ஈழவாஸ் என்பது ஒரு புரட்சிகர மார்க்கம்
வழக்குரைஞர் எஸ்.இளங்கோவன்
நூலிலிருந்து :
கேரள மண்ணில் ஈழவ மக்களிடம் உதை பெற்ற பார்ப்பனியம் தனது முந்தைய பலத்தை இழந்திருந்தது. இந்த காலகட்டத்தில் சவர்ணர்-கள் அவர்ணர்கள் போராட்டம் கேரள மண்-ணில் தீவரமடைந்திருந்தது.
ஸ்ரீநாராயணகுரு நெய்யாற்றின் கரை எனும் ஊரில் உள்ள ஊரூட்டம்பலத்தில் இருந்து பள்ளிக் கூடத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த புலயர்களையும் பள்ளியில் சேர்த்து கல்வி அளிக்க வேண்டுமென்று கோரி-யிருந்தார். அதனை மறுத்த சவர்ணர்கள் புலயர்-களை அடித்து மிகவும் துன்புறுத்தினார்கள். தாக்குதலுக்குள்ளான புலயர் மக்களை அருவி-புறம் வரவழைத்து அவர்களை சமாதானப்-படுத்தினார்.
அய்யன்காளிப்படை என்றோர் மக்கள் குடிப்படை (People Millitia) என்றோர் படை உருவானது. பாடசாலை அனுமதி மறுக்கப்-படும் இடங்களில் இப்படை திருப்பி தாக்குதல் தொடுத்தது. கேரளத்து ஈழவ மக்கள் புலயர்களுக்கு ஆதரவாய் களமிறங்க கேரள பார்ப்பனியம் குலை நடுங்கிப் போனது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் உறவு கேரள மண்ணில் வளர்த் தெடுத்தது ஸ்ரீநாராயணகுருவின் முற்போக்கு பார்வை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கேரளத்தில் “தலித் விடுதலை” என்ற முழக்கம் எழுவதில்லை. ஏனென்றால் ஈழவர்கள் அங்கு தலித்துகளை பாதுகாத்த-தோடு பார்ப்பனி-யத்தை பாடையில் ஏற்றினார்கள்.