Posted by Snapjudge மேல் மே 27, 2007
வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத்தை மும்மூர்த்தியாக்கிய போஸ்டருக்கு எதிர்ப்பு
ஜோத்பூர் (ராஜஸ்தான்), மே 27: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், துணை பிரதமர் எல்.கே. அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை இந்து கடவுள்களாக, மும்மூர்த்திகளாக சித்திரித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஏப்ரல் 15-ம் தேதி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பிரம்மாவாக வாஜ்பாய், விஷ்ணுவாக அத்வானி, சிவனாக ராஜ்நாத் சிங்கையும் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவை இந்து கடவுள் அன்னபூரணியாகவும் சித்திரித்திருந்தனர்.
“ஜெய் அன்னபூர்ணி மகாராணி வசுந்தரா’
“ஜெய் அன்னபூர்ணி மகாராணி வசுந்தரா’ என்று சுவரொட்டிக்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.
மாநில மூத்த கேபினட் அமைச்சர் எல்.என். தவேயை குபேரனாகவும், மற்றொரு கேபினட் அமைச்சர் எச்.எஸ். குமாரியாவை இந்திரனாகவும், மற்ற அமைச்சர்களை தேவர்களாகவும், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களை பக்தர்களாகவும் சித்திரித்திருந்தனர்.
இந்த சுவரொட்டிகளை பாஜக தொண்டர் ஒருவரும் உள்ளூர் பூஜாரியும் தயாரித்தனர். ஜோத்பூர் பாஜக எம்எல்ஏ சூர்யகாந்த வியாஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இந்த சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும், இந்த சுவரொட்டிகளை அச்சடித்த அச்சக உரிமையாளர் மீதும் ஜஸ்வந்த் சிங்கின் மனைவி சீதள கன்வர் புகார் கொடுத்துள்ளார்.
“”அரசியல்வாதிகளை தெய்வங்களாக சித்திரித்து ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் மத உணர்வுகள் புண்படுகின்றன. ஆகவே புகாருக்குரிய அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“”புகாரை பெற்றுள்ளோம். ஆனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். கோதாரா இப்புகார் குறித்து பரிசீலித்து வருகிறார். அவருடைய பரிந்துரையின் பேரில் புகாரை பதிவு செய்வதா இல்லையா என்று முடிவு செய்யப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் எச்.எஸ். குமாரியா தெரிவித்தார். ஒரு மாதத்துக்கு முன் காங்கிரஸ் தொண்டர் ஒருவரும் இத்தகைய புகாரை கொடுத்துள்ளார். அதன்மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Posted in Advani, Annapurna, Banner, BJP, Brahma, CM, Congress, Devi, Hindu, Hinduism, Hindutva, Jaswant Singh, Jodhpur, L K Advani, Offensive, Party, Photoshop, Poster, Rajasthan, Rajnath, Rajnath Singh, Religion, RSS, Sheetal Kanwar, Shiva, Siva, Suryakanta Vyas, Vajpai, Vajpayee, Vasundhara Raje, Vishnu | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 7, 2007
புத்தகங்களையும் பத்திரிகைகளையும் தடை செய்ய அரசுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
புது தில்லி, மே 7: பொதுநலனைச் சீர்குலைக்கும் வகையில் உள்ள புத்தகம், பத்திரிகை ஆகியவற்றைத் தடை செய்யவும், பறிமுதல் செய்யவும் அரசுக்கு உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் பி.பி. சிங், எச்.எஸ். பேடி இந்த வழக்கை விசாரித்தனர்.
வழக்கு என்ன? கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பி.வி. நாராயணா என்பவர், “தர்மகாரணா” என்ற நாவலை எழுதியிருந்தார். அது கர்நாடகத்தில் 12-வது நூற்றாண்டில் வாழ்ந்த பசவேஸ்வரர் என்ற அவதார புருஷரைப் பற்றியது. பசவண்ணா என்றும் அவரை அழைப்பர். அதில் இருந்த சில பகுதிகள் பசவண்ணாவின் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து கர்நாடக அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95-வது பிரிவின் கீழ், அந்த புத்தகத்துக்கு தடை விதித்தது. நாராயணாவும் வேறு சிலரும் இந்தத் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அரசின் முடிவு சரியே என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. பிறகு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அரசியல் சட்டம் தங்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளான எழுத்துரிமை, கருத்து உரிமை ஆகியவை இத் தடையால் மறுக்கப்பட்டிருப்பதாக வாதிட்டனர்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: “தடை செய்யப்பட்ட புத்தகத்தைப் படித்துப் பார்த்தோம். தேவை இல்லாமலும், போதிய ஆதாரம் இல்லாமலும் சில விஷயங்கள் நாவலில் கூறப்பட்டுள்ளன.
தனி மனித உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்பது உண்மையே என்றாலும், பொது நலனை கட்டிக்காக்க வேண்டிய முக்கிய கடமையும் அதற்கு இருக்கிறது. எனவே பொது நலனை காப்பதற்காக, தனி நபர் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதும் தடுப்பதும் தவிர்க்க முடியாததாகிறது.
இந்த நாவலையே திருத்தி எழுதினால் வெளியிட அனுமதிக்கத் தயார் என்று கூறிய பிறகும், நாவலாசிரியர் செய்த மாற்றங்கள் வெறும் ஒப்புக்காகத்தான் என்பது புலனாகிறது. எனவே புத்தகத்துக்கு அரசு விதித்த தடை செல்லும்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
Posted in Akkanagamma, Ban, Basavana, Basavanna, Book, Censor, Channabasaveshwara, Court, Criminal, Culture, Dharmagaarana, Dharmakaarana, Dharmakarana, Freedom, Government, Govt, Judges, Jury, Justice, Kannada, Karnataka, Law, minority, Moral, Newspapers, offense, Offensive, Order, Police, Protest, publications, SC, Secular, Tharmagarana, Tharmakaarana, Tharmakarana, Values | Leave a Comment »