Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Molest’ Category

‘Vyabaari’ song picturisation rumors – SJ Surya’s predatory moves against Malavika?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா மீது நடிகை மாளவிகாவின் புதிய `செக்ஸ்’ புகார்கள்

கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா இடையில் வாய்ப்பின்றி இருந்தார். வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடல் மீண்டும் பிரபலப்படுத்தியது.

“திருட்டு பயலே” படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியது. தற்போது நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார். கூடவே சர்ச்சைகளும் மாளவிகாவை துரத்துகிறது.

தெலுங்கு நடிகர் ராஜேந்திரபிரசாத் மீது ஏற்கனவே செக்ஸ் புகார் கூறினார். ஒரே போர்வைக்குள் இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு காட்சி எடுத்தனர். அப்போது ராஜேந்திரபிரசாத் சில்மிஷம் செய்தார். மாளவிகா ஆத்திரத்தில் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வெளியேறினார். நடிகர் சங்கத்திலும் புகார் செய்தார். இந்த சம்பவம் தெலுங்கு தமிழ் படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் சபரி பட தயாரிப்பாளர் சேலம் ஏ. சந்திரசேகரன் சம்பளம் பாக்கி வைத்திருப்பதாகவும் அதை வசூலித்து தரும்படியும் நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். மாளவிகா சூட்டிங்குக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை கேட்டு அடம் பிடித்தார் என்றும் இவரால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தயாரிப்பாளர் குறைபட்டார்.

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா பாடல் காட்சியில் மாளவிகாவிடம் சில்மிஷம் செய்ததாக புகார் கிளம்பியுள்ளது.

ஷக்தி சிதம்பரம் இயக்கும் வியாபாரி படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். இப்படத்துக்கான பாடல் காட்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரள ஹவுசில் படமாக்கப்பட்டது.

மாளவிகாவுக்கு கொசு கடிக்கும். உடனே அவர் கொசு கடிக்குது கொசு கடிக்குது என்று பாட ஆரம்பிப்பார். அவருடன் எஸ்.ஜே.சூர்யாவும் சேர்ந்து பாடுவார். தேவா இசையில் கவிஞர் வாலி இப்பாடலை எழுதியுள்ளார்.

பாடல் காட்சியில் மாளவிகாவிடம் நெருக்கமாக நடித்தபோது எஸ்.ஜே.சூர்யா கை விரல்கள் மாளவிகா உடலில் தப்புதப்பாக ஊர்ந்ததாம். இதனால் கடுப்பான மாளவிகா படக்குழுவினர் முன்னிலையிலேயே எஸ்.ஜே.சூர்யாவை கன்னா பின்னா வென்று திட்டினாராம். எஸ்.ஜே. சூர்யா மன்னிப்பு கேட்டாராம்.

மாளவிகா வருகிற 18-ந்தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார். அப்போது பரபரப்பான தகவல்களை வெளியிடுவார் என்று தெரிகிறது.

இதற்கிடையில் மாளவிகா மானேஜர் முனுசாமி கூறுகையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மாளவிகாவுக்கும் மோதல் இல்லை என்றும் சுமூக உறவு உள்ளது என்றும் தெரிவித்தார். எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக பேட்டி எதுவும் கொடுக்கவில்லை என்றும் மறுத்தார்.

Posted in Allegations, Deva, ECR, Gossip, Malaiviga, Malavika, Manager, Molest, Munusami, Rumour, Scandal, Sex, Shakthi Chidhambaram, SJ Soorya, SJ Surya, Tamil Actor, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Vaali, Viyabaari, Vyaabari | Leave a Comment »

Noida Child Molesters: Details & Mohinder’s Confession

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

சிறுமிகளை கற்பழித்து கொன்றது எப்படி? காமவெறியன் பரபரப்பு வாக்குமூலம்

புதுடெல்லி, ஜன. 1-

28 வருடங்களுக்கு முன் தமிழிலில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் சினிமாவில் கதாநாயகன் கமலஹாசன் இளம் பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து அவர்களை கற்பழித்து கொலை செய்வதுடன் தனது பங்களா விலேயே புதைத்துவிடுவார்.

இது போன்ற நிஜ சம்பவம் டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் தொழில்அதிபர் மொகிந்தர்சிங். இவரது வீட்டு வேலைக்காரன் சுரேந்திரா.

இவர்கள் இருவரும் நொய்டா நிதாரி பகுதியில் உள்ள பங்களாவில் ஏராளமான சிறுமிகளை கற்பழித்து கொன்று புதைத் துள்ளான். அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

இவர்களது காமவெறிக்கு 38 சிறுவர்-சிறுமிகள்வரை பலியாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே அந்தப்பகுதியில் சிறுவர்- சிறுமிகள் அடிக்கடி மாயமானார்கள்.

தற்போது சுரேந்திரா கைதான தகவல் கிடைத்ததும் சிறுவர்-சிறுமிகளை பறி கொடுத்த பெற்றோர் ஒவ்வொரு வராக வந்து புகார் செய்த வண்ணம் உள்ளனர். இதுவரை 38 சிறுவர்-சிறுமிகளை காணவில்லை என்று புகார் வந்துள்ளது.

கடைசியாக பாயல் என்ற 20 வயது இளம்பெண் சுரேந்திராவின் காமப்பசிக்கு பலியானார். அவளது செல் போன் சுரேந்திராவிடம் இருந்தது. செல்போனை போலீசார் தேடியபோது சுரேந்திரா சிக்கினான்.

இதையடுத்து மொகிந்தர் சிங்கின் பங்களாவைச் சுற்றிலும் கொன்று புதைக்கப் பட்டுள்ள சிறுவர்-சிறுமிகளின் பிணங்களை போலீசார் புல்டோசர் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து வருகிறார் கள். தோண்டத்தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

தொய்டா பகுதி முழுவதும் ஒரே பீதியும் பரபரப்பாகவும் காணப்படுகிறது. பிணங்கள் தோண்டப்படும் மர்ம மாளிகை முன் ஏராளமான பெற்றோர் பரிதவித்தபடி கூடினர். கடுமையான கூட்டம் கூடியதால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தினார்கள். பலத்த பாதுகாப்புக்கு இடையே பிணம் தோண்டி எடுக்கப் படுகிறது.

கடத்திவரப்படும் சிறுமி களை முதலில் தொழில்அதிபர் மொகிந்தர்சிங் கற்பழிப்பார். அதன்பிறகு வேலைக்காரன் சுரேந்திரா அனுபவித்து கொன்று புதைத்துவிடுவான். இந்த தொடர் கொலையில் மொகிந்தர்சிங்கும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரிடமும் போலீசார் காவலில் வைத்து விசாரித்து வருகிறார் கள்.

சிறுமிகளை கற்பழித்து கொன்றது பற்றி சுரேந்திரா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறான். அதில் கூறியிருப்பதாவது:-

நான் தொழில்அதிபர் மொகிந்தர்சிங் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வருகிறேன். மொகிந்தர்சிங் மனைவியைப்பிரிந்து வாழ்ந்து வந்தார். தனிமையில் இருந்த அவர் அழகிகளை அழைத்து வந்து அனுபவிப்பார். அவருக்கு சிறுமிகள் என்றால் பிடிக்கும்.

அவரது எண்ணத்தை புரிந்து கொன்ட நான் முதன்முதலாக ஜோதி என்ற 10 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டுக்குள் அழைத்து வந்தேன். அவரது தந்தை ஜாபுலால். சலவைத்தொழிலாளியான இவரது மகள் வீடு வீடாக சென்று துணிகளை சேகரித்து அதை சலவை செய்து கொடுப்பாள்.

எங்கள் பகுதி வழியாக சிறுமி துடுக்காக நடந்து செல்வாள் ஒருநான் அவளை வீட்டுக்குள் துணிகளை எடுத்துச்செல்ல வருமாறு அழைத்துச்சென்றேன். வீட்டுக்குள் நுழைந்ததும் அவளை ஒரு அறையில் தள்ளினேன். எஜமான் மொகிந்தர்சிங் முதலில் சிறுமியை கற்பழித்தார். அவர் அனுபவித்து சென்ற பின் நானும் சிறுமியை பலாத்காரம் செய்தேன். அவளை வெளியில் விட்டால் விபரீதமாகிவிடும் என்பதால் அவள் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றேன். பிணத்தை வீட்டுகால்வாயில் குழிதோண்டி புதைத்து விட்டேன்.

இதுதான் நான் செய்த முதல் கொலை அதன்பிறகு நிறைய சிறுமிகள் மட்டுமல்லாது சிறுவர்களையும் அழைத்து வந்து `செக்ஸ்’ இன்பம் அனுபவித்து கொன்றோம். எத்தனை பேர் என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.

முதலாளி மொகிந்தர்சிங் அடிக்கடி விபசார அழகிகளை வீட்டுக்கு அழைத்துவந்து உல்லாசமாக இருப்பார். பாயல் என்ற இளம்பெண் அடிக்கடி வந்து மொகிந்தர்சிங்குடன் உல்லாசமாக இருப்பாள்.

அவளுக்கு நாங்கள் சிறுமிகளிடம் `செக்ஸ்’ இன்பம் அனுபவித்து கொலை செய்த விவரம் தெரிந்து விட்டது. அவள் மொகிந்தர்சிங்கை `பிளாக் மெயில்’ செய்து பணம் பறிக்க திட்டமிட்டாள். இதனால் அவளது கதையை முடித்துவிடு என்று எனக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 7-ந்தேதி வழக்கம் போல் வீட்டுக்கு வந்த பாயலை கொன்று பிணத்தை புதைத்துவிட்டேன்.

ஆனால் அவளது செல்போன் எங்கள் வீட்டில் இருந்ததால் அதை வைத்து போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு சுரேந்தரா கூறினார்.

காணாமல் போன சிறுமிகளின் போட்டோக்களை போலீசார் அவனிடம் காட்டியபோது அவர்களை கற்பழித்து கொன்று விட்டதாக கூறி அடையாளம் காட்டினான்.

சுரேந்திராவின் காமவெறிக்கு பலியான சிறுமி ஜோதியின் தந்தை சலவைத்தொழிலாளி ஜாபுலால் கூறுகையில், “நான் எனது மகளை காணவில்லை என்று 18 முறை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எனது புகாரை கவனிக்கவேயில்லை. அப்போது இதன் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் படுகொலைகள் நீடித்து இருக்காது” என்றார்.

கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மொகிந்தர் சிங் ஹரித்வார், பாகப்பட், டேராடூன், நொய்டா ஆகிய இடங்களில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவருக்கு மாதவருமானம் மட்டும் ரூ. 23 லட்சம் முதல் 30 லட்சம் வரை கிடைக்கும். மொகிந்தர்சிங்கின் மனைவி தவிந்தர்கவுர். இவர் கணவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் 2 வருடங்களுக்கும் முன்பே பிரிந்து சென்று விட்டார். அவர் மொகிந்தரின் தம்பி இக்பாலுடன் வசித்து வருகிறார்.

இது போல் மொகிந்தர்சிங்குடன் அவரது சகோதரர்களுக்கு சொத்து பிரச்சினை இருந்தது இதனால் சகோதரர்களும் மொகிந்தரை விலக்கி வைத்தனர்.

அவரது தம்பி இக்பால் சிங் கூறுகையில் “மொகிந்தர்சிங் எப்போதும் பிரச்சினை செய்து கொண்டே இருப்பான். கடந்த 6 வருடமாக அவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை அவன் என்ன செய்து வந்தான் என்று தெரியாது” என்றார்.

மொகிந்தரின் பள்ளி தோழர்கள் கூறுகையில் “அவன் மோசமானவன்” என்றனர். மேலும் சிலர் கூறுகையில் “அவன் ஜாலியானவன். ஆனால் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாக இருக்கிறது” என்றனர்.

மொகிந்தரின் மைத்துனர் இக்பால்சிங், பஞ்சாப் காங்கிரசில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவரிடம் கேட்டபோது, “தனது தங்கையுடன் சரியாக வாழாததால் 2 வருடங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டதாக” தெரிவித்தார்.

Posted in Child Molestation, Confession, crimes, Delhi, Molest, Moninder Singh Pandher, Noida, Police, Rape, UP, Uttar Pradesh | 1 Comment »

Noida Serial Killers: 22 Bodies, 30 Children – UP sacks 6 cops, suspends 3 officers

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2007

நொய்டா சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை

இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு அருகே நொய்டா என்னும் இடத்தில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டது குறித்து இந்திய அரசு, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இந்தக் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று ஆராயும்.

சாக்கடை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் குழந்தைகளின் பிரேத எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே அவர்கள் காணமல் போயிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் வர்த்தகர் ஒருவரும், அவரது வேலைக்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச பொலிஸாரினால் எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள், போதுமானவை அல்ல என்று, பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் புகார் செய்துள்ளன.

Posted in Child Molester, Children, children missing, Law, Lucknow, Minors, Molest, Moninder Singh Pandher, Naveen Chandra Bajpei, Noida, Piyush Mordia, Police, Rape, Serial Killers, Sewak Ram Yadav, Soumitra Yadav, UP, Uttar Pradesh, Women | 1 Comment »

Indian Military vs West Bengal Police in Calcutta

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2007

பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய இராணுவத்தினர்- கொல்கத்தாவில் சம்பவம்

இந்திய இராணுவத்தினர்
இந்திய இராணுவத்தினர்

புத்தாண்டுக் கேளிக்கை கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்டத்திர ஒட்டலுக்கு சென்ற இந்திய இராணுவத்தின் மேஜர் மற்றும் கேப்டன் தர அதிகாரிகள் இருவர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த இரண்டு அதிகாரிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு – காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதையறிந்த, அந்த இரு அதிகாரிகள் பணிபுரியும் 3 ஆவது மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப் கேணல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும், சில சிப்பாய்களும், தானியங்கி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று, தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளை விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல் நிலையத்தையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.

இதில் 11 காவலர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்ட வேறு சிலர் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க அரசு இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.

சீரழிந்துவரும் ஒழுங்கு நிலை, பொதுமக்களின் ஏமாற்றம், குற்றப்பிரிவினர் செயற்படாதமை, நாட்டில் குற்றம் புரிந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பது போன்ற நிலைமைகளில் உருவாகின்ற இராணுவத்தினர் மத்தியிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கர்ணல். ஹரிகரன் கூறியுள்ளார்.

இராணுவத்தினர் செய்யும் சில பாதகமான நடவடிக்கைகள் மாத்திரமே செய்திகளாக வெளிவருவதாகவும், அவர்கள் செய்யும் நல்ல செயல்கள் எதுவும் வெளிவருவதில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

Posted in Army, Calcutta, Captain, Captain Mahesh, Colonel, Demolition, Government, Incidents, India, Jail, jawans, Kolkata, Lieutenant-Colonel Pratap Singh, Madras Regiment, Major, Major Chandra Pratap Singh, Major Kavi, Military, Misbehaviour, Molest, Negative, New Year, officers, Park Street, Police, Police Commissioner, Police Station, Prison, Protest, raiders, ransacking, WB, West Bengal | 2 Comments »