Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Narayanamurthy’ Category

Padma Vibhushan for Pranab, Ratan Tata, Sachin; no Bharat Ratna for seventh year

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008

பிரணாப், டாடா, டெண்டுல்கருக்கு பத்மவிபூஷண் விருது

சென்ற வருடம்: Padma Vibooshan, Padma Bhooshan, Padmashree awards announced « Tamil News: “பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்; கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது”

  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ,
  • கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,
  • தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
  • லட்சுமி மித்தல்,
  • இன்ஃபோசிஸ் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி

உள்ளிட்ட 13 பேர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  • பத்ம பூஷண் விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 35 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 71 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா’ விருதுக்கு எவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“பாரத ரத்னா’ விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அளிக்கலாம் என எல்.கே. அத்வானி பரிந்துரைத்து கடிதம் எழுதினார். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜோதிபாசுவுக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தங்கள் கட்சித் தலைவர் கான்சி ராமுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கர் மற்றும் பிஸ்மில்லா கானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சராக உள்ள ஒருவர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பத்மவிபூஷண் விருது பெறுவோர்:

  • மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி,
  • தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
  • லட்சுமி மித்தல்,
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி,
  • ஹோட்டல் அதிபர் பிஆர்எஸ் ஓபராய்,
  • சுற்றுச் சூழல் ஆர்வலர் ஆர்.கே. பச்செüரி,
  • தில்லி மெட்ரோ ரயில் தலைவர் இ. ஸ்ரீதரன்,
  • உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த்,
  • பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே,
  • கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்,
  • டெண்டுல்கர்,
  • இந்திரா காந்தியின் முதன்மைச் செயலராக பணியாற்றிய பி.என். தர்.

எவரெஸ்ட் சிகரத்தை முதலில் தொட்ட எட்மண்ட் ஹிலாரிக்கு மரணத்துக்கு பின்பு பத்ம விபூஷண் வழங்கப்படுகிறது.

  • நாகா தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தியதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் கே. பத்மனாபையா,
  • பிரபல வர்ணனையாளர் ஜஸ்தேவ் சிங்,
  • சிட்டி வங்கி தலைவர் விக்ரம் பண்டிட்,
  • ஐசிஐசிஐ தலைவர் கே.வி. காமத் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.

பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்

  • டி.வி. நிருபர்கள் பர்கா தத்,
  • ராஜ்தீப் சர்தேசாய்,
  • வினோத் துவா,
  • ஜம்மு காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் அமிதாப் மட்டூ,
  • பின்னணிப் பாடகர் ஜவஹர் வட்டாள் ஆகியோரும் அடங்குவர்.

திரைப்படத் துறையில்

  • நடிகை மாதுரி தீட்சித்,
  • இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன்,
  • நடிகர் டாம் ஆல்டர்,
  • கால்பந்து வீரர் பாய்சுங் புடியா,
  • நீச்சல் வீராங்கனை புலா செüத்ரி,

ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.

  • தமிழகத்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் சி.யு. வேல்முருகேந்திரன்,
  • “தினத்தந்தி’ அதிபர் சிவந்தி ஆதித்தன்,
  • பிரபல பாடகரும் டாக்டருமான சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோரில் அடங்குவர்.

Posted in Anand, Arts, Asha, Asha Bhosale, astronaut, Awards, Baichung Bhutia, Bharat Ratna, Bhooshan, Bhosale, Bhushan, Bollywood, Booshan, Business, Chess, Citi, Dailythanthi, Dixit, Edmund, Edmund Hillary, Football, Hillary, Hotels, ICICI, Infosys, IT, Madhuri, Mittal, Mukherjee, Narayana Murthy, Narayanamurthy, Oberoi, Padhma, Padma, Padma Bhushan, Padma Vibhushan, Pathma, Performers, Pranab, Pranab Mukherjee, Prizes, Ratan, Ratan Tata, Sachin, Shyamalan, Singer, Soccer, Sports, Sunita Williams, Susheela, Sushila, Susila, TamilNadu, TATA, Tendulkar, Thanthi, Thanthy, Thinathanthi, Vibhooshan, Vibhushan, Vibooshan, Vibushan, Vikram Pandit, Viswanathan, Viswanathan Anand | 1 Comment »

Shall we name the next President of India – Neeraja Chowdhry

Posted by Snapjudge மேல் மே 1, 2007

அடுத்த குடியரசுத் தலைவர் யார்?

நீரஜா சௌத்ரி

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே அப் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வேலையை பிரதமர் தொடங்கி விடுவார்.

குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் முடிவடைவதற்கு 9 – 10 மாதங்கள் முன்னதாகவே அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு, அது ரகசியமாக வைக்கப்படும் காலம் ஒன்று இருந்தது. ஆனால் அந்தக் காலம் மலையேறி விட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கும் குறைவான அவகாசமே உள்ள நிலையில், ஜூலையில் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

கூட்டணி ஆட்சியின் யுகத்தில் முடிவெடுப்பது பிரதமர் மட்டுமல்ல. இன்னும் பலருக்கும் இதில் பங்குண்டு. காங்கிரஸ் கட்சியே கூட வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என உறுதியாகக் கூற முடியாது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் ஆதரவும் காங்கிரஸýக்கு தேவை. பஞ்சாப், உத்தரகண்ட்டில் தோல்வியைத் தழுவினாலும் கூட இப்போதைக்கு போட்டியில் முந்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான்.

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெறும் 7-ல் ஒரு பங்கு வாக்காளர்களை முடிவு செய்வது உத்தரப் பிரதேசம்தான். எனவே உத்தரப் பிரதேச தேர்தல் நடைமுறைகள் முடிவடையும்வரை எல்லா விவகாரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொருத்தவரையில், கூட்டணியைச் சேர்ந்தவர்களே அணி மாறி வாக்களித்து விடலாம் என்ற பயம், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள பைரோன்சிங் ஷெகாவத்தை, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தால் போட்டியிடுவதில் அவருக்குத் தயக்கம் இருக்காது என்பது தெரிந்ததுதான்.

ஆனால் கருத்தொருமித்த வேட்பாளராக அவர் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கலாகவே உள்ளன.

பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஒருவரை ஆதரிக்கும் அளவுக்கு காங்கிரஸ் வளைந்து கொடுக்காது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்களை அணி மாறி வாக்களிக்கச் செய்யும் அளவுக்கு ஷெகாவத்துக்கு தொடர்புகள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி போன்றவை அவரை ஆதரிக்கக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகின்றன.

இந்தக் காரணங்களால்தான் அப்துல் கலாமுக்கு மீண்டும் ஒரு முறை குடியரசுத் தலைவராக வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதில் கருத்தொற்றுமை எட்டப்படாவிட்டால் அது ஒவ்வொருவருக்கும் மானப் பிரச்சினை ஆகிவிடும். தன்னுடைய வேட்பாளர் தோற்கடிக்கப்படுவதை எந்த ஆளுங் கட்சியும் விரும்பாது. அத்தகைய ஆபத்தான முயற்சியில் இறங்கவும் துணியாது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னை நிறுத்துவதில் கருத்தொற்றுமை எட்டப்பட்டால் மீண்டும் பதவியில் தொடருவது பற்றிய தன்னுடைய விருப்பத்தை தனிப்பட்ட (அதிகாரபூர்வமற்ற) உரையாடல்களில் தெரிவித்துவிட்டார் அப்துல் கலாம். வாஜபேயி, எல்.கே.அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் தன்னைச் சந்தித்தபோது அதைத் தெளிவாகவே கூறிவிட்டார் கலாம்.

அப்துல் கலாமை பாஜக ஆதரிக்கும் என்பதை ராஜ்நாத் சிங் கோடிட்டுக் காட்டி விட்டார். 2002-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் பெயரை முதன் முதலில் முன்மொழிந்த முலாயம் சிங்கும் அவரை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக தொடருவதில் பிரதமருக்கும் கூட விருப்பம்தான் என கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் வட்டாரத்தில் அரசல் புரசலாக அடிபடுவதை நம்பலாம் என்றால், சோனியா காந்தியின் கருத்து வேறுவிதமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சோனியா காந்தியின் முதல் தேர்வு சுஷில்குமார் ஷிண்டே. ஷெகாவத்தைப் போல் அல்லாமல், ஷிண்டே தாகூர் சாதியினரின் வாக்குகளைக் கவரக் கூடியவர். ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து தலித் வாக்குகளை அவரால் கவர முடியாமல் போகலாம்.

கலாம் வேண்டாம் என நினைப்பவர்கள் மத்தியில் “”இன்னொரு கலாமை” கண்டறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி (ஏற்கெனவே இவரது பெயர் அடிபட்டது), எம்.எஸ். சுவாமிநாதன், நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் போன்றோர் “”இன்னொரு சாத்தியமான கலாம்”கள். இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள அமர்த்திய சென்னுக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் பாஜக-வின் கருத்து வேறுவிதமாக இருக்கும்.

அரசியல் சார்ந்தவர்கள் பட்டியலில், காங்கிரஸில் கரண்சிங் இருக்கிறார். இவருக்கு பரவலாக தொடர்புகள் உள்ளதுடன், “இந்து-சார்பு’ முகம் கொண்டவரும் கூட. மக்களவைத் தலைவராக உள்ள சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்களை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தும்போது, முலாயம் போன்றவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிப்பது கடினம். ஆனால் சட்டர்ஜியை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்துவதற்கு இடதுசாரி மற்றும் காங்கிரஸýக்குள்ளேயே தடை இருக்கிறது. பாஜகவும் ஏற்றுக்கொள்ளாது. இது போட்டிக்கு வழிவகுப்பதுடன் அணி மாறி வாக்களிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி விடும்.

இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கக் கூடிய இரண்டு சூழ்நிலைகள் உண்டு. ஒன்று, பாஜக ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் சூழல். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 3 முக்கிய அணிகளை -பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி மற்றும் சமாஜவாதி கட்சி ஆகிய 3 கட்சிகளை -ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிர்வரிசையில் நிறுத்திவிடும். மற்றொன்று, உத்தரப் பிரதேசத்தில் எந்த 2 கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் சூழ்நிலை.

2002-ல் நடந்ததுபோல், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்காமலேயே பேரவைக்கு உயிர்கொடுப்பது ஒத்திவைக்கப்பட்டால், ஜூலையில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியுமா? இது அவ்வளவாக தெளிவில்லாத “மங்கலான பகுதி’ எனக் கூறப்படுகிறது.

அரசியல் அவநம்பிக்கையாளர்கள் இத்தகைய சூழ்நிலையை முன்னிறுத்தி விளையாட நினைக்கலாம். ஆனால் அரசியல் நிர்பந்தங்கள் அப்படித் தூண்டினாலும் கூட நல்ல நோக்கம் வெற்றி பெறும் என நம்பலாம்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவராக பதவி வகிக்கப் போகிறவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பது உ.பி. தேர்தல் முடிவுகள்தான். இப்போதைக்கு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் விருப்பத்துக்கு குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும் அரசியல் சூழ்நிலை சென்று கொண்டிருக்கிறது.

தமிழில்: ப.ரகுமான்.

Posted in Advani, Amartya, Amartya Sen, Assembly, BJP, BSP, Chatterjee, Communist, Congress, Dalit, Election, India, Infosys, Kalam, Karan Singh, Kashmir, Lok Saba, Lok Sabha, Manmohan, Marxist, Mayawathi, MS Swaminadhan, MS Swaminathan, Narayanamoorthy, Narayanamurthy, Neeraja, Neeraja Chowdhry, Party, Politics, President, Punjab, selection, Shinde, Somnath, Sonia, Sushilkumar Shinde, Swaminadhan, Swaminathan, UP, Vajpayee, Vote | 1 Comment »

Raman Raja – Blasphemy on National Symbols, Flag, Anthem

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

நெட்டில் சுட்டதடா…: கொடியைக் கிழித்த குமரன்!

ராமன் ராஜா

தொழிலதிபர் நாராயண மூர்த்தியை அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ஏற்றவர் என்று நேற்றுத்தான் பன்னீர் தெளித்தார்கள்; இன்று அவரையே தேசத் துரோகி என்று வெந்நீர் தெளிக்கிறார்கள். தங்கள் நிறுவன விழாவில் தேசிய கீதத்தை இசைப்பது பற்றி அவர் உச்சரித்த ஒரே ஒரு வார்த்தைதான் எல்லாவற்றையும் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டது. நெட் முழுவதும் மூர்த்திக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் மிளகாய் பஜ்ஜி விவாதங்கள் நடக்கின்றன. “”மகாகவி தாகூர் இயற்றிய தேசிய கீதத்தின் மாண்பு என்ன, மகிமைதான் என்ன? அதைக் காதில் கேட்டவுடனே ஒவ்வொரு குடிமகனுக்கும் முடியெல்லாம் சிலிர்க்க வேண்டாமா, சிலிர்க்காத மண்டைகளை மொட்டை அடித்துக் கலர்ப் புள்ளி குத்தவேண்டும்” என்கிற ரீதியில் ஓயாமல் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். நாணாவை நாடு கடத்த வேண்டும் என்றுகூட ஒரு கோரிக்கை எழுந்திருக்கிறது. இதில் கன்னட -அகன்னட சர்ச்சை வேறு. (பாலிடிக்ஸ் விளையாடிவிட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறதே!) மற்றொரு பக்கம், ஜமைக்காவிற்குப் போன சச்சின் டெண்டுல்கர் மீது ஒரு குற்றச்சாட்டு. மூவண்ணக்கொடியின் நிறத்தில் செய்யப்பட்டிருந்த கேக் ஒன்றைக் கத்தியால் வெட்டினார் என்று வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கிரிக்கெட்டில் சப்பை அடி வாங்கியிருக்கிறார்கள்; போதாததற்கு இது வேறு.

தேசியச் சின்னங்கள் -அவற்றின் அவமதிப்பு -அதற்காகக் கடும் தண்டனை என்பது மோசிகீரனார் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஏழைப் புலவர் பாவம், வெயிலில் நடந்து வந்த களைப்பில் முரசு வைக்கிற கட்டிலில் படுத்து தூங்கிவிட்டார். வீர முரசுக்கு இப்படி ஓர் அவமதிப்பா என்று கோபித்த மன்னன், உடை வாளை உருவியே விட்டான். நல்ல வேளையாகத் தூங்கினவர் தமிழ்ப் புலவராக இருந்து, மன்னனும் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருந்ததால் கீரனார் கீறப்படாமல் தப்பினார்.

வருடம்: 1862. அமெரிக்காவில் உள் நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். நியூ ஆர்லீன்ஸ் மாநிலம், தனி நாடு போர்க்கொடி தூக்கியிருந்தது. கலகத்தை அடக்குவதற்கு மத்திய அரசு தன்னுடைய ஆள் படை அம்பு எல்லாவற்றையும் அனுப்பியது. ராணுவம் வந்ததும் முதல் வேலையாக முனிசிபாலிட்டி, நாணய சாலை போன்ற அரசாங்கக் கட்டடங்களைக் கைப்பற்றி அவற்றின் உச்சியில் அமெரிக்க தேசியக் கொடியை ஏற்றினார்கள். இதைக் கண்டு பொறுக்காத மக்கள் தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதில் வில்லியம் மம்ஃபோர்ட் என்பவர் உணர்ச்சி வேகத்தில் கட்டடத்தின் மீது ஏறி அமெரிக்கக் கொடியைக் கீழே இறக்கினார். நிமிஷ நேரத்தில் கொடி கூட்டத்தின் கையில் சிக்கிச் சுக்கு நூறாகிவிட்டது. குச்சிதான் பாக்கி! கொடியின் மாண்பைக் குலைத்த குற்றத்துக்காக ராணுவ கோர்ட் ஒரு சட்டு புட்டு விசாரணை நடத்தி, மம்ஃபோர்டை அதே இடத்தில் தூக்கில் போட்டது. ஆனால் பிறகு மக்கள் மம்ஃபோர்ட்டை விடுதலைப் போராட்டத்தின் சின்னம், கொடியைக் கிழித்தெறிந்த குமரன் என்று தியாகிப் பட்டம் கட்டி மலர்வளையம் வைத்தார்கள்.

அறுபதுகளில், வியட்நாமின் உள் நாட்டுச் சண்டையில் வீம்புக்காகத் தலையிட்டு குண்டு மழை பெய்து கொண்டிருந்த அநியாயத்தை எதிர்த்து அமெரிக்காவிலேயே பலர் போராட்டம் நடத்தினார்கள். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பற்பல தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன. அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போனார்கள். அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களில் கொடியைச் சேதமாக்கினால் சிறைத் தண்டனை கொடுக்கச் சட்டம் உண்டு.

அப்படியே ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து 1984-க்கு வருவோம். ஜனாதிபதி ரீகனின் கொள்கைகளை எதிர்த்து டல்லாஸ் நகரில் ஓர் அரசியல் பேரணி. வழக்கமான வீர உரைகள், வசவு உரைகள் எல்லாம் முடிந்ததும் மங்களம் பாடும் விதத்தில் ஓர் அமெரிக்கக் கொடியைக் கொளுத்தினார் ஜோயி ஜான்சன் என்பவர். கையும் கொடியுமாக அவரைப் பிடித்துக் கொண்டு போய் கேஸ் போட்டார்கள். கீழ்க் கோர்ட்டில் ஜான்ஸனுக்கு ஒரு வருடம் சிறை, இரண்டாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு ஜான்சன் வழக்கு ஹை கோர்ட்டுக்கு வந்ததும் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது: தேசியக் கொடியை எரிப்பதும் குடி மக்களின் கருத்து சுதந்திரத்தில் ஒரு பகுதிதான் என்று கூறி அங்கே ஜான்சனை விடுதலை செய்துவிட்டார்கள்!

இதைக் கேட்டு தேச பக்தர்கள் வெகுண்டெழுந்து சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார்கள். சுப்ரீம் கோர்ட்டும், இப்படியெல்லாம் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது மக்களுடைய பேச்சுரிமையின் ஒரு பகுதிதான் என்று சொல்லிவிட்டது. அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் (ஊண்ழ்ள்ற் ஹம்ங்ய்க்ம்ங்ய்ற்) இதைத்தான் வலியுறுத்துகிறது: இந்தச் சட்ட விதியின் கம்பீரமான எளிமையைக் கவனியுங்கள்: “”பொது மக்களின் பேச்சுரிமையைக் குறைக்கும் எந்தச் சட்டத்தையும் அமெரிக்க நாடாளுமன்றம் இயற்றாது.” அவ்வளவுதான்!

அரசியல்வாதிகளின் -அதாவது அமெரிக்க அரசியல்வாதிகளின் -வழக்கம் என்னவென்றால், சுப்ரீம் கோர்ட் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தால் அதை கான்சல் செய்யும் விதமாக அரசியல் சட்டத்தையே மாற்ற முற்படுவது. அன்று முதல் இன்று வரை அவ்வப்போது கொடி எரிப்புத் தடுப்பு சட்டம் கொண்டு வர அவர்களும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் நிறைந்த கீழ் சபையில் சட்டம் பாஸôகிவிடுகிறது. அறிவு ஜீவிகள் நிரம்பிய செனட் மேல் சபை ஒத்துக் கொள்ளாததால் இந்த முயற்சியில் காற்று இறங்கிவிடுகிறது. பழமைவாதிகள், புதுமை விரும்பிகள், மிகவும் புதுமைவாதிகள் என்று பல பேர் இதில் தலையிட்டுக் குட்டையைக் குழப்பி மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன மேற்கத்திய நாகரிகத்தில் தனி மனித சுதந்திரம்தான் கடவுளாக மதிக்கப்படுகிறது. “”ஒரு துணிக் கொடியை விடப் புனிதமானது தனி ஒருவனின் சுதந்திரம். அமெரிக்கக் கொடியே அந்தச் சுதந்திரத்தின் அடையாளச் சின்னம்தான். கொடியை அவமதித்தார் என்ற காரணத்துக்காக ஒரு குடிமகனைச் சிறையில் போட்டால், அந்தக் கொடியே அவமானத்தில் கண்ணீர் வடிக்கும்” என்கிறார்கள் புதுமைவாதிகள். “”அமைதியான முறையில் நடத்தப்படும் பேச்சு, எதிர்ப்பு, எரிப்பு எல்லாம் பிரஷர் குக்கரில் இருக்கும் பாதுகாப்பு வால்வு மாதிரி. அதை அடைத்துவிட்டால் தீவிரவாதம்தான் வெடிக்கும். தேசபக்தி உள்பட எதையும், யார் மீதும் திணிக்காமல் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம்”என்பது அவர்கள் வாதம்.

1990-ல் சில மாநிலங்களில் வேறு ஒரு விவகாரமான சட்டம் கொண்டு வந்தார்கள்: பப்ளிக்கில் நாலு பேர் சேர்ந்து ஒருவனுக்கு தர்ம அடி போட்டால், சாதாரணமாக அது கிரிமினல் குற்றம். ஆனால் அடிக்கப்பட்டவன் தேசியக் கொடியைக் கொளுத்தியதற்காக மக்கள் உணர்ச்சி வேகத்தில் அவனை அடித்துவிட்டால், வெறும் ஐந்து டாலர் அபராதத்துடன் விட்டுவிடலாம் என்பது இந்தச் சட்டம். “கொடியை எரிக்கிறானா, அடி சாத்து!’ என்று குறிப்பிடப்படும் இந்தச் சட்டத்தை எதிர்த்தும் பலர் கொடியை எரித்தார்கள். அவர்கள் அடி வாங்கினார்களா இல்லையா என்று தகவல் இல்லை.

ஆஸ்திரேலியாவில் சில மாணவர் இயக்கங்கள், கொடியை எரிக்க நினைப்பவர்களுக்கு வசதியாக அட்டை டப்பாவில் டான்டெக்ஸ் பனியன் ஜட்டி விற்பது மாதிரி ஒரு பாக்கெட் தயாரித்திருக்கிறார்கள். ஒரு தேசியக் கொடி, கற்பூர வில்லை, வத்திப் பெட்டி எல்லாம் கொண்ட திடீர் கொடி எரிப்பு கிட்! இந்த மாதிரியெல்லாம் தேசத் துரோகத்தை ரெடிமேடாக டப்பாவில் அடைத்து விற்கக் கூடாது என்று போலீஸ் வந்து பிடுங்கிப் போனார்கள். உடனே ஆஸ்திரேலிய அறிவு ஜீவிகளும் கலைஞர்களும் கூட்டாகச் சேர்ந்து “”இது என்ன காட்டுமிராண்டித்தனமான சென்சார்?” என்று சர்க்காரைக் கண்டித்தார்கள்: “”நான், என் ஊர், என் தாய் நாடு என்பதெல்லாம் ஒரு விதத்தில் ஜாதி மதச் சண்டை மாதிரிதான். குறுகின கண்ணோட்டத்தில் வரும் வியாதிகள். நாட்டுப்பற்று என்பது கொஞ்சம் பெரிய ரேஞ்சில் நடக்கிற ஜாதி வெறி; அவ்வளவுதான். உலகமே ஒரு நாடு, எல்லாரும் ஓர் இனம் என்ற பரந்த பார்வை வர வேண்டுமென்றால் முதலில் நம் அசட்டு தேச பக்தியைத் துடைத்து எறிய வேண்டும்…” என்ன இது, சிந்திக்க வைத்து விட்டார்களே!

இராக்கில் தினம் தினம் யாராவது ஒரு கோஷ்டி அமெரிக்கக் கொடியைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்வது அன்றாடச் காட்சி. ஆனால் அரசியலில் தீவிர எதிர்க் கட்சியினர் கூட இராக்கின் தேசியக் கொடியை அவமதிக்கத் துணிய மாட்டார்கள். காரணம், கொடியில் அல்லாவின் புனிதப் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதுதான். (தன் கைப்பட இந்த வாசகங்களைச் சேர்த்துக் கொடியின் டிசைனை மாற்றியவர் சதாம் ஹுசேன்.) இதே மாதிரி காரணத்தால், சவூதி அரேபியாவிலும் கொடியைக் கிழித்தால் கையே இருக்காது!

இப்போது லேட்டஸ்ட்டாகக் கொடி அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்தான்! ஆஸ்திரியாவுக்குப் போயிருந்த போது அங்கே ஆட்டோகிராப் கேட்டவர்களுக்கெல்லாம், அவர்கள் கையில் வைத்திருந்த சின்னஞ் சிறிய அமெரிக்கக் கொடியின் மீது ஜோராகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். கொடியின் மீது கிறுக்குவதும் சட்டப்படி குற்றம்தான். இதற்கு ஒரு மாதம் வரை சிறைத் தண்டனை கொடுக்க வழி இருக்கிறது. ஆனால் புஷ்ஷுக்கு எப்போதுமே அவ்வளவாக விவரம் பற்றாது என்பதால், இதுவும் அவருடைய தினசரி சொதப்பல்களில் ஒன்று என்று எல்லாரும் மன்னித்துவிட்டார்கள்.

Posted in Anthem, Bush, Dinamani, Flag, Infosys, Islam, Kathir, Narayana Murthy, Narayanamoorthy, Narayanamurthy, National, President, Raman Raja, Symbols, USA | Leave a Comment »