Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘NCERT’ Category

Amitabh Bachan gets into the NCERT Social Sciences Textbook

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த அமிதாப்

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் புகழின் உச்சமாக தற்போது பாடப்புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டார். அவர் நடித்த `தீவார்'(தமிழிலில் ரஜினி நடிக்க “தீ” என்ற பெயரில் வெளியானது) படத்தில் ஒரு காட்சி.

ஷூ பாலீஷ் போட்டு பிழைப்பு நடத்தி வரும் சிறு வயது அமிதாபிடம் ஷூ பாலீஸ் போடுவதற்காக வில்லன் கோஷ்டியினர் இருவர் வருவார்கள். ஷூபாலீஸ் போட்டு முடிந்ததும் அதற்குரிய நாணயத்தை கையில் கொடுக்காமல் தூக்கி ஏறிவார்கள்.

தன்னை அவமானப்படுத்து கிறார்கள் என்று கோபமடையும் அந்த சிறுவன் “துட்ட எடுத்து கையில் கொடுத்துட்டு” போய்யா என்பான் “சின்ன வயதிலேயே உனக்கு இவ்வளவு திமிரா” என்று வில்லன்களில் ஒருவர் அடிக்கப்பாய மற்றொருவரோ அவரைத் தடுத்து கையில் காசை எடுத்து, கையில் கொடுத்துவிட்டுப் போவார்.

சற்று தொலைவில் சென்றதும் “இந்த பையன் வருங்காலத்துல பெரிய ஆளா வருவான் பாறேன்” என்பார்.

தனிமனித சுயகவுரவத்தை யாரும் எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் இந்த காட்சி அதை கருத்தை வலியுறுத்துவதற்காக சமீபத்தில் வெளியான என்.சி.ஆர்.டி. சமூக அறிவியல் பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. ஒரு பாடமாக இந்த காட்சி விளக்கப் பட்டுள்ளது. தீவார் படத்தில் அமிதாப் பச்சனின் ஸ்டில் ஒன்றும் அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் வாழும் காலத்திலேயே பாடப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் என்ற பெயர் அமிதாப்புக்கு கிடைத்துள்ளது.

சினிமா காட்சிகளின் மூலம் வாழ்க்கைத் தத்துவங் களை விளக்க மேலும் பல சிறந்த படங்களின் சிறந்த காட்சிகளை பாடப்புத்தகங்களில் பாடமாக வைக்கவும் என்.சி.ஆர்.டி. முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி பரிசீலிக்கப்படும் படங்களில் அமீர்கானின் “லகானும்” ஒன்று. சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தபடம் தலைமைப்பண்பின் சிறப்பை விளக்குவதற்காக பாடமாக வைக்க பரிசீலிக்கப் பட்டு வருகிறது.

ஹிருத்திக்ரோஷன், ஷாருக்கான் போன்ற தற்கால இளைஞர்களின் உள்ளங்களை அதிக அளவில் கொள்ளை கொண்ட நடிகர்களையும், பாடபுத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வடஇந்திய மாணவர்களிடையே எழுந்துள்ளது.

Posted in Aamer, Aamir, Aamir Khan, AamirKhan, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Bachan, Bollywood, Caste, Cinema, class, Dalit, Dignity, Education, Hindi, Khan, Kollywood, Lagaan, Lagan, Lessons, Movies, NCERT, Oppressed, Rajini, Respect, School, Social Sciences, Students, Study, Textbook | Leave a Comment »

Sakshat – Pilot portal project by HRD for Educational Needs

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006

இலவச கல்வி இணையதளம்: தில்லியில் கலாம் தொடங்கி வைத்தார்

புதுதில்லி, அக். 31: மாணவர்களின் கல்வித் தேவைகள் அனைத்தையும் ஓரே குடையின் கீழ் வழங்கும், ஒருங்கிணைந்த இலவச இணைய தளத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முயற்சியில் உருவாகியுள்ள இந்த இணைய தளத்துக்கு “சாட்சாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தில்லியில் நடந்த இந்த விழாவில் கலாம் பேசியது:

நம் நாட்டில் இத்தகைய இணைய தளம் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை. இம்முயற்சி வெற்றிபெற வேண்டுமானால், மக்களுக்கு இன்டர்நெர் இணைப்பு இலவசமாகக் கிடைக்கவேண்டும்.

நாட்டில் கல்வி கற்பிக்கப்படும் முறையை மாற்றி அமைப்பதற்காக தொடக்க முயற்சி இது. இந்த இணைய தளத்தின் உள்ளடக்கத்தை பல்கலைக் கழக மானியக் குழு, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகம், அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் போன்ற கல்வி அமைப்புகள் உருவாக்கியுள்ளன.

21-ம் நூற்றாண்டின் அறிவு சார் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நன்கு படித்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் நாட்டுக்குத் தேவைப்படுகின்றனர். அவர்கள் கல்வி பெற உதவுவதோடு, சர்வதேச அளவில் போட்டியிட உதவும் தொழில் திறனையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது குறித்தும் சாட்சாத் சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

Posted in AICTE, APJ Abdul Kalam, CBSE, digital library, digital repository, e-books, Education, HRD, Human Resources, IGNOU, IISc, IIT, NCERT, portal, Sakshat, UGC | Leave a Comment »

Bala Gangadhar Thilak, Aravinda Ghosh & Bipin Chandra Termed as Terrorists

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 18, 2006

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களில் திலகரை பயங்கரவாதி என குறிப்பிடுவதா? மாநிலங்களவையில் எம்.பி.க்கள் கண்டனம்

புது தில்லி, ஆக. 19: தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள பாட நூல்களில் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை “பயங்கரவாதி’ எனக் குறிப்பிட்டு இருப்பதற்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் அரவிந்த கோஷ், பிபின் சந்திரா ஆகியோரையும் “”பயங்கரவாதிகள்” என்று அந்த நூலில் குறிப்பிட்டுள்ளனர் என்று எம்.பி.க்கள் சுட்டிக்காட்டினர்.

ஜாட் சமுதாயத்தினரை “கொள்ளையர்கள்’ எனக் குறிப்பிட்டு இருப்பதற்கும் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சமாஜவாதி கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பி.க்களும் அதைக் கண்டித்துப் பேசினர். ஆனால், அதை அரசியலாக்க வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

“”இது மிகவும் முக்கியமான பிரச்சினை. உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், இது குறித்து விசாரணை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் சுரேஷ் பச்செüரி உறுதி அளித்தார்.

எப்படி இந்தத் தவறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாஜக தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் கூடியதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, அவையில் அமளி ஏற்பட்டது.

பாஜக உறுப்பினர் ரவி சங்கர் பிரசாத் தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள பாட நூல்களை உயர்த்திப் பிடித்தபடி, “”இந்தப் புத்தகத்தில் அநாகரிகமான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

மாணவர்களின் இளம் உள்ளங்களில் இவை நஞ்சை விதைத்துவிடும். சுதந்திரப் போராட்ட தியாகிகளை “பயங்கரவாதிகள்’ என இந்தப் புத்தகத்தில் வர்ணித்துள்ளனர்” என்று குறிப்பிட்டனர்.

என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள “நவீன இந்தியா’ என்ற நூலில் அவை இடம்பெற்றுள்ளதாக அவர்கள் கூறியதுடன், அதை அவையில் தாக்கல் செய்ய அனுமதி கோரினர். ஆனால், அவைக்கு அப்போது தலைமை வகித்த, துணைத் தலைவர் கே. ரஹ்மான் கான், “”அவை விதிகளில் அதற்கு இடமில்லை” என்று அதற்கு அனுமதி தர மறுத்தார்.

இருந்தபோதிலும், அவையின் மையப் பகுதியில் கூடிய பாஜகவினர், அந்தப் புத்தகத்தின் பிரதிகளை அவைத் தலைவர் மேசையின் மீது வைத்தனர்.

மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங், அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.யான முரளி மனோகர் ஜோஷி வலியுறுத்தினார்.

அதையடுத்து, அவை உறுப்பினர்களின் உணர்வுகளை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் எடுத்துக் கூறுவதாக அமைச்சர் சுரேஷ் பச்செüரி உறுதி கூறினார்.

Posted in Aravinda Ghosh, Bipin Chandra, Curriculum, India, Jaat, NCERT, School, Tamil, Terrorists, Textbooks, Thilak | Leave a Comment »