தமிழகத்தின் 5 இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது
புதுதில்லி, பிப். 22: தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருதுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த விவரம்:
புதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாதெமி முதன்முறையாக இளம் கலைஞர்களுக்கான விருதுகளை வழங்குகிறது. இவ்விருதுகள் பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவாக “உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.
2006-ம் ஆண்டுக்கான இவ்விருதுகள் 33 இளம் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.
- இசை,
- நாட்டியம்,
- நாடகத்துறை ஆகியவற்றுக்கு தலா எட்டு விருதுகளும்,
- பாரம்பரிய நாட்டுப்புற கலை,
- பொம்மலாட்டம் போன்ற பல்வேறு துறைகளில் ஏழு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 கலைஞர்களின் விவரம்:
கர்னாடக வாய்ப்பாட்டு: டி.எம்.கிருஷ்ணா
மிருதங்க இசை: என்.மனோஜ் சிவா
கடம் வாசிப்பு: எஸ்.கார்த்திக்
பரத நாட்டியம்: சீஜித் கிருஷ்ணா
படைப்புக் கலை: சங்கீதா ஈஸ்வரன்