Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Offshoring’ Category

Orient-Express snubs Tata, says Indian tag tacky: Is India Bad for Jaguar?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�

எங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.

ஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.

நிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

உருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.

ஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.

ஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.

இன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.

இந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.

“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.

இப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.

இன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.

போர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

இத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.

எத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.

இவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.

மேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.

அறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.

அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.

பின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.

மற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.

இத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.

அண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.

அமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.

இப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன? இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா?

இது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.

கொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.

தமிழில்: ஜி. கணபதி

Posted in acquisition, Analysis, Arcelor, Auto, Automobile, Banks, Brand, Capitalization, Cars, CEO, Citi, CxO, Discrimination, Economy, England, Equity, Finance, Ford, Govt, Hotels, Image, India, Jaguar, Law, Luxury, M&A, Manufacture, Manufacturing, markets, Mergers, Mittal, MNC, NRI, Offshoring, Orient Express, Outsourcing, Private, Protection, Public, racism, Reverse, Rich, rules, Shares, Steel, Stocks, Supremacy, TATA, Tax, Wealthy, White | Leave a Comment »

Pavannnan – The divide between wealthy & needy

Posted by Snapjudge மேல் மே 23, 2007

இருவேறு உலகங்கள்

பாவண்ணன்

அதிகாலை நடை முடிந்து திரும்பும் தருணத்தில் வழக்கமாக என் கண்களில் படும் முதல் காட்சி கீரைக்கட்டுகளை விற்றுமுடித்த ஆண்களும் பெண்களும் ஊர்திரும்பும் உற்சாகத்தோடு கூடைகளுடன் நிற்கும் தோற்றமாகும்.

வாய்நிறைய வெற்றிலைச் சாறும் புகையிலையுமாக ஒரு மூதாட்டி எனக்காக எடுத்து வைத்திருந்த கீரைக்கட்டுகளைக் கொடுத்து வியாபாரத்தை முடித்துக்கொள்வது அதற்கடுத்த காட்சி.

ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து பார்வையில் தென்படும் இக்காட்சிகளில் இந்த ஒன்றிரண்டு மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. பலருடைய கீரைக்கட்டுகள் எடுத்துப் பார்க்க ஆளின்றிக் கூடைகளில் முடங்கிக் கிடக்கின்றன.

பிரித்து வைத்த கூறுகள் இளஞ்சூரியனின் ஒளியை உள்வாங்கி வாடத் தொடங்குகின்றன. விற்றது பாதி, விற்காதது பாதி என்கிற நிலை சிலருக்கு. காலையிலேயே தெரு உலாவைத் தொடங்கிவிட்ட நகரத்து மாடுகளின் பக்கம் அரைமனத்தோடு கீரைக்கட்டுகளை வீசிவிட்டு அவசரமாக ஊர் திரும்புகிறார்கள் சிலர்.

இந்த எல்லா மாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் காரணம் பணக்கார நிறுவனங்களால் குளிரூட்டப்பட்ட மாபெரும் கட்டடங்களில் அக்கம்பக்கத்தில் தொடங்கப்பட்ட சில்லறை வணிக விற்பனை.

பணக்கார நிறுவனங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த தொழிலை மிக எளிதாக இந்த நாட்டில் தொடங்கிவிட முடிகிறது. பெட்ரோல் முதல் தேங்காய் எண்ணெய் பாக்கெட் வரை அனைத்தையுமே அவை விற்று வருகின்றன.

இன்சூரன்ஸ் துறை முதல் தொலைபேசித் துறை வரை எல்லாத் துறைகளிலும் கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதையாக முன்னங்கால்களை ஊன்றிவைத்தாகிவிட்டது. உப்பையும் தண்ணீரையும்கூட விட்டுவைக்கவில்லை.

கோதுமை மாவு, கொழுப்பு அகற்றப்பட்ட எண்ணெய், விதவிதமான குழம்புகளுக்குத் தேவையான விதவிதமான மசாலாப் பொடிகள் எனப் பல சில்லறைப் பொருள்கள்கூட கடைகளில் கண்ணாடிப் பேழைகளிலும் தாங்கிகளிலும் விற்பனைக்காக அடுக்கப்பட்டுவிட்டன. இந்த வரிசையில் இப்போது கீரைக்கட்டுகளும் காய்கறிகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன.

காலம் முன்னகரும் வேகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பது உண்மை. மாற்றம் என்னும் காந்தம் குறிப்பிட்ட ஒருசில கூட்டத்தினரை மட்டுமே ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிற சக்தியாக மட்டுமே இயங்குகிறது என்பதுவும் உண்மை.

ஈர்க்கப்பட்டவர், ஈர்க்கப்படாதவர் என இருபெரும் பிரிவுகளாக உலகம் பிளவுபட்டுத் துண்டுகளாக மாறத் தொடங்கிவிட்டது என்பது மிகவும் கசப்பான உண்மை.

செக்கடிக்குச் சென்று எண்ணெய் வாங்கியது ஒரு காலம். பலசரக்குக் கடைகளில் எண்ணெய்யும் ஒரு விற்பனைச் சரக்காக இடம்பெறத் தொடங்கியது இன்னொரு காலம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருக்கிற காலம் இன்று.

உப்பு முதல் புளி வரையான பல பொருள்களின் விற்பனை முறைகள் உருமாறி உருமாறி இன்று வேறொரு விதமாக மாறிவிட்டன. காலந்தோறும் ஒவ்வொரு விற்பனை முறையும் மாற்றமடையும்போதெல்லாம் விற்பனைமுறைகளில் ஈடுபட்டிருந்தவர்களின் பிழைப்புக்கான வழியில்தான் முதல் அடி விழுகிறது. அந்த அடியின் வேகத்தில் பாதியளவினர் சிதறி வேறு வாழ்க்கை முறையைத் தேடிப் போகிறார்கள். மீதியுள்ளவர்கள் புதுமுறையின் நவீனப் பகுதிகளுக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக் கொண்டு மீண்டுமொரு வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்.

இன்றுவரை உருவாகிவந்த மாற்றங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கும் சில வசதிகளைப்போலவே இன்று உருவாகும் மாற்றத்திலும் சில வசதிகள் உள்ளதை மறுப்பதற்கில்லை. வேலைநேரம் என்பதே அடியோடு மாறிவிட்ட சூழலில் இருபத்திநாலு மணி நேரமும் இயங்க வேண்டிய நெருக்கடிகளில் சிக்கி நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் காலம் இப்போது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளைச் சேர்ந்த அலுவலகங்களின் கிளை அலுவலகங்களால் நிரம்பத் தொடங்கிவிட்டன இந்திய நகரங்கள். ஒன்பது அல்லது பத்து மணிக்குத் தொடங்கி ஐந்து அல்லது ஆறு மணிக்கு வீடு திரும்பிய சூழல் இப்போது இல்லை.

“”சிக்காகோவின் தெருக்களிலே சிந்திய ரத்தம் போதாதா?” என்னும் தொழிற்சங்க முழக்கங்கள் நினைவூட்டும் எட்டு மணி நேர வேலைத் திட்டம் இன்று கண் முன்னிலையிலேயே குளிரூட்டப்பட்ட அலுவலகச் சுவர்களிடையே சிதைந்து கொண்டிருக்கிறது. கசக்கிப் பிழிய ஆளில்லாமலேயே கசங்கிப் போகவும் மணிக்கணக்கில் கண் விழிக்கவும் பழகிவிட்ட இளந்தலைமுறையினரை இந்த அலுவலகங்கள் உருவாக்கிவிட்டன.

இன்றைய தனியார் வணிகத்தின் மாபெரும் இலக்கு இந்த இளந்தலைமுறை. மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள செருப்புமுதல் மூன்று ரூபாய் மதிப்புள்ள கீரைக்கட்டுவரை இனி எதை விற்றாலும் இவர்களை நோக்கிதான் விற்க வேண்டும்.

அகால நேரத்தில் வேலைக்குச் சென்று திரும்புகிற இந்தக் கூட்டத்தினருக்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க நேரமில்லை.

எல்லாமே ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டிய வசதியை எதிர்பார்க்கிறது அவர்கள் மனம். தேவையானவற்றையெல்லாம் அள்ளி ஒரு பெரும் உறையிலிட வேண்டும். எடுத்துச்செல்ல ஒரு வாகனமும் வேண்டும். அவ்வளவுதான். நாள்கணக்கில் பாதுகாக்க குளிர்அறைப்பெட்டி இருக்கும்வரை எக்கவலையும் இல்லை. பதப்படுத்தப்பட்ட கீரைக்கட்டுகள் குளிரூட்டப்பட்ட அடுக்குகளில் வைக்கப்பட்டு விற்கப்படுவது இவர்களுக்காகவே.

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ சில மாற்றங்கள் இவ்விதத்தில் மௌனமாக நிகழ்ந்தபடியேதான் உள்ளன. இந்த மாற்றங்களை இன்று சப்தம் போட்டு விளம்பரப்படுத்தும் ஊடகங்களின் பெருக்கத்தாலும் நிறுவனங்களின் குறைந்தவிலைத் தந்திரங்களாலும் இது ஏதோ ஒரு மாபெரும் புரட்சியாக உருப்பெருக்கிக் காட்டப்படுகிறது.

இந்த வியாபார அமைப்பு புதிய இளந்தலைமுறையினரையே பிரதான இலக்காகக் கொண்டதாக இருப்பினும் அந்த இலக்கில் விழும் இரையோடு மட்டுமே நிறைவடைய வியாபார நிறுவனங்கள் தயாராக இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒற்றை இலக்கை மட்டுமே அடைவதில் என்ன லாபம் என்னும் கணக்கால் உருவானதுதான் விலைக்குறைப்புத் தந்திரம்.

ஒரு பொருளுக்கு இரண்டு ரூபாய் என்பது அடக்கவிலையில் பாதிதான் என்பது வாங்குகிறவனுக்கே தெரிகிற நிலையில் விற்றுக்காட்டும் சாகசத்தில் நடுத்தட்டு மக்களையும் அடித்தட்டு மக்களையும் இரையாக்கி உண்ண விரும்பும் வேகமே வெளிப்படுகிறது. முந்தைய மாற்றங்களுக்கும் இன்றைய மாற்றத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது.

மலிவாகக் கிடைக்கிறவரை வாங்கி அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான் என்னும் நடுத்தட்டின் மனக்கணக்கு நிறுவனங்களுக்குப் புரியாத புதிரல்ல. வாங்குதல் என்னும் தற்செயல் நிகழ்ச்சி கைப்பழக்கமாகவும் மனப்பழக்கமாகவும் மெல்லமெல்ல மாறும்வரை இந்த மலிவுவிலை நாடகம் தொடரும்.

நாடகம் முடிந்து என்றாவது ஒருநாள் ஒரு கீரைக்கட்டு பத்து ரூபாய் என்று விலைத்தாள் தொங்கவிடப்படும்போது பிரதான இலக்கான இளந்தலைமுறைக்கு அது எவ்விதமான ஆச்சரியத்தையும் தரப்போவதில்லை. கடன் அட்டையில் பதியப்படும் எண்களைக் கவனிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

மூன்றுக்கும் பத்துக்குமான வேறுபாடு பொருள்படுத்தத் தேவையற்ற ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனநிலையைத் தொட்டுவிட்ட அவர்களுக்கு அந்த உயர்வு ஒரு விஷயமாகவே இருக்கப் போவதில்லை.

அதிர்ச்சியில் குலைந்து சொல்லிச்சொல்லி ஆதங்கப்படப்போவது நடுத்தட்டும் அடித்தட்டும் மட்டுமே. ரோஷத்தில் வெளியேறி மீண்டும் பழைய பழக்கத்தைத் தொடர ஒருபுறம் அவர்கள் மனம் இடம் தரலாம்.

ஆனால் இன்னொரு புறத்தில் பிழைப்பைத் தொடர முடியாத தள்ளுவண்டிக்காரர்களும் கூடைக்காரர்களும் பிழைப்புக்காக மாற்று வழியைக் கண்டறிந்தவர்களாக மாறிவிட்டிருப்பார்கள்.

விலை ஏறும்போது விலகிவிடலாம் என்று மாற்றுத் தந்திரத்தோடு இயங்கியவர்கள் இரண்டு பக்கங்களிலும் திகைப்பையே எதிர்கொள்ள நேரும்.

சூழல்களின் நெருக்கடிகளால் வணிகத்துறை நிர்ணயித்த இலக்குக்குக் கூடுதல் இரைகளாக இவர்களும் படிப்படியாக மாறக்கூடும்.

மாபெரும் சாகசமாக இந்த வணிகச் சாதனையைத் திரித்துக் காட்டும் ஊடகமே இன்னொரு திசையில் நிகழும் வேலை இழப்பை மாபெரும் வலியாக உருக்கமாகக் காட்டுகிறது.

சாகசம், உருக்கம் என்பன அனைத்தும் ஊடகங்கள் அவ்வப்போது அணியும் புனைவுகள். மண் மீது நிகழும் அனைத்தையும் தன் படக்காட்சிகளாக மாற்றிவிடத் துடிக்கிறது நவீன ஊடகம். உண்மையில் வணிகச்சாதனையால் உருவாகத் தொடங்கிவிட்ட சமூகவலி என்பது வேறு விதமானது.

தனியார் நிறுவனங்களின் கட்டற்ற பங்கேற்பு என்பது எவ்வித பேதங்களுமற்று எல்லாவிதத் துறைகளிலும் தன் அசுரக்கால்களை ஊன்றத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த உலகம் இரு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பது துல்லியமாகத் தெரியத் தொடங்கிவிட்டது.

இன்று பணமுள்ளவர்கள் உலகம் வேறு. பணமற்றவர்கள் உலகம் என்பது வேறு. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், களியாட்டக்கூடங்கள், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்கங்கள் எனச் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பணமுள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுவிட்ட பெரும்பட்டியலில் இன்னோர் அம்சமாக இன்று விற்பனை நிலையங்களும் சேர்ந்துவிட்டன.

Posted in Analysis, Backgrounder, Bangalored, Call Center, City, Commodity, Communism, Compensation, Consumer, Customer, Deflation, Divide, Economy, Education, Finance, GDP, Globalization, Healthcare, Hospitals, Inflation, InfoTech, Insights, IT, Jobs, Labor, Labour, Marxism, Media, Metro, MNC, Needy, Offshoring, Op-Ed, Outsourcing, Pavannnan, Poor, Prices, Private, Recession, Reliance, Reliance Fresh, Rich, Rural, Salary, Socialism, Spinach, Stagflation, Suburban, Union, Urban, Village, Wal-Mart, Walmart, Wealth, Wealthy, Work, Young, Youth | Leave a Comment »

ADB projects India’s growth to slow down to 8 pc

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்

டோக்கியோ, மார்ச் 28: பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் காரணமாக, நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகக் குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.

2008-ல் அது 8.3 சதவீதமாக இருக்கும் எனவும் ஆண்டறிக்கையில் அவ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

2006-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தது. அதிக அளவு மூலதன வரத்துக்கும், பணவீக்கத்துக்கும் இட்டுச் சென்றது. உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சி, (வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கும்) கடனுக்கான தேவையையும் அதிகரித்தது. இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சிக்கலாக்கியது. அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு முக்கிய காரணமாகும். இந்நிலையில் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் அமைப்பு ரீதியான சவாலாக உருவெடுத்துள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக நிலங்களை தொழில்துறைக்கு விற்கும் போக்கு அதிகரிக்கிறது. இது தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி மற்றும் சமூகக் கொந்தளிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தில் கட்டுமானத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையில் ஏற்பட்டுள்ள கொழிப்பு, 2005-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த உள்நாட்டு முதலீட்டை 33.8 சதவீதமாக உயர்த்தியது. இத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு ஈடாக வங்கிக் கடன் வழங்கும் வீதமும் வளர்ச்சியடைந்தது. இதனால் அதிகரித்த பணப்புழக்கம்தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதிப் பொருள்களுக்கு சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பெரும் பலனைத் தரவில்லை. எனவே செலாவணியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும்.

இப்படிச் செய்யும்போது, உற்பத்தித் திறன்களை அதிகரிக்கத் தேவையான கடன் வசதி குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியம். உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவது நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு இன்றியமையாதது என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.

=================================================

ரஷியாவுக்கு 2010-ல் ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு

மாஸ்கோ, ஏப். 2: ரஷிய நாட்டுக்கு ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமே 2010-ம் ஆண்டில் ஜவுளி ஏற்றுமதியில் ரூ.46,000 கோடி இலக்கை எட்டுவது.

ரஷிய ஜவுளித்துறை அதிகாரிகளுடன் பேச இந்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா இதற்காக மாஸ்கோ வந்திருக்கிறார்.

ரஷிய ஜவுளித்துறை நிபுணர்கள், இறக்குமதியாளர்கள், ஆடைத் தொழில் முன்னோடிகள், இந்திய வர்த்தக சமூகத்தவர் ஆகிய அனைத்து தரப்பு பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து இது தொடர்பாக விரிவான விவாதங்களை நடத்துவார்.

சோவியத் யூனியன் என்ற நாடு இருந்தபோது இந்தியாவிலிருந்துதான் அதிக ஜவுளி கொள்முதல் நடந்தது. அந்நாடு சிதறுண்டதாலும், உலகமயம் காரணமாகவும் இந்தியாவிலிருந்து ஜவுளி கொள்முதல் செய்வது குறைந்தது. இந்தியாவின் இடத்தை இப்போது சீனா பிடித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய சுய முயற்சியில் ரஷியாவுக்கு கணிசமான அளவுக்கு இப்போதும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்திய அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சலுகைகளை வழங்கினால் ரஷிய மக்களின் விருப்பத்துக்கேற்ற ஜவுளி வகைகளைத் தயாரித்துத் தருவது பெரிய காரியம் அல்ல என்று இந்திய வர்த்தக சமூகத்தவர் தெரிவிக்கின்றனர்.

அவர்களுடைய யோசனைகள் ஏற்கப்படுமா, இந்திய ஜவுளித்துறைக்குத் தேவைப்படும் மீட்சி, ரஷியா மூலம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

Posted in ADB, Agriculuture, Asian Development Bank, bank, Banking, Boom, Business, Bust, Clothes, Commerce, Commodities, Commodity, Deflation, Demand, Dress, Economy, Exports, Fabric, Finance, fiscal, Garments, GDP, Goal, Government, Growth, home buyers, Imports, Inflation, infrastructure, Interest, investors, Knits, Knitwear, Manufacturing, markets, Monetary, Offshoring, Outlook, Outsourcing, Prediction, Projection, Rates, RBI, Recession, Russia, service, Stagflation, Target, Textiles | Leave a Comment »