வாத்தியார் படகதை திருட்டு: போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் புகார்
வடபழனி அழகர்பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது33). இவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது
டைரக்டர் ஏ.ஆர்முருகதாசிடம் நான் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளேன். வாத்தியார் படத்தின் கதையை ஏற்கனவே உருவாக்கி விஜய், விக்ரம், சூர்யாவை சந்தித்து சொல்லியுள்ளேன். தற்போது அந்த கதை படமாக வெளிவந்துள்ளது. எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.