Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Nationalist’ Category

Maoists kill 18 in Jharkhand village: Giridih Massacre

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

தவறான பாதை; தவறான பார்வை

பிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.

மலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.

9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று? இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

இதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.

இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.

அப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

ஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்!

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.

Posted in Andhra, AP, Babulal, Bandh, Bihar, carbines, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, Chikadia, Chikhadia, CRPF, Divide, Errabore, Extortion, Extremism, Extremist, Extremists, Gaya, Giridhi, Giridhih, Giridi, Giridih, Girithi, Girithih, Jamui, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, JMM, JVM, Madhu Koda, MadhuKoda, Mahato, Maoists, Marandi, Metro, MP, Nation, National, National Games, Nationalisation, Nationalism, Nationalist, Nationalists, Nationality, Nationalization, Nations, Native, Native Folks, Natives, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Nepal, Nithish, Nitish, Nitish Kumar, Nitish Kumar Singh, NitishKumar, Nunulal, Nunulal Marandi, Poor, Rich, Rural, SC, SLR, SLRs, ST, Sunil Kumar Mahato, SunilKumar Mahato, Telengana, Telugu, Telugu (తెలుగు), Telugu Desam, Telungana, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists, Tribals, victims, Villages, Violence | Leave a Comment »

Tamil Nationalist Movement leader P. Nedumaran and Supporters of Freedom for Tamil Eelam Coordination Committee members stopped

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

மனிதாபிமானம் மடிந்துவிட்டதா?

இலங்கைத் தமிழர்களுக்கு உதவி வழங்க பொருள்களுடன் படகில் புறப்பட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்களிடமிருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் வியப்பை அளிக்கவில்லை. உதவிப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு இதுதான் வழி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இலங்கைவாழ் தமிழர் பிரச்னையில் பாராமுகமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு யதார்த்த நிலைமையைப் புரியவைப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை என்பதால், இந்த முயற்சியை நாம் ஓர் அடையாளப் போராட்டமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசு நமக்கு நட்பு அரசு என்றும், நாம் இலங்கை அரசைப் பகைத்துக்கொண்டால் இன்னோர் அண்டை நாடு நமக்கு எதிராளியாகிவிடும் என்றும் நமது வெளியுறவுத் துறையினர் கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. பண்டாரநாயகே காலத்திலிருந்தே இலங்கை அரசு எந்தவொரு விஷயத்திலும் இந்தியாவுக்கு ஆதரவு நாடாக இருந்ததில்லை. உலகச் சந்தையில் ரப்பர் மற்றும் தேயிலையில் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாகவும் போட்டி நாடாக மட்டுமே இலங்கை தொடர்ந்திருக்கிறது. அதனால், இலங்கையின் நட்பு தேவை என்பதற்காக எல்லா விஷயங்களிலும் நாம் மௌனம் காக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தென் ஆசியாவில் மக்கள்தொகை அடிப்படையிலும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ பலத்தின்படியும் இந்தியாதான் வல்லரசு என்கிற ஞானோதயம் நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்குமே இல்லை எனும்போது நமது வெளிவிவகாரக் கொள்கை எப்படித் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும்? இந்திராகாந்தியிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும், தைரியமும் அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களிடம் காணாமல்போனதன் விளைவுதான் இப்போது உதவிப்பொருள்களைப் பாதிக்கப்பட்ட வடஇலங்கை மக்களுக்கு அனுப்ப முடியாத அவலநிலைக்குக் காரணம்.

வெளிவிவகாரக் கொள்கையை விட்டுவிடுவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் மனிதாபிமானம் கூடவா இந்தியாவுக்கு இல்லாமல் போய்விட்டது என்று சரித்திரமும், நாளைய சந்ததியும் நம்மை எள்ளி நகையாடுமே என்று சிந்தித்துப் பார்க்கக்கூடவா நம்மால் முடியாமல் போய்விட்டது? 1957-ல் இலங்கையில் வெள்ளச்சேதம் ஏற்பட்டபோது, உடனடியாக உதவிப்பொருள்களை அனுப்பி வைத்த அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவையும் 1987-ல் இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்டு ஆதரவற்றிருந்த யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு, இலங்கை அரசிடம் அனுமதி பெறாமலே உணவுப் பொட்டலங்களையும் உதவிகளையும் விமானம் மூலம் அனுப்ப உதவிய அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனையும் இன்று பதவியில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பசி, பட்டினி என்கிற கூக்குரல்கள் யாழ்வாழ் மக்களிடமிருந்து எழுகின்றன. சப்தம் கேட்கிறது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இலங்கை அரசு சொல்கிறது. அங்கே பிரச்னையே இல்லை என்கிறது சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம். அது என்ன என்று மனிதாபிமான அடிப்படையில் கேட்கக்கூட ஆள் இல்லை. சரி, உணவுப்பொருள்கள், மருந்துகளும் சேகரிக்கப்பட்டுவிட்டன. அதை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொண்டு சேர்க்க அரசு உதவுகிறதா என்றால் அதுவுமில்லை. அதுதான் ஏன் என்று புரியவும் இல்லை.

தமிழ் உணர்வும், தமிழினத்தின் மீது அக்கறையும் இல்லாதவர்கள் பதவியில் இருப்பதால்தான் இந்த நிலைமை என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனிதாபிமான அடிப்படையில்கூட செயல்பட முடியாத நிலையில்தானா மத்தியிலும் மாநிலத்திலும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்? தட்டிக்கேட்க வேண்டியவர்கள் கைகட்டி நிற்கும் நிலைமை வந்தால், நெஞ்சு பொறுக்குதில்லையே…

Posted in Arms, Democracy, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eezam, Eezham, Fight, Food, Freedom, Health, Help, Independence, Leader, Liberation, LTTE, Medicines, Nation, Nationalism, Nationalist, Nedumaaran, Nedumaran, Netumaran, Republic, Srilanka, Tamil, UN, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Weapons | 2 Comments »

Fake encounter: Modi may use case to polarise gujarat voters – The Moral Highs of India’s “Cultural Nationalists”

Posted by Snapjudge மேல் மே 3, 2007

வேலியே பயிரை மேய்ந்தால்…

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இப்போது மீண்டும் அனைவராலும் பேசப்படக் காரணம் – போலி என்கவுன்ட்டர்.

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதீன் மனைவி கசூர் பீவி “எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்’ என்று குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

99 சதவீத என்கவுன்ட்டர்கள் போலியானவை என்பது “சூரியன் உதிக்கும் திசை கிழக்கு’ என்பதைப்போல அனைவருக்கும் தெரிந்த உண்மை. சில சம்பவங்களில் மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலும்- போலி என்கவுன்ட்டர் என்பது நிரூபிக்கப்பட்டதில்லை. கொல்லப்பட்டவர் பலராலும் அறியப்பட்ட ரெüடி என்பதும், அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்ற உண்மையும் காவல்துறைக்குச் சாதகமானவையாக அமைந்துவிடுகின்றன.

இப்போதும்கூட, போலி என்கவுன்ட்டரில் சோராபுதீன் சுட்டுக்கொல்லப்பட்டது பெரிய அளவில் பேசப்படவில்லை. அவர் மனைவி கசூர் பீவி கொலைதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சோராபுதீன் மீது பல குற்றவழக்குகள் உள்ளன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பெரும்பணக்காரர்களிடம் மிரட்டிப் பணம் பெற்றதாக இவர் மீது ஆதாரங்களுடன் வழக்குகள் உள்ளன. ஆனால், அவர் ரெüடி என்பதற்காக சுட்டுக் கொல்லப்படவில்லை. குஜராத் முதல்வரை கொலை செய்யும் திட்டம் வைத்திருந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி என்று 2005 நவம்பரில் கைது செய்யப்பட்டு, பிறகு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

அவருடன் பயணம் செய்துகொண்டிருந்த மனைவி கசூர் பீவியைக் காணவில்லை என்று தொடுக்கப்பட்ட வழக்கில், தற்போது அவர் கொல்லப்பட்டிருப்பதாக குஜராத் அரசு சொல்கிறது.

இந்த போலி என்கவுன்ட்டர் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் கசூர் பீவி கொல்லப்பட்டது நிரூபிக்கப்படலாம் அல்லது முடியாமலும் போகலாம். ஆனால் சோராபுதீனை என்கவுன்ட்டரில் கொல்லக் காரணம் என்ன? எந்த உண்மையை மூடி மறைக்க இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும் தீர விசாரித்தால், பல உண்மைகள் தெரியவரும்.

கசூர் பீவி போலி என்கவுன்ட்டருக்கு சாட்சியாக இருந்ததால் அவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற வாதம் மேம்போக்கானது. என்கவுன்ட்டர் தொடர்பான எதிர்வழக்குகளில் யாருமே வெற்றி பெறவில்லை என்பதால், கசூர் பீவியின் சாட்சி காவல்துறைக்குப் பெரிய விஷயமே இல்லை. எந்த ரகசியங்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக என்கவுன்ட்டரில் சோராபுதீன் கொல்லப்பட்டாரோ அந்த ரகசியங்கள் கசூர் பீவிக்கும் தெரிந்திருக்கக் கூடும்.

போலி என்கவுன்ட்டர்களுக்கு காரணம், பிடிபடும் நபர் வாயைத் திறந்தால் வேறு சில “தேவையில்லாத’ உண்மைகள் வெளியே வரும்; அந்த உண்மையின் வெளிச்சத்தில் பல முக்கியப் பிரமுகர்களின் மெய்த்தோற்றம் தெரியவரும் என்பதால் நிரந்தரமாக வாயடைக்கும் வேலைதான் என்கவுன்ட்டர்.

கொல்லப்படுபவர் ஒரு சமூக விரோதியாக இருப்பதால், என்கவுன்ட்டர் ஒரு சூரசம்ஹாரம் என்பதுபோல மாறிவிடுகிறது. போலீஸ் அதிகாரி நாயகனாகி விடுகிறார். அவருக்கு விருதுகள்கூட கிடைக்கின்றன.

மும்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயா நாயக் என்பவர் 83 ரவுடிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றவர். வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்ததாக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இவரது வாழ்க்கை, பல திரைப்படங்களாக பல மொழிகளில் வந்துள்ளது.

காக்கிச் சட்டையில் போலீஸôகவும், அதைக் கழற்றினால் ரெüடியாகவும் மாறுவது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். நிஜ வாழ்க்கையில் நிலை மாறக்கூடாது.

Posted in abuse, Ayodhya, CD, communal, Court, Cultural, Encounter, Fake, fascist, Gujarat, Hindu, Islam, Law, Modi, Moral, Mosque, Muslim, Nationalist, Nationalists, NDA, Op-Ed, Opinion, Order, Police, Religion, Right, Right-wing, RSS, Society, UP, UPA, Uttar Pradesh, Vote, voters | 2 Comments »