Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Nagpur’ Category

Samuels accused of liaison with bookmaker – Underworld rivalry in cricket betting

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

தாவூத் இப்ராகிம் கூட்டாளியிடம் சூதாட்டம்: சாமுவேல்ஸ் லஞ்சம் வாங்கினாரா?

நாக்பூர், பிப்.8-

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே நாக்பூரில் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்று இருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சாமுவேல்சிடம் நாக்பூர் போட்டிக்கு முந்தைய இரவில் தாவூத் இப்ராகிம் கூட்டாளியும், சூதாட்டக்காரருமான முகேஷ் கொச்சார் டெலிபோனில் பேசியது அம்பலமாகி உள்ளது.

முகேஷ் கொச்சார்- சாமுவேல்ஸ் இடையே நடந்த டெலிபோன் உரையாடலை நாக்பூர் போலீசார் டேப் செய்து உள்ளனர். பேட்டிங் வரிசை, பந்து வீச்சு வரிசை உள்பட பல்வேறு தகவல்களை சூதாட்டக்காரரிடம் சாமுவேல்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக நாக்பூர் போலீஸ் உதவி கமிஷனர் அமிதேஷ்குமார் கூறியதாவது:-

அணியில் இடம் பெறும் வீரர்கள், யார் யார் பந்து வீசுவார்கள் உள்பட பல விவரங்களை சாமுவேல்ஸ் சூதாட்டக்காரர் முகேஷ் கொச்சரிடம் பேசியதை டேப் செய்துள்ளோம். இது மேட்ச் பிக்சிங் (வெற்றி-தோல்வி நிர்ணயம்) அல்ல. அணியின் நம்பிக்கைக்குரிய சில விஷயங்கள் பரிமாறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சூதாட்டக்காரரிடம் சாமுவேல்ஸ் பணம் வாங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துணை போலீஸ் கமிஷனர் கூறும் போது இருவருக்கும் இடையே பணம் ஒப்பந்தம் நடந்ததா என்ற விவரம் இல்லை என்றார்.

சாமுவேல்ஸ் சூதாட்டக்காரருடன் தொடர்பு வைத்திருப்பது தொடர்பான அறிக்கை தங்களுக்கு வந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஆகியவை இன்று தெரிவித்தன.

இது தொடர்பாக சாமுவேல் சிடம் கேட்டபோது முகேஷ் கொச்சாரை எனக்கு தெரியும். ஆனால் அவர் சூதாட்டக்காரர் என்பது தெரியாது என்றார்.

இந்த தகவல் அறிந்ததும் சாமுவேல்ஸ் தாயார் லூனன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தன்னால் இதை நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதே போல இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சந்தீப்பட்டீல், சாந்து போர்டே ஆகியோரும் அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

சூதாட்டக்காரரிடம் தொடர்பு கொண்டதன் மூலம் சாமுவேல்ஸ் ஐ.சி.சி. நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். விரைவில் அவரிடம் ஐ.சி.சி. விசாரணை நடத்தும். இதற் காக அவருக்கு சில போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்படலாம்.

நாக்பூர் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 3 விக் கெட்டுக்கு 338 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 324 ரன் எடுத்தது. இதனால் 14 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது.

இந்த ஆட்டத்தில் சாமுவேல்ஸ் 10 ஓவர் வீசி 53 ரன் விட்டுக்கொடுத்தார். விக்கெட் கைப்பற்றவில்லை. பேட்டிங் கில் 60 பந்துகளில் 40 ரன் எடுத்தார்.

கிரிக்கெட் சூதாட்டத்துக்கு ஆதாரம் கிடைக்கவில்லை: விசாரணையை கைவிட முடிவு

மும்பை, பிப்.11-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் இந்திய கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் முகேஷ் கோச்சாருடன் டெலிபோனில் ரகசியமாக பேசியதால் சூதாட் டம் நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதுபற்றி நாக்பூர் போலீசில் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் பேசிய டெலிபோன் உரையாடலில் சூதாட்டம் நடந்ததற்கான எந்த தகவலும் இல்லை. விளையாட்டை பற்றியும், வீரர்களை பற்றியும் விவாதித்த வார்த்தைகள் தான் இடம் பெற்று உள்ளன. இதை வைத்து சூதாட்டம் நடந்ததாக தீர்மானிக்க முடியவில்லை.

பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி னார்கள். ஆனாலும் எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. யாரும் இது சம்பந்தமாக புகாரும் கொடுக்கவில்லை. எனவே மேற்கொண்டு விசார ணையை தொடராமல் இந்த பிரச்சினையை கைவிட போலீசார் முடிவு செய்துள்ள னர்.

இந்த பிரச்சினை குறித்து ஏற்கனவே கிரிக்கெட் சங்கத் திடம் தெரிவித்து விட்டனர். எனவே அவர்களும் விசார ணையை தொடங்கி உள்ளனர். இதனால் போலீசார் விசா ரணை தேவை இல்லை என் றும் கருதுகிறார்கள்.

உலக கோப்பை போட்டி தொடங்க போகிற நேரத்தில் பிரச்சினையை கிளப்பினால் அது வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், மராட்டிய போலீசார் மவுனம் காக்க முடிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட் சூதாட்டம்: ராபின்சிங்- சாமுவேல்ஸ் ரகசிய தொடர்பா?

சென்னை, பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த 3 தொடரில் முதல் போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்ட ஏஜெண்டாக செயல் பட்டவர் சுரேஷ் கோச்சார். இவர் போட்டி நடப்பதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமு வேல்ஸ்சிடம் பலமுறை டெலிபோனில் பேசி உள்ளார்.

அப்போது மைதானங்கள் நிலைமை எந்தெந்த வீரர்கள் எந்த வரிசைப்படி இறங்குவார்கள். வெஸ்ட் இண்டீஸ் என்ன திட்டங்களை வைத்துள்ளது போன்ற விவரங்களை எல்லாம் கூறி இருக்கிறார். இதையடுத்து கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சாமுவேல்ஸ் – முகேஷ் கோச்சார் இருவருக்கும் இடையே இடம் பெற்ற உரையாடலில் பல தடவை ராபின்சிங் என்ற பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் குறிப்பிட்ட ராபின்சிங் யார்ப என்று தெரியவில்லை. ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர் ராபின்சிங்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி ராபின்சிங்கிடம் கேட்டபோது எனக்கும் சாமுவேல்ஸ்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சூதாட்டத்தில் எனக்கு பங்கும் இல்லை என்று கூறினார்.

கிïபா நாட்டில் புதிதாக கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயிற்சியாளராக ராபின்சிங் நியமிக்கப்பட்டு இருந்தார். இதற்காக கிïபா சென்றிருந்த அவர் நேற்று தான் சென்னை திரும்பி இருக்கிறார்.

ஆனால் ராபின்சிங்குக்கும் சாமுவேல்ஸ்க்கும் ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ராபின்சிங் சென்னையில் வசித்தாலும் அவர் வெஸ்ட் இண்டீசில் தான் பிறந்தார். இந்தியாவில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்ற ஏராளமான குடும்பங்கள் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வசிக்கின்றன.

அதில் ராபின்சிங் குடும்ப மும் ஒன்று. இடையில் அவர்கள் குடும்பம் சென்னை வந்து விட்டது. இப்போதும் ராபின்சிங்கின் உறவினர்கள், நண்பர்கள் அங்கு வசிக்கின்றனர்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் ராபின்சிங்குக்கும் தொடர்பு இருக்கலாம். இதில் சாமு வேலுடன் அவர் ரகசிய தொடர்பு வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மராட்டிய போலீசார் சூதாட்டம் நடந்ததாப என்று தீவிர விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் ராபின்சிங்கிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உண்மை வெளிச் சத்துக்கு வரும்.

சூதாட்ட தரகரை சந்திக்க 4 நாட்கள் ஓட்டலில் காத்திருந்த சாமுவேல்ஸ்: போலீசார் தகவல்

நாக்பூர், பிப். 10-

நாக்பூரில் கடந்த மாதம் 21-ந்தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாவூத் இப்ராகிம் கூட்டாளியும், சூதாட்ட தரகருமான முகேஷ் கோச்சர் போனில் தொடர்பு கொண்டு சாமுவேல்சிடம் பேசியதை போலீசார் டேப் செய்துள்ளனர்.

இதில் அவர் அணியின் நிலவரம் குறித்த பல்வேறு தகவல்களை பரிமாறி இருக்கிறார். சாமுவேல்ஸ் தங்கி இருந்த பிரைட் ஓட்டலில் 206 நம்பர் அறையில் தனது மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு 3 முறை பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட சாமுவேல்ஸ் லஞ்சமாக பணம் வாங்கினாரா? என்ற ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நாக்பூர் போலீஸ் கமிஷனர் யாதவ் கூறும்போது, பண பரிவர்த்தனை நடந்ததா என்பது பற்றி விசாரிக்க நாங்கள் அமலாக்க பிரிவினருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் பண பரிவர்த்தனை நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது என்றார்.

இதற்கிடையே சாமுவேல்ஸ் பற்றி புதிய தகவல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் அனைவரும் புறப்பட்ட நேரத்தில் அவர் செல்லவில்லை. சில நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்த பிறகே சென்று உள்ளார்.

மும்பையில் உள்ள ஹியத் ரிஜன்சி ஓட்டலில் சூதாட்ட தரகர் முகேஷ் கோச்சரை சந்திக்க 4 நாட்கள் காத்திருந்தார்.

ஆனால் அவரை சந்திக்க சூதாட்ட தரகர் வரவில்லை. சாமுவேல்ஸ் தான் போனில் பேசியதை போலீசார் டேப் செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக அவரை சந்திப்பதை முகேஷ் கோச்சர் தவிர்த்தார் என்று நாக்பூர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு வருகிற 12-ந் தேதி நாக்பூர் வருகிறது. சாமுவேல்ஸ் தங்கி இருந்த ஓட்டலில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை செய்வார்கள்.

சாமுவேல்ஸ் பெட்டிங்கில் ஈடுபட்டாரா அல்லது மேட்ச் பிக்சிங்கில் (வெற்றி- தோல்வி நிர்ணயம்) ஈடுபட்டாரா என்பது தெரியவில்லை. இதுவரை அவருக்கு சாதகமாக இருந்த வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தற்போது விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர் பாக அந்த வாரியத்தின் செய்தி தொடர்பாளர் மோரிடெயல் கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வரைமுறைக்கு உட்பட்டு விசாரணை நடைபெறும். வீரர்கள் சங்கத்தில் அவர் உறுப்பினராக உள்ளார். இதனால் விசாரணை உள்மட்டத்தில்தான் இருக்கும். கிரிக்கெட் வாரிய கமிட்டிதான் இந்த விசாரணையை மேற்கொள்ளும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு சாமுவேல்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் கெய்லேவுக்கும் தொடர்பு: நேரில் விசாரிக்க ஐ.சி.சி.குழு வருகிறது

நாக்பூர் பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் உஷார் அடைந்துள்ளது.

இது தொடர்பாக நாக்பூர் போலீசார் இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பிய புகாரை அவர்கள் சரவதேச கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பினார்கள். எனவே இது தொடர்பான விசாரணையை சர்வதேச கிரிக்கெட் சங்கம் உடனடியாக தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக ஆலோ சனை நடத்த அவசர கூட்டம் இன்று துபாயில் நடக்கிறது. அதில் எந்த முறையில் விசாரணை நடத்தலாம் என்று முடிவு எடுக்க உள்ளனர்.

இந்தியா வந்து நேரில் விசாரிப்பதற்காக ஒரு குழு வையும் அமைக்க உள்ளனர். சூதாட்டம் நடத்திருப்பது தெரிந்தால் வீரர்களுக்கு உடனடியாக தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

சூதாட்டத்தில் சாமுவேலுடன் தமிழக வீரர் ராபின் சிங்குக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லே மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய சுற்றுப் பயணம் முடிந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் கடந்த 1-ந்தேதி நாடு திரும்பி விட்டார்கள். ஆனால் சாமுவேல்ஸ் 4-ந்தேதி வரை மும்பையிலேயே இருந்தார். அவருடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லேவும் சாமு வேலுடன் மும்பையிலேயே தங்கி இருந்தார். எனவே அவருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இருவரும் சூதாட்டக்காரர்கள் கொடுத்த விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

எனவே சாமுவேல்ஸ், கெய்லே இருவரும் மும்பையில் தங்கியிருந்த போது என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர் என்பது பற்றி விரிவாக விசாரிக்க உள்ளனர். அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் செல்லும் நேரடியாக வீரர்களிடம் விசாரிக்க திட்டமிட்டு உள்ளது.

கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது எப்படி?

கிரிக்கெட் என்ற மந்திரச் சொல்லுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கட்டுப்பட்டு, அதே சிந்தனையில் மயங்கி கிடக்கிறார்கள். இந்த விளையாட்டில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது.

மற்ற நாடுகளை விட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் கிரிக் கெட் பைத்தியமாகவே இருக்கி றார்கள். எனவே மற்ற விளை யாட்டுகளை விட கிரிக்கெட் போட்டிகளுக்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு கிரிக்கெட் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் மறைமுகமாக `பெட்டிங்’ வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

இரண்டு அணிகளின் வெற்றி தோல்வியை முன்ன தாகவே முடிவு செய்வது `மேட்ச் பிக்சிங்’. இது நடை பெறுவது அபூர்வம். மிகப் பெரிய சூதாட்டக்காரர்கள் இரு அணி கேப்டன்களுடன் தொடர்பு கொண்டு பேசி முடிவு செய்தால் தான் இது சாத்தியமாகும். இந்த பிரச்சினையில் சிக்கியதால்தான் இந்திய அணி யின் முன்னாள் கேப்டன் அசாருதீன், தென்னாப் பிரிக்க அணி முன்னாள் கேப்டன் ஆன்சி குரோனே ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்திய அணியில் விளையாடிய அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, தற்போது `மேட்ச் பிக்சிங்’ நடக்க வாய்ப்பில்லை.

ஆனால் `பெட்டிங்’ ஒவ்வொரு முக்கிய போட்டிக்கும் நடந்து வருகிறது. போட்டியின் அந்தரங்கம் சூதாட்டம் ஆக்கப்பட்டு அதற்காக பணம் கட்டப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் பணம் கொடுக்கப்படுகிறது. இதிலும் கோடிக்கணக்கான பணம் புரளுகிறது. இதற்காக முக்கிய நகரங்கள் அனைத்திலும் `பெட்டிங் சென்டர்’கள் மறை முகமாக செயல்பட்டு வரு கின்றன. `கம்ப்ïட்டர்’ மூலம் இந்த சூதாட்டம் நடக்கிறது.

ஒரு கிரிக்கெட் அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற விவரம் கொண்ட 11 பேர் அணி போட்டி தொடங்குவதற்கு முன்புதான் அறிவிக்கப்படும். இது குறித்தும் `பெட்’ கட்டப்படுகிறது.

இது போல `டாஸ்’ ஜெயித்தால் எந்த அணி `பேட்டிங்’ செய்யும், எந்த அணி பந்து வீசும்ப யார் யார் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள்? யார் யார் அதிக `ரன்’ எடுப்பார்கள்? யார் அதிக விக்கெட் எடுப்பார்? என்பது போன்ற விவரங்களை சரியாக சொன்னால் பல மடங்கு பணம் கிடைக்கும். இந்த `பெட்டிங்’ சூதாட்டத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சூதாட்டத்தில் பங்கேற்பவர்கள் சரியாக கணித்து சொல்லாவிட்டால் சூதாட்டம் நடத்துவோருக்கு கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும். சூதாட்ட ஏஜண்டுகளும் லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும்.

எனவே `பெட்டிங்’ சூதாட்டம் நடத்துபவர்களும், அவர்களுடைய ஏஜெண்டுகளும் கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு கொண்டு அணியின் விïகம், களம் இறங்கும் வீரர்களின் வரிசை போன்றவற்றை தெரிந்து கொள்வார்கள்.

வீரர்களிடம் பேசி, தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி கூறுவார்கள். இதற்கு உடன்படும் வீரர்களுக்கு பெரும் தொகை சன்மானமாக கொடுக்கப்படும். எனவே, ஒருசில கிரிக்கெட் வீரர்கள் சூதாட்ட ஏஜெண்டுகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் மறைமுகமாக வைத்திருக்கும் தொடர்பு, அவர்களையும் அறியாமல் வெளியே கசிந்துவிடுகிறது. போன் மூலம் பேசுவது, முக்கிய இடங்களில் ஏஜெண்டுகளை சந்திப்பது போன்றவை ரகசிய ஏஜெண்டுகளுடன் வைத்தி ருக்கும் தொடர்பை வெளிச்சம்போட்டு காட்டி விடுகின்றன.

மேற்கிந்திய அணி வீரர் சாமுவேல்ஸ் நாக்பூரில் நடந்த போட்டியின் போது பிரபல கிரிக்கெட் சூதாட்டக்காரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி முகேஷ் கொச்சார் என்ற சூதாட்ட புரோக்கரிடம் 4 முறை பேசி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சு, சாமுவேல்ஸ் எப்போது பந்து வீசுவார் என்பது பற்றியும் கூறி இருக்கிறார். நள்ளிரவிலும் ஏஜெண்டிடம் பேசியுள்ளார். இதன் மூலம் சாமுவேல்ஸ்க்கு பெருந்தொகை கிடைத் திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கும் சாமுவேல்ஸ் சுடன் டெலிபோனில் பேசியுள்ளார். இவருடைய பங்கு என்ன என்பதும் புதிராக உள்ளது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்.

சாமுவேல்ஸ்- ஏஜெண்டு டெலிபோன் உரையாடல்

வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்- முகேஷ் கோச்சார் இருவரும் டெலிபோனில் என்ன பேசினார்கள் என்பதில் சிலவரிகள் வெளியே கசிந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

சாமுவேல்ஸ்:- பிட்ச்சை பார்த்து விட்டுதான் காலையில் பேட் செய்வதா? என்று முடிவு செய்வார்கள்.

முகேஷ்:- மாலையில் என்றால் நீங்கள் கடைசியில்தான் இறங்குவீர்களா?

சாமுவேல்ஸ்:- கடைசிக்கு கொஞ்சம் முந்தி இறங்குவேன்.

முகேஷ்:- யார் பேட் செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

சாமுவேல்ஸ்:- தெரியும்.

முகேஷ்:- யார்- யார்?

சாமுவேல்ஸ்:- டேவன் அவரைதான் நாளை ஆட அனுப்புவார்கள்.

முகேஷ்:- புது பேட்ஸ்மேனா? அல்லது பந்து வீச்சாளரா?

சாமுவேல்ஸ்:- இல்லை. அவர் ஆல் ரவுண்டர்.

முகேஷ்:- அவர் சிறப்பாக ஆடுவாரா?

சாமுவேல்ஸ்:- ஆமாம், அதற்காகத்தான் இறக்குகிறோம்.

முகேஷ்:- ஓகோ எனக்கு எல்லாம் புரிகிறது. கிறிஸ் பார்மில் இருக்கிறார்.

ராபின்சிங் பற்றி நாங்கள் பேச வில்லை: சூதாட்ட ஏஜெண்டு மறுப்பு

மும்பை, பிப். 9-

சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள ஏஜண்டு முகேஷ் கோச்சார் வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்யிடம் பேசியதை ஒத்துக் கொண்டுள்ளார். சாமுவேல்ஸ் எனது நீண்ட கால நண்பர் என்ற முறையில் அவரிடம் பேசினேன் என்று கூறியுள்ளார்.

இருவரும் ராபின்சிங் பற்றி பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே ராபின் சிங்குக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் முகேஷ் கோச்சார், “நாங்கள் இருவரும் ராபின்சிங் பெயரை உச்சரிக்கவில்லை” என்று கூறினார்.

நாக்பூர் போலீசார் இது குறித்து விரிவான விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி போலீஸ் கமிஷனர் எஸ்.பி.எஸ். யாதவ் கூறும்போது, “இதுவரை நடந்த விசாரணையில் மேட்ச்பிக் சிங் நடந்ததை கண்டுபிடிக்கவில்லை. இந்த உரையாடல் மூலமாக சூதாட்டம் நடந்தததா? என்றும் தெரியவில்லை” என்றார்.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் லாராவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் இப்போது லண்டனில் இருக்கிறேன். எனவே முழு விவரமும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி கேள்விபட்டதும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்திடம் பேச முயன்றேன். முடியவில்லை. சாமுவேலிடமும் பேச முயற்சித்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. சாமுவேஸ்யிடம் பேசி முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

சாமுவேலை பொறுத்தவரை எனக்கும் மற்ற வீரர்களுக்கும் மிகவும் உதவியாக இருந்தார். உலக கோப்பை போட்டிக்கு அவர் எங்களுக்கு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டில் இருந்து இந்திய சூதாட்ட காரர்களை இயக்கிய தாவூத் இப்ராகிம்

மும்பை, பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் ஒரு நாள் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. போட்டி நடப்பதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்சும், கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் முகேஷ் கோச்சார் ஆகியோரும் டெலிபோனில் ரகசியமாக பேசி உள்ளனர். எனவே சூதாட்டம் நடந்திருக்கலாம் என கருதி விசாரணை நடந்து வருகிறது.

புரோக்கர் முகேஷ் கோக்சாருக்கும் மும்பை குண்டு வெடிப்பு தாதாவான தாவூத் இப்ராகிமுக்கும், நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அவன்தான் முகேஷ் கோச்சாரை இயக்கி உள்ளார்.

தாவூத் இப்ராகிம் வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்தே இந்திய சூதாட்ட புரோக்கர்களை இயக்கி உள்ளான்.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே 2005-ம் ஆண்டு ஷோபன் மேத்தா என்பவரை கைது செய்தனர். அவர் தாவூத் இப்ராகிம் கிரிக்கெட் சூதாட்டகாரர்களை எப்படி இயக்குகிறான் என்ற விவரங்களை விரிவாக கூறி இருந்தான்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாÖமுவேல்ஸ்சுக்கும், முகேஷ் கோச்சாருக்கும் தொடர்பு இருந்த விவரத்தையும் அப்போதே ஷோபன் மேத்தா மும்பை போலீசில் கூறி இருந்தார்.

தாவூத் இப்ராகிம்- ஷோபன் மேத்தா இருவரும் முன்பு சூதாட்ட தொழிலில் எதிரெதிர் திசையில் இருந்தனர். 1999 சார்ஜா கோப்பை போட்டி நடந்தபோது ஷோபன் மேத்தா சூழ்ச்சியால் தாவூத் இப்ராகிம் ரூ.17 கோடியை சூதாட்டத்தில் இழந்தான்.

எனவே தாவூத் இப்ராகிம் ஷோபன் மேத்தா இந்தியாவில் உள்ள சூதாட்ட புரோக்கர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். இவர்களை அனைவரையும் நிர்வாகிப்பதற்காக ஷரத் ஷெட்டி என்பவனை நியமித்தான்.

முகேஷ் கோச்சாரும் தாவூத்தின் கீழ் இயங்கும் புரோக்கர்களில் ஒருவர் ஆனார். கிரிக்கெட் சூதாட்டத்தின் போது ஒவ்வொரு `பெட்’டுக்கும் தகுந்த மாதிரி புள்ளிகளை நிர்ணயம் செய்வது உண்டு. அதை தாவூத் இப்ராகிம்தான் வெளிநாட்டில் இருந்து நிர்ணயம் செய்வான். அதன் பின்னர் இணைய தளம் மூலம் சூதாட்ட பரிமாற்றங்கள் நடைபெறும்.

Posted in Abu Salem, Antiguay, Azhar, Azharuddin, Bahamas, Barbados, BCCI, betting, bookie, bookmaker, Chennai, Coach, Connections, Corruption, Cricket, Cuba, Dawood Ibrahim, Don, Enforcement, Gaekwad, Gamble, gang, Gavaskar, Hansie Cronje, ICC, India, Jadeja, Kapil Dev, kickbacks, Law, Madras, Manager, Manoj Prabhakar, Marlon Samuel, Match fixing, Mukesh Kocchar, Mumbai, Nagpur, ODI, One day, One Day International, Operations, Order, phone, Police, revenge, rivalry, Robin Singh, Samuels, Shobhan Mehta, Test Match, Trinidad & Tobago, Underworld, Wadekar, West Indies | Leave a Comment »

Temple welcoming Dalits turns 100 – Lakshmi Narayan Temple by Bachraj Bajaj

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

தீண்டாமைக்கு எதிரான முதல் புரட்சி: தலித்துகள் நுழைய அனுமதிக்கப்பட்ட லட்சுமி நாராயணன் கோயிலுக்கு வயது 100

நாகபுரி, ஜன. 25: இந்தியாவில் முதன்முதலாக தலித்துகள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்ட கோயில் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இருந்து 80 கி.மீ தொலைவில் வார்தாவுக்கு அருகே உள்ளது லட்சுமி நாராயணன் கோயில். 1907 ஜனவரி 23 அன்று இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் நடந்தது. 1928ல் சுமார் 2000 தலித் சமூக மக்கள் இக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்தனர். இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை அதிகமாக நடந்த அந்தக் காலகட்டத்தில் இந் நிகழ்வு ஒரு புரட்சியாகவே கருதப்பட்டது.

மிகப் பெரும் தொழிலதிபரும், சமூக சீர்திருத்தவாதியுமான பஜ்ராஜ் பஜாஜ் இக்கோயிலைக் கட்டினார். இவரது வளர்ப்பு மகனான ஜம்னாலால் பஜாஜ் காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டவர். இவரும் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாவார். இவரது முயற்சியாலேயே தலித்துகள் கோயிலுக்குள் செல்ல முடிந்தது.

ஜம்னாலாலின் சமூக சேவைகளை தனது “யங் இந்தியா’ பத்திரிகையில் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் காந்திஜி. சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் வார்தா பகுதிக்கு வந்த காந்திஜி இக் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

ஜம்னாலாலின் பேரன்கள்தான் தற்போது பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக இருக்கும் ராகுல் பஜாஜ் மற்றும் சேகர் பஜாஜ் ஆகியோர் ஆவர்.

Posted in Bachraj Bajaj, Bajaj, Bajaj Auto, Bajaj Electricals, Dalits, Harijan, Jamnalal Bajaj, Lakshmi Narayan Temple, Lakshmi Narayanan Temple, maharashtra, Mahatama Gandhi, Nagpur, Rahul Bajaj, Shekhar Bajaj, Untouchability, Vardha, Wardha | Leave a Comment »

Spurious Bt cotton seeds drive hundreds of farmer suicides

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

போலி பி.டி. பருத்தி விதையால் ஏற்பட்ட நஷ்டமே விதர்பா விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்!

புதுதில்லி, நவ. 27: மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் போலியான பி.டி. ரக பருத்தி விதைகளை பயிரிட்டதன் விளைவாக ஏற்பட்ட நஷ்டத்தால் தான் விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டில் விதர்பா, மற்றும் மாநிலத்தின் மற்றப் பகுதிகளிலும் மொத்தம் 746 விவசாயிகள் (கேரளாவில் 52) தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெருத்த சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சம்பவ இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், விதர்பா பகுதிக்கென தனி நிவாரண உதவிகளை பிரதமர் அறிவித்தார். அதேபோல, மகாராஷ்டிர மாநில அரசும் விவசாயிகளுக்கு பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்திருந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய விவசாயமே பருத்தி தான். அதனால், தான் மும்பை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவன ஆய்வு: விவசாயிகள் தற்கொலை கொண்டது ஏன் என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய வேளாண் அமைச்சகம் நாகபுரியில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, இப் பகுதியில் ஆய்வினை மேற்கொண்ட இந்நிறுவனம் அதன் அறிக்கையை வேளாண் அமைச்சகத்திடம் அளித்தது.

அதில், போலியான பி.டி. ரக பருத்தி விதைகளை விநியோகம் செய்ததால் அவற்றை நம்பி பயிரிட்ட விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. பருத்தி பயிரிட வாங்கிய கடன்களை கட்ட முடியாமலும், மறுபடியும் பயிரிட முடியாமலும் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 சதவீதம் போலியானவை: குறிப்பாக, பயிரிட்ட பருத்தியில் 20 சதவீத விதைகள் பி.டி. விதைகளே அல்ல என்றும் தெரிய வந்துள்ளது. மற்ற 60 சதவீத விதைகள் கலப்பட விதைகள் என்றும், மீதி 20 சதவீத விதைகள் தான் தரமான விதைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பருத்தி பயிரிடும் விவசாயிகள் போலியான விதைகளை கண்டறியும் விதத்திலான கருவிகளை அளிக்குமாறு மாநில அரசை மத்திய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் 11 விவசாயிகள் தற்கொலை

நாகபுரி, நவ. 27: மகாராஷ்டிரத்தில் கடன்சுமை காரணமாக மேலும் 11 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

விதர்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.

இத்துடன், கடந்த ஜூனிலிருந்து அப்பகுதியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.

இத் தகவலை அப்பகுதியில் செயல்படும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

Posted in Agriculture, Bollgard worm, Bt paddy, BT Rice, Central Institute for Cotton Research, Cotton, Farmers, Genetic Crops, ICAR, Kerala, maharashtra, Monsanto, Nagpur, peasants, Suicide, Vidarba, Vidarbha, Vidharbha | Leave a Comment »

The Khairlanji Atrocity – Police Ban : Dalit groups hold protests in Nagpur

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

4 தலித்துகள் படுகொலை விவகாரம்: நடவடிக்கைக் கோரி தலித் அமைப்பு ஏற்பாடு செய்த ஊர்வலத்துக்கு போலீஸ் தடை

நாகபுரி, நவ. 13: மகாராஷ்டிர மாநிலத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தலித் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்துக்கு போலீஸôர் தடை விதித்தனர்.

கடந்த செப்டம்பரில் மகாராஷ்டிர மாநிலம் பந்தாரா மாவட்டம் கையர்லாஞ்ச் கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற 2 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இச் சம்பவத்துக்கு உயர் சாதிப் பிரிவினரின் ஆதிக்க வெறியே காரணம் என பல்வேறு அமைப்புகள் புகார் தெரிவித்தன.

சம்பவம் நடந்து நீண்ட நாளாகியும் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. இதனால், வெகுண்ட தலித் மக்கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

நாகபுரியைச் சேர்ந்த தலித் அமைப்பு, இந்த விவகாரத்தில் நீதி கோரி ஊர்வலம் நடத்த முடிவு செய்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை, அம்பேத்கர் சிலை அருகே ஆயிரக்கணக்கான தலித் மக்கள் கூடினர்.

இதை முன்கூட்டியே அறிந்த போலீஸôர், முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர். மேலும், ஊர்வலத்தால் அசம்பாவித சம்பவங்கள் நேரிடலாம் என்று கருதி போலீஸôர் ஊர்வலத்துக்கு தடை விதித்ததாகவும் நகர போலீஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தார்.

Posted in atrocity, Ban, Bhaiyyalal Bhotmange, Bhandara, Dalit, Khairlanji, Kherlanji, maharashtra, Nagpur, Protests | Leave a Comment »

Hindu Dalits converted to Buddhism & Christianity

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 14, 2006

இந்தியாவில் தலித்துகள் மதமாற்றம்

இந்தியாவின் நாக்பூர் நகரில் இன்று நூற்றுக்கணக்கான தலித்துகள் இந்து மதத்தில் இருந்து பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியுள்ளனர்.

இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர்களில் ஒருவரும், தலித் கல்விமானும், தலைவருமான அம்பேத்கார் அவர்கள், பௌத்த மதத்துக்கு மாறிய 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று நடந்த இந்த மதமாற்ற வைபவத்தில் ஆயிரக்கணக்கான தலித்துகள் கலந்து கொண்டனர்.

ஆயினும் அவர்களில் சில நூறு பேரே மாற்று மதத்தை இன்று தழுவிக்கொண்டனர்.

இந்தியாவில் சுதந்திரம் கிடைத்தது முதல் தீண்டாமை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கு இன்னமும் மக்களின் மனதில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று அங்குள்ள பெரும்பாலான தலித்துகள் கூறுகின்றனர்.

தாம் சாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

பல இந்தியக் கிராமங்களில், உயர் ஜாதி இந்துக்கள் நீரெடுக்கும் கிணறுகளில், குடி நீர் எடுப்பதற்கு இந்த தலித்துகளுக்கு அனுமதி கிடையாது.

அத்துடன் பிற சாதியினர் செய்யத் தயங்கும் சாக்கடை அள்ளுதல் போன்ற தொழில்களை தலித்துகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இந்து தேசியவாதக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில், இத்தகைய மதமாற்றங்களுக்கு, முன்பாகவெ அரசாங்க அனுமதி பெறவேண்டும் என்று இந்த ஆண்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Posted in Ambedkar, Buddhism, Christianity, Conversion, Dalits, Hindu, Hinduism, minority, Nagpur, Oppression, Religion, Untouchability | Leave a Comment »