Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Meenakshi’ Category

Madurai Meenakshi Sundhareswarar – Annual Festival Celebrations: Thiruvilaiyadal

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

சொக்கநாதர் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விழா

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் ஆவணி மூல உற்சவத் திருவிழாவில் சனிக்கிழமை “புட்டுக்கு மண் சுமந்த’ கோலத்தில் சுந்தரேசுவரர்.

மதுரை, ஆக. 26: அருள்மிகு சொக்கநாதர் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்சவம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நரியைப் பரியாக்கியது உள்ளிட்ட திருவிளையாடல் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மதுரையில் வாணிய வைசிய குலத்தைச் சேர்ந்த பக்தையான வந்தியம்மை மூதாட்டிக்கு மோட்ச வீடு அளிக்கும் வகையில் அருள்மிகு சோமசுந்தரர் இயற்றிய 61-வது திருவிளையாடலாகிய புட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி, அருள்மிகு புட்டு உற்சவ வகையறா கட்டளைக்கு சொந்தமான புட்டு சொக்கநாதர் கோயில் மைதானத்தில் நடைபெற்றது.

இதனையடுத்து பிற்பகலில் அருள்மிகு சொக்கநாதருக்கு தங்கக் கூடையில், மண் சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பின்னர் மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் வந்தியம்மை பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு புட்டுத் தோப்பு பகுதியில் கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். சுவாமி உலாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Posted in Festival, Hinduism, Madurai, Mathurai, MDU, Meenakshi, Meenashi, Minakshi, Minaxi, Sundharesvar, Sundharesvarar, Sundhareswar, Sundhareswarar, Sunthareswarar, Thiruvilaiadal, Thiruvilaiyaadal, Thiruvilaiyadal | Leave a Comment »

Madurai Vaidyanatha Iyer – Temple entry anniversary of dalits

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

வரலாறு படைத்த ஆலயப் பிரவேசம்!

வி.கே. ஸ்தாணுநாதன்

நம் நாட்டின் வரலாற்றில் – குறிப்பாக, தமிழக வரலாற்று ஏடுகளில் ஜூலை மாதம் 8-ஆம் நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரபல காந்தியவாதியான அமரர் எ. வைத்தியநாத அய்யர் துணிவுடன் ஹரிஜன சகோதரர்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்த ஆலயப் பிரவேசம் காலம்காலமாக ஹரிஜன சகோதரர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமையை வழங்க வழிவகுத்தது.

தீண்டாமையை ஒழிக்கவும் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், அமரர் வைத்தியநாத அய்யர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் துன்புற்று வந்த ஹரிஜனங்களுக்காக அயராது பாடுபட்டு வந்தார்.

பல்லாண்டுகளாக வழக்கத்திலிருந்த மரபு காரணமாக அந்நாள்களில் ஹரிஜனங்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. 1937ம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கத் தொடங்கிய பிறகு விரைந்து ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு வழிவகுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டுமென அய்யர் வலியுறுத்தி வந்தார்.

உயர் ஜாதி இந்துக்கள் இவ்விஷயத்தில் அக்கறை கொள்ளச் செய்ய பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்களுடைய ஒத்துழைப்பையும் உறுதி செய்து கொண்டார். 1939-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் நாள் நான்கு ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்கள் சிலருடன் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து அன்னையின் அளவிலா அருளைப் பெற்றார். தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

அய்யரின் துணிச்சலான இச் செயலைப் பாராட்டிய அண்ணல் காந்தியடிகள் 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்:

“இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.’

ஆலயப் பிரவேசத்திற்குப் பின் சிலர் ஏற்படுத்திய தடங்கல்கள் காரணமாக அன்றாட ஆலய வழிபாடு நடைபெறுவதில் சில சிக்கல்கள் தோன்றின. இவற்றைத் தீர்த்து அன்றாட வழிபாடு சுமுகமாக நடைபெற அய்யர் அயராது பாடுபட வேண்டி இருந்தது. ஆலயப் பிரவேசம் செல்லாது என அறிவிக்கக் கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அன்றைய முதல்வராக விளங்கிய ராஜாஜி விரைந்து செயல்பட்டு ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தை ஆளுநர் மூலம் பிறப்பிக்க வழிவகுத்தார். இதன் காரணமாக வழக்கு தள்ளுபடி ஆனது. பின்னர் இந்த அவசரச் சட்டம் முறையான சட்டமாக சட்டசபையில் நிறைவேறியது.

வைத்தியநாத அய்யர் துணிவுடன் செய்த ஆலயப் பிரவேசமே பின்னர் சட்டமாக உருவெடுத்து ஹரிஜனங்கள் ஆண்டவனின் சன்னதிக்குத் தங்கு தடையின்றி செல்ல வழிவகுத்தது.

1939-ம் ஆண்டில் இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கு காங்கிரஸ் அமைச்சரவைகள் ஒட்டுமொத்தமாக அக்டோபர் மாதத்தில் ராஜிநாமா செய்தன. அய்யர் அன்று மட்டும் ஆலயப் பிரவேசத்தைத் துணிவுடன் செய்திராவிடில் ஹரிஜனங்கள், அனைவருடனும் சரிசமமாக ஆலயத்திற்குள் நுழைந்து ஆண்டவனை வழிபடுவது என்பது பல ஆண்டுகள் தள்ளியே நடந்திருக்கும். ஏனெனில் 1939க்கு பின்னர் பொதுமக்கள் கருத்தின் மூலம் உருவான அரசு மீண்டும் 1946-ம் ஆண்டுதான் பதவியேற்றது.

ஹரிஜன ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தால்தான் ஆலயங்களுக்குள் வழிபாடு செய்யச் செல்வது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார். தாமும் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை வழிபட எண்ணிணார். எனினும் இரண்டாம் உலகப் போர், “வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ போன்றவைகளால் அந்த எண்ணம் தள்ளிப்போயிற்று. 1946-ஆம் ஆண்டு சென்னையில் தக்கர் பாபா வித்யாலயா புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட வந்தபோது, இதற்காகவே மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 8-ஆம் நாள் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியின் முக்கியமான நாளாகும். இந்நாளில் அமரர் வைத்தியநாத அய்யருக்கும் அவருக்கு உறுதுணையாக விளங்கி இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும் சிரம் தாழ்த்தி கரம் குவித்து அஞ்சலி செய்வோம்!

(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தக்கர் பாபா வித்யாலயா, சென்னை.)

———————————————————————————————————

மீனாட்சி அம்மன் கோயிலில்- 68 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமையை அகற்றிய அரிஜன ஆலயப் பிரவேசம்


மதுரை, ஜூலை 8: ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைக்குப் போராடும் நேரத்தில் நமது நாட்டில் இருந்த சமூக அவலமான தீண்டாமையை எதிர்த்துப் போரிடும் உன்னதப் பணியில் முத்தாய்ப்பாக நடத்தப்பட்டதுதான் அரிஜன ஆலயப் பிரவேசம்.

காந்தியடிகளின் அறிவுரையை ஏற்று செயல்படுத்துவதில் மதுரையில் அவரின் மறுபதிப்பாகத் திகழ்ந்தவர் வைத்தியநாத ஐயர். இளம் வயது முதல் சாதிப் பாகுபாடுகளை வெறுத்தவர்.

கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்ற சமூகக் கொடுமையைப் போக்க அவரது தலைமையில் 8.7.1939-ம் தேதி காலையில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம் நடக்கும் என அவர் அறிவித்தார்.

இதற்கு ஒருசாரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்தை வரவேற்கிறோம் என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறிக்கை வெளியிட்டார். இது எதிர்ப்பாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து திட்டமிட்டபடி பூஜை பொருள்களுடன் அரிஜன சேவா சங்கத் தலைவர் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் சிலர் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான ஆர்.எஸ்.நாயுடு அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, பின்னர் மீனாட்சி அம்மன் சன்னதி சென்று வழிபட்டனர். இதையடுத்து கோயிலிலிருந்து வெளியே வந்து அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தது என அறிவித்தனர்.

இந்த நிலையில், சட்டத்தை மீறி ஆலயப் பிரவேசம் செய்ததாக சிலர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி, ஆளுநர் மூலம் ஓர் அவசரச் சட்டத்தை முன்தேதியிட்டு பிறப்பிக்கச் செய்து ஆலயப் பிரவேசத்தை சட்டப்படி செல்லத்தக்கதாக்கினார். இதனால் ஆலயப் பிரவேசம் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. ஆலயப் பிரவேசம் நடந்து ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 8) 68 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், வரலாறும் மறக்கவில்லை. மக்களும் மறக்கவில்லை.

Posted in Aiyangaar, Aiyankaar, Aiyer, Anniversary, Archakar, backward, Brahmin, Caste, Civil, Community, Dalit, Deity, Evils, Forward, Freedom, Gandhi, Gita, Harijan, Hinduism, Hindutva, HR, Independence, isolation, Iyangaar, Iyangar, Iyankaar, Iyer, Keeripatti, Madurai, Mahatma, Manu, Meenakshi, Oppression, Papparappatti, Pooja, Rajaji, Religion, Reservation, rights, SC, Society, ST, Temple, Tolerance, Untouchability, vaidhiyanatha aiyer, vaidhiyanatha iyer, vaidhyanatha aiyer, vaidhyanatha iyer, vaidiyanatha aiyer, vaidyanatha aiyer, vaidyanatha iyer, Vaithyanatha Aiyar, Veda, Vedas, Vedha, Worship | 2 Comments »

Neelima Naidu & TV Actress Meenakshi arrested – Prostitutes are warned & let go

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

நடிப்பதற்கு ஒத்திகை பார்ப்பதாக கூறி தயாரிப்பு நிர்வாகியுடன் படுக்கையில் புரண்ட தென்இந்திய அழகி கைது

சென்னை, ஜன. 24-

சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சங்கரபாண்டியனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலை பேசியில் ரகசிய தகவல் வந்தது.

அதில் பேசிய நபர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, வீட்டில் நடிகைகள் சிலர் பலான தொழிலில் ஈடுபடுவதாகவும் சிலர் கார்களில் அங்கு வந்து செல்வ தாகவும் புகார் கூறினார்.

இதையடுத்து உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் அந்தப் பகுதியில் மாறு வேடத்தில் கண்காணித்தனர். பின்னர் அதிரடியாக சம்பந்தப்பட்ட வீட்டினுள் நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நீலிமா நாயுடு ஒரு வாலிபருடன் கட்டிபுரண்டு கிடந்தார். நீலிமா நாயுடு தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அறையில் ஆழ்வார் பேட்டையை சேர்ந்த டி.வி. நடிகை மீனாட்சி ஒரு நடுத்தர வயது ஆணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மீனாட்சி பிரபல ஜவுளி கடையின் விளம்பர டடத்தில் நடித்துள்ளார்.

பெண் போலீசார் உதவியுடன் விபசார தடுப்பு பிரிவு போலீசார் 2 ஜோடிகளையும் கையும், களவுமாக மடக்கினர். இதில் 2 அழகிகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் சரவணன் போலீஸ் பிடியில் சிக்கினார்.

மேலும் நீலிமா நாயுடுவிடம் உல்லாசமாக இருந்தவர் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி. மீனாட்சியுடன் இருந்தவர் பிரபல தனியார் தொலை காட்சி ஊழியர். இவர்கள் 2 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதையடுத்து போலீசார் நீலிமா நாயுடுவிடம் விசாரித்தனர். அவர் போலீசில் கூறியதா வது:-

நான் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய அழகையும், இளமையையும் பார்த்த பல சினிமா டைரக்டர்கள் என்ëனை நடிக்க அழைத்தனர். நான் ஐதராபாத்தில் மாடலிங் செய்து வந்தால் அங்குள்ள ஆண் நண்பர்கள் மூலம் நிறைய புதிய தொடர்புகள் ஏற்பட்டது.

அதில் சரவணனும் ஒருவர். அவ்வப்போது அழகி போட்டிகளில் பங்கு பெற பெங்களூர், மும்பை என செல்வேன். அப்போது சரவணனும் என்னுடன் வருவார். ஆரம்பத்தில் தொழில் முறை நண்பராக பழகிய அவர் எங்கள் குடும்ப நண்பரானார். அதோடில்லாமல் எனது லைனில் அக்கறை உள்ளவர் போல் நடந்து கொண்டார். இதனால் நான் அவரை முழுமையாக நம்பினேன்.

வாரத்திற்கு ஒரு முறை என்னை சில தொழில் அதிபர்கள் சந்திக்க வருவார்கள். அவர்களை சரவணன்தான் அழைத்து வருவார். அவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்வேன். அப்படி வந்த சினிமா தயாரிப்பு நிர்வாகி ஒருவர் சென்னை வந்தால் சினிமாவில் நடிக்க எளிதில் வாய்ப்பு கிடைக்கும். உனது உடற்கட்டு, தமிழக ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உள்ளது.

மேக்கப் டெஸ்ட் எடுப்பதற்கு என்று எனக்கு தெரிந்த பலர் சென்னை அண்ணா நகரில் உள்ளனர் என்று கூறி இங்கு அழைத்து வந்தார்.

இங்கு நான் தங்கியிருந்த அறைக்கு, டி.வி.நடிகை மீனாட்சி சில மணி நேரத்திற்கு முன்பு வந்தார். உடலை எப்படி இளமை பொலிவுடன் வைத்துக் கொள்வது என 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது சரவணன் 2 பேரை அழைத்து வந்தார். அதில் ஒருவர் ஏற்கனவே அறிமுகமான தயாரிப்பு நிர்வாகி, மற்றொருவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்றும் கூறி என் அருகில் அமர்ந்தனர்.

சிறிது நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்த அவர் மீனாட்சியை அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்று விட்டார். எனது அறையில் இருந்த தயாரிப்பு நிர்வாகி என்னிடம் சிறிய அளவிலான வண்ண வண்ண ஆடைகளை உடுத்தச் சொல்லி மேக்கப் டெஸ்ட் எடுத்தார்.

தனது செல்போன் காமிராவால் பல கோணங்களில் படம் பிடித்தார். ஒரு கட்டத்தில் நெருக்கமான பாடல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என ஒத்திகை பார்ப்பதாக கூறி என்னை இறுக்கி அணைத்தார். அவர் பிடியில் என்னை இழந்தேன். பின்னர் தான் தெரிந்தது சரவணன் என்னை நடிக்க வைப்பதாக கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது.

நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தப்பி செல்ல முயன்றேன். அதற்குள் 2-வது முறையாக என்னை பிடித்து வலுக்கட்டாய படுக்கையில் தள்ளி பலவந்தப்படுத்தினார்.

இவ்வாறு கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

ஆனால் சரவணனோ நீலிமா நாயுடு தாமாக விரும்பிதான் சினிமா தயாரிப்பு நிர்வாகியோடு படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறினார். இதற்கிடையே போலீசிடம் இருந்து தப்பி சென்ற தயாரிப்பு நிர்வாகியும், தனியார் தொலைக்காட்சி ஊழியரும் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு சரவணனை விடுவிக்க நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சரவ ணனிடம் இருந்து ரூ.22 ஆயி ரம் ரொக்கப் பணத்தை கைப்பற்றிக் கொண்டு போலீ சார் அவரை எச்சரித்து அனுப்பினர். தென் இந் திய அழகி நீலிமா நாயுடு, டி.வி.நடிகை மீனாட்சி ஆகிய 2 பேரையும் விபசார வழக் கில் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Posted in Age Restriction, Andhra Pradesh, Anna Nagar, Casting Couch, Consensus Sex, Films, Hyderabad, Illegal Sex, Legal Sex, Meenakshi, Movies, Neelima Naidu, Pictures, Prostitutes, prostitution, Raid, Saravanan, TV | Leave a Comment »