Archive for the ‘Militia’ Category
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007
பிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்
 |
 |
பிரான்சிஸ்கோ பிரான்கோ |
ஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
பிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.
ஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.
ஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
Posted in Angel Acebes, Angels, Assassin, Assassinations, Atrocities, atrocity, Autocracy, autocrat, Autocratic, Aznar, beatification, Beatify, bishop, Catholic, Catholicsm, CCP, Ceremony, Christ, Christian, Christianity, Church, Civil, clergy, Condemn, Conservative, Conservatives, Coup, Criminal, Cruz Laplana y Laguna, Dictator, Dictators, Dictatorship, executed, executions, Fascism, fascist, Fear, Francisco, Francisco Franco, Franco, Gen. Francisco Franco, General, Germans, Germany, graves, inequality, Jose Maria Aznar, Judges, Jury, Justice, Laguna, Law, Left, legislation, massacre, Military, Militia, NCCP, Oppression, Order, parliament, Passions, PM, Popular Party, Power, President, Rebellion, Regime, Religion, repression, Republicans, Right, Ruler, Russia, sainthood, Saints, Senate, Socialism, Socialist, Soviets, Spain, Spanish, USSR, Vatican, victims, War, Wealth, Zapatero | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 3, 2007
சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை
 |
 |
ஜான் ஜாவீத் உறுப்பினர் ஒருவர் |
சூடானின் டார்பூரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.
இவற்றில் ஒன்று சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஹரூனுக்கு எதிரானதாகும்.
அவர் மீதான குற்றச்சாட்டின்படி, அவர், ஜன்ஜவீட் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கினார் என்றும், தனிப்பட்ட முறையில் ஆயுத உதவி செய்தார் என்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக அவர்களைத் தூண்டினார் என்று கூறப்படுகிறது.
யுத்த உபாயத்தின் ஒரு பாகமாக பாலியல் வல்லுறவையும் மற்றும் சித்திரவதையையும் வளர்த்ததாகக் கூறப்படும் ஜன்ஜவீட் தளபதிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அலி குசாயிப் அவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜன்ஜவீட் அமைப்புடன் தமது அமைச்சர்கள் எவருக்கும் இந்த விதமான தொடர்பும் கிடையாது என்று சூடானிய அரசாங்கம் கூறுகிறது.
இந்த நீதிமன்றத்துக்கு எந்த ஒரு சந்தேக நபரையும் அது கையளிக்காது என்றும் சூடானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது
அம்னெஸ்டி அமைப்பின் புகாரை சீனாவும் ரஷியாவும் மறுத்துள்ளன
 |
 |
அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம் |
சூடானின் டார்பூர், பகுதிக்கு ஆயுதங்களைக் கொடுக்கக் கூடாது என்ற ஐ நாவின் தடையை மீறி, சீனாவும், ரஷ்யாவும் சூடானிய அரசுக்கு ஆயுதங்களை அளித்தன என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அபயஸ்தாபனமான அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், கூறியிருந்த புகாரை சீனாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளன.
டார்பூரில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தத்தக்க ராணுவ விமானங்களை சூடான் அரசுக்கும், பிற ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கம் இந்நாடுகள் அளித்ததாக அம்னெஸ்ட்டி கூறியுள்ளது.
ஆனால் சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சுக்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ நா தீர்மானங்களை தத்தம் நாடுகள் கடைபிடிப்பதாக கூறியுள்ளன.
ஐ நாவுக்கான சூடானிய தூதரும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். திரித்துக் கூறுவதையே வரலாராகக் கொண்ட, ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தவறான அறிக்கை இது என்று அவர் இதை வர்ணித்துள்ளார்.
Posted in africa, AI, Amnesty, Arms, Arrest, Autocracy, autocrat, Berkshire, Blasts, Bombs, China, crimes, Darfur, defence, Destruction, Exports, Fidelity, genocide, ICC, Janjaweed, Law, Leader, Lord of war, Militants, Military, Militia, Order, Police, Regime, Russia, Soviet, Sudan, Supply, support, Terrorism, UN, USSR, War, Warrants, Warren, Weapons | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007
 |
 |
ஜனாதிபதிக்கு அர்ச்சகர் வரவேற்பு கொடுத்த போது எடுக்கப்பட்ட படம் |
ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை
இலங்கை ஜனாதிபதி அண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைக்குச் சென்ற போது, அங்கு அவரை வரவேற்ற இந்து அர்ச்சகர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பு மாவட்டத்தில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார்.
அப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார். அவர் அப்போது ஜனதிபதிக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.
இந்த நிலையில், நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரை வீட்டுக்கு வெளியே அழைத்து சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
 |
 |
கொலை செய்யப்பட்ட அர்ச்சகரின் குடும்பம் |
ஜனாதிபதியின் வாகரைக்கான விஜய தினத்தன்று தனது கணவரை இராணுவத்தினர் பூசைக்கென்றே அழைத்துச் சென்றதாகவும், ஜனாதிபதிக்கு மாலை அணிவித்ததன் காரணமாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் கொல்லப்பட்ட அர்ச்சகரின் மனைவி தெரிவித்துள்ளார்.
ஆயினும் கொலையாளிகளை தன்னால் அடையாளம் காணமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகள் இதனை மறுத்துள்ளார்கள்.
இந்தக் கொலை குறித்து தான் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
Posted in abuse, Assassination, Autocracy, Batticaloa, Buddhism, civil war, clergyman, Eelam, Eezham, Hindu, Hinduism, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Mahinda Rajapakse, Mattakalappu, Mattakkalappu, Military, Militia, Parameshwara Kurukkal, Power, President, priest, Sri lanka, Srilanka, Tamil Tigers, Terrorism, Tiger rebels, Vagarai, Vakarai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »