Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2007
கேமிரா செல்போனில் குளிப்பதை படம் பிடித்ததால் ஆசிரியை தற்கொலை
நகரி, ஆக. 24-
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிவானந்த புரத்தை சேர்ந்தவர் சுனிதா (27). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நிரஞ்சன் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மேல்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திரகுமார் ஆகியோர் பக்கத்து வீட்டு மாடியில் ஒளிந்திருந்து கேமிரா செல்போனில் படம் பிடித்த
னர்.பின்னர் அவர்கள் இருவரும் சுனிதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதில், “எங்களுக்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும். இல்லை யென்றால் நீங்கள் குளித்த போது எடுத்த படங்களை இண்டர்நெட்டில் வெளியிடு வோம்” என்று எழுதி இருந்தனர்.
இதைப்பார்த்ததும் அதிர்ச்சி யடைந்த அவர் உடனே கணவரிடம் இதுபற்றி கூறினார். பின்னர் சின்ன சவுக்னார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் 2 மாணவர்களையும் அழைத்து கண்டித்து அனுப்பி விட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்யவில்லை.
இந்த நிலையில் ஆசிரியை சுனிதா தன்னை மாணவர்கள் நிர்வாணமாகபடம் எடுத்து விட்டார்களே என்று வேதனை யில் அழுதபடியே இருந்தார். வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
——————————————————————————————–
வீடியோ-செல்போனில் ஆசிரியையை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டல்: பல்கலைக்கழக பேராசிரியர் கைது
டேராடூன், ஆக. 24-
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் குருகுல் கங்கிரி சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்ளது. 105 ஆண்டு பாரம் பரியமிக்க இந்த பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் அவ மான சம்பவம் நடந்தது.
இங்கு பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள் அருண் குமார், ராஜீவ் சர்மா, மனோஜ்குமார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து குருகுல் பெண்கள் கல்லூரியில் பணி யாற்றும் ஆசிரியை ஒருவரை நிர்வாணப்படம் எடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது.
ஆசிரியையின் நிர்வாணப் படத்தை அவர்கள் சி.டி.க் களாக தயாரித்தனர். செல் போனிலும் அதை படம் பிடித்து எம்.எம்.எஸ்.மூலம் மற்றவர்களது செல்களுக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேராசிரியர்களில் ஒரு வரது மனைவி தனது கணவரின் செல்போனில் பெண்ணின் ஆபாசபடம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த படத்தில் இருப்பது கணவரது பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியின் ஆசிரியை என் பது தெரியவந்தது.
உடனே அவர் செல்போனில் இருந்த ஆபாச படத்தை சம்பந் தப்பட்ட ஆசிரியையிடம் காட்டி `உன்னை எப்படி என் கணவர் படம் எடுத்தார்’ என்று கேட்டு சண்டை போட்டார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு கல்லூரி முதல்வர் வரை சென்றது.
அவர் இது பற்றி சமஸ்கிருத பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் துணைவேந்தர் ஸ்வாந் திர குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்களும் உடன டியாக சஸ்பெண்டு செய்யப் பட்டனர். இவர்களில் ராஜீவ்குமார் என்பவர் தற்காலிக பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார். நிர்வாணப்படத்தில் வரும் ஆசிரியையிடம் துணைவேந்தர் விசாரணை நடத்தினார்.
நிர்வாணப் படத்தில் வரு வது நான் இல்லை என்றும் தனது முகத்தை கிராபிக்ஸ் மூலம் நிர்வாண படத்துடன் இணைத்துள்ளனர் என்றும், இந்தப் படங்களை காட்டி தன்னை 3 பேராசிரியர் களும் பல்வேறு விதத்தில் “பிளாக் மெயில்” செய்து மிரட்டி னார்கள் என்றும் கூறினார்.
பல்கலைக்கழக குழு விசாரணைக்குப் பின் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இதற்குள் 3 பேராசிரியர்களும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களில் மனோஜ்குமார் என்பவர் போலீசில் பிடி பட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார் கள்.
இதற்கிடையே இந்தசம் பவம் பல்கலைக்கழகம் முழு வதும் பரவியது. 3 பேராசி ரியர்களையும் கைது செய் யக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது 3 பேராசிரி யர் களின் கொடும்பாவியும் எரிக் கப்பட்டது.
Posted in abuse, Bath, Bathe, Bathing, Camera, Cell, Cellphone, Crime, Education, Exposure, Female, Hidden, Law, male, MMS, Mobile, Naked, Order, phone, Pressure, Professor, Se, Sex, Sexual, Sick, Society, Students, Suicide, Teacher, Torture, University, video | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007
அலசல்: பட்டாம்பூச்சிகளின் மேல் கல்லை வைக்கலாமா?
ரவிக்குமார்
பாரம்பரியத்திலும் கலாசாரப் பெருமையிலும் ஊறிய இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என அலறுகிறது ஒரு புள்ளிவிவரம்.
பெண் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான இந்திய அமைப்பு இந்தியாவில் 53 சதவிதம் குழந்தைகள் பால் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவையே கலக்கியது ஒரு மல்ட்டி மீடியா மெசேஜ் (எம்.எம்.எஸ்). எட்டாவது படிக்கும் மாணவன் அவனுடைய சக மாணவியிடம் நடத்தியிருக்கும் பால் ரீதியான குறும்புகளை அவனே செல்போனில் படம் எடுத்த காட்சிகள்தான் அவை.
மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து எதிர்கால இந்தியாவின் இளைய தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? என்று யோசித்த அரசாங்கம், இந்த ஆண்டு முதல் யுனிசெஃப் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட (ஏ.இ.பி.) வளர்இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தக் கல்வித் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி சிலரிடம் கேட்டோம்.
தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம், பால் ரீதியான விழிப்புணர்வை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த “துளிர்’ அமைப்பின் இயக்குனர் வித்யா ரெட்டி, “”வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அவர்களிடம் ஆலோசிக்காமல் வடிவமைக்கக் கூடாது. இன்னொரு விஷயம், இந்தக் கல்வித் திட்டத்தை குழந்தைகளின் பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உளவியல் அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் கல்வித் திட்டத்தைச் சாதாரணமாக மற்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது பத்தோடு, பதினோராவது வகுப்பாக முடிந்துவிடும்.” என்றார்.
“”நமக்கென்று ஒரு கலாசாரப் பின்னணி இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தையே ஆடவைக்கும் பல வேலைகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறேன். வளர் இளம் பருவத்தினருக்கான இந்தக் கல்வித் திட்டத்தை பெற்றோர்களின் வழிகாட்டுதலோடுதான் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகத்தான் போய் முடியும். முதலில் பெரியவர்களுக்கே பால் ரீதியான கல்வியில் பெரியதாகத் தெளிவு இல்லாதபோது, குழந்தைகளுக்கு அது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என்றார் சுயம் அறக்கட்டளையின் தாளாளரான உமா.
“”இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி ஒருசில வீடுகளில் தான் இருக்கும். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. குடிதண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படும் கிராமங்களில் கூட வீட்டுக்கு வீடு பெரும்பாலும் டிவி இருக்கிறது. கூடவே கேபிள் கனெக்ஷனும். நாளுக்கு நாள் மீடியாவில் விதவிதமான திரைப்பாடல்கள் எந்தவிதமான சென்சாரும் இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் அப்படியே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோதாததற்கு செல்போன், இன்டர்நெட்… என்று எத்தனையோ தகவல் தொடர்புச் சாதனங்கள். அதைப் பயன்படுத்தி எந்த மாதிரியான தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. மீடியா இன்றைக்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் தற்போதுள்ள சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் படிக்கும் முறை, மிகவும் தாராளமாக அவர்களிடம் புழங்கும் செல்போன்கள் எல்லாமே அடுத்தகட்டத்துக்கு அவர்களை மிக அவசரமாகத் தூண்டுபவையாக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கான பால்ரீதியான விழிப்புணர்வுக் கல்வி அவசியம் என்றுதான் நினைக்கிறேன். இந்த பருவத்தின் வாயிலில் இருப்பவர்களுக்குத்தான் நிறைய குழப்பங்கள் இருக்கும். பால் ரீதியான அவர்களின் குழப்பங்களுக்குச் சரியான விளக்கங்களை அவர்களுக்கு பெற்றோர்களும் விளக்குவதற்கு முன்வரமாட்டார்கள். பருவ வயதை அடையும் பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகளை “இது இயல்பான ஒன்றுதான்’ என்று பெண்ணுக்கு எடுத்துச் சொல்வதற்கு யோசிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களுக்கு இப்படி என்றால், ஆண் பிள்ளைகளுக்கும் உடலில் இயல்பான மாற்றங்கள் நடக்கும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் அனுசரனை இல்லாதபோது,
அவர்களுக்கு கேட்காமலேயே கிடைப்பது சக நண்பர்களிடம் கிடைக்கும் ஆலோசனைகள்தான். அவை பெரும்பாலும் தவறான அறிவுரைகளாகவே இருக்கும். முதலில் அவர்களின் உடலை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நல்லவிதமான தொடுதல் என்பவை எது, கெட்டவிதமான தொடுதல் என்பவை எவை என்ற புரிதல்கள் எல்லாம்,இந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் அறிவுறுத்தப்படவேண்டும். கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இந்த விஷயத்தை அணுகாமல், அடுத்த தலைமுறைக்கு இன்றைய சமூகத்தில் இருக்கும் ஆபத்துகளை எதார்த்தமான முறையில் நாம் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார் உளவியல்பூர்வமான ஆலோசனைகளை கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துவரும் சி.ஆர். செலின்.
“”ஸ்டேட்-போர்டு, மெட்ரிகுலேஷன் போர்ட் என எல்லா வகையான கல்வி அமைப்பிலும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை வழங்குவதில் தவறில்லை. இதனால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பயன் விளையும். பொதுவாக மேல்தட்டு மக்கள் பெருவாரியாகப் படிக்கும் பள்ளிகளில், வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு “கவுன்சலிங்’ கொடுப்பதற்கென்றே தனியாக வசதி செய்திருப்பார்கள். வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை தகுந்த அறிதலுடன் அறிவியல் பூர்வமான புரிதல்களுடன் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்கள் ஆத்மார்த்தமான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதேநேரத்தில் எல்லா பள்ளிகளிலும் நிச்சயமாக “புகார் பெட்டி’ வைக்கப்படவேண்டும். அவை மாவட்ட கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். கல்வித் துறையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே இதை வலியுறுத்துகிறோம்.” என்றார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வா.
“”பட்டாம்பூச்சியின் மேல் கல்லை வைப்பது போன்ற செயல்தான் இது. நாகரிகத்தில் நம்மை விட முன்னேறிய நிலையில் இருக்கும் மகாராஷ்டிரம் மாநிலத்திலேயே இந்தச் செக்ஸ் கல்விக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு, அன்னிய நாடுகளின் இத்தகைய கல்வி முறைகள் தேவையே இல்லை. நம் வீடுகளிலேயே நாம் காலம்காலமாக கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகள் அப்படியேதான் இருக்கின்றன. இத்தகைய செக்ஸ் எஜுகேஷன்களால் தேவையில்லாத சந்தேகங்கள்தான் மாணவர்களிடேயே ஏற்படும். அப்படி பால் ரீதியான சந்தேகத்தை செக்ஸ் எஜுகேஷன் தெளிவுபடுத்துவதாகவே இருக்கட்டும். ஆறாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாத தெளிவுதானே? குழந்தைகள் பால் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகும் கொடுமையைக் காரணம் காட்டி செக்ஸ் எஜுகேஷனை ஆதரிக்க முடியாது. வெளிநாடுகளில் கூட இத்தகைய செக்ஸ் எஜுகேஷன் எதிர்மறையான விளைவுகளையே அளித்திருக்கிறது. இந்த கல்வித் திட்டத்துக்குப் பின், முறைகேடான பால் உறவுக்குப் பின் காலை வேளையில் கர்ப்பத் தடைக்காக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளின் விற்பனையும், அதையும் தாண்டி இளம் குழந்தைத் தாய்மார்களின் எண்ணிக்கையும்தான் செக்ஸ் எஜுகேஷனால் வெளிநாட்டிற்கு கிடைத்த பரிசு என்பது “ரெட் அலர்ட்’ என்னும் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்களுக்கே பதினெட்டு வயது ஆனவுடன்தான் அனாடமி வகுப்புகள் நடக்கின்றன. ஆறாம் வகுப்பிலேயே இதைத் தெரிந்து கொள்ளட்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செüந்தரராசன்.
“”அடலசன்ட் எஜுகேஷன் புரோக்ராம் என்பது செக்ஸ் எஜுகேஷன் அல்ல என்பதை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்னமும் இதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்படவில்லை. இந்த ஆண்டே பள்ளிகளில் இந்தத் திட்டத்தை தொடங்குவார்களா என்றும் தெரியாது. அதற்குள் இவ்வளவு எதிர்ப்புகள்.” என்றார் டி.ஏ.வி. பள்ளியின் முதல்வரான டாக்டர் சதீஷ்.
– எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் சாதகமான விஷயங்களும் பாதகமான விஷயங்களும் நிச்சயம் இருக்கும். அதிலிருக்கும் குறைகளைப் போக்கிவிட்டால் எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான்.
Posted in A, abuse, adult, adulthood, Adults, AIDS, Awareness, Biology, Boy, Brain, Censor, Chat, Children, Cinema, Computer, Condom, Controversy, Culture, Development, discussion, Education, Exposure, Female, Formal, Gentleman, Girl, Glamour, Health, HIV, Imagination, Insights, Intercourse, Interview, Issue, Kid, Kiss, Lady, Love, Lust, male, masturbate, masturbating, Mature, Media, menstruation, MMS, Movies, NC-17, Opinions, Period, PG, Physchology, PMS, Private, Rape, Rating, Sex, SMS, solutions, Students, Suggestions, Tamil, Teachers, Teen, Teenage, Textbooks, Thamizh, TV, UNICEF, Violence, VT, Vulgar, WHO | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007
செல்போனில் பரவும் நடிகை யானாகுப்தா ஆபாச படம்
சென்னை, பிப். 16-
செல்போனிலும் இண்டர்நெட்டிலும் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பூட்டுகின்றன. நடிகைகளுக்குத் தெரியாமல் படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் இந்த படங்களை எடுத்து பரவவிடுகின்றனர்.
நடிகை திரிஷா குளியல் அறையில் குளிப்பது போன்ற காட்சி சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்று வதும் நிர்வாணமாக நின்று குளிப்பதும் அப்பட்டமாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் இருப்பது நான் இல்லை என்று திரிஷாமறுத்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஓட்டல்களில் தங்க நடிகைகள் பயந்தனர்.
சிம்ரன், சொர்ணமால்யா சாயலில் இருந்த ஆபாச படங்களும் வெளியாயின. படுக்கை அறையில் இப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
சமீபத்தில் பாபிலோனா நடித்ததாக ஆபாச பட கேசட்டுகள் வெளிவந்தன. ஆபாச படத்தில் தான் நடிக்க வில்லை என்று பாபிலோனா மறுத்தார்.
தற்போது கவர்ச்சி நடிகை யானாகுப்தாவின் ஆபாச படங்கள் செல்போனில் பரவியுள்ளன. இவர் அந்நியன், படத்தில் காதல் யானை பாடலில் ஆடியவர். மன்மதன் படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.
படுக்கையறையில் ஒரு ஆணுடன் இருந்து விட்டு நிர்வாணமாக எழுகிறார். பின்னர் ஆடையின்றி அப்படியே பாத் ரூம் செல்கின்றார். அங்கு சில நிமிடங்கள் குளிக்கிறார். இந்த காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. கதவு துவாரம் வழியாக செல்போனில் இதை படம் எடுத்துள்ளனர். பின்னர் அவற்றை பரவ விட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் செல்போனில் இப்போது இந்த படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.
Posted in Actress, Anniyan, Babilona, Bath, Cellphone, Glamour, Manmadan, Manmadhan, Manmathan, MMS, Nude, Rumour, Sadha, Sex, Shankar, Simbu, Simran, Sornamalya, Trisha, video, Vikram, XXX, Yaana Gupta, Yana Gupta, Yana Guptha | 5 Comments »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007
குடோனில் டிவி நடிகையின் ‘அஜால் குஜால்’!
பிப்ரவரி 07, 2007
சென்னை: ஜவுளிக் கடை குடோனில், குடிபோதையில், பிரபல டிவி நடிகை வாலிபர் ஒருவருடன் படு ஆபாசமான கோலத்தில் இன்பம் அனுபவிப்பதைப் போன்ற செல்போன் வீடியோ காட்சி காவல்துறை அதிகாரியின் செல்போனுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தென் மண்டல குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டரின் செல்போனுக்கு ஒரு எம்எம்எஸ் வீடியோ கிளிப்பிங் வந்துள்ளது. டிவி ஸ்டார் ஃபார் யூ என்ற தலைப்பில் வந்த அந்த வீடியோ கிளிப்பிங்கைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர் ஆடிப் போய் விட்டார்.
பிரபலமான டிவி நடிகை ஒருவர், வாலிபர் ஒருவருடன் ஜவுளிக் கடை குடோனில், யாருக்கும் தெரியாத இடத்தில் படு ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கும் காட்சியும், நடிகையின் ‘ஸ்டிரிப்டீஸ்’ காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.
அந்த வீடியோ கிளிப்பில் இடம் பெற்றுள்ள காட்சிகளின் விவரம்:
அந்த நடிகை சன் டிவியில் ஒளிபரப்பாகும் கோலங்கள் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒரு வாலிபருடன் அந்த நடிகை வருகிறார்.
அவர்கள் இருக்கும் இடத்தில் நிறைய உடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே ஏதாவது ஒரு ஜவுளிக் கடையின் குடோனாகத்தான் அது இருக்கும் எனத் தெரிகிறது.
சேலையில் உள்ள அந்த நடிகை, குடிபோதையில் இருக்கிறார். தன்னை மறந்து சிரித்தபடி அந்த வாலிபருடன் வரும் நடிகையை, கேமராவுக்கு முன்பு அந்த வாலிபர் நிறுத்துகிறார். பின்னர் கீழே உட்கார்ந்து கொள்கிறார்.
பிறகு டிவி நடிகை தனது சேலையை கழற்றுகிறார், பிறகு ஒவ்வொரு உடையாக கழற்றி எறிகிறார். பின்னர் படு ஜாலியாக அந்த வாலிபருடன் உல்லாசத்தில் மூழ்குகிறார்.
அவ்வப்போது நடிகை கேமராவை விட்டு விலகும்போது, அந்த நபர் நடிகையை சரியாக கொண்டு வந்து கேமரா முன் நிறுத்தி ஜாலியைத் தொடருகிறார். நடிகைக்குத் தெரியாமல் ரகசிய இடத்தில் கேமரா வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது.
அந்த வாலிபர் இந்தியில் பேசுகிறார், ஆனால் நடிகையோ மலையாளத்தில் பதில் தருகிறார். பேச்சை விட உல்லாச உணர்வுகளைத்தான் நடிகை அதிகம் பிரதிபலித்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்றரை நிமிடம் வரை இந்த ஆபாச காட்சி ஓடுகிறது.
இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போன சப் இன்ஸ்பெக்டர் படத்தை அனுப்பிய செல்போன் எண்ணைப் பார்த்து அதற்கு போன் செய்துள்ளார். மறு முனையில் பேசிய நபர், தான் ஒரு கல்லூரி மாணவர் என்றும், தனது நண்பருக்கு அனுப்பிய காட்சி தவறுதலாக உங்களுக்கு வந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.
நடிகையின் ஆபாச காட்சியை படமாக்கியது யார், எந்த ஜவுளிக் கடை, யார் இதை செல்போன்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
வீடியோ கிளிப்பிங்கில் இருப்பது நடிகையின் டூப் அல்ல ஒரிஜினல் என்பதால், வேண்டும் என்றே அவர் ஆபாசமாக நடித்திருப்பதாக தெரிய வந்தால் அவர் மீதும் நடவடிக்கை பாயும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சொர்ணமால்யாவின் ஆபாசக் காட்சி செல்போன்களில் வலம் வந்தது. இது ஒரிஜினல் படம்தான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விஷயம் கமுக்கமாக மறைந்து போனது. இந்த நிலையில் பிரபல தொடரில் நடித்துள்ள நடிகையின் கசமுசா படம் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Posted in Actress, Allegation, Camera, Cell phone, Censor, Deepa Venkat, Entertainment, Exploitation, Glamour, Godown, Kolangal, Law, MMS, Order, Police, R, Relation, Sex, Striptease, Sun TV, Tamil Actress, Textile, Textile Shop, Thatstamil.com, TV Actress, TV Serial, video, XXX | 88 Comments »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
செல்போனில் பரவும் சொர்ணமால்யா ஆபாச படம்: போலீஸ் விசாரணை
சென்னை, அக். 3-
நடிகைகளின் ஆபாச காட்சிகள் அவ்வப்போது இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. திரிஷாவின் குளியல் காட்சி யென நிர்வாணப்படம் சமீபத்தில் வலம் வந்தது. செல்போன் கேமிராவில் இப்படத்தை எடுத்து இன்டர் நெட்டில் மர்ம நபர் வெளியிட்டு இருந்தான்.
நிர்வாணமாக இருப்பவர் தன்னை மாதிரியுள்ள வேறு பெண் என்று திரிஷா மறுத்தார். போலீசிலும் புகார் செய்தார்.
அதே போல் நடிகை சொர்ணமால்யாவின் ஆபாச படம் தற்போது செல்போன்களில் பரவி கலக்கி வருகிறது. 30 விநாடிகள் இந்த வீடியோ காட்சி ஓடுகிறது.
சொர்ணமால்யா தோற் றத்தில் இருப்பவர் படுக்கை அறை காட்சியில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக அமர்ந்து இருக்கிறார். திடீரென்று எதிரே ஒருவர் செல்போனில் படம் எடுப்பதை பார்த்து வேண்டாம் என்று தலையசைக்கிறார்.
ஆனாலும் கேமராவில் தொடர்ந்து பதிவாகிறது. தலையணையால் மார்பை மறைக்கிறார். பிறகு குனிந்து மேலாடையை எடுத்து அணிகிறார்.
அதற்குள் அரை நிர்வாணத்தை முழுமையாக படம் பிடித்து விடுகிறது கேமரா.
இந்த ஆபாச காட்சிகள் இ.மெயில் மூலம் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. தமிழ்நாட்டில் செல் போன்களில் இந்த காட்சி பரவுகிறது.
சென்னை, மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் செல்போன்களில் இந்த காட்சிகள் மின்னல் வேகத்தில் பரப்பப்படுகிறது.
ஆபாச படத்தில் இருப்பது தன்னைப் போன்ற வேறு பெண் என்று சொர்ணமால்யா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
என்னை கேவலப்படுத்த இது போன்ற வக்கிர செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
நான் அந்த வீடியோ காட்சியை இதுவரை பார்க்கவில்லை. இது மாதிரி கேவலமான காட்சியில் நான் இருக்க மாட்டேன். எனக்கு தெரியாமல் யாரும் வீடியோ எடுக்கவும் முடியாது. என் உருவம் கொண்ட யாரோ ஒருவரை வைத்துத்தான் இந்த படத்தை எடுத்திருக்க வேண்டும்.
இது பற்றி போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளேன். இது போன்ற ஆபாச படங்கள் என்னை பாதிக்காது என்னைப் பற்றி சுற்றி இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு சொர்ணமால்யா கூறினார்.
இந்த ஆபாச படங்கள் போலீஸ் கவனத்துக்கும் சென்றுள்ளது.
இதை பார்த்த கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் `சைபர் கிரைம் போலீஸ் மூலம் விவாதிக்கப்படும் என்றார். செல்போன் மூலமோ அல்லது இ.மெயில் மூலமோ ஆபாச படங்கள் மற்றும் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புவது சட்டப்படி குற்றம் என்றும் அது போன்ற காரியங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆபாச படத்தில் இருப்பது சொர்ணமால்யாதான் என்று உறுதியானால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Posted in Bathroom, Cellphone, Downloads, Duplicate, MMS, Mobile Phone, Porn, Sex, Sornamalya, Tamil, Topless, Trisha, video | 2 Comments »