Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007
சென்னையில் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது
சென்னை, ஜூன் 3: சென்னையில் வரும் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என்று சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் (பணிகள் மற்றும் பராமரிப்பு) வி. சிவகுமரன் தெரிவித்தார்.
போதுமான நீர் கையிருப்பு உள்ளதால், தினமும் 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியது:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம் மற்றும் புழல் ஏரிகளில் 332 கோடி கன அடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 109 கோடி கன அடியும், வீராணம் ஏரியில் 42 கோடி கன அடியும் நீர் உள்ளது.
இவற்றைத் தவிர, தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதியிலிருந்து ஜூலை முதல் ஆகஸ்ட் வரை 8 டி.எம்.சி. நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் வரும் அக்டோபர் மாதம் வரை சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து வழங்கப்படும்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கடந்த ஏப்ரல் முதல் நாளொன்றுக்கு 11 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தேவைப்பட்டால் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் அளவாக உயர்த்தப்படும் என்றார்.
Posted in 2007, Aquafina, Boring pump, Bottled water, Chembarampakkam, Chennai, Cholavaram, Chozhavaram, Consumer, Customer, Dam, Dasani, Drink, Drinking, Expenses, Krishna, Lake, Land water, Liter, Litres, Lorry Water, Madras, October, Poondi, Pump Water, Pumping Station, Puzhal, River, Shortage, Spring water, Supply, Tap Water, Teleugu Ganga, TMC, TN, Water | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006
ஜெகத்ரட்சகனுக்கு பிரான்ஸ் கம்பன் கழக விருது
சென்னை, செப். 27: சென்னை கம்பன் கழகத் துணைத் தலைவர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு பிரான்ஸ் கம்பன் கழகம் சார்பில் ‘கம்பன் விருது வழங்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்கி வரும் இக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இம்மாதம் 30, அக்டோபர் 1 ஆகிய இரு நாள்களில் பாரிஸில் உள்ள சித்தி விநாயகர் ஆலய அரங்கில் இவ்விழா நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் சிறப்பாக இலக்கிய பணி ஆற்றி வருவோருக்கு இக்கழகம் அளிக்கும் கம்பன் விருது இவ்விழாவில் ஜெகத்ரட்சகனுக்கு வழங்கப்படுகிறது.
விழாவில் கருத்தரங்கம், வழக்காடு மன்றம், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை பிரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் செய்துள்ளார்.
Posted in Bharathidasan, Expatriates, France, French Thamizhs, Jegathratchagan, Kamban Kazhagam, October, Paris, Tamil, Tamil Meet, World Tamils | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006
தமிழ்நாட்டின் உள்ளாட்சித்தேர்தல்கள் அக்டோபர் 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறும்
 |
 |
தமிழகத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தபடும் |
தமிழ்நாட்டின் உள்ளாட்சித்தேர்தல்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் புதன்கிழமை துவங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதற்குள் இந்த தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கும் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் ஆளும் தி.மு.க.வின் வேட்பாளராக கவுஸ் பாட்சா நிறுத்தப்படுவதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். கவுஸ் பாட்சா தற்போது மதுரை மாநகராட்சி துணை மேயராக இருக்கிறார்.
இது இவ்வாறிருக்க, நேபாள நாட்டின் மாவோயிச இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான சந்தர பிரகாஷ் கஜுரெல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மேற்கு வங்க மாநில காவல்துறையினர் கைது செய்து தங்கள் மாநிலத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கஜுரெல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சென்னை பெருநகர மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Posted in ADMK, Bye Election, Council, DMK, Elections, Local Body, Madurai Central, Mayor, Nepal, October, Polls, Tamil, Tamil Nadu, West Bengal | 1 Comment »