Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007
இரானிய அதிபரின் கொள்கை குறித்து கேள்வியெழுப்பும் தீர்மானம்
 |
 |
இரானிய அதிபர் அஹமிதி நிஜாத் |
இரானிய அதிபர் அஹமிதி நிஜாத் அவர்களை, தனது கொள்கைகள் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க கூறும் முகமாக, அவரை அழைக்க வழி செய்யும் தீர்மானத்திற்காக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் கையொப்பங்களை பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார்கள்.
அவ்வாறு அழைப்பதற்கு தேவைப்படும் 75 கையெழுத்துக்களில் 50 கையெழுத்துகளை பெற்றுள்ளதாக சீர்திருத்த மற்றும் மிதவாத அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
இது, இரானுக்குள்ளேயே அதிபருக்கு எதிராக வளர்ந்து வரும் விமர்சனத்தின் ஒரு நகர்வே என டெஹ்ரானிலுள்ள பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அதிபரின் வரவு செலவு திட்டம் குறித்து கவலை வெளியிட்டு, அங்கு 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்கள்.
இரான் அதிபர் கடந்த சில நாட்களாக மேற்கத்திய நாடுகள் மீது கடும்போக்கு கொள்களை கடைபிடித்து வருகிறார் என்றும், அவரது பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை விமர்சித்தும் பல தினசரிகள் தலையங்கங்களை எழுதி வருகின்றன.
Posted in Answer, Ayatollah Ali Khamenei, Budget, Criticism, economic forecasts, Editorials, future oil prices, holocaust, Iran, Mahmoud Ahmadinejad, moderate, Nuclear, parliament, Policy, Politics, President, Pressure, Questions, reformist | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006
அன்டன் பாலசிங்கம் காலமானார்
 |
 |
அன்டன் பாலசிங்கம் |
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் இன்று இலண்டன் நகரில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.
இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கும் மேலாக விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றியதாகக் கருதப்படும் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள், இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில், விடுதலைப் புலிகள் குழுவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் அவர் இருந்திருக்கிறார்.
பல ஆண்டு காலமாக இலண்டன் நகரில் வசித்து வரும் ஆண்டன் பாலசிங்கம் சில மாதங்களாகவே கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின் இரங்கல்
தமிழீழத்தின் ராஜகுருவாக திகழ்ந்த அன்டன் பாலசிங்கத்தை பிரிந்து தமிழ் இனம், ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது என்று அன்டன் பாலசிங்கத்தின் இல்லத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்டன் பாலசிங்கம் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் முழ்கியுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
விமர்சகர் கருத்து
பாலசிங்கத்தின் மறைவு விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் என்று கனடாவில் இருக்கும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.
 |
பாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது

விடுதலைப் புலிகள்
|
முதலில் இடது சாரி சிந்தனையாளராக இருந்த பாலசிங்கம், பிறகு தமிழ் தேசிய சிந்தனையாளராக மாறியதாகக் குறிப்பிட்ட டி பி எஸ் ஜெயராஜ், போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு சிக்கல்கள் வரும்போதெல்லாம், அந்த சிக்கலில் இருந்து புலிகளை அரசியல் ரீதியாக மீட்க பாலசிங்கம் பாடுபட்டார் என்றார்.
ஆனால் அதே சமயம், ஆயுதப் போராட்டத்தை அரசியல்ரீதியாக வழிநடத்துவதற்கு பதிலாக, ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டதாகவும் டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.
Posted in Adele Ann, Anton Balasingham, Australia, bloodshed, British High Commission, cancer, cholangiocarcinoma, Colombo, diabetes, Eelam, Eezham, insulin, IPKF, Jaffna, journalist, London, LTTE, Marxism, moderate, Negotiator, Norway, Peace, Prabhakaran, Psychology, Rajiv Gandhi, Sri lanka, Stanislaus, strategist, Tamil Eelam, Tamil nationalism, Viduthalai Puli, Viduthalai Puligal | 2 Comments »