Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2007
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதம்
 |
 |
மட்டக்களப்பு சிறைச்சாலை |
இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எனக் கூறப்படும் 29 பேர் தம் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி சனிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
சிறைச்சாலை கூரை மேல் அமர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இக் கைதிகள் 2004 – 2007 ம் ஆண்டு காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகின்றது
கைதான நாள் முதல் விசாரணைகளின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இக் கைதிகள் தமது கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலக பிரதிநிதிகள், நீதிஅமைச்சர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரை தாம் சந்தித்து பேச வேண்டும் என்றும் மற்றுமொரு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்
இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர
விஜயகுணவர்தனவுடன் தொடர்பு கொண்ட போது இக் கைதிகளில் 4 பேர் மட்டுமே விடுதலைப் புலி சந்தேக நபர்கள் என்றும் ஏனையோர் பிற குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், இவர்களை விசாரணை செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விடயம் என்றார்.
Posted in Arrest, Batticaloa, Fast, Jail, LTTE, Mattakalappu, Mattakalapu, Prison, Srilanka | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007
 |
 |
ஜனாதிபதிக்கு அர்ச்சகர் வரவேற்பு கொடுத்த போது எடுக்கப்பட்ட படம் |
ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை
இலங்கை ஜனாதிபதி அண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைக்குச் சென்ற போது, அங்கு அவரை வரவேற்ற இந்து அர்ச்சகர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பு மாவட்டத்தில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார்.
அப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார். அவர் அப்போது ஜனதிபதிக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.
இந்த நிலையில், நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரை வீட்டுக்கு வெளியே அழைத்து சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
 |
 |
கொலை செய்யப்பட்ட அர்ச்சகரின் குடும்பம் |
ஜனாதிபதியின் வாகரைக்கான விஜய தினத்தன்று தனது கணவரை இராணுவத்தினர் பூசைக்கென்றே அழைத்துச் சென்றதாகவும், ஜனாதிபதிக்கு மாலை அணிவித்ததன் காரணமாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் கொல்லப்பட்ட அர்ச்சகரின் மனைவி தெரிவித்துள்ளார்.
ஆயினும் கொலையாளிகளை தன்னால் அடையாளம் காணமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகள் இதனை மறுத்துள்ளார்கள்.
இந்தக் கொலை குறித்து தான் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
Posted in abuse, Assassination, Autocracy, Batticaloa, Buddhism, civil war, clergyman, Eelam, Eezham, Hindu, Hinduism, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Mahinda Rajapakse, Mattakalappu, Mattakkalappu, Military, Militia, Parameshwara Kurukkal, Power, President, priest, Sri lanka, Srilanka, Tamil Tigers, Terrorism, Tiger rebels, Vagarai, Vakarai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »