Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Medha Patkar’ Category

Mamata’s hunger strike enters eleventh day over TATA car project Singur issue

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006

திசைமாறும் போராட்டம்

மம்தா பானர்ஜி 11 வது நாளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் சிங்குர் என்ற இடத்தில் டாடா நிறுவனம் தொடங்கவுள்ள சிறு கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளை மாநில அரசு கட்டாயப்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்துகிறது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அக்கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் 12,000 விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி 1000 ஏக்கர் நிலத்தை வாங்குவது நியாயமா? என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேள்வி.

இதனை மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ய மறுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விரிவான “கட்டுரை-பதில்’ கொடுத்துள்ளார். “”மம்தாவின் குற்றச்சாட்டு உண்மையல்ல. அனைவரும் நிலத்தை விற்க ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். சுமார் 9000 விவசாயிகள் ரூ.131 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த நிலம் ஒரு போகம் விளையும் பூமிதான். சிங்குரில் விவசாய நிலங்கள் விற்கப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டில் 572 பேர், 300 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள். சிங்குரில் நிலத்தை விற்க யாரும் விரும்பவில்லை, நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது பொய்” என்று விரிவான ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் பதில் கொடுத்துள்ளார். இனி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அனுமதிக்கப் போகும் மாநிலங்கள், பிருந்தா காரத்தின் பதில்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் ஆச்சரியமில்லை.

மாநில அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து இப்போது பிரச்சினை வர்த்தக திசைக்குப் பாய்ந்துள்ளது. டாடா பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார் மம்தா.

விவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனத்துக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது யாரும் எதிர்பார்க்காதது. இந்த போராட்டத்துக்கு முன்பே, நிருபர்களிடம் பேட்டி அளித்த மம்தா, தாங்கள் டாடா நிறுவனத்தையோ தொழில்மயமாக்கலையோ எதிர்க்கவில்லை என்றார்.

டாடா நிறுவன பொருள்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு டாடா கார் தொழிற்சாலையின் பங்குகளைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

சிங்குர் பகுதியில் நிலத்தை இழப்போர், வேலையிழக்கும் விவசாயத் தொழிலாளர்கள் என சுமார் 35000 பேர் வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடும். விவசாயத்தை மட்டுமே அறிந்த, வேறு தொழில் தெரியாத இந்த ஏழை மக்களின் கைகளில் இழப்பீட்டுத் தொகை வெகுசீக்கிரத்தில் கரைந்துவிடும். மீண்டும் வறுமையில் வாடுவார்கள்.

டாடா நிறுவனம் பல தொழில்களில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனம். இரும்புத் தொழிலை உலக அளவில் விரிவு செய்யவுள்ளது. நிலத்தை விற்கும் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையில் 75 சதவீதத்தை சம-பங்குகளாக டாடா நிறுவனம் வழங்க வலியுறுத்தினால், அது உண்ணாவிரதம், புறக்கணிப்பு இவற்றைவிட உண்மையான காந்தியமாக அமையும்.

1000 ஏக்கரில் சிங்குர் கார் தொழிற்சாலை நில குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம்

கோல்கத்தா, மார்ச் 10: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், ரூ. 1 லட்சம் சிறிய கார் தொழிற்சாலை அமைப்பதற்கான 997 ஏக்கர் நில குத்தகை ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.

ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் (நிதி) ஆர்.எஸ். தாக்குர், மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷன் சார்பில் மாநில தொழில்துறைச் செயலர் சபியாசச்சி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நிலக்குத்தகை ஒப்பந்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்தக் கார் தொழிற்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பயிர் செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 25 நாள்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

உண்ணாவிரதத்தை மம்தா பானர்ஜி ஜனவரி 25-ம் தேதி கைவிட்ட ஒரு வாரத்தில், கார் தொழிற்சாலை அமைக்க நிலத்தை சமன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் டாடா நிறுவனத்தை மேற்கு வங்க அரசு அனுமதித்தது.

திரிணமூல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் போராட்டம் படிப்படியாக வலுவிழந்த நிலையில், நில குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட 997.11 ஏக்கர் நிலத்துக்காக ரூ. 120 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மத்தியில் ரூ. 1 லட்சம் கார் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in Agriculture, Communism, Communists, CPI, CPI (M), deal, Displaced, Economy, Factory, Farmers, Farming, Industrialization, Kolkata, Mamata Banerjee, Mamtha, Marxist, Marxist Communist, Medha Patkar, peasants, Pozhichaloor, Protest, residents, Singur, Strikes, Tamil, TATA, TMC, Trinamool Congress, Trinamul, WB, West Bengal, workers | 1 Comment »

Medha Patkar likens Left and Tata Motors Project with Bush and Iraq

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

சமூக சேவகி மேதா பட்கர் கைது

கோல்கத்தா, டிச. 3: மேற்குவங்க மாநிலம், சிங்குரில் டாடா கார் நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்தும் இடத்தைப் பார்வையிட சனிக்கிழமை சென்ற சமூக சேவகி மேதா பட்கர் கைது செய்யப்பட்டார்.

சிங்குரில் கார் நிறுவனத்துக்காக 1000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதாகவும், அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை போலீஸôர் துன்புறுத்துவதாகவும் தகவல்கள் வந்தன.

இதனால், நிலைமையை ஆராய்வதற்காக மேதா பட்கர், மனித உரிமைக்காக போராடும் தீபங்கர் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சிங்குருக்கு சென்றுகொண்டிருந்தனர். காசர்பேரி அருகே சென்றபோது அவர்களை போலீஸôர் தடுத்துநிறுத்தினர்.

இதையும் மீறி செல்ல முயன்ற அவர்களை கைதுசெய்தனர்.

———————————————————————————————-

டாடா கார் ஆலைக்கு எதிர்ப்பு: கிராமத்தினர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

சிங்குர் (மேற்குவங்கம்), டிச. 3: டாடா நிறுவனத்தின் சிறிய கார் தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீது போலீஸôர் ரப்பர் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலம் சிங்குர் பகுதியில் ஜாய்மொல்லா கிராமத்தில் டாடா சிறிய கார் தயாரிப்பு ஆலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் ஆலையைத் தொடங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சனிக்கிழமை முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் சிலர் போலீஸôர் மீது கற்களை வீசினர். அவர்களைக் கலைக்க போலீஸôர் தடியடி நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் பதற்றம் அதிகமாகி மேலும் பலர் அங்கு வரத்தொடங்கினர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸôர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர், ரப்பர் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டனர்.

போலீஸôர் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து அடித்ததாகவும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாகவும் கிராமத்தினர் சிலர் கூறினர். டிஐஜி தலைமையில் பெரும் போலீஸ் படை அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

———————————————————————————————-

மேற்குவங்க பேரவையில் திரிணமூல் வன்முறை: ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ – சோம்நாத் சட்டர்ஜி

கோல்கத்தா, டிச. 3: மேற்கு வங்க சட்டப்பேரவைக்குள் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரங்கேற்றிய வன்முறைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும் என மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் டாடா கார் தொழிற்சாலை அமைக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தயாரித்து விற்பனை செய்ய டாடா முடிவெடுத்துள்ளது. இந்தத் தொழிற்சாலைக்கு மேற்கு வங்க மாநில அரசு நிலம் கையகப்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு விளைநிலத்தை கையகப்படுத்தக் கூடாது என திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தவிர்க்க முடியாமல் சிறிதளவு விளைநிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது என மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் திட்டத்தை மக்கள் ஆதரிப்பதாகவும் விவசாயிகளை தூண்டிவிட்டு குளிர்காய திரிணமூல் காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் மாநில அரசு கூறியது.

இந்நிலையில் வியாழக்கிழமை பேரவைக்குள் அத்துமீறி மம்தா நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவரது கட்சி உறுப்பினர்கள் பயங்கர வன்முறையை அரங்கேற்றினர். மைக்குகளை பிடுங்கி தாக்கினர். நாற்காலிகள் பெஞ்ச்சுகளை உடைத்து நொறுக்கினர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலை நேரில் பார்வையிட வரும்படி மக்களவைத் தலைவருக்கு மேற்கு வங்கப் பேரவைத் தலைவர் ஹாசிம் அப்துல் ஹலீம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சனிக்கிழமை பேரவையை சோம்நாத் சட்டர்ஜி பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:

பேரவைக்குள் நடந்துள்ள தாக்குதல் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். காட்டுமிராண்டித்தனமாக செயல்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றுவது அனுமதிக்கக் கூடியதுதான்.

ஆனால் சம்பந்தப்பட்ட பேரவைகளின் தலைவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்யவேண்டும். பேரவைத் தலைவர்களின் அமைப்பில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம்.

மேற்கு வங்க பேரவைக்கு பெருமைமிகு வரலாறும் பாரம்பரியமும் உண்டு. பேரவை என்பது மக்களுக்கு சொந்தமானது. அரசுக்கு சொந்தமானதல்ல என்பதை தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசுக்கு எதிராக குறைகள் இருக்கலாம். ஆனால் பேரவைமீது தாக்குதல் நடத்தி அதை நியாயப்படுத்த முடியுமா? பேரவையை பாதுகாக்க முடியாவிட்டால் மேற்கு வங்க ஜனநாயகத்தின்மீது கறைபடிந்து விடாதா?

பேரவை நடத்தை விதிகளை கடைப்பிடிக்காத உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் நம்பிக்கையை அவமதிக்கிறார்கள். உறுப்பினர்களின் இத்தகைய நடவடிக்கைகள்தான் சாதாரண கிரிக்கெட் பயிற்சியாளர்கூட மக்கள் பிரதிநிதிகளை நோக்கி குறைகூறும் நிலையை உருவாக்குகிறது என்றார் சோம்நாத்.

Medha Patkar Interview in Kalki (March first week issue)

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க அண்மையில் கன்னியாகுமரிக்கு வந்திருந்த சமூகப் போராளி மேதாபட்கர். நமது கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார்…

நாடு முழுவதும் ஏற்கெனவே எட்டு அணு உலைகள் உள்ள
நிலையில் கூடங்குளத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

‘‘இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கூடங்குளத்தை மட்டுமல்ல, அனைத்து அணு உலை நிலையங்களையும் தடைசெய்ய வேண்டும் என்பதே எங்கள் போராட்டத்தின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக, வரும் மார்ச் 19ஆம் தேதி புதுதில்லி ஜந்தர் மந்திரில் அணு உலை எதிர்ப்பு நடவடிக்கை ஒரு தொடர் போராட்டமாக நடக்க உள்ளது. அதற்கு முன்பான அடையாள எதிர்ப்புதான் கூடங்குளத்தில் நடைபெறுகிறது. அணு ஆயுதங்களும், அணுசக்தியும் நாட்டுக்குப் பெரும் ஆபத்து. ஜார்க்கண்ட் மாநிலம் சடுகுடாவில் யுரேனியம் எடுப்பதால் அங்குள்ள ஆதிவாசி மக்கள் புற்றுநோய், வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் அணு ஆயுத ஒப்பந்தத்தைப் புறக்கணித்து வரும் நிலையில்
அமெரிக்காவுடன் நாம் கையெழுத்துப் போட்டுள்ளது தவறு. அதைத் தவிர்த்து, ‘அணு உலை’ என நினைவுச் சின்னமாக்குவதற்கு ஆவன செய்யலாமே!’’

சிங்கூர் பிரச்னையில் உங்கள் போராட்டமும், அரசின் அணுகுமுறையும் எதிரெதிர் திசைகளில் உள்ளனவே?

‘‘மேற்கு வங்காளத்தின் தொழில் துறை அமைச்சர் நிரூபன்சென்கூட எங்கள் தரப்பு நியாயத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் என்ன செய்வது? அதை அமல்படுத்தும் அதிகாரம் அவரிடம் இல்லையே. காரணம், அரசுக்குப் பெரும் பணக்காரர்களின், ஒப்பந்தக்காரர்களின் பணம் தேர்தல் நேரத்தில் தேவைப்படுகிறதே!

சிங்கூர் பிரச்னையின்போது மேற்கு வங்கக் காவல்துறை என்னை ஒரு சமூக விரோதியைப் போல் நடத்தியது. அன்றைய ஜெயலலிதாவின் காவல்துறையையும், நரேந்திர மோடியின் காவல்துறையையும் விட புத்ததேவின் காவல்துறை நடவடிக்கை மோசமானது. ஒரே வாரத்தில் என்னை மூன்று முறை கைது செய்தார்கள். கொல்கத்தாவுக்கு உள்ளே வரக்கூடாது என்றார்கள். கொல் கத்தாவுக்கு வெளியே என் நண்பர் இல்லத்தில் இருந்தேன். அங்கேயும் வந்து கைது செய்தார்கள். நான் நீதிமன்றத்தை நாடினேன். என்னைக் கைது செய்தது தவறு என்றது நீதிமன்றம். மேற்கு வங்காளத்தில் நான் எங்கும் சுதந்திரமாகச் செல்லலாம் என்றது.

சிங்கூரில் தினம்தோறும் மோதல்கள் ஏற்படுகின்றன. நிலத்தை
விற்றவர்கள், நிலத்தை விற்காதவர்கள் எனப் பிளவுபட்டுக்
கிடக்கிறார்கள். புத்த தேவ் பட்டாச்சாரியாவை அவர் கட்சியினரே சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அவர்களே போராட்டத்தில் ஈடுபட்டது, தொழிற்சங் கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது,
மாநிலத்தில் ஐ.டி. துறை உட்பட பல்வேறு துறைகளை ஸ்தம்பிக்கச் செய்தது எல்லாம் எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான்.’’

இன்றைக்கு, பெரும் நகரம் முதல் சிற்றூர் வரை விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றனவே…

‘‘இது ஒரு சமூகக் கொடுமை. எதிர்கால விளைவு பற்றித் தெரியாமல் நடக்கும் அக்கிரமம். நம்முடைய விவசாய விளைநிலங்கள் அரசின், அதிகாரவர்க்கத்தின், ஒப்பந்தக்காரர்களின் வேட்டைக் காடுகளாக மாறி வருகின்றன. ஒரு விவசாயியின் விவசாயத்தில் முதலீடு அதிகம். ஆனால், விளைபொருட்களுக்கு அதற்கான விலை இல்லை. கொள்ளை வியாபாரிகள் விவசாயிகளின் வறுமைச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களுடைய நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கிவிடுகின்றனர். விவசாயியின் ஏழ்மை நிலையைப் போக்க வேண்டிய அரசு, அதிகாரத் தரகர்களுக்கு ஆதரவாகக் செயல்படுகிறது.’’

Posted in Agriculture, Automotive, Becharam Manna, Cars, Communism, Communist, Communist parties, Communists, CPI, CPI (M), CPI(M), Dankuni, Factory, Farming, Farmlands, Hooghly, Industry, Interview, Kalki, Koodangulam, Koodankulam, Mamata Banerjee, Medha Patkar, Narmada Bachao Andolan, Nuclear, peasants, Rabindranath Bhattacharya, Singur, Singur Krishijami Bachao Committee, Somnath, Somnath Chatterjee, Tata Motors Project, TMC, Trinamool Congress, West Bengal | Leave a Comment »

Save Pozhichaloor Houses from Airport Extension Project

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2006

பொழிச்சலூர் பொதுக் கூட்டத்தில் மேதா பட்கர் இன்று பங்கேற்கிறார்

சென்னை, அக். 9: சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினையால் பாதிக்கப்படும் பகுதியான பொழிச்சலூரில் திங்கள்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நர்மதா அனை திட்ட எதிர்ப்பு குழுத் தலைவி மேதாபட்கர் பங்கேற்கிறார்.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக இங்குள்ள பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, இங்குள்ள விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தில்லி சென்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்தத் தலைவர்கள் பலரையும் சந்தித்து மனு அளித்தனர்.

இதேபோல சென்னையிலும், மாவட்டத் தலைநகரான காஞ்சிபுரத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

போராட்டத்துக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் வாழ்வுரிமை தன்னார்வ அமைப்புகளிடம் ஆதரவு கோரினர். இவர்களின் கோரிக்கையை ஏற்று நர்மதா அனை திட்ட எதிர்ப்பு குழுத்தலைவி மேதா பட்கர் பொழிச்சலூருக்கு திங்கள்கிழமை வருகிறார்.

பொழிச்சலூர் பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் இக்கூட்டத்தை நடத்துகின்றனர்.

=========================================================

 சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல் பகுதி நிலங்களை அரசு கையகப்படுத்தாது: முதல்வர்

சென்னை, மார்ச் 12: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினையில் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி பேசிய பிறகுதான் இறுதி முடிவு முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைப் பற்றி விவாதித்து எந்த முடிவுக்கும் தமிழக அரசு இன்னும் வரவில்லை. ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும், விமான நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அதிக அளவில் குடிசைவாசிகள் வாழக்கூடிய இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தாது.

எந்த ஒரு விரிவாக்கத் திட்டமானாலும், மேம்பாட்டுத் திட்டமானாலும் அதனால் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்காத வகையில்தான் இடங்கள் தேர்வு செய்யப்படும்.

விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை: விதிகளை மீறி செல்வந்தர்கள் கட்டிய கட்டடமாயிருந்தாலும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது. அதேபோல ஏழைகள் வாழும் வீடுகளை அகற்ற இந்த அரசு முன்வராது. இதில் யாருக்கும் எந்தவிதமான அச்சமும் தேவையில்லை.

Posted in Airport, Anagaputhoor, Anagaputhur, Anakaputhoor, Anakaputhur, Angaputhoor, Chennai, Communist, CPI, DMK, Extension, Houses, Madras, Medha Patkar, Meenambakkam, Narmada Bachavo Andolan, Pammal, PMK, Policahaloor, Policahalur, Pozhichaloor, Project, Protest, Satellite City, Suburban, Trisoolam | Leave a Comment »