Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Member’ Category

How to ensure quality participation & responsibility from MLAs and MPs?

Posted by Snapjudge மேல் மே 31, 2007

தேவை திரும்ப அழைக்கும் உரிமை!

பி. சக்திவேல்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் தவறிழைத்தாலோ அல்லது அவர்களது கடமையில் தவறினாலோ அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கூறியுள்ளார்.

இது மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவராலும் வரவேற்கக்கூடிய கருத்தாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமையானது ஒரு சில மக்களாட்சியின் சிறப்பு அம்சமாகும். மக்கள் பிரதிநிதிகள் சரிவரச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரேக்க காலத்திலிருந்து இன்றுவரை பல நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.

நம் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் வாக்குக் கேட்டு வரும் பிரதிநிதிகளை மீண்டும் அடுத்த தேர்தலில்தான் நம்மால் பார்க்க முடிகிறது!

இந்த ஐந்து ஆண்டுகள் அவர்கள் சரிவரச் செயல்படவில்லை என்றாலும், லஞ்சம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டாலும் நாம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மேலும் நாடாளுமன்ற ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது அவசியமானது. அத்துடன்அத்தியாவசியமான உரிமையும் ஆகும்.

மேலைநாடுகளில் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள சில மாகாணங்களிலும் சுவிட்சர்லாந்து, ஜமைக்கா, வெனிசுலா போன்ற நாடுகளிலும் இந்த உரிமையானது வாக்காளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

2003-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மாநில ஆளுநர் சரியாகச் செயல்படவில்லை என்கிற காரணத்திற்காக பதவியிலிருந்து மக்களால் திரும்ப அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்

இந்தியாவில் சமீபகாலமாக இந்தக் கோரிக்கை எழுவதற்கான காரணங்கள்:

நம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லாதது; இந்த ஆண்டு தொடக்கத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக 11 எம்.பி.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டது; போலி பாஸ்போர்ட் மோசடியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; அதிக அளவு குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் சில மாநில சட்டப்பேரவைகளில் இடம்பெற்ற சம்பவங்கள்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் கிரிமினல் மற்றும் குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 136. இவர்களில் சுமார் 26 பேர் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இந்தச் சூழ்நிலையில்தான் சரிவர செயல்படாத மற்றும் குற்றம்புரிந்த பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையானது மேலும் வலுப்பெற்றுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை நடவடிக்கைகள் 73 மணி நேரம் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. தனிநபர் விமர்சனம் மற்றும் முக்கியமில்லாத பிரச்னைகளுக்காக அமளியை உருவாக்குவதால் மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் விவாதிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

பட்டினியை எவ்வாறு நம் நாட்டிலிருந்து நீக்குவது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் மே 5-ஆம் தேதி நடைபெற்றது. ஆரம்பத்தில் 6 உறுப்பினர்களோடு விவாதம் தொடங்கி மொத்தம் 12 உறுப்பினர்களோடு விவாதம் முடிவடைந்தது. இது மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் இரண்டு சதவீதம் மட்டுமே ஆகும். கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் ஆவர்.

அதேசமயம் மற்ற நேரங்களில் தங்களது கட்சித் தலைவரை கைது செய்தாலோ அல்லது அரசியல் லாபத்திற்காக ஏதேனும் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் எனில் அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகி விடுகின்றனர்.

எதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தேர்தல் நடத்தி நாம் நம்முடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றோம்? மக்களுக்காக, மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய உறுப்பினர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவை. அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மூலமாக இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையும் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் சரிவர செயல்படாத மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரத்தையும் அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த உரிமை வழங்கப்படுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும். பிரதிநிதிகள் மக்களுக்குக் கட்டுப்பட்டவராகவும் மக்களுக்குப் பொறுப்பானவர்களாகவும் மாறக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.

இதன் மூலம் மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை மற்றும் அதிக அளவில் பங்கேற்கக்கூடிய நிலை உருவாகும். பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பது நிரந்தரமல்ல; சிறப்பாகச் செயல்பட்டால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகும். இது நிச்சயமாக இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்தும்; மேலும் வலுப்படுத்தும்.

(கட்டுரையாளர்: இணைப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)

Posted in Assembly, Attendance, Carrot, Corruption, Courts, Criminal, Democracy, discussion, Elections, Fire, Governor, Impeach, Impeachment, Incentives, Judge, Justice, kickbacks, Law, Lok Saba, Lok Sabha, LokSaba, LokSabha, Member, Minister, MLA, MP, Order, Performance, Politics, Polls, Quality, Removal, Representation, Stick, Suspension, Vote, voter | 1 Comment »

Thamil Cinema Association not to support Tamil Actresses: Why?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ஸ்ரேயாவுக்கு நெருக்கடி!

சென்னை, மே 23: நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளாத நடிகர், நடிகைகளின் பட சம்பந்தமான பிரச்னைகளில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தலையிடாது என அச்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.

இதையடுத்து ஸ்ரேயா, ஜோதிர்மயி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்:

நடிகர் சங்கத்தில் தற்போது 3500 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 700 பேர் ஆயுள்கால உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.2000 வசூலிக்கப்படுகிறது.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இன்னும் நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளவில்லை.

ஆனால் தாங்கள் நடிக்கும் படங்களில் சம்பளப் பிரச்னை உள்ளிட்ட இதர பிரச்னைகளுக்காக அவர்கள் நடிகர் சங்கத்தையே நாடுகிறார்கள்.

உறுப்பினராக இல்லாமல் தங்களுடைய பிரச்னைகளுக்கு மட்டும் சங்கத்தை நாடும் நடிகர், நடிகைகள் மீது பல ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளவர்களும், நடிகர் சங்க நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். ஆனாலும் இவர்களில் பலருக்கு சம்பளப் பிரச்னை ஏற்பட்ட போது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் அவற்றை சுமுகமாக தீர்த்துவைத்துள்ளன.

முன்னணி நடிகைகளான

  • ஸ்ரேயா,
  • ஜெனீலியா,
  • ஜோதிர்மயி,
  • தமன்னா,
  • நவ்யா நாயர்,
  • சிந்துதுலானி,
  • நடிகர் ஜீவன் உள்ளிட்ட பலர் சங்கத்தில் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.

ஆனால் இனி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளிப்பது என்றும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் நடிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதைத் தயாரிப்பாளர் சங்கத்திடமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறியதாவது:

அனைத்து நடிகர், நடிகைகளும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். உறுப்பினர் அல்லாத பலருக்கு இதுவரை பல பிரச்னைகளில் இரண்டு சங்கங்களும் துணையாக இருந்துள்ளன.

இனி வரும் காலகட்டங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தர முடிவு செய்திருக்கிறோம். நடிகர், நடிகைகள் உறுப்பினர் கட்டணமாகத் தரும் தொகையை மூத்த மற்றும் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்துகிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று பலர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வேண்டும்.

Posted in Actress, Association, Compensation, Dues, Geneelia, Genelia, Geneliya, Issues, Jeevan, Jeneelia, Jenelia, Jeneliya, Jodhirmayee, Jodhirmayi, Jothirmayee, Jothirmayi, Member, Navya, Navya Nayar, Raama Narayan, Raama Narayanan, Rama Narayan, Rama Narayanan, Salary, Shreya, Shriya, Sindhu Dholani, Sindhu Dolani, Sreya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Thamanna, Union | Leave a Comment »

Sharad Pawar’s daughter Supriya Sule takes oath as RS member

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006

சரத்பவார் மகள் சுலே எம்.பி.யாக பதவியேற்றார்

புதுதில்லி, அக். 28: மத்திய வேளாண் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே (38) நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பின் போது சரத்பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வசந்த் சவான் மறைவை அடுத்து அவருக்கு பதிலாக மகாராஷ்டிரத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கடந்த மாதம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் சுலே.

Posted in daughter, dynasty, Election, India, Kid, kin, maharashtra, Member, Nationalist Congress Party, Politics, Rajya Sabha, relative, RS, Sharad Pawar, Supriya Sule | Leave a Comment »

State of Public & School Libraries in Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

தூங்கும் நூலகங்கள்

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக புத்தகங்களின் வெளியீடு பெருகியது. புத்தகங்களைப் படிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. தொலைக்காட்சியின் தாக்கம் அதிகரித்து வரும் இன்றையச் சூழ்நிலையிலும் மக்களிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கு நூலகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை வாங்கும் நிலையில் பலருக்குப் பொருளாதார வசதி இருப்பதில்லை. எனவே மக்களின் அறிவுத் தாகத்தைத் தணிப்பதில் நூலகங்களின் பங்கு முக்கியமானது. மாணவர்கள் தங்களது பள்ளிப் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் நூலகங்கள் முக்கிய வாய்ப்பாகத் திகழ்கின்றன. ஒருகாலத்தில் பட்டிதொட்டிகளெங்கும் தொடங்கப்பட்ட படிப்பகங்கள் சாமானிய மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஊட்டின என்பதை மறக்க முடியாது. வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டுமென்றார் அண்ணா. அது சாத்தியமில்லாத பெரும்பாலான மக்களுக்கு அறிவுச்சுடர் ஏற்றி வைக்க உதவியாக இருப்பவை பொது நூலகங்களே.

பொது நூலகங்களில் நூல்கள் போதிய பராமரிப்பின்றி இருப்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அடிப்படை வசதிகளுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் பல அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் நூலகங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் இந்த நூல்களை மாணவர்களுக்குப் படிக்கக் கொடுப்பது கூட இல்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் படிப்பதற்குப் பயன்படாமல் அலமாரிகளில் புத்தகங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த நிலைமை நிலவுவதை சமீபத்திய பத்திரிகைச் செய்தி படம்பிடித்துக் காட்டியது. இதுபோன்ற நிலைமை மேலும் பல பள்ளிகளில் இருக்கக்கூடும். சில நல்ல ஆசிரியர்களின் பொறுப்புணர்வால் இதற்கு விதிவிலக்கான சில பள்ளிகளும் உண்டு. மாணவர்கள் படிப்பதற்கு நூலகங்களில் போதிய புத்தகங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இருக்கின்ற புத்தகங்களை மாணவர்களுக்குப் படிப்பதற்குக் கொடுக்காமல் இருப்பது என்ன நியாயம் என்று புரியவில்லை.

இதுபோன்ற பள்ளி நூலகங்களில் மிகக் குறைவான புத்தகங்களே இருக்கலாம். அதனால் தனி நூலகர்கள் யாரும் இருப்பது கிடையாது. ஆசிரியர்களில் யாராவது ஒருவர் பொறுப்பேற்று இதனைப் பராமரிக்கும் நிலை இருக்கும். புத்தகங்கள் தொலைந்துபோகாமல் கணக்குச் சரியாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, யாருக்கும் புத்தகங்களைக் கொடுக்காமல் இருப்பதுதான் என்ற எண்ணத்தில் இதுபோல புத்தகங்களை அலமாரிக்குள்ளேயே சிறைவைக்கும் போக்கு நடைபெறுகிறது. இந்த நிலைமையைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அத்துடன் பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் என்ற பெயரில் தேவையற்ற, பயனற்ற புத்தகங்களை வாங்கிக் குவிப்பதை விட்டுவிட்டு மாணவர்களுக்கு உண்மையிலேயே பயன்படும் புத்தகங்களை மட்டும் வாங்கச் செய்வதும் முக்கியம். பொது நூலகங்கங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்கள் பற்றியும் இதேபோல கடுமையான விமர்சனங்கள் இருந்து வந்திருக்கின்றன. தற்போது பொது நூலகங்களுக்கு ஆயிரம் பிரதிகள் வீதம் புத்தகங்களை வாங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் பணத்தில் வாங்கப்படும் இந்த நூல்கள் அனைத்தும் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுவனவாக இருக்க வேண்டும்.

பொது நூலகத் துறைக்கும் பள்ளி நூலகங்களுக்கும் பணம் ஒதுக்கீடு செய்வதுடன் நின்று விடாமல் அவை சிறப்பாகச் செயல்படுவதற்கு அரசு தகுந்த கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தற்போதைய கணினி யுகத்தில், உயர்கல்வி நிலையங்களில் உள்ள நூலகங்கள் டிஜிட்டல் நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படுகின்ற வேளையில், பள்ளி நூலகங்களை அவல நிலையில் வைத்திருக்கக் கூடாது.

Posted in Books, India, Lend, Library, Magazines, Member, Memberships, Op-Ed, Reader, Students, Tamil, Tamil Nadu, TN | 1 Comment »