கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய திட்டம்
புதுதில்லி, செப். 15: கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய திருமணங்களை செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தில்லியில் நடந்த சமூக நலத்துறை செயலர்களின் மாநாட்டில் மத்திய சமூக நலம் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் துறை அமைச்சர் மீராகுமார் இதை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது:
கலப்பு மணங்களை ஊக்குவிக்கும் வகையில் அளிக்கும் உதவித் தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசும், மீதி 50 சதவீதத்தை மாநில அரசுகளும் ஏற்று கொண்டால் இத்திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றார்.
இத்திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு வரலாம் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிலர் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கலாம். இதற்காக நல்ல திட்டங்களை கொண்டு வராமல் இருக்க முடியாது என்றார்.