கொதிப்பு!
“வேட்டையாடு விளையாடு’ படத்தில் அரவாணிகளை கேவலப்படுத்தியிருப்பதாக ஒட்டுமொத்த அரவாணி இனமே கொதித்து நிற்கிறது. மேலும், வழக்கறிஞர் வித்யா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். அரவாணியான இவர், இனி, அரவாணிகளை மீடியாவினர் கொச்சைப்படுத்துவதை தடை விதிக்க வேண்டும். அது மட்டுமின்றி, அரவாணிகளை இனி, “திருநங்கை‘ என்று அழைக்க வேண்டும்!’ என்றும் வாதாடி வருகிறார்.
* * *
விரிசல்!
தெலுங்கு ஸ்டாலினை முடித்து விட்டு இந்திக்கு செல்லவிருந்த ஏ.ஆர்.முருகதாஸை மடக்கி விட்டார் நடிகர் சூர்யா… “இன்னொரு “கஜினி’ கொடுப்போம். என்ன செலவானாலும் நானே ஏத்துக் கொள்கிறேன்…’ என்று தன் அடுத்த தயாரிப்பை தொடங்கி விட்டார். அது மட்டுமின்றி, தான் ஏற்கனவே நடிக்க ஒத்துக் கொண்டிருந்த, “சர்வம்‘ படத்தில் இருந்தும் விலகி விட்டார் சூர்யா. இதனால், திரைக்குப் பின்னால் டைரக்டர் விஷ்ணுவர்தனுக்கும், சூர்யாவுக்குமிடையே விரிசல் விழுந்துள்ளது.
— சினிமா பொன்னையா.
* * *
வெளிச்சத்துக்கு வரும் வீரப்பன் உண்மைகள்!
“சந்தன கடத்தல்’ வீரப்பன் கதையை படமாக்கியுள்ளார் “சயனைடு’ பட இயக்குனர் ரமேஷ். ஏற்கனவே, வீரப்பனின் கதையை பல டைரக்டர்கள். கிண்டி, கிளறி விட்டதால், வேர் போன்று இன்னும் வெளிச்சத்துக்கு வராத பல மர்ம முடிச்சுகளை இவர் அவிழ்க்கப் போகிறார். அதன் பொருட்டு தற்போது வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் உதவியை நாடியிருக்கிறார் ரமேஷ்.