Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Manager’ Category

PCB insists it was a heart attack, but rumours give murder spin to Woolmer case

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப்உல்மர் சாவில் மர்மம் நீடிப்பு

கிங்ஸ்டன், மார்ச். 19-

உலககோப்பை போட்டி யில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்ததன் மூலம் பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இது பாகிஸ்தான் அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. கேப்டன் இன்சமாமும், பயிற்சியாளர் பாப்உல்மரும் வேதனையுடன் காணப் பட்டனர்.

இரவு அனைவரும் தூங்க சென்றனர். பாப்உல்மர் அவரது அறையில் தனியாக தங்கினார். அங்கு அவர் வாந்தி எடுத்த நிலையில் தரையில் மயங்கி கிடந்தார். முக்கில் ரத்தம் வடிந்தது. உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தோல்வியுடன் வேதனையில் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் பாப்உல்மர் மரணம் அடைந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் சாவு இயற்கையானதா? அல்லது வேறு காரணமாக இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அணி தோற்றால் முழு பொறுப்பும் பயிற்சியாளர் தலையில்தான் விழும். எனவே மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அணி இந்தியா வந்த போது பாகிஸ்தான் வீரர் அக்தர், பாப்உல்மரை தாக்கியதாக புகார் எழுந்தது. அதே போல நேற்று பாப் உல்மருக்கும் வீரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வீரர்கள் அவரை தாக்கி இருக்கலாம். இது மரணத்தில் முடிந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு அவருக்கு ஏற்கனவே இருந்த நோய்தான் காரணமாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் நாசிம் அஷரப் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:- பாப் உல்மர் தனது உடல் நிலை குறித்து என்னிடம் கூறிஇருந்தார். அவர் நீரழிவு நோயுடன் பல்வேறு உடல் உபாதை நோயினாலும் அவதிபட்டு வந்தார். தூங்கும் போது மூச்சுவிடுவதில் பிரச்சினை இருந்தது. எனவே முகத்தில் துணியை கட்டி தூங்கும் பழக்கத்தை வைத்து இருந்தார். எனவே இது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம்.

அவரது மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பால்உல்மர் உடல் ஐமைக்கா வில் உள்ள கிங்ஸ்டன் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. மரணத் திற்கான இறுதியான காரணம் குறித்து இன்னும் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. நீரழிவு மற்றும் மூச்சுதிணறல் காரண மாக இறந்து இருக்கலாம் என்று மட்டும் டாக்டர்கள் கூறினார்கள்.

எனவே உண்மையான காரணத்தை முழுமையாக கண்டறிய இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்புதான் உண்மை தெரியும்.

பாப்உல்மருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் இருக்கிறார். அவர் ஜமைக்காவுக்கு புறப்பட்டுள்ளார். அவரிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. மனைவி தரப்பில் இருந்தும் தகவல் எதுவும் வரவில்லை. அவரை வந்து பார்த்த பிறகு ஏதாவது கருத்து கூற வாய்ப்பு உள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு பாகிஸ்தான் அதிபர் முஷரப், பிரதமர் சவுகத் அஜீஷ் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அவருடன் அடிக்கடி மோதிக்கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் அக்தரும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “பாப்உல்மர் என்னை மகன் போல் பாவித்தார் அணிக்காக தீவிரமாக உழைத்தார்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறும்போது, தோல்விக்கு பால்உல்மர் பொறுக்கு ஏற்க முடியாது. கேப்டன்தான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் மோசமாக ஆடியதன் மூலம் பால்உல்மரை கொன்று விட்டனர்” என்றார்.

வீரர்கள் அனைவரும் ஓட்டல் அறைக்கு திரும்பிய பிறகு ஏதோ ஒரு சம்பவம் நடந்து உள்ளது. அது என்ன என்பது மர்மமாக உள்ளது.

===============================================

தோல்வி விரக்தியால் ஊல்மர் தற்கொலை?: கிரிக்கெட் உலகமே துயரத்தில் மூழ்கியது

கராச்சி, மார்ச் 20: ஜமைக்காவில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் ஊல்மர் திடீரென உயிரிழந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“”அவருடைய மரணம் சந்தேகத்துக்குரியது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்” என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கராச்சியில் திங்கள்கிழமை வெளியான “ஜேங்’ பத்திரிகை, “ஊல்மர் தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும்’ என்று மே.இ.தீவுகளின் கிங்ஸ்டனில் உள்ள தங்கள் பத்திரிகையின் செய்தியாளர்கள் கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

“”இருப்பினும் இவ்விஷயம் தொடர்பாக இப்போதே எந்தவித முடிவுக்கும் வர முடியாது. விசாரணைகள் ஆரம்பக் கட்ட நிலையிலேயே உள்ளன” என்று பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

துக்கத்தில் பாக். அணியினர்: ஊல்மரின் மரணம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஒரு குடும்ப உறுப்பினர் போல் ஊல்மர் தங்களுடன் பழகிவந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

“”வீரர்கள் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி ஆட்டத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியவில்லை என்றால் அதற்கு பயிற்சியாளர் காரணமில்லை. அவர் மீது குறைகூற முடியாது” என டிவி சேனல் ஒன்றிடம் பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

“டான்’, “நியூஸ்’ போன்ற பத்திரிகைகள் ஊல்மரின் மறைவுக்கும், பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்துக்கும் முடிச்சுப் போட்டு செய்திகளை வெளியிட்டன.

“விரக்தி அடைந்த உல்மர் சாவைத் தழுவினார்’ என்று “டான்’ பத்திரிகையும், “அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னர் ஊல்மர் மரணம்’ என்று “நியூஸ்’ பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளன.

பாக். அணியின் தோல்விக்கு காரணமானவர்கள் என முக்கிய பொறுப்பில் உள்ள பலரையும் குறிப்பிட்டு சில பத்திரிகைகள் தலையங்கமே வெளியிட்டன.

பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் அஷ்ரபின் பெயரும் நிந்தனைக்கு உள்ளாகியுள்ளது.

ஊல்மரின் திடீர் மறைவு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகையே துயரத்தில் ஆழ்த்தியது.

பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப், பிரதமர் ஷெüகத் அஜீஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஊல்மர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

உலக கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்களும் ஊல்மர் மறைவால் பெரிதும் துயரமடைவதாக தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் மைதானத்தில் ஊல்மர் பயிற்சி அளித்த காட்சிகளை திங்கள்கிழமை பல டிவி சேனல்களும் தொடர்ந்து ஒளிபரப்பின.

Posted in Assassination, Casino, Coach, Cricket, Cronje, diabetes, Gambling, Games, ICC, insulin, Inzamam, Inzi, Ireland, Loss, Manager, Match fixing, medical, Murder, Pakistan, Poison, SA, South Africa, Stroke, Suicide, Trainer, WC2007, Woolmer, World Cup | Leave a Comment »

‘Vyabaari’ song picturisation rumors – SJ Surya’s predatory moves against Malavika?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா மீது நடிகை மாளவிகாவின் புதிய `செக்ஸ்’ புகார்கள்

கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா இடையில் வாய்ப்பின்றி இருந்தார். வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடல் மீண்டும் பிரபலப்படுத்தியது.

“திருட்டு பயலே” படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியது. தற்போது நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார். கூடவே சர்ச்சைகளும் மாளவிகாவை துரத்துகிறது.

தெலுங்கு நடிகர் ராஜேந்திரபிரசாத் மீது ஏற்கனவே செக்ஸ் புகார் கூறினார். ஒரே போர்வைக்குள் இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு காட்சி எடுத்தனர். அப்போது ராஜேந்திரபிரசாத் சில்மிஷம் செய்தார். மாளவிகா ஆத்திரத்தில் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வெளியேறினார். நடிகர் சங்கத்திலும் புகார் செய்தார். இந்த சம்பவம் தெலுங்கு தமிழ் படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் சபரி பட தயாரிப்பாளர் சேலம் ஏ. சந்திரசேகரன் சம்பளம் பாக்கி வைத்திருப்பதாகவும் அதை வசூலித்து தரும்படியும் நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். மாளவிகா சூட்டிங்குக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை கேட்டு அடம் பிடித்தார் என்றும் இவரால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தயாரிப்பாளர் குறைபட்டார்.

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா பாடல் காட்சியில் மாளவிகாவிடம் சில்மிஷம் செய்ததாக புகார் கிளம்பியுள்ளது.

ஷக்தி சிதம்பரம் இயக்கும் வியாபாரி படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். இப்படத்துக்கான பாடல் காட்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரள ஹவுசில் படமாக்கப்பட்டது.

மாளவிகாவுக்கு கொசு கடிக்கும். உடனே அவர் கொசு கடிக்குது கொசு கடிக்குது என்று பாட ஆரம்பிப்பார். அவருடன் எஸ்.ஜே.சூர்யாவும் சேர்ந்து பாடுவார். தேவா இசையில் கவிஞர் வாலி இப்பாடலை எழுதியுள்ளார்.

பாடல் காட்சியில் மாளவிகாவிடம் நெருக்கமாக நடித்தபோது எஸ்.ஜே.சூர்யா கை விரல்கள் மாளவிகா உடலில் தப்புதப்பாக ஊர்ந்ததாம். இதனால் கடுப்பான மாளவிகா படக்குழுவினர் முன்னிலையிலேயே எஸ்.ஜே.சூர்யாவை கன்னா பின்னா வென்று திட்டினாராம். எஸ்.ஜே. சூர்யா மன்னிப்பு கேட்டாராம்.

மாளவிகா வருகிற 18-ந்தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார். அப்போது பரபரப்பான தகவல்களை வெளியிடுவார் என்று தெரிகிறது.

இதற்கிடையில் மாளவிகா மானேஜர் முனுசாமி கூறுகையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மாளவிகாவுக்கும் மோதல் இல்லை என்றும் சுமூக உறவு உள்ளது என்றும் தெரிவித்தார். எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக பேட்டி எதுவும் கொடுக்கவில்லை என்றும் மறுத்தார்.

Posted in Allegations, Deva, ECR, Gossip, Malaiviga, Malavika, Manager, Molest, Munusami, Rumour, Scandal, Sex, Shakthi Chidhambaram, SJ Soorya, SJ Surya, Tamil Actor, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Vaali, Viyabaari, Vyaabari | Leave a Comment »

Samuels accused of liaison with bookmaker – Underworld rivalry in cricket betting

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

தாவூத் இப்ராகிம் கூட்டாளியிடம் சூதாட்டம்: சாமுவேல்ஸ் லஞ்சம் வாங்கினாரா?

நாக்பூர், பிப்.8-

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே நாக்பூரில் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்று இருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சாமுவேல்சிடம் நாக்பூர் போட்டிக்கு முந்தைய இரவில் தாவூத் இப்ராகிம் கூட்டாளியும், சூதாட்டக்காரருமான முகேஷ் கொச்சார் டெலிபோனில் பேசியது அம்பலமாகி உள்ளது.

முகேஷ் கொச்சார்- சாமுவேல்ஸ் இடையே நடந்த டெலிபோன் உரையாடலை நாக்பூர் போலீசார் டேப் செய்து உள்ளனர். பேட்டிங் வரிசை, பந்து வீச்சு வரிசை உள்பட பல்வேறு தகவல்களை சூதாட்டக்காரரிடம் சாமுவேல்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக நாக்பூர் போலீஸ் உதவி கமிஷனர் அமிதேஷ்குமார் கூறியதாவது:-

அணியில் இடம் பெறும் வீரர்கள், யார் யார் பந்து வீசுவார்கள் உள்பட பல விவரங்களை சாமுவேல்ஸ் சூதாட்டக்காரர் முகேஷ் கொச்சரிடம் பேசியதை டேப் செய்துள்ளோம். இது மேட்ச் பிக்சிங் (வெற்றி-தோல்வி நிர்ணயம்) அல்ல. அணியின் நம்பிக்கைக்குரிய சில விஷயங்கள் பரிமாறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சூதாட்டக்காரரிடம் சாமுவேல்ஸ் பணம் வாங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துணை போலீஸ் கமிஷனர் கூறும் போது இருவருக்கும் இடையே பணம் ஒப்பந்தம் நடந்ததா என்ற விவரம் இல்லை என்றார்.

சாமுவேல்ஸ் சூதாட்டக்காரருடன் தொடர்பு வைத்திருப்பது தொடர்பான அறிக்கை தங்களுக்கு வந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஆகியவை இன்று தெரிவித்தன.

இது தொடர்பாக சாமுவேல் சிடம் கேட்டபோது முகேஷ் கொச்சாரை எனக்கு தெரியும். ஆனால் அவர் சூதாட்டக்காரர் என்பது தெரியாது என்றார்.

இந்த தகவல் அறிந்ததும் சாமுவேல்ஸ் தாயார் லூனன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தன்னால் இதை நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதே போல இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சந்தீப்பட்டீல், சாந்து போர்டே ஆகியோரும் அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

சூதாட்டக்காரரிடம் தொடர்பு கொண்டதன் மூலம் சாமுவேல்ஸ் ஐ.சி.சி. நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். விரைவில் அவரிடம் ஐ.சி.சி. விசாரணை நடத்தும். இதற் காக அவருக்கு சில போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்படலாம்.

நாக்பூர் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 3 விக் கெட்டுக்கு 338 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 324 ரன் எடுத்தது. இதனால் 14 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது.

இந்த ஆட்டத்தில் சாமுவேல்ஸ் 10 ஓவர் வீசி 53 ரன் விட்டுக்கொடுத்தார். விக்கெட் கைப்பற்றவில்லை. பேட்டிங் கில் 60 பந்துகளில் 40 ரன் எடுத்தார்.

கிரிக்கெட் சூதாட்டத்துக்கு ஆதாரம் கிடைக்கவில்லை: விசாரணையை கைவிட முடிவு

மும்பை, பிப்.11-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் இந்திய கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் முகேஷ் கோச்சாருடன் டெலிபோனில் ரகசியமாக பேசியதால் சூதாட் டம் நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதுபற்றி நாக்பூர் போலீசில் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் பேசிய டெலிபோன் உரையாடலில் சூதாட்டம் நடந்ததற்கான எந்த தகவலும் இல்லை. விளையாட்டை பற்றியும், வீரர்களை பற்றியும் விவாதித்த வார்த்தைகள் தான் இடம் பெற்று உள்ளன. இதை வைத்து சூதாட்டம் நடந்ததாக தீர்மானிக்க முடியவில்லை.

பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி னார்கள். ஆனாலும் எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. யாரும் இது சம்பந்தமாக புகாரும் கொடுக்கவில்லை. எனவே மேற்கொண்டு விசார ணையை தொடராமல் இந்த பிரச்சினையை கைவிட போலீசார் முடிவு செய்துள்ள னர்.

இந்த பிரச்சினை குறித்து ஏற்கனவே கிரிக்கெட் சங்கத் திடம் தெரிவித்து விட்டனர். எனவே அவர்களும் விசார ணையை தொடங்கி உள்ளனர். இதனால் போலீசார் விசா ரணை தேவை இல்லை என் றும் கருதுகிறார்கள்.

உலக கோப்பை போட்டி தொடங்க போகிற நேரத்தில் பிரச்சினையை கிளப்பினால் அது வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், மராட்டிய போலீசார் மவுனம் காக்க முடிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட் சூதாட்டம்: ராபின்சிங்- சாமுவேல்ஸ் ரகசிய தொடர்பா?

சென்னை, பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த 3 தொடரில் முதல் போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்ட ஏஜெண்டாக செயல் பட்டவர் சுரேஷ் கோச்சார். இவர் போட்டி நடப்பதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமு வேல்ஸ்சிடம் பலமுறை டெலிபோனில் பேசி உள்ளார்.

அப்போது மைதானங்கள் நிலைமை எந்தெந்த வீரர்கள் எந்த வரிசைப்படி இறங்குவார்கள். வெஸ்ட் இண்டீஸ் என்ன திட்டங்களை வைத்துள்ளது போன்ற விவரங்களை எல்லாம் கூறி இருக்கிறார். இதையடுத்து கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சாமுவேல்ஸ் – முகேஷ் கோச்சார் இருவருக்கும் இடையே இடம் பெற்ற உரையாடலில் பல தடவை ராபின்சிங் என்ற பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் குறிப்பிட்ட ராபின்சிங் யார்ப என்று தெரியவில்லை. ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர் ராபின்சிங்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி ராபின்சிங்கிடம் கேட்டபோது எனக்கும் சாமுவேல்ஸ்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சூதாட்டத்தில் எனக்கு பங்கும் இல்லை என்று கூறினார்.

கிïபா நாட்டில் புதிதாக கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயிற்சியாளராக ராபின்சிங் நியமிக்கப்பட்டு இருந்தார். இதற்காக கிïபா சென்றிருந்த அவர் நேற்று தான் சென்னை திரும்பி இருக்கிறார்.

ஆனால் ராபின்சிங்குக்கும் சாமுவேல்ஸ்க்கும் ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ராபின்சிங் சென்னையில் வசித்தாலும் அவர் வெஸ்ட் இண்டீசில் தான் பிறந்தார். இந்தியாவில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்ற ஏராளமான குடும்பங்கள் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வசிக்கின்றன.

அதில் ராபின்சிங் குடும்ப மும் ஒன்று. இடையில் அவர்கள் குடும்பம் சென்னை வந்து விட்டது. இப்போதும் ராபின்சிங்கின் உறவினர்கள், நண்பர்கள் அங்கு வசிக்கின்றனர்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் ராபின்சிங்குக்கும் தொடர்பு இருக்கலாம். இதில் சாமு வேலுடன் அவர் ரகசிய தொடர்பு வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மராட்டிய போலீசார் சூதாட்டம் நடந்ததாப என்று தீவிர விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் ராபின்சிங்கிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உண்மை வெளிச் சத்துக்கு வரும்.

சூதாட்ட தரகரை சந்திக்க 4 நாட்கள் ஓட்டலில் காத்திருந்த சாமுவேல்ஸ்: போலீசார் தகவல்

நாக்பூர், பிப். 10-

நாக்பூரில் கடந்த மாதம் 21-ந்தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாவூத் இப்ராகிம் கூட்டாளியும், சூதாட்ட தரகருமான முகேஷ் கோச்சர் போனில் தொடர்பு கொண்டு சாமுவேல்சிடம் பேசியதை போலீசார் டேப் செய்துள்ளனர்.

இதில் அவர் அணியின் நிலவரம் குறித்த பல்வேறு தகவல்களை பரிமாறி இருக்கிறார். சாமுவேல்ஸ் தங்கி இருந்த பிரைட் ஓட்டலில் 206 நம்பர் அறையில் தனது மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு 3 முறை பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட சாமுவேல்ஸ் லஞ்சமாக பணம் வாங்கினாரா? என்ற ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நாக்பூர் போலீஸ் கமிஷனர் யாதவ் கூறும்போது, பண பரிவர்த்தனை நடந்ததா என்பது பற்றி விசாரிக்க நாங்கள் அமலாக்க பிரிவினருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் பண பரிவர்த்தனை நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது என்றார்.

இதற்கிடையே சாமுவேல்ஸ் பற்றி புதிய தகவல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் அனைவரும் புறப்பட்ட நேரத்தில் அவர் செல்லவில்லை. சில நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்த பிறகே சென்று உள்ளார்.

மும்பையில் உள்ள ஹியத் ரிஜன்சி ஓட்டலில் சூதாட்ட தரகர் முகேஷ் கோச்சரை சந்திக்க 4 நாட்கள் காத்திருந்தார்.

ஆனால் அவரை சந்திக்க சூதாட்ட தரகர் வரவில்லை. சாமுவேல்ஸ் தான் போனில் பேசியதை போலீசார் டேப் செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக அவரை சந்திப்பதை முகேஷ் கோச்சர் தவிர்த்தார் என்று நாக்பூர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு வருகிற 12-ந் தேதி நாக்பூர் வருகிறது. சாமுவேல்ஸ் தங்கி இருந்த ஓட்டலில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை செய்வார்கள்.

சாமுவேல்ஸ் பெட்டிங்கில் ஈடுபட்டாரா அல்லது மேட்ச் பிக்சிங்கில் (வெற்றி- தோல்வி நிர்ணயம்) ஈடுபட்டாரா என்பது தெரியவில்லை. இதுவரை அவருக்கு சாதகமாக இருந்த வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தற்போது விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர் பாக அந்த வாரியத்தின் செய்தி தொடர்பாளர் மோரிடெயல் கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வரைமுறைக்கு உட்பட்டு விசாரணை நடைபெறும். வீரர்கள் சங்கத்தில் அவர் உறுப்பினராக உள்ளார். இதனால் விசாரணை உள்மட்டத்தில்தான் இருக்கும். கிரிக்கெட் வாரிய கமிட்டிதான் இந்த விசாரணையை மேற்கொள்ளும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு சாமுவேல்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் கெய்லேவுக்கும் தொடர்பு: நேரில் விசாரிக்க ஐ.சி.சி.குழு வருகிறது

நாக்பூர் பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் உஷார் அடைந்துள்ளது.

இது தொடர்பாக நாக்பூர் போலீசார் இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பிய புகாரை அவர்கள் சரவதேச கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பினார்கள். எனவே இது தொடர்பான விசாரணையை சர்வதேச கிரிக்கெட் சங்கம் உடனடியாக தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக ஆலோ சனை நடத்த அவசர கூட்டம் இன்று துபாயில் நடக்கிறது. அதில் எந்த முறையில் விசாரணை நடத்தலாம் என்று முடிவு எடுக்க உள்ளனர்.

இந்தியா வந்து நேரில் விசாரிப்பதற்காக ஒரு குழு வையும் அமைக்க உள்ளனர். சூதாட்டம் நடத்திருப்பது தெரிந்தால் வீரர்களுக்கு உடனடியாக தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

சூதாட்டத்தில் சாமுவேலுடன் தமிழக வீரர் ராபின் சிங்குக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லே மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய சுற்றுப் பயணம் முடிந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் கடந்த 1-ந்தேதி நாடு திரும்பி விட்டார்கள். ஆனால் சாமுவேல்ஸ் 4-ந்தேதி வரை மும்பையிலேயே இருந்தார். அவருடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லேவும் சாமு வேலுடன் மும்பையிலேயே தங்கி இருந்தார். எனவே அவருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இருவரும் சூதாட்டக்காரர்கள் கொடுத்த விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

எனவே சாமுவேல்ஸ், கெய்லே இருவரும் மும்பையில் தங்கியிருந்த போது என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர் என்பது பற்றி விரிவாக விசாரிக்க உள்ளனர். அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் செல்லும் நேரடியாக வீரர்களிடம் விசாரிக்க திட்டமிட்டு உள்ளது.

கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது எப்படி?

கிரிக்கெட் என்ற மந்திரச் சொல்லுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கட்டுப்பட்டு, அதே சிந்தனையில் மயங்கி கிடக்கிறார்கள். இந்த விளையாட்டில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது.

மற்ற நாடுகளை விட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் கிரிக் கெட் பைத்தியமாகவே இருக்கி றார்கள். எனவே மற்ற விளை யாட்டுகளை விட கிரிக்கெட் போட்டிகளுக்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு கிரிக்கெட் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் மறைமுகமாக `பெட்டிங்’ வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

இரண்டு அணிகளின் வெற்றி தோல்வியை முன்ன தாகவே முடிவு செய்வது `மேட்ச் பிக்சிங்’. இது நடை பெறுவது அபூர்வம். மிகப் பெரிய சூதாட்டக்காரர்கள் இரு அணி கேப்டன்களுடன் தொடர்பு கொண்டு பேசி முடிவு செய்தால் தான் இது சாத்தியமாகும். இந்த பிரச்சினையில் சிக்கியதால்தான் இந்திய அணி யின் முன்னாள் கேப்டன் அசாருதீன், தென்னாப் பிரிக்க அணி முன்னாள் கேப்டன் ஆன்சி குரோனே ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்திய அணியில் விளையாடிய அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, தற்போது `மேட்ச் பிக்சிங்’ நடக்க வாய்ப்பில்லை.

ஆனால் `பெட்டிங்’ ஒவ்வொரு முக்கிய போட்டிக்கும் நடந்து வருகிறது. போட்டியின் அந்தரங்கம் சூதாட்டம் ஆக்கப்பட்டு அதற்காக பணம் கட்டப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் பணம் கொடுக்கப்படுகிறது. இதிலும் கோடிக்கணக்கான பணம் புரளுகிறது. இதற்காக முக்கிய நகரங்கள் அனைத்திலும் `பெட்டிங் சென்டர்’கள் மறை முகமாக செயல்பட்டு வரு கின்றன. `கம்ப்ïட்டர்’ மூலம் இந்த சூதாட்டம் நடக்கிறது.

ஒரு கிரிக்கெட் அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற விவரம் கொண்ட 11 பேர் அணி போட்டி தொடங்குவதற்கு முன்புதான் அறிவிக்கப்படும். இது குறித்தும் `பெட்’ கட்டப்படுகிறது.

இது போல `டாஸ்’ ஜெயித்தால் எந்த அணி `பேட்டிங்’ செய்யும், எந்த அணி பந்து வீசும்ப யார் யார் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள்? யார் யார் அதிக `ரன்’ எடுப்பார்கள்? யார் அதிக விக்கெட் எடுப்பார்? என்பது போன்ற விவரங்களை சரியாக சொன்னால் பல மடங்கு பணம் கிடைக்கும். இந்த `பெட்டிங்’ சூதாட்டத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சூதாட்டத்தில் பங்கேற்பவர்கள் சரியாக கணித்து சொல்லாவிட்டால் சூதாட்டம் நடத்துவோருக்கு கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும். சூதாட்ட ஏஜண்டுகளும் லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும்.

எனவே `பெட்டிங்’ சூதாட்டம் நடத்துபவர்களும், அவர்களுடைய ஏஜெண்டுகளும் கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு கொண்டு அணியின் விïகம், களம் இறங்கும் வீரர்களின் வரிசை போன்றவற்றை தெரிந்து கொள்வார்கள்.

வீரர்களிடம் பேசி, தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி கூறுவார்கள். இதற்கு உடன்படும் வீரர்களுக்கு பெரும் தொகை சன்மானமாக கொடுக்கப்படும். எனவே, ஒருசில கிரிக்கெட் வீரர்கள் சூதாட்ட ஏஜெண்டுகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் மறைமுகமாக வைத்திருக்கும் தொடர்பு, அவர்களையும் அறியாமல் வெளியே கசிந்துவிடுகிறது. போன் மூலம் பேசுவது, முக்கிய இடங்களில் ஏஜெண்டுகளை சந்திப்பது போன்றவை ரகசிய ஏஜெண்டுகளுடன் வைத்தி ருக்கும் தொடர்பை வெளிச்சம்போட்டு காட்டி விடுகின்றன.

மேற்கிந்திய அணி வீரர் சாமுவேல்ஸ் நாக்பூரில் நடந்த போட்டியின் போது பிரபல கிரிக்கெட் சூதாட்டக்காரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி முகேஷ் கொச்சார் என்ற சூதாட்ட புரோக்கரிடம் 4 முறை பேசி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சு, சாமுவேல்ஸ் எப்போது பந்து வீசுவார் என்பது பற்றியும் கூறி இருக்கிறார். நள்ளிரவிலும் ஏஜெண்டிடம் பேசியுள்ளார். இதன் மூலம் சாமுவேல்ஸ்க்கு பெருந்தொகை கிடைத் திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கும் சாமுவேல்ஸ் சுடன் டெலிபோனில் பேசியுள்ளார். இவருடைய பங்கு என்ன என்பதும் புதிராக உள்ளது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்.

சாமுவேல்ஸ்- ஏஜெண்டு டெலிபோன் உரையாடல்

வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்- முகேஷ் கோச்சார் இருவரும் டெலிபோனில் என்ன பேசினார்கள் என்பதில் சிலவரிகள் வெளியே கசிந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

சாமுவேல்ஸ்:- பிட்ச்சை பார்த்து விட்டுதான் காலையில் பேட் செய்வதா? என்று முடிவு செய்வார்கள்.

முகேஷ்:- மாலையில் என்றால் நீங்கள் கடைசியில்தான் இறங்குவீர்களா?

சாமுவேல்ஸ்:- கடைசிக்கு கொஞ்சம் முந்தி இறங்குவேன்.

முகேஷ்:- யார் பேட் செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

சாமுவேல்ஸ்:- தெரியும்.

முகேஷ்:- யார்- யார்?

சாமுவேல்ஸ்:- டேவன் அவரைதான் நாளை ஆட அனுப்புவார்கள்.

முகேஷ்:- புது பேட்ஸ்மேனா? அல்லது பந்து வீச்சாளரா?

சாமுவேல்ஸ்:- இல்லை. அவர் ஆல் ரவுண்டர்.

முகேஷ்:- அவர் சிறப்பாக ஆடுவாரா?

சாமுவேல்ஸ்:- ஆமாம், அதற்காகத்தான் இறக்குகிறோம்.

முகேஷ்:- ஓகோ எனக்கு எல்லாம் புரிகிறது. கிறிஸ் பார்மில் இருக்கிறார்.

ராபின்சிங் பற்றி நாங்கள் பேச வில்லை: சூதாட்ட ஏஜெண்டு மறுப்பு

மும்பை, பிப். 9-

சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள ஏஜண்டு முகேஷ் கோச்சார் வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்யிடம் பேசியதை ஒத்துக் கொண்டுள்ளார். சாமுவேல்ஸ் எனது நீண்ட கால நண்பர் என்ற முறையில் அவரிடம் பேசினேன் என்று கூறியுள்ளார்.

இருவரும் ராபின்சிங் பற்றி பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே ராபின் சிங்குக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் முகேஷ் கோச்சார், “நாங்கள் இருவரும் ராபின்சிங் பெயரை உச்சரிக்கவில்லை” என்று கூறினார்.

நாக்பூர் போலீசார் இது குறித்து விரிவான விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி போலீஸ் கமிஷனர் எஸ்.பி.எஸ். யாதவ் கூறும்போது, “இதுவரை நடந்த விசாரணையில் மேட்ச்பிக் சிங் நடந்ததை கண்டுபிடிக்கவில்லை. இந்த உரையாடல் மூலமாக சூதாட்டம் நடந்தததா? என்றும் தெரியவில்லை” என்றார்.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் லாராவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் இப்போது லண்டனில் இருக்கிறேன். எனவே முழு விவரமும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி கேள்விபட்டதும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்திடம் பேச முயன்றேன். முடியவில்லை. சாமுவேலிடமும் பேச முயற்சித்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. சாமுவேஸ்யிடம் பேசி முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

சாமுவேலை பொறுத்தவரை எனக்கும் மற்ற வீரர்களுக்கும் மிகவும் உதவியாக இருந்தார். உலக கோப்பை போட்டிக்கு அவர் எங்களுக்கு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டில் இருந்து இந்திய சூதாட்ட காரர்களை இயக்கிய தாவூத் இப்ராகிம்

மும்பை, பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் ஒரு நாள் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. போட்டி நடப்பதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்சும், கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் முகேஷ் கோச்சார் ஆகியோரும் டெலிபோனில் ரகசியமாக பேசி உள்ளனர். எனவே சூதாட்டம் நடந்திருக்கலாம் என கருதி விசாரணை நடந்து வருகிறது.

புரோக்கர் முகேஷ் கோக்சாருக்கும் மும்பை குண்டு வெடிப்பு தாதாவான தாவூத் இப்ராகிமுக்கும், நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அவன்தான் முகேஷ் கோச்சாரை இயக்கி உள்ளார்.

தாவூத் இப்ராகிம் வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்தே இந்திய சூதாட்ட புரோக்கர்களை இயக்கி உள்ளான்.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே 2005-ம் ஆண்டு ஷோபன் மேத்தா என்பவரை கைது செய்தனர். அவர் தாவூத் இப்ராகிம் கிரிக்கெட் சூதாட்டகாரர்களை எப்படி இயக்குகிறான் என்ற விவரங்களை விரிவாக கூறி இருந்தான்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாÖமுவேல்ஸ்சுக்கும், முகேஷ் கோச்சாருக்கும் தொடர்பு இருந்த விவரத்தையும் அப்போதே ஷோபன் மேத்தா மும்பை போலீசில் கூறி இருந்தார்.

தாவூத் இப்ராகிம்- ஷோபன் மேத்தா இருவரும் முன்பு சூதாட்ட தொழிலில் எதிரெதிர் திசையில் இருந்தனர். 1999 சார்ஜா கோப்பை போட்டி நடந்தபோது ஷோபன் மேத்தா சூழ்ச்சியால் தாவூத் இப்ராகிம் ரூ.17 கோடியை சூதாட்டத்தில் இழந்தான்.

எனவே தாவூத் இப்ராகிம் ஷோபன் மேத்தா இந்தியாவில் உள்ள சூதாட்ட புரோக்கர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். இவர்களை அனைவரையும் நிர்வாகிப்பதற்காக ஷரத் ஷெட்டி என்பவனை நியமித்தான்.

முகேஷ் கோச்சாரும் தாவூத்தின் கீழ் இயங்கும் புரோக்கர்களில் ஒருவர் ஆனார். கிரிக்கெட் சூதாட்டத்தின் போது ஒவ்வொரு `பெட்’டுக்கும் தகுந்த மாதிரி புள்ளிகளை நிர்ணயம் செய்வது உண்டு. அதை தாவூத் இப்ராகிம்தான் வெளிநாட்டில் இருந்து நிர்ணயம் செய்வான். அதன் பின்னர் இணைய தளம் மூலம் சூதாட்ட பரிமாற்றங்கள் நடைபெறும்.

Posted in Abu Salem, Antiguay, Azhar, Azharuddin, Bahamas, Barbados, BCCI, betting, bookie, bookmaker, Chennai, Coach, Connections, Corruption, Cricket, Cuba, Dawood Ibrahim, Don, Enforcement, Gaekwad, Gamble, gang, Gavaskar, Hansie Cronje, ICC, India, Jadeja, Kapil Dev, kickbacks, Law, Madras, Manager, Manoj Prabhakar, Marlon Samuel, Match fixing, Mukesh Kocchar, Mumbai, Nagpur, ODI, One day, One Day International, Operations, Order, phone, Police, revenge, rivalry, Robin Singh, Samuels, Shobhan Mehta, Test Match, Trinidad & Tobago, Underworld, Wadekar, West Indies | Leave a Comment »