Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Manipulation’ Category

TV wars of Tamil Nadu: DMK vs ADMK vs Congress vs PMK

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

அரசியல் சார்புடன் மேலும் 3 அலைவரிசைகள்: தமிழ்நாட்டில் தீவிரமடைகிறது “தொலைக்காட்சிப் போர்’

புதுதில்லி, ஆக. 13: அரசியல் சார்புடன் புதிதாக மேலும் 3 தமிழ் அலைவரிசைகள் ஒளிபரப்பாக உள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் போர் தீவிரமடைகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் தொடங்கும் “கலைஞர் டிவி’, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.வி.தங்கபாலு தொடங்க உள்ள “மெகா டிவி’ மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் தொடங்க உள்ள “வசந்த் டிவி’ ஆகிய மூன்றும் விரைவில் ஒளிபரப்பைத் தொடங்க உள்ளன. இவற்றில், “மெகா டிவி’ ஆகஸ்ட் 20-ம் தேதியும், “கலைஞர் டிவி’ செப்டம்பர் 15-ம் தேதியும் ஒளிபரப்பைத் தொடங்குகின்றன. இதையடுத்து தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித்தனியே தமக்கென ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைப் பெற்றிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுக ஏற்கெனவே ஜெயா டிவியை நடத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் குரலாக 2006 முதல் “மக்கள் தொலைக்காட்சி’ ஒளிபரப்பாகி வருகிறது.

“இந்தப் போக்கு ஆரோக்கியமானதும் அல்ல; போட்டிச் சூழலுக்கு உகந்ததும் அல்ல. அரசியல் கட்சிகளோ அவற்றின் தலைவர்களோ தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இந்த முயற்சிகள் எதுவும் வணிக அடிப்படையில் வெற்றிபெறப் போவதில்லை.

தொலைக்காட்சி என்ற வலிமைமிக்க ஊடகத்தை, ஒரு குறிப்பிட்ட ஆள் அல்லது கட்சியின் கருத்துகளை பரப்புவதற்குத்தான் இந்த அலைவரிசைகள் பயன்படுத்தும். பார்வையாளர்கள் மத்தியில் தமது கருத்துகளைத் திணிப்பதற்கு இந்த அலைவரிசைகள் முயற்சி செய்யும்’ என பத்திரிகையாளர் சோ கருத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆசியுடன் “வசந்த் டிவி’ தனது ஒளிபரப்பைத் தொடங்கும் என்று கூறியுள்ளார் வசந்தகுமார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான இவர், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் அங்காடிகளை நடத்திவருகிறார்.

“ஒரு நாளுக்கு 6 முறை செய்தி ஒளிபரப்புடன் கூடிய, 24 மணி நேர பொழுதுபோக்கு அலைவரிசையாக வசந்த் டிவி இருக்கும். எமது செய்திகளில் காங்கிரஸ் தொடர்பான குறிப்பாக சோனியா காந்தி தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி அன்றாடம் இடம்பெறும்’ என்று கூறும் வசந்தகுமார், “தனது அலைவரிசை வணிக அடிப்படையிலும் வெற்றிபெறும்’ என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

திமுக மற்றும் அதிமுகவின் பிரசார பீரங்கிகளாக செயல்பட்டு வரும் சன் டிவியும் ஜெயா டிவியும் தொலைக்காட்சி மூலம் அரசியல் யுத்தம் நடத்தியுள்ளன. குறிப்பாக தேர்தல் நேரங்களில் பெரும் அரசியல் லாவணியை இவை நடத்தும்.

கருணாநிதியின் குடும்பத்துக்கும் மாறன் (கலாநிதி, தயாநிதி) சகோதரர்களுக்கும் இடையே வெடித்த குடும்பச் சண்டையால், மற்றொரு முன்னணி அலைவரிசையான ராஜ் டிவி திமுக ஜோதியில் ஐக்கியமாகியுள்ளது. ராஜ் டிவிதான் கலைஞர் டிவிக்கு வேண்டிய அனைத்து ஒளிபரப்பு ஒத்தாசைகளையும் செய்து வருகிறது.

“மக்களை ஏமாற்ற முடியாது. உண்மைக்கும், பொய்ச் செய்திக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பகுத்துப் பார்க்கும் திறன் அவர்களுக்கு உண்டு. செய்தியின் உண்மைநிலை ஐயத்துக்கிடமானதாக மாறும்போது உடனடியாக பார்வையாளர் வேறு அலைவரிசைக்குச் சென்று, உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்வார்’ என்கிறார் சோ.

“மக்கள் தொலைக்காட்சி, அரசியல் அலைவரிசை அல்ல. பாட்டாளி மக்கள் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் மக்கள் தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதில்லை. செய்தியை அரசியலுக்காகத் திரிப்பதில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் சமமுக்கியத்துவம் அளிக்கிறோம். மற்ற பிற அலைவரிசைகள் சீரழிக்கும் தமிழ்ப் பண்பாட்டை மக்கள் தொலைக்காட்சியில் உயர்த்திப் பிடிக்கிறோம். எங்களது நிகழ்ச்சிகளை குறிப்பாக செய்திகளை ஏராளமான மக்கள் விரும்புகின்றனர்’ என்கிறார் மக்கள் தொலைக்காட்சியின் மூத்த அலுவலர் ஒருவர்.

Posted in abuse, ADMK, Anbumani, Cho, Color TVs, Colour TV, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamalar, DMK, Entertainment, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya TV, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Makkal, Makkal TV, Manipulation, Media, MSM, News, PMK, Power, Ramadas, Ramadass, Ramadoss, Tamil Nadu, TamilNadu, Television, Thangabalu, Thankabalu, Thuglaq, TN, Vasanth, Vasanth&Co, Wars | Leave a Comment »

Dinamalar ‘Andhumani’ Ramesh vs Dinakaran & Sun TV Uma – Saga, Sexual Harassment

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

தினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்

Full Resignation letter Uma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationசற்றுமுன்…: தினமலர் நிர்வாகி “அந்துமணி” ரமேஷ் மீது பாலியல் புகார்

சற்றுமுன்…: உமா நடத்தும் பித்தலாட்ட நாடகம் – “தினமலர்” சட்டபூர்வமாக சந்திக்கும்

சற்றுமுன்…: “அந்துமணி” ரமேஷ் பாலியல் புகார் – சன் செய்திகள் வீடியோ

‘Andhumani’ in Abusive SMS Scam « Views and Reviews

Dinamalar strikes back refuting alleged charges as false claims on political moves « Views and Reviews

சும்மா டைம் பாஸ் மச்சி…..: தினமலர் ரமேஷ் சார்!

ஓசை செல்லாவின் செக்ஸ் SMS புகழ் அந்துமணி … பா.கே.ப.ஓ!!

காசிப்ஸ்: தினமலர் – தினகரன் மோதல் பிண்ணனி!

எனக்கு தெரிந்தது…: தினமலர், தினகரன், சன் டிவி நிறுவனஊழியர்களிடம் ஓர் “”மறைமுக” நேர்காணல்…

PRINCENRSAMA: ிழிந்து தொங்கும் ‘அந்துமணி’ முகமூடி!

real_not_ reel: முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பார்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா?

சற்றுமுன்…: தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு

——————————————————————————————-

பெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை தினமலர் ரமேஷ் மீது நடவடிக்கை

மாதர்சம்மேளனம் இன்று ஆலோசனை

சென்னை, ஜூலை 17: தினமலர் நாளேட்டின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு பற்றி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ரமேஷின் தொல்லை தாங்க முடியவில்லை
தினமலர் நாளிதழில் நிருபராக பணியாற்றிய உமா(28), அடையாறு காவல் நிலையத்தில் 13ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘தினமலர் நாளிதழில் ஏழு ஆண்டுகளாக நிருபராக பணியாற்றினேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். வந்து கொண்டே இருந்தது. தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் இவ்வாறு செய்துள்ளார். இவர் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகன். இவரதுRamesh Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation தொல்லை தாங்காமல்தான் 3 மாதம் முன்பு ராஜினாமா செய்தேன். இப்போது தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறேன். இப்போது, Ôஉன்னையும் உன் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன். உயிருடன் கொளுத்தி விடுவேன்Õ என்று மிரட்டுகின்றனர். எனக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பெண் ஊழியரை பத்திரிகை முதலாளியே பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமலர் ஆசிரியரின் மகன் ரமேஷ§க்கு மகளிர் அமைப்புகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி கூறியதாவது:

7 மணி தாண்டிய பின்
விதிமீறிய போலீஸ்
யாரோ கொடுத்த ஏதோ ஒரு புகார் என்ற பெயரில் உமாவையும், எஸ்.டி.டி. பூத்தில் பணியாற்றும் பெண்ணையும் இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுவே தவறானது. இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்துக்கு பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்ற விதியை போலீசார் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன் அடிப்படையில், பல அலுவலகங்களில் பாலியல் புகார் விசாரணைக் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. சட்டப்படியான இந்த ஏற்பாட்டில் பத்திரிகை அலுவலகங்களுக்கு விதிவிலக்கு கிடையாது.
முதலாளியை யார் மிரட்ட முடியும்?

ஒரு பத்திரிகையின் நிர்வாகிக்கும், அந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் உமா கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. எந்தவித பண பலமும், செல்வாக்கும் இல்லாத ஒரு பெண்ணால், ஒரு பத்திரிகையின் முதலாளியை எப்படி மிரட்ட முடியும்? உமா மீதான இத்தகைய குற்றச்சாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

7 வருடமாக எப்படி நீடித்தார்?
உமா மனநிலை சரியில்லாதவர் என்று தினமலர் நிர்வாகத்தின் பெயரில் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண் அதை வெளியே சொல்லாமல் சகித்துக் கொள்ளும் கோழைத் தனத்தை உதறிவிட்டு, நீதி கேட்டு பகிரங்கமாகப் போராடத் துணிந்தால் அவள் நடத்தை கெட்டவள், மனநிலை சரியில்லாதவள் என்று எளிதில் குற்றம் சுமத்தி விடுவார்கள் என்பதை தொடர்ந்து பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அதுதான் நடக்கிறது. உமா மனநிலை சரியில்லாதவர் என்றால் தினமலர் நிருபராக 7 ஆண்டுகள் வேலை செய்ய அவரை எப்படி அனுமதித்தனர்? இப்போது பணி புரியும் புதிய இடத்தில் அவர் எப்படி சேர்ந்திருக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல முடியுமா?

அதற்கும் இவரே
காரணமாவார்
தினமலர் நிர்வாகம் சொல்வதுபோல ஒரு வேளை உண்மையிலேயே உமாவின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லைதான் என்று கூறலாம். தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு கடுமையாக மனஉளைச்சல் ஏற்படும் என்பது எதார்த்தமானது. எனவே, உமா கொடுத்த புகார் மீது காவல்துறை தாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு வாசுகி கூறினார்.

இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா கூறியதாவது:
பணியிடங்களில் பல பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்வதில்லை. சில பெண்கள் மட்டுமே துணிச்சலுடன் வெளியே சொல்ல முன்வருகின்றனர். தினமலர் நிர்வாகியே தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக உமா கூறியுள்ளார். இவ்வளவு தைரியமாக அவர் வெளியே சொல்லி இருக்கிறார் என்றால், அதில் நிச்சயம் உண்மை இருக்கும். இப்புகார் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி, ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பத்திரிகை முதலாளி மீது குற்றச்சாட்டு கூறியிருக்கும் பெண்ணுக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உமாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுசீலா கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பத்மாவதி கூறியதாவது:
பாதுகாப்பு அளிக்க வேண்டும்
பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றி புகார் கொடுத்தால் காவல் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை. போராட்டம் நடத்திய பிறகுதான் புகார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது. மாதர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், 17ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து அதில் முடிவு எடுப்போம்.
இவ்வாறு பத்மாவதி கூறினார்.

————————————————————————————————————————-

மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதே இவர்களின் தொழில்

வேண்டாதவர்கள் மீது அவது£று பரப்புவது என்பது தினமலர் நிர்வாகத்துக்கு கைவந்த கலை என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். பெண் நிருபர் உமா, தமக்கு தினமலர் உரிமையாளர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறார் என்று புகார் கூறியதும், அதனை மறுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், புகார் கூறிய உமா மனநிலை சரியில்லாதவர் எUma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationன்று அவது£றுகளை பரப்புவதே இதற்கு உதாரணம்.

தமிழர் தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார். தொழில் போட்டியில் வெற்றிபெற முடியாத ஆத்திரத்தில், தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனர் என்ற ஒரே காரணத்துக்காக ஆதித்தனாரைப் பற்றி அவது£றாக கேலி செய்து செய்தி வெளியிட்டு பின்னர் தினமலர் வாங்கிக் கட்டிக்கொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

தினமலருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை கிண்டலான அடைமொழியோடு தினமலர் பல ஆண்டுகள் கேலி செய்து வந்தது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விளம்பரங்கள் தினமலருக்கு தரப்படவில்லை என்ற ஆத்திரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு பிளாக்மெயில் செய்ததும், பின்னர் துணைவேந்தரே தினமலரின் உள்நோக்கம் பற்றி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததும் தினமலரின் விஷமத்தனத்தை அம்பலப்படுத்தியதும் தினமலரின் மோசடித்தனத்துக்கு ஒரு உதாரணம்.

கொள்கை ரீதியாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கட்சிகளையும் குறிப்பாக தமிழக தலைவர்களையும் தரக்குறைவாக விமர்சிப்பதும், அவர்களின் பெயர்களை சுருக்கி அவர்களை கேலி கிண்டல் செய்வதும் தினமலருக்கு வாடிக்கையான ஒன்று.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியை பற்றி நீண்ட நெடுங்காலமாக அவது£று செய்திகளை வெளியிட்டு ஆனந்தப்பட்டது தினமலர்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர்திருமாவளவன் போன்றவர்களை பற்றியும் அவது£று பரப்ப தவறியதில்லை.

தமிழகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவை இன்றுவரை ‘அண்ணாதுரை’ என்றே குறிப்பிட்டு எழுதும் தினமலர் நிர்வாகம், பலமுறை கண்டனங்கள் எழுந்தபோதும் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரைப்பட கலைஞர்களும் தினமலரில் கேலி, கிண்டல், அவது£றுகளுக்கு தப்பவில்லை.

தொடர்ந்து தமிழ் திரைப்படக் கலைஞர்களை கேலி கிண்டல் செய்து அவர்களின் மனம் புண்படும்படி செய்திகளை வெளியிட்ட பெருமை தினமலருக்கு உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கி சிபி வரைக்கும் அத்தனை கலைஞர்களையும் காயப்படுத்தி வருகிறது தினமலர்.

காலங்காலமாக தமிழ் தலைவர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அவது£றாக விமர்சித்து எழுதி வந்த தினமலர் தற்போது அந்தரங்க அசிங்கங்களை அம்பலப்படுத்திய உமா மீது அவது£றுகளை அள்ளிவீசுவதொன்றும் ஆச்சரியமில்லை.
பாரம்பரியமிக்க நிறுவனம் என்று தங்களை சொல்லிக்கொண்டு பத்திரிகை பலத்தை தவறாக பயன்படுத்தி வரும் தினமலர் நிர்வாகம் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி பாவ விமோசனம் தேடாமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி விளக்கம் அளிப்பது பிரச்னையை திசை திருப்பி குற்றச்சாட்டில் இருந்து தப்பியோடும் முயற்சியாகும்.

மேலும், தினமலர் உரிமையாளரின் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் தினகரனில் செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல தினகரன் அலுவலகத்தை தேடிவந்தன.

தினமலர் இதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பான வாரமலரில் அவ்வப்போது ‘தொழில் அதிபருக்கு பெண் கம்பேனியன் தேவை’ என்ற விளம்பரத்தின் மறுபக்க மர்மம் அவற்றில் ஒன்று.

இவ்வாறு வரும் விளம்பரங்களின் பின்னணியில் இருந்தது யார் என்பதும், போலி விளம்பரங்கள் கொடுத்து பல பெண்களை வளைத்த கதைகளும் எங்களின் நேரடி கவனத்திற்கே வந்தது. இவ்வாறு விளம்பரம் கொடுத்த, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு, நிர்வாகியே நேரில் வந்து பெண் பார்த்த கதையையும் சம்மந்தப்பட்ட பெண்ணே நம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார்.

இது பற்றியும் நாம் விரிவாக விசாரித்து வருகிறோம். எனவே தினமலர் நிர்வாகம் இனிமேலாவது மற்றவர்கள் மீது பாய்வதை விட்டுவிட்டு தன் தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

——————————————————————————————————————

மாதர் சம்மேளனம் ஆதரவு

Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation
இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம், சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ., மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவு குறித்து தலைவர் சுசீலா கூறியதாவது:

தினமலர் பத்திரிகை உரிமையாளர் ரமேஷ், தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக அப்பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய உமா புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். இந்த விஷயம் குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இப்பிரச்னையில் உமாவுக்கு ஆதரவு கொடுத்து போராடுவோம். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூடி விரைவில் முடிவு செய்வோம்.
இவ்வாறு சுசீலா கூறினார்.

——————————————————————————————————————

பட்டியலிட்டு உமா கண்ணீர் தினமலர் ரமேஷ் செய்த கொடுமைகள்

சென்னை, ஜூலை 18: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி கீழ்த்தரமான முறையில் தனக்கு பல கொடுமைகளை தினமலர் நிர்வாகி ரமேஷ் செய்ததாக முன்னாள் பெண் நிருபர் உமா கண்ணீருடன் பட்டியலிட்டுள்ளார். தினமலரில் பணியாற்றிய பலர் கசப்பான அனுபவங்களால்தான் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களிடம் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பெண் நிருபர் உமா புகார் கொடுத்திருக்கிறார். அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ரமேஷ் பற்றிய உண்மைகளை வெளியில் சொன்னதால் தினமும் என்னைப் பற்றிய அவதூறு தகவல்களை தினமலர் நிர்வாகம் பரப்பி வருகிறது.

தினமலரில் நான் பணியாற்றியபோது பல தவறுகளை செய்ததாகவும், அப்போதெல்லாம் அழுது மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், நான் சிறப்பாக பணியாற்றுகிறேன் என்று ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியே பல நேரங்களில் என்னை பாராட்டியுள்ளார். செய்திப் பிரிவிலும் எனக்கு நல்ல பெயர்தான் இருந்தது.

தினமலரில் நிருபர்களாக இருப்பவர்களுக்கு செய்தி சேகரிக்கும் பணியைவிட நிர்வாகத்தினரின் குடும்ப வேலைகளைத்தான் அதிகம் கொடுத்துள்ளனர். நானும் அப்படித்தான் அவர்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கே அதிக நேரம் வேலை செய்தேன். அங்கு முறையான வேலை நேரம் என்பது கிடையாது. ஒவ்வொரு வேலைகளையும் விசுவாசமாகத்தான் செய்து கொடுத்தேன்.

பணியில் தவறு செய்திருந்தால் எனக்கு மெமோ கொடுக்க வேண்டியதுதானே. இதுவரை நான் அங்கு எந்த மெமோவும் வாங்கியதில்லை. மெமோ கொடுக்காமல் எப்படி நான் மன்னிப்பு கேட்டதாக கூற முடியும்?

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஜெயா டி.வி.க்கு விண்ணப்பித்தேன் என்ற காரணத்துக்காக என்னை வடசென்னைக்கு டிரான்ஸ்பர் செய்தார்கள். 50 ஆண்டு பாரம்பரியம் என்று கூறும் தினமலரில் ஊழியர்கள் அடிமையாக நடத்தப்படுவதுதான் உண்மை.
ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்ததோடு ரமேஷ் நிற்கவில்லை.

வெளியில் சொல்லவே நா கூசுகின்ற பல கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கி என்னை நோகடித்திருக்கிறார். மேலும், என் வண்டியை பஞ்சர் செய்வது, வண்டியின் சீட்டை கிழிப்பது, செருப்பை பையில் போட்டு வண்டியில் மாட்டுவது போன்ற அற்பத்தனமான காரியங்களையும் அரங்கேற்றினார். வீட்டில் நான் என்ன பேசுகிறேன் என்று கண்காணிக்க ஆள் அனுப்புவது, என்னைப் பற்றி ஆபீசில் ஆபாசமாக பேசுவது, வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புவது என்று ரமேஷ் செய்த கொடுமைகள் ஏராளம்.

நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்தேன். ரமேஷின் தொல்லைகள் பற்றி செய்திப் பிரிவில் உள்ளவர்களிடம் பல முறை சொல்லி அழுதேன். அவர்களும், போராடுங்கள் என்று கூறி என்னை தேற்ற முயற்சி செய்வார்கள்.

தொல்லை எல்லை மீறி போனதால்தான் இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்று ராஜினாமா செய்தேன். அப்போது Ôதொழில் தகராறு காரணமாகÕ என்று எழுதப்பட்ட 5 ஸ்டாம்ப் பேப்பரில் என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினர். பிரச்னை ஒழிந்தது என்று வேறு வேலைக்குச் சென்றால் அங்கு வந்தும் தொல்லை கொடுக்கின்றனர்.
செய்தி நிறுவனங்களில் பணி கிடைக்காததால்தான் மக்கள் தொடர்பு அதிகாரி வேலையில் நான் சேர்ந்ததாக கூறியுள்ளனர். இது மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பதவியை கேவலப்படுத்தும் செயல்.

Ôதினமலர் – உண்மையின் உரை கல்Õ என்று போஸ்டர் வைப்பது கண்துடைப்பு வேலை. அங்கு பணிபுரிபவர்களுக்கும், தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் அந்துமணி ரமேஷ் ஆகியோரின் மனசாட்சிக்கு தெரியும் எது உண்மை என்று.
இவ்வாறு உமா கூறினார்.

——————————————————————————————————————

உண்மையை சொன்னால் மனநிலை பாதித்தவள் என்பதா?

தினமலர் நிர்வாகி மீது அவதூறு வழக்கு

பெண் நிருபர் உமா பேட்டி

சென்னை, ஜூலை 16: ÔÔசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த உண்மையை சொன்னதால¢ என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறுகின்றனர். இதனால் தினமலர் நிர்வாகம் மற்றும் அந்துமணி ரமேஷ் மீது அவதூறு வழக்கு தொடருவேன்ÕÕ என்று தினமலரில் பணிபுரிந்த நிருபர் உமா கூறியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் இன்று கூறியதாவது:

தினமலர் நிர்வாகி அந்துமணி ரமேஷ் தொடர்ந்து எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால்தான் பொறுமை இழந்து புகார் கொடுத்தேன். உண்மையை வெளிப்படுத்தியதால் என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள். என் எதிர்காலத்தை சீரழிக்க நினைக்கும் அவர்களின் எண்ணத்தை முறியடிப்பேன். என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்.

போன் மூலம் மிரட்டல் விடுத்தேன் என்று பொய்ப் புகார் கூறி என்னை விசாரிப்பதற்காக 2 போலீசார் மாலை 7 மணிக்கு என் அலுவலகத்துக்கு வந்தனர். Ôபுகாரை காட்டுங்கள், உங்களுடன் வருகிறேன்Õ என்றேன். அதற்கு அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை.
இரண்டு மணி நேரம் விசாரணை செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருந்தனர். காரணத்தைக்கூட சொல்லவில்லை. சட்டப்படி மாலை 6 மணிக்குமேல் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது. போலீசார் அந்த சட்டத்தை பின்பற்றவில்லை. விசாரணைக்கு தயார் என்று எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். மீடியா என்ற பலத்தை வைத்துக் கொண்டு காவல்துறையை என் மீது பிரயோகம் செய்கின்றனர். நாட்டின் 4-வது தூண் பத்திரிகை. அதில் வேலை பார்த்ததால் பிரச்னையை எதிர்கொள்ள எனக்கு தைரியம் இருக்கிறது. ஆனால், சராசரி மனிதர்களால் இவர்களின் பழிவாங்கும் போக்கை எப்படி சமாளிக்க முடியும். அவர்களுக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளை பத்திரிகைகளில் வெளியிட்டு பழிவாங்கும் எண்ணமுடையவர்தான் அந்துமணி ரமேஷ்.

நிர்வாகம் சார்பில் இன்று தன்னிலை விளக்கத்தை அவர்கள் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கு நான் போன் செய்து மிரட்டினேன் என்று கூறியுள்ளனர். எனக்கு சிரிப்புதான் வருகிறது. அங்கு வேலை பார்ப்பது பாதுகாப்பு இல்லை என்று கருதி நான் வெளியேறினேன். வேலையை விட்டுவந்து 3 மாதங்கள் ஆகிறது. மேலும் ஸ்ரீபிரியாவோடு எனக்கு அவ்வளவு பழக்கமுமில்லை. தினமலரை மிரட்டினேனா அல்லது ஸ்ரீபிரியாவை மிரட்டினேனா என்பதை முதலில் தெளிவுபடுத்தட்டும். ஸ்ரீபிரியாவை மிரட்டினேன் என்றால் அவர்தானே என் மீது புகார் கொடுக்க வேண்டும். அது எப்படி நிர்வாகம் ஆக முடியும்.

நான்தான் போன் செய்து மிரட்டினேன் என்கிறார்கள். எல்லாம் பொய். அங்கிருந்து வெளியேறிய பிறகு நான் எதற்கு அவர்களை மிரட்ட வேண்டும். தற்போது பணியாற்றும் அலுவலகத்தில் இருக்கும் வேலையை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அவர்களை மிரட்டுவது என் வேலையல்ல. அவர்களின் தன்னிலை விளக்கம் ஆதாரமில்லாமல் இருக்கிறது.

அங்கு 7 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். என்னுடைய குரல் அவர்களுக்கு தெரியாதா? எனவே போன் மூலம் நான்தான் மிரட்டினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். தொலைபேசி எண், தொடர்பு கொண்ட நாட்கள், நேரம் எல்லாவற்றையும் வெளியிடட்டும். மருத்துவமனையில் உள்ள பூத்தில் போலீசார் வந்து சோதனை செய்தபோது, டயல் செய்த நம்பர்களில் தினமலர் நம்பர் டயல் செய்யப்படவில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

அதனால்தான் விசாரணை செய்யாமல் என்னை வீட்டுக்கு போகச் சொன்னார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. ஜோடிக்கப்பட்டவை. ஆள் வைத்து பேசுவது, மிரட்டுவது இதெல்லாம் அவர்களுக்குத்தான் கைவந்த கலை. எனக்கில்லை. அதற்கு அவசியமும் இல்லை. பத்திரிகை துறையில் இருந்தேன் என்பதற்காக மற்றDinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation பத்திரிகைகள் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். அப்படியானால் ஏன் 7 வருடம் அங்கு வேலைக்கு வைத்து எனக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்? மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றால் எனக்கு எப்படி வேறு வேலை கிடைத்திருக்கும். இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றதால் தினமலர் நிர்வாகம் மீதும் அந்துமணி ரமேஷ் மீதும் அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.

தினமலரில் Ôபிளாக் மெயில் ஜர்னலிசம்Õ பிரசித்தி பெற்றது. அதைத்தான் எப்போதும் செய்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அங்கு வேலை செய்பவர்களை பலவகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். நான் பயந்து ஓடவில்லை. பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வேன். இவ்வாறு உமா கூறினார்.

——————————————————————————————————————

தினமலர் நாளிதழை பழிக்க இது தந்திரம் ஆதாரமற்ற புகாரைக் கூறும் உமா யார்?

சென்னை :தினமலர் நாளிதழில் பணியாற்றிய பெண் நிருபர் உமா நேற்று “குறிப்பிட்ட ஊடகத்தின்’ மூலம் அளித்த புகார் பேட்டியை உற்று நோக்கினால், இது உள்நோக்குடன் எழுந்த புகார் என்று புரியும்.

ஐம்பது ஆண்டுகளாகத் தமிழக மக்களின் உணர்வோடு ஒன்றிய நாளிதழின் பங்குதாரரின் மகனைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது வேடிக்கையானது.

Resignation letter Uma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationதினமலர் நாளிதழில் தற்போது இவர் பணியாற்றவில்லை. சிறிது காலம் முன்பு மணமுடித்துக் கொண்டார். இவர் போலீசில் ஏற்கனவே அளித்த புகார் மனு, இவருடன் பழகிய அருண் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசிடம் எழுதிக் கொடுத்த மனு ஆகியவை இவர் எவ்வித மனப்போக்கு கொண்டவர் என்பதைக் காட்டுபவை. ஏ.ஓ.அருண் என்பவர் தன்னிடம் உமா “ரிலாக்ஸ்’ ஆக இருப்பதற்காக பேசுவது உண்டு என்று போலீசாரிடம் மனுக்கொடுத்திருக்கிறார்.

உமாவும் தான் அளித்த புகாரில், “பணியில் மனப்பிரச்னை இருந்தது என்றும் அதனால் டைபாய்டு வந்தது’ என்றும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக நிருபர் பணி என்பது மிகவும் சவாலான பணி, அதை இவர் நிறைவேற்றுவதில் அடிக்கடி குறை ஏற்படுவதும், அதனால் மறுநாள் அந்தச் செய்தியின் உண்மையைப் போட வேண்டிய கட்டாயமும் செய்திப் பிரிவிற்கு ஏற்பட்டிருக்கிறது.

அது மட்டும் அல்ல, தற்போது மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் உமா, ஏன் தினமலர் பணியை விட்டு விலகிய பின் மூன்று மாதகாலம் காத்திருந்து, அடிப்படை இல்லாத “எஸ்.எம்.எஸ்’ கொண்டு ஆவேசப்படுகிறார் என்பதும் கேள்விக்குறி.கடந்த சில நாட்களுக்கு முன், இவர் தினமலர் அலுவலகத்தில் செய்திப்பிரிவில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு அடிக்கடி போன் தொடர்பு கொண்டபோது, அதை தினமலர் நிர்வாகம் கண்டுபிடித்து “சைபர் கிரைம்’ போலீசார் விசாரித்த பின்பே இவ்வளவு மலிவாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் உமா.

Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationஅதேசமயம் சைபர் கிரைம் போலீசார் உமாவை வெள்ளிக்கிழமை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகுதான் அவர் தினமலருக்கு எதிராக மனு கொடுத்துள்ளார்.ஆனால், தினமலர் நாளிதழைக் களங்கப்படுத்தும் வகையில், ஒரு தனியார் “டிவி’ மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த சில நாளிதழ்கள் “மாஜி நிருபர்’ உமா புகாரை ஒளிபரப்பியும், பிரசுரித்தும் வருவது வேதனை தருகின்றன.

சட்டத்தின் நியாயவழிப்படி உமா புகாரை சந்தித்து பொய் என்று நிரூபிக்கவும் தினமலர் தயங்காது. இச் செய்தியை இடை விடாது பரப்பும் ஊடகங்களுக்கும் தினமலர் சார்பில் மறுப்பு அறிக்கை முறைப்படி அனுப்பப்பட்டிருக்கிறது. மறுப்பை அவர்கள் பெற்றுக் கொண்ட பிறகும், அதை ஒளிபரப்பாமல் மீண்டும், மீண்டும் ஒருதரப்புச் செய்தியை ஒளிபரப்பியது அந்த “டிவி’ சானலின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

——————————————————————————————-

பெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை

உமா மீதும் வழக்குப்பதிவு தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு

சென்னை, ஜூலை 19: தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், தினமலர் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உமா (28) என்பவர் சென்னை தினமலர் அலுவலகத்தில் ஏழாண்டுகள் நிருபராக பணியாற்றி, மார்ச் மாதம் அங்கிருந்து விலகி, தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13ம் தேதி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

தினமலரில் பணியாற்றியபோது ஓராண்டு முன் என் செல்போனுக்கு திடீரென்று ஆபாச எஸ்.எம்.எஸ். வந்தது. பின்னர் அது தொடர்கதையானது. இதற்கு தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் காரணம் என்று தெரிந்தது. சக பத்திரிகையாளர்களிடம் இதை பலமுறை தெரிவித்தேன். அவர்களால் ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது. குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து அங்கேயே பணியாற்றினேன். தொல்லை அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்தேன்.

அதன்பின்னர், என் மீதும் குடும்பத்தினர் மீதும் கஞ்சா வழக்கு போடப்படும், கொலை செய்யப்படுவீர்கள் என்று மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. நான் மனநிலை சரியில்லாதவள் என்றும் ரமேஷ் தரப்பில் கேலி செய்தனர். இதுபற்றி மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தினமலர்தான் பொறுப்பு என்றும் அதில் கூறியிருந்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மருத்துவமனையில் பணியாற்றுகிறேன். எனக்கு சைபர் கிரைம் போலீசார் மூலம் தொந்தரவு கொடுக்கின்றனர்.

இவ்வாறு புகாரில் உமா கூறியிருந்தார்.

இந்தப் புகார் மீது நேற்றுவரை வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது. நேற்று திடீரென்று தினமலர் நிர்வாகி ரமேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507 (மிரட்டுதல்), 509 (ஆபாசமாக பேசுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சைபர் கிரைம் போலீசில் தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், உமா மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507, 508 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டு சிறை:

தினமலர நிர்வாகி ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.
இ.பி.கோ. 507 என்ற பிரிவில், 3 மாத சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், 509 என்ற பிரிவில், 100 ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.

——————————————————————————————-

முன் ஜாமீன் கேட்டு ரமேஷ் மனு

செக்ஸ் தொல்லை கொடுப்பதாக உமா கொடுத்த புகாரை ஏற்று, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

————————————————————————————————-

ஆபாச எஸ்.எம்.எஸ். கொடுத்து பாலியல் தொல்லை வழக்கு

காவல் நிலையத்தில் தினமலர் ரமேஷ் கையெழுத்திட வேண்டும்

முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு இதே நிபந்தனையுடன் உமாவுக்கும் முன்ஜாமீன்

சென்னை, ஜூலை 21: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ§க்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் பெற்ற பிறகு அவர், தொடர்ந்து 3 நாட்களுக்கு அடையாறு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.

தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரில் உமாவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி, செக்ஸ் தொல்லை தந்ததாக போலீசில் முன்னாள் பெண் நிருபர் உமா புகார் கொடுத்தார். அதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல், தினமலர் பெண் ஊழியர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதாக உமா மீது தினமலர் தரப்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் உமா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இப்புகார்கள் தொடர்பாக ரமேஷ், உமா இருவரும் தனித்தனியாக முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ரமேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி ரகுபதி முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, Ôஉமாவுடன், ரமேஷ் சமரசம் செய்து கொள்ள தயாரா?Õ என்று கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக ரமேஷிடம் ஆலோசித்து பதிலளிப்பதாக அவரது வக்கீல் கோபிநாத் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரமேஷ் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவும், உமாவின் முன்ஜாமீன் மனுவும் நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம் வருமாறு:

நீதிபதி: உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்திற்கு சென்று சமரசம் செய்து கொள்ள தயாரா என்று நேற்று கேட்டேன். அதுபற்றி உங்கள் பதில் என்ன?

தினமலர் ரமேஷின் வக்கீல் கோபிநாத்: இத்தகைய வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்று கருதுகிறோம். சமரசத்துக்கு நாங்கள் தயாராக இல்லை. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

நீதிபதி (உமா வக்கீலை பார்த்து): உங்கள் வாதம் என்ன?

உமாவின் வக்கீல் சுதா ராமலிங்கம்: தினமலர் அலுவலகத்தில் நிருபராக 2001ம் ஆண்டு முதல் ஏழாண்டுகள் உமா பணியாற்றி உள்ளார். அப்போது, தினமலர் நிர்வாகி ரமேஷ் அவருக்கு ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். அதனால் உமா வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் ரமேஷ் தரப்பிலிருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன.

இப்போது அவர் தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி, தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், உமாவை விசாரித்துக் கொண்டு அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அடையாறு போலீசார் வந்துள்ளனர். அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் சில தொலைபேசி எண்கள் குறித்து எழுத்துபூர்வமாக தகவல் தருமாறு கேட்டுள்ளனர்.

பின்னர் விசாரணைக்காக அடையாறு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு உமாவை அழைத்துள்ளனர். பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு உமா மற்றும் அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள எஸ்டிடி பூத்தில் பணியாற்றும் மல்லிகா என்ற பெண்ணும், அவரது தாயாரும் அடையாறு போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு உமாவிடம் போலீசார் எந்த விசாரணையும் செய்யாமல், வேண்டுமென்றே காக்க வைத்திருந்தனர். இரவு 10 மணி அளவில் துணை கமிஷனர் சேஷசாயி வந்த பிறகு தான், உமாவை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளார். உமாவை போலீசார் அலைக்கழித்ததற்கு காரணம் தினமலர் நிர்வாகத்தின் தூண்டுதல் தான். அவர்கள் உமா மீது பொய்யான புகார் கொடுத்திருக்கிறார்கள். எனவே உமாவுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

வக்கீல் கோபிநாத்: அவர்கள் புகாரில் கூறியிருப்பது பொய். அதை ஏற்க கூடாது.
நீதிபதி: இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தார்களா?

வக்கீல் சுதா ராமலிங்கம்: எங்களை மட்டும் தான் விசாரணைக்கு அழைத்தனர்.
வக்கீல் கோபிநாத்: நாங்கள் விசாரணைக்கு செல்லவில்லை. புகார் மட்டும் தான் கொடுத்தோம்.

நீதிபதி: நீங்கள் புகார் கொடுத்ததும் போலீசாரை வற்புறுத்தியிருப்பீர்கள். அதனால்தான் போலீசார் அவர்களை மட்டும் அழைத்து விசாரித்துள்ளார்கள். ஒருபத்திரிகை பெண் நிருபரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் அலைக்கழித்துள்ளனர்.

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா (போலீஸ் தரப்பு): புகார் வந்தவுடன் போலீசார் உமாவை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி: மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் தருகிறேன். ரமேஷ், உமா இருவரும் ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், இரு தனிநபர் ஜாமீனும் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். முன்ஜாமீன் உத்தரவு நகல் பெற்ற உடன், ரமேஷ் சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜார்ஜ்டவுன் 7வது மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து உமா முன்ஜாமீன் பெற வேண்டும். அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு ஆஜராகி தொடர்ந்து 3 நாட்களுக்கு கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறினார்.
————————————————————————————————-

SMS Cellphones Mobile Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani

————————————————————————————————-
பெண் நிருபருக்கு பாலியல் தொல்லை வழக்கு

தினமலர் ரமேசுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது

அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு

சென்னை, ஜூலை 20: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தினமலர் நிர்வாகி ரமேஷ§க்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தியின் மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நிருபர் உமா புகார் கொடுத்தார். இதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

ரமேஷ் தரப்பு மூத்த வக்கீல் கோபிநாத்: சமீபத்தில் தினமலர் அலுவலகத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்தன. பேசிய பெண், அங்கு சுருக்கெழுத்தாளராக பணியாற்றும் பெண்ணை மிரட்டியிருக்கிறார். விசாரணையில், அந்தப் பெண் தினமலரில் நிருபராக பணியாற்றி ராஜினாமா செய்த உமா என்பது தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தோம். விசாரணைக்காக உமாவை போலீசார் அழைத்தனர். இதையடுத்து, ரமேஷ் மீது உமா புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 507, 509 ஆகியவை ஜாமீனில் விடக் கூடிய குற்றம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் 4 வது பிரிவின் கீழும் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவு. இருந்தாலும், உமா கொடுத்தது பொய் புகார் என்பதால் ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

நீதிபதி: சட்டப் பிரிவு 4க்கு என்ன தண்டனை என்று கூறப்பட்டுள்ளது?
வக்கீல் கோபிநாத்: குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம்.
நீதிபதி: பெண் நிருபரை எப்போது மிரட்டியதாக புகார் கூறியுள்ளார்?

வக்கீல் கோபிநாத்: 7 ஆண்டுகள் அவர் பணியில் இருக்கும்போது ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், ராஜினாமா செய்த பிறகும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருக்கிறார். அது உண்மை என்றால் முன்பே புகார் கொடுத்திருக்க வேண்டும்.

அவர் மீது தினமலர் புகார் கொடுத்த பிறகுதான், போட்டிக்கு ரமேஷ் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே, ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: தினமலரில் பணியாற்றிய போது, ரமேஷ் 11 செல்போன் நம்பர்களை பயன்படுத்தி தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார்; பணியை விட்டு சென்ற பிறகும் அவரையும் அவர் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாகவும், உயிருடன் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டினார் என்று உமா கூறியுள்ளார். ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை நடந்துவருகிறது. எனவே ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.
நீதிபதி: நெருப்பு இல்லாமல் புகையாது. இருவருமே திருமணம் ஆனவர்களா?

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: உமாவுக்கு திருமணமாகி விட்டது.

வக்கீல் கோபிநாத்: ரமேஷ§க்கும் திருமணமாகி விட்டது.

நீதிபதி: இருவருமே திருமணமானவர்கள். போட்டி போட்டு புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்துக்கு சென்று சமரசம் செய்து கொள்ளலாமே? இது பற்றி மனுதாரர் ரமேஷிடம் கருத்து கேட்டு கூறுங்கள். விசாரணையை நாளை தள்ளி வைக்கிறேன்.

இவ்வாறு வாதம் நடந்தது.
————————————————————————————————-

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

———————————————————————————————-
தினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்

தினமலர் நிர்வாகிகளில் ஒருவரான அந்துமணி ரமேஷ் மீது, முன்னாள் நிருபர் உமா பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். சைதாப்பேட்டை கோர்ட்டில் 2 நபர் ஜாமீன் பெற்று, விசாரணை அதிகாரி முன்பு 3 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த செய்திகளை எல்லாம், பெரிது பெரிதாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், எப்படியாவது கோர்ட்டில் ஆஜராகும் படத்தை எடுத்து பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்று தனது நிருபர்கள் நான்கு பேரை நியமித்திருந்தது. அவர்களுடம் சன் டி.வி. படக்குழுவினரும் கோர்ட்டில் கூடியிருந்தனர். வேறு எந்த பத்திரிகை நிருபர்களும் வரவில்லை.

ஆனால் அந்துமணி ரமேஷ் கோர்டுக்கு வரவே இல்லை. தினகரன் நிருபர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கீதா முன்பு ஆஜராகி கையெழுத்திட்டு சென்று விட்டார்.

இது எப்படி சாத்தியமானது. உயர் நீதி மன்றம் தீர்ப்பு கூறிய மறுநாளே, நீதிபதியை அனுகி, நீதி மன்றம் செல்லாமல் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக அனுமதி கேட்டுள்ளனர். அவரும் ஒப்புக் கொள்ளவே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டதாக தெரிகிறது.

இதன் அடிப்படையில் விசாரணை அதிகாரியிடம் நேரடியாக ஆஜராகிவிட்டார், அந்துமணி ரமேஷ். இதுதெரியாத தினகரன், அவருக்காக கோர்ட்டில் காத்திருப்பது வேடிக்கை

————————————————————————————————–

Posted in Agenda, Allegation, Andhumani, Andumani, Anthumani, Bathmavathi, Bathmavathy, Blackmail, Broadcast, CEO, Challenged, channel, Claim, Compensation, Courts, Dailythanthi, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dhinakaran, Dhinamalar, Dhinathanthi, Dinagaran, Dinakaran, Dinamalar, Disabled, DMK, Editor, Email, Ethics, Female, Feminism, Freedom, Harass, Harassment, HR, Images, imbroglio, Jokes, journalism, journalist, Justice, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Krishnamurthy, Law, Lawsuit, lens mama, Letter, Liberation, Mag, magazine, Management, Manipulation, Maran, MD, Media, Mental, MLA, Mogul, MSM, network, News, Order, paparazzi, Paprazzi, Pathmavathi, Pathmavathy, pension, Photos, Physical, Pictures, Police, Porn, Press, Process, Ramesh, Reference, Reporter, responsibility, Scam, Schizo, Schizophrenia, schizophrenic, Settlement, Sex, Sexual, SMS, Strategy, Sun, SunTV, tactics, Tamil, Thinagaran, Thinakaran, Thinamalar, Thinathanthi, TN, Torture, TV, Vaaramalar, Varamalar, Varamalara, Women, Work, Workplace | 41 Comments »

Arcot Veerasamy criticises Madras HC judges – ‘Judges want to rule Tamil Nadu’

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

முதல்வரை விமர்சிக்க நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை: ஆர்க்காடு வீராசாமி கடும் தாக்கு

சென்னை, பிப். 5: தமிழ்நாட்டையே ஆள வேண்டும் என்று நீதிபதிகள் நினைப்பது சரியல்ல. முதல்வரை விமர்சிக்க நீதிபதிகளுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கடுமையாக விமர்சித்தார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் தபேதார் ஏழுமலை இல்ல திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:

நீதிபதிகள் எல்லாம் ஏதோ ஆகாயத்திலிருந்து குதித்தவர்களைப் போல் சில பேர் நடந்து கொள்கிறார்கள். நான் எந்த நீதிபதியையும் பற்றி குறிப்பிட்டு குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்கின்றது. அந்த எல்லையோடு அவர்கள் நிற்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விமர்சிப்பதற்கு, அரசாங்கத்தைப் பற்றி தேவையில்லாமல் விமர்சித்து யோசனை கேட்பதற்கு சட்டப்படி அதிகாரம் கிடையாது.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிக அதிகாரம் பெற்றவர்கள் என்று நான் எண்ணவில்லை.

ஓமலூர் பள்ளி விவகாரம் தொடர்பாக மக்கள் முறையிட்டதன் காரணமாக ஒரு விசாரணை கமிஷன் அமைக்க முதல்வர் உத்தரவிடுகிறார். அதற்கு அந்த நீதிபதி என்ன சொல்கிறார், எப்படி நீதிபதிகளைக் கேட்காமல் ஒரு கமிஷனை அமைக்கலாம் என்று கேட்கிறார். முதலமைச்சரின் அதிகாரத்தை எல்லாம் நீதிபதிகள் எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? முதலமைச்சருக்கு இல்லாத பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளதா? முதல்வர் அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றமோ சட்டப்படி உள்ள விதிமுறைகளின்படி தீர்ப்புகள் வழங்க வேண்டும். அதைவிடுத்து தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பார்களேயானால் அது சரியல்ல என்றார் ஆர்க்காடு வீராசாமி.
நீதிமன்றம் கட்டைபஞ்சாயத்தாக ஆகிவிடக் கூடாது: அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி

சென்னை, பிப். 5: நீதிமன்றங்கள் கட்டைப் பஞ்சாயத்துக்களாக ஆகிவிடக் கூடாது என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கடுமையாக விமர்சித்தார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் தபேதார் ஏழுமலையின் இல்ல திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:

நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கக் கூடிய உரிமை நமக்கு இருக்கிறது. அவர்களைத் தனிப்பட்ட முறையில் குறை கூறக் கூடாதே தவிர, தீர்ப்புகளைப் பற்றி விமர்சிக்கலாம்.

சென்னை மாநகராட்சித் தேர்தலை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்தார்கள். அந்தத் தீர்ப்பில் ஒரு நீதிபதி, இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. தேர்தல் நடந்து முடிந்துவிட்ட காரணத்தால் மொத்தத்தில் தேர்தலை விசாரிப்பது என்பது தவறு என்று சொன்னார். மற்றொரு நீதிபதியான இப்ராஹிம் கலிபுல்லா, 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சொன்னார். 99 வார்டுகளில் என்னென்ன தவறுகள் நடைபெற்றன என்று ஒவ்வொரு வார்டுக்கும் அவர் காரணம் எழுத வேண்டும். ஆனால் அவர் அப்படி காரணங்களை எழுதினாரா என்றால் இல்லை. அவர் மொத்தத்தில் என்ன சொல்கிறார் என்றால் பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்த்து இந்த 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிடுவதாகக் கூறினார்.

பத்திரிகைளில் வருகின்ற செய்திகளின் அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்பு கொடுக்கக் கூடாது என்று 21 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. ஆனால் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் 99 வார்டுகளில் மறு தேர்தல் என்று சொல்லியிருக்கிறார். அது முடிவான தீர்ப்பா என்றால்- இல்லை. இரண்டு நீதிபதிகள் இரண்டு விதமான தீர்ப்பு அளித்தனர். இருப்பினும் முதல்வர் கருணாநிதி ஜனநாயகத்தைப் பெரிதும் மதித்து, 99 கவுன்சிலர்களையும் ராஜிநாமா செய்ய சொல்லிவிட்டு நாங்கள் தேர்தலைச் சந்திக்கிறோம் என்று சொன்னார்.

இந்த நிலையில், இந்த தேர்தல் ஆணையர் தேர்தலை நடத்தக் கூடாது. அவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக வழக்கு போட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி, இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தடை விதிக்க எனக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையரை மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட்டு, அரசாங்க வழக்கறிஞர் கலிபுல்லாவை பார்த்து, தேர்தல் பார்வையாளர்களை நியமிப்பதற்கு அரசு ஒத்துக்கொள்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறுகிறார்.

சட்டம் என்ன சொல்கிறதோ, அந்த சட்டத்தின்படி நீதிபதி நடக்க வேண்டுமே தவிர நீதிபதியே, இந்தத் தேர்தலுக்கு தடை விதிக்க எனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு, தமிழக அரசிடம் என்ன யோசனை கேட்பது? சமரச உடன்பாடு என்ன காண்பது எனக்குள்ள கவலையெல்லாம் நீதிமன்றங்கள் கட்டைப் பஞ்சாயத்துக்களாக ஆகிவிடக் கூடாது என்பதுதான்.

இப்படி நீதி மன்றங்கள் தமிழகத்திலே தொடர்ந்து செயல்படுமேயானால் மக்களுக்கு நீதிமன்றங்களின் மீதுள்ள நம்பிக்கை போய்விடும் என்ற நிலை தான் ஏற்படும். அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்றார் ஆர்க்காடு வீராசாமி.


ீதித்துறையை ‘அவமதிக்கும்’ வகையிலான அமைச்சரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகம்
நீதித்துறை அவமதிப்பு?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சமீபத்தில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய விமர்சன கருத்துக்கள், நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டில் அரசியல்வாதிகள் தலையிடுவதை காட்டுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர்.

பெரும்பாலான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர். அதேசமயம் அரசு வழக்கறிஞர்கள் வழக்கம்போல் நீதிமன்றத்தில் வாதாட வந்தனர். ஆனால், வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் ஊர்வலமும் கண்டன கோஷங்களும் நீதிமன்றங் களின் செயல்படுகளை பெருமளவு ஸ்தம்பிக்கச்செய்தது. இதையும் மீறி சில நீதிமன்றங்களில் இன்று காலை வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. ஆனால் அங்கும் கூட மதியத்திற்குள் வழக்கறிஞர்களின் புறக்கணிப்பு காரணமாக விசாரணைகள் நடக்கவில்லை.

அதிமுக வழக்கறிஞர் அணியைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது அவர்களுக்கும் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் இடையில் மோதல்
சூழல் ஏற்பட்டு பின்னர் நிலைமை தணிந்ததாக
காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத்தை போலவே, சென்னையின் சைதாப்பேட்டை,
எழும்பூர்,ஜார்ஜ்டவுன் நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள்
நீதிமன்றங்களை புறக்கணித்தனர். தமிழகத்தின் மாவட்ட அளவிலான நீதிமன்றங்களிள் நீதிமன்ற புறக்கணிப்பு விடயத்தில் தி.மு.க. அ.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கிடையே வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநராட்சிக்கான உள்ளாட்சித்தேர்தலில் நடந்ததாகக்
கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இருவேறு வழக்குகளில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு குறித்து தெரிவித்திருந்த கருத்துக்களை எதிர்த்தும், கடுமையாக விமர்சித்தும் ஆற்காடு வீராசாமி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதே மேடையில் பேசிய முதல்வர் மு கருணாநிதியும் இதை மறைமுகமாக ஆமோதிக்கும் விதத்தில் பேசியிருந்தார்.
இது நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.


Posted in Arcot Veerasamy, Chennai, Courts, Crow, electricity minister, Government, HC, High Court, Judge, Judges, Judiciary, Jury, Justice, Law, legal, M Karunanidhi, Madras, Manipulation, Minister, N Veerasamy, Omalur, Order, outburst, Power, Quote, Tamil Nadu, TN, treasurer, Veerachami, Veerasami, Veerasamy | 1 Comment »