Archive for the ‘Nayan Thara’ Category
Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007
நயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்
வல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.
கெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
நயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.
எனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி
சினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.
சிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.
ஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.
Posted in Actor, Actress, Cinema, Director, DJ, Films, Gossip, Heroine, Intro, Introduction, Kettavan, Kiss, Kisukisu, Lega, Leka, Love, Manmadhan, Manmathan, Media, Movies, MSM, music, Nandhu, Nanthu, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Rajendar, Rajender, Rajenthar, Rajenther, Rumor, Rumour, Sensational, Sensationalism, Silambarasan, Simbu, SS Music, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thamizh, Thamizh Film, Thamizh Movies, Thamizh padam, TR, Vallavan, Vambu, Vampu | 3 Comments »
Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007
`சிம்புவுடன் நடிக்க மாட்டேன்’ : நடிகை பாவனா அறிவிப்பு
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதையடுத்து வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். தற்போது பரத்துடன் கூடல் நகர், மாதவனுடன் ஆர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாவனா நடிகர் சிம்புவுடன் நடிக்க மாட்டேன் என்ற பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
சிம்புவுடன் நான் நடிக்கப்போவதாக அவர் பத்திரிகைகளில் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன். சிம்புவுக்கு இப்போது மக்கள் மத்தியில் நல்ல இமேஜ் இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு வரை சிம்புவுக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் இப்போது இன்டர்நெட்டில் சிம்பு, நயன்தாராவுக்கு முத்தமழை கொடுக்கும் படம் வந்ததோடு சிம்புவின் இமேஜ் மிகவும் குறைந்து விட்டது. கெட்ட பெயர் சம்பாதிப்பது மிகவும் சுலபம். ஆனால் அந்த கெட்ட பெயரை நல்ல பெயராக மாற்றுவது ரொம்ப கஷ்டம்.
சென்னை செல்லும்போது என்னை வந்து பாருங்கள். கதையை கேளுங்கள் என சிம்பு கூறி இருந்தார். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். காரணம் எனது பெயரை நான் கெடுத்துக்கொள்ள விரும்ப வில்லை.
தமிழில் சித்திரம்பேசுதடி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தொடர்ந்து ஆர்யா படத்திலும் நடித்து வருகிறேன். அந்த படத்தில் எனது உடம்போடு ஒட்டியபடி இருக்கும் பனியன் டிரெஸ் அணியவேண்டும் என டைரக்டர் சொன்னார். ஆனால் அதற்கு நான் மறுத்து விட்டேன்.
எனக்கு கவர்ச்சியில் விருப்பம் இல்லை. நடிப்பில் தான் நாட்டம். அசின் போன்றவர்கள் நம்பர் ஒன்னாக மாறியது கவர்ச்சியை காட்டி இல்லையே. நடிகை சந்தியா எனது நெருங்கிய தோழி. பரத் இரட்டை வேடங்களில் நடிக்கும் கூடல் நகர் படத்திலும் நான் நடித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Posted in Bavna, Bawna, Bhavna, Bhavnaa, Bhawna, Bhawnaa, Exploitation, Female, Kiss, Manmathan, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Rajendar, Silambarasan, Simbu, T Rajendar, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Theater, Tamil Theatres, TamilNadu, TR, Vallavan | 3 Comments »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007
தேடி வந்த சிம்பு: தவிர்த்த நயன்தாரா
சென்னை, பிப். 15: ஹைதராபாத்திற்கு தன்னை பார்க்க வந்த சிம்புவை பார்க்காமல் இருக்க படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு கேரளா சென்றார் நயன்தாரா.
நடிகர் சிலம்பரசனுக்கும் நயன்தாராவுக்கும் வல்லவன் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காதல் படம் வெளியாகி நூறு நாளை தொடுவதற்குள் முறிந்து விட்டது. தற்போது தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் கவனம் செலுத்தும் நயன்தாரா ‘துளசி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்புவுடன் நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வந்தது. இது நயன்தாராவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வதந்தி பரவியது. ஆனால் வதந்தி வந்த போது அவர் படப்பிடிப்பில் இருந்தார்.
இந்நிலையில் காதலர் தினத்திற்கு முதல்நாள் சிம்பு நயன்தாராவை தேடி ஹைதராபாத் சென்றார். சிம்பு வந்திருக்கும் செய்தி அறிந்து பார்க்க மறுக்க, நயன்தாரா தங்கியிருக்கும் ஓட்டலுக்கே சென்று காத்திருந்தார் சிம்பு. ஆனால் நயன்தாராவோ படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு கேரளா பறந்து விட்டார்.
சிம்புவை தவிர்ப்பதற்கே நயன்தாரா கேரளா சென்று விட்டதாக தெலுங்கு திரையுலகத்தில் பேசப்படுகிறது. ஆனால் நயன்தாரா இது பற்றி கூறும் போது ”தமிழ் ரசிகர்களிடம் எனக்கு இருக்கும் மதிப்பை கெடுக்க ஒரு சிலர் சதி செய்கிறார்கள். என்னோட குடும்பத்தாருடன் சந்தோஷமாக இருக்கவே கேரளா வந்துள்ளேன். என்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.” என்றார்.
சிம்புவோ ”நயன்தாராவை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அமெரிக்காவிலிருந்து வந்த உடன் போயிருப்பேன். இப்போது ஹைதராபாத் சென்று பார்க்க வேன்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றார்.
Posted in Heroine, Intimate, Kisu Kisu, Kollywood, Love, Manmadhan, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Pictures, Rejection, Rumour, Silambarasan, Simbhu, Simbu, Suicide Attempt, Tamil Actors, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil Stars, Telugu, Tollywood, Tualsi, Valentines Day, Vallavan, Vambu | 2 Comments »
Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006
`கதறி அழுதேன், கத்தியால் கிழித்தேன் என்று களங்கப்படுத்துவதா?’ நடிகர் சிம்புவுக்கு நயன்தாரா கண்டனம்
நயன்தாராவும், சிம்புவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஒன்றாக சுற்றினார்கள். விரைவில் திருமணம் செய் வார்கள் என்றும் பேசப்பட்டது.
ஆனால் திடீரென்று காதல் முறிந்தது. இருவரும் பிரிந்து விட்டதாக நயன்தாரா கூறினார். சிம்புவுக்கு நயன் தாரா முடிவு அதிர்ச்சி அளித்தது.
அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வரும் அவர் இதுபற்றி கூறுகையில், “நயன்தாராவிடம் இரண்டு முறை பேச முயற்சித் தேன். முடியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்தார். நீ இல்லை என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று கையை கிழித்துக் கொண்டதையும் கட்டிப்பிடித்து கதறியதையும் நயன்தாரா வேண்டுமானால் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை என்றும் சிம்பு கூறினார்.
ஐதராபாத்தில் படப்பிடிப் பில் இருக்கும் நயன்தாராவிடம் மாலைமலர் நிருபர் இன்று செல்போனில் தொடர்பு கொண்டு சிம்பு பேட்டி குறித்து கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-
சிம்பு பேட்டி பற்றி செல் போனில் என்னிடம் தெரி வித்தனர். அவரைப் போல் நானும் நிறைய விஷயம் சொல்லலாம். ஆனால் சொல்ல விரும்பவில்லை.
சிம்புவும் நானும் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். இது தவிர அவருக்கு எதிராக அவமரியாதையான வார்த்தை எதையும் கூறவில்லை.
அவருடன் பழகியதால் பட வாய்ப்புகள் குறைந்தது என்று நான் சொன்னதாக கூறியுள்ளார். அப்படி நான் சொல்லவே இல்லை. அவராக அப்படி நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது.
தேவை என்றால் நானும் அழுது இருக்கலாம். அவர் அப்படி செஞ்சிருக்கார் இப்படி பேசியிருக்கார் என்று பத்திரிகைகளில் சொல்லி இருக்கலாம். அது மாதிரி சொல்லவே இல்லை. சிம்பு வும் நீங்களும் பிரிந்து விட்டீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். ஆமாம் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன்.
பிரிவதற்கு நிறைய விஷ யங்கள் இருக்கிறது. அதை யெல்லாம் சொல்வது மரியாதை அல்ல என்று கருதி னேன். இன்று அவர் என்ன வெல்லாமோ சொல்லி இருக் கிறார். நானும் அது போல் மரியாதையை விட்டு பேச மாட்டேன்.
நானும் அவரும் என் னென்ன பேசினோம் எங்கள் இருவருக்குள்ளும் என்னென்ன நடந்தது என்பதை பொது ஜனங்களுக்கு தெரிவிக்க அவசியம் இல்லை.
இருவரும் சேர்ந்து நடித் தோம். பழகினோம். பிரிந் தோம். பிரிவதற்கு 1001 கார ணம் இருக்கலாம். ஒவ்வொன் றையும் சொல்ல முடியாது.
நான் கதறி அழுதேன். கத்தியால் கையை கீறிக் கொண்டேன் என்று சிம்பு கூறியுள்ளார். அவரைப் பற்றி சொல்லவும் என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது.
இருவர் காதலிக்கும் போது நல்ல விஷயங்களும் நடக்கும். சண்டையும் நடக்கும். அது எனக்கும் சிம்புவுக்கும் உள்ள விஷயம். கத்தியால் கிழித்து இருக்கலாம் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். அவற்றை வெளிப் படுத்துவது நாகரீகமாகாது.
சிம்புவை பிரிந்ததற்கு 1000 பேர் காரணம் கேட்டனர். நான் ஒரு பொண்ணு. ஒரு பொண்ணு சொன்னால் நம்புவார்கள். எல்லாவற்றையும் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல் லாமல் தவிர்த்தேன். அதுதான் எனக்குள்ள மரியாதை.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
சிம்பு மீது நயன்தாரா பாய்ச்சல்
சென்னை, பிப். 9: நடிகை நயன்தாராவும் நடிகர் சிம்புவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியானதால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “சிம்புதான் இதை வெளியிட்டிருப்பார்; அவரது தவறான புத்தியை இது வெளிப்படுத்துகிறது“ என நயன்தாரா கூறியிருக்கிறார்.
Ôவல்லவன்Õ படத்தில் நடிக்கும்போது சிம்புவும் நயன்தாராவும் நெருக்கமாக பழகினர். அதில் ஒரு முத்தக்காட்சியிலும் நடித்தனர். வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் வல்லவன் படம் வெளியான சில நாட்களில் அவர்களுக்குள் மன வேறுபாடு ஏற்பட்டது.
Ôசிம்புவுடன் உறவு முறிந்தது. இனி அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்Õ என்று நவம்பர் மாதம் நயன்தாரா ஒரு பேட்டியில் அறிவித்தார். அப்போது அமெரிக்கா சென்றிருந்த சிம்பு, சென்னை திரும்பியதும், Ôஇனி நயன்தாரா வாழ¢க்கையில் குறுக்கிடமாட்டேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்கÕ என்றார்.
இந்த முறிவுப் பிரகடனம் முடிந்து ஒரு மாதமான நிலையில் இப்போது இன்டர்நெட்டில் இந்த நட்சத்திர ஜோடியின் அன்னியோன்யமான படங்கள் வெளியாகியுள்ளன. இருவரும் கன்னத்துடன் கன்னம் வைத்து சிரிப்பது போலவும், இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவது போலவும் படங்கள் உள்ளன.
இது குறித்து கேட்க சிம்புவை தொடர்பு கொண்டபோது அவர் மொபைலை எடுக்கவில்லை. அவரது தந்தை டி.ராஜேந்தர், Ôபோலிப் படங்களை நிஜம்போல காட்டும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லைÕ என்றார்.
நயன்தாரா கூறியதாவது:
சிம்பு எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொண்ட பிறகுதான் அவரை விட்டு விலகினேன். இருவரும் பழகியபோது அடிக்கடி என்னை போட்டோ எடுப்பார். பேப்பர் படிப்பது போல, பல் துலக்குவது போல, சோபாவில் அமர்ந்திருப்பது போல என்று பல கோணங்களில் படங்கள் எடுத்திருக்கிறார். அதையெல்லாம் அவ்வப்போது அழித்துவிட்டதாக கூறுவார்.
அது பொய் என்று இப்போது தெரிகிறது. அவர்தான் இந்த படங்களை வெளியிட்டிருக்க முடியும். முத்தம் போட்டோ எங்கே எப்போது எடுத்தார் என்று தெரியவில்லை. ஒரு பெண் என்றும் பாராமல் என் படத்தை இப்படி உலவ விட்டிருப்பது அவரது தவறான புத்தியை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
Posted in Allegation, Camera, Cellphone, Gossip, Hotel, Kiss, Manmadhan, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Photos, Pictures, Room, Rumor, Rumour, Sex, Silambarasan, Simbhu, Simbu, T Rajendar, T Rajendhar, Tamil Cinema, Tamil Movies, Usha Rajenthar, Vallavan, Vijaya T Rajendar | 12 Comments »
Posted by Snapjudge மேல் நவம்பர் 9, 2006
`சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவது ஏன்?- நயன்தாரா பேட்டி
தீபாவளிக்கு ரிலீசான மூன்று படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார். தொடர்ந்து அவரது மார்க்கெட் ஏறுமுகத்திலேயே உள்ளது. தமிழில் மட்டுமல்லாத பிற மொழிகளிலும் கலக்கி வரும் நயன்தாரா முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் `சிவாஜி’யில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறார். அது ஏன்? இந்த பேட்டியில் அவரே விளக்குகிறார்.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது என்னை கவனித்த சத்யன் அதிகாடு மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து கடந்த இரண்டரை வருடமாக மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளை கற்றுத் தேர்ந்தேன். அது இப்போது பல மொழிகளில் நடிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கிறது.
இதுவரை
- 5 மலையாளம்,
- 8 தமிழ்,
- 2 தெலுங்கு
என 15 படங்களில் நடித்தாயிற்று.
நான் நடித்த எல்லாபடங்களும் சிறந்தவைதான் என்றாலும் எனக்கு ரொம்பப்பிடித்தது வல்லவன். அந்த படத்தில் என்னுடைய வேடம், படத்தை சிம்பு இயக்கியிருந்த விதமும் வல்லவன் எனக்கு மிகவும் பிடித்துப்போகக் காரணங்கள்.
இதுவரை என்னை எல்லோரும் ஹோம்லியான வேடங்களிலேயே நடிக்க வைத்தார்கள். ஆனால் வல்லவனில் முதன் முதலாக புதுவித உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. வித்தியாசமான அந்த வேடம் ஆபாசம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.
கிசு கிசுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதுபற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடையாது. அவற்றை உடனே மறந்துவிடுவேன்.
சிவாஜியில் ஒரு பாடலுக்கு தோன்றி நடனமாடுவதற்கு சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது.
- முதலாவதாக இது சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.
- இரண்டாவது சந்திரமுகியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது.
- மூன்றாவதாக இதை சங்கர் இயக்குவது. கடந்த தீபாவளி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். காரணம் அன்று நான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாயின.
மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அதில் படம் முழுக்க 4 சேலைதான் காஸ்டிïம். அழுக்கான ஆடை, மேக்கப் இல்லாத தோற்றம் என படு யதார்த்தமான வேடம் அது. இந்த படத்தில் நடிப்பதில் மிகவும் சந்தோஷம். காரணம் என்னால் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க முடியும், மாறுபட்ட படங்களிலும் நடிக்க முடியும் என்பதை காட்டு வதற்கு இது நல்ல வாய்ப்பு.
நேரம் இல்லாததால் டப்பிங் பேச முடியவில்லை. ஆர்ட் படங்களில் நடிப்பதற்கு எனக்கு ஆர்வம் அதிகம். இந்த வேடத்திற்கு நமக்கு விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாகத் தோன்றினால் அந்த படத்திற்கு நிச்சயம் டப்பிங் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Posted in Chandramukhi, Interview, Malayalam, Nayan Thara, nayandhara, Rajini, Rajniganth, Shankar, Shivaji, Silambarasan, Simbu, Sivaji the Boss, Tamil Film, Tamil Movies, Telugu, Tollywood, Vallavan | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006
“வல்லவன்’ படம் என்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தும்: சிம்பு
சென்னை, அக்.20: “வல்லவன்’ படம் என்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு இயக்கி நடிக்கும் “வல்லவன்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த சூழ்நிலையில் தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
படத்தை நீண்ட நாள்கள் இழுத்து எனக்கு அதிக செலவை ஏற்படுத்திவிட்டார் என்று தயாரிப்பாளரும், பேசியபடி எனக்கு சம்பளம் தரவில்லை என்று சிம்புவும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தனர். பின்னர் சமாதானம் செய்யப்பட்டு படம் வெளிவருவது உறுதிசெய்யப்பட்டது.
இதுகுறித்து நடிகர் சிம்பு வியாழக்கிழமை கூறியதாவது:
“வல்லவன்’ படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக சிறிது கால தாமதம் எடுத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் இந்த காலகட்டத்தில் நான் வேறு படங்களில் நடித்திருந்தால் இன்னும் நிறைய சம்பாதித்திருக்க முடியும்.
இந்தப் படத்துக்காக நான், என்னுடைய சம்பளத்தில் பாதிதான் கேட்டேன்.
இயக்குநர் சம்பளமாக படம் வியாபாரமாகும் தொகையில் 15 சதவிகிதமும், மற்ற படங்களில் நடிக்காததால் ஏற்பட்ட இழப்புக்கு சென்னை விநியோக உரிமையும் கேட்டிருந்தேன்.
இதற்கெல்லாம் சம்மதித்த தயாரிப்பாளர் இப்போது நஷ்டம் என்கிறார். படம் நல்ல விலைக்கு வியாபாரமாகியிருக்கிறது. எப்படி பார்த்தாலும் எனக்கு ஒரு கோடி சம்பளம் தர வேண்டும்.
படம் வெளிவர வேண்டும் என்பதற்காக இயக்குநர் சம்பளம் ஒரு கோடி, நடிகர் சம்பள பாக்கி 60 லட்சம் இவை இரண்டையும் வேண்டாம் என்று சொல்லி சென்னை விநியோக உரிமையை மட்டும் பெற்றுக்கொண்டேன். இதுதான் நடந்தது.
நான் விட்டுக்கொடுத்ததற்குக் காரணம் என்னால் இதை விட அதிகம் சம்பாதிக்க முடியும். ஒரு படத்தை இயக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்கும் அளவுக்கு “வல்லவன்’ படம் என்னை உயர்த்தும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.
தயாரிப்பாளர் தேனப்பன் மீது எனக்கு வருத்தமோ, கோபமோ கிடையாது என்றார் சிம்பு.
Posted in Actor salary, Cinema, Compensation, deal, Deepavali Movies, Director, Distribution, Distributor, Diwali Cinema, Nayan Thara, release, rights, Silambarasan, Simbu, Tamil Movies, Thamizh Film, Thenappan, Vallavan | Leave a Comment »