Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007
தமிழகத்தில் 2 புதிய தொழிற்சாலை: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை, செப். 13:தமிழகத்தில் 2 புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை கையெழுத்தானது.
ஃபென்னர் இந்தியா நிறுவனம் மற்றும் கெப்பாரோ இன்ஜினீயரிங் இந்தியா (பி) நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.
இவ்விரு நிறுவனங்களும் சிப்காட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது, கட்டுமான வசதி மற்றும் திட்ட வசதிகள் குறித்து எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
சிப்காட் மேலாண் இயக்குநர் கோவிந்தன் மற்றும் ஃபென்னர் இந்தியா நிறுவனம் சார்பில் எல். ராம்குமார் ஆகியோரும் கெப்பாரோ என்ஜினீயரிங் சார்பில் சுனில் ஹிலாஜனி ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
ஃபென்னர் இந்தியா நிறுவனம் டயர் பேப்பர், சிமென்ட், பால் பண்ணை, அக்ரோ ஜெனிடிக்ஸ் மற்றும் பிற பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் இந்நிறுவனத்தின் முதலீடு ரூ. 200 கோடியாகும்.
தற்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழில் பூங்காவில் ஆயில் சீல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தொடங்க முன்வந்துள்ளது. அத்துடன் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பெல்ட் தயாரிப்புக்கான தொழிற்சாலை ஒன்றை, பின்தங்கிய பகுதியான நிலக்கோட்டையில் தொடங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ. 35 கோடி முதலீட்டிலான இத்தொழிற்சாலை மூலம் நேரடியாக 150 பேருக்கும் மறைமுகமாக 150 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிறுவனம் ஓராண்டில் உற்பத்தியைத் தொடங்கும்.
லண்டனில் வாழும் இந்தியத் தொழிலதிபர் ஸ்வராஜ்பாலின் குழும நிறுவனம் கெப்பாரோ இன்ஜினீயரிங். இந்நிறுவனம் சென்னையை அடுத்த ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை தொடங்க உத்தேசித்துள்ளது. அத்துடன் இயந்திர வில்லைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிலக்கோட்டையில் தொடங்கவும் இந்நிறுவனம் முன்வந்துள்ளது. ரூ. 40 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இத்தொழிற்சாலை மூலம் 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 2009-ம் ஆண்டு அக்டோபரில் இத்தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கும் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in Agriculture, Belts, Caparo, Commerce, Conveyor, DMK, Economy, Employment, Factory, Farming, Fenner, Genetics, Industry, Jobs, milk, MoU, Nilakkottai, Nilakottai, oil, Seal, Seals, SIPCOT, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, Sriperumputhoor, Sriperumputhur, Stalin, Tamil Nadu, Work | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007
நகரம்: சென்னை – 133!
ரவிக்குமார்
தலைப்பைப் பார்த்துவிட்டு “133′-ஐ ஏதோ தபால்துறையில் பயன்படுத்தப்படும் பின்கோட் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உலக அளவில் வாழ்வதற்கு அதிகமான செலவு பிடிக்கும் நகரங்களில், நமது சென்னை மாநகரம் 133-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. “காஸ்ட் ஆஃப் லிவிங் பெங்களூர்ல ரொம்ப அதிகம்பா’ன்னு யாராவது கூறினால்… நம்பாதீர்கள். ஏனென்றால், பெங்களூர் இந்த வரிசையில் நமக்கு அடுத்துதான் வருகிறது!
மாஸ்கோ, லண்டன், சீயோல், டோக்கியோ, ஹாங்காங், கோபன்ஹெகன் வரிசையில் நம்முடைய சென்னையும். அமெரிக்காவின் புகழ்பெற்ற “மெர்சர்ஸ்’ நிறுவனம் தான் உலகளாவிய இந்தச் சர்வேயை ஆறு கண்டங்களில் எடுத்திருக்கிறது. சென்னைவாசிகள் தங்களின் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் வகையில், அந்தச் சர்வேயில் இருக்கும் இதர விவரங்களைப் பற்றியும், அது தொடர்பாக சிலரின் கருத்துகளும் இதோ:
- கல்வி,
- பொருளாதாரம்,
- அன்னியச் செலாவணியை கவரும் வகையிலான திட்டங்கள்,
- போக்குவரத்து,
- உடை,
- உணவு வகையிலான மாற்றங்கள்,
- மக்களின் வாங்கும் திறன்,
- அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,
- தனிமனித வருவாய்,
- வீட்டு உபயோகப் பொருள்கள்,
- பொழுதுபோக்கு அம்சங்கள்…
இப்படி 200 வகையான அளவுகோல்களின் மூலம், வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களை தரப்படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில் உலகிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக தேர்வாகியிருப்பது
- சீயோல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆசியாவின் எட்டு நகரங்கள் 50-வது இடத்தைப் பிடித்திருக்கின்றன.
- மும்பை 52-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
- புதுதில்லி 62-வது ரேங்கில் இருக்கிறது.
அமெரிக்காவின் மெர்சர்ஸ் நிறுவனம் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களாக 143 நகரங்களை ஆறு கண்டங்களில் அறிவித்திருக்கிறது. இதில் 133-வது இடத்தை சென்னை பெற்றிருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?சென்னையைப் பொறுத்தவரை நகரத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது. வியாபாரம், தொழில் நிமித்தமாகவும், கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காகவும் ஒருநாளில், அதிகமான எண்ணிக்கையில் சென்னை நகரத்துக்கு வந்து போகும் மக்கள் தொகை (Floating Population) நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.
“”சென்னை ஒரு காஸ்ட்லியான நகரமாக இருப்பதற்கு, பரவலாக அதிகரித்திருக்கும் தனிநபர் வருமானமும் ஒரு காரணம். மற்ற நகரங்களைப் போல மக்கள் இங்கிருந்து புறநகர்களுக்கு இடம்பெயர்வதற்கு விரும்புவதில்லை” என்கிறார் மத்திய வணிக வளர்ச்சிக் குழுமத்தின், தமிழ் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ரஃபிக் அகமத்.
“”தங்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதற்காக, பணி செய்யும் இடத்திற்கு அருகாமையில் வாடகை வீட்டிலாவது இருந்து நிலைமையைச் சமாளிப்போம்” என்ற யோசனையோடு நாளுக்கு நாள் புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
“”கும்மிடிப்பூண்டியில இருந்து நான் மட்டும் வேலைக்கு வந்துட்டிருந்தேன். அப்போது அங்கேயே ஒரு சின்ன ஸ்கூல்ல குழந்தைங்களைப் படிக்க வச்சிட்டிருந்தேன். இப்போ என் மனைவியும் வேலைக்குப் போறாங்க. அதனால தைரியமா சென்னைக்கு வந்துட்டோம். குறைஞ்ச வாடகைக்கு கும்மிடிப்பூண்டியில இருக்கிற எங்க வீட்டை விட்டுட்டு இங்க குடித்தனம் இருக்கிறோம். கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்கள நாங்க நினைச்சா மாதிரி நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம்கிற திருப்தி இருக்கு” என்கிறார் சென்னை, சாலிக்கிராமத்திலிருக்கும் கல்யாணராமன்.
சென்னை நகரத்திற்குள் இடம் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய வீடுகளின் மதிப்பும், ஃபிளாட் வகையான வீடுகளுக்கும் கூட இன்றைக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருக்கின்றது.
நாளுக்கு நாள் சென்னை நகரத்தில் பெருகிவரும் ஐ.டி. தொழில்நுட்ப வளாகங்களும், தொழிற்சாலைகளும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஏறுமுகத்தில் கொண்டு செல்வதற்குக் காரணமாக இருக்கின்றன. “”பெங்களூரோடு ஒப்பிடுகையில் நில வியாபாரம் சென்னையில் கடந்த சில மாதங்களில் விலை அதிகம் உயர்ந்திருக்கின்றது” என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் சிலர்.
சென்னை-133 எஃபெக்டுக்கு, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாடு அரசாங்கத்தின் அணுகுமுறையும் ஒரு காரணம். கடந்த 12 மாதங்களில் 6,985 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழிற்சாலைகளையும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும் சென்னையில் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே ஆட்டோ-மொபைல், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நகரம் என்ற அங்கீகாரத்தை சென்னை பெற்றிருக்கிறது.
உலக அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகச் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கும் “நாஸ்காம்’ என்னும் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் முதலீடுகளைச் செலுத்துவதற்கு தகுதியான ஒன்பது நகரங்களில், சென்னைக்கு மூன்றாவது ரேங்க் கொடுத்திருக்கின்றது.
-என்ன இருந்தாலும் பாரீஸ் போல வருமா… என்று இழுக்கும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நமக்கும் கீழே பத்து நகரங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுங்கள்!
Posted in 133, America, Analysis, Bombay, Boston, Chennai, Compensation, Consumer, Customer, Dress, Economy, Education, Exchange, Expenses, Finance, France, GDP, Homes, Household, Houses, Income, India, Inflation, Interest, job, Korea, LA, London, Madras, Moscow, Moskva, MoU, Mumbai, NYC, Paris, Price, Prices, Purchasing, Rates, Recession, Rent, Russia, Salary, Schools, Seoul, Stagflation, UK, US, USA, USSR, Work | Leave a Comment »