எப்போதும் சென்றார். நான் ஒரு கி.மீ. தூரம் என்றாலும் நடந்து செல்லாமல் வாகனங்களில்தான் சென்றேன். உடல் உழைப்பு இவ்வாறு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது.

கிராமப்புறங்களில் நாள் முழுக்க குனிந்து நடவு செய்யும் பெண்களுக்கு முதுகுவலி வருவது கிடையாது. அரிசி குத்துவதும், ஆட்டுரலில் மாவு அரைப்பதும், ஏன் அம்மியில் மிளகாய் அரைப்பதுமே இல்லாமற் போய்விட்டது. இவ்வாறு உடல் உழைப்பு இல்லாததே முதுகுவலி வர முக்கியக் காரணம்.

உடல் உழைப்பு எதுவும் செய்யாமல் நாம் முதுகை இன்சல்ட் பண்ணுகிறோம். பதிலுக்கு முதுகு நமக்குத் தொல்லை கொடுக்கிறது.

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி வராமல் இருக்க அதற்கெனச் சேர்கள் தயாரிக்கப்படுகின்றன. இருந்தாலும் இதனால் பெரிய அளவுக்குப் பயனில்லை. ஏனெனில் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் எப்போதும் முதுகைப் பொருத்தமாகச் சாய்த்து வைத்திருப்பது கிடையாது. பல நேரங்களில் சீட்டின் நுனியில் உட்கார்ந்துதான் வேலை செய்கிறார்கள். இதனால் முதுகு வலி மட்டுமல்ல, கழுத்து வலியும் சேர்ந்து வரும்.

நமது மூளையில் இருந்து வரும் நரம்புகள் தண்டுவடம் என்கிற பெயருடன் முதுகெலும்பின் உள்ளே இருக்கின்றன. இந்த முதுகு எலும்பு 33 சிறிய எலும்புகளால் ஆனது. இந்த எலும்புகள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். இரண்டு எலும்புகளுக்கு இடையே மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் இருக்கிறது. தண்டுவடம் முதுகு எலும்பின் நடுவில் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த நரம்புகள் இரண்டு குட்டி எலும்புகளுக்கு நடுவில் இருந்து வெளியேறுகின்றன. இந்த நரம்புகள்தான் தோள்பட்டை முதல் கால்கள் வரை உள்ள அனைத்துத் தசைகளையும் இயக்குகின்றன.

30 – 40 வயதுள்ளவர்களுக்கு ஜவ்வில் நரம்புகள் உராயும். அதனால் கழுத்தின் பின்பக்கத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். கால்களில் வலி ஏற்படும். கால்கள் மரத்துப் போகும்.

50 – 60 வயதுள்ளவர்களுக்கு முதுகு எலும்புகள் ஒரு எலும்பிற்கு மேல் இன்னொரு எலும்பு ஏறிக் கொள்ளும். இதனால் இந்த இரண்டு எலும்புகளையும் இணைக்கும் ஊஹஸ்ரீங்ற் த்ர்ண்ய்ற் லூஸ் ஆகி உடைந்து போய்விடும். இதனால் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, கடுமையான வலி உண்டாகும்.

சிலருக்கு வேறு ஏதாவது ஆப்ரேஷன் செய்வதற்காக மயக்க ஊசியை முதுகில் போடுவார்கள். இந்த ஊசி முதுகில் உள்ள டிஸ்க்கில் பட்டுவிட்டால், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வலி இருக்கும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்குக் குழந்தையின் வெயிட் அதிகமாவதால் முகுகெலும்பில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் முதுகெலும்பு ஜவ்வில் நரம்பு அழுந்தும். வலி ஏற்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நிறைய ரத்த இழப்பு ஏற்படும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. ரத்தம் செல்வது குறைவாக இருப்பதால் முதுகில் வலி ஏற்படும். இப்படி முதுகுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முதுகுவலிக்கு என்ன சிகிச்சை?

பல்வேறு காரணங்களால் முதுகு வலி வந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்றால், முதலில் பெட் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். பிஸியோதெரபி வைத்துக் கொள்ளலாம் என்பார்கள். இடுப்பில் பெல்ட் (ட்ரேக்ஷன்) போட்டுக் கொள்ளலாம் என்பார்கள். வலி தெரியாமல் இருக்கவும் உடலுக்கு ஊக்கம் தரவும் ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடச் சொல்வார்கள். கடைசிக்கும் கடைசியாக ஆப்ரேஷன் பண்ணச் சொல்வார்கள். ஸ்டீராய்டு மாத்திரைகள் அந்த நேரத்தில் வலியைக் குறைத்தாலும் மீண்டும் வலி வந்துவிடும். தவிர இந்த மாத்திரைகள் உடலுக்கு மிகவும் தீங்கானவை.

ஆனால் இம்மாதிரி ஊசி, மருந்து, மாத்திரை, ஆபரேஷன் என்ற வழக்கமான மருத்துவம் எதுவுமில்லாமல் முதுகுவலியை இப்போது தீர்க்க முடியும்.

அது எப்படி?

முதுகு வலி பிரச்னையைத் தீர்க்க வந்திருப்பதுதான் ஈதல9000 என்ற இயந்திரம். சுமார் எண்பத்து ஐந்து லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரத்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.

இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதின் பின்னணி சுவையானது. இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விஞ்ஞானிகள்தாம்.

விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆறுமாதம் ஒரு வருடம் என்று போகிற விண்வெளி வீரர்களை அவர்கள் திரும்பி வந்ததும் பரிசோதித்துப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முதுகு எலும்பு ஓர் அங்குலம் வரை வளர்ந்திருப்பது தெரிய வந்தது. இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை விண்வெளியில் இல்லாததும், அங்கு நிலவும் குறை மண்டல அழுத்தமும்( Negative Pressure)தான். இந்தக் குறை மண்டல அழுத்தமானது முதுகின் மேல் உள்ள தசைநார்களை விரிவடையச் செய்கிறது. காய்ந்து சுருங்கிய நிலையில் உள்ள டிஸ்க்குகளைப் பதப்படுத்தி விரிவடையச் செய்கிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் எவ்வளவு நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்?

டிஆர்எக்ஸ் 9000 இயந்திரத்தில் 20 நாட்களில் இருந்து ஒரு மாதம் வரை சில நிமிடங்கள் ஒருவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஜவ்வுப் பகுதி விரிவடைகிறது. ஜவ்வுப் பகுதியில் அழுத்திக் கொண்டு இருக்கும் வலிக்குக் காரணமான நரம்புகள் விடுபடுகின்றன. இதனால் முதுகு வலி அடியோடு போய்விடுகிறது.

இந்த சிகிச்சை செய்ததற்குப் பின் திரும்பவும் ஜவ்வு, தசைகள் சுருங்கி மீண்டும் முதுகு வலி வராதா?

இந்தச் சிகிச்சையின் போது நாங்கள் தசைகள் இறுகவும் மீண்டும் பழைய நிலையை அடையாமல் இருக்கவும் உடற்பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். அந்த உடற்பயிற்சியைத் தினமும் தவறாமல் செய்வதால் முதுகு வலி திரும்பவும் வரவே வராது.

முதுகு வலிக்காக ஏற்கனவே ஆபரேஷன் செய்தும் வலி தீராதவர்கள் எங்களிடம் சிகிச்சைக்காக வருகிறார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிற இந்த இயந்திரம் இந்தியா உட்பட 16 நாடுகளில்தான் உள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னையில் முதன்முதலாக எங்களிடம்தான் இருக்கிறது.

Posted in Auto, Backpain, Bed, Bike, Bodyache, Chat, Comfort, Computer, Deskjob, Diet, Doc, Doctor, Driver, Exercise, Injury, Interview, Long distance, medical, Medicine, Options, Pain, Pillow, Posture, Seating, Shoulder, Sleep, Sofa, Software, Spinal, Traction, TV, Two-wheeler, Tylenol, Yoga | 2 Comments »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Exhaustion

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோர்வுக்குக் காரணம் என்ன?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771

எனக்கு வயது 60 ஆகிறது. காலைக்கடன் முடித்தவுடன் நீராகாரம் சாப்பிடுகிறேன். மதியம் 11 மணி சுமார் கேழ்வரகு கஞ்சி சாப்பிடுகிறேன். கைகால் உடம்பு வலி உள்ளது. காலையில் சீக்கிரம் பசி எடுக்கிறது. அடிக்கடி உடல் சோர்வு அடைந்துவிடுகிறது. இது எதனால்?

இரவு படுக்கும்முன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதைக் கழித்த விதம், நேற்றிரவைக் கழித்த விதம், இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை, மன நிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல்-மனப்பாதிப்பு, இரண்டின் பின்விளைவுகள், இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் நாளைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டியது, என இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்க வேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்கவேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை என்று வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.

உங்களுடைய உடல்சோர்வு பற்றி அறிவதற்கு கீழ்காணும் கேள்விகள் உதவும்.

1. நீங்கள் செய்யும் பணி உங்கள் சக்திக்கு மீறியதா?

2. தூக்கம் அதிகமா? குறைவா? படுத்தவுடன் தாமதமாகிறதா? அயர்ந்த தூக்கம் ஏற்படுகிறதா? பிறர் நீங்கள் குறட்டை விடுவதாகக் கூறினாலும் நீங்கள் அவ்விதம் தூங்கவில்லை என்று உணர்கிறீர்களா? தூக்கத்தை எது தடைசெய்கிறது?

3. சீக்கிரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா? விழித்ததும் தெளிவு காண்கிறதா? சோம்பல் தலைவலி, மயக்கம், உடல்வலி வாய் உலர்ந்திருத்தல், கழுத்தில் வலி, மார்பில் வலி, தொண்டையில் இறுக்கம், படபடப்பு, கோபம், தாபம், அழுகை, மனத்தளர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல், இவற்றில் ஏதாவது ஒன்றா? பல்வேறு காரணங்களா?

நீங்கள் முதுமையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் உடல் சோர்வு வயது முதிர்ச்சியால் ஏற்படுமானால், ஓரளவு இதற்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.

மனதைப் பாதிக்கும் நோய்கள் உடலைப் பாதிக்கின்றன. இவற்றில் மனம் கெட்டபின் உடல் கெடுவதாயின் மனநோய்கள் எனவும், உடல் கெட்டபின் மனம் கெடுவதாயின் உடல் நோய்கள் எனவும் ஓரளவு வரையறுக்க முடியும். சில நோய்களை இப்படித் தரம் பிரிக்க முடிவதில்லை. எது முதலில் கெட்டது? உடலா? மனமா? எனத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இவற்றை “ûஸகோ úஸôமாடிக்’ நோய்கள் என்று கூறுவர்.

இன்றைய சூழ்நிலையில் கவலைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பெரும்பாலானவர் உட்படுகின்றனர். அதனால் உடல் நோய்களுக்கு அளிக்கப்பெறும் மருந்துகள் போதாமல் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் அடக்கவல்ல மன அமைதி தரும் மருந்துகள் சேர்த்தே தரப்படுகின்றன.

நீங்கள் நீராகாரம், கேழ்வரகு, கஞ்சி போன்ற நல்ல உணவு வகைகளை சாப்பிட்டும் உடல் வலி, உடல் சோர்வு போன்ற உபாதைகளால் அவுதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். பசியும் நன்றாக எடுக்கிறது. அப்படி என்றால் மனதளவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? மன உணர்ச்சிகளை கொந்தளித்துப் பொங்குமளவிற்கு விட்டுவிடாமல் அவ்வப்போது போக்குக்காட்டி வடித்துவிட முயற்சி செய்யலாம்.

தூக்கம் சரியாக இல்லை என்று தோன்றினால் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய சந்தனாதி தைலம் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிக் குளிக்கலாம். உள் மருந்தாக மஹாகல்யாணககிருதம் எனும் நெய் மருந்தை 10மிலி காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் வலி நீங்க தசமூலம் கஷாயம் காலை, மாலை வெறும் வயிற்றில் 60மிலி மேலுள்ள நெய் மருந்துடன் கலந்து சாப்பிடலாம்.

சோர்வை அளவிடமுடியாது. எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை முதலியவற்றால் இதனைக் கணக்கிட முடியாது. நீங்கள் உடல் சுறுசுறுப்பிற்காக வில்வ இலை, கருந்துளசி இலை, மஞ்சள் பூவுள்ள கரிசலாங்கண்ணி இவற்றில் ஒன்றை அரைத்து விழுதாக்கி 5-10 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் சாப்பிடவும்.

Posted in Aches, Active, Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bodyaches, Boredom, Brain, Cures, energy, Exhausted, Exhaustion, fatigue, Fresh, Health, Healthcare, Hunger, Hungry, Medicines, Pain, Positive, Strength, Thinking, Tired, weary | Leave a Comment »

Healthcare: Blood Pressure

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

முதுமையும் ரத்த அழுத்த நோயும்

கு.கணேசன்

உயர் ரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று “உலக நலவாழ்வு நிறுவனம்’ வலியுறுத்தி வருகிறது.

ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இளைஞரானாலும் சரி, முதியவரானாலும் சரி, ஒருவருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை ரத்த அழுத்தம் இருந்தால் பாதிப்பு வராது. இதற்கு மேல் அளவு அதிகரித்தால் அதை “உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இந்நோயைத் தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறினால் இதயம், மூளை, சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றுக்கு எமனாக அமைந்துவிடும்.

மாரடைப்புக்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இது தவிர, இதயம் வீங்கிச் செயலிழத்தல், கண்களின் விழித்திரையில் ரத்தம் கசிந்து பார்வை இழத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு. ஆகவே உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. சிறுநீரக நோய் உள்ளவர்கள் 3 கிராம் வரை சேர்த்துக் கொள்ளலாம். உப்பு மிகுந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி, முட்டை, இறால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், சாஸ் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பூரி, வடை, சமோசா, முறுக்கு, பஜ்ஜி, வறுவல் போன்ற எண்ணெயில் பொரித்த வறுத்த, ஊறிய உணவுகள் மற்றும் சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வேண்டாம்.

தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்தினால் நல்லது. நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், கொய்யா, தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை போன்ற பயறுகள், வெந்தயம், பாகற்காய் போன்ற காய்கள், புதினா, கொத்துமல்லி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.

பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுச் சத்துககளுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. பழங்கள், காய்கறிகள், கீரைகள் குறிப்பாக காரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி, அன்னாசி, அவரை போன்றவற்றில் இச்சத்துகள் அதிகம்.

உடலின் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைக் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் 40 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்தம் சீராக இருக்க மட்டுமல்ல, மாரடைப்பையும் தடுக்கவல்லது.

சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. உடனே இப்பழக்கத்தை நிறத்துங்கள். மதுவுக்கும் விடை கொடுங்கள். யோகாசனம், தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து மனதுக்கு அமைதியைத் தரக்கூடியவை.

முதுமையில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் மற்றொரு முக்கியப் பிரச்னை “நிலை மயக்கம்’ முதுமை காரணமாக இவர்களுக்கு ரத்தக் குழாய்களின் உட்சுவர் கடினமாகி சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்கு செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும்.

இதனைத் தவிர்க்க கட்டிலின் தலைப் பகுதியை அரை அடி உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்காருவதையும் தவிர்ப்பது நல்லது. சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த அழுத்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

உலக அளவில் 100 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது. இந்தியாவில் 100-ல் 20 பேருக்கு இந்த நோய் உள்ளது. அதிலும் 60 வயதைக் கடந்தவர்களிடம் பாதிப் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

முதுமை என்பது இயற்கையான விஷயம். தாழ்வு மனப்பான்மை மற்றும் முதுமையின் காரணமாக ஏற்படும் இயலாமையை வெற்றி காண்பதுதான் ரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள முக்கியமான வழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர், பொதுமருத்துவர்).

Posted in Advice, Aged, Angina, anginoplasty, Artificial, Attack, BP, Cigarette, cure, Death, diabetes, Diet, Disabled, Disease, Disorder, Doctor, Exercise, Food, Health, Healthcare, Heart, insulin, Jeeva, Kidney, Liver, medical, Obesity, oil, Old, Operation, Organs, Pain, paralysis, Run, smoking, Stroke, Sugar, Tips, Walk, WHO, Youth | 2 Comments »

Raman Raja: Assisted Suicide, Jack Kevorkian & Euthanasia

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

நெட்டில் சுட்டதடா…: மருத்துவர் நடத்திய மரண விளையாட்டு!

ராமன் ராஜா

உலகில் எவ்வளவோ நாடுகளில் எவ்வளவோ மக்கள், தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். பேச்சுரிமை, எழுத்துரிமை, விரும்பின கலர் சட்டை போட்டுக் கொள்ளும் உரிமை என்று சின்னதும் பெரியதுமாகப் பல விடுதலைப் போராட்டங்கள். இதில் கட்டக் கடைசி என்று சொல்லத் தக்கது, உயிரை விடும் உரிமை. தற்கொலை செய்து கொள்வது சில நாடுகளில் சட்டப்படி செல்லும்; சிலவற்றில் குற்றம். தற்கொலையாளியின் பக்கத்தில் இருந்து பிரார்த்தனை செய்த பாதிரியார் ஒருவர் கூட சமீபத்தில் சிறைக்குப் போயிருக்கிறார்.

ஆனால் மருத்துவர் உதவியுடன், வலியில்லாமல் பிசிறில்லாமல் தற்கொலை செய்துகொள்கிற உரிமையைக் கேட்டுப் போராடும் பல குழுக்கள் இருக்கின்றன. ABCD என்பது அவற்றில் முக்கியமான அமெரிக்க இயக்கம்.

“”தீர்க்க முடியாத வியாதிகளால் வருடக் கணக்காக வலியும் வேதனையும் அனுபவித்து, சேர்த்து வைத்த சொத்தெல்லாம் பயனில்லாமல் ஆஸ்பத்திரிச் செலவுக்குக் கரைந்து, உறவினருக்கும் பாரமாய், உயிர் பிரியாமல் அவஸ்தைப்படுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். போகிற உயிரைச் செயற்கையாகப் பிடித்து வைத்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்? அவர்களுக்கு இறுதி விடுதலை கொடுங்கள்; அமைதியாகத் தூங்க விடுங்கள்” என்று இவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பதினைந்து வருடம் கோமாவில் கிடந்த டெர்ரி ஷியேயோ என்ற பெண்மணியின் ஆக்ஸிஜன் டியூபைப் பிடுங்க வேண்டும் என்று அவர் கணவர் போட்ட வழக்கில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதற்குள் அமெரிக்காவே இரண்டு கட்சியாகப் பிரிந்து அடித்துக் கொண்டது.

சென்ற வாரம் முழுவதும் டாக்டர் ஒருவர் சிறையிலிருந்து விடுதலையான செய்தியை உலகத்து மீடியா முழுவதும் பேசியது: அவர்தான் மரண மருத்துவர் (டாக்டர் டெத்) என்று செல்லமாகப் பெயர் படைத்த டாக்டர் கெவார்க்கியன். “”மரணம் எங்கள் பிறப்புரிமை” என்று முழங்கியவர்; பற்பல உயிர்களை முழுங்கியவர். “”ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய சொந்த உயிரின் மீது முழு அதிகாரம் உண்டு. அதைப் போற்றிப் பாதுகாப்பதோ, போக்கிக் கொள்வதோ, அவரவர் இஷ்டம். அரசாங்கமோ, சட்டமோ இதில் தலையிடக் கூடாது.” என்று வாதாடினார். பேச்சுடன் நிற்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட சாவுகளைப் பக்கத்தில் இருந்து பக்குவமாக நடத்தியும் வைத்தார்.

டாக்டர் கெவார்க்கியனுக்கு இப்போது பழுத்த எழுபத்தேழு வயது. அமெரிக்காவின் மிஷிகன் நகரைச் சேர்ந்தவர். இளமைப் பருவத்தில், டாக்டர் தொழிலின் காரணமாக நூற்றுக்கணக்கில் போஸ்ட் மார்ட்டம் செய்து தள்ள வேண்டியிருந்தது. அதனால் அவருக்கு மரணத்தின் மேலேயே ஓர் அலாதியான ஈர்ப்பு வந்துவிட்டது. உயிர் பிரியும் அந்தக் கடைசிக் கணத்தில் ஒரு நோயாளியின் கண்கள் எப்படி இருக்கும் என்று காத்திருந்து போட்டோ எடுத்திருக்கிறார். வாழ்ந்த சூடு இன்னும் மாறாமல் இருக்கும் பிணங்களிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி உயிருள்ள பேஷண்டுகளுக்குக் கொடுக்கமுடியுமா என்று ஒரு முயற்சி. கடைசியாக மரண தண்டனை பெற்ற கைதிகளை வைத்துக் கொண்டு உயிரோடு அறுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்ய முயன்றதில், பல்கலைக் கழகத்தினர் அதிர்ச்சி அடைந்து டாக்டரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்! ஆனால் கெவார்க்கியன் அசரவில்லை; நேராகப் பத்திரிகை அலுவலகத்துக்குப் போய் ஒரு விளம்பரம் கொடுத்தார்: “”ஏதாவது காரணத்துக்காக உயிர் வாழ்வதில் ஆர்வம் இழந்து விட்டவர்கள் என்னிடம் வரலாம். தொல்லை நிறைந்த இந்த உலகத்திலிருந்து வலியில்லாமல் விடுதலை வாங்கித் தருகிறேன்.” இதைப் பார்த்ததும் புதிய ரஜினி படத்துக்கு முன் பதிவு செய்யும் வேகத்தில் விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன!

கெவார்க்கியன், கருணை வள்ளல்; தன் கையால் கொலை பாதகம் செய்ய மாட்டார். அவர் தயாரித்த “தானட்ரான்’ என்ற இயந்திரம்தான் அந்த வேலையைச் செய்யும். தற்கொலை கேûஸ அமைதியாகப் படுக்க வைத்து “”சாமியைக் கும்பிட்டுக்கப்பா” என்று சொல்லிக் கையில் பச்சை நரம்பு தேடி, ஊசி குத்தி சலைன் பாட்டிலை இணைப்பார். இப்போது நோயாளியே இயந்திரத்தில் ஒரு பட்டனை அழுத்த வேண்டும். முதலில் ஒரு விஷ மருந்து சொட்டுச் சொட்டாகக் கையில் இறங்கும்; மெல்ல ஆசாமி கோமா நிலைக்குப் போவார். சில நிமிடம் கழித்து தானட்ரான், தானாகவே மற்றொரு ரசாயனத்தைத் திறந்துவிடும். அது இதயத்துடிப்பை கப்பென்று பிடித்து நிறுத்திவிடும்.

இப்படிச் சில பல கொலைகள் செய்த பிறகு “ஆபத்தான ஆசாமி’ என்று கெவார்க்கியனின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது; இப்போது அவர் சட்டப்படி யாருக்கும் ஊசி மருந்து எழுதித் தர முடியாது. எனவே மறுபடி முனைந்து மெர்ஸிட்ரான் என்று மற்றொரு மெஷின் கண்டுபிடித்தார்: கடையில் கிடைக்கும் கார்பன் மோனாக்ûஸடு வாயு சிலிண்டரை வாங்கி வைத்துக் கொண்டு சுவாசித்து மூச்சடைக்கும் இயந்திரம் இது. டெக்னிகலாகப் பார்த்தால் டாக்டர் யாரையும் கொல்லவில்லை; அவரவர்கள் தாங்களேதான் வீட்டு ஃபிரிஜ்ஜை டீஃப்ராஸ்ட் பண்ணுவது போல ஒரு பொத்தானை அமுக்கிக் கொண்டு செத்தார்கள். 1990-ல் ஆரம்பித்து ஏழெட்டு வருடத்திற்குள், இப்படி 130 பேருக்கு எமலோகத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து டாட்டா காட்டியிருக்கிறார் டாக்டர்.

தன்னிடம் வந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாமே நோயாளிகள், வாழ்க்கையின் இறுதித் கட்டத் துன்பம் தாங்காமல் வந்தவர்கள்தான் என்று சாதித்தார் கெவார்க்கியன். ஆனால் பிறகு அவர்களில் பலரை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது அப்படியொன்றும் கடும் வியாதி இருந்ததாகத் தெரியவில்லை. காதல், கடன், பிளஸ் டூ பரீட்சை போன்ற வழக்கமான காரணங்களுக்காகத்தான் பெரும்பாலோர் பட்டனை அமுக்கித் தொலைத்திருக்கிறார்கள்.

கடைசியில் 1998 செப்டம்பரில் கெவார்க்கியன் நடத்தி வைத்த ஒரு தற்கொலைதான் அவரை ஜெயிலுக்கு அனுப்பியது: தாமஸ் யூக் என்ற நோயாளி; ஐம்பது வயது தாண்டியவர். அவர் கையைக் காலை அசைக்க முடியாத பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததால், கெவார்க்கியன் தானே தன் கையால் விஷ ஊசியைப் போட்டு வழியனுப்பி வைத்தார். அதை அப்படியே வீடியோ படமாக எடுத்து, இந்தியன் கமல்ஹாசன் பாணியில் டி.வி.யில் வேறு போட்டுக் காட்டினார்! இதைப் பார்த்துத் திகைத்துப் போன பொதுமக்கள் கொழு மோர் காய்ச்சிக் குடித்தார்கள்; குழந்தைகள் பல நாள் வரை திருடன்-போலீஸ் விளையாட்டை மறந்து டாக்டர்- விஷ ஊசி விளையாட்டில் ஈடுபட்டார்கள். இந்த வீடியோ ஆதாரத்தின் பேரில் கெவார்க்கியன் கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டில் கெவார்க்கியன் “”செத்தவனைப் போய்க் கேளுங்க” என்று சுலபமாகத் தப்பித்திருக்கலாம். தற்கொலைக்கு உதவி செய்வது தப்பா, சரியா என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டே தெளிவாக இல்லை; மாநிலங்கள் ஒவ்வொன்றும் மனம் போனபடி சட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. நல்ல வக்கீலாக வைத்துக் கொண்டிருந்தால் அவர் லாகவமாக லா பாயிண்டைப் போட்டுக் குழப்பி வாங்கித் தந்திருப்பார். ஆனால் கெவார்க்கியன் கொஞ்சம் விளம்பரப் பிரியர்; மீடியா மொத்தமும் ஆர்க் விளக்குகளைத் தன் மீது திருப்பியதில் நிலை மறந்து விட்டார். தன் கேûஸத் தானே வாதாடிக் கொள்வதாகச் சொல்லி, கோர்ட்டில் மனோகரா சிவாஜி கணேசன் மாதிரி உணர்ச்சிகரமாக உரையாற்றினார். ஆனால் பழம் பெருச்சாளியான அரசாங்க வக்கீல் தூவிய நுணுக்கமான சட்டப் பொடிகளைச் சமாளிக்க முடியாமல் தும்மிவிட்டார். டாக்டருக்கு இரண்டாவது டிகிரி கொலை செய்ததற்காக இருபத்தைந்து வருடம் வரை சிறைத் தண்டனை கிடைத்தது.

இப்போது எட்டு வருட தண்டனையை அனுபவித்த பிறகு, மோசமடைந்து கொண்டிருக்கும் உடல் நிலையைக் காரணம் காட்டி கெவார்க்கியனை பரோலில் விடுதலை செய்திருக்கிறார்கள்; “”வெளியே போனதும் சமர்த்துப் பையனாக இருக்கவேண்டும்; யாரையும் கொல்லக் கூடாது” என்ற நிபந்தனையுடன். வெளியே காத்திருந்த டாக்டரின் ரசிகர்கள் விழாவே கொண்டாடிவிட்டார்கள். வாழ்வின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் பலர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அவரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆதரவு தெரிவித்தார்கள். “”இறப்போரின் உரிமைக்காக இறுதி மூச்சு வரை போராடுவேன்” என்று சூளுரைத்திருக்கிறார் டாக்டர் கெவார்க்கியன்.

ஒரு வயதான பெண்மணி ஐ.சி.யூவில் நினைவின்றிப் படுத்திருக்க, பக்கத்தில் ஒட்டுக் கேட்கப்பட்ட உரையாடல்: “”இவங்கதான் என் மாமியார். வயசு அறுபதுக்கு மேலே ஆகிவிட்டது. வீட்டிலே இருக்கும்போதெல்லாம் “நொய் நொய்’னு ஒரே பிடுங்கல். நீங்களாவது கொஞ்சம் பார்த்து ஆபரேஷன் பண்ணுங்க டாக்டர். என்ன செலவானாலும் பரவாயில்லை!”

“”உம். புரியுது, புரியுது. முடிச்சுருவோம்!”

Posted in activism, Activist, Arrest, Christianity, dead, Death, discussion, Disease, Doctor, Euthanasia, Healthcare, Illness, Issue, Justice, Kevorkian, Law, Medicine, Murder, Order, Pain, physician, Raman Raja, Ramanraja, Religion, SNEHA, suffering, Suicide, US, USA, Will | Leave a Comment »