Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Manmohan Singh’ Category

CPI(M) condemns Prime Minister Manmohan Singh’s request to Indian Businesses in People’s Democracy

Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007

முதலாளிகளைக் கெஞ்சுவதா? மார்க்சிஸ்ட் கோபம்!

புது தில்லி, ஜூன் 3: “விலைவாசியைக் குறைக்க உதவுங்கள், கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்காதீர்கள், அரசுடன் சேர்ந்து ஏழ்மையை ஒழிக்க சமூகக் கடமையை நிறைவேற்றுங்கள்’ என்று தொழில் அதிபர்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுப்பது அர்த்தமற்றது, பலன் தராதது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான “பீப்பிள்ஸ் டெமாக்ரசி‘யில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் இந்தக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

“சுரண்டுவதை நிறுத்திவிடும்படி முதலாளிகளைக் கேட்பது என்பது சைவமாக மாறிவிடு என்று புலியை வேண்டிக் கொள்வதற்குச் சமம்.

ஏழைகள் மீது பிரதமருக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் அரசின் கொள்கைகளைத்தான் மாற்ற வேண்டும். தாராளமயம், உலகமயம் ஆகியவற்றைக் கைவிட்டு வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும்.

வறுமை, கல்லாமை, ஊட்டச்சத்து குறைவு, சுகாதாரமின்மை ஆகியவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மையமாக வேலையில்லாத் திண்டாட்டம் காணப்படுகிறது. எனவே மத்திய அரசு கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி நேரடியாகச் செலவு செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி என்றால் அது வறிய பிரிவினருக்கு பொருளாதார ரீதியான அதிகாரமளித்தலாக இருக்க வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூகநலத்துறைக்கு அதிகம் செலவிடுவோம், வறுமையை ஒழிப்போம், அரசுத்துறைகளில் முதலீட்டை அதிகப்படுத்துவோம், அரசுத்துறைகளுக்கு முக்கியத்துவம் தருவோம், அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க மாட்டோம், விலைவாசியைக் குறைப்போம், வேலைவாய்ப்பைப் பெருக்குவோம் என்றெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் இவற்றில் எத்தனை அமல் செய்யப்பட்டன?

இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு இந்தியாவின் ஆண்டு மொத்த உற்பத்தி மதிப்பில் நாலில் ஒரு பங்கு, அதாவது 8 லட்சத்து 54 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்று கூறி, இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்று பெருமைப்படுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.

ஏழை, பணக்காரர் வேற்றுமை அதிகரித்து வருகிறது. ஏழைகள் படிப்புக்கும் வாழ்க்கைச் செலவுக்கும், மருத்துவத்துக்கும் செலவழிக்க முடியாமல் ஊட்டச் சத்து குறைந்தும், நோயில் வீழ்ந்தும், படிப்பைப் பாதியில் நிறுத்தியும் சிரமப்படுகின்றனர். கல்லூரிக் கல்வி, உயர் கல்வி என்பதெல்லாம் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது.

2001-02 பட்ஜெட்டில் சமூகநலத் துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 28.26% செலவிடப்பட்டது. 2006-07-ல் இது 27.19% ஆகக்குறைந்துவிட்டது’ என்று தலையங்கம் சாடுகிறது.

Posted in Business, CEO, College, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Condemn, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Divide, Economy, Education, Election, Employment, Expenses, Finance, GDP, Govt, Growth, Inflation, Jobs, Manmohan, Manmohan Singh, Needy, Op-Ed, Opinion, People's Democracy, PM, Polls, Poor, Recession, Rich, Schemes, Society, WB, Wealthy, Welfare | Leave a Comment »

Neeraja Choudhry: Manmohan Singh’s Three Year Anniversary – Achievements

Posted by Snapjudge மேல் மே 21, 2007

மன்மோகன் அரசின் மூன்றாண்டு சாதனைகள்!

நீரஜா சௌத்ரி

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு நல்ல உதாரணமாக, திமுகவைச் சேர்ந்த வி. ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற விதம், சூழ்நிலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்தடுத்து கிடைத்த தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்திருப்பதையும், அதனால் இந்தக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகள் நாளுக்குநாள் தங்களுடைய நெருக்குதலை அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்ட இந்த ஒரு சம்பவமே போதும்.

பிரதமரின் அதிகாரம் குறைந்துகொண்டே வந்து, “”இன்று யார் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடுகிற நிலைமைக்கு” வந்து விட்டதையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை மாறி எது நடந்தாலும் “”சகித்துக் கொள்வது” என்கிற பரிபக்குவ நிலையை அவர் எய்திவிட்டதையுமே இது உணர்த்துகிறது.

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய தயாநிதி மாறனுக்குப் பதிலாக, திமுக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர் யார், அவருடைய இலாகா எது, பதவியேற்பு நாள் என்றைக்கு என்பதையெல்லாம் தீர்மானம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை!

ராதிகா செல்விதான் அடுத்து இணை அமைச்சராகப் பதவி ஏற்பார், உள்துறை அமைச்சகம்தான் அவருக்கு வழங்கப்படும், பதவியேற்பு இந்தத் தேதியில் நடைபெறும் என்பதெல்லாம் முதலில் சென்னையில்தான் அறிவிக்கப்படுகிறது, தில்லியில் அல்ல!

மத்திய அரசில் தங்கள் கட்சி சார்பில் இடம்பெறப் போவது யார் என்று பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிப்பது இது முதல்முறையல்ல. 1996-ல் எச்.டி. தேவ கெüடா பிரதமரானதிலிருந்தே இதுதான் நடைமுறையாக இருக்கிறது. அவரது அரசையே, “”முதலமைச்சர்களின் அரசு” என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.

கூட்டணி அரசில் தோழமைக் கட்சிகள் முக்கியமான இலாகாக்களைக் கேட்டு வாங்குவதும் இது முதல்முறையல்ல. ஆதரிக்கும் கட்சியின் வலுவுக்கு ஏற்ப இதில் “”தீவிரமான பேரமே” நடைபெறுவது வழக்கம்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியம் என்னவென்றால், மத்திய திட்டக்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதமர், தமிழக முதலமைச்சரிடமிருந்து இரண்டு கடிதங்களைக் கொண்டுவந்த தூதரை (மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி) வரவேற்க கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து வெளியே வருகிறார்.

குடியரசுத் தலைவரோ, சோனியா காந்தியோ பிரதமருடன் பேச விரும்பினால்கூட, அது முன்கூட்டியே அவருக்குத் தெரிவிக்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது. பிரதமர் அப்படி நேரம் ஒதுக்கிச் சந்திக்கும்வரை காத்திருக்க முடியாத அந்தத் தூதர் உடனே சந்திக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்; சிறிது நேரம் கழித்து சந்திக்கிறேனே என்று பிரதமரால் அவரிடம் சொல்ல முடியவில்லை!

மே 22-ம் தேதியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாட பெரிய விழா எடுப்பதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை; கடந்த ஆண்டைப் போல ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் அறிக்கையையும் காணவில்லை.

சாதகமான அம்சம் எதுவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டே வந்து இப்போது 9% ஆகியிருக்கிறது. அன்னியச் செலாவணி கையிருப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர யாரும் தீவிரமாக முயற்சிக்காவிட்டாலும், முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன்பு இந்தியாவிடமும் ஆலோசனை கலக்கின்றனர்.

நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அங்கும் இங்கும் வன்செயல்கள் நிகழ்கின்றன. ஹைதராபாத் நகரின் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது சமீபத்திய நிகழ்வாகும். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்களுக்கும் தேரா பாபா ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் நடப்பது கவலைதரும் அம்சமாகும். காலிஸ்தான் கிளர்ச்சி கால வன்முறைச் சம்பவங்கள் நினைவைவிட்டு நீங்காததால், இந்த மோதல் எங்கே பெரிதாகிவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே வழக்கமாக இருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இப்போது பரவலாக எல்லா மாநிலங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்தியில் கூட்டணி அரசு ஆட்சி செய்வது இதுவே முதல் முறை. 2004-ல் தொடங்கப்பட்ட இந்த கூட்டணி அரசு ஏற்பாட்டில், அரசியல் அதிகாரம் தனியாகவும் (சோனியா), ஆட்சி நிர்வாகம் (மன்மோகன்) தனியாகவும் பிரிக்கப்பட்டது. தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜவாதி கட்சி ஆகியவை அரசை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்து விலகிய போதிலும் கவிழாத அளவுக்கு “”நிலையான அரசாக” ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கிறது.

இந்த ஆட்சியில் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன; ஆளும் கூட்டணியில் உள்ளவர்களுக்கு இது கலக்கத்தையே அளித்துவருகிறது. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது; கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. பணக்காரர்களைப் பாதுகாக்கத்தான் காங்கிரஸ் கட்சி என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றி வருகிறது.

பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டே வருகிறது; சமீபத்திய தோல்வி உத்தரப்பிரதேசத்தில். பஞ்சாப், உத்தரகண்ட், மும்பை-தில்லி மாநகரமன்றத் தேர்தல்கள் இதற்கு முந்தையவை. இதே ரீதியில் போய்க்கொண்டிருந்தால் 2009 மக்களவை பொதுத் தேர்தலில் அது இரட்டை இலக்கத்தில்தான் எம்.பி.க்களைப் பெற முடியும்.

பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் அது மக்களுக்குப் பயன்படவில்லை என்று காங்கிரஸ்காரர்களே இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். 60% மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைத்துறை 2% வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையோ (ஐ.டி.) குதிரைப் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும் பின்தங்கிய பகுதிகளும், உள்நாட்டுப் பகுதிகளும் தொடர்ந்து வறுமையில் ஆழ்ந்துகிடக்கின்றன.

சீனா, ஜப்பானைவிட அதிக அளவில் புதுக் கோடீஸ்வரர்கள் உருவாகும் நாடாக இந்தியா மாறி வருகிறது; அதே வேளையில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினர் பரம ஏழைகளாக வறுமையில் வாடுகின்றனர்.

பணக்காரர்களுக்கு சாதகமான கட்சி என்ற தோற்றத்தை விலக்க, அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம், நகர்ப்புற மீட்சித்திட்டம் போன்றவற்றை அமல்செய்ய ஆரம்பித்தும் எதிர்பார்த்த “”அரசியல் விளைவை” அந்தத் திட்டங்களால் ஏற்படுத்த முடியவில்லை.

முஸ்லிம்களின் ஆதரவைத் திரும்பப்பெற, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளைப் பெற்று அதை பகிரங்கப்படுத்துவது, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்களை ஒதுக்குவது போன்ற அதன் “”அரசியல் முடிவுகளும்” எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. இட ஒதுக்கீட்டு முடிவால் அதற்குக் கிடைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைவிட, காங்கிரஸ் கட்சி இழந்த முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள்தான் அதிகம் என்பதையே உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சியின் முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்தாற்போலத் தெரியவில்லை. ஈரான் விவகாரத்திலும், சதாம் ஹுசைனை இராக்கில் தூக்கில் போட்ட விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதம் அவர்களை நோகவைத்தது. சமத்துவம், சம நீதி என்பவை கட்சிக்கும் அரசுக்கும் இப்போது பெரிய சவாலாகத் திகழ்கின்றன. கூட்டணியிலேயே பெரியது காங்கிரஸ் கட்சிதான் என்பதால், எந்தத் தோல்விக்கும் அதன் தலையில் பழியைப் போடுவது தோழமைக் கட்சிகளுக்கு மிக எளிதாக இருக்கிறது. எல்லாம் விபரீதமாகிவருகிறது என்று காங்கிரஸýக்குத் தெரிகிறது, ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை.

===================================================

மன்மோகன் அரசின் சாதனைகள்-2

நீரஜா சௌத்ரி

உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதில் வேகம் வேண்டாம், அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டாம் என்றெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.

திறமைசாலிகளான மத்திய அமைச்சர்கள் “”அரசியல்” விளைவுகளைக் கருதி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குவதால் நிலைமை மோசமாக இருக்கிறது. நிதி அமைச்சகத்தை நிர்வகிப்பதில் திறமைசாலியான ப. சிதம்பரம் விலைவாசி உயர்வுக்காகக் கண்டிக்கப்படுகிறார். தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருக்கிறது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்த உடனேயே கட்சித்தலைவர்கள், “”தோல்விக்குக் காரணம் விலைவாசி உயர்வுதான்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் அம்பிகா சோனியும் ஜெயந்தி நடராஜனும் இப்படிப் பேசியிருக்க வழியில்லை.

“”விலை ஏன் உயருகிறது என்று இனிமேல் விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் அந்த வேலையைச் செய்யுங்கள்” என்று விவசாய அமைச்சர் சரத் பவாரிடம், நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினாராம். வேளாண் விளைபொருள்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற பேச்சு வந்தபோது, அவர் இப்படிக் கூறினாராம்.

திறமையான நிர்வாகி என்றாலும், கோதுமை இறக்குமதி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்காமல், சந்தையில் விலை அதிகரித்த பிறகு எடுத்ததற்காக பவாரையும் கட்சியினர் கண்டித்தனர். வெற்றிகரமான வர்த்தக அமைச்சராகக் கருதப்பட்ட கமல்நாத், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நந்திகிராமம் போன்ற ஊர்களில் கிடைத்த “”வரவேற்பினால்” சிக்கலில் ஆழ்ந்திருக்கிறார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி எந்த நாட்டையும் சாராமல் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க முற்பட்டுள்ளார். அமெரிக்காவுடனான ஆக்கச் செயலுக்கான அணு உடன்பாட்டை அரசு நியாயப்படுத்திவரும் அதே வேளையில் ஈரானுடனான உறவை வலுப்படுத்த அந்த நாட்டுக்குச் சென்றுவந்தார். பிரணப் முகர்ஜி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், மத்திய அரசே கவிழ்ந்துவிடும் என்ற அளவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய முக்கியத்துவம் குறித்துப் பேசுகின்றனர்.

ரயில்வே துறையில் நிதிநிலைமையை மேம்படுத்திய லாலு பிரசாதின் வெற்றியின் ரகசியம் என்ன என்று அறிய ஹார்வர்டின் மேலாண்மையியல் மாணவர்கள் தில்லிக்கு வருகின்றனர். திறமையான அதிகாரிகளை ஊக்குவித்து, அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததே லாலுவின் வெற்றி ரகசியமாகும். சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல், (பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது) மணி சங்கர ஐயர் ஆகியோர் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களாகப் பாராட்டப்படுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இல்லாததே, பேரவைத் தேர்தலில் தோல்விக்குக் காரணம் என்று சோனியா காந்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். 2004-05-ல் மேல் சாதியினரும் முஸ்லிம்களும் ஆதரித்த நிலையிலும்கூட கட்சியை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை காங்கிரஸ் கோட்டைவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) திருத்தியமைக்கப்படவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்த 3 பேர் அமைச்சர்களானதால் காலியான அந்தப்பதவிகள் இன்றுவரை நிரப்பப்படவில்லை. பல மாநிலங்களில் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் திருத்தியமைக்கப்படவில்லை.

வேட்பாளர்களை மாயாவதி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிவு செய்கிறார். தில்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவே இன்னமும் இரண்டே நாள்கள்தான் இருக்கின்றன என்ற நிலையில்தான் வேட்பாளர்களையே காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.

சோனியா காந்திக்கு மக்களுடனான தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது. ஒரு பிரச்னை குறித்தோ, தீர்மானம் குறித்தோ தீவிரமாக விவாதித்து முடிவெடுக்கும் போக்கு கட்சியில் குறைந்து வருகிறது.

இரு கூட்டணிகளை மையமாகக் கொண்டுதான் தேசிய அரசியல் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தாலும் தேசியக் கட்சிகளுக்குத் தேவையே இல்லை என்கிற நிலைமை குறித்து காங்கிரஸ், பாஜக இரண்டும் கவலைப்பட்டாக வேண்டும். இதனால்தான் இருகட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முன்முயற்சி, உத்தரப்பிரதேச வெற்றிக்குப் பிறகு மாயாவதியின் கைக்குப் போய்விட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் இரண்டு ஆண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சியினரும் மக்களும் ஒருவித பரிதாபத்துடன் பேசினர். இப்போது அவரை, “”மகாகனம் பொருந்திய அமைச்சரவைச் செயலர்” என்று ஏளனமாகக் கூறுகின்றனர்.

அரசிடமிருந்து எல்லாவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கும் “”கையேந்தி முதலாளித்துவம்” கூடாது என்று ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பிரதமர் மன்மோகன் சாடியிருக்கிறார். ஆட்சி அதிகாரம் தோழமைக் கட்சிகளிடமும் சோனியா காந்தியிடமும்தான் இருக்கிறது என்ற விரக்தியால் வந்த விமர்சனம் அது.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதால் மன்மோகன் சிங்குக்கு மறைமுகமாக ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் ராகுல் காந்தியைப் பிரதமராக்கு, அல்லது அமைச்சராக்கு என்ற கோஷம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்திருக்கும். சோனியாவும் மன்மோகனும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன் நின்று தலைமை வகித்திருந்தால் வெற்றி கிட்டியிருக்கும். என்ன நடக்கிறதோ அதற்கேற்ப செயல்படலாம் என்ற நினைப்பே தோல்விக்குக் காரணம்.

கட்சியின் முன்னாலும் ஆட்சியின் முன்னாலும் உள்ள பிரச்னைகளை தொலைபேசி மூலம் தனித்துப் பேசி விவாதிக்கும் நிலையில் இருவருமே இல்லை.

2004-ல் பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்த்துக் கூட்டணி அமைத்து, முன்னிலையில் இருந்து பிரசாரம் செய்து வெற்றியை ஈட்டினார் சோனியா. ஆட்சிக்கு வந்த பிறகு பின்னணியில் இருந்து ஆட்சியை வழிநடத்த முற்பட்டார். ஆனால் அதில் முனைப்பும், தீவிர முயற்சியும் இல்லாததால் தொய்வு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால் காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், 2009 இவர்கள் எதிர்பார்ப்பதுபோல அமையாது.

தமிழில்: சாரி
———————————————————————————————–

எல்லா துறையிலும் காங். கூட்டணி அரசுக்கு தோல்வி: பாஜக 66 பக்க கண்டன அறிக்கை

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3 ஆண்டுக்கால பதவி நிறைவையொட்டி, பாரதீய ஜனதா தயாரித்த 66 பக்க அறிக்கை தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் (இடமிருந்து 3-வது) இதை வெளியிட்டார். ஐ.மு.கூ. ஆட்சியில் சாமான்ய மனிதனுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பட்டியலிடுகிறது அறிக்கை.

புது தில்லி, மே 23: “”பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 3 ஆண்டுக்கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோற்றுவிட்டது” என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக 66 பக்க அறிக்கையை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

“நல்ல பொருளாதார நிர்வாகத்துக்கு அடையாளமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏழைகளும், நடுத்தர மக்களும் நலமாக வாழ முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

உள்நாட்டு பாதுகாப்பிலும் கோட்டைவிட்டுவிட்டது அரசு. பயங்கரவாதிகளையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் கட்டுக்குள் வைக்கத்தான் “”பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அயோத்தி, பெங்களூர், காசி, தில்லி, மும்பை, மாலேகாம், ஹரியாணாவில் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜம்மு மற்றும் இப்போது ஹைதராபாத் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளனர். இவற்றைத் தடுக்கத்தான் முடியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களை அதன் பிறகு பிடிப்பதிலும் இந்த அரசு கோட்டைவிட்டுவிட்டது.

கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானிக்குச் சலுகை காட்ட வேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் “”ஒருமனதாக” தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; தில்லியில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாகக் கருதியே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

ஆந்திரம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சல்களை ஒடுக்க முடியவில்லை.

அரிசி, கோதுமை, பருப்புவகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பெட்ரோல், டீசல், சிமெண்ட், இரும்பு ஆகிய எல்லாவற்றின் விலையும் கடந்த 3 ஆண்டுகளாக விஷம் போல ஏறி வருகின்றன.

நாட்டின் நிதி நிலைமை உபரி என்ற நிலையிலிருந்து பற்றாக்குறை என்ற அளவுக்கு இப்போது சரிந்துவிட்டது.

பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது வீடுகட்ட 6% வட்டியில் கடன் தரப்பட்டது. இப்போது அந்த கடனுக்கான வட்டி வீதம் 12% என்று இருமடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் மனித உரிமைகளை மீறினால் இந்த அரசால் சகித்துக் கொள்ள முடியாது என்று முழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்; பயங்கரவாதிகள் மக்களைத் தாக்கினால் சகித்துக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டார்களா என்று கேட்க விரும்புகிறோம். பாகிஸ்தானில் இன்னமும் 59 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே கூறியிருக்கிறார். அந்த முகாம்கள் தொடர்பாக பாகிஸ்தானிடம் என்ன பேசினார்கள் என்று தெரிய வேண்டும்.

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடிகளுடன் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சிக்கு உரைகல்லாகத் திகழ்கிறது’ என்று ராஜ்நாத் சிங் வெளியிட்ட குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

“பிரதமர் பதவியே வேண்டாம் என்று தியாகி போல நடித்த சோனியா காந்திதான் இந்நாட்டின் உண்மையான அதிகாரம் உள்ள பிரதமர் என்பது நாடறிந்த ரகசியம். அப்படிக் கூறியவர் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் என்ற பதவியை காபினெட் அமைச்சர் அந்தஸ்தில் அவசர அவசரமாக ஏற்றார். அதை பிரதமரின் அலுவலகத்துக்கு இணையாக உருவாக்கினார்கள். ஜெயா பச்சனை அரசியல் ரீதியாகப் பழிவாங்க, ஒருவருக்கு இரு பதவியா என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய வைத்து, பிறகு அதே அஸ்திரம் தன் மீதும் பாய வருகிறது என்று தெரிந்ததும் முதலில் மக்களவை உறுப்பினர் பதவியையும் பிறகு தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்து தியாக நாடகத்தை முடித்தார்’ என்றும் அந்த அறிக்கை கடுமையாகச் சாடுகிறது.
———————————————————————————————–

07.06.07
குமுதம் ரிப்போர்ட்டர்

சோலை – காங்கிரஸ் ஆட்சி: அலசல்

சென்ற ஆண்டுத் தொடக்கத்தில் மன்மோகன் சிங் அரசு பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தலென்றால், ஐக்கிய முன்னணி 400 இடங்களுக்கு மேல் பெறும். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்தக் கணிப்பு தெரிவித்தது.

அதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் _ காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் முகவரியே காணாமல் போகும் என்பதற்கு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் சாட்சியாக அமைந்துவிட்டது.

மன்மோகன் சிங் அரசு மூன்றாண்டுகளை முடித்துவிட்ட நிலையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனம் இப்போது கருத்துக் கணிப்பு நடத்தியது. மன்மோகன் சிங் அரசு மோசம் என்று 47 சதவிகிதம் பேர் தீர்ப்பளித்திருக்கின்றனர். ஏதோ பரவாயில்லை என்று 7 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். நல்ல ஆட்சி என்று இரண்டு சதவிகிதம் பேர்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் சாம்ராஜ்ய அதிபதிகளாக இருக்கலாம்.

என்ன காரணம்? இந்த அரசின் சாதனைகள், சாதாரண மக்களை எட்டவில்லை என்று மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரே சொல்லிவிட்டார்.

ஐயோ! விலைவாசி உயர்கிறது என்று மூன்று ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சிகள் குரல் கொடுத்துப் பார்த்தன. தொண்டை வறண்டு புண்ணாகிப் போனதுதான் கை கண்ட பலன். ஆமாம். பணவீக்கம் _ விலைவாசி உயர்வுதான் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்று மன்மோகன் சிங் இப்போது கூறுகிறார்.

விலைவாசியை உயர்த்துவதில்தான் தொழில் அதிபர்கள் போட்டி போடுகிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார். காலம் கடந்து ஞானம் பிறந்திருக்கிறது.

உணவு தானியங்களைத் தனியார் கொள்முதல் செய்ய அனுமதித்தது _ ஆன்_லைன் யூக பேர வணிகத்தை வளர்த்தது ஆகிய பல காரணங்கள்தான் விலைவாசி உயர்விற்குக் காரணம் என்பது பாமர மக்களுக்கும் புரியும். அவற்றை, திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியாவே குரல் எழுப்பிவிட்டது. ஆனால், தொழிலதிபர்கள், பெரிய வணிகர்கள், பதுக்கல்காரர்கள், கொள்ளை லாபக்காரர்களுக்கு ஆதரவான இந்த நடைமுறைகளைக் கைவிட இன்றுவரை மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது.

செயற்கையாக உணவுத் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனைக் காரணம் காட்டி, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்கிறார்கள். அவற்றின் இறக்குமதி வரிகளைக் குறைக்கிறார்கள். விளைவு என்ன? இந்தியாவில் உற்பத்தியாகும் அதே பொருள்களின் விலை வீழும்; உற்பத்தி பாதிக்கும்.

வளர்ந்து வரும் மேலை நாடுகள் எப்படிச் சாதாரண மக்கள் மீது வரிகளைப் போடுகின்றன என்று தெரிந்து கொள்கிறார்கள். அந்த வரிகள்தான் இங்கு நம்மீது விதிக்கப்படுகின்றன. தொழிலதிபர்கள், பொருளாதார மண்டலவாதிகள், பன்னாட்டு நிதிநிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் ஆகிய அனைத்திற்கும் வரிச் சலுகைதான்.

ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் ஆகியோர் சேவை வரியால் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். அநேகமாக அவர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுக்கும், சிதம்பரம் அந்த வரியைத் திணித்து விட்டார். அந்த வரி ஆண்டுதோறும் உயர்வதோடு, புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றது.

மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, ஒரு மூட்டை சிமெண்ட் விலை 140 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்னர், நிதி அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது 180 ரூபாய். ‘இதோ… சிமெண்ட் விலை குறையப்போகிறது’ என்றார்கள். இன்றைய சிமெண்ட் விலை மூட்டை 230 ரூபாய். குதியாட்டம் போட்டு உயருகிறது.

குறிப்பிட்ட சில சிமெண்ட் கம்பெனிகளின் பகாசுரக் கோடீசுவரர்கள்தான் சிமெண்ட் விலையை நிர்ணயிக்கிறார்கள். ‘மயிலே மயிலே இறகுபோடு’ என்று அவர்களிடம் மன்மோகன் சிங் கெஞ்சுகிறார் _ சிதம்பரம் கொஞ்சுகிறார். ‘இன்னும் விலையை உயர்த்துவோம். என்ன செய்வீர்கள்?’ என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். லாபத்தைக் குறைக்க மாட்டோம் என்கிறார்கள்.

சீனாவும் பாகிஸ்தானும் மூட்டை 130 ரூபாய் என்று நமக்கு சிமெண்ட் இறக்குமதி செய்யத் தயாராக இருக்கின்றன. இறக்குமதி செய்வோம் என்றனர். ஆனால், அறிவிப்பு, செயல் வடிவம் பெறவில்லை. இன்னொரு பக்கம் நமது சிமெண்ட் துறை கோடீசுவரர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.

சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது, ஒரு டன் இரும்புக் கம்பி விலை 26,000 ரூபாய். விலைவாசி தொப்பென்று விழப் போகிறது என்றார்கள். ஆனால், இன்றைக்கு இரண்டே மாதங்களில் 31 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

நாடு தழுவிய அளவில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாததால், மன்மோகன் சிங் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் மவுனப் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதனைத்தான் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம்?

கடந்த மே தினத்தன்று வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகாசில் கடல் போல் மக்கள் கூட்டம். அந்த நாட்டின் அதிபர் ஹீகோ சாவோஸ் அற்புதமான சில பிரகடனங்களை வெளியிட்டார்.

அமெரிக்காவின் ஆளுகையில் உள்ள உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எஃப்) ஆகிய அமைப்புகளுக்கு இன்று முதல் விடை தருகிறோம் என்றார். இந்த நிதி நிறுவனங்கள் _ ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் மீது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்துகிற நங்கூரங்கள் என்றார்.

இதேபோல், கடந்த மே தினத்தன்று இன்னொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவும் உலக வங்கிக்கு விடை கொடுத்தது.

உலக வங்கிக்கு விடை கொடுக்கும் இன்னொரு நாடு நிகாரகுவா. வளரும் நாடுகளின் வாழ்வைச் சூறையாட அன்னிய முதலீடுகளைத் திணிக்கும் புரோக்கர்தான் உலக வங்கி என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.

உலக வங்கியின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும்தான் தங்கள் நாடுகள் சீரழிந்ததற்குக் காரணம் என்பதனை இப்போது சின்னஞ்சிறிய நாடுகள்கூட உணர்ந்து வருகின்றன. அவற்றின் விடுதலைக் குரலைக் கேட்கிறோம். ஆனால், இங்கே உலக வங்கிக்கு உடுக்கை அடிக்கும் பூசாரிகளைப் பார்க்கிறோம்.

பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தையும் வெனிசுலா, பொலிவியா, நிகாரகுவா, சிலி ஆகிய நாடுகள் நாட்டுடைமையாக்கிவிட்டன. அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்களுக்கு முடிசூட்ட வரவில்லை; முள்கிரீடம் சூட்ட வந்தவை என்று பொலிவியா அதிபர் மோல்ஸ் அறிவித்திருக்கிறார்.

ஆனால், அன்னிய நிறுவனங்களின் வருகையும் அவற்றின் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும்தான் நாட்டின் வளர்ச்சி என்று இங்கே பட்டியல் போடுகிறார்கள்.

அமெரிக்க ஆதிக்கத்திலிருந்த எண்ணெய், எரிவாயு வயல்களை, சென்ற ஆண்டு பொலிவியா தேசிய மயமாக்கியது. இந்த ஆண்டு வெனிசுலா தேசிய மயமாக்கியது. எண்ணெய் விலை வீழ்கிறது.

தங்கள் நாட்டுத் தண்ணீரையே எடுத்து தங்களுக்கு விற்பனை செய்த இத்தாலிய எடிசன் கம்பெனியை பொலிவியா வழி அனுப்பி வைத்துவிட்டது.

பொலிவியாவின் டெலிபோன் துறை முழுக்க முழுக்க இத்தாலிய நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அதில் 50 சதவிகிதப் பங்குகளை அரசு எடுத்துக் கொண்டது. அடுத்து தேசியமயமாக்குகிறது.

ஆமாம். அங்கே சரித்திரச் சக்கரம் முன்னோக்கிச் சுழல்கிறது. இங்கே அந்தச் சக்கரத்தை மன்மோகன் சிங் அரசு பின்னோக்கிச் சுழற்றுகிறது. அதுதான் உலக வங்கி சொல்லிக் கொடுத்த பாடம்.

எண்ணெய் வளத்துறை இங்கே தேச உடைமையாகத்தான் இருந்தது. விரட்டப்பட்ட அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களும் அந்தத் துறையை இப்போது கபளீகரம் செய்கின்றன.

தொலைத்தொடர்புத் துறையில் 74 சதவிகித அன்னிய முதலீடுகளை அனுமதிக்க நிதியமைச்சர் சிதம்பரம் தயாராகிவிட்டார்.

அநேகமாக இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியா முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விடும்.

விழித்துக் கொண்ட தென் அமெரிக்க நாடுகள் துரத்துகின்ற எல்லா அன்னிய நிறுவனங்களுக்கும் இங்கே பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். இன்னொரு பக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை கோடீசுவரர்கள் உருவாகியிருக்கிறார்கள்? என்று ஏடுகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றன. லட்சாதிபதிகள், கோடீசுவரர்களாகிறார்கள். கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகிறார்கள். 34 கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் பலர் பங்குச் சந்தைச் சூதாட்டங்களில் வளர்ந்து வருபவர்கள்.

பொருளாதாரம், நிர்வாகம், முதலீடுகள் தொடர்பாக உலக வங்கி தரும் யோசனைகள்தான் செயல்படுத்தப் படுகின்றன. அதனால் விலைவாசி உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் வளரும். சமூக முரண்பாடுகள் விரிவடையும்.

அந்த உலக வங்கிச் சுனாமி சுழன்றடித்து வெளியேறிய நாடுகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. உலக வங்கி, அன்னிய முதலீடுகள் அனைத்தும் ஓடுகின்றன. வெளிச்சம் தெரிகிறது. நெருப்புப் பறவைகள் சிறகடிக்கின்றன. விலைவாசி வீழ்கிறது.

இங்கே அதே அன்னிய முதலீடுகளும் உலக வங்கியும் நமது மயில்களின் கால்களை ஒடித்து சூப்பு வைத்துக் குடிக்கின்றன. விலைவாசி உயருகிறது. வேதனை பெருகுகிறது. நாடு நன்றாகவே இருளில் நடைபோடுகிறது.

—————————————————————————-

துக்ளக் 6.6.2007 இதழில் சோவின் தலையங்கம்

வியந்து பாராட்டுகிறோம்! இது ஒரு சாதனைதான்; மன்மோகன் சிங்கின் அரசு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டது. ‘ மற்ற சாதனைகள் என்ன?’ என்று கேட்டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா? பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள்? தி.மு.க. ஒரு உதாரணம் போதுமே?

‘வேண்டிய இலாகாக்கள் கிடைக்கா விட்டால், எதுவுமே வேண்டாம் போ’ என்று அடம் பிடித்து, வேண்டிய இலாகாக்களைப் பெற்றதிலிருந்து, இன்று வரை அவர்கள் மன்மோகன் சிங்கை பிரதமராகவா மதித்திருக்கிறார்கள்? ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு?’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே! அர்ஜுன்சிங்கைப் பொறுத்த வரையில், பிரதமர் ஒரு தொந்தரவு; அவ்வளவுதான். சில சமயங்களில், அவரிடம் பேச வேண்டியிருக்கும், என்பதைத் தவிர வேறு பிரச்சனை இல்லை.

மற்ற காங்கிரஸ் அமைச்சர்கள், பிரதமரை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். லாலு பிரஸாத் யாதவ், ‘நானும் ஒரு நாள் பிரதமர் ஆகப்போகிறவன்தானே!’ என்று கூறி, இன்றைய பிரதமரை அவ்வப்போது மட்டம் தட்டுகிறார். இப்படி பார்த்துக்கொண்டே போனால், பிரதமரை பிரதமராக மதிக்கிற அமைச்சர் யாராவது ஓரிருவர் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. சோனியா காந்தியின் தயவில் பணிபுரிகிறவர், என்கிற முத்திரை பலமாக விழுந்திருக்கிறது. இதெல்லாம் போதாதென்று, இடது சாரிகள் வேறு அவ்வப்போது மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

சிதம்பரம், அலுவாலியா (திட்டக் கமிஷன்) போன்ற பொருளாதாரம் அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டும் கூட, மன்மோகன் சிங்கினால், முழுமையான பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. எதைச் செய்தாலும், இடது சாரிகள் முரண்டு பிடிக்கிறார்கள்; ‘அமெரிக்காவின் அடிமையாகி விடாதே’ என்று பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் இவ்விதமாக இருக்க, தீவிரவாதிகள் விஷயத்தில் தாராள மனப்பான்மையைக் காட்ட வேண்டியிருக்கிறது.

அதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்று இடதுசாரிகளும், சோனியா காந்தியும் கூறுகிறபோது, பாவம் பிரதமர் என்ன செய்வார்? ஊழல் விஷயத்திலோ, கேட்கவே வேண்டாம். அந்தந்தத் துறை, அந்தந்த அமைச்சரின் சாம்ராஜ்யம். ஏற்கனவே கிரிமினல் குற்றச்சாட்டு உடையவர்கள்  லாலு பிரஸாத் யாதவ் உட்பட  அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒரு மந்திரி, கொலைக்குற்றத்திற்காக இப்போது நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருக்கிறார். அதற்கு முன்னால் அவர் தலைமறைவாக கொஞ்ச நாட்கள் இருந்தார். அப்போதும் மந்திரிதான்.

தலைமறைவு மந்திரியைக் கொண்ட முதல் மத்திய அரசு  என்ற ‘புகழை’ மன்மோகன் சிங் அரசு பெற்று மகிழ்ந்தது. பிரதமர் நினைத்து, ஒரு மந்திரியை நீக்கவோ, வைக்கவோ, இலாகாவை மாற்றவோ முடியாது; அது அந்தந்தக் கூட்டணிக் கட்சியின் இஷ்டம்; சம்பந்தப்பட்டவர் காங்கிரஸ்காரரானால், சோனியாவின் இஷ்டம். ஒரு பொருளாதார சீர்திருத்தத்தை, பொருளாதார நிபுணரான பிரதமரால் செய்துவிட முடியாது; அதற்கு இடதுசாரிகளின் அனுமதி தேவை.

தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது; அதற்கு சோனியாவின் ஒப்புதல் அவசியம். கிரிமினல் பேர்வழிகளை கிட்டே சேர்ப்பதில்லை என்ற முடிவைக்கூட, பிரதமரால் எடுக்க முடியாது; அது கூட்டணி தர்மத்திற்கு விரோதம். இந்த நிலையில், ‘மூன்று வருட சாதனை என்ன? என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ  என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம்!.

நன்றி : துக்ளக்
—————————————————————————-

Posted in Achievements, Agriculture, Analysis, Anniversary, Baba, Backgrounder, Banks, BJP, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Deflation, dera, Deve Gowda, DMK, Economy, Education, Elections, Evaluation, Execution, Finance, Goals, Govt, IMF, Inflation, Islam, IT, Madani, Madhani, Manmohan, Manmohan Singh, Maran, Millionaire, Muslim, Naxal, NDA, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Opposition, Party, Planning, Politics, Polls, POTA, Principles, Process, Radhika Selvi, RadhikaSelvi, Recession, Report, Rich, Sachar, Sonia, TADA, Terrorism, UDA, WB | 1 Comment »

UPA crisis meet: PDP threat – Mufti Mohd Sayeed & Gulam Nabi Azad

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

சய்யீத் பின்வாங்கினால்…

காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் தலைமையிலான அரசு கவிழும் ஆபத்து அகன்றுவிட்டதாகக் கூறலாம். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சி அமைச்சர்கள் இனி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கு கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸýம் முப்தி முகம்மது சய்யீத் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட்டணி அரசு அமைத்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு உள்ள நிலையில் முப்தி முகம்மது சய்யீத் மத்திய அரசைக் குறி வைத்து ஏற்க முடியாத சில கோரிக்கைகளை எழுப்பி நெருக்குதலை ஏற்படுத்த முற்பட்டார். காஷ்மீரில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அங்கு ராணுவத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை அகற்ற வேண்டும் என்பன அவற்றில் முக்கியமானவை.

காஷ்மீரில் எல்லைக்கு அப்பாலிருந்து எப்போதும் ஆக்கிரமிப்பு ஆபத்து உள்ளது. தவிர கடந்த பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாதிகள் எந்த நேரத்தில், எங்கு தாக்குவர் என்பது தெரியாத நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கு துருப்புகளை நிறுத்தி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. முன்னர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சய்யீதுக்கு இதெல்லாம் தெரியும். தவிர துருப்புகளை எவ்விதம் ஈடுபடுத்துவது என்பது ராணுவத் தலைமை முடிவு செய்கிற விஷயம் என்பதையும் சய்யீத் அறிவார். ஆனாலும் சய்யீத் இதை அரசியலாக்க முற்பட்டார். இந்த விஷயத்தில் அவரது பிரசாரம் கிட்டத்தட்ட “படைகள் வெளியேற வேண்டும்’ என்று கூறுகிற தொணியில் இருந்தது. தங்களது கொள்கைத் திட்டத்தை சய்யீத் அபகரித்துக் கொண்டுவிட்டார் என்று ஹுரியத் மாநாட்டுக் கட்சி கூறுகிற அளவுக்கு சய்யீதின் பிரசாரம் அமைந்திருந்தது. அவரது இப் பிரசாரத்தின் பின்னணியில்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கடந்த ஒருமாதமாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கினர்.

சய்யீதின் பிரசாரத்துக்கு அரசியல் நோக்கம் உண்டு. 2002-ல் நடந்த தேர்தலைத் தொடர்ந்து சய்யீத் முதல் மூன்று ஆண்டுகள் காஷ்மீர் முதல்வராக இருந்தார். அடுத்த மூன்று ஆண்டுகள் காங்கிரûஸ சேர்ந்தவர் முதல்வராக இருக்க வேண்டும் என்பது உடன்பாடு. இதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குலாம் நபி ஆசாத் முதல்வரானார். அப்போதே சய்யீத் மீதி மூன்று ஆண்டுகளும் தாமே முதல்வராக நீடிக்க விரும்பி பல வாதங்களை முன்வைத்தார். ஆனால் அவை ஏற்கப்படவில்லை. ஆசாத்தின் ஆட்சியில் காங்கிரஸýக்கு நல்ல பெயர் ஏற்பட்டுவிட்டால் தமது கட்சி பின்னுக்குத் தள்ளப்படலாம் என்பது சய்யீதின் அச்சமாகும். தங்கள் கட்சிதான் காஷ்மீர் மக்களின் நலன்களைப் பற்றி அதிக அக்கறை காட்டுகிறது என்று பிரசாரப்படுத்தும் நோக்கில்தான் அவர் படைக் குறைப்பு விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.

கடந்த பல வாரங்களாக சய்யீத் எவ்வளவோ நிர்பந்தித்தும் படைக் குறைப்பு விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக நின்றது. கடைசியில் ஒரு கமிட்டியை நிர்ணயித்து அக் கமிட்டியிடம் இந்த விவகாரத்தை விடுவது என்று சமரச உடன்பாடு உருவாக்கப்பட்டது. இக் கமிட்டியில் தங்களது கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்று சய்யீத் வற்புறுத்தினார். இது முற்றிலும் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று மத்திய அரசு எடுத்துக் கூறியபோது சய்யீத் மேலும் இறங்கி வந்து வேறு வழியின்றி இதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

சய்யீத் இப்போதைக்கு திருப்தி அடைந்துவிட்டதுபோல காட்டிக் கொள்ளலாம். எப்போதுமே ஆளும் கூட்டணியில் அடங்கிய கட்சிகள் தங்களது தனித்தன்மையைக் காட்டிக்கொள்ள தேர்தல் சமயத்தில் விலகிக் கொள்வது உண்டு. கூட்டணி அரசிலிருந்து விலகிக் கொள்வதை சய்யீத் இப்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதாகவே கூறலாம்.

Posted in Army, Azad, Border, Congress, defence, Defense, Extremism, Ghulam, Ghulam Nabi Azad, Govt, Gulam, Gulam Hussain Mir, Gulam Nabi Azad, J&K, Jammu, Kashmir, Manmohan Singh, Military, Mufti, PDP, People's Democratic Party, Sayeed, Sayid, Security, Sonia Gandhi, Srinagar, Terrorism, troops | Leave a Comment »

Congress performance in Punjab, Uttarakhand, Manipur Elections

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

பதில் வராத கேள்வி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசிய சுருக்கமான பேச்சில், கட்சி தன்னைத் தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

ஆத்ம பரிசோதனை என்பது மகாத்மா காந்தி அடிக்கடி பயன்படுத்திய சொல். இதற்கு இப்போதைய அரசியல் உலகிலும் ஒருவகை மதிப்பு இருக்கவே செய்கிறது.

கட்சி தன்னை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடும்போது, கட்சித் தலைமையும் கட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் தங்கள் நடவடிக்கைகளை, தாங்கள் செய்து முடித்த காரியங்களை ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக, தனது செயல்களில் குறைபாடு இருப்பதாகத் தனது “ஆத்மாவின் குரல்’ சொல்லுமானால், அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், சத்தியத்தின் பாதையில் மீண்டும் உறுதியுடன் நடக்கவும் முன்வர வேண்டும் என்பதுதான் ஆத்ம பரிசோதனையின் நோக்கம்.

உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குக் காரணம் விலைவாசி உயர்வு என்று முதல்முறையாக, வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் சோனியா.

அப்படி ஒப்புக் கொண்டபோதிலும்கூட, அதற்கான காரணங்களை, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றுள்ள தவறுகளை ஒப்புக் கொள்ளவோ, அதற்கு மாற்றுவழி காண்பது குறித்துப் பேசவோ அவர் விரும்பவில்லை. “இந்தியப் பொருளாதாரத்தை உயர்ந்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறது நமது அரசு’ என்று சோனியா சமாளிக்கும்போது ஆத்ம பரிசோதனை முழுமையடையாமல் போகிறது.

சோனியா இதைக் குறிப்பிட்ட அதே நாளில், “விலைஉயர்வுக்கு உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமல்ல, மாறாக அவற்றை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடு” என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் கூறியது தவறான தகவல் என்று பொருளாதார வல்லுநர் அர்ஜுன் சென்குப்தா (சுயேச்சை உறுப்பினர்) கடுமையாக விமர்சித்தார். பருப்பு தட்டுப்பாடு இருந்தபோதிலும் 40 ஆயிரம் டன் பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது ஏன்? என்று பாஜகவும் தன் பங்குக்கு விவாதத்தைக் காரசாரமாக்கியது.

விலைவாசி உயர்வு காங்கிரஸின் தோல்விக்கு ஒரு காரணம் என்றாலும், பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி நடத்தும் காங்கிரஸ், தன் கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்துப் போவதும் அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளது என்பதை சோனியா புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலப் பிரச்சினையிலும் சரியான அணுகுமுறையை மேற்கொள்வது மிகமிக அவசியம் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

கேரளம் – தமிழ்நாடு இடையே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும், தமிழ்நாடு – கர்நாடகம் இடையே காவிரிப் பிரச்சினையிலும், ஆந்திரத்தில் தெலங்கானா விவகாரத்திலும், தற்போது உ.பி. அரசில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் முலாயம் சிங் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் உள்ள பலவீனங்கள் அம்பலமாகியுள்ளன.

சிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று ப. சிதம்பரம் கூறிய பிறகும் விலை இறங்கவே இல்லை. அப்படியானால் அந்த அரசுக்கு பொதுமக்களிடத்தில் எத்தகைய வரவேற்பு இருக்கும்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய சோனியா, “சமுதாயத்தில் பல்வேறு மக்களின் உணர்ச்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் கட்சிக்கு இருக்கிறதா?’ எனக் கேட்டுள்ளார். அவரிடம், அதே கேள்வியைத்தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது!
===========================================

காங்கிரஸ் தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும்!

நீரஜா செüத்ரி

காங்கிரஸ் கட்சி தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

தில்லி மாநகரத் தேர்தல், குஜராத் உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் காங்கிரஸýக்கு எளிதான வெற்றி கிட்டிவிடவில்லை. ஜார்க்கண்ட் மாநிலமும் பிரச்சினைக்குரிய களம்தான். உத்தரகண்டில் ஏற்பட்ட முடிவுகள் உத்தரப்பிரதேசத்திலும் எதிரொலிக்கும். மேல் சாதியினர் பாஜக பக்கமும் தாழ்த்தப்பட்டவர்கள் மாயாவதி பக்கமும் போகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன.

பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் பாஜகவுக்கு புத்துயிர் கிட்டியிருப்பதால் முஸ்லிம்கள் கலக்கம் அடைந்து, இதை எதிர்கொள்ளக்கூடிய உறுதியான ஒரே தலைவர் முலாயம்தான் என்று அவர் பக்கம் சாயக்கூடும்.

பாஜகவிடமிருந்தே காங்கிரஸ் கட்சி சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். “இந்தியா ஒளிர்கிறது’ என்று பேசி வீணாகிப்போன பாஜக பாதையிலேயே காங்கிரஸ் இப்போது போவது போலத் தெரிகிறது.

2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த சாமான்ய மனிதனை (ஆம்-ஆத்மி) விட்டு கட்சி விலகிச் செல்கிறது. விலைவாசி உயர்ந்துவிட்டது என்று ஒப்புக்கொள்வது மட்டும் போதாது. பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் சோனியா முயற்சிக்க வேண்டும்.

அடுத்தபடியாக, முடிவுகளை எடுக்கும் முறையை காங்கிரஸ் மாற்றிக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அல்லது அரசின் சிலர் மட்டும் கூடி முடிவுகளை எடுக்காமல், பலர்கூடி விவாதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுடைய உணர்வுகளுக்கு எதிரான முடிவுகளைத் தவிர்க்க முடியும்.

இப்போது நடந்து முடிந்த தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அம்சம், “”மதம் சார்ந்த” உணர்ச்சிகரமான பிரச்சினைகளைப் பேசி எந்தக் கட்சியும் வாக்கு கோரவில்லை. ஹிந்துத்துவாவைப் பற்றிப் பேசுவதைக் கைவிட்டு விலைவாசி உயர்வை மட்டும் அதிகம் வலியுறுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. அகாலிதளமும் சீக்கியமார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசியல் மேடையில் விவாதிக்கவில்லை.

விதிவிலக்காக, காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் பாஜகவின் மதவாதத் தன்மையைப் பற்றி பொதுக்கூட்டங்களில் பேசினர். பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த ஹிந்துக்கள்தான் பஞ்சாப் நகர்ப்புறங்களில் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். அவர்களிடம் போய் “”மதச்சார்பின்மை, சிறுபான்மையினருக்கு ஆபத்து” என்ற விஷயங்கள் எல்லாம் எடுபடுமா என்று யோசித்திருக்க வேண்டும்.

3 மாதங்களுக்கு முன்னால் பாஜகவின் தலைமையே கவலையோடு இருந்தது, “”பஞ்சாபில் நம்முடைய கட்சியை வெற்றிபெற வைக்க, பிரபலமான முகங்களே இல்லையே?” என்று. காங்கிரஸின் ஹிந்துத்துவ எதிர்ப்புப் பிரசாரமே பாஜகவுக்கு பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றுத்தந்தது என்றால் மிகையில்லை. பஞ்சாபின் மால்வா பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை ஆதரவு அதிகம் கிடைத்தும், ஆட்சி போனது துரதிருஷ்டவசமானது. இந்த இடம் அகாலிகளின் கோட்டை என்றே கருதப்பட்டுவந்தது.

லூதியானாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய பொதுக்கூட்டத்துக்கு சில ஆயிரம் பேர்களே வந்தது, பிரசாரத்தின் விறுவிறுப்பையே குறைத்துவிட்டது.

அதேசமயம், அத்வானி, வாஜபேயி ஆகியோரின் செல்வாக்கை ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது என்பதை அவர்களுடைய தேர்தல் பொதுக்கூட்டங்கள் சுட்டிக்காட்டின.

சோனியா காந்தி கட்சித் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட புதிதில் தினமும் நாட்டு நடப்புகளை கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் விவாதித்தார். அதனால் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் தலைமைக்குக் கிடைத்து வந்தது. இந்த எண்ணிக்கை குறைந்ததால், வெகுஜனங்களைவிட்டு தலைமை தனிமைப்பட்டு போக ஆரம்பித்துவிட்டது. அப்படியொரு ஆலோசனை நடந்திருந்தால், உத்தரப்பிரதேசத்தில் முலாயம் ஆட்சி கலைப்பு நிச்சயம் என்ற பரபரப்பும், அதனால் காங்கிரஸýக்கு கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது.

காங்கிரஸ் காரியக்கமிட்டி என்பது மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பாக அது வலுப்படுத்தப்பட வேண்டும். வேறு எந்தப்பதவியும் கொடுத்து திருப்திப்படுத்த முடியாத பிரமுகர்களுக்கான ஓய்வில்லம் போல அதை நடத்தக்கூடாது. சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தும் மிக முக்கிய பாடம் இதுதான்.

தமிழில்: சாரி.

Kalki Editorial (March 9, 2007 )

கட்டெறும்பு காங்கிரஸ்!

பஞ்சாப் தேர்தலில் அம்மாநில நிதியமைச்சராக இருந்த சுரிந்தர்
சிங்க்லா, பா.ஜ.க. வேட்பாளர் சித்துவிடம் தோற்றுப் போயிருக்கிறார். இத்தனைக்கும் சித்து மீது கொலை வழக்குத் தொடரப்பட்டு, அவர் அக்குற்றத்துக்காக தண்டனையும் விதிக்கப் பெற்றவர்!

பஞ்சாப் மக்களுக்கு காங்கிரஸிடமும் அதன் பொருளாதாரக் கொள்கையிடமும் சிறிதும் நம்பிக்கை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

பஞ்சாபிலும் சரி, உத்தரகாண்டிலும் சரி, காங்கிரஸ் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தேசிய கட்சியாக, நாட்டின் நான்கு திசைகளிலும் வலுவாக இருந்த காங்கிரஸ், இன்றைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது.

இதற்கான காரணங்களை ஆராய்ந்து சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கட்டெறும்பாகத் தேய்ந்து போயிருக்கும் காங்கிரஸ், சில ஆண்டுகளுக்குள் காணாமலே போய்விடும்.

நேரு குடும்பத்தினரின் தலைமைக்காக மட்டுமே இனிமேல் வோட்டு
விழாது என்பது தெளிவாகிவிட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சோனியா காந்தி, இவ்வுண்மையை ஏற்று, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதுடன், அதன் கொள்கைகளையும்
மறுபரிசீலனைக்குட்படுத்தி, மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

பஞ்சாப் முதல்வராக விளங்கிய அமரிந்தர் சிங், ‘எடுத்தேன்
கவிழ்த்தேன்’ என்று ஆட்சி நடத்தியிருக்கிறார். பழிவாங்கும் நடவடிக்கை, அண்டை மாநிலத்துடனான நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுதல் என்று ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் தேடிக் கொண்டிருக்கிறார். உத்தரகாண்ட் முதல்வரோ, தமக்கு
வயதாகிவிட்டது; ஆட்சிப் பொறுப்பில் நீடிப்பது கஷ்டம் என்று
வெளிப்படையாகவே புலம்பியிருக்கிறார்!

காங்கிரஸ் தலைமை, உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைப்பிடித்து சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், இதுபோன்ற குளறுபடிகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. கட்சித்
தலைமையின் ஆசி மட்டும் இருந்து, தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால், ஒரு முதல்வர்
சிறப்பாகச் செயல்பட முடியாது. தனிநபர் ஆளுமைக்குத் தரப்படும் வெற்று முக்கியத்துவத்தைக் களைந்து, உட்கட்சி ஜனநாயகத்தை காங்கிரஸ் ஏற்றாக வேண்டும்.

மாநில அளவில் மட்டுமின்றி மத்திய ஆட்சி அளவில் எடுக்கப்படும் முடிவுகளும் கடைபிடிக்கப்படும் கொள்கைகளும்கூட காங்கிரஸின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்துத் தோல்விக்கு வழிவகுத்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் இதை அவசரமாக மறுத்தாலும், நாடு தழுவிய
விலைவாசி உயர்வுதான் அதன் இமேஜை மிக அதிகமாகக் காயப்படுத்தியிருக்கிறது.

‘‘பண வீக்கம் மிக அதிகமாக இருப்பது கவலை தருகிறது. அதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்’’ என்று மத்திய நிதியமைச்சரே பேசி என்ன பயன்? ‘ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மறு கண்ணுக்குச் சுண்ணாம்பு’ என்பதுபோல், மத்திய அரசு ஐ.டி. கார் உற்பத்தித் துறைகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், வரி விலக்குத் தந்துவிட்டு, பிற
நிறுவனங்களுக்கு வரிச் சுமையை ஏற்றுகிறது. வரி கூடுவதால் வரி ஏய்ப்பும் கூடி, கறுப்புப் பணப் புழக்கத்துக்குக் காரணமாகிறது. ஐ.டி. துறையின் சம்பள விகிதங்களும் அதில் குவியும் லாபமும் ஏகப்பட்ட பணப் புழக்கத்துக்குக் காரணமாகின்றன. இதனால், ஒரு பிரிவினர் மட்டுமே வசதி கூடி ராஜபோகமாய் வாழ, பிறர் அன்றாடச் செலவுகளைச் சரிக்கட்டவே அவஸ்தைப்படுகின்றனர்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் மேற்கொண்டுள்ள விவசாயத் தொழில் மீதும் அதைச் சார்ந்த பிற தொழில்கள் மீதும் கவனம் திருப்பி, ஆதரவு அளித்து, அவை பெருகி உணவுப் பற்றாக்குறையும்
வேலையில்லாத் திண்டாட்டமும் தீர வேண்டும். காங்கிரஸின் கொள்கையும் செயல்பாடும் இத்திசை நோக்கித்
திரும்பினாலேயழிய அக் கட்சிக்குக் கதிமோட்சம் இல்லை!
Congress TV – Kalki

வாசனும், இளங்கோவனும் இணைந்து விட்டதாகக் கிசுகிசுக்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரம். வாசனுக்கு எதிராக அணி திரள முதலில் கிருஷ்ணசாமிக்கு ஓகே சொன்னார் இளங்கோவன். ஆனால், காலப்போக்கில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட கிருஷ்ணசாமி, இளங்கோவன் தரப்புப் பிரமுகர்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டாராம். அதுதான் இளங்கோவன் கோபத்துக்குக் காரணம். ஆனால் ப. சிதம்பரம் மிகவும் உறுதியாகத் தன்னை ஆதரிப்பதால், தன் பதவிக்கு ஆபத்து இருக்காது என்று நம்புகிறார் சாமி!

காங்கிரஸ் கட்சியும் தமக்காக ஒரு டி.வி. சேனல் துவங்க ஏற்பாடு செய்து விட்டதாம்! காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், வியாபாரப்
பிரமுகருமான வசந்தகுமார், தமது பெயரிலேயே துவங்கும் சேனல் காங்கிரஸார் ஆசையைத் தீர்த்து வைக்கப் போகிறது. இதற்காக, தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘இமயம்’ என்ற சேனலை
வாங்கிவிட்டார்களாம்!

தி.மு.க.வை காங்கிரஸிடமிருந்து பிரிப்பதற்கு விடுதலைப்புலிகள்
விவகாரம்தான் சரி என்ற அணுகுமுறையை ஜெயலலிதா
கையிலெடுத்திருக்கிறார். சமீபத்தில் புலிகளின் ஆயுதக் கப்பல்
பிடிபட்டது, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ‘புலிகள் சென்னையில் பங்கு மார்க்கெட் நிறுவனங்கள் வைத்திருக்கிறார்கள்’ என்று சொன்னது ஆகியவற்றை காங்கிரஸின் டெல்லிப் பிரமுகர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று ‘பிரிக்கும்’ வேலையில் ஈடுபட, அ.தி.மு.க.வின் ராஜ்ய சபா உறுப்பினர்கள்
முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசியல்வாதிகள் தங்கள் கல்விச் ‘சேவை’யை நம்
மாநிலத்துக்கு வெளியேயும் விஸ்தரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தங்கபாலு ஜம்முவில் மருத்துவக் கல்லூரி ஒன்றைத் துவக்க
இருக்கிறாராம்!

சைதை துரைசாமி ஆண்டொன்றுக்கு நூறு மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

============================

Dinamani – March 13, 2007

காஷ்மீரில் துணிச்சலான முடிவை எடுக்குமா காங்கிரஸ்?

நீரஜா செüத்ரி

காஷ்மீர் அரசியலில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான உறவில் புதிய உரசல்கள் ஏற்பட்டிருக்கின்றன; உறவை உடைக்கும் அளவுக்கு அந்த உரசல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

எனவே, அது தொடர்பாகப் பேச வருமாறு முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான முப்தி முகம்மது சய்யீதை தில்லிக்கு அழைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். தனக்கு உடல்நலம் சரியில்லாததால், தனது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தியை தில்லிக்கு அனுப்பினார் சய்யீத்.

காஷ்மீரின் பல பகுதிகளில் காவல் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய தலைவர்களிடம் நேரில் வலியுறுத்துவதற்காக மெஹ்பூபா அனுப்பப்பட்டார். அதோடு, தமது கருத்துகள் அடங்கிய கடிதத்தையும் அனுப்பி வைத்தார் சய்யீத். எனினும், படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் பிரதமர்.

ஜம்மு ~ காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் முன்மொழிந்துள்ள யோசனைகளில் ஒன்று, காஷ்மீரை ராணுவம் இல்லாத பகுதியாக அறிவிப்பதாகும். இந்த யோசனையைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர், ஜம்மு ~ காஷ்மீர் முதல்வரான குலாம் நபி ஆசாத்.

“காஷ்மீரில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்வது என்பது வேறு; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் பணியில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது வேறு. ராணுவமில்லாப் பகுதியாக அறிவிப்பது என்றால், எல்லையில் இருந்தும் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருவதாகும். இதை நாங்கள் கோரவில்லை. மாநிலத்தில் நிலைமை மேம்பட்டுள்ளதால், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள், தனியார் இல்லங்கள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை’ என்று மக்கள் ஜனநாயகக் கட்சி வாதிடுகிறது.

உண்மையில், “”காஷ்மீரில் கூட்டு நிர்வாகம்” என்பதுதான் முஷாரபின் அமைதித் திட்டத்தில் சர்ச்சைக்குரிய அம்சமாகும். “”கூட்டு நிர்வாகம்” என்பது காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மையைக் காவுகொடுப்பதாக அமைந்துவிடும் என்று பிரதமரை பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.

ஆனால், “”கூட்டு நிர்வாகம்” என்ற யோசனையல்ல; மாறாக, “படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது’ என்ற யோசனையே, ஜம்மு ~ காஷ்மீரில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது.

இந்தியா ~ பாகிஸ்தான் இடையிலான சமாதான முன்முயற்சிகளின் வேகம் தற்போது குறைந்துள்ளது; காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளின் வேகமும் குன்றியிருக்கிறது. இதற்கும் நாட்டின் அரசியல் நிலைமைக்கும் தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதான்.

தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் எங்காவது தவறாக ஓர் அடியை காங்கிரஸ் எடுத்து வைத்துவிட்டால் போதும்; அதற்கும் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பூர்வீகத்துக்கும் முடிச்சுப் போட்டு, அதைப் பெரும் பிரச்சினையாக்கிவிட எதிர்க்கட்சியான பாஜக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் அறிந்தே இருக்கிறது. அதனால்தான் மிக மிக எச்சரிக்கையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் சோனியா.

சியாச்சின் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரிகள் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அதில் ராணுவத்துக்கு ஆட்சேபம் இருப்பதால், சியாச்சின் பனிச்சிகரப் பகுதிகளில் இருந்து இந்தியப் படைகளை வாபஸ் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் சோனியாதான் என்று கூறப்படுகிறது.

சியாச்சின் பகுதியில் இருந்து இந்தியப் படைகளைத் திரும்பப் பெற்றவுடன் பாகிஸ்தான் படை அதை ஆக்கிரமித்துவிட்டால், மீண்டும் அதைக் கைப்பற்றுவது மிகக் கடினமான செயலாகிவிடும் என்று அரசிடம் தெளிவுபடுத்திவிட்டனர் ராணுவ அதிகாரிகள்.

பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இல்லாமலே, வெளியுறவு விவகாரங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு அந்த அமைச்சகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் அமைச்சர் பிரணப் முகர்ஜி.

பாகிஸ்தானுடன் நல்லுறவு, காஷ்மீர்ச் சிக்கலுக்குத் தீர்வு ஆகிய பிரச்சினைகளில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்காமல், படிப்படியாக முன்னேறிச் செல்வதையே அவரும் விரும்புகிறார்.

ஆனால் காஷ்மீரைப் பொருத்தவரை காலம் கரைந்து கொண்டிருக்கிறது. ராணுவத்துடனான மோதல்களில் பலியானவர்கள் என்று கூறப்படுவோரின் சடலங்கள் அண்மையில் காஷ்மீரில் தோண்டி எடுக்கப்பட்டன; அப் பிரச்சினை மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது கவலை அளிக்கும் அறிகுறி. புதிய முன்முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் மத்தியில் தமக்கு இருக்கும் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற பதற்றம் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜம்மு ~ காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நோக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் வாதத்திலும் நியாயம் இல்லாமலில்லை. ராணுவ ரீதியிலான தீர்வு இல்லை என்றாகிவிட்டது; மாநிலத்தின் அமைதிச் சூழலிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசின் மீதான நல்லெண்ணம்தான் அதிகரிக்கும் என்று அக் கட்சி கூறுகிறது.

நிலைமை மோசமாக இருந்தபோது பாதுகாப்புப் படைகள் வந்தன; நிலைமை மேம்பட்டவுடன் அவை திரும்பப் பெறப்படுகின்றன என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும்; இது, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்; காங்கிரஸýக்கும் இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும்.

தமிழில்: லியோ ரொட்ரிகோ.

Posted in ADMK, Agriculture, Aklai Dal, Amitabh, BJP, BSP, Chaari, Chidambaram, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Delhi, DMK, Economy, Elangovan, Elankovan, Elections, Finance, Ghulam, Gujarat, Gulam, Gulam Nabi Azad, Ilangovan, Ilankovan, Inflation, Jammu, JJ, Kalki, Kashmir, Kisukisu, Krishnasami, Krishnasamy, LTTE, Manipur, Manmohan, Manmohan Singh, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Mehbooba, Mufthi, Mufti, Mulayam, Muslims, Neeraja, Neeraja Chowdhry, News, Pakistan, Punjab, Results, Rumor, Rumour, Sayeed, Sayid, Siachen, Sonia, Srinagar, Thangabalu, UP, Uttar Pradesh, Uttarkand, Uttarkhand, Vambu, Vasan, Vasanth & Co, Vasanthakumar | Leave a Comment »

Cuddalore, Nagapattinam, Sivaganga, Dindugul – PM launches backward fund scheme in Assam

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

மக்கள் அறியச் செய்யுங்கள்

இரு தினங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு மானிய நிதி (பி.ஆர்.ஜி.எப்) திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள “தேசிய தொழில் முன்னேற்ற’த் திட்டத்தை மேம்படுத்தி, மேலும் 95 புதிய மாவட்டங்களையும் கூடுதல் நிதியையும் கொண்டுள்ளது இத்திட்டம்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.20 கோடி வீதம் 250 மாவட்டங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இத்திட்டத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆண்டுதோறும் ரூ.15 கோடி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் அதிகம் பயனடையப் போகும் மாநிலம் பிகார். ஏனெனில்

  • பிகாரின் 36 மாவட்டங்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்து
  • உத்தரப் பிரதேசத்தில் 34 மாவட்டங்கள்.
  • மத்தியப் பிரதேசம்-24,
  • ஜார்க்கண்ட்-21,
  • ஒரிசா-19,
  • ஆந்திரம்-13 மாவட்டங்கள்.
  • தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன:
    • கடலூர்,
    • திண்டுக்கல்,
    • நாகப்பட்டினம்,
    • சிவகங்கை,
    • திருவண்ணாமலை,
    • விழுப்புரம்.

தேர்வு செய்யப்பட்டுள்ள பின்தங்கிய மாவட்டங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல், பஞ்சாயத்து மற்றும் கிராம அளவில் தொழிற்பயிற்சிகள் கொடுத்து அம்மக்களைத் திறனுடைய தொழிலாளர்களாக மாற்றுதல், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்கம் என பல திட்டங்களுக்கு 100 சதவீத மானியநிதியைப் பெறலாம். இதற்காக செய்யவேண்டியதெல்லாம், கிராம சபை மற்றும் பஞ்சாயத்து அளவில் கொடுக்கப்படும் திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பீடு தயாரித்து மத்திய அரசுக்குக் கொடுத்து நிதியைப் பெற்றுச் செயல்படுத்துதல் மட்டுமே.

ஆனால் நடைமுறை தலைகீழாக இருக்கிறது. திட்டம் குறித்த முழுவிவரமும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர், எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

களஆய்வு என்ற பெயரில் தன்னார்வ நிறுவனங்களை நியமித்து, அவை தரும் அறிக்கைகளின் அடிப்படையில் பின்தங்கிய மாவட்டத்தின் தேவைகளை அதிகாரிகளே முடிவு செய்கிறபோது, திட்டத்தின் நோக்கம் பாழ்படுகிறது. வெறும் கணக்குக் காட்ட செய்யப்படும் செயல்பாடாக அமைந்துவிடுகிறது. மாவட்ட மக்களுக்கு முழுப் பயன் கிடைப்பதில்லை.

ஆண்டுக்கு ரூ.15 கோடி மானியம் என்பது அந்த மாவட்டத்துக்கு கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு. இதை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் அறிந்திருக்கவும், தங்களுக்கான திட்டத்தை கிராம சபை மூலம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவும் இப்போதாகிலும் வழிகாண வேண்டும். அத்துடன், தங்கள் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் எந்தெந்தப் பகுதிக்கு, எந்தத் திட்டம், எவ்வளவு செலவில் செயல்படுத்தப்பட்டது என்ற தகவலைக் கேட்கும் உரிமை உள்ளதையும் அறிந்திருக்க வேண்டும்.

பயனாளிகளின் அறியாமை எப்படி அப்பகுதி மக்களுக்குப் பாதகமாக அமைகிறது என்பதற்கு அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷ அபியான்) ஓர் எடுத்துக்காட்டு. இது மத்திய அரசின் 75 சதவீத மானியத் திட்டம். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் கட்டுதல், கல்வி உபகரணங்கள் வாங்குதல், பண்பாட்டு நிகழ்ச்சிகள், பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. இதில், உள்ளாட்சி கணக்குத் தணிக்கைத் துறை கண்டுபிடித்துள்ள முறைகேடுகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தாலும்கூட அப்பகுதி மக்கள் நிச்சயம் அரசுக்கு நன்றி கூறுவார்கள்.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Assam, backward, Backward Region Grant Fund, Bihar, BRGF, Collector, Collectorate, Cudaloore, Dindugul, Dindukal, Dindukkal, District Collector, fund scheme, Government, Jarkand, Jharkand, Jharkhand, Kadaloor, Madhya Pradesh, Manmohan Singh, MP, Nagapattinam, Orissa, Sivaganga, Sivagangai, Thiruvannamalai, UP, Uttar Pradesh, Viluppuram, Vizhuppuram | Leave a Comment »

Ban mid-stream realignment of political coalitions: Moily report

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

பதவி உள்ளவரை தாவல்

கட்சித்தாவல் தடை சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

கட்சித் தாவல் தொடர்பான வழக்குகள் தாமதமாவதால், தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரே முடிவு செய்து, கட்சி தாவியவர்களைப் பதவி நீக்கலாம் என்பது பரிந்துரைகளில் ஒன்று.

அதேபோன்று, ஒரு கூட்டணி அரசில் உள்ள ஒரு கட்சி அல்லது கட்சிகள், அக்கூட்டணியிலிருந்து விலக நேருமென்றால், அவர்கள் திரும்பவும் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற பரிந்துரையும் நியாயமானதே.

தேர்தலுக்கு முன்பாக கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியிலும் அக்கூட்டணிக் கட்சியினர் மற்றும் ஆதரவாளர் வாக்குகள் உள்ளன. ஒரு சாதாரண சிறிய கட்சி, ஒரு பெரிய கட்சியின் கூட்டணியில் வெற்றி பெற்ற பின்னர், அதைத் தனக்குக் கிடைத்த வெற்றியாகக் காட்டுவது சரியானதாக இருக்க முடியாது.

கட்சித் தாவலுக்கும் கூட்டணியிலிருந்து கழன்று கொள்வதற்கும் அடிப்படைக் காரணம் அமைச்சர் பதவி. கட்சி தாவுவோருக்கு அமைச்சர் பதவி அளிக்கத் தடை விதித்தால் தாவலும் தானே தடைபடும். தற்போது உள்ள கட்சித் தாவல் தடை சட்டத்திலும்கூட, கட்சியின் எம்பி, எம்எல்ஏ-க்கள் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிந்து, தனி அமைப்பாக மாறுவது அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு பதவிக்காக பிளந்துபோவோரின் கட்சிப் பதவிகளைப் பறித்துவிட்டு, அடிப்படை உறுப்பினர்களாக நீடிக்கச் செய்வதன் மூலம் அவர்களை திரிசங்கு சொர்க்கத்தில் வைக்க முடியும். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் முடியாது.

விகிதாசார தேர்வு முறை இல்லாத நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில்கூட ஒரு தொகுதியில் ஒரு கட்சி வெற்றி வாய்ப்பை இழக்க முடியும் என்பதால், கட்சித் தாவல் தடை சட்டங்கள் மிகவும் நுட்பமாக, விரிவாக அமைய வேண்டும்.

இதேபோன்று, கொடுங்குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட மோசமான குற்றச்சாட்டு உள்ளவரை தகுதிநீக்கம் செய்வதிலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8வது பிரிவில் திருத்தம் தேவை.

கிரிக்கெட் வீரர் சித்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் ஆகியோரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் கொலைக் குற்றத்துக்காக தண்டனை பெற்று, வழக்கிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் தேர்தலில் போட்டியிடுகிறார். இன்னொருவர் தண்டனை பெற்று சிறையில் இருந்தும் எம்.பி.யாக நீடிக்கிறார். இத்தகைய குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தில், ஊழல் என்பதற்கான வரையறையை விரிவு செய்ய வேண்டும் என்றும் இக்கமிஷன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஒரு எம்பி, எம்எல்ஏ தனிப்பட்ட முறையில் ஒரு நபருக்கு ஒரு காரியத்தைச் செய்துதரப் பணம் பெற்றால் அது ஊழல். அதே பணத்தை கட்சிநிதியில் வரவு வைத்து காரியம் செய்து கொடுத்தால் அது ஊழலாகக் கருதப்படுவதில்லை.

ஒரு எம்பி, எம்எல்ஏ அல்லது ஒரு கட்சியின் தலைவர், அரசு இயந்திரத்தின் அனைத்து வசதிகளையும் தனியாருக்குச் செய்து கொடுத்து, பிரதிபலனாக அந்நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலைக்கு தானோ அல்லது தனது உறவினர்களையோ வாங்கிக்கொள்ளச் செய்வதும் ஊழல்தான். ஆனால் இதை தற்போதுள்ள நடைமுறைப்படி ஊழல் என்று சொல்ல முடியாது.

சில மாநிலங்களில், தன் கட்சி ஆட்சிக்கு வந்து, தான் அமைச்சர் பொறுப்பேற்றதும், தன் மீதான ஊழல் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்து, வழக்கிலிருந்து விடுபடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இவையும் தடுக்கப்பட வேண்டும்.

Posted in Administrative Reforms Commission, Affiliation, Assembly, Ban, Bribery, Coalition, coalition defectors, coalition governments, Corruption, Dinamani, EC, Election Commissioner, Elections, Government, Governor, India, kickbacks, Lok Sabha, Manmohan Singh, Minister, MLA, MP, Op-Ed, Opinion, Opposition, Party, Politics, Polls, Report, Rule, Shibu Soren, Sibu Soren, Sidhu, solutions, Split, stability, State, Suggestions, UPA, Veerappa Moily, Victim, Vote | Leave a Comment »

Sonia sparks debate on ‘Wal-Mart effect’ of foreign investment

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: நடுநிலைப் பாதையே சோனியாவின் கருத்து

புது தில்லி, பிப். 8: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நடுநிலைப் பாதையை பின்பற்ற வேண்டும் என்றுதான், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியா காந்தி வலியுறுத்தி இருப்பதாகக் கருத வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் பார்தி -வால் மார்ட் கூட்டு தொழில் முயற்சியின் பின்னணியில், மன்மோகன் சிங்குக்கு எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஆலோசனை கூறி சோனியா காந்தி கடிதம் எழுதியதாகக் கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இவ்வாறு பதில் அளித்தார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தடை செய்ய வேண்டும் என்றோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லாமல் அதை அனுமதிக்க வேண்டும் என்றோ இரு வேறு அதீதங்களை அந்தக் கடிதம் வலியுறுத்துவதாகக் கருதக் கூடாது.

சாதாரண மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் கொண்டுள்ளது. ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்புகளுடன் கூடிய நடுநிலைப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலை என்றார் அபிஷேக் சிங்வி.

சோனியா காந்திக்கும் மன்மோகன் சிங்குக்கும் இடையில் கலந்துரையாடல் இல்லை என்ற பாஜக குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு

சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கும் முன் அது குறித்து முழுமையாக அலசி ஆராய வேண்டும், நாட்டையும் சாதாரண மனிதனையும் பாதுகாப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதைப் பரிசீலனை செய்த பிரதமர் மன்மோகன் சிங் இவ் விஷயத்தை வர்த்தக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு வெளிநாட்டினர் முதலீடு தேவை என்பதால் பல்வேறு பெரிய தொழில்களில் முதலீடு செய்ய அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் சிறிய தொழில்களில் கூட அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கும் சில்லறை வியாபாரிகளுக்குப் போட்டியாக சில இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கறி முதல் பருப்பு, உளுந்து வரை பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் மையங்களைத் தொடங்கியுள்ளன. இத்தகைய மையங்களில் விற்கப்படும் பொருள்களின் விலை சந்தை விலையை விட சற்றே குறைவாக உள்ளது. காரணம் பொருள்களை உற்பத்தியாகும் இடத்துக்கே சென்று கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் விற்பனை மையங்கள் அதி நவீன வசதியுடன் உள்ளன.

இது தவிர, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பொருள்கள் வாங்கினால் அவற்றை வீட்டுக்கே அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தொடர்ந்து வாங்கினால் சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இத்தகைய கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்கள் சாதாரண வியாபாரிகளைப் புறக்கணிக்கும் போக்கு காணப்படுகிறது.

நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள் உள்ளனர். தமிழகத்தில் சென்னையில் மட்டும் லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். பெரிய நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் சிறு வியாபாரிகள் திணறுகின்றனர். இந்த நிறுவனங்கள் இப்போது பெரிய நகரங்களில் மட்டுமே தங்கள் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளன. காலப்போக்கில் சிறிய நகரங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படலாம்.

இதனால் வட்டிக்கு வாங்கி சில ஆயிரங்கள் அல்லது சில லட்சங்கள் முதலீடு செய்து தொடங்கப்பட்ட சிறு கடைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து விடும் என்று வணிகர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் காலப்போக்கில் சிறு கடைகள் அழிந்தபிறகு, பெரிய நிறுவனங்கள்தான் சந்தை விலையை நிர்ணயம் செய்யும். அப்போது மக்கள் நலன் புறந்தள்ளப்பட்டு லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும். இதனால் விலைவாசி அதிகரிப்பதுடன், இந்த விற்பனையகங்களிலேயே பொருள்கள் வாங்க மக்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். இதன் காரணமாக, பல லட்சம் பேர் வேலையை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். வணிகம், விவசாயம், நெசவு போன்ற தொழில்கள் பெருமளவு பாதிக்கப்படக்கூடும் என்றும் வணிகர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ஆன் லைன் என்ற ஊக வர்த்தகம் மூலம் பல்வேறு பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

எனவே, பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இது உள்ளது. இதில் அரசு துரிதமாகத் தலையிட்டு, பல்வேறு அமைப்புகளைக் கொண்ட குழு அமைத்து, இதன் பாதிப்பைக் கண்டறிந்து, சிறு வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஏழைகள் நிறைந்த நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். அது பல்வேறு தொடர் பிரச்சினைகளுக்கு வழி வகுத்துவிடும்.சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு

Posted in Analysis, Assets, Background, Bharti, Big Box, Biz, Business, Commerce, Cong(I), Congress, Congress (I), Congress Party, Dinamani, Economics, Economy, FDI, Finance, Foreign investment, Indira Congress, Indra Congress, Interest, Investment, Loans, Manmohan Singh, Market, Monopoly, Op-Ed, Opinion, PM, Protection, retail, Retailer, Safeguards, Small Business, Sonia Gandhi, Sonia Gandi, Sudeshi, Swades, Wal-Mart, Walmart | Leave a Comment »

Abdul Kalam vs Bal Thackeray – Afsal & Hairstyle

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

அப்துல்கலாம் பற்றி விமர்சித்த பால்தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வற்புறுத்தல்

மும்பை, ஜன. 31- மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரம் நடந்து வருகி றது. சிவசேனா தலைவர் பால் தாக்கரே தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை தூக்கில் போடாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் ஜனாதிபதியை விமர்சித்தார்.

`அப்சல் கருணை மனுவை ஜனாதிபதி இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அவருடைய நீண்ட தலைமுடி கண்ணை மறைக்கிறது. நில வையும், நட்சத்திரத்தையும் மட்டும் பார்க்க முடிகிறது’ என்று அவர் கூறினார்.

சோனியா காந்தி பற்றி கூறும் போது, வெளிநாட்டு காரரால் இந்த நாடு ஆளப்படுகிறது. மன்மோகன் சிங் என்ற பொம்மை பிரத மராக இருக்கிறார்என்று கூறினார்.

பொதுவாக ஜனாதிபதியை அரசியல் தலைவர்கள் யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால் பால்தாக்கரே விமர்சித்து இருப்பது அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்களும் வந்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபன் கூறியதாவது:-

அரசியல் விவகாரத்தில் ஜனாதிபதியை இழுப்பது தவறானது. மும்பை மாநக ராட்சி தேர்தல் உள்ளூர் பிரச்சினைக்கு தொடர் பானது. எனவே இங்குள்ள பிரச்சினையை பேச வேண்டும். அப்சÛலை குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. அவருடைய கருணை மனு முறைப்படியான நடைமுறை ஆய்வில் உள்ளது. இதை விமர்சிக்க பால்தாக்கரேக்கு உரிமை இல்லை’ என்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கூறும்போது, `ஜனாதிபதி பற்றி விமர்சித்தது நாட்டையே அவமானபடுத்துவதற்கு சம மாகும்’ ஜனாதிபதி என்பவர் தனி மனிதர் அல்ல. அது ஒரு அமைப்பு. பால்தாக்கரே கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

பாரதீய ஜனதா தலைவர் வினோத் திவாதே கூறும்போது, `பால் தாக்கரே ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் பேசவில்லை, நிலவு மற்றும் நட்சத்திரங்களை ஒப்பிட்டு பேசவில்லை பாராளுமன்ற தாக்குதல் விவகாரம் பெரிய சம்பவம் என்பதால் தனது ஆதங்கத்தை தனக்கே உரித்தான பாணியில் சொன்னார்’ என்றார்.

Posted in Abdul Kalam, Afsal, Bal Thackeray, BMC, Bombay, Capital punishment, Elections, Hairstyle, Life sentence, Manmohan Singh, Mumbai, parliament, President, Shiv Sena, Sonia Gandhi, Terrorism, terrorist | Leave a Comment »

Russia, India cement nuclear ties with offer of 4 new nuclear reactors

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகளை அமைக்க ரஷ்யா உதவும்

தமிழகத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் கூடுதலாக மேலும் நான்கு அணு உலைகளை அமைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக புதுடில்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இது தொடர்பான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

வியாழக்கிழமை காலை புடின் புதுடில்லி வந்தடைந்தார்.

அதன்பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒன்பது உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

கூடங்குளத்தில் ஏற்கெனவே இரண்டு அணு உலைகள் ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றன. அத்துடன், மேலும் நான்கு அணு உலைகளை அங்கு அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்தியாவில் வேறு இடங்களிலும் புதிய அணுமின் நிலையங்களை ரஷ்ய தொழில்நுட்பத்துடன் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதப்படுகிறது.

ரஷ்யாவின், உலக கடல்வழி தொடர்புடைய செயற்கைக் கோள் மூலம் கடல்வழி சமிக்ஞைகளை, அமைதிப் பணிகளுக்காக இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்களும் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணத் திட்டம் தொடர்பான பணிகளை, தங்கள் நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் இணைந்து மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.

புடின் மற்றும் மன்மோகன் சிங், பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். கடந்த பத்து ஆண்டுகளில், உலக அளவில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரை, ரஷ்யாவுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இந்தியாவுடனான சர்வதேச அணுசக்தி ஒத்துழைப்புத் தடைகளை நீக்கியதற்காக ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்த மன்மோகன் சிங், பல நோக்கு விமானங்கள் மற்றும் நவீன ரக போர் விமானங்கள் உற்பத்தியில் கூட்டாகச் செயல்பட முடிவு செய்திருப்பது, இரு நாட்டு உறவில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதே நேரத்தில், பொருளாதார ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லை என்றும் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்..

ரஷ்யா – இந்தியா -சீனா இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த புடின், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யா – இந்தியா – சீனா – பிரேசில் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பும் வருங்காலத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் புடின்.

வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழா நிகழ்ச்சியில், கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்கிறார் புடின்.


Posted in A K Antony, China, Defense Minister, Electricity, energy, India, Kremlin, Kudankulam, Manmohan Singh, MiG-35, Moscow, Nuclear, Nuclear Suppliers' Group, Oil and Natural Gas Corp. Ltd, ONGC, Parade, Power, President, Putin, reactors, Republic Day, Rosneft, Russia, Sakhalin, Sakhalin-1, Sakhalin-3, Sergei Ivanov, T-90 tanks, United States, USSR, Vladimir Putin | Leave a Comment »

Knowledge Commission suggests to teach English from First Standard to Manmohan Singh

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

1-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டும்’ பிரதமருக்கு தேசிய கமிஷன் சிபாரிசு

புதுடெல்லி, ஜன.15-

தேசிய அறிவு கமிஷன் தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேற்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் மாணவர்கள் மேற்படிப்பு படிக்க ஆங்கில மொழி அவசியமானதாக இருக்கிறது. எனவே, இந்தியா முழுவதும் 1-ம் வகுப்பில் இருந்து, மாணவர்களுக்கு ஆங்கிலமும், தாய் மொழியும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கல்வி கற்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்து வெளியே வரும் போது, 2 மொழிகளை சரளமாக பேசும் தகுதியை பெற்று விடுகிறார்கள்.

தற்போது 12-ம் வகுப்பு படித்து வெளியேறும் மாணவர்களால் சரளமாக ஆங்கிலம் பேச முடிவது இல்லை. ஒரு சதவீத மாணவர்களே சரளமாக பேசுகிறார்கள். 1-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொடுத்தால், இது போன்ற நிலையை மாற்றி விடலாம்.

இது பற்றி, பிரதமர் மன்மோகன்சிங், மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். சாதாரண மாணவர்களும் ஆங்கிலம் பேசும் தகுதியை பெற வேண்டும். இதற்காக தரமான ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தற்போது உள்ள 40 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும்.

1-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை இப்போதே தொடங்கினால், இன்னும் 12 ஆண்டுகளில், அனைத்து மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசும் தகுதியை பெற்று விடுவார்கள்.

தற்போது 9 மாநிலங்களிலும், 3 ïனியன் பிரதேசங்களிலும், 1-ம் வகுப்பு முதல், மாநில மொழியுடன் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. எனவே மற்ற மாநிலங்களில்தான் இந்த திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

=================================================================
சமச்சீர் கற்பித்தலும் அவசியம்

சமச்சீர் கல்வி முறையைத் தமிழகத்தில் அறிமுகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இம்மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அளிக்கவுள்ளது.

அறிக்கை கிடைத்தவுடன் அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி கூறியிருப்பது நடுத்தர வருவாய் பிரிவினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

பாடத்திட்டத்தில் மட்டும் சமச்சீர் கல்விமுறை என்று நின்றுவிடாமல், சமச்சீர் கற்பித்தல் முறை, சமச்சீர் கட்டணமுறை ஆகியவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில், தனியார் பள்ளிகள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் பெயரும் புகழும் சம்பாதித்து பெற்றோர் தங்கள் பள்ளியில் இடம் கேட்டு அலைமோதும்படி செய்யவும், அதன்மூலம் அதிக கல்விக் கட்டணத்தை வசூலிக்கவும் எல்லா வகையிலும் முயல்கின்றன; ஆர்வம் காட்டுகின்றன. தங்கள் நிறுவன மாணவர்களில் சிலரேனும் மாவட்ட அளவில், மாநில அளவில் முதன்மை பெறவேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றன. அத்தகைய திறமைமிக்க மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள கட்டணங்களை ரத்து செய்து, சலுகைகள் தந்து, கூடுதல் பயிற்சிகளையும் தருகின்றன. இந்த கூடுதல் கவனமும் அக்கறையும்தான் தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் வேறுபடுத்தி, மிகப்பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டன.

எட்டாம் வகுப்பு வரையிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்பது நியாயமானதுதான். ஆனால், கிராமப்புறப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவரிடம், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவரின் திறனில் 50 சதவீதமாகிலும் உள்ளதா என்பதை சோதிப்பதும், திறன் குறைந்திருப்பின் தொடர்புடைய பள்ளி ஆசிரியர்களையும் பொறுப்பேற்கச் செய்வதும் அவசியம். இல்லையெனில், சமச்சீர் கல்விமுறையால் அரசு எதிர்பார்க்கும் பலன் ஏற்படாது.

தமிழ் வழிக் கல்வி அல்லது ஆங்கில வழிக் கல்வி எதுவென்றாலும் ஒரே விதமான பாடத்திட்டம் என்ற நிலையில், கட்டணங்களும் சமச்சீராக இருப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பத்தாம் வகுப்புக்கே ரூ.15 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தப் பள்ளிகள் உயர் வருவாய்ப் பிரிவினர், பணம்படைத்தோர் மட்டுமே அணுகக்கூடியவையாக உள்ளன. வசதிகள் அடிப்படையில் ஓட்டல்களுக்கு “ஸ்டார்’ அந்தஸ்து தருவதைப்போல, (கல்வியும் வியாபாரம் ஆகிவிட்டதால்) கல்வி நிறுவனங்களுக்கும் அவை பெற்றுள்ள வசதிகளுக்கேற்ப “ஸ்டார்’ அந்தஸ்து தந்து, அவர்கள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணங்களையும் அரசே நிர்ணயிக்கலாம்.

சமச்சீர் கல்வி முறையால் பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரேவிதமான பாடத்திட்டம் வகுக்கப்படும்போது, இவர்களுக்கான புத்தகங்களை வாங்குவதில் பெற்றோருக்கு அதிக சிரமம் இருக்காது. தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள், நிறைய புத்தகங்களை-அவர்கள் குறிப்பிடும் நிறுவன வெளியீடுகளை-வாங்கும்படி கட்டாயப்படுத்துகின்றன. புத்தகத்தின் விலையும் அதிகம். ஆனால் அவற்றில் பெரும்பகுதி பாடங்கள் தேவையில்லை என்று விலக்கப்படுகின்றன. இதனால் பெற்றோருக்குத்தான் தேவையற்ற கூடுதல் செலவு.

சமச்சீர் கல்விமுறை வரும்போது, வியாபார நோக்கமுள்ள கல்வி நிறுவனங்கள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை புகழ்ந்து, அதற்கு மாறி, பெற்றோரை தங்கள்பக்கம் இழுக்கும் அபாயமும் இல்லாமல் இல்லை. ஆகவே, பாடத்திட்டத்தை வகுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

=================================================================

Posted in Analysis, Children, Education, English, Equality, First Standard, GO, Govt, human resource development, Instruction, Kid, Knowledge Commission, Manmohan Singh, Matric, Matriculation, Medium, Mother-tongue, National Institute of Vocational Education Planning and, National Knowledge Commission, NIVEPD, Op-Ed, PM, Private, Schools, Society, Student, Tamil, Tamil Nadu, TamilNadu, Teacher, TN, vocational education and training | Leave a Comment »

NRI Investments and Return to India plans – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

வெளிநாடு வாழ்வோருக்கு அழைப்பு

தில்லியில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டியுள்ளதுபோல வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இன்னும் நிறைய பங்காற்ற முடியும். இந்த மாநாட்டில் பிரதமர் மட்டுமன்றி மத்திய அமைச்சர்களும் உரையாற்றினர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் சுமார் இரண்டரைக் கோடி இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதிகளாக இப்போதைய மாநாட்டில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டனர். மாநாட்டில் அவர்களது கருத்துகளும் பெறப்பட்டன.

பிரதமரும் மற்ற அமைச்சர்களும் ஆற்றிய உரையின் முக்கிய அம்சம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இன்னும் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும். இன்று சீனாவின் பெருத்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம் வெளிநாடுகளில் வாழும் சுமார் 6 கோடி சீனர்கள், கணிசமான அளவில் சீனாவில் முதலீடு செய்துள்ளதே ஆகும். உதாரணமாக 2003-ம் ஆண்டில் சீனாவில் செய்யப்பட்ட மொத்த வெளி முதலீட்டில் 65 சதவீதம் இவ்விதம் வெளிநாடுவாழ் சீனர்களிடமிருந்து கிடைத்ததாகும். இத்துடன் ஒப்பிட்டால், இந்தியாவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் செய்யும் முதலீடு சதவீத அளவில் மிகக் குறைவே ஆகும்.

வெளிநாட்டுக்குச் சென்று அங்கு தங்களது உழைப்பின் மூலம் செல்வநிலைக்கு உயர்ந்த இந்தியர்களில் சிலர் தங்களது தாய்நாடான இந்தியா பயன் பெற அவ்வப்போது நன்கொடையாகவும் முதலீடாகவும் நிதி அளித்துள்ளனர் என்பது உண்மையே. ஆனால் இவை சிறு துளிகளாகத்தான் உள்ளன. வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீட்டைப் பெருத்த அளவில் கவர முடியாமல் போவதற்கு இந்தியாவில் தொழில் துவங்குவதில், முதலீடு செய்வதில் உள்ள எண்ணற்ற எரிச்சலூட்டும் விதிமுறைகளும் காலதாமதமும் முக்கியக் காரணங்களாகும். இவை எளிதாக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக இந்தியாவில் உள்ள விதிமுறைகளை எளிதில் புரிந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் இந்தியா உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கிய காலத்திலும் அன்னியச் செலாவணி பிரச்சினையில் சிக்கித் தவித்த காலத்திலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வெட்கித் தலைகுனிந்தது உண்டு. ஆனால் இன்று தங்களை இந்தியன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிற அளவுக்கு இந்தியா முன்னேறி வருகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் சரி தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் நன்கு முன்னேறி தொழிலதிபர்களாக, நிபுணர்களாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் திகழ்கின்றனர்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு சலுகைகளையும் சில வசதிகளையும் அளித்து வருகிறது. குறிப்பிட்ட 16 நாடுகளில் வாழும் இந்தியர்கள் இரட்டைக் குடியுரிமையைப் பெறலாம் என்பது அவற்றில் முக்கியமான ஒன்று. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென இந் நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவும் திட்டமும் உள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்களில் இப்போதைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுடன் இன்னமும் வலுவான கலாசாரப் பிணைப்புகளைப் பெற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து செல்லும் இசைக் கலைஞர்களுக்கு அங்கு கிடைக்கிற ஆதரவு, இந்தியத் திரைப்படங்களுக்குக் கிடைக்கிற வரவேற்பு முதலியவை இதைக் காட்டுகின்றன. அடுத்த தலைமுறையினர் இடையே இயல்பாக இந்த ஆர்வம் குறையலாம். அவர்களை மனத்தில்கொண்டு இந்தியா தகுந்த திட்டத்தை வகுக்க முடியும். சுற்றுலா ஏற்பாடு இந்த வகையில் உதவும்.

சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளில் கணிசமானவர்கள் வெளிநாடுகளிலிருந்து வரும் சீனர்களாக உள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இதேபோல வெளிநாடுகளில் வாழும் இளம் இந்தியர்களைக் கவர்வதற்கென தனி சுற்றுலாத் திட்டத்தை உருவாக்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கலாம்.

Posted in China, Dual citizenship, Economy, Finance, India, investments, Manmohan Singh, NRI, Person of Indian Origin, PIO, Plans, PM, Return to India, Strategy, Tamil | Leave a Comment »

Women Representation Reservation Bill in Parliament & Female MPs

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

மகளிர்க்கு “இடம்’ கொடுப்போம்

பி. சக்திவேல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரமும் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குவது, அவர்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

நாடு சுதந்திரம் பெற்று இதுவரை 14 பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 1952-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்கள் வாக்குரிமை பெற்றுத் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

ஆனால் பிரிட்டன், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமையானது அந் நாடுகள் சுதந்திரம் பெற்றுப் பல ஆண்டுகள் ஆன பிறகு, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தான் கொடுக்கப்பட்டது.

உதாரணமாக, பிரிட்டனில் 1918 மற்றும் 1928-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் மூலம் தான் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் 1922-ம் ஆண்டும், சுவிட்சர்லாந்தில் 1971-ம் ஆண்டும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஒரு சில வளைகுடா நாடுகளில் 21-ம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் ஜனவரி 26, 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு, அரசியல் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.

நமது நாடாளுமன்றத்துக்கு இதுவரை நடைபெற்றுள்ள 14 பொதுத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 355 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 45 பேர் (8.3 சதவீதம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜெனீவாவிலிருந்து செயல்படும் நாடாளுமன்றங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு “”உலக அரசியல் வரைபடத்தில் பெண்கள் – 2005” என்ற தலைப்பில், 186 நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றி ஆராய்ந்து ஓர் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அதிக அளவு பிரதிநிதித்துவம் அளித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 104-வது இடத்தில்தான் உள்ளது. பாகிஸ்தான் 21.3 சதவீதம் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்ததன் மூலமாக 42-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ருவாண்டா 48.8 சதவீதமும், சுவீடன் 47.3 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஏற்கெனவே பெண்களுக்கு 33.3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மகளிர் பிரதிநிதித்துவம் இவ்வாறு இருக்கையில், தமிழக சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்த்தோமேயானால் நிலைமை திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை. அதிகபட்சமாக 1991-ம் ஆண்டு 31 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 22 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை (2,32,35,167) விட பெண் வாக்காளர்கள் (2,39,72,873) அதிகம் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அதேபோல் பல தேர்தல்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், பெண்களின் வாக்கு சதவீதம் அதிக அளவில் பதிவானது நிதர்சனமான உண்மையாகும்.

பெண்கள் அதிக அளவில் சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படாமைக்கு முக்கியக் காரணம் உள்ளது. கட்சியில் பெரும் அளவில் பெண் உறுப்பினர்கள் இருந்தபோதிலும் கட்சியின் பல்வேறு பதவிகளுக்குப் பெண்கள் நியமனம் செய்யப்படாததும், பெரும் அளவில் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அளிக்கப்படாததுமே காரணம் ஆகும். ஒரு சில கட்சிகள் ஒரு பெண் வேட்பாளரைக்கூட தேர்தலில் போட்டியிட வைக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படாமைக்கு முக்கியக் காரணம்: 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது. 10-லிருந்து 15 சதவீதம் மட்டும் அளிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு இந்த 33 சதவீதத்தில் உள் ஒதுக்கீடு வழங்கலாமா அல்லது வழங்கக் கூடாதா. நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதா அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திய பிறகு இட ஒதுக்கீடு வழங்குவதா?

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்று கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட பிறகு மேற்கூறிய பிரச்சினைகளை விவாதித்து ஒருமனதான கருத்து எட்டப்படலாம்.

மகளிர் இட ஒதுக்கீடு விஷயமானது 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தீர்வு காணப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இன்றைய சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களின் விருப்பம் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதை வலியுறுத்திதான் பல மகளிர் அமைப்புகள் போராடி வருகின்றன. பெண்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்தவும், அவர்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிக்கப்படவும் வேண்டுமென்றால் மகளிர் இட ஒதுக்கீடு மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் மக்களாட்சித் தத்துவம் முழுமை பெறுவதோடு மட்டுமல்லாமல் ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும்.

மகளிர் பெரும் அளவில் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு ஒன்றே தீர்வாகும். சர்வதேச அளவில் மகளிருக்குப் பிரதிநிதித்துவம் அளித்த பட்டியலில் 104-வது இடத்தைத்தான் இந்தியா பெற முடிந்தது. இந்த நிலை மாற வேண்டும்.

(கட்டுரையாளர்: துணை பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).

Posted in Cong (I), Congress, Female, Manmohan Singh, MP, parliament, Representation, Reservation, Sonia Gandhi, Women | Leave a Comment »

10 Cabinet Ministers & 93 MPs have Criminal Cases in various Courts

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

பல்வேறு குற்ற வழக்கில் 10 மத்திய அமைச்சர்கள், 93 எம்.பி.க்கள்

புதிதில்லி, டிச. 8: பல்வேறு குற்ற வழக்குகளில் 10 மத்திய அமைச்சர்களும், 93 எம்.பி.க்களுக்கும் விசாரணையை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சராக இருந்த சிபு சோரன் மற்றும் சித்து எம்.பி. ஆகியோருக்கு கொலை வழக்கில் அண்மையில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்களான

  • முகம்மது அலி அஷரப் (கடத்தல்-பணம் பறிப்பு),
  • சங்கர் சிங் வகேலா (லஞ்ச வழக்கு),
  • லாலு பிரசாத் (ஊழல் வழக்கு),
  • ரேணுகா செüத்ரி (அரசு ஊழியரை மீது தாக்குதல்),
  • சரத் பவார் (மத ரீதியான வழக்கு) உள்ளிட்ட 10 அமைச்சர்கள் குற்ற வழக்கில் சிக்கி உள்ளனர்.

அதேபோல எம்.பி.க்களில் சாது யாதவ், பப்பு யாதவ் உள்ளிட்ட 93 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Posted in abuse, Cabinet, Congress (I), Corruption, Court, High Court, India, Justice, Lalu prasad Yadav, Law, Manmohan Singh, Ministry, Navjot Singh Siddhu, NCP, Order, Politics, Power, Renuka Chowdhry, Sharad Pawar, Shibu Soren, Supreme Court, UPA, Waghela | Leave a Comment »

Manipur capital Imphal shutsdown, as PM arrives

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

மன்மோகன்சிங் வருகையை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு

இம்பால், டிச.3- பிரதமர் மன்மோகன்சிங், மணிப்பூர் மாநிலத்தில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அவருடைய வருகையை ஒட்டி, இரு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

`திபாய்முக்’ அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழு சார்பிலும், மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஆயுத சட்டம் அமலில் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, புரட்சிகர மக்கள் முன்னணி என்ற தீவிரவாத அமைப்பு சார்பிலும் இந்த போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டம் காரணமாக, மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. வாகனங்கள் ஓடாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கான வாகன போக்குவரத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டது.

Posted in ACATP, Action Committee Against Tipaimukh Project, Armed Forces Act, Bandh, Churachandpur, Dam, Impala, Imphal, Manipur, Manmohan Singh, PM, Prime Minister, Protest, Revolutionary People's Front, RPF, Strike, Tipaimukh Dam | Leave a Comment »

Congress (I) vs Opposition BJP vs Communist Allies

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புயல் வீசுமா?

புதுதில்லி, நவ. 20: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் புதன்கிழமை (நவ. 22) தொடங்க இருக்கிறது.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனது ஆட்சிக் காலத்தில் பாதியை முடித்துள்ள நிலையில், உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப உள்ளன.

இதையடுத்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் கூட்டத் தொடரில் காரசார விவாதங்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அப்சல் விவகாரம்: பாஜக எழுப்பும்

நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட முகமது அப்சலுக்கு உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது. ஆனால் பாஜக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் முதல் நாளன்று இந்த விவகாரத்தை பாஜக எழுப்பலாம் என்று தெரிகிறது.

  • உள்நாட்டு பாதுகாப்பு,
  • பயங்கரவாதம் ஆகியவற்றில் அரசின் மெத்தனம்,
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய அரசின் போக்கு ஆகியவை குறித்து பிரச்சினை எழுப்புவோம் என்று பாஜக துணைத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா தெரிவித்தார்.

அணுவிசை உடன்பாடு பிரச்சினையை முன்வைக்க இடதுசாரிகள் திட்டம்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அன்றே நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.

இடதுசாரிக் கட்சிகள், இந்தியா-அமெரிக்கா அணுவிசை உடன்பாடு, சர்ச்சைக்குரிய சிறப்பு பொருளாதார மண்டலம், ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் ஆகிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுவிசை உடன்பாடு தொடர்பாக சில நிபந்தனைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த உடன்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை அவையில் எழுப்புவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

Posted in Afsal, BJP, Communists, Congress (I), Government, India, Indira Congress, Issues, Lok Sabha, Manmohan Singh, parliament, Punjab, Sonia Gandhi, UDA, UP | Leave a Comment »