Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Middle East’ Category

Haniya cuts short Arab tour amid Hamas-Fatah tension

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பாலத்தீனப் பிரதமர் காசா செல்வதை தடுத்தது இஸ்ரேல்

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா
பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா

மத்திய கிழக்கில் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலுள்ள ரஃபாஹ் பாதையை ஹமாஸ் தீவிரவாதிகள் தகர்த்துள்ளார்கள்.

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா காசாவிற்கு திரும்புவதை தடுப்பதற்காக இஸ்ரேல் அந்த எல்லைப்புறப் பாதையை மூடியது.

அந்த எல்லையின் பாலத்தீனப் பகுதியில் உள்ள நிலையை தகர்த்து சென்ற ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்கள் தற்போது அதனை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள்.

காசா பகுதிக்குள் 30 மில்லியன் டாலர் பணத்தை இஸ்மாயில் ஹனியா எடுத்துச் செல்வதை தவிர்க்கும் முகமாகத்தான் இந்த எல்லை மூடப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ஹமாஸ் தலைமையிலான பாலத்தீன நிர்வாகம் தனது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது.

————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜூன், 2007 – பிரசுர நேரம் 16:40 ஜிஎம்டி

காசா மோதல்கள் மேற்குக்கரைக்கும் பரவியுள்ளன

காசாவில் நடக்கும் கடுமையான மோதல்கள் இப்போது மேற்குக்கரை நகரான நப்லஸுக்கும் பரவியுள்ளன.

அங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும், பத்தா அமைப்புக்கு ஆதரவான அல் அக்ஸா பிரிகேட் உறுப்பினர்களுக்கும் இடையில் மோசமான துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதை பிபிசி செய்தியாளர் பார்த்திருக்கிறார்.

காசாவில், பிராந்தியம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடைகள், தான் அந்த ஸ்தம்பித நிலையில் இருந்து தப்பிவருவதற்கு தடையாக இருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவில் பத்தா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சேவையின் கட்டிடம் ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெடிவைத்துத் தகர்த்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மீது, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்குக்கான மூத்த இணைப்பாளர் மைக்கல் வில்லியம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


சண்டைகளை நிறுத்துமாறு பல தரப்பினரும் கோரிக்கை

 

காசாவில் தற்போது இடம்பெறுகின்ற, குறைந்தது 60 பேர் பலியாகக் காரணமான சண்டைகளை, மூடத்தனமான சண்டை என்று வர்ணித்துள்ள பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், சண்டையில் ஈடுபடும் தரப்பினரை மோதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

பத்தா அமைப்புக்குத் தலைமை தாங்கும் அப்பாஸ் அவர்கள், இந்த வன்செயல்கள் காசாவை ஒரு வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இந்தச் சண்டைகள் பாலத்தீனர்களின் லட்சியத்துக்கு ஒரு அழிவாக அமையும் என்று அரபு லீக்கின் தலைவரான அம்ர் மௌஸா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா ஆகியவையும் மோதல் நிறுத்தம் தேவை என்று கோரியுள்ளன.

காசாவில் தமது பாலத்தீன நிவாரணப் பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தமது நிவாரணப் பணிகளை இடைநிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.


இஸ்ரேலிய அதிபரானார் ஷிமொன் பெரஸ்

பெரஸ்
பெரஸ்

இஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான ஷிமோன் பெரஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல் சுற்றில் பெரஸ் அவர்களுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்ததன் காரணமாக, அவரை எதிர்த்து நின்ற இரண்டு வேட்பாள்களும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியதன் பிறகு, தற்போதைய இஸ்ரேலிய ஐனாதிபதி மோஷே கட்சவ், பணிக்கு செல்லாமல் விடுப்பில் உள்ளார்.

7 ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் கதீமா கட்சியைச் சேர்ந்த பியர்ஸ், காட்சவ்விடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஜூன், 2007 – பிரசுர நேரம் 15:02 ஜிஎம்டி

பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர் ஃபத்தா அமைப்பினர்

மேற்குக்கரை நகரான ரமல்லாவில் உள்ள பாலத்தீன நாடாளுமன்ற கட்டிடத்தில் ஃபத்தா பிரிவைச் சேர்ந்த ஆயுதபாணிகள் அதிரடியாக நுழைந்தனர்.

அந்தக் கட்டிடத்தில் தமது கொடியை ஏற்ற முனைந்த பத்தா ஆதரவாளர்களைத் தான் தடுக்க முனைந்த போது, தன்னை அவர்கள் அடித்துத் தாக்கியதாக ஒரு சுயேச்சையான துணை சபாநாயகர் பிபிசி க்கு கூறியுள்ளார்.

அந்தக் கட்டிடத்தில் இருந்த கல்வி அமைச்சு உட்பட ஹமாஸுடன் தொடர்புடைய அதிகாரபூர்வ கட்டிடங்களையும் மற்றும் நப்லஸில் உள்ள நகரக் கவுன்ஸில் கட்டிடத்தையும் ஃபத்தா போராளிகள் துவம்சம் செய்தனர்.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட காசாவில், தற்போது அமைதி நிலவுகிறது, ஆனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.


Posted in Arab, Arms, Avital, Award, Blast, Bombs, Britain, Colette, Colette Avital, Crisis, dead, Erez, Escalation, Fata, Fatah, Fatha, Fathah, Freedom, Galilee, Gaza, Hamas, Haniya, Independence, Ismail Haniyeh, Israel, Jerusalem, Jimmy Carter, Kadima, Katsav, Knesset, Labor, Labour, Leader, Likud, Mid-east, Middle East, Moshe, Moshe Katsav, Negev, Nobel, Nuclear, Palestine, Palestine: Peace Not Apartheid, Party, Peace, Peres, Perez, PM, Poland, President, Prez, Prime Minister, Prize, Rafah, Reuven, Reuven Rivlin, Rivlin, Shimon, Simon, Simone, UK, Violence, War, Weapons, WWII | 1 Comment »

Gaza Gunmen Kill 3 Sons of Palestinian Fatah Official

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006

பாலஸ்தீன அதிகாரியின் மூன்று சிறுவயது மகன்மார் கொலை

பாலஸ்தீன பாதுகாப்புத்துறை அதிகாரியின் மூன்று சிறுவயது மகன்மார் காசாவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பத்து வயதுக்கும் குறைவான இந்த மூன்று சிறுவர்களும், தமது தந்தையின் காரில் பள்ளிக்கூடத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, மற்றுமொரு வாகனத்தில் வந்தவர்கள், அந்த வாகனத்தின் மீது பல தடவைகள் சுட்டுள்ளனர்.

அந்த வாகனத்தின் ஓட்டுனரும் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை. பாலஸ்தீனக் குழுக்களான பத்தா மற்றும் ஹமாஸ் ஆகியவற்றுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

பாலஸ்தீன அரசாங்கத்துக்கு தற்போது தலைமையேற்றிருக்கும் ஹமாஸ் அமைப்பு இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

அதேவேளை, பாலஸ்தீன அதிபர் மஹமுத் அப்பாஸின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான, பத்தா அமைப்பைச் சேர்ந்த, சாஹிப் எரகத் அவர்கள், இந்த சிறுவர்களின் மரணம், பாலஸ்தீனர்களிடையே பெரும் ஆபத்தான, உள்மோதலுக்கு வழிவகுக்கலாம் என்று கூறியுள்ளார்.

Posted in Balousheh, Fatah, Gaza, Haartez, Hamas, Ismail Haniya, Israel, Mahmoud Abbas, Mahmoud Zahar, Mid-east, Middle East, Muhammad Dahlan, President, Yasir Arafat | Leave a Comment »

Hariri’s son blames Syria for assassination of Lebanese minister

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

லெபனான் தொழில் துறை அமைச்சர் சுட்டுக் கொலை

லெபனான் தொழில்துறை அமைச்சர், பியர் கமாயெல், பெய்ரூட் அருகே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கிறித்தவமக்கள் வாழும் பகுதியில் அவரது வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிதாரிகள் சுட்டார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

அமைச்சர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அவர் இறந்தார். தாக்கியவர்கள் அடையாளம் இன்னும் தெரியவில்லை. முன்னாள் லெபனான் அதிபர், அமின் கமாயெல் அவர்களின் மகனான, பியர் கமாயெல், ஒருமுன்னோடி சிரியா-எதிர்ப்பு கிறித்தவ அரசியல்வாதி ஆவார்.

முன்னர் படுகொலை செய்யப்பட்ட லெபனான் பிரதமர், ரபீக் ஹரிரியின் மகன் சிரியாதான் தனது தந்தையின் படுகொலைக்கும், இந்த கமாயெல்லின் படுகொலைக்கும் பின்னணியில் இருந்திருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சிரியாவிடமிருந்து உடனடியாக எந்த ஒரு கருத்தும் வெளிவரவில்லை.

சிரியாவிற்கு ஆதரவான ஆறு அமைச்சர்கள் லெபனான் அரசிலிருந்து சமீபத்தில் பதவி விலகியுள்ள ஒரு நெருக்கடியான கட்டத்தில் கமாயெல்லின் கொலை வருகிறது.


இராக், சிரியா இடையே மீண்டும் ராஜதந்திர உறவுகள்

இராக்கும் சிரியாவும் தங்களுக்கு இடையேயான ராஜீய உறவுகளை இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. சதாம் ஹூசேனின் ஆட்சிக் காலத்தின் துவக்கத்தில் இந்த உறவுகள் முறிந்தன.

சிரியா, இராக் இடையில் உடன்பாடு
சிரியா, இராக் இடையில் உடன்பாடு

பாக்தாத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிரியாவின் வெளிநாட்டு அமைச்சர் இந்த முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இராக்கில் நடைபெறும் வன்செயல்களைத் தடுக்க சிரியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சிரியா, இராக் அரசுக்கு உதவ தனது உறுதிப்பாட்டினை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் புஷ் அவர்களின் நிர்வாகம் கூறியுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் எல்லைப் பகுதிகள் மூலம் இராக்குக்குள் ஊடுருவதை தடுக்க சிரியா முன்வர வேண்டுமெனவும் அமெரிக்கா கோரியுள்ளது.

இராக்கில் அமெரிக்காவின் ஈடுபாடு எதிர்காலத்தில் குறையக் கூடிய சூழலுக்கு இராக்கும், சிரியாவும் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதாக பி பி சியின் ராஜாங்க விவகார செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இராக்குக்கும் இரானுக்கும் இடையேயான ஒரு உச்சிமாநாடு இந்த வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கு சிரியா அழைக்கப்பட்டுள்ளது.

Posted in Assassination, Beirut, Christian, Druse, Druze, Fouad Siniora, Hariri, Hezbolla, Hezbollah, Iran, Iraq, Islam, Lebanon, Mid-east, Middle East, Muslim, Phalange Party, Pierre Gemayel, Rafik Hariri, Saad Hariri, Sheik Hassan Nasrallah, Shiite, Sunni, Syria, terrorist, United States | Leave a Comment »

History of Middle-East Arabian Countries & Jews Israel

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 15, 2006

யூதர்-அரபியர் கூடி வாழ்ந்தால்…

என்.ஆர். ஸத்யமூர்த்தி

இஸ்ரேலுக்கும் லெபனானுக்குமான போர் 12-7-2006 அன்று தொடங்கி, 14-8-06 காலை நிறுத்தப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா என்ற இயக்கம் இஸ்ரேலின் இரண்டு படைவீரர்களைக் கடத்திச் சென்றதே இப் போருக்குக் காரணம் என்று இஸ்ரேல் சார்பில் சொல்லப்பட்டது. ஹிஸ்புல்லா இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை, லெபனானுக்கு இல்லை என்பதால், அதைப் பலவீனப்படுத்துவது, ஒடுக்குவது தன்னுடைய தேவை என்று இஸ்ரேல் கருதியது.

இஸ்ரேலுக்குத் தன் அண்டை நாடுகளுடன் போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது புதியதல்ல. 14-5-1948 அன்று இஸ்ரேல் என்ற தனிநாடு தோற்றம் பெற்ற 24 மணிகளுக்குள்ளாகவே, எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. பின்னர் 1956ல் எகிப்துடன் போர் மூண்டது. 1967ல் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுடன் போரிட வேண்டியிருந்தது. 1973ல் மீண்டும் எகிப்தின் படையெடுப்பைச் சந்திக்க நேர்ந்தது.

போரிலே பிறந்து, போரிலே வாழ்ந்து, போரிலே உயிர் துறக்கும் இஸ்ரேலியர்களின் பூர்வ கதை தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

இஸ்ரேலியர்கள் யூதர்கள். அவர்கள், பைபிளில் பேசப்படுகிற ஆப்ரஹாமின் வம்சாவளியினர். ஆப்ரஹாம் தம் உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் “”கானான்” என்ற பிரதேசத்தில் குடியமர்ந்தார். இது ஜோர்டான் ஆறு, சாக்கடல் Dead Sea) ஆகியவற்றுக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட பகுதி. இது நடந்தது சுமாராக கி.மு. 2000-ல்.

கானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, அம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறினர்; அங்கு துன்புறுத்தலுக்கு ஆளானதால், மோசஸின் தலைமையில் வெளியேறி சினாய்க்குன்றை அடைந்தனர். கானான் நாட்டுக்குத் திரும்பி, அங்கு புனித தேசத்தை நிறுவுமாறும் அது அவர்களுக்கானது எனவும் வாக்களித்தார் இறைவன் எனப்படுகிறது. அதுவே அவர்களுக்கான Promised Land ஆன இஸ்ரேல் ஆனது.

அசீரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகத்தினர், கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோரின் படையெடுப்புக்களால், இஸ்ரேலியர்கள் தம் நாட்டை விட்டு வெளியேறிச் சிதறியிருந்தாலும், பாலஸ்தீனத்தில் அடங்கிய தம் சொந்த நாடே, அவர்களின் ஆன்மிக மையமாகத் தொடர்ந்தது.

ஆற்றல்மிக்க யூதர்கள் தம் நாட்டை இழந்து பலவிதமான இம்சைகளுக்கு இலக்கானது சோக சரித்திரம். கி.பி. 313ல், கான்ஸ்டண்டைன் பேரரசர் கிறிஸ்தவத்தைத் தேச மதமாக அறிவித்ததை அடுத்து யூதர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன; அலெக்ஸôண்ட்ரியாவிலிருந்து யூதர்கள் முழுமையாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

கி.பி. 1096ல், பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து விடுவிப்பதற்காக பிரான்ஸýம் மற்ற ஐரோப்பிய நாடுகளும் போர் தொடுத்தபோது, முதல் காரியமாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கி.பி. 1099ல் அவர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றியபோது, கிறிஸ்தவரல்லாதவர் ஒவ்வொருவரும் கொல்லப்பட்டார். யூதர்கள் எல்லாம் அவர்களின் கோயிலில் அடைக்கப்பட்டு, உயிருடன் கொளுத்தப்பட்டனர். கி.பி. 1290 – 1492க்குள் இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் இம்சிக்கப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட யூதர்கள், ஹாலந்து, வடஆப்பிரிக்கா, பால்கன், போலந்து, லிதுவேனியா, ரஷியா எனப் பல நாடுகளில் சென்று வாழ்ந்தனர். கி.பி. 1517-ல், ஓட்டோமானியர்கள், பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய போது, தங்கள் மதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட பல யூதர்கள், பாலஸ்தீனத்திற்கே வந்தனர்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளையடைந்த யூதர்களைப் போலன்றி, ரஷியாவுக்குச் சென்றவர்கள், அரசாலும் மக்களாலும் இம்சிக்கப்பட்டனர். கி.பி. 1881ல் இரண்டாம் அலெக்ஸôண்டர் என்ற ஜார் மன்னர், சுட்டுக்கொல்லப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பாக்கப்பட்டனர். உலகே வியக்குமளவுக்கு யூத விரோத உணர்ச்சி தாண்டவமாடியது. ஒரு நூற்றாண்டுக்குக் கேள்விப்பட்டிராத அளவில் படுகொலைக்கும் தீவைப்புக்கும் யூதர்கள் ஆளாக்கப்பட்டனர். ரஷியாவிலிருந்து லட்சக்கணக்கான யூதர்கள், அகதிகளாக வெளியேறினர்.

இந்த ரஷியப் படுகொலை, உலகத்து யூதர்களை உலுக்கியது. “”பாதுகாப்பும் சுதந்திரமும் யூதர்களுக்கான தனிநாட்டில்தான் கிடைக்கும்” என்பதை லியோ பின்ஸ்கர் என்ற ரஷிய – யூத மருத்துவர், ‘‘அன்ற்ர் உம்ஹய்ஸ்ரீண்ல்ஹற்ண்ர்ய்’’ என்ற நூல் மூலம் அறிவித்தார்.

ஹங்கேரியின் புடாபெஸ்டு நகரத்தில் பிறந்த தியோடர் ஹெர்ஸல் என்ற பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். யூதக் குழந்தைகளுக்கு “ஞானஸ்நானம்’ அளிப்பதே ஒரே தீர்வு எனக் கருதியவர் அவர். பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்து வந்த ட்ரேபஸ் என்ற யூத அதிகாரி, ஜெர்மனுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 1894-ல் விசாரணை நடந்து வந்தது. பத்திரிகையாளர் என்ற முறையில் அவ் விசாரணையைக் காணச் சென்றார் ஹெர்ஸல். அந்த இளம் பத்திரிகையாளரை அதிர்ச்சியடைய வைத்தது எது என்றால், விவரமறிந்த மக்கள் மிக்க பிரான்ஸ் நாட்டில், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டம், “”யூதர்களைக் கொல்லுங்கள்” என்று குரைத்துக் கொண்டிருந்ததுதான்! விளைவு: எல்லாக் காலத்து மக்களையும் ஈர்க்கவல்ல மிகச்சிறந்த பிரசுரம் ஒன்று ‘‘பட்ங் ஒங்ஜ்ண்ள்ட் நற்ஹற்ங்’’ என்ற பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. கி.பி. 1897ல் ஸ்விட்ஸர்லாந்தின் பாஸ்லே நகரில் “”யூதர்களின் காங்கிரஸ்” ஒன்றை வெற்றி பெற நடத்தினார் அவர். அப்பொழுது அவர், “”இப்பொழுது ஒரு யூத நாட்டின் கருவை உருவாக்கி விட்டேன்… கண்டிப்பாக 50 ஆண்டுகளில் எல்லோரும் அதைக் காண்பார்கள்!” என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்னார். அது 1948ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் மெய்ப்பிக்கப்பட்டது!

கி.பி. 1920ல் லீக் ஆப் நேஷன்ஸ் (League of Nations) பாலஸ்தீன நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கியது. அதில் யூதர்களுக்குத் தனி நாடு பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலாம் உலகப் போரின் முடிவில், பாலஸ்தீனத்தின் 7,50,000 மக்கள்தொகையில் யூதர்கள் 10 விழுக்காடுதான் இருந்தனர். பல நாடுகளிலிருந்து யூதர்கள் பெருமளவில் குடியேறினால்தான், அவர்களின் கோரிக்கை வெற்றி பெற இயலும். இக் குடியேற்றக் கொள்கை, அரபியர்களிடமிருந்து கடும் ஆட்சேபணையையும் போராட்டத்தையும் தூண்டியது இயல்பே. இருப்பினும், கி.பி. 1933ல் ஹிட்லர், ஜெர்மனின் அதிபரான பிறகு யூதர்கள் இம்சிக்கப்பட்டு, 60 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்; மேலும் 61,854 யூதர்கள், பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்தனர்.

யூதர்களின் தனி நாடு கோரிக்கையை பிப்ரவரி, 1947ல் ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது பிரிட்டன். ஐ.நா. சபை, ஒரு சிறப்புக் கமிஷனை நியமித்தது. பாலஸ்தீனத்தை ஒரு சிறிய நாடாகவும், ஒரு பெரிய அரபிய நாடாகவும் பிரிக்கப் பரிந்துரை செய்தது அக் கமிஷன் (1-9-1947). யூதர்கள் ஏற்றுக் கொண்டனர்; அரபியர்களும் பிரிட்டனும் எதிர்த்தனர். பரிந்துரைத்ததைவிட அதிகமான பகுதி அரபியர்களுக்கு எனும் சிறிய மாற்றத்துடன், அத் திட்டத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்டது.

செய்தி கேட்டவுடனே, பாலஸ்தீன அரபியர்கள் வன்முறையில் இறங்கினர். யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் தன் பொறுப்பிலிருந்து 15-5-48 அன்று விடுபடுவதாக அறிவித்தது.

அறிவித்ததற்கு ஒருநாள் முன்னதாக, 1948, மே 14 காலை 9 மணிக்கு பிரிட்டிஷ் ஹைகமிஷனர் பாலஸ்தீனத்தை விட்டு விடைபெற்றார். அன்று மாலையே 4 மணிக்கு, டேவிட் பென் குரியன் இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார். அமெரிக்க அதிபர், அதனை அங்கீகரித்து, ஏற்கெனவே அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினார்! சில மணிகளில், சோவியத் யூனியனும் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்குப் பின், இறைவன் வாக்களித்த நாட்டை, இஸ்ரேலியர்கள் பெற்றனர்!

இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் அதை ஏற்க மறுத்துத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே ஒழித்துவிட வேண்டும் என்று சொல்வதும் நீடித்தது. எப்பொழுதும் அரபியர்கள் படையெடுக்கக் கூடும் என்ற அச்சத்தாலும் வருமுன் காத்தல் கருதியும் இஸ்ரேல் எப்பொழுதும் போர் புரியத் தயார் நிலையிலேயே இருக்க வேண்டியுள்ளது.

கி.பி. 638ல் இஸ்லாமியர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியபோதும், கி.பி. 711ல் ஸ்பெயினில் இஸ்லாம் பரவியபோதும் யூதர்களின் அறிவும் ஆற்றலும் பயன்படுத்தப்பட்டு, பறிக்கப்பட்ட உரிமைகளெல்லாம் மீண்டும் தரப்பட்டன. நாடு திரும்பிய யூதர்கள், பாலஸ்தீன இஸ்லாமிய அரசால், தங்கள் நிலங்களை மீட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். யூதர்களுடன் சகவாழ்வு (Co – existence) காரணமாக, இஸ்லாமிய அரசுகள் பெற்ற நலனைக் கண்டு, முன்பு விரோதம் காட்டிய கிறிஸ்தவர்களும் அவர்களைப் பயன்படுத்தலாயினர். வரலாற்றின் வளமான இந்நிகழ்வுகளை அரபியர்கள், இஸ்ரேலியர்கள் ஆகிய இருவருமே சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டவர்கள்!

பாலைவனத்தைச் சோலைவனமாக்கியவர்கள், பல சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு விவசாயம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்கள், நாட்டுப்பற்றும் துணிவும் இறையுணர்வும் மிக்க இஸ்ரேலியர்களும் அதே இயல்புகளும் கலாசாரச் சிறப்பும் மிக்க அரபியர்களும் கூடி வாழ்ந்தால் கோடிகோடி நன்மை விளையும். மாறாக தங்களுக்குள் போரிட்டுத் தங்களைச் சிதைத்துக் கொள்வது அவர்களை உள்ளடக்கிய உலகிற்கே உகந்ததல்ல.

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மூவருக்கும் பரம பவித்திரமாய் விளங்கும் ஜெருசலேத்தின் புனிதம் போர்களினால் பாதிக்கப்பட அனுமதிப்பது, ஆண்டவன் அளித்த அறிவுடைமைக்கு அழகல்ல.

Posted in Arab, Arabia, Europe, Hezbolla, History, Israel, Jews, Lebanon, Mid-east, Middle East, Palestine, Russia, Spain, Tamil | 24 Comments »

Lebanese Force Enters South Lebabnon after 40 Years

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 17, 2006

தென்லெபனானில் 40 ஆண்டுகளுக்கு பிறகு லெபனானின் அரச இராணுவம் பிரவேசம்

லிட்டனி நதிப் பாலம் மீது முதல் முறையாக செல்லும் லெபனான் இராணுவம்
லிட்டானி நதியைக் கடக்கும் லெபனான் இராணுவம்

லெபானானில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக அரச இராணுவம் தெற்கு லெபனானுக்குள் பிரவேசித்துள்ளது.

லிட்டானி நதி மீதுள்ள தற்காலிக பாலங்கள் மூலமாக இராணுவ வண்டிகளும், துருப்புக்களை சுமந்த வாகனங்களும் சென்ற போது கூடி நின்ற பொது மக்கள் அரிசி தூவியும், மலர்களைத் தூவியும் லெபானான் கொடிகளை அசைத்தும் வரவேற்பு தெரிவித்தார்கள்.

ஹெஸ்பொல்லாவின் கோட்டையாக விளங்கிய இந்தப் பகுதிகளுக்குள் அரச படைகள் நுழைந்த காட்சியை டயரிலிருந்து எமது பிபிசியின் முகவர் விபரித்திருக்கிறார்.

ஹெஸ்பொல்லாக்களை செயலிழக்கச் செய்ய இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் ஐ நா பிரகடனத்திற்கு அமைய,லெபனான் இராணுவம் தென் லெபனானிற்குள் பிரவேசித்துள்ளது.

லெபனானில்-ஒரு நாட்டிற்குள் இன்னொரு நாடு இயங்க இனிமேலும் இடம் இருக்காது என்று, லெபனான் அரசு கூறுகிறது. ஆனாலும் பெய்ரூட்டிலிருந்து எமது பிபிசியின் முகவர் கருத்து வெளியிடும் போது மோதலைத் தவிர்க்க ஹெஸ்பொல்லக்களுக்கும் லெபனான் அரசுக்கும் இடையே ஒரு உடன்பாடு இருப்பது புலனாகிறது என்றும் ஹெஸ்பொல்லாக்கள் தமது ஆயுதங்களை மறைத்து வைப்பது என்றும் லெபனான் அரசு தமது இராணுவத்தின் மூலம் அதிகாரத்தை நிலை நாட்டுவது என்று உடன்பட்டிருப்பது தெரிவதாகவும் எமது முகவர் தெரிவிக்கின்றார்.

Posted in Arms, Hezbollah, Israel, Jordan, Lebanese, Lebanon, Mid-east, Middle East, Syria, Tamil | Leave a Comment »

Ceasefire in Mid-East; UN Agreement on Israel

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

இஸ்ரேலிய சிப்பாய்கள்
இஸ்ரேலிய சிப்பாய்கள்

போர் நிறுத்தம் வந்தாலும் ஹெஸ்பொல்லாக்களை தேடுவோம் என்கிறார் எகுட் ஒல்மர்ட்

லெபனானில் கிட்டதட்ட ஐந்து வாரங்களாக நடைபெற்ற மோதல்களை போர் நிறுத்தம் முடிவிற்கு கொண்டு வந்து இருந்தாலும், லெபனானில் இருக்கும் ஹெஸ்பொல்லா கொரில்லா அமைப்பின் தலைவர்களை தாம் தேடிப்பிடிப்போம் என்று இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மர்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக போரிடுவது என்ற முடிவானது, தன்னை பாதுகாக்க இஸ்ரேல் கொண்டு இருக்கும் உறுதிப்பாட்டினை காண்பிக்கிறது என தெரிவித்தார்.

இது போர் என்றும் இஸ்ரேல் தனது பொறுப்புகளில் இருந்து விலகி செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த சண்டை ஆரம்பிப்பதற்கு காரணமான, ஹெஸ்பொல்லாவினால் கடத்தி செல்லப்பட்ட தனது இரண்டு வீரர்களை விடுவிக்க தாங்கள் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஒல்மர்ட் கூறினார்.

போர் நடந்த முறை குறித்து விசாரணை நடத்த போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் பேரட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா ஆயுதகுழுவினர் மீண்டும் ஒன்றிணைய இஸ்ரேல் இராணுவம் அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.


தெற்கு லெபனானை நோக்கி மக்கள் படையெடுப்பு

வீடுதிரும்பும் அகதிகள்
வீடுதிரும்பும் அகதிகள்

இஸ்ரேலிய படைகளுக்கும், ஹெஸ்பொல்லாவிற்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து, முன்னர் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தெற்கு லெபனானை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.

தங்களது வீடுகளையும் சொத்துகளையும், பார்ப்பதற்காக புறப்பட்டுள்ள மக்களின் கார்களால் பெய்ரூட் மற்றும் சிடானில் இருக்கும் சாலைகள் நிரம்பி காணப்படுகின்றன.

சண்டையின் போது கடுமையான மோதல் இடம்பெற்ற பின்ட் சிபாயில் என்ற கிராமத்திற்கு சென்ற பிபிசி செய்தியாளர் ஒருவர், அங்கு அழிவு தவிர வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் தமது கார்களின் கூரைகளில் மூட்டை முடிச்சுகள் காணப்படுகின்றன.

சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பல மணி நேரத்திற்கு பின்னர், இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில், இரண்டு ஹெஸ்பொல்லாவினரை இஸ்ரேலிய வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.


இஸ்ரேல் மீது காசாவில் இருந்து தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல்
காசாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல்

லெபனானில் சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நேரம், காசாவில் இருக்கின்ற தீவிரவாதிகள் இஸ்ரேலிய நகரமான அஷ்கெலான் மீது ராக்கெட்டுளை ஏவி இருக்கின்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தியதில், மூன்று பாலஸ்தீன பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ராக்கெட்டுகளை ஏவிய தீவிரவாதிகள் தப்பி விட்டதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக, காசாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதினை தடுத்து நிறுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகின்றது.

அத்தோடு காசா எல்லைக்கு அருகாமையில் பிடித்து செல்லப்பட்ட தனது இராணுவ வீரர் ஒருவரையும் விடுவிக்க முயற்சித்து வருகின்றது.

சண்டை நிறுத்தம் ஒன்றினை முன் வைத்துள்ள பாலஸ்தீன தரப்பு, இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை சிலரை விடுவித்தால், இராணுவ வீரரை விடுவிப்பதாக கூறியுள்ளது. ஆனால் இதனை இஸ்ரேல் நிராகரித்து விட்டது.

Posted in Attacks, Ban, BBC, Blast, Ceasefire, EU, Hezbollah, Human Rights, Israel, Issue, Jordan, Lebanon, Mid-east, Middle East, News, Ohmert, Tamil, UN | Leave a Comment »

Mid-East Updates

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2006

 
  லெபனான் பிரதமர்
லெபனான் பிரதமர்

‘லெபனானில் இதுவரை 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’- லெபனான் பிரதமர்

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தது முதல் இதுவரை லெபனானில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்தையும் தாண்டியுள்ளதாக லெபனானின் பிரதமர் போவுட் சினியோரா தெரிவித்துள்ளார்.

மேலும் மூவாயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு பத்துலட்சத்துக்கும் அதிகாமான மக்கள்- அதாவது லெபனானின் மொத்த சனத்தொகையில் கால்வாசிப் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டுக்கு, அவர் அனுப்பி வைத்த வீடியோ செய்தி ஒன்றிலேயே அவர் இந்தத் தகவல்களை அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை ஒரு அவசர போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி, இஸ்ரேலால், லெபனானில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் என்று தம்மால் கூறப்படுபவை குறித்து புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மாநாடு நிர்ப்பந்தித்துள்ளது.


மத்தியகிழக்கு மோதல் மேலும் வலுக்கிறது

மோதல் அதிகரிக்க மனிதம் அழிகிறது
மோதல் அதிகரிக்க மனிதம் அழிகிறது

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்களில் பல நாட்களாக தணிந்திருந்த வான் தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து, சில மணிநேரங்களின் பின்னர், லெபனான் எங்கிலும் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்களை நட்த்தியுள்ளன.

வடக்கு லெபனானில் உள்ள ஒரு பாலம், கிழக்கில் சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு வீதி மற்றும் தெற்கு நகரான நபதியா ஆகியவையும் இலக்கு வைக்கப்பட்டன.

தெற்கில் உள்ள பகுதிகளில் தரை மோதலும் நடக்கிறது; அங்கு குறைந்தது 4 இடங்களில் ஹெஸ்பொல்லா கிளர்ச்சிக்காரர்களுடன், சுமார் பத்தாயிரம் இஸ்ரேலிய துருப்பினர் மோதலில் ஈடுபடுகின்றனர்.

தாங்கி எதிர்ப்பு சுடுகலன்களின் தாக்குதலில் தமது சிப்பாய்கள் இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேலுக்குள் மேலும் ராக்கட்டுகளை ஏவிய ஹெஸ்பொல்லாக்கள் அதில், குறைந்தது 5 பேரைக் கொன்றுள்ளனர்.


அமைதிக்கான இருகட்டத் திட்டம் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபை ஆராய்கிறது

லெபனான் குறித்த பாதுகாப்புச் சபையின் விவாதம் தொடர்கிறது
லெபனான் குறித்த பாதுகாப்புச் சபையின் விவாதம் தொடர்கிறது

லெபனான் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரண்டு கட்ட திட்டம் குறித்து, நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகள் ஆலோசித்து வருகிறார்கள்.

இடைக்கால போர் நிறுத்தம் ஒன்றை கோருவதற்கான தீர்மான பிரேரணை குறித்து, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒரு உடன்பாட்டை நெருங்கியுள்ளதாக இராஜதந்திரிகள் கூறுகிறார்கள்.

ஒரு சர்வதேச அமைதிப்படையை அங்கு நிறுத்துவது உட்பட ஒரு நீண்டகால தீர்வு ஒன்றுக்கு சர்வதேச ஆதரவைப் பெறுவதே அதன் இரண்டாவது கட்டமாக இருக்கும்.

லெபனானின் உடனடி மோதல் நிறுத்தத்தை கோருவதற்கான ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானம் குறித்த உடன்பாடு சில நாட்களில் ஏற்படக்கூடும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளயர் தெரிவித்துள்ளார்.


காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 7 பேர் பலி

காசா மக்களும் பள்ளிக்கூடங்களில் தஞ்சம்
காசா மக்களும் பள்ளிக்கூடங்களில் தஞ்சம்

காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 7 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.

26 பேர் அதில் காயமடைந்துள்ளனர்.

ரபா நகருக்கு அருகில் இராணுவ இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

தாங்கி எதிர்ப்பு ராக்கட் ஒன்றை ஏவ முயற்சித்த ஒரு குழுவையும் தாம் தாக்கியதாகவும் அது கூறுகிறது.

ஜூன் மாத இறுதியில் கிளர்ச்சிக்காரர்கள் ஒரு இஸ்ரேலிய சிப்பாயை பிடித்துச் சென்றதை அடுத்து காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 35 சிறார்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

 

Posted in BBC, Israel, Lebanon, Mid-east, Middle East, Tamil | Leave a Comment »