Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Non-profit’ Category

Chennai Rotary & Worth Foundation – Initiatives for the Physically Disabled

Posted by Snapjudge மேல் மே 21, 2007

சேவை: வாழ நினைத்தால் வாழலாம்!

ரவிக்குமார்

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒüவையார். இப்படி அரிதான பிறப்பான மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சராசரியாக உடல் உறுப்பில் எந்தவிதமான ஊனமும் இல்லாமல் இருப்பவர்களே கல்வியைப் பெறுவதில், வேலை வாய்ப்பைப் பெறுவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், உடல் ஊனமுற்றவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக் குறியாகத்தானே இருக்கும்? ஆனால் இப்படி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கும் மையமாக சென்னை, அசோக்நகர், உதயம் திரையரங்கம் அருகே செயல்பட்டு வருகிறது, ஆர்.சி.எம்.சி.டி. -வொர்த் அறக்கட்டளை. சென்னை ரோட்டரி சங்கத்தோடு சென்னையில் இயங்கும் வொர்த் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து அதன் மேலாளர் என். வெங்கட்ராமன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

”வாழ நினைத்தால் வாழலாம் என்பதுதான் எங்கள் அறக்கட்டளையின் தாரக மந்திரமே. 1963-ல் சுவீடன் நாட்டின் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் புனர் வாழ்வுக்காக, காட்பாடியில் ‘சுவீடிஷ் ரெட் கிராஸ்’ என்னும் அமைப்பை ஏற்படுத்தினர். நாளடைவில் மருத்துவத் துறையின் வளர்ச்சியால், தொழுநோயின் தாக்கம் குறைந்த நிலையில், ‘வொர்த் அறக்கட்டளை’ என்னும் பெயரில் தமிழகத்தில் இருப்பவர்களைக் கொண்டே ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். இதுதான் ‘வொர்த் அறக்கட்டளை’யின் ஆரம்பகால வரலாறு.

உடல் ஊனமுற்றவர்களுக்கான இலவச தொழிற்பயிற்சியை காட்பாடி, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய மூன்று இடங்களில் வழங்குகிறது எங்களின் அறக்கட்டளை. உடல் ஊனமுற்றிருந்து பத்தாவது தேறியிருக்கும் எவரும் இந்தத் தொழிற்பயிற்சியைப் பெறலாம். ஒவ்வோராண்டும் ஜுன், ஜூலை மாதங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தங்கும் வசதியுடன் அளிக்கப்படும் இந்தப் பயிற்சிகளைத் தகுந்த முறையில் படித்து தேர்வாகும் மாணவர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ் அளிக்கப்படும்.

டர்னர் பயிற்சி மூன்று மையங்களிலும், மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பயிற்சிகள் காட்பாடியிலும், வெல்டர் பயிற்சி திருச்சியிலும், பிரத்யேகமாக எங்களால் வழங்கப்படும் கம்ப்யூட்டர் மற்றும் செக்ரட்டரி கோர்ஸ்கள் காட்பாடி, பாண்டிச்சேரி மையங்களிலும் பயிற்சியளிக்கப்படுகின்றன.

சென்னையில் செயல்படும் மையத்தில் பிளஸ் டூ வரை படித்த மாணவர்களுக்கு எம்.எஸ்-ஆபிஸ், டேலி போன்ற கணிப்பொறிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து, கணிப்பொறி பயிற்சிகள் அடங்கிய செயலருக்கான பயிற்சிகள், தையல் பயிற்சிகள், பார்வையற்றவர்களுக்கான சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஊக்கத் தொகையும் அளிக்கிறோம்.

எங்கள் அறக்கட்டளையின் சார்பாக திருச்சியில் ஒன்று, பாண்டிச்சேரியில் ஒன்று, காட்பாடியில் மூன்று என ஐந்து புரொடக்ஷன் யூனிட்கள் இயங்குகின்றன. எங்களிடம் பயிற்சி பெற்ற பலரே இங்கு (ஏறக்குறைய 200 பேர்) பணியிலிருக்கின்றனர். டி.வி.எஸ்., ரானே மெட்ராஸ், ஈ.ஐ.டி.பாரி போன்ற தொழிற்சாலைகளிலிருந்து எங்களுக்கு அவர்களின் தயாரிப்புகளுக்குப் பயன்படும் சில உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் ஆர்டர்கள் தொடர்ந்து கிடைக்கும். பிளாஸ்டிக் மோல்டிங்கைப் பயன்படுத்தி செய்யும் பல வேலைகளையும் பல தொழிற்சாலைகளுக்காகச் செய்து வருகிறோம்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பெர்கின்ஸ் பிளைன்ட் ஸ்கூல் தயாரிக்கும் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி டைப்ரைட்டர் உலகம் முழுவதும் பிரசித்தம். பெர்கின்ஸ் டைப்ரைட்டருக்கான உதிரி பாகங்களை எங்களுக்குக் கப்பலில் அனுப்பிவிடுவார்கள். அந்தப் பாகங்களை ஒன்றிணைத்து டைப்ரட்டராக நாங்கள் அவர்களுக்கு ரீ-எக்ஸ்போர்ட் செய்வோம். மாதத்திற்குச் சராசரியாக 2000 டைப்ரைட்டர்களை இப்படி உருவாக்குகிறோம். இங்கு உருவாகும் இத்தகைய பிரெய்லி டைப்ரைட்டர்களை இறுதிக்கட்ட பரிசோதனை செய்வது இங்கிருக்கும் பார்வையற்றவர்கள்தான். இங்கு உருவாகும் பிரெய்லி டைப்ரைட்டர்களை 9500 ரூபாய்க்குக் கொடுக்கிறோம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு எலக்ட்ரிக் மீட்டர்களைத் தயாரித்துத் தருவது பெங்களூரிலிருக்கும் ‘பெல்’ நிறுவனம். இப்படி தயாரித்துத் தரும் மீட்டர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை பெல் நிறுவனத்துக்காக நாங்கள் சரிபார்த்துத் தரும் பொறுப்பை ஏற்றிருக்கிறோம். எங்களிடம் ஜெனரல் எலக்ட்ரானிக்ஸில் பயிற்சி பெற்றவர்களே இந்தப் பணியைச் செய்கின்றனர்.

இதைத் தவிர, உலக அளவில் பார்வையற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரெய்லி ஸ்லேட், அபாகஸ், ஜியாமட்ரி பாக்ஸ்… உள்ளிட்ட 13 பொருட்களைக் கொண்ட ‘யூனிவர்ஸல் பிரெய்ல் கிட்’ ஒன்றையும் 350 ரூபாய் விலைக்குத் தருகிறோம்.

காது கேளாத, வாய் பேசமுடியாதவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ‘டிரான்ஸிஷனல் ஸ்கூல்’ ஒன்றை இலவசமாகக் காட்பாடியில் இயக்குகிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வி அறிவையும் தொழில்பயிற்சிகளையும் அளிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் பிரெய்லி முறையில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழிலேயே படிப்பதால், வேலை வாய்ப்புகளில் ஆங்கிலம் தெரியாததால் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கும் தகுந்த பயிற்சிகளை அளிக்கிறோம். உடல் ஊனத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். அவர்களை உங்களை விட மன ரீதியாக உறுதியானவர்களாக மாற்றிக் காட்டுகிறோம்!” என்றார் என். வெங்கட்ராமன்.

ஒவ்வொரு யூனிட்டாகச் சுற்றிப்பார்த்தோம். கம்ப்யூட்டர் யூனிட்டை கடக்க இருந்த நம்மை… மறுபடியும் யூனிட்டை உற்றுப்பார்க்க வைத்தார் ஓர் இளம்பெண். காரணம்… அவர் கம்ப்யூட்டரின் ‘மெüசை’க் ‘க்ளிக்’கிக் கொண்டிருந்தது கைகளால் அல்ல… கால்களால்!

”எகனாமிக்ஸில் எம்.ஃபில், வரை முடித்துவிட்டேன். கல்லூரியில் விரிவுரையாளராக வேண்டும் என்பதுதான் லட்சியம். லட்சியத்திற்காகப் போராடுவது ஒருபக்கம் இருந்தாலும், இங்கே வந்து கம்ப்யூட்டரும் தெரிஞ்சிக்கிட்டேன்… டெய்லரிங்கும் தெரிஞ்சிக்கிட்டேன். எது எப்ப கை.. ஸôரி, கால் கொடுக்கும்னு யாருக்குத் தெரியும்?” என்றார் பளிச்சென்று உமா மகேஸ்வரி.

– ‘வொர்த்’ அறக்கட்டளைக்கு இந்த ஓர் உதாரணம் போதுமே!

Posted in Blind, Chennai, deaf, Disabled, Dumb, Education, Handicapped, Madras, Mentally Challenged, NGO, Non-profit, Nonprofit, Physcially Challenged, RCMCD, RCMCT, Red Cross, Rotary, Training, Worth | Leave a Comment »

Neeraja Chowdhury – Encouraging signs by 5 new MPs: Lok Saba Politics

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007

புதிய பாதை காட்டும் 5 இளம் எம்.பி.க்கள்!

நீரஜா செüத்ரி

அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்று “”கோரம்” மணி ஒலிக்கிறது; நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் உறுப்பினர்களை உள்ளே வருமாறு கூவிக்கொண்டே, அழைத்துச் செல்ல நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சர் பரபரப்பாக ஓடி வருகிறார்.

காபியை குடித்துக் கொண்டும், சாம்பாரில் ஊறிய வடையை ஸ்பூனில் எடுத்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டும் உறுப்பினர்கள், நாட்டு நடப்பு குறித்து தங்களுக்குள் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

  • “”இந்த அர்ஜுன் சிங்குக்கு எதையாவது செய்து பேப்பரில் பெயர் வரவழைப்பதே வேலை” என்கிறார் ஒருவர்,
  • “”நீதிமன்றங்கள் வரம்போடு இருக்க வேண்டும்பா” என்கிறார் மற்றொருவர்.
  • “”இந்த மூக்குக் கண்ணாடி வெளிநாட்டில் வாங்கியதா?” என்று அக்கறையோடு விசாரிக்கிறார் மற்றொருவர்.
  • ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் பற்றி இத்தனை சந்தடிக்கிடையிலும் ஒருவர் கிசுகிசுக்கிறார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சராக பிரமோத் மகாஜன் இருந்த காலத்திலிருந்தே இதுதான் மைய மண்டபக் காட்சி. முக்கியமான விவாதங்களின்போதுகூட உள்ளே இருக்க பல உறுப்பினர்கள் விரும்புவதில்லை.

இந்தப் பின்னணியில்தான் அந்த 5 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சிப் பரவசத்தையும் ஏற்படுத்தியது. பொழுது விடிந்தும் விடியாத காலை நேரத்தில் 5 இளம் எம்.பி.க்கள் வியர்க்க விறுவிறுக்க கைகளில் பெட்டிகளுடன் புது தில்லி ரயில் நிலையத்துக்கு ஓடி வருகின்றனர். ரயில் புறப்படுவதற்கு முன்னதாக வந்துவிட்டதை உறுதி செய்துகொண்டு நிம்மதியாக ஆசுவாசப்படுகின்றனர்.

வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்த 5 பேரும் அதிகாலையிலேயே ரயிலைப் பிடிக்க வந்திருப்பதற்குக் காரணம் அரசியல் அல்ல, அவர்களுடைய தொகுதிப் பிரச்சினையும் அல்ல. அதைத் தெரிந்து கொண்டபோதுதான், கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகளைப் பின்பற்றி செய்தி சேகரிக்கும் எனக்கு பூரிப்பு ஏற்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில், குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைவுக்குக் காரணம் என்ன? அரசின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் எந்த அளவுக்குப் பயன் தருகிறது? அதை வெற்றியடைய வைக்க என்ன செய்யலாம் என்று நேரில் அறிந்துவரத்தான் அவர்கள் இப்படி ஒன்றாகக் கிளம்பிவிட்டனர்.

காங்கிரஸ், பாரதீய ஜனதா என்று எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அவர்கள்.

காலை 6.15 மணிக்குப் புறப்படும் குவாலியர் “சதாப்தி’ எக்ஸ்பிரûஸப் பிடிக்க காலை 5.45-க்கு வரவேண்டும் என்று தீர்மானித்த

  1. சச்சின் பைலட்,
  2. சுப்ரியா சுலே,
  3. ஷாநவாஸ் உசைன்,
  4. ஜெய பாண்டா,
  5. பிரேமா கரியப்பா என்ற அந்த 5 பேரும் 5.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டனர். முதல் வகுப்பில் இலவசமாகவே செல்லலாம் என்றாலும் குளிர்பதன வசதியுடன் கூடிய “சேர்-கார்’ வகுப்பிலேயே அமர்ந்து கொண்டனர். அவர்களுடன் கஜல் பாடகர் பினாஸ் மசானி, நடிகர் கெüர் கர்ணிக் ஆகியோரும் மும்பையிலிருந்து வந்து சேர்ந்து கொண்டனர்.

“”ஊட்டச்சத்து குறைவுக்கு எதிரான மக்கள் கூட்டணி” என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு இப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நம் நாட்டில் 3 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேர் ரத்த சோகை நோயால் அவதிப்படுகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் 60 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் காணப்படுகிறது. முதலில் பாஜக ஆளும் மாநிலத்துக்குப் போனாலும் அடுத்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரம், அடுத்து பாஜக-பிஜு ஜனதா தளம் ஆளும் ஒரிசா என்று எல்லா மாநிலங்களுக்கும் செல்ல இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

குறைகளைக் கண்டுபிடித்து அதை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தாமல், அரசுக்கு நல்ல யோசனைகளைக் கூறுவதே இவர்கள் நோக்கம். மகாராஷ்டிரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்களுடன் சேர்ந்து இதில் செயல்பட ஆரம்பித்ததால் நல்ல பலன்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

சதாப்தி எக்ஸ்பிரஸ் குவாலியரை அடைந்ததும் ரயில் நிலையத்தில் திரண்ட காங்கிரஸ் இளைஞர்கள் பட்டாளம் ஒன்று, “”சச்சின் பைலட் வாழ்க” என்று விண் அதிர கோஷமிட்டது. தருமசங்கடத்தில் நெளிந்த பைலட், அவர்களைக் கையமர்த்தி, “”அரசியல் விஷயமாக நான் இங்கே வரவில்லை, என் பின்னால் வராதீர்கள்” என்று அடக்கமாகக் கூறிவிட்டு, பாஜகவின் ஷாநவாஸ் உசைனை அருகில் அழைத்து அணைத்தபடி நின்றார். தொண்டர்கள் அதைப் புரிந்துகொண்டு உற்சாகமாக கை அசைத்து விடை பெற்றனர்.

கலிங்க நகர், சிங்குர், நந்திகிராமம், விவசாயிகளின் தற்கொலை என்று பத்திரிகைகளில் அடிபடும் செய்திகள் அனைத்துமே, “”நாட்டில் வளர்ச்சி இருந்தாலும் அது சமத்துவமாக இல்லை” என்பதையே காட்டுகிறது. இந்தியாவின் குழந்தைகளில் சரிபாதி ரத்த சோகையுடன் இருந்தால் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?

ஐந்து இளம் எம்.பி.க்கள் சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இது முதல் அடிதான். இவர்களுடைய ஒற்றுமையும், லட்சியமும் மேலும் வலுவடைந்து, இது மாபெரும் இயக்கமாக மாறுமா, மாரத்தான் ஓட்டமாக உருவெடுக்குமா, இவர்களுக்கு அதற்குண்டான தெம்பு இருக்குமா என்பதெல்லாம் காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.

ஆனால் இந்த முயற்சி, நம் அனைவராலும் மனமாரப் பாராட்டப்பட வேண்டியது என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழில்: சாரி.

Posted in Anganvadi, Appearance, Assembly, Biju Janata Dal, BJD, BJP, Children, Congress, Delhi, Female, Field, Food, Gwalior, Hygiene, Janata Dal, Jaya Panda, Kariappa, Kid, Lok Saba, Madhya Pradesh, maharashtra, Malnutrition, MP, NCP, Neeraja, Neeraja Chowdhury, New Delhi, NGO, Non-profit, Nutrition, Orissa, Panda, parliament, pilot, Politics, Pramod, Pramod Mahajan, Prema Kariyappa, Promotion, Sachin Pilot, Shanavaz, Shanawaz Hussein, Shatabdi, Shupriya Sule, Tour, Trip, Women | 1 Comment »

LTTE air power threat to entire South Asian region

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

வானில் எழுந்த புதிய கவலை

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இலங்கையில் புதிய போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது.

இதுநாள் வரையிலும் தரைவழி, கடல்வழி பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் அனைத்து உயர் அதிகார மையங்களும், இனி வானத்தையும் உற்றுப் பார்த்தாக வேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவத்தை நிலப்பரப்பில் எதிர்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் வசமிருந்த பல நகரங்கள், கிராமங்களை இலங்கை ராணுவம் தனது ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டது. இதனால் வான் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

2001-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பாதிக்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததைப் போன்ற சேதம் இப்போது நடைபெறவில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டாலும் இது முதல் தாக்குதல்; அதுவும் இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்; இந்தத் தாக்குதல் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் தற்கொலைப்படையினர் வான் புலிகளிலும் இருப்பார்கள். இலங்கை எத்தனை பாதுகாப்பு வளையங்களை அமைத்தாலும் தற்கொலை விமானிகளைத் தடுப்பது அரிது. அல்-காய்தா விமானிகள் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதியதைப் போல, வான்புலிகளும் இலங்கையின் எந்த அலுவலகத்தையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க முடியும்.

இலங்கையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை மூன்றையும் தாக்கும் திறன் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தீவிரமாகத் தாக்கத் தொடங்கும். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

விமானத்துக்குத் தேவையான அலுமினியம் மற்றும் உதிரி பாகங்களை புலிகள் தொடர்ந்து கடத்தி வந்து, போர் விமானங்களை வடிவமைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக விமான ஓடுபாதை அமைத்துள்ளனர். இதை எப்படி இலங்கை உளவுத் துறை அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

விடுதலைப் புலிகளிடம் தற்போது எத்தனை விமானங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விமானங்களை நவீன கருவிகள் மூலம் தொலைவிலேயே கண்காணித்து சுட்டு வீழ்த்தும் நவீன, செலவுமிக்க போர்முறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

புலிகளுக்கு போர் விமானம் தயாரிக்கவும், விமானத்தை இயக்கவும் யார் உதவினார்கள் என்பது இலங்கையின் தலைவலி என்றாலும், அதைவிட பெரிய தலைவலியும் இக்கட்டான நிலைமையும் இந்தியாவுக்குத்தான் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நவீன ரக விமானங்களை இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கும். இலங்கை விமானப் படையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதனால் அனைவருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்க இலங்கை அரசு கேட்கும். இதைச் செய்தால் இந்தியாவுக்குள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் எழும்.

புலிகள் தங்கள் தாக்குதலை நடத்தும்போது இந்திய வான் எல்லைக்குள்ளும் பறக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்திய எல்லைக்குள் நுழையும் ஒரு போர் விமானத்தை தாக்குவதா, வேண்டாமா என்பதிலும் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.

விமானம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள விடுதலைப் புலிகளிடம் ஹெலிகாப்டர்களும் இனி இடம் பெறக்கூடும். தமிழகக் கடலோரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து தங்களுக்கான பொருள்களை எடுத்துச் செல்லும் சம்பவங்களும் இனி நடைபெறலாம். தமிழகக் கடலோரம் கடற்படை ரோந்துகளை அதிகரித்ததைப் போலவே விமானப் படையையும் தமிழகக் கடலோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உருவாகும்.

=====================================================

மிரட்டிப் பணம் பறித்ததாக பிரான்ஸில் 17 புலிகள் கைது?

பாரீஸ், ஏப். 2: தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்காக பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக 17 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 பேரும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடுப்பு நீதிபதி ஜீன்-லூயிஸ் புரூஜியரின் உத்தரவின் பேரில் போலீஸôர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிரான்ஸில் வசிக்கும் தமிழர் குடும்பங்கள் இந்த அமைப்புக்கு தலா ரூ. 1.21 லட்சம் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும். அதேபோல் அங்கு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கட்டாயமாக நிதி வசூலித்துத் தருவோர் தங்களது கமிஷனாக 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. நிதி வழங்க மறுக்கும் குடும்பத்தினர் கடத்தப்படுவர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸில் 70 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

================================================
கேட்டுப் பெற முடியும்

இலங்கையில் மூன்றாவது முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் சேதமுற்ற இரண்டு எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்று இந்திய-இலங்கை கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இலங்கை அரசும் பெட்ரோல் விநியோக நிறுவனத்தை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. இதில் லங்கா ஐஓசிக்கு (இலங்கையில் செயல்படும் ஐஓசி நிறுவனத்தின் பெயர்) 33 சதவீத பங்கு உள்ளது. இந்திய அதிகாரிகளும் இதில் பணியாற்றுகின்றனர். பெட்ரோல் விநியோகத்தை இலங்கை அரசின் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.

கொலநோவா எண்ணெய்க் கிடங்கானது இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்துக்குரியது என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மேலும், புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் குறிப்பிடும்போது, “”ராணுவத் தீர்வையே இலங்கை அரசு நாடுகிறது. அதனால் வேறு வழியின்றி இலங்கை விமானப் படைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இரு எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் செய்வதால் இந்திய கூட்டு நிறுவனமாக இருந்தாலும் தாக்குவார்கள் என்றால், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவியோ அல்லது வேறு ராணுவப் பயிற்சியோ அளித்தால் இந்தியாவையும் தாக்குவார்களா?

விடுதலைப் புலிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றன என்பதுதான் இலங்கையின் புகார். அதற்காக, இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா?

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய அடுத்த நாளே, கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரைக் கொன்றவர்கள் கடல்புலிகள் என்று காவல்துறைத் தலைவர் முகர்ஜி கூறினார். “விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கொண்டு சென்றநேரத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் உளவு பார்க்க வந்ததாகக் கருதி தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இந்த விளக்கமானது, ஆயுதக் கடத்தல் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான ராமேஸ்வரத்திலிருந்து தெற்கு கடற்கரைக்கு மாறியுள்ளது என்பதையும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப்போல உள்ளது.

கடல்புலிகளின் பாதுகாப்பில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் பிடித்திருந்தால் இந்திய அரசு தலையிட முடியும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இந்திய அரசு எப்படி பேசும்? அப்படிப் பேசினால் மீனவர்களுக்கு ஈடாக புலிகள் எதைக் கேட்பார்கள்?

12 மீனவர்களை மீட்கும் ஒரே வழி தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் “தமிழக மீனவர்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்பதுடன், கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று சொல்வதுதான்.

ஏனென்றால், புலிகளின் வான் தாக்குதல்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்ததுடன், போதுமான ஆயுதங்களோ, படைப் பயிற்சியோ இல்லாமல் திண்டாடும் இலங்கை அரசு நிச்சயமாக இந்தியாவின் உதவியை நாடும். இந்தியா ஆயுத உதவியை அளித்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமே. தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது.

Posted in air crafts, Air Force, Arrests, Attack, Commission, Contribution, defence, Defense, Donation, Extortion, Foreign, France, French, Funds, Interpol, Katunayake, kickbacks, Law, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Mahinda Rajapaksa, Military, Navy, Non-profit, Order, Paris, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, separatist, South Asia, Sri lanka, Srilanka, Suicide, terror, Terrorism, terrorist, Vanni, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Wanni | 5 Comments »

Divya prem sewa mission gets Madhya Pradesh’s Mahatma Gandhi Award

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

2006-07-க்கான மகாத்மா காந்தி விருது: ம. பிரதேசம் அறிவிப்பு

போபால், ஜன. 17: உத்தரப் பிரதேசம் ஹரித்துவாரை மையமாகக் கொண்டு இயங்கும் திவ்யா பிரேம் சேவா மையத்துக்கு மத்தியப் பிரதேச அரசின் 2006-07-க்கான மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் கல்வி மற்றும் தொழுநோயாளிகளுக்காக இந்த அமைப்பு செய்துவரும் செயற்கரிய மனிதநேய சேவைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவை இந்த விருதில் அடங்கும்.

இத்தகவலை மத்தியப் பிரதேச கலாசார அமைச்சர் லக்ஷ்மிகாந்த் ஷர்மா போபாலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Posted in Ashish gautam, Award, Child Education, Child Welfare, Culture Minister, Divya prem seva, Divya prem sewa mission, Donate, Education, Healthcare, India, Lakshmikanth Sharma, Leper, Madhya Pradesh, MP, NGO, Non-profit, Prize, service, Utharanchal, Uttaranchal, Volunteer | Leave a Comment »