Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Malayalam’ Category

Amrutha Publications: Interview with Prabhu Thilak on Chennai Book Fair 2008

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

முகங்கள்: படித்தது மருத்துவம் பிடித்தது புத்தகம்!

அவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர். தற்போது சேலம் வினாயக மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்தியல்துறையில் எம்.டி.படிக்கும் மாணவர். ஆனால் அவர் புத்தகங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். அம்ருதா பதிப்பகம் என்கிற பெயரில் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபுதிலக்.

அவர் காவல்துறை உயர் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதியின் மகன்.

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான புத்தக வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்…

“”நான் படித்தது மருத்துவம் என்றாலும் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். காரணம் எங்கள் வீட்டு கிச்சன் முதல் பெட்ரூம் வரை புத்தகங்கள் எப்போதும் இருக்கும். அம்மா ஒரு பெரிய இலக்கியவாதி. இந்தச் சூழலில் வளர்ந்த எனக்குப் புத்தகங்களின் மேல் எப்போதும் விருப்பம் அதிகம்.

அம்ருதா அறக்கட்டளையின் சார்பாக இந்தப் பதிப்பகத்தை 2005 இல் ஆரம்பித்தோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.

ஏற்கனவே நிறையப் பதிப்பகங்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் புத்தகப் பதிப்பில் இறங்கும் போது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.

புத்தக வெளியீடு என்பது இப்போது வியாபாரம் ஆகிவிட்டது. இதற்கு எழுத்தாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன. பதிப்பாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன.

நிறைய எழுத்தாளர்களுக்கு தங்களுடைய புத்தகங்களை வெளியிட நல்ல பதிப்பகம் அமைவதில்லை. தான் எழுதியவை புத்தகமாக வெளிவருமா என்று புத்தகம் வெளியிட வாய்ப்புக் கிடைக்காத எழுத்தாளர்கள் ஏங்கும் நிலை உள்ளது.

அதிலும் கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் முன் வருவதில்லை.

சில பதிப்பகங்கள் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை வெளியிடுகின்றன.

இம்மாதிரியான சூழ்நிலையில் அதிகம் அறிமுகம் ஆகாத எழுத்தாளர் என்றாலும் தரமான படைப்பு என்றால் வெளியிடுகிறோம். உதாரணமாக சேலம் இலா.வின்சென்ட் என்பவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாப்லோ அறிவுக் குயிலின் “குதிரில் உறங்கும் இருள்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாலுசத்யாவின் “காலம் வரைந்த முகம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.

மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அதிலும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். மொழிபெயர்ப்பு நூல்கள் என்றால் முதலில் ரஷ்ய நூல்கள், அமெரிக்க நூல்கள், பிரெஞ்ச் நூல்கள் என்றுதான் மொழிபெயர்த்தார்கள். இப்போது லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அவற்றிற்கு நிகரான இலக்கிய வளம் நமது ஆசிய நாட்டு இலக்கியங்களுக்கு உள்ளது. மிகப்பெரிய அமெரிக்காவைப் போரில் வீழ்த்திய வியட்நாம் அதன் ஆயுத பலத்தால் மட்டுமா வீழ்த்தியது? அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம்? அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா? அந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடத் தீர்மானித்தோம்.

மலையாள இலக்கியவாதி என்றால் பெரும்பாலோருக்கு தகழி சிவசங்கர பிள்ளையைத் தெரியும். வைக்கம் முகம்மது பஷீரைத் தெரியும். பிற எழுத்தாளர்களை அவ்வளவாகத் தெரியாது. பொற்றேகாட், கேசவதேவ், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், சி.ஏ.பாலன் போன்றோரைச் சிலருக்குத்தான் தெரியும்.

பால்சக்கரியாவின் “அன்புள்ள பிலாத்துவுக்கு’ என்ற நாவலை வெளியிட்டோம். நாங்கள் பலருக்கும் தெரியாத பி.சுரேந்திரன் என்ற மலையாள எழுத்தாளரின் “மாயா புராணம்’ என்ற நாவலை வெளியிட்டோம். கோயில் நுழைவுப் போராட்டத்தை மையமாக வைத்து கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலை “பாரதிபுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறோம். தாகூரின் “சிதைந்த கூடு’ நூலை வெளியிட்டிருக்கிறோம்.

எங்கள் பதிப்பக வெளியீடுகள் எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையும் எடுப்பதில்லை. மனித மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்கு உதவும் நூல்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யாரையும் யாரும் காயப்படுத்தக் கூடாது. இவைதான் எங்கள் நோக்கம். விருப்பம்.

நமது மகாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் இல்லாத விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா?

நல்லது கெட்டது, கெட்டதில் உள்ள நல்லது எல்லாம் மகாபாரதத்தில் உண்டு. எல்லாரும் மன்னிக்கும்தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய இதிகாசங்கள் தோன்றின. ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி உள்ளது? கொலை, கொள்ளை, வெறுப்பு, இப்படி ஆரோக்கியமில்லாத சமூகமாகிவிட்டது. அர்த்தமுள்ள பொழுது போக்குகள் இல்லை. இவற்றை மாற்றி நல்ல சமுதாயத்தை அமைக்க விரும்பும் பலர் குதிரைக்குக் கண்பட்டை அணிந்ததுபோல் ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் மனித மேம்பாட்டுக்கு உரிய நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.

அதனால்தான் “கிறிஸ்து மொழிக் குறள்’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம். “நபி(ஸல்) நமக்குச் சொன்னவை’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம்.

“சல்வடார் டாலி’ என்ற பெண்ணியச் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இதில் இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இதில் பெண்ணின் வாழ்வு யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணிய நோக்கில். பெண்ணியம் என்றால், “நீ சிகரெட் பிடித்தால் நான் சிகரெட் பிடிப்பேன்’ “நீ ஜீன்ஸ் போட்டால் நானும் போடுவேன்’ என்கிற மாதிரியான பெண்ணியம் அல்ல. பெண்ணின் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.

விட்டல்ராவ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். இன்றைய எந்த இலக்கியக் குழுவிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அவர் தமிழ்நாட்டின் பல கோட்டைகளுக்கும் நேரில் போய் அந்தக் கோட்டைகளின் வரலாறு, புவியியல், மக்கள் வரலாறு , மக்களின் கலை, கலாச்சாரம் எனப் பலவற்றை ஆராய்ந்து “தமிழகக் கோட்டைகள்’ என்ற நூல் எழுதியுள்ளார். அந்த அருமையான நூலை முக்கியமான பதிப்பகங்கள் வெளியிடத் தயங்கிய சூழ்நிலையில் நாங்கள் அதை வெளியிட்டோம்.

சிறந்த எழுத்தாளர்கள் 18 பேரின் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்து மாணவர் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. அதுவும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் போக்கு அறவேயில்லை. முந்திய தலைமுறையைச் சேர்ந்த எம்.வி.வி., ந.பிச்சமூர்த்தி, தி.ஜ.ர. போன்றவர்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏன் இன்னும் சொல்லப் போனால், ந.பிச்சமூர்த்தியின் இனிஷியல் “ந’ வா? “நா’ வா? என்று கேட்டால் பல இலக்கியவாதிகளே குழம்பினார்கள். எனவே மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூல் வரிசையைக் கொண்டுவந்திருக்கிறோம்.

இன்று மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. பணம் சம்பாதிப்பதே நோக்கமாகக் கொண்ட சமூக மனோபாவம் வந்துவிட்டது. ஆனால் பணம் சம்பாதிப்பது சந்தோஷத்திற்கான வழிகளில் ஒன்று. பணத்தால் வெளியே ஜில்லென்று குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஏஸியை வாங்கிவிடலாம். ஆனால் மனதுக்கு குளிர்ச்சியைப் பணத்தால் ஏற்படுத்த முடியுமா? அது நல்ல இலக்கியங்களாலும், நூல்களாலும்தான் முடியும். அதனால்தான் இந்தப் பதிப்பக முயற்சியில் “அணில் கை மணல் போல’ நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறோம்.

Posted in Amruta, Amrutha, Authors, Books, Chennai, Collections, Culture, Essays, Fiction, History, Kannada, Karnataka, Kerala, Literature, Malayalam, publications, Publishers, Readers, Students, Tagore, Tamil, Thilagavathi, Thilagavathy, Thilakavathi, Thilakavathy, Thinkers, Translations, UR, URA, Writers | Leave a Comment »

‘Uyir’ & ‘Mirugam’ director Sami vs Tamil Actress Padmapriya

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

டைரக்டருக்கு கீழ் பணியாதவர்
“பத்மப்ரியா நல்ல நடிகை-ஆனால் நல்ல குணம் கிடையாது”
டைரக்டர் சாமி சொல்கிறார்


“பத்மப்ரியா நல்ல நடிகை. ஆனால் நல்ல குணம் கிடையாது. டைரக்டருக்கு கீழ் பணியாதவர், அவர்” என்று டைரக்டர் சாமி கூறினார்.

கணவன்-மனைவி கதை

`உயிர்’ படத்தை டைரக்டு செய்தவர், சாமி. மைத்துனரை, அண்ணி காதலிப்பது போலவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது போலவும் கதை அம்சம் உள்ள படம், `உயிர்.’ அந்த படத்தில், காமவெறி பிடித்த அண்ணியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், சங்கீதா.

அந்த படத்தை அடுத்து டைரக்டர் சாமி, `மிருகம்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். கொடூர குணமும், ரவுடித்தனமும் கொண்ட அவர், கொடூர நோயினால் பாதிக்கப்படுவது போலவும், அவருடைய வக்கிரங்களையும், அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு கடைசிவரை கணவருக்கு பணிவிடை செய்யும் பரிதாபத்துக்குரிய மனைவியாக பத்மப்ரியா நடிக்கிறார்.

தகராறு

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பத்மப்ரியா படப்பிடிப்புக்கு தினமும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. கதைக்கு ஏற்ப, டைரக்டர் சாமி சொல்லிக்கொடுத்தபடி பத்மப்ரியா நடிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பொறுமை இழந்த டைரக்டர் சாமி, பத்மப்ரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த பிரச்சினை, பெரும் விவகாரமானது. பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார். மூன்று சங்கங்களும் சேர்ந்து டைரக்டர் சாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

தடை

அப்போது டைரக்டர் சாமி, பத்மப்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார்.

சாமி, புதிய படங்களை டைரக்டு செய்வதற்கு, ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.

`மிருகம்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த படத்தின் பாடல் காட்சிகளையும், `டிரைலரை’யும் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், டைரக்டர் சாமி ஆகிய இருவரும் நிருபர்களுக்கு திரையிட்டு காண்பித்தார்கள்.

அதன்பிறகு டைரக்டர் சாமி `தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“மிருகம் படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படம் திரைக்கு வந்தபின், என் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை தானாகவே விலகிவிடும் என்று நம்புகிறேன். அடுத்து இதே படத்தை நான் தெலுங்கில் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். `மிருகம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவரே, தெலுங்கு படத்திலும் கதாநாயகனாக நடிப்பார்.

கதாநாயகி மாற்றம்

கதாநாயகி மட்டும் மாறுவார். பத்மப்ரியாவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிப்பார். பத்மப்ரியா நல்ல நடிகை என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவரிடம் நல்ல குணம் கிடையாது. டைரக்டரின் `ஸ்கிரிப்ட்’ (திரைக்கதை)க்கு கீழ் பணியாத ஒரு நடிகை.

`மிருகம்’ படத்தின் முதல் பிரதியை, தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் பார்த்துவிட்டு, “இந்த வருடத்தின் சிறந்த படம்” என்று பாராட்டினார். படத்தின் கடைசி மூன்று ரீல்கள் மிரட்டலாக இருக்கும்.”

இவ்வாறு டைரக்டர் சாமி கூறினார்.

Posted in abuse, Action, Actress, AIDS, Allegations, Andhra, AP, Apology, Ban, Callsheet, Cinema, Condemn, Director, Faces, Films, Hero, Heroine, Hit, HIV, Hype, Interview, Investigation, journalism, Kerala, Kisu Kisu, Kisukisu, Malayalam, Media, Mirugam, Mirukam, Mollywood, Movies, News, Padma priya, Padmapriya, Pathma priya, Pathmapriya, people, Product, Promotions, Protest, Reel, release, Reports, Rumor, Rumors, Rumour, Saami, Saamy, Sami, Samy, Sangeetha, Sangitha, Screenplay, Sex, Slap, Sorry, Strike, Telugu, Theater, Theaters, Theatres, Tollywood, Torture, Uyir, video | Leave a Comment »

Achutanandan, Pinarayi Vijayan, CPM politburo, Canadian firm SNC Lavalin & Kerala Marxists Corruption

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

மார்க்சிஸ்ட்டின் போபர்ஸ் இது!

கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியில், மாநில பொதுச்செயலர் பினராயி விஜயனுக்கும், முதல்வர் அச்சுதானந்தனுக்கும் உள்ள பகை, எல்லாருக்கும் தெரிந்தது தான். அச்சுவுக்கு டிக்கட் தராவிட்டால், நானும் நிற்காமல் இருக்கத்தயார் என்று மேலிடத்திடம் சண்டை பிடித்து, வெற்றி கண்டவர். ஆனால், அச்சுவை நிறுத்தினால் தான், ஆட்சியை பிடிக்க முடியும் என்று கட்சியில் பலரும் சொல்லவே, அச்சுவுக்கு “டிக்கட்’ தரப்பட்டு, கடைசியில், அவர் முதல்வராகவும் ஆகிவிட்டார். அப்படியும் விடவில்லை பினராயி. மூணாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவரை சீண்டிய அச்சுவுடன், “தெருச்சண்டை’ பாணியில் சண்டை போட, அவர்கள் இருவரையுமே, நான்கு மாதம் தற்காலிகமாக கட்சிப் பதவியிலிருந்து நீக்கி வைத்தது தலைமை. சமீபத்தில் தான் அதை ரத்து செய்தது.

பினராயிக்கு அதனால் மகிழ்ச்சி ஏற்பட்டதை விட, அச்சுவின் அடுத்த “மூவ்’ தெரிந்தவுடன் பயம் கவ்விக்கொண்டு விட்டது. இந்த முறை, பினராயியை ஒதுக்கி, தன் வழிக்கே வர விடாமல் செய்ய கிடைத்துள்ள ஆயுதம் தான், 400 கோடி ரூபாய் “லாவலின்’ ஊழல் விவகாரம். முன்பு, மார்க்சிஸ்ட் ஆட்சி இருந்தபோது, மின்சார அமைச்சராக இருந்த பினராயி, கனடா நாட்டின் “லாவலின்’ நிறுவனத்திற்கு டெண்டர் அளித்தார். அதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அப்போது புகார் கிளம்பியது. காங்., அரசு வந்தபோது, அதுகுறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொந்தக்கட்சியின் ஆட்சி இருக்கும் நிலையில், பினராயி, இந்த வழக்கில் இருந்து தப்ப முடியும். ஆனால், அச்சுவின் தனிப்பட்ட விரோ தத்தை சம்பாதித்து விட்டதால், அவர் தப்ப வழியில்லாமல் உள்ளது. வழக்கை துõசி தட்டி மீண்டும் சி.பி.ஐ., கையில் எடுத் துள்ளது. எந்த நேரத்திலும், பினராயி உட்பட சிலர் மீது குற்றப்பத் திரிகை தாக்கல் செய் யப்படலாம்.

பினராயி மீதான இந்த ஊழல் குறித்த ஆவணங்களை எல் லாம், கட்சி பொலிட்பீரோவிடம் அளித்துவிட்டார் அச்சு. “லாவலின்’ விவகாரம் பற்றி, கட்சி தேசிய பொதுச்செயலர் பிரகாஷ் கராத், சீதாராம் யெச்சூரி பேசாமல் நழுவி வந்தனர். ஆனால், விரைவில் அவர்கள் இது பற்றி கருத்து சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவர்!

“பழி வாங்கும் குணம், மனிதனுடனே பிறந்தது சரிதான்’ என, அவர்களது கட்சிக்காரர்களே கூறுகின்றனர்.

Posted in Achudhanandan, Achuthanandhan, Achuthananthan, Assets, Bofors, Bribery, Bribes, CBI, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Corruption, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dada, Desabhimani, Desabimani, Don, encroachments, Headquarters, HQ, Investigation, KC(S), Kerala, Kerala State Electricity Board, kickbacks, KSEB, Land, lavalin, Levelin, lottery, mafia, Malayalam, Mallu, Mathrubhoomi, Mathruboomi, Matrubhoomi, Matruboomi, Moonaar, Moonar, Moonaru, Moonnaar, Moonnaaru, Munnaar, Munnaaru, Munnar, Munnaru, Pinarayee, Pinarayi, Politburo, Politics, Santiago, SNC Lavalin, Tehelka, Thalasserry, Thesabhimani, Thesabimani, Vigilance, Vijaian, Vijaiyan, Vijayan | Leave a Comment »

‘Kaalpurush’, ‘Rang De Basanti’ Receive National Film Awards For 2005

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு

புதுடெல்லி, ஆக. 8-

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.


சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.

ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.


 ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007

திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.

இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.


Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »

Coimbatore blasts: Top accused Madani acquitted; Al-Umma founder S A Basha, 72 others convicted

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2007

கோவை குண்டு வெடிப்பு – குற்றவாளிகள் யார்-யார்? தனிக்கோர்ட்டு அறிவிப்பு

கோவை, ஆக. 1-

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அரசு ஆஸ்பத்திரி, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பா.ஜ.க. அலுவலகம், ரெயில் நிலையம், சர்சண்முகம் ரோடு, கனிராவுத்தர் வீதி என கோவை நகரமே குண்டு வெடித்ததில் நிலை குலைந்தது. அடுத்த 2 நாட்களில் மேலும் குண்டு வெடித்தது. இதனால் குண்டு வெடித்த இடங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.

இந்த குண்டு வெடிப்பில் ரூ.18 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்தன. விசாரணையில் அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த வர்கள்தான் குண்டு வைத்தனர் என்று தெரிய வந்தது.

இதையடுத்து அல்-உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சாட்சி யாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது.சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது.

ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 166 பேரில் பாட்சா, மதானி, அன்சாரி உள்பட 65 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களின் மீதான குற்றச்சாட்டு களை வாசித்து யார்-யார் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

பிற்பகலில் 36 பேர் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பை யொட்டி தனிக்கோர்ட்டில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஜெயில் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. நகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

—————————————————————————————————–
மதானி விடுதலை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வரவேற்பு

புதுதில்லி, ஆக. 2: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரமேஷ் சென்னிதலா: மதானி விடுதலை செய்யப்பட்டதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். ஈ.கே. நாயனார் அரசுதான் 1998-ல் மதானியை தமிழக போலீஸôரிடம் ஒப்படைத்தது. இதைத் தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் அது தம்பட்டம் அடித்துக்கொண்டது. இப்போது மதானி குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மக்களிடம் நாயனாரும் அவரது மார்க்சிஸ்ட் கட்சியும் மன்னிப்பு கேட்குமா? கேரளத்தில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் மதானி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு மதானி தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். கோவை சிறையில் மதானிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு எமது அரசின் முயற்சிகளே காரணமாக அமைந்தன என்றார் அவர்.

பாஜக அதிருப்தி

கேரள பாஜக பொதுச் செயலர் எம்.டி. ரமேஷ்: மதானி வழக்கை விசாரித்த தமிழக போலீஸôர், குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ, நிரூபிக்கவோ தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.

“பிரார்த்தனை பலித்துவிட்டது’

கொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து மதானியின் தந்தை டி.ஏ. அப்துல் சமத் தனது மகன் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “”கடவுளுக்கு நன்றி. எனது மகன் குற்றமற்றவன் என்று எங்களுக்குத் தெரியும். எங்களது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்துவிட்டார்,” என்றார்.

மதானியின் சொந்த ஊரான கொல்லத்தில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
———————————————————————————————————————–

5 பேர் மீதான குற்றச்சாட்டு திங்கள்கிழமை தெரியும்

கோவை, ஆக.2: ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சர்புதீன், சிக்கந்தர், மிர் சபீர் அகமது, ஐயப்பன், உபைதுல் ரகுமான் ஆகியோர் மீது அரசு தரப்பில் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால், விசாரணையில் இவர்கள் வேறு குற்றங்களை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு, நிரூபணம் ஆகியுள்ளதா? இல்லையா? என்பது தெரிவிக்கப்படும் என நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

இந்த ஐந்து பேர் மீது சுமத்தப்பட்ட கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
———————————————————————————————————————–
மதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டது. இவை எதுவும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என தனி நீதிமன்றம் அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான அப்துல் நாசர் மதானி, கோவையில் 1997-ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்ப்பதற்காக எஸ்.ஏபாஷாவுடன் தொடர்பு கொண்டார்.

இதற்காக பல முறை தொலைபேசியில் அவர் பாஷாவுடன் பேசி உள்ளார். மேலும் கோவை குண்டு வெடிப்புக்காக ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் ஆர்மி ராஜூ என்பவர் மூலம் அனுப்பி உள்ளார். இதற்காக பாஷா நியமித்த அல்-உம்மாவைச் சேர்ந்த தாஜுதீன் பலமுறை கேரளத்துக்கு சென்று வந்துள்ளார். அவர் மூலம் தான் வெடிபொருள்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் வெடிபொருள்களை சந்தேக பாஷையில், ஆடியோ காஸட், விடியோ காஸட் எனத் தெரிவித்துக் கொண்டனர்.

தற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பாக்ஸ் வெடிகுண்டுகள் கொண்டு வந்ததற்கும் மதானி உதவினார் என்று அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவை தொடர்பாக கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், மதக் கலவரத்தைத் தூண்டுதல் என 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டு இருந்தது. இதை விசாரித்த தனி நீதிமன்றம் மதானி மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என அறிவித்தது.

வெடிபொருள்களை அல்-உம்மாவினருக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்மி ராஜூ, குண்டு வெடிப்புக்கு உதவியதாக வழக்கில் சேர்க்கப்பட்ட முகமது அஸ்ரப், சுபேர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் மூவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

———————————————————————————————————————–

சிறு குற்றம் மட்டுமே நிரூபணம்: 84 பேர் விடுதலை?

கோவை, ஆக.2: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 153 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், மதக் கலவரத்தைத் தூண்டுதல் ஆகியன முக்கியக் குற்றச்சாட்டுகள்.

இவற்றில், கூட்டுச் சதி, கலவரத்தைத் தூண்டுதல் போன்றவை 84 பேர் மீது நிரூபிக்கப்படவில்லை.

இவர்கள் மீதான பிற குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் தண்டனை 10 ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.

இந்நிலையில், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம், 9 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் கழிக்கப்படும் என்பதால், இந்த 84 பேரும் விடுதலை செய்யப்படுவர்.

எனவே, இவர்கள் உடனடியாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடக்கும். அப்போது, இவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

அவர்கள் விவரம்:

சம்சுதீன், அபுதாகீர், ஜாபர் அலி, விடியோ ரபி, சயத் (எ) பக்ரூதின், அப்பாஸ் (எ) சின்ன அப்பாஸ், யாகூப், புஷ் (எ) அபுதாகீர், சுருட்டை முடி அப்பாஸ், யாகூப் கான் (எ) பர்கத், ஹக்கிம் (எ) காஜா, சம்ஜித் அகமது, அசிபுல்லா, அப்துல் நயீன், பாவா, காஜா ஹூசைன், முத்தலிப், சயத் ஹரூன், ஜபருல்லா, முகமது ரசூல், முகமது ரபீக், அமானுல்லா.

யூசப் ஹூசைன், புஷ்பராஜ், அப்துல் ரஹீம், வெள்ளை அபாஸ், அன்வர் பாட்ஷா, அப்துல் காதர், சிக்கந்தர் பாஷா, கிச்சன் (எ) புகாரி, சப்பை பாபு, அம்மான், வெல்டிங் சிக்கந்தர், வெல்டிங் அபுசலி, அப்துல் சலீம், உமர், சதீசன், சம்சுதீன், பஷீர் அகமது, அப்துல் ரகுமான், அப்துல் அஜீஸ், அகமது பஷீர், சித்திக் அலி.

கே.கே.நகர் கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டோர்: இலியாஸ், அப்துல்லா, ஜெ.அப்பாஸ், நவாப்ஜான், எச்.இஸ்மாயில், எம்.சாதிக் பாட்ஷா, பாபு (எ) முகமது ரபீக், அன்சார் பாட்ஷா, இப்ராகிம், எச்.அப்துல் சலாம், எம்.அப்துல் சுக்கூர், காதர், ஜம்ஷா, அப்பாஸ், ஹாசின், பர்கரத், ஜாபர், எம்.பஷீர், அப்துல் சர்தார், எம்.பாட்ஷா, சாதிக்பாட்ஷா, அபுதாகீர், ஜாபர், அக்பர் பாட்ஷா, அஸ்ரப் அலி, கலந்தக் பாட்ஷா, ஜெ.சயத் அபுதாகீர், முஸ்தபா, முகமது அலி, அப்பாஸ் அலி, ஏ.அக்பர், முகமது பிலால், சீராஜுதீன், லியாகத் அலி, அபுபக்கர் சித்திக், நசீர் (எ) ஆட்டோ நசீர்.

———————————————————————————————————————–

பலத்த பாதுகாப்பில் தனி நீதிமன்றம்

கோவை, ஆக. 2: தனி நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவிநாசி சாலை – எல்ஐசி சந்திப்பு முதல் டாக்டர் நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பு வரை சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சிறைக்கு அருகில் உள்ள வஉசி பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலை ஆகியனவும் மூடப்பட்டு இருந்தன.

தனி நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச் சாலையில் போலீஸôர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்றம் அமைந்துள்ள சிறை வளாகத்தைச் சுற்றிலும் காமிரா பொருத்திய போலீஸ் வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

காலை 8 மணியில் இருந்தே பாதுகாப்பு பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணிக்கு நீதிமன்றப் பணிகள் தொடங்கின.

கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.கே.காந்திராஜன், துணை ஆணையர் சுகுமாரன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டனர்.

காலை 9.15 முதல் பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9.40-க்கு தனி நீதிமன்ற நீதிபதி போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.10-க்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வந்தனர். நீதிமன்ற வாசலில் அவர்களைச் சோதனையிட்ட போலீஸôர், செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீஸ் -வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர், செல்போன் எடுத்துச் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10.30-க்கு நீதிமன்ற வாயிலுக்கு வந்த ஆணையர் காந்திராஜன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

காலை 10.45-க்கு சிபிசிஐடி ஏடிஜிபி நரேந்திர பால் சிங் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.50-க்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மதானியின் வழக்கறிஞர்களில் ஒருவரான அக்பர் அலி, மதானியின் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. அவர் விடுதலையாவது உறுதி என செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பகல் 1.30 மணிக்குள் 102 பேர் மீதான குற்றச்சாட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணிக்குள் எஞ்சியவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் அறிவிக்கப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கு செய்திகளைச் சேகரிப்பதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை நீதிமன்றம் அருகே நிறுத்தியிருந்தன. உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என 200 பேர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தனர்.

———————————————————————————————————————–

69 பேருக்கு கடும் தண்டனை?

கோவை, ஆக.2: கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 69 பேர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 167 பேர் மீதான குற்றச்சாட்டில், 69 பேர் மீதுதான் கூட்டுச் சதி நிரூபிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தின் முக்கிய நபர்களாக இவர்கள் மட்டுமே கருதப்படுகின்றனர்.

எனவே, இவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர்கள் விவரம்:

எஸ்.ஏ.பாஷா, முகமது அன்சாரி, தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி (பாஷா-வின் மகன்), ஊம்பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ், சபூர் ரகுமான், கீழக்கரை அப்பாஸ், ஜப்ரூ, கத்திக்குத்து இஸ்மாயில், அம்ஜத் அலி, அமானுல்லா, சுருட்டை முடி ஜமீஸô, மக்கான் ஷாஜகான், பல் நாசர், ஹைடெக் அமானுல்லா, ஜகாங்கீர், முத்தப்பா, சர்புதீன், எல்.எம்.ஹக்கிம், அபுதாகீர், முகமது ரபீக். ஒசீர் பாஷா, அடிபட்ட பாபு, எம்.ஹக்கிம், என்.எஸ்.ஹக்கிம், முன்னப்பா, அஸ்ரப், குண்டு ரசாக், முகமது அஸôம், சையத் முகமது, ரியாஷ் அகமது, அபுதாகீர், கண்சிமிட்டி ரபீக், அப்துல் ரவூப், பெல்ட் இப்ராகிம், அப்துல் ரகுமான், யாகூப், வளர்ந்த சலீம், அப்துல் கரீம், சாக்கு பரூக், சர்தாஜ், சலாவுதீன், ஷெரீப், முகமது சபீ, ரபீக், நெல்லிசேரி அப்துல் பஷீர், காஜாஹுசைன், தடா மூசா, யூசப், ஹக்கிம், முகமது சுபேர், தடா புகாரி, இதயத் அலிகான், பக்ருதீன் அலி அகமது, முஜிபுர் ரகுமான், சாகுல் அமீது, முகமது அலி, முஜிபுர் ரகுமான்.

இவர்களில், 38 பேர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

———————————————————————————————————————–

“கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பாழாய் போன 120 பி முடிவுக்கு வந்தது’

கோவை, ஆக.2: “பாழாய் போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவை கருணாநிதி நகரில் நடந்த கலவரம் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கூட்டுச் சதியும் (120 பி) சுமத்தப்பட்டது.

இதனால், இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க இப்பிரிவில் தொடரப்பட்ட வழக்குதான் காரணம். “இது முடிவுக்கு வந்தால் தான் நீங்கள் விடுதலை ஆகமுடியும்’ என நீதிமன்ற விசாரணையின் போது இவர்களிடம் நீதிபதி தெரிவித்துவந்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதா? என்பதைத் தெரிவிக்க இவர்களை அழைத்த நீதிபதி, “உங்கள் மீதான பாழாய்போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ எனக் கூறினார்.

———————————————————————————————————————–

பாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

கோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.

மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:

முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.

அப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.

நெüசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம்.

குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.

———————————————————————————————————————–

கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது: மதானி

கோவை, ஆக.2: கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது என அப்துல் நாசர் மதானி தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மதானி, கோவை சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூறியது:

கோவை குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. கடவுள் அருளால் நியாயம் கிடைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க சட்ட உதவிகளைச் செய்வேன். என்னை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளது, அவரது கருத்து. இதற்கு பதில் கூற விரும்பவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துள்ளேன். தமிழக உணவை உட்கொண்டு, தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்து இருந்துள்ளேன். தமிழக- கேரள நல்லுறவுக்குத் தொடர்ந்து பாடுபடுவேன். இரு மாநிலத்துக்கும் இடையே தூதுவனாகச் செயல்படுவேன். எனது, அரசியல் நிலை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன் என்றார்.

———————————————————————————————————————–

மதானிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு மனைவி தகவல்

கோவை, ஆக.2-
வழக்கில் விடுதலையான எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம் என்று மதானியின் மனைவி கூறினார்.

தனிகோர்ட்டு தீர்ப்பு

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்தார். வழக்கின் தீர்ப்பை கேட்க கோவை குண்டு வெடிப்பு சிறப்பு கோர்ட்டு அருகே உள்ள கிரே டவுன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதானியின் மனைவி ஷோபியா, அவருடைய மகன்கள் உமர்முக்தர் (வயது 13), சலாவூதீன் (வயது 10) மற்றும் உறவினர்கள் தங்கி இருந்தனர்.

இது குறித்து மதானியின் மனைவி ஷோபியா நிருபர்களிடம் கூறியதாவது:-

நிம்மதி அளிக்கிறது

எந்த ஒரு தவறும் செய்யாமல் என்னுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இப்போது நீதி கிடைத்து உள்ளது. அவர் கைது செய்யும் முன்பு 90 கிலோ இருந்தார். சிறையில் அடைக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது 48 கிலோவாக உள்ளார்.

அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. நிரபராதி என்று 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. அவருடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்தோம். கடவுள் கருணையால் இந்த நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.

சிகிச்சைக்கு ஏற்பாடு

அவர் நிரபராதி என்பது 9 ஆண்டுக்கு பிறகு தான் கோர்ட்டு மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதலில் அவரை நல்ல ஒரு டாக்டரிடம் காண்பிக்க உள்ளோம். அவருக்கு பொருத்தி உள்ள செயற்கை காலை அகற்றி விட்டு மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். அவர் விடுதலைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதானியின் குழந்தைகள் இது குறித்து கூறுகையில், எங்கள் தந்தை கைதாகும் போது நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தோம். இனி அவருடன் விளையாடி மகிழ்வோம் என்றனர்.
———————————————————————————————————————–

ஜாமீனா? விடுதலையா?

கோவை, ஆக.7: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்புரிந்தவர்கள் விவரத்தை தனி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அரசுத் தரப்பும், எதிர்த் தரப்பும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.

தீர்ப்பை இரு கட்டங்களாக அறிவிப்பது புதிய நடைமுறை என்கிறது எதிர்த்தரப்பு. குற்றவாளிகள் தங்கள் தரப்பை கூறுவதற்கு இரு கட்டங்களாகத் தீர்ப்பு அளிப்பது கூடுதல் வாய்ப்பு என அரசுத் தரப்பு கூறுகிறது.

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 158 பேரில் 89 பேர் சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, இவர்கள் சிறையில் இருந்த காலத்தை விடக் குறைவு. எனவே, இவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை விட, விடுதலை செய்யலாம் என்பது எதிர்த் தரப்பின் வாதம்.

சிறு குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பதோடு, அவர்கள் மீது தொடரப்பட்ட சட்டப் பிரிவுக்கு ஏற்ப அபராதமும் விதிக்க முடியும். அபராதத்தை நேரடியாக செலுத்த வேண்டும். இதற்காக, சிறை தண்டனை அனுபவிக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கலாம்.

பல குற்றவாளிகளால் அபராதம் செலுத்த முடியாமல் போகலாம். அப்போது, தண்டனை விதிக்கப்படும் முன்பாக, தனது நிலையை விளக்குவதன் மூலம், அபராதத்தை குறைக்க நிதீமன்றத்தில் முறையிடலாம். இந்நிலையில், சிறு குற்றம் புரிந்தவர்களை தண்டனை அளிப்பதற்கு முன்பே விடுதலை செய்ய முடியாது என்பது அரசுத் தரப்பின் பதில்.

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில், விடுதலை செய்யாமல், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். குற்றமே இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை, ஜாமீன் பெற அவர் விரும்பவில்லை என்றால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் சிறையில் அடைக்கப்படுவாரா? என்பது எதிர்த் தரப்பின் மற்றொரு கருத்து.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குவது போல, குற்றச்சாட்டு உறுதி செய்யப்படாதவர்களுக்கு விடுதலை அளிக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர் விடுதலை பெறுவர்.

இந்த சட்டநடைமுறை நிறைவேறும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் ஜாமீனில் தான் செல்ல வேண்டும் எனக் கூறுகிறது அரசுத் தரப்பு.

மேலும், இதற்கு முன்பெல்லாம் தீர்ப்பளிக்கும்போது, இந்த சட்டப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், உங்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவிப்பார்.

ஆனால், தற்போது இந்நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. தண்டனை அளிப்பதற்கு முன், நீங்கள் குற்றம் செய்துள்ளது இந்த சட்டப் பிரிவில் நீரூபிக்கப்பட்டு உள்ளது என முதலில் அறிவித்துவிட்டு, அதற்குப் பின் எதிர்த் தரப்பு மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தண்டனை வழங்குவது புதிய நடைமுறை.

இதன்மூலம், குற்றவாளிகளுக்குத் தண்டனை பற்றி தங்கள் கருத்தைக் கூற கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அரசுத் தரப்பு கருத்தை எதிர்த் தரப்பு முழுமையாக மறுக்கிறது. குற்றவாளி எனச் சொல்லிவிட்டால், அதற்கான தண்டனையை ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ சொல்லிவிடலாம். ஆனால், இங்கு காலம் நீட்டிக்கப்படுகிறது.

இரு தரப்பு கருத்துகளைக் கூற வாய்ப்பு என்பதும் ஏற்புடையதல்ல. சாட்சிகள் விசாரணையின் போதும், இரு தரப்பின் வாதத்தின்போதும் முன்வைத்த வாதங்களைத் தவிர புதிதாக எதையும் தற்போது கூற முடியாது.

மேலும், இந்த சட்டப் பிரிவில் குற்றவாளி எனக் கூறும்போது, அதற்கான காரணத்தையும், அடிப்படையையும் தெரிவிக்க வேண்டும்.

கிரிமினல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதுதான். இந்நிலையில், அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்கின்றனர் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள்.
———————————————————————————————————————–

கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பு – BBC

 

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்

ஒலி

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரம் செய்வதற்காக அப்போது தமிழகத்தின் கோவை நகருக்கு வந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல் கே அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் ஆகஸ்டு மாதம் ஒன்றாம் தேதி வழங்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நசார் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.

பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த தகவல்களை இப்பகுதியில் கேட்கலாம்

Posted in 1997, 1998, Abdul Nasser Madani, acquit, Advani, Al-Umma, AlUmma, Ansari, Arms, Assassination, Baasha, Baatcha, Baatchaa, Basha, Bharatiya Janata Party, BJP, Blast, Blasts, Bombs, Campaign, case, CBI, chairman, Coimbatore, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Congress, consipiracy, constable, Convict, conviction, Courts, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dead, Extremism, Extremists, founder, Guilty, Hindu, Hinduism, Hindutva, Investigation, ISI, Islam, Judge, Justice, Kerala, Kovai, L K Advani, Law, Leader, LK Advani, Madaani, Madani, Madhani, Malayalam, minority, Mogammad, Mohammad, Mohammed, Mohammed Ansari, Muhammad, Murder, Muslim, Order, PDP, People's Democratic Party, policeman, RAW, Religion, retaliation, RSS, SA Basha, Selvaraj, Serial, SIT, Terrorism, Terrorists, THIRUVANANTHAPURAM, Trivandrum, Weapons | Leave a Comment »

Meera Jasmine gets married in Thirupathy?

Posted by Snapjudge மேல் ஜூலை 25, 2007

நடிகை மீரா ஜாஸ்மின் காதல் திருமணம்- திருப்பதியில் ரகசியமாக நடந்தது

சென்னை, ஜுலை.25-

கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர், மீரா ஜாஸ்மின். இவர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தந்தை பெயர், ஜோசப். தாயார், ஜோசப் எலியம்மா. மீரா ஜாஸ்மினுக்கு ஜோ என்ற அண்ணனும், ஜெனி, ஜெவி என்ற 2 அக்காளும், ஜார்ஜ் என்ற தம்பியும் இருக்கிறார்கள்.

`சூத்திரதாரு’ என்ற மலையாள படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தை பிரபல மலையாள டைரக்டர் லோகிததாஸ் இயக்கினார். பல மலையாள படங்களில் நடித்த பின், `ரன்’ என்ற படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து, `புதிய கீதை’ படத்தில் விஜய் ஜோடியாகவும், `ஆஞ்சநேயா’ படத்தில் அஜீத்துடனும், `சண்டக்கோழி’ படத்தில் விஷாலுடனும் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த `திருமகன்’ படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது, `நேபாளி’ என்ற படத்தில் பரத் ஜோடியாக நடித்து வருகிறார்.

`நேபாளி’ படப்பிடிப்பு கடந்த மாதம் ஊட்டியில் நடந்தபோது, மீரா ஜாஸ்மின் அவசரமாக திருப்பதி போக வேண்டும் என்று டைரக்டர் வி.இசட்.துரையிடம் கேட்டார். “நீங்கள் இல்லையென்றால், படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியிருக்கும். இதனால் பல லட்சங்கள் இழப்பு ஏற்படும்” என்று டைரக்டர் துரை கூறினார். “எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள். இது என் வாழ்க்கை பிரச்சினை. நாளை காலை நான் திருப்பதியில் இருந்தாக வேண்டும்” என்று மீரா ஜாஸ்மின் கெஞ்சிக்கேட்டு, அவசரம் அவசரமாக திருப்பதி விரைந்தார்.

அவருடைய உதவியாளர்கள் நான்கு பேரையும் உடன் அழைத்து சென்றார். திருப்பதியில், கடந்த மாதம் 21-ந் தேதி மீரா ஜாஸ்மின் திடீர் திருமணம் செய்து கொண்டார். இதுபற்றிய செய்தி, `தினத்தந்தி’யில்தான் முதன் முதலாக வெளியானது. இந்த செய்தியை மீரா ஜாஸ்மின் மறுக்கவில்லை.

மீரா ஜாஸ்மினின் கணவர் பெயர், `மான்டலின்’ ராஜேஷ். இவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். மீரா ஜாஸ்மின் எந்த ஊரில் படப்பிடிப்பில் இருந்தாலும், அந்த ஊருக்கு ராஜேஷ் சென்று விடுவார்.

உயிருக்கு உயிராக காதலித்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். இந்த திருமணத்துக்கு, மீரா ஜாஸ்மின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

எதிர்ப்புகளை மீறி, மீரா ஜாஸ்மின் தனது காதலர் ராஜேசை கணவர் ஆக்கிக்கொண்டார். திருமணத்துக்குப்பின், இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.

இப்போது மீரா ஜாஸ்மின் ஒரு மலையாள படப்பிடிப்புக்காக கொல்கத்தா போய் இருக்கிறார். அங்கு ராஜேசும் சென்று இருக்கிறார். இருவரும் ஜோடியாக ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்ட எல்லா நடிகைகளும் தங்கள் திருமணத்தை முதலில் மறைத்ததுபோல், மீரா ஜாஸ்மினும் தனது திருமணத்தை மறைத்து, ரகசியமாக வைத்து இருக்கிறார். விரைவில் அவர் தனது திருமணத்தை வெளியுலகுக்கு அறிவிப்பார் என்று தெரிகிறது.

——————————————————————————————–

எனக்கு திருமணம் நடக்கவே இல்லை – நடிகை மீரா ஜாஸ்மின் கொதிப்பு

இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் எனக்கு திருமணம் நடக்கவில்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் ஆவேசமாக கூறினார்.

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், ஆந்திராவை சேர்ந்த மாண்டலின் கலைஞர் ராஜேஷுக்கும் திருப்பதியில் திருமணம் முடிந்து இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை மீரா ஜாஸ்மின் உறுதியாக மறுத்தார். ‘கொல்கத்தா நியூஸ்‘ என்ற மலையாளப்பட படப்பிடிப்புக்காக கொல்கத்தா வந்துள்ள மீரா ஜாஸ்மினை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது போது அவர் கூறியதாவது:

சாதாரண குடும்பத்திலிருந்து நடிக்க வந்த நான் கடுமையான உழைப்பாலும், திறமையாலும் தென்னிந்திய சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். நான் எவ்வளவு வேகமாக வளர்ந்தேனோ அந்த அளவுக்கு பிரச்சினைகளையும் சந்தித்தேன்.

நான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் குடும்பம் நடத்துவதாகவும் செய்திகள் வெளிவருவது புதிதல்ல. அதைபோலத்தான் இப்போதும் செய்தி வெளிவந்திருக்கிறது. என் மீது மீடியாக்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னை நிம்மதியாகவே இருக்கவிட மாட்டேன் என்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நேபாளிÕ படப்பிடிப்பில் இருந்து திருப்பதிக்கு போனது உண்மை. சாமி கும்பிட கோவிலுக்கு போவது தப்பா? உடனே அங்கு திருணம் நடந்தது என்பதா? திருப்பதியில் நேர்த்திகடன் நிறைவேற்ற வேண்டியது இருந்தது. அதற்காகத்தான் சென்றேன். மாண்டலின் ராஜேஷ் ஒரு நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார் அவரது விழா ஒன்றுக்கு சென்றேன். உடனேயே அவருக்கும் எனக்கும் திருமணம் செய்து பார்த்து விட்டார்கள்.

நான் திருமணம் செய்யும்போது எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரகசிய திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இனிமேலாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். இவ்வாறு மீரா ஜாஸ்மின் கூறினார்.

திருமணம் நடந்ததா என்பது குறித்து இசை கலைஞர் மாண்டலின் ராஜேஷ் தரப்பில் விசாரித்தபோது அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியதாவது:
மாண்டலின் ராஜேஷின் நண்பர் ஒருவர் மீராவுக்கும் நண்பர். அவரது ஏற்பாட்டின்படி கடந்த 20-ந் தேதி சென்னையில் நடந்த ராஜேஷின் இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் மீரா கலந்து கொண்டார். மற்றபடி ராஜேஷ§க்கும், மீராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்றார்.
“மீரா ஜாஸ்மின் குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் அவரை பற்றிய பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. முதலில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் லோகிததாஸுடன் நெருக்கமாக இருந்தார். அவருடன் குடும்பம் நடத்துவதாக செய்தி வெளியானது. சொத்து பிரச்சினை காரணமாக உறவினர்களை பிரிந்து கேரள முதல்வர் கலந்து கொண்ட விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் மீரா.

அதன் பிறகு நடிகர் பிருத்விராஜுடன் நிச்சயதார்த்தம் நடந்தாக கூறப்பட்டது. எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் வேளாங்கண்ணி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. இப்போது அதேபோல மாண்டலின் ராஜேஷுடன் திருமணம் செய்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது” என்கிறார் மீராவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர்.

தமிழ்முரசு

————————————————————————————————–

Kumudam

Hot News: Meera Jasmine’s secret Marriage & Love Affair

01.08.07  சினிமா

‘மீராஜாஸ்மீன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரே?’ இதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட்டாக கேட்கப்படும் கேள்வி.

அவருடன் கிசுகிசுக்கப்படும் நபர் சினிமாக்காரர் அல்ல, கர்நாடக இசைத்துறையைச் சேர்ந்தவர். ‘மாண்டலின்’ ஸ்ரீனிவாஸின் தம்பி ‘மாண்டலின்’ ராஜேஷ்தான் இந்த கிசுகிசுக்களின் ஹீரோ.

இந்த பரபரப்பிற் கிடையே ஒரு சம்பவம். பொதுவாய் மீரா ஜாஸ்மின் விழாக்களுக்கு அதிகம் செல்வதில்லை. சென்றவாரம் மங்களகரமாக ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். சினிமா நிகழ்ச்சி அல்ல, கர்நாடக சங்கீத நிகழ்ச்சி. ‘மாண்டலின்’ ராஜேஷின் கச்சேரி.

முன்வரிசையில் அமர்ந்து முழுநிகழ்ச்சியையும் பூரிப்புடன் ரசித்தார் மீரா. இந்தச் சம்பவம் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

‘‘இதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு நிகழ்ச்சிக்கு வந்ததை வச்சு காதல், கல்யாணம்னு சொல்றது தப்பு. முன்பு இப்படித்தான் மீராவை ஒரு இயக்குநருடன் இணைத்து கிசுகிசுத்தனர். இப்போது இந்த விஷயம்… பாவம்’’ என்று கேரளத்து மல்லிகைக்காக பரிதாபப்படுகிறார் அவரை நன்கு அறிந்த ஒருவர்.

இப்படி ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண் டிருக்கும்போது இன்னொரு உஷ்ணச் செய்தியும் காதில் விழுந்தது. ஊட்டியில் பரத்துடன் மீரா ஜாஸ்மின் நடிக்கும் ‘நேபாளி’ படத்தின் ஷ¨ட்டிங். அங்கு மீராவைச் ‘மாண்டலின்’ ராஜேஷ் வந்தாராம். நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அங்கிருந்துதான் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொண்டார்கள் என்கிறது இன்னொரு கிசுகிசு. கேள்விப்பட்ட விஷயங்களை மீராஜாஸ்மினிடம் கேட்கலாம் என்றால், அவர் செல்ஃபோன் நமது தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்தது (உஷாரோ). ஆனால் அவருடைய நண்பர்கள் இந்தத் திருமணச் செய்தியை அடியோடு மறுக்கிறார்கள்.

‘‘நல்ல பொண்ணு சார். சத்தியமாக அவங்களுக்கு கல்யாணமாகலை’’ என்கிறார்கள்.

சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள். நம்புவோமாக!.

“நட்புதான்!”

இங்கு அங்கு என்று சுற்றி இறுதியில் மும்பையிலிருக்கும் ராஜேஷை தொடர்புகொண்டு, விஷயத்தை உடைத்தபோது மனிதர் சற்று பதறினார்.

‘‘சில மாதங்களுக்கு முன்பு தான் மீராவை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைச்சுது. அதிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் பழகுறோம். அவருக்கும் மியூசிக்கில் ஆர்வம் இருப்பதால் என் நிகழ்ச்சிக்கு வந்தார். அவ்வளவுதான்! அதற்குள் காதல் கல்யாணம், கார்த்திகை, என்று கதை கட்டிவிடுவது நியாயமா? தவிர, திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்புறம், ஒரு ஆணும், பெண்ணும் பழகினால் உடனே காதலா’’ என்று உலகின் முதல் காதல் மறுப்பு டயலாக்கோடு முடித்துக்கொண்டார்.

_ வி.சந்திரசேகரன், ராம்ஜெஸ்வி

Posted in Actress, Affair, Ajith, Anjaneya, Audio, Barath, Bharath, Calcutta, Cinema, Dhurai, Durai, Elope, Films, Freind, Friend, Function, Gossip, Heroine, Jasmine, Kerala, Kisukisu, Kolkata, Logidas, Lohidas, Lokidas, Love, Malayalam, Mandolin Rajesh, Marriage, Meera, Meera Jasmine, Mollywood, Movies, music, Nepaali, Nepali, Rajesh, Reception, release, Rumor, Rumour, Run, Sandakkozhi, Sandakozhi, SJ Soorya, SJ Surya, Soorya, Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Blog, Tamil Blogs, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Thirumala, Thirupathi, Thirupathy, Thurai, Tirumala, Tirupathi, Tirupathy, TTD, Vishaal, Vishal, VZ Durai, Wedding | Leave a Comment »

Exposing the double standards of Kerala Govt – Inaction, Hypocrisy, Bureaucracy

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

கடிதங்கள் | காலச்சுவடு

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

சக்கரியாவின் ‘மாயாவித் திருடர்கள்’ என்னும் கட்டுரை குறித்து:

கேரளாவில் மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன.

  • கெல்ட்ரான்,
  • ரேயன்ஸ் மில்,
  • புனலூர் காகித ஆலை,
  • அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ்,
  • அப்போலோ டயர் தொழிற்சாலை

ஆகிய அனைத்தும் மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில் மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள். அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள்.

அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும் நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4 டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்?

ஒரு வேளை மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில் மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது.

எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப் போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள்.

கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர் என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14 நினைவுகூரத்தக்க தினம்தான்.

பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

—————————————————————————

தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள்

பா. ஜெகதீசன்

தமிழகமும், கேரளமும் கடந்த பல தலைமுறைகளாகவே அண்ணன் – தம்பியைப் போன்ற உறவுடன் பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சமீபகாலத்தில் எழுந்த பிரச்னை விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைப் போல, மேலும் பல பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே “இழுபறி’யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையை தொடருகின்றன.

கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்த வரலாற்றை முறியடிக்கும் வகையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறைக்கும் மேல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தவும் 9.11.1958 முதல் செயல்படக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.

அதேபோல, பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்த நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்கிற இடத்தில் அரபுக் கடலில் இந்த நதி சங்கமம் ஆகிறது.

இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது.

புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தக் கனவு எப்போது நனவாகும் என்று தெரியவில்லை.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.

பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இந்தத் திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா – அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே.

மேலும் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.

ஆனால், இதர திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்தையும் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கண்ணகி கோயில் பிரச்னை அமைந்துள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியில்தான் கண்ணகி கோயில் உள்ளது.

ஆனால், கண்ணகி கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழக மக்களை கேரள அரசு தடுத்து, பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. இதில் சுமார் 250 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர்.

கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

கேரளத்துடன் நல்லுறவை வளர்க்கவே எப்போதும் தமிழகம் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் ஈடேறத் தடைகற்களாக இத்தனை பிரச்னைகள் அமைந்துள்ளன. இந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு, நல்லுறவு மேம்பட கேரளத்தின் பெருந்தன்மையான ஒத்துழைப்பு அவசியம்.

———————————————————————————————————————————

முல்லைப் பெரியாறும்-கேரளமும்!

என். சுரேஷ்குமார்

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோனி ஆறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு சுமார் 300 கி.மீ. தூரம் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது.

பெரியாறு தமிழக எல்லைக்குள் 56 கி.மீ. தூரமும் கேரள எல்லைக்குள் 244 கி.மீ. தூரமும் பாய்கிறது.

மக்களின் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்காகவும் பெரியாறு திட்டத்திற்கு முதன்முதலில் செயல்வடிவம் கொடுத்தது ஆங்கிலேயர்கள்.

அதன்படி, 1808-ம் ஆண்டு ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்டத்தை ஆய்வு செய்து 1862-ல் 162 அடி உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1882-ம் ஆண்டு 175 அடி உயரத்தில் அணை கட்ட பென்னி குயிக் நியமிக்கப்பட்டார். அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி முல்லை ஆறும், பெரியாறும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டப்படவிருந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். தற்போதும் அப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் தமிழர்களே.

இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசு, அணை கட்டப்பட உள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி எனக் கொண்டு, 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்தது.

மேலும், இந்த அணை நீரானது தமிழகத்திற்கு காலகாலத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்டது.

அதன்படி 1241 அடி நீளத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடி.

இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி. ஆனால், திடீரென வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டது.

இந்த அணையில் தேங்கும் நீரை, கிழக்குத் திசையில் 5765 அடி நீளமும், 60 அடி ஆழமும், 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டுவந்து பின்பு அந்த நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அதற்குப் பிறகு 78 கி.மீ. நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளியே எடுக்க முடியும்.

மேலும், 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடிவரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும்.

பின்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அந்த அணையின் நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர்தான் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, 1956-ம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரளத்தோடு இணைக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தது. அதன்மூலம் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் அணை பலப்படுத்துவது தொடர்பாக கேரள- தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அணை பலப்படுத்தப்படும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளை கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கேரளம் குறைத்தது.

இதனால் ஒரு போகம் சாகுபடி செய்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின.

1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1985-ம் ஆண்டே முடித்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்தது.

இதனால் இப்பிரச்னையை தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியது. மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அரசு சொன்ன காரணங்கள் பொய்யானவை என்று ஆணையம் தெளிவாகக் கூறியது.

அதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், கேரள அரசு 1979-ம் ஆண்டு தமிழகத்தோடு செய்த ஒப்பந்தத்தை மீறியதோடு, நிபுணர் குழு அறிக்கையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தியது.

தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம், நீர்வளம் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பெரியாறு அணையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இதன்மூலம் கேரள அரசு மேற்கொள்ளும் ஒரு தலைப்பட்சமான முடிவு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக விடப்பட்டிருக்கும் அறைகூவல்.

மேலும், தற்போது பழைய அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு கேரள அரசு கட்டினால் தமிழகத்தின் உரிமை முழுமையாகப் பறிபோகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Posted in Agriculture, Apollo, Bureaucracy, Cauvery, Coke, cola, Communism, Communist, Communist parties, Communist Party of India, Congress, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Dam, Disaster, Drinking, Economy, Employment, Exports, Finance, Flood, GDP, Govt, Growth, Guruvaioor, Guruvaiyoor, Guruvaiyur, Guruvayoor, Guruvayur, Harbor, Harbour, Headquarters, Hype, Hypocrisy, Imports, Incentives, Industry, infrastructure, Integration, Irony, Irrigation, Jobs, Kaviri, Keltron, Kerala, Kozhikode, Labour, Literacy, Madurai, Malaappura, Malappura, Malappuza, Malappuzha, Malayalam, Manufacturing, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Mills, Mullai, Mullai Periyar, MullaiPeriyar, National, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakode, Periyaar, Periyaaru, Periyar, Periyaru, Politics, Port, Prevention, Producation, promises, Railways, River, Salem, SEZ, Shipping, State, Tax, Textiles, THIRUVANANTHAPURAM, TMC, TN, Trains, Trivandrum | Leave a Comment »

Gowri Kirupanandhan: Interview – Telugu to Tamil Translations

Posted by Snapjudge மேல் மே 31, 2007

முகங்கள்: ஒரு நாளில்…எட்டுமணி நேரம்!

உலகிலேயே மிகக் கடினமான காரியம் என்னவென்று பள்ளி மாணவர்களிடம் கேட்டுப் பாருங்களேன், “”தமிழைத் தவறில்லாமல் எழுதுவதுதான்” என்பார்கள். எந்த “ர’ போடுவது, எந்த “‘ந போடுவது என்பதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் தகராறுதான். இத்தனைக்கும் மழலையர் வகுப்பில் இருந்து தமிழை ஒரு பாடமாகவேனும் 12 ஆம் வகுப்பு வரை படித்திருப்பார்கள்.அவர்களுக்கே இந்தக் கதி.

ஆனால் இருபத்தொரு வயது வரை தமிழே தெரியாமல் இருந்துவிட்டு அதன் பின் தமிழ் கற்று இப்போது தெலுங்கிலிருந்து தமிழில் புத்தகங்களை ஒருவர் மொழிபெயர்க்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா? ஆம். அந்தச் சாதனையாளர் கௌரி கிருபானந்தன்.

அவர் தெலுங்கில் இருந்து கிட்டத்தட்ட நாற்பது புத்தகங்களுக்கு மேல் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகளைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். அந்தச் சாதனையாளரை சென்னை பெசண்ட் நகரில் அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உங்கள் தாய்மொழி எது?

எனது தாய்மொழி தமிழ்தான். ஆனால் நான் வளர்ந்தது படித்தது எல்லாம் ஹைதராபாத்தில். சிறுவயதில் இருந்தே தெலுங்கு மீடியத்தில்தான் படித்தேன். எனக்கு சிறுவயதில் தமிழே தெரியாது. எனக்கு 21 வயதில் திருமணம் ஆனது. அதன்பின்தான் தமிழ் படிக்க ஆரம்பித்தேன்.

தமிழில் என்ன படித்தீர்கள்?

தமிழில் பெரும்பாலும் நான் படித்தது கதைகள், நாவல்களே. அசோகமித்திரன், தி.ஜானகிராமன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை விழுந்து விழுந்து படிப்பேன். ஏற்கனவே தெலுங்கு நாவல்களைப் படிக்கும் பழக்கம் இருந்தது.

தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

என்னுடைய 35 வது வயதில் – கிட்டத்தட்ட தமிழ் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து 14 ஆண்டுகள் கழித்து – ஒரு தெலுங்கு மொழிபெயர்ப்பு நாவலைத் தமிழில் படித்தேன். அந்த நாவலை ஏற்கனவே நான் தெலுங்கில் படித்திருந்ததால் தமிழில் அதை எந்த அளவுக்குக் கொலை செய்திருந்தார்கள் என்பதை அந்த நாவலைப் படிக்கும் போது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். ஏன் நாமே அதைத் தவறில்லாமல் தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. முதன்முதலாக எண்டமூரி வீரேந்திரநாத்தின் “பந்தயம்’ என்ற சிறுகதையை மொழிபெயர்த்தேன். அது குங்குமச் சிமிழ் இதழில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்தது.

தொடர்ந்து மொழிபெயர்க்கக் காரணம்?

என்னுடைய ஈடுபாடு என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் என் அப்பாவும் என் கணவரும் உற்சாகப்படுத்தினார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டதால் அவர்களை கவனிக்க அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக எனது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட அல்லயன்ஸ் பப்ளிஷர்ஸ் எனக்குக் கிடைத்தது முக்கியக் காரணம். அவர்கள் கிடைக்கவில்லையென்றால் இத்தனை புத்தகங்களை மொழிபெயர்த்திருப்பேனோ என்னவோ?

தெலுங்கிலிருந்து யார் எழுதிய புத்தகங்களை அதிகமாக மொழிபெயர்த்துள்ளீர்கள்?

எண்டமூரி வீரேந்திரநாத் புத்தகத்தை அதிகமாக மொழிபெயர்த்துள்ளேன். 20 நாவல்களுக்கும் மேலாக மொழிபெயர்த்திருக்கிறேன். அதற்கடுத்து யத்தனபூடி சுலோசனா ராணியின் புத்தகங்கள், டி.காமேஸ்வரியின் புத்தகங்கள் என கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.

முறையாகத் தமிழ் படிக்கவில்லை என்கிறீர்கள். அப்படியிருக்க தமிழில் மொழிபெயர்ப்பது சிரமமாக இல்லையா?

ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. என் அப்பா எனக்குப் பெரிதும் உதவினார். நான் மொழிபெயர்த்து வைத்திருப்பதை எல்லாம் எடுத்து எத்தனை பக்கமானாலும் சரி பார்த்துத் தருவார். அவருக்கு தமிழ் நன்றாகத் தெரியும். இரண்டாவதாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். நிறைய ஒற்றுமைகள் இருக்கும். குறிப்பாக தெலுங்குக்கும் கன்னடத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். தமிழுக்கும் மலையாளத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். எனவே மொழிபெயர்க்கும் போது வாக்கிய அமைப்பில் சிக்கல் எதுவும் வரவில்லை. மேலும் நான் மொழிபெயர்ப்பது நன்றாக இருப்பதால்தானே எல்லாரும் என் மொழிபெயர்ப்பைப் படிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. அது உற்சாகத்தை அதிகப்படுத்தியது. ஒரு நாளில் சுமார் எட்டு மணி நேரம் மொழிபெயர்ப்புக்காகச் செலவிடுகிறேன்.

தமிழில் இருந்து தெலுங்குக்கு மொழிபெயர்த்திருக்கிறீர்களா?

தமிழில் இருந்து சிறுகதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறேன். அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, அனுராதாரமணன், உஷாசுப்பிரமணியன், ஜெயகாந்தன் ஆகியோரின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். யாருடைய கதையை மொழிபெயர்த்தாலும் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் மொழிபெயர்ப்பேன்.

உங்களுடைய பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் புத்தகமாக மட்டும்தான் வந்திருக்கிறதா? இல்லை இதழ்களிலும் வெளிவந்திருக்கிறதா?

என்னுடைய கதைகள் கணையாழி, மஞ்சரி, குங்குமம், மங்கையர் மலர், மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.

மலையாள நாவல்களைப் படித்ததுண்டா? தமிழ், தெலுங்கு, மலையாள இலக்கியங்களில் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?

நான் சிறிதுகாலம் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறேன். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க நூலகத்தில் நிறைய புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறேன். எழுத்தாளர் நீல.பத்மனாபனின் அறிமுகம் அப்போது கிடைத்தது.

மலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரின் நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். நான் படித்தவரை மலையாள நாவல்கள், கதைகள் ஆழமான வாசிப்புக்கு உகந்தவை. பொழுதுபோக்காக, மேம்போக்காக அவற்றைப் படிக்க முடியாது. தமிழ், தெலுங்கு நாவல்கள், கதைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை என்னால் பார்க்க முடியவில்லை.

தெலுங்கிலிருந்து நீங்கள் சரித்திர நாவல்கள் எதையும் மொழிபெயர்த்துள்ளீர்களா?

இல்லை. நான் மொழிபெயர்த்தவை எல்லாம் சமூக நாவல்கள். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டவை. அவர்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் போன்றவையே நான் மொழிபெயர்த்த கதைகளின் கருப்பொருள்கள்.

தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்தேன் என்கிறீர்கள். தமிழில் வட்டார வழக்கு நாவல்கள், கதைகள் அதிகம் எழுதப்பட்டுள்ளன. அவற்றை மொழிபெயர்க்கும் எண்ணம் உண்டா?

இல்லை. என்னால் அது முடியாது என்றே தோன்றுகிறது. எந்த மொழியிலிருந்து மொழிபெயர்த்தாலும் அந்த மொழியில் உள்ள வாசனை மாறாமல், சாயை கெடாமல் மொழிபெயர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். வட்டாரத் தமிழில் எனக்கு அதிக பரிச்சயம் இல்லாததால் அதை மொழிபெயர்த்தால் நன்றாக வராது.

சமீபத்திய உங்கள் முயற்சி?

சுலோசனா ராணி தெலுங்கில் எழுதிய மீனா என்ற நாவலைத் தமிழில் “முள்பாதை’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். அது ரொம்பவும் ஃபேமஸôன நாவல். சினிமாவாகக் கூட எடுத்தார்கள். இரண்டு பாகங்களாக உள்ள அந்த நாவலை மொழிபெயர்க்க ஒன்பது மாதங்கள் ஆனது.

Posted in Ambalam, Andhra, Andhra Pradesh, AP, Author, Books, Endamoori, Endamoori Virenderanath, Endamuri, Entamoori, Entamuri, Fiction, Gouri, Gowri, Gowri Kirupanandhan, Interview, Kameshwari, Kanaiaazhi, Kirubanandan, Kirupanandhan, Kirupananthan, Krupanandhan, Krupananthan, Kunguma Chimizh, Literature, Malayalam, Mangaiyar Malar, Novels, Story, Sulochana Rani, Tamil, Telugu, Translations, Translator, Veerenderanath, Veerendranath, Virenderanath, Virendranath, Writer | Leave a Comment »

Raj TV’s ‘Kalainjar Television’ Launch – Is it against Maran brothers’ Sun TV?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ராஜ் டிவியில் “கலைஞர் டிவி’

சென்னை, மே 22: சன் டிவி நிறுவனத்தாருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, தனியாக ஒரு தமிழ் டிவி சானலைத் தொடங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

ராஜ் டிவி மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது திமுக. “கலைஞர் டிவி’ என்ற பெயரில் இந்த சானல் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜ் டிவி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

புதிய சானலை தொடங்குவதில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜேந்திரன் மறுக்கிறார். எனினும் இந்த சானலுக்கு “கலைஞர் டிவி’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இதற்குப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் என்று டிவி வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைஞர் என்ற பெயர் திமுக தலைவரைக் குறிக்கவில்லை. கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களைக் குறிப்பிடும் வகையில்தான் கலைஞர் டிவி என்று பெயர் வைத்திருப்பதாக ராஜேந்திரன் கூறுகிறார்.

இந்த டிவி சானலுக்காக தி.மு.க. தரப்பில் இருந்து முதலீடு இருக்கக் கூடும் என்றும் பங்குகள் மூலமாக இந்த முதலீடு இருக்கலாம் என்றும் பங்கு வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

ராஜ் டிவி உரிமையாளர் இதையும் மறுக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பங்கு விற்பனையில் திரட்டப்பட்ட பணத்தில் இப்புதிய சானலைத் தொடங்குகிறோம் என்றார் அவர்.
புதிதாக டிவி நிறுவனத்தை உடனே தொடங்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு அனுபவம் இல்லை. எனவேதான் ராஜ் டிவி உதவியோடு புதிய சானலை திமுக தொடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கலைஞர் டிவி தொடங்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியிலிருந்துதான் முழுமையான ஒளிபரப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக 11 டிவி சானல்களை தொடங்கப்போவதாக ராஜ் டிவி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதில் 2 சானல்களையாவது உடனே தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற முதல்வர் கருணாநிதி மூலம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

திமுக தரப்பு செய்திகளையும் தமிழக அரசின் செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்ப சன் டிவியை திமுக நம்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி, சன் டிவியையும், தினகரன் பத்திரிகையையும் நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தாருடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு சமீபத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டது.

எனவே இனிமேல் சன் டிவியை சார்ந்திருக்காமல் இருக்கவே கலைஞர் டிவி தொடங்கப்படுவதாகவும், இந்த சானல், செய்திக்கு முக்கியத்துவம் தரும் சானலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சானலைத் தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது இல்லை.

புதிதாக வர இருக்கும் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தருமாறு, சன் டிவியில் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் இரு தனியார் நிறுவனங்களிடம், பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
================================================================

ஏறுமுகத்தில் ராஜ் டி.வி. பங்குகள்

சென்னை, மே 22: ராஜ் டிவி நிறுவனத்தின் பங்குகள் சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளன.

மே 14-ம் தேதி ராஜ் டி.வி.யின் பங்கு விலை ரூ. 188.65 ஆக இருந்தது. அடுத்த நாளில் ரூ. 226.40-க்கு உயர்ந்தது. மே 16-ம் தேதி ரூ. 250.40 ஆனது.

ஆனால் அடுத்த நாளே பங்கின் விலை சற்று குறைந்து ரூ. 239.15 என விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான மே 18-ம் தேதி ராஜ் டி.வியின் பங்கு ரூ. 248.45-க்கு விலை போனது.

மே 12-ம் தேதியன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் பொன்விழா நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அதைத் தொடர்ந்து தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜ் டி.வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ராஜ் டி.வி.யின் பங்கு விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ராஜ் டி.வி.யின் பங்குகளை வாங்கிவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு எழுந்ததும் பங்கு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

திங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனப் பங்குகளில் சன் டி.வி. நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சன் டி.வி. குழுமத்தின் பங்குகளில் 90 சதவீதம் அதன் தலைவர் கலாநிதி மாறன் வசமே உள்ளது.

மே 14-ம் தேதியன்று சன் டி.வி. பங்குகளின் விலை கிடுகிடுவென சரிந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1,603-லிருந்து ரூ. 1,534.50 ஆகக் குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 68.50 குறைந்தது.

அதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி ரூ. 1474.20 ஆகவும் மே 17-ம் தேதி ரூ. 1,477 ஆகவும் குறைந்தது. மே 18-ம் தேதி பங்கின் விலை சற்று அதிகரித்து ரூ. 1,521.50-ஐ எட்டியது. இந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் சன் டி.வி. பங்குகள் ரூ. 1,471.50 விலைக்கு விற்பனையானது.

———————————————————————————————————

கருணாநிதி- ராதிகா “திடீர்’ சந்திப்பு: கலைஞர் டி.வி.யில் ராடான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு?

சென்னை, மே 23: அதிக தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து முன்னணியில் உள்ள ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் ஆக.15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு கலைஞர் டி.வி. என பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.

ராஜ் டி.வி.யுடன் இணைந்து கலைஞர் டி.வி. செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதிக தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அவற்றை சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பி “டி.ஆர்.பி ரேட்’ எனப்படும் அதிக விளம்பர வருவாய் ஈட்டும் நிறுவனமாக விளங்கும் ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டுள்ளது.

கருணாநிதி-ராதிகா சந்திப்பு: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராடான் நிறுவன உரிமையாளர் நடிகை ராதிகா, செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.

சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, கலைஞர் டி.வி.யில் ராடான் டி.வி. யின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ராதிகா பேட்டி: இச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியது:

சன் டி.வி.யில் இருந்து ராடான் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை. புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால் அதுகுறித்து தான் அவருடன் பேசினேன்.

நீண்ட நாள்களாக முதல்வரை நான் சந்திக்கவில்லை. எனது தந்தை நடிகர் “எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா’ விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அதுகுறித்து தான் முதல்வரிடம் அதிக நேரம் ஆலோசனை நடத்தினேன் என்றார்.

இருப்பினும், கலைஞர் டி.வி.யில் ராடான் நிறுவன நிகழ்ச்சிகளை மாற்றவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர் ராதிகா. கருணாநிதியை “அப்பா’ என்றே அழைக்கக் கூடியவர். தனது கணவர் சரத்குமார், திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக சென்றபிறகும் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார் ராதிகா.

அதனால், கலைஞர் டி.வி.யில் தனது தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வியாபார நோக்கில் முன் யோசனை உள்ள ராதிகா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்த புதிய டி.வி.க்கு மாற்றினால், மற்ற சன் நெட்வொர்க் டி.வி. களில் ஒளிபரப்பாகும் தனது நிகழ்ச்சிகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்து வைத்துள்ளார்.

அதனால், கலைஞர் டி.வி.க்கு தனியாக புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்துள்ளதாகவும், மேலும் சன் டி.வி.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஈர்க்கவும் கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
———————————————————————————————————

“கலைஞர் டிவி’: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, மே 23: புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

புதிய டிவி “கலைஞர் டிவி’ என்று அழைக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

சன் டிவி குழுமத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து திமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த புதிய டிவி தொடங்கப்படுகிறது.

புதிய டிவி திமுக சார்பில் நடத்தப்படாது என்பதை கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார். இருப்பினும் திமுகவின் பிரசார பீரங்கியாகவே புதிய டிவி செயல்படும் என்று தெரிகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். புதிய தொலைக்காட்சியில் பணிபுரிய நல்ல அனுபவம் பெற்றவர்கள் முன்வந்துள்ளனர். அந்த தொலைக்காட்சி கட்சியின் (திமுக) சார்பில் நடத்தப்படுவதல்ல. அந்த தொலைக்காட்சிக்கு என்னுடைய பெயர் சூட்டப்படுகிறதா என்று என்னிடம் கேட்டபோது, பல பேர் அவ்வாறு விருப்பப்படுகிறார்கள் என்று நான் கூறினேன்.

சன் டிவிக்கு நெருக்கடியா?

சன் டிவியை வேறு இடத்துக்கு மாற்றிச் செல்லும்படி யாரும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சில பத்திரிகைகள்தான் அவ்வாறு இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.

————————————————————————————————

உதறலெடுக்கிறது சன் டிவிக்கு!!!


தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை!

இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்….?

‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.

‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.

தி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.

தயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.

தேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.

சில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர… ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல…. கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.

இதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்!’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே… கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.

பேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.

‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது?’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.

‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்!

ஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.

சமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.

‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா?’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்? என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்!’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.

அங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா… நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.

இதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா? அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா?’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்!’’ என்கிறார்கள்.

ஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

குமுதத்திலிருந்து.

—————————————————————–

குமுதம் ரிப்போர்ட்டர் –  10.06.07

திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த திகில் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது, கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல். அந்தளவுக்கு மோதலும் சமாதானமும் மாறி மாறி தொடர்ந்து, இப்பிரச்னையை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.

மே_29 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய கலைஞர், மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலினின் மகன், மற்றும் மகள் ஆகியோரைக் கடிந்து கொண்டதாகக் கடந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் சகோதரர்களுடனான சமாதான முயற்சிகளை, கலைஞர் எந்த வகையிலும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

ஆனால், கலைஞர் குடும்பத்துடன் மாறன் சகோதரர்களுக்கு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்த நாள் முதலாக அதைச் சரிப்படுத்த முயன்றுவரும், கலைஞரின் மகள் செல்வி மட்டும் மனம் தளரவில்லை. தயாநிதி மீதான கட்சி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியபோதும், செல்வி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.

இதன் ஒரு கட்டமாக, எந்த அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போனவர்களை கலைஞர் கண்டித்தாரோ…. அதே அன்புக்கரசியை, கடந்த வியாழன்று கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் செல்வி. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அன்புக்கரசி சகிதம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார் செல்வி. உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து கொஞ்சம் உற்சாகமாகவே வெளியேறியிருக்கிறார்கள் செல்வியும், அன்புக்கரசியும். மாறன் குடும்பத்தினரிடையேயும் ஒருவித திருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்தது இந்தச் சந்திப்பு.

ஆனால், தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் யாருக்கும் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை (கலாநிதி, தயாநிதி) மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இவர்கள். கடந்த சனிக்கிழமையன்று மாலை கோபாலபுரத்திற்கும், சி.ஐ.டி. காலனிக்கும் வரவழைக்கப்பட்ட பிரபல ஜோதிடர்கள் இருவரிடம் கலைஞர் வீட்டு பெண்மணிகள் ‘‘எல்லாம் நல்லபடியாகப் போகும்தானே…?’’ என்று விளக்கம் கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் ‘நல்லது’ என்பது சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதுதானாம்!

இதற்கிடையில் சமாதான முயற்சிகளின் தூதுவராக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார் முரசொலி செல்வம். இவருடைய முயற்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பாக, இவரைப் பற்றியும், கலைஞருக்கு இவர் எந்த அளவுக்கு நெருக்கமானவர் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

திருவாரூர் மண்ணில் பிறந்த நீதிக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம் 1940_ல் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அவர் மீது பற்றுக்கொண்ட கலைஞர், அதே ஆண்டில் தனது சகோதரிக்கு (முரசொலி மாறனின் தம்பியாக) பிறந்த ஆண் குழந்தைக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார். பின்னாளில் ‘செல்வம்’ என்று சுருக்கி அழைத்தார்கள். ‘உனக்கு ஒரு மகள் பிறந்தால் இவனுக்கு திருமணம் செய்து கொடு’ என்று தனது தாய் அஞ்சுகம் சொன்ன வார்த்தைக்கேற்ப தனக்குப் பிறந்த மகளுக்கு செல்வி என்று பெயரிட்டு, செல்வத்திற்கே பின்னாளில் மணமுடித்து வைத்தார் கலைஞர்.

அண்ணன் முரசொலி மாறன் வெளிப்படையாக அரசியலில் இறங்கி, கலைஞருக்குத் துணையாக இருந்தார் என்றால், வெளிப்படையாக வராமல் கலைஞரின் அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக விளங்கியவர் செல்வம்தான். முரசொலி ஆசிரியரான பின்பு ‘முரசொலி செல்வம்’ ஆனார்.

கலைஞருடன், நெருங்கிப் பழகும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தித் தந்தவர் முரசொலி செல்வமாகத்தான் இருப்பார். டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொன்முடி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

‘அண்ணா மறைந்தபோது அவர் முகத்தைக் காண ஆவலுடன் இருந்த என்னை, உள்ளே அழைத்துச் சென்று அண்ணாவின் முகம் காணச் செய்தவர் செல்வம்தான்’ என்று வைகோ கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

இப்படி இரண்டாம் தலைமுறைத் தலைவர்களுக்கும், கலைஞருக்கும் பாலமாக இருந்ததாலேயே, தான் நினைத்ததையும், மற்றவர்கள் கலைஞரிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களையும் தயங்காமல், உரிமையுடன் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றார் செல்வம். இவருடைய வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பல நேரங்களில் கலைஞர் மதிப்பளித்ததுண்டு!

உரிமைமீறல் பிரச்னை ஒன்றுக்காக 1992_ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார், முரசொலி ஆசிரியர் பதவியிலிருந்த செல்வம். (இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார்) சிரித்த முகத்துடன் அவர் கூண்டில் நின்ற போட்டோக்களை அடுத்த நாள் தினசரிகளில் பார்த்த கலைஞர், செல்வத்தை உச்சிமோந்து பாராட்டினார். ‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன், என்று முரசொலியிலும்கூட எழுதினார் கலைஞர்.

இந்த நெருக்கமும், உரிமையும் தந்த இடத்தை வைத்துத்தான் மே_9 அன்று தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதற்கு முன்பாக கலைஞருக்குக் கடிதம் எழுதிய செல்வம், ‘தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’, என்று கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அந்தக் கடிதம் இருந்தபோதும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை கலைஞர். (செல்வத்தின் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்!)

அந்த செல்வம்தான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும்தனது சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார். கலைஞரைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாகவே முயற்சித்து வருகிறார் தயாநிதி. ஆனால் அதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைக்கவேயில்லை.

இந்த நிலையில், கலைஞரின் பிறந்த நாளையட்டி அவரைச் சந்தித்து வாழ்த்திவிட வேண்டும். முடிந்தால் தனது விளக்கத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த தயாநிதி, ஜூன் 2_ம் தேதியன்று செல்வத்தை அனுப்பி கலைஞரிடம் பேச வைத்திருக்கிறார். ‘தயாநிதி உங்களைச் சந்திக்க விரும்புகிறான்’ என்று செல்வம் சொல்ல… அதற்குப் பதிலளித்த கலைஞர், ‘நான் சந்திக்கத் தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர்களை (கலாநிதி_தயாநிதி) அழகிரியைப் போய்ப் பார்க்கச் சொல். அழகிரி சம்மதித்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்!’ என்றாராம்.

கலைஞரின் இந்த வார்த்தைகள்தான் இரண்டு தரப்பையும் இரண்டு விதமாகப் பேச வைத்திருக்கிறது. ‘‘அவனை (அழகிரி) யாரென்று நினைத்தீர்கள்? அவன் என் மகன்! என் ரத்தம்!!’’ என்று தயாநிதிமாறனிடமே ஒருமுறை நேரடியாகச் சீறியவர் கலைஞர். அதே கோபம் இப்போதும் இருந்திருந்தால், ‘யார் நினைத்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன்’, என்று சொல்லியிருப்பார். ஆனால் ‘அழகிரி சம்மதித்தால் நான் சந்திக்கத் தயார்’ என்று இப்போது இவர் சொல்லியிருப்பதே சமாதானத்தைக் கலைஞர் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்’’, என்று சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் மாறன் குடும்பத்தினர் தரப்பில்.

இவர்களின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் சமாதானப் பேச்சுப் பேச வந்த அனைவரிடமும் கோபத்தைக் காட்டிய கலைஞர், ‘இத்தகைய முயற்சிகளை இனியும் மேற்கொள்ள வேண்டாம்’, என்றும் சொல்லியனுப்பினார். ஆனால், இந்த முறை தயாநிதிக்காக செல்வம் பேசியபோது இந்த வார்த்தைகளைச் சொன்ன கலைஞர், அதன்பிறகும் செல்வத்துடன் பழைய பாச உணர்வுடனேயே இருந்தார்.

அடுத்த நாள் கோபாலபுரத்தில் கலைஞர் பிறந்த நாள் கேக் வெட்டியபோது செல்வமும் உடனிருந்தார். அன்று மாலை நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, செல்வத்தின் பெயரையும் குறிப்பிட்டு வரவேற்றுப் பேசினார்.

‘‘இதே செல்வத்தை விமர்சித்து நட்பை விட கட்சிதான் பெரிது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசினார், செல்வத்தின் நண்பரும் அமைச்சருமான பொன்முடி. அன்றைய சூழ்நிலையில் அதையும் கலைஞர் ரசித்தார். இப்போது வழக்கத்தில் இல்லாத வகையில் செல்வத்தின் பெயரை தனியாகக் குறிப்பிட்டு பாலு சொன்ன போதும் அதை கலைஞர் ரசித்தார். இன்று சூழ்நிலை மாறியிருப்பதைத்தானே இது காட்டுகிறது?’’ என்று ஒரு வித திருப்தியோடு கேட்கிறார்கள் தயாநிதி தரப்பில்.

ஆனால், கலைஞர் குடும்பத்தினரின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கின்றன. ‘‘உணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற மதுரைச் சம்பவத்தை வைத்து அழகிரியைக் கொலைகாரன், ரவுடி, என்றெல்லாம் சன் டி.வி.யில் மாறி மாறிச் சொன்னதை கலைஞர் இன்னும் மறக்கவில்லை. இந்த வார்த்தைகள் அழகிரியை எந்தளவுக்கு பாதித்தன என்பதையும் கலைஞர் உணராமலில்லை.

கடந்த காலங்களை மறந்துவிட்டு, பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் மாறன் சகோதரர்கள் செய்த சில விஷயங்களை அழகிரியும் ஸ்டாலினும், ஏன்… தயாளு அம்மாள் உள்ளிட்ட எல்லோருமே மறக்கத் தயாராக இல்லை. இந்தப் பிளவுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வகையிலும் பழைய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும்தான் சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி. தொடங்கவும், தனியாக கேபிள் நெட் வொர்க் ஒன்றைத் தொடங்கவும் தீவிரமாக இருக்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர்!’’ என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான கட்சி முன்னோடி ஒருவர்.

‘‘இந்தப் பின்னணியில் அழகிரி சமாதானம் ஆவதே நடக்காத காரியம் என்பதால்தான், ‘அழகிரி சம்மதித்தால் நான் தயாநிதியைச் சந்திக்கத் தயார்’ என்று நம்பிக்கையில்லாமல் சொன்னார் கலைஞர்’’ என்றும் சொல்கிறார் அந்தப் பிரமுகர்.

‘‘இப்போதைக்கு இந்த சமாதான முயற்சிக்கான லகானை அழகிரியிடம் தந்திருக்கிறார் கலைஞர். அதை வைத்து அவர் சமாதானத்தை எட்டிவிட வேண்டும் என்பதற்காக அல்ல இது. இப்போதுள்ள மனநிலையிலேயே, மாறன் சகோதர்களுக்கு எதிரான யுத்தத்தை சுதந்திரமாகவும் உறுதியாகவும் நடத்த கலைஞர் தந்திருக்கும் அனுமதிதான் அது!’’ என்றும் சொல்கிறார்கள் அழகிரி தரப்பில்.

அப்படியே அழகிரியுடன் சமாதானமாகப் போக நினைத்தாலும், தயாநிதியை அரசியல் ரீதியாக முடக்கிப்போடும் வகையில் சில நிபந்தனைகளை விதிப்பார்கள் என்பதால், அதைச் செய்ய மாறன் குடும்பத்தினர் ரொம்பவே தயங்குவார்கள் என்றும் சொல்கிறார்கள். தவிர, மதுரை வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுப்பெற்று, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், அதே அழகிரியுடன் நாளை சமாதானமாகச் சென்றுவிட்டால், தினகரன் ஊழியர்களும், பொதுமக்களும் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற யோசனையும் தயாநிதி தரப்பில் இருக்கிறது.

இத்தனை சந்தேகங்கள், தயக்கங்களைத் தாண்டி செல்வத்தின் முயற்சிகள் எந்தளவுக்குக் கை கொடுக்கும்? அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும்! ஸீ

கலைஞர் _ மாறன் குடும்பத்தினரிடையே மோதலும், சமாதான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க… சத்தமில்லாமல் ஒரு புத்தகத்தைப் படிக்கிறாராம், இந்த சர்ச்சைகளில் தொடர்புடைய ஒருவர். புத்தகத்தின் தலைப்பு ‘‘உறவுகள் மேம்பட!’’

உறவுகளுக்கிடையே நெருக்கமும், சிநேகமும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது.. என்பதை விளக்கும் புத்தகம் இது. ‘நானே பெரியவன் என்ற அகந்தையை விட வேண்டும்… பின்விளைவுகளை அறியாமல் எதையும் பேசக்கூடாது… சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவேண்டும்… பிரச்னைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வரவேண்டும் என்று நினைக்காமல், நீங்கள் முதலில் பேச்சைத் தொடங்கவேண்டும்…’ என்றெல்லாம் பத்திபத்தியாக ஆலோசனை சொல்கிறதாம் அந்தப் புத்தகம்.

சரி…. இதைப் படிப்பது யார் என்று கேட்டால், ‘ஏப்பு… ஏதோ படிக்கிறார்… படித்துத் தெளிந்து நல்லது நடந்தால் சரிதானே? ஆள் யாருன்னு கேட்டு ஏன் இன்னொரு பிரச்னையைக் கிளறுரீக….’’ என்று யதார்த்தமாகச் சொன்னார், இத் தகவலை நமக்குச் சொன்ன வி.ஐ.பி.!

ஸீ எஸ்.பி. லட்சுமணன்

Posted in ADMK, Ads, Arts, Assets, AVM, Bribery, Bribes, BSNL, Campaign, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dinakaran, District Secretary, Districts, DMK, Elections, family, Feud, Government, Governor, Govt, Influence, Investment, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kannada, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, Launch, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Malayalam, Maran, Market, Media, MR Radha, MSM, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, News, News Channel, Palani Manikkam, PalaniManikkam, Pazhani Manikkam, PazhaniManikkam, Polls, Power, Preach, Radaan, radan, Radhika, Raj, Raj TV, Rajendran, Rating, revenue, Sarathkumar, Secretary, Serial, Sharathkumar, Shares, Soap Opera, Soaps, Stalin, Stocks, Sun, Sun Network, Sun TV, Survey, Surya, Suryaa, Tamil News, TeleSerial, Television, Telugu, Thalapathi, thalapathy, Thayanidhi, Thayanidhy, Thayanithi, Thayanithy, TRP, TV, vice-president, VP | 1 Comment »

101 farmers commits suicide in Kerala in last 10 months

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை

திருவனந்தபுரம், மார்ச் 28: கடந்த 10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இத்தகவலை கேரள வேளாண்துறை அமைச்சர் முல்லைக்கரை ரத்னாகரன் சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்தப் பட்டியலில் வயநாடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 46 விவசாயிகளும், கோழிக்கோட்டில் 11 விவசாயிகளும், திருவனந்தபுரத்தில் 10 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரத்னாகரன் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட 549 விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதாக ரத்னாகரன் கூறியுள்ளார்.

==============================================================
சிறு வியாபாரிகளைச் சீரழிக்கும் பன்னாட்டு மூலதனம்

இரா. செழியன்

இந்தியாவின் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் வகையில், உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் துணையுடன் வெளிநாட்டு பெரும் மூலதன நிறுவனங்கள் படையெடுத்துவர ஆரம்பித்துள்ளன.

இந்தியாவில் உள்ள 1 கோடி 20 லட்சம் வியாபாரிகளில் பெரிய அளவில் வர்த்தக நிறுவனங்கள் வைத்திருப்பவர்களின் அளவு 4 சதவீதம் என்று கூறப்படுகிறது. எஞ்சிய 96 சதவீதம் பேர் சிறு விற்பனையாளர்கள்.

சிறிய கடைகள் வைத்திருப்பவர்களிலிருந்து மார்க்கெட்டில் கூறுகட்டி காய்கறி, பழங்களை விற்பவர்கள் வரை ஒவ்வொருவரும், அதிகமான மூலதனம் இல்லாமல், தனிப்பட்டு தானே முதலாளியாக, தொழிலாளியாக, விற்பனையாளராக, தொழில் நடத்தி, நாள்தோறும் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்து தனது குடும்பத்தைக் கட்டிக் காப்பதில் அவதிப்படுகின்றனர்.

தொடர் சில்லறைக் கடைகளை இந்தியாவில் அமைக்க பிரமாண்டமான வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலைமை, சிறு வியாபாரிகளை இந்திய வணிகத்துறையிலிருந்து அடியோடு அகற்றிவிடும்.

சில்லறைக் கடைகளை அமைக்க இந்திய ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது. இந்த நிறுவனத்தின் முதலாளி முகேஷ் அம்பானி உலகப் பிரசித்த பெற்ற செல்வச் சீமான். 2007 ஆம் ஆண்டின் உலக செல்வந்தர்களின் பட்டியலில் அவர் 14-வது இடத்தில் இருக்கிறார். அவரிடம் உள்ள நிறுவனங்களின் சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர் – இந்திய மதிப்பீட்டில் அது 88 ஆயிரம் கோடி ரூபாய்.

“ரிலையன்ஸ் பிரெஷ்’ என்ற பெயரில் சில்லறைக் கடைகளை அம்பானி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள முதலீடு 800 கோடி ரூபாய். தில்லியில் 8 சில்லறைக் கடைகள் திறக்கப்பட்டு விட்டன. சென்னையிலும் அதன் கடைகள் வந்துவிட்டன.

காய்கறிகள், பழங்கள், மாமிசம், மீன்வகை, உணவுப் பொருள்கள், அன்றாட அடிப்படைத் தேவைக்கான பண்டங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் விற்கும் இந்த அமைப்புகளுக்குத் தேவையான, குளிர் சாதனக் கிடங்குகள், குளிர்சாதன லாரிகள், குளிர்சாதன விற்பனைக்கூடங்கள், பாதுகாப்பு அறைகள், பனிப்பெட்டிகள், விளம்பரத் தட்டிகள் எல்லாவற்றையும் மேல்நாட்டு முறையில் அமைத்து, தோட்டத்தில் விளைந்த காய்கறி பழங்களை நேரடியாக, சில்லறைக் கடையில் “புதிதாக’த் தருவதால், அந்தக் கடைகளுக்கு, “ரிலையன்ஸ் பிரெஷ்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்தச் சில்லறைக் கடைகள் மூலம் நடைபெறும் விற்பனை இன்னும் மூன்றாண்டு காலத்தில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வந்துவிடும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

ஹைதராபாத், ஜெய்ப்பூர், சென்னை ஆகிய மூன்று நகரங்களில் வைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளுக்கு வரக்கூடிய 2 லட்சம் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “கர்ரேபோர்’ என்ற நிறுவனம் சில்லறை விற்பனையில் உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு 30 நாடுகளில் 12 ஆயிரம் கடைகள் இருக்கின்றன. அதற்குச் சென்ற ஆண்டில் நடைபெற்ற வியாபாரத்தின் அளவு சுமார் 40 லட்சம் கோடி ரூபாய்! தாம் ஆரம்பித்த இந்திய நாட்டு சில்லறை வியாபாரத்துக்குத் துணைபுரிய அந்தப் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.

பிரான்ஸ் நிறுவனத்துக்கு உலகில் இரண்டாவது இடம் என்றால், சில்லறை வியாபாரத்தில் உலகில் முதலிடத்தில் உள்ள “வால்மார்ட்’ என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு “பாரதி’ என்று மற்றோர் இந்திய நிறுவனம் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட “வால்மார்ட்’ உலக அளவில் சென்ற ஆண்டில் செய்த விற்பனையின் அளவு 350 பில்லியன் டாலர்; அதாவது 15 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்! நமது இந்திய அரசின் சென்ற ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தின் மொத்த அளவு 5 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய்!

111 கோடி மக்களை ஆட்சிசெய்யும் ஒரு நாட்டின் வரவு- செலவைவிட, சில்லறை வியாபாரத்தில் ஒரு நிறுவனத்தின் ஓர் ஆண்டு விற்பனையின் அளவு இரண்டரை மடங்குக்கும் மேலாக இருக்கிறது. சில்லறை வியாபாரம், ஆனால் கல்லாப்பெட்டி வசூல் உலக நாடுகளின் பலவற்றின் வருமானத்தைவிடப் பெரியது, பிரமாண்டமானது.

டாடா நிறுவனமும் சில்லறைக் கடைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “உல்வொர்த்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட ஆரம்பித்திருக்கிறது. “உல்வொர்த்’ நிறுவனத்தின் ஆண்டு விற்பனை அளவு 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்!

பெருத்த அளவில் சில்லறைக் கடைகளை வைத்திருக்கும் வணிக முறை வெளிநாடுகளில் வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள வியாபாரத்தில் 85 சதவீதம் பெரிய நிறுவனங்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் சில்லறை வியாபாரத்தை பன்னாட்டு நிறுவனங்களின் சங்கிலித் தொடர் அமைப்புகளிடம் ஒப்படைப்பது, 96 சதவீதமுள்ள சிறு வியாபாரிகள் கை – கால்களில் இரும்புச் சங்கிலிகளைப் போட்டு வாழ்நாள் முழுவதும் வறுமைச் சிறையில் அவர்களை அடைத்து வைப்பதாக முடியும்.

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை வெளியிட்டது. இதில் அரசின் ஆறு அம்ச அடிப்படைக் குறிக்கோள்களில் ஒன்றாகக் கூறப்பட்டிருப்பது: “”7 முதல் 8 சதவீத அளவில் வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், எல்லோருக்கும் வேலை வாய்ப்பைத் தந்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான நிலையான நல்வாழ்க்கை அளிக்க முற்படுவோம்”.

ஆனால் இன்று உள்நாட்டு முதலாளிகளுடன் இணைந்து ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மூலதனம் உடைய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழிப்பதுடன், சிறு வியாபாரிகளின் வாழ்வை அடியோடு அழித்துவிட முயல்வது சரியா?

“”எல்லோருக்கும் வேலை”, “”ஒவ்வொரு குடும்பத்தின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று இக்கூட்டணியின் சார்பில் தரப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? கிடைத்த வேலைகள் போகின்றன, இருந்த நல்வாழ்வு நாசமாகிறது!

நடுத்தரக் குடும்பத்தினரின் சுயவேலை வாய்ப்புத் திட்டமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

அன்னிய மூலதன உதவியுடன் ரிலையன்ஸ், பாரதி, டாடா என்று அடுத்தடுத்து இந்திய நிறுவனங்கள் தொடர் சில்லறைக் கடைகளை அமைக்க ஆரம்பித்துவிட்டன!

சிறிய மீன்களை பெரிய மீன்கள் விழுங்கிவிடுவதைப்போல, இந்தியாவின் சிறு வியாபாரிகளை விழுங்க பெரிய நிறுவனங்கள் வந்துவிட்டனவே! இந்தப் பேராபத்தைத் தடுக்க மத்திய – மாநில அரசுகள் என்ன செய்துள்ளன?

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில், சில்லறைக் கடைகளில் நடைபெறும் விற்பனையில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிற “வால்மார்ட்’ இந்தியாவின் சில்லறை மார்க்கெட்டில் நுழைந்து விட்டதே! “வால்மார்ட்’ அமைப்புக்கு வால் பிடிக்கும் அமைப்பாக இந்திய அரசும் இந்தியப் பொருளாதாரமும் ஆகிவிட்டனவா?

சுதந்திர இந்தியாவில், சுயவேலையில், சுயமுதலீட்டில், சுயமாகப் பாடுபட்டு, சுயமரியாதையுடன் வாழ்வு நடத்தும் எண்ணற்ற சிறு வியாபாரிகள் வேலையிழந்து, வீடிழந்து, பொருளிழந்து, வாழும் வகை இழந்து, பிறந்த நாட்டில் அகதிகளாக, அநாதைகளாக, அலைய வேண்டிய நிலைமை வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

சுனாமிப் பேரலை தாக்கினால், கடலோரத்தில் உள்ள சிற்றூர்களும் சிறு குடிசைகளும் அழிக்கப்பட்டு மணல் மேடுகளாக மாறுவதைப்போல், உலகளாவிய பொருளாதாரப் பேரலை உழைப்பவர்களை, உழைத்துப் பிழைக்கும் சிறு வியாபாரிகளைக் கல்லறைகளுக்கு அனுப்பும் காலதேவனாக ஆகிவிடும்.

கடல் அலை கொந்தளித்தால், நாடு தாங்காது. ஏழைகளின் மனம் கொந்தளித்தால் நாடாளும் அரசு தாங்காது.

(கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்).


ரிலையன்ஸ் நிறுவனத்தால் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது என்கிறார் பொருளாதார வல்லுநர்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடையின் துவக்கம்
ரிலையன்ஸ் நிறுவனக் கடையின் துவக்க விழா-ஆவணப் படம்

ரிலையன்ஸ் நிறுவனம் காய்கனிகளை விற்க சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகளை தொடங்கியது முதலே அரசியல் சர்ச்சை ஏற்பட்டது.

70 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் உள்ள பெருகி வரும் மத்தியதர மக்களிடையே உள்ள மேல்தட்டு மக்களை குறிவைத்துதான் இந்தக் கடைகள் திறக்கப்பட்டுள்ள எனவும், இதனால் சிறு வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் வராது எனகிறார் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன்.

ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல், இது போன்ற வர்த்தகத்தில் பல நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டிலிருந்து பெரிய அளவில் அந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்க முடிகிறது எனவும் கூறுகிறார்.

இது போன்ற நிறுவனங்கள், இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளிடமிருந்து பொருட்களை நேரடியாக வாங்குவதால் விவசாயிகளும் பலனடைவார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

உலக மயமாக்கலில் ஒரு நாடு ஈடுபடும் போது, குறிப்பிட்ட துறைகளுக்குத் தான் தமது சந்தை திறந்திருக்கும் எனக் கூறமுடியாது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Posted in Agency, Agents, Agriculuture, Ambani, Analysis, Business, Capitalism, Commerce, Consumers, Economy, Exploitation, Farmers, Farming, Farmlands, Finance, Foreign, Globalization, Industry, investors, Kerala, Kozhikode, Loans, Malayalam, Merchants, Middlemen, MNC, Mullakkara Ratnakaran, Reliance, service, SEZ, Small Biz, SSI, Suicide, THIRUVANANTHAPURAM, Trivandrum, Vendors, Wal-Mart, Walmart | Leave a Comment »

‘Sivaji’ the boss – Audio Launch details

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

`சிவாஜி’ படம் மே 8-ல் ரிலீஸ்: பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியீடு

சென்னை, பிப். 20-

ரஜினியின் `சிவாஜி’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி யுள்ளது. படப்பிடிப்பு 2005 டிசம்பர் 13-ந்தேதி தொடங் கியது. இறுதி கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அமெரிக்க இந்தியர்கள் பலர் ரஜினியுடன் நடித்தனர். படப் பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

சிவாஜி படம் தமிழ் புத் தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் ரிலீசாகும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் பரீட்சை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் மார்ச் 13-ல் தொடங்கி ஏப்ரல் 28-ல் முடிகிறது. பள்ளி தேர்வுகளும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. அவை முடிந்த பிறகு `சிவாஜி’யை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

`சிவாஜி’ பாடல் கேசட் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படுகிறது.

`சிவாஜி’ படம் அதிக தியேட்டர்களில் ரிலீசாகும் என்பதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் போகலாம் என்ற தவிப்பு பட அதிபர்களுக்கு இருக்கிறது. எனவே சிவாஜி ரிலீசுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவோ அல்லது ரிலீசாகி சில மாதங் கள் கழித்தோ இதர படங்களை ரிலீஸ் செய்ய சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் திட்டமிட் டுள்ளனர்.

`சிவாஜி’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நாளில் ரிசீலாகிறது. இதற் காக 500 பிரிண்ட்கள் போடப் படுகின்றன.

மலையாள முன்னணி நடிகர்களின் படங்கள் `சிவாஜி’ யால் பாதிக்கும் என்பதால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் அதே தேதியில் கேரளாவில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று அங்குள்ள விநியோகஸ்தர் சங்கங்கள் வற்புறுத்தியுள்ளன. கேரளாவில் `சிவாஜி’ படம் ரூ. 3.10 கோடிக்கு விற் பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாநில சூப்பர் ஸ்டார் களான மம்முட்டி, மோகன் லால், படங்கள் விலைபோகும் தொகையை விட இது அதிகம்.

Posted in AR Rehman, ARR, Audio, Malayalam, music, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rehman, Shankar, Shivaji, Shivaji the boss, Sivaji, Sivaji the Boss, Songs, Tamil Films, Tamil Movies, Telugu | Leave a Comment »

Diamond, Gold sales in India – Kerala ranks second

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

இந்தியாவில் வைர விற்பனையில் கேரளாவுக்கு 2-வது இடம்

திருவனந்தபுரம், பிப். 2-

கேரளாவில் தங்கம் மட்டுமல்ல வைர விற்பனையும் அதிகரித்து வருகிறது. இந்தி யாவில் வைர விற்பனையில் கேரளாவிற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2 வருடங்களில் கேரளாவில் வைர விற்பனை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஒரு வைர வியாபாரி கூறுகிறார்.

அதே சமயம் தங்கவிற்பனை 6 முதல் 8 சதவீதம் தான் உள்ளது. அதாவது வைர விற்பனை தங்கத்தைவிட இருமடங்காக உள்ளது. இப்போதெல்லாம் கேரளாவில் புதுப்பெண்ணி டம் வைரக்கம்மல், வைர மூக்குத்தி, வைர மோதிரம், போதாதற்கு வைர நெக்லசும் அணிந்து காட்சி தருவது சர்வசாதாரணமாக உள்ளது.

அந்த காலத்தில் எல்லாம் ஒரு மூக்கில் வைர மூக்குத்தி அணிவதே பெரிய ஸ்டேட்டஸ் ஆக கருதுவார்கள். இப்போதோ புதுப்பெண்களை வைரத் தாலேயே அலங்கரிக்கிறார்கள். இதற்கு ஏற்ப நகைக்கடைகளில் இப்போது வைரமும் விற் கிறார்கள். வைரங்களுக்கு என கவுண்டர்களும் வைத் துள்ளார்கள்.

பழைய வைரக்கம்மல் கொண்டு வந்தால் புதிய டிசைனில் ரீசெட் செய்து கொடுக்கிறார்கள். ஒன்றரை கேரட் நெக்லசுக்கு அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் கிடைக்கும் அநேகமாக எல்லா வைர நகைகளுக்கும் நகை கடைகளில் `பை-போக்’ கேரண்டி கொடுக்கிறார்கள். எனவே வைர நகை வாங்கு வதை ஒரு முதலீடாக கருதி வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள்.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் திருமண சீசனாகவும் ஜுன், ஜுலை மற்றும் டிசம்பர் ஜனவரி மாதங்கள் என்.ஆர்.ஐ. சீசனாகவும் உள்ளது. இந்த மாதங்களில் தான் என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாட்டில் வசிக்கும் கேரள மக்கள் விடுமுறைக்காக கேரளா வந்து செல்லும் காலமாகும். வெளிநாடுகளில் வைரத்தின் விலை அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளில் இங்கு வந்து திரும்பி செல்லும் மலையாள பெண்களும் வைர நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்தியாதான் நிறைய வைரம் கட் செய்து ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தின்போது வைர மோதிரம் அணிவது இப்போது ஒரு பேஷனாகவே ஆகிவிட்டது. அந்த வைரத்தை கூட பிளாட்டினத்தில் செய்து அணிவிப்பது வழக்கமாகி வருகிறது. ஒரு கிராம் பிளாட்டினமே ரூ.2000 ஆகிறது.

Posted in Blood diamonds, Bullion, Buy, Diamond, Gold, Kerala, Malayalam, markets, Marriages, Metals, NRI, Prices, Seasons, Wedding | Leave a Comment »

Veera. Jeeva Prabhakaran: Kerala’s adamant attitude results in 40 acre of grains loss for Tamil Nadu – Mullai Periyar

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

பிடிவாதத்தால் கடலுக்குச் சென்றது 4 டி.எம்.சி. தண்ணீர்: 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு?

வீர. ஜீவா பிரபாகரன்

மதுரை, ஜன. 30: பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, நீர்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த கேரள அரசு மறுத்ததால் மதுரை மாவட்டத்தில் தற்போது 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து, கேரள அரசிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப். 27-ல் தீர்ப்பு அளித்தது.

ஆனால், இத்தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்தாமல் காலம் தாழ்த்துவதற்கு ஏற்ற வகையில் கேரள சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

இரு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையின்போதும், உடன்பாடு காண்பதற்கான முயற்சியில் கேரள அரசு சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.

மேலும், பிரச்சினையைத் திசை திருப்பும் வகையில் கேரள முதல்வரின் இணைய தளத்தின் மூலம் பெரியாறு அணை குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கேரள அமைச்சர்களும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர்.

கடலுக்குச் சென்ற தண்ணீர்: பெரியாறு அணையின் இருபோக, ஒருபோக மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியைச் சேர்ந்த 1.45 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு கடந்த அக்டோபர் 23-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

உரிய நேரத்தில் பருவமழை தொடங்கியதாலும் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாலும், இந்த ஆண்டு போதிய பாசன நீர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து மதுரை மாவட்ட விவசாயிகள் நெல் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டினர்.

விவசாயிகள் எதிர்பார்த்தது போலவே, தொடர் மழையால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. எனினும், 136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால் 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது.

காய்ந்து வரும் நெற்பயிர்: கடந்த அக்.23-ல் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், நவம்பர் முதல் வாரம் வரை பல்வேறு பகுதியிலும் நடவுப் பணிகள் படிப்படியாக நடைபெற்றன. நெற் பயிர் முழு விளைச்சல் பெற 120 நாள்களுக்குத் தண்ணீர் தேவை.

ஆனால், பெரியாறு, வைகை உள்ளிட்ட அணைகளில் போதிய நீர் இன்மையால் தற்போது பாசனப் பகுதிக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதுவும், பயிருக்குக் கடைசி வரை தண்ணீர் அளிக்க வாய்ப்பில்லை.

இந் நிலையில், மதுரை மாவட்டத்தில் தற்போது நெல் பயிரிட்டுள்ள 1 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கரில் 40 ஆயிரம் ஏக்கர் போதிய தண்ணீர் இன்றி பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் கேரள அரசின் மீது வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளோம். பெரியாறு அணைப் பிரச்சினை நாட்டின் வளர்ச்சி குறித்த கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை. இப் பிரச்சினை கேரளத்தில் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது’ என்றும் பெரியாறு பாசன ஒருபோக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவர் எம். மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

குறைந்தது நீர்மட்டம்: பெரியாறு அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 115.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 590 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 130.90 அடியாக இருந்தது.

அரசியலைத் தாண்டிய உறவு:

தமிழகத்தில் 1946-ல் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது குமுளியிலிருந்து கீழகூடலூரில் வந்து விழும் தண்ணீரிலிருந்து மின்சார உற்பத்தி செய்யும் திட்டம் தீட்டப்பட்டது.

அதற்கு, பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை எதிர்ப்புத் தெரிவித்தார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பர் பி. ராமமூர்த்தியை முதல்வர் ராஜாஜி அனுப்பி வைத்தார்.

பேச்சுவார்த்தை நடத்திய ராமமூர்த்தி, கேரளத்திற்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 2 பைசா அளித்தால் அம்மாநில அரசு சம்மதிக்கும் என்ற கருத்தை அறிந்து ராஜாஜியிடம் தெரிவித்து, அதன்படி உடன்பாடு ஏற்பட்டு பெரியாறு மின்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அன்று, இப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரசியலைக் கடந்து தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டினர். இன்று அரசியல் ஆதாயமே பிரதானமாகிவிட்டது.

—————————————————————————————–

தொடர்கதையாகிவிட்ட முல்லைப் பெரியாறு பிரச்னை

பா. ஜெகதீசன்

கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1,300 அடி தூரத்தில் ரூ.216 கோடி செலவில் புதிய அணையைக் கட்டுவது தொடர்பான அறிவிப்பை கேரள சட்டப் பேரவையில் அந்த மாநில நீர் ஆதாரத் துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரன் வெளியிட்டுள்ளார்.

மூன்று தலைமுறைகளாக கேரளத்துடன் நீடித்து வரும் இந்த விவகாரத்தை இடியாப்பச் சிக்கலாக்கி, தொடர்கதையாக ஆக்கவே கேரளத்தின் இந்த அறிவிப்பு பயன்படும் என்பது தமிழகப் பாசனத் துறை வல்லுநர்களின் கருத்து.

கேரளத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கடலில் கலக்கும் பெரியாறு, முல்லை ஆகிய நதிகளுக்கு இடையே அணை கட்டும் பணியை 1874-ல் பிரிட்டனைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் பென்னி குயிக் தொடங்கினார்.

அரசின் நிதி உதவியுடன், அடர்ந்த வனப் பகுதியில் சுமார் 3,500 அடி உயரத்தில் அணை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆரம்பநிலையில் இந்தப் பணி தோல்வி அடைந்தது. எனவே, அரசு தனது நிதி உதவியைத் தொடராமல் நிறுத்தி விட்டது.

எனினும், பென்னி குயிக் தனது சொத்துக்களையும், மனைவியின் நகைகளையும் விற்று, அணை கட்டும் பணியை தொடர்ந்தார்.

1895-ல் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது.

தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட இந்த அணை தற்போதும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் குடிநீர் -பாசன வசதி மேம்பாட்டுக்கு அடித்தளமாகத் திகழ்கிறது.

நூற்றாண்டு கொண்டாடிய இந்த அணையில் கசிவு ஏற்பட்டதாக கேரளத்தில் இருந்து வெளியாகும் சில இதழ்களில் (தவறான) செய்திகள் வெளியாகின.

1979-ல் அணையின் பாதுகாப்பு தொடர்பாக சில அச்சங்களை கேரள அரசு எழுப்பியது.

இதையடுத்து, அணையை மத்திய நீர்வளக் குழுமம் ஆய்வு செய்து, அணையைப் பலப்படுத்த 3 வகையான பணிகளை மேற்கொள்ளும்படி தமிழகத்துக்குப் பரிந்துரைத்தது.

அதன்பேரில் அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவான 152 அடியில் இருந்து தாற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்டது.

தக்க பாதுகாப்பு -பலப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்து முடித்த பிறகு, நீர்மட்டத்தை 145 அடிக்கு உயர்த்தலாம் எனவும் குழுமம் பரிந்துரைத்தது.

பேபி டேம் எனப்படும் சிற்றணையைப் பலப்படுத்துதல், கைப்பிடிச் சுவற்றை 2 அடி உயர்த்துவது ஆகிய பணிகளைக் கேரள அரசு எதிர்த்ததால், முடிக்க இயலவில்லை.

குழுமம் கூறியபடி அணையைப் பலப்படுத்தும் இதர பணிகளைப் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசு நிறைவேற்றியது.

அதன்பிறகும், அணையின் நீர்த் தேக்கும் அளவை உயர்த்த கேரள அரசு முன்வரவில்லை.

இதுதொடர்பாக பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த சிலரும், நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என வலியுறுத்தி கேரளத்தைச் சேர்ந்த சிலரும் (கேரளம் மற்றும் சென்னை) உயர் நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

பின்னர் இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்பேரில், 19.5.2000-ல் தமிழக -கேரள முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது.

அந்தக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயவும், தக்க பரிந்துரைகளை அளிக்கவும், வல்லுநர் குழுவை மத்திய அரசு நியமித்தது.

அந்தக் குழு 2001 மார்ச்சில் அரசுக்கு அறிக்கை அளித்தது. “சிற்றணையைப் பலப்படுத்தும் பணி முடிந்த பிறகு, பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி உயரத்துக்கு நீர் மட்டத்தை உயர்த்துவது பற்றி ஆய்வு செய்யலாம்.

அதற்கு முதற்கட்டமாக நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என அந்தக் குழு பரிந்துரை செய்தது. அதை தமிழகம் ஏற்றது.

இந்த நிலையில், அணையில் நீர் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து 2006 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்தத் தீர்ப்பு இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெரிதும் உதவும் என பாசனத் துறை வல்லுநர்கள் கருதினர்; அவர்களைப் போலவே, விவசாயிகளும் நம்பினர்.

அணையில் தேக்கப்படும் 142 அடி நீரில் 104 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டுமே பாசனத்துக்கு எடுக்க இயலும்.

பெரியாறு அணையில் கடந்த 25 ஆண்டுகளாக 136 அடிவரை மட்டுமே தேக்க அனுமதிக்கப்பட்டதால் 6 டி.எம்.சி. மட்டுமே நீரைத் தேக்க முடிந்தது. 152 அடிவரை நீரைத் தேக்க அனுமதிக்கப்பட்டால் 10.5 டி.எம்.சி. நீரைத் தேக்க முடியும்.

தற்போது 142 அடி நீரைத் தேக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் கூடுதலாக 1.54 டி.எம்.சி. நீரைத் தேக்க இயலும்.

பெரியாறு அணையின் நீர்த்தேக்கும் அளவை உயர்த்தும் பிரச்னையால் தமிழகத்துக்கு கடந்த 29 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு பயிர் இழப்பும், மின் உற்பத்தி இழப்பும் ஏற்பட்டுள்ளன.

கேரள அரசின் பிடிவாதத்தால் மழைக் காலங்களில் முழுமையாக நீரைத் தேக்க இயலாமல் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 35 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி, கடலில் கலந்தது.

மாநிலங்களுக்கு இடையே முற்றுப் பெறாத தொடர்கதையாக நீடிக்கும் இத்தகைய நதி நீர்ப் பகிர்வுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒரே வழிதான் உள்ளது.

தென்னிந்திய நதிகளை விரைந்து இணைப்பது ஒன்று தான் அந்த வழி.

————————————————————————————————————————————————–

பெரியாறு அணையா? தேசிய ஒருமைப்பாடா?

கடந்த 1979ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 28 ஆண்டுகளாக நீடித்து வரும் பெரியாறு அணைப் பிரச்னை இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

பெரியாற்றின் வடிமுகப் பரப்பில் தமிழ் நாட்டிலும் சில பகுதிகள் உள்ளன. இந்தப் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர். இது பெரியாறு அணையின் மொத்த வடிமுகப் பரப்பில் சுமார் 20 விழுக்காடு ஆகும். பெரி யாறு அணைக்கு வரும் நீரின் அளவில் 88.90 சதவிகிதம் நமது எல்லைக்குள்ளேயே பெய்யும் மழையினால் கிடைக்கிறது.

கேரள அரசு பெரியாற்றில் 16 அணைக ளைக் கட்டியுள்ளது. இந்த அத்தனை அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 9 சதவிகிதம் மட்டுமே பெரியாறு அணை யின் நீரில் பயன்படுத்த நாம் உரிமை பெற் றுள்ளோம். ஆனால் இந்தச் சிறு அளவைக் கூட கேரள அரசியல்வாதிகளால் பொறுக் கமுடியவில்லை.

பெரியாறு அணை உடன்பாட்டின்படி மீன்பிடிக்கும் உரிமையும் சுற்றுலாத் தளமா கப் பயன்படுத்தும் உரிமையும் தமிழகத் துக்கு உண்டு. ஆனால் அந்த உரிமைக ளைத் தமிழக அரசு கேரள அரசுக்கு விட் டுக்கொடுத்தது. இதன் மூலம் ஆண்டுதோ றும் கேரள அரசுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. பெரியாறு அணை கட்டப்படாமல் இருந்தாலோ இந்த உரிமைகளைத் தமிழக அரசு விட்டுக் கொடுக்காமல் இருந்தாலோ இந்த வருமா னம் கேரள அரசுக்குக் கிடைக்காது.

பெரியாறு அணை பலவீனமாக இருப்ப தாகவும், எந்த நேரமும் இடிந்து விழக்கூடும் அபாயம் இருப்பதால் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க வேண்டுமெனவும் கேரளம் பிடிவாதமாக வற்புறுத்தியதன் விளைவாக மத்திய நீர்ப் பாசன ஆணையம் தலையிட்டு அணை யைப் பலப்படுத்தும் வேலைகள் முடிவடை யும் வரை நீர்மட்டத்தைக் குறைக்கும்படி ஆணையிட்டது. இதன் விளைவாக கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாகப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாக இருந்து வருகிறது. இதன் விளைவாகத் தமிழ்நாட்டில் பெரும் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி இல்லாமல் பெரும் பாதிப் புக்கு உள்ளாகின.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்க ளில் பெரியாறு நீரினால் பாசனம் செய்யப் படும் நிலத்தின் பரப்பளவு சுமார் 2 லட்சம் ஏக்கர் ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்ட தன் விளைவாக மேற்கண்ட நிலங்களில் பின்வருமாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தரிசாக மாறிய நிலப்பரப்பு 38,000 ஏக் கர் இருபோக சாகுபடியாக இருந்து ஒரு போக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86,000 ஏக்கர். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்குழாய் கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு – 53,000 ஏக்கர். ஆக மொத்தம் 2 லட்சம் ஏக்கரில் 1 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக விவசாய உற்பத்தியில் இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 55.80 கோடியாகும்.
மின் உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 75 கோடியாகும். ஆக மொத்தம் தமிழகத் துக்கு இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 130.80 கோடியாகும்.

1980ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டுவரை 28 ஆண்டுகாலமாக மொத்த இழப்பு 3662.40 கோடியாகும்.

1986ஆம் ஆண்டில் அணையைப் பலப்ப டுத்தும் வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற் கும் கேரளம் சம்மதிக்கவில்லை. இது சம் பந்தமாக கேரளம், தமிழகம் ஆகிய மாநி லங்களின் உயர் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக் குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டன. கடந்த 28-4-2000 அன்று இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசும்படி மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதற்கிணங்க 19-5- 2000 அன்று இரு மாநிலப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அணையின் வலிமையை ஆராய்வதற்காக ஒரு குழுவை அமைப்ப தென முடிவு செய்யப்பட்டது.

அதற்கிணங்க அமைக்கப்பட்ட குழு 2001 மார்ச்சில் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் எனப் பரிந் துரை செய்தது. மற்றுமுள்ள வேலைகளை முடித்தபிறகு 152 அடிவரை உயர்த்தலாம் என்று கூறியது. இந்தப் பரிந்துரை உச்ச நீதி மன்றத்திற்கு அளிக்கப்பட்டது. 27-2-2006 அன்று உச்ச நீதிமன்றம் இந்தப் பரிந்து ரையை ஏற்று அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிவரை உயர்த்த லாம் எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த கேரள அரசு 18-3-2006 அன்று கேரள சட்டமன் றத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்து வதற்கு எதிரான சட்டம் ஒன்றை நிறைவேற் றியது. கேரள சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் இந் தச் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட் டது என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

இதற்கு எதிராக தமிழக அரசு 31-3-2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை அளித்தது. கேரள சட்டத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அணை யின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவ தைக் கேரளம் தடுக்கக்கூடாது என்றும் அந்த மனுவில் வேண்டிக் கொண்டது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேரள அரசின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் 27-7-2006 அன்று தள்ளுபடி செய்தது. அத்துடன் இரு மாநில அரசுகளும் கூடிப்பேச வேண்டும் என்றும் அல்லது இந்திய அரசு தலையிட்டு இப்பிரச்னையைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கேட்டுக்கொண்டது. அதற்கி ணங்க 29-11-2006 அன்று புதுதில்லியில் இரு மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டத்தை மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கூட்டினார். அதில் எந்த முடி வும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பின்னர் 18-12-2006 அன்று இரு மாநில அமைச்சர் கள் கூட்டத்தை அவர் கூட்டினார். இந்த இருகூட்டங்களிலும் எத்தகைய முடிவும் ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு மனுவை அளித் திருக்க வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்னையைத் தீர்க்க வழி யில்லை என்பதால் உச்ச நீதிமன்றம் அளித் திருக்கிற தீர்ப்பை உடனடியாக நிறைவேற் றுமாறு மத்திய அரசுக்கும் கேரள அரசுக் கும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமி ழக அரசு அந்த மனுவில் வலியுறுத்தியி ருக்க வேண்டும்.
அல்லது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கி ணங்க அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்க வேண்டும். அதை கேரள அரசு தடுத்திருக்குமானால், அந்த அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக் கினை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்க வேண்டும். ஆனால் மேலே கண்ட இரண் டையுமே தமிழக அரசு இதுவரை மேற் கொள்ளவில்லை என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெரியாறு அணை நீரில் தமிழகத்திற்கு உள்ள சட்டப்படியான உரி மைகளை நிலைநாட்ட தமிழக அரசு அடி யோடு தவறிவிட்டது.

தமிழக அரசின் இந்தத் தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் புரிந்துகொண்ட கேர ளம் அடுத்த நடவடிக்கையை மேற்கொள் ளத் திட்டமிட்டது. சட்டப்படியும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவதை ஒருபோதும் தடுக்க முடி யாது என்பதை உணர்ந்துகொண்ட கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டும் என்ற திட்டத்தை வலியுறுத்தத் தொடங்கியது.

ஏற்கெனவே மத்திய நீர்ப்பாசன கமிஷன் அமைத்த நிபுணர் குழுக்களும் உச்ச நீதிமன் றம் அமைத்த நிபுணர் குழுவும், அணை பல மாக உள்ளது. எனவே நீர்மட்டத்தை உயர்த் தலாம் எனப் பரிந்துரைகள் வழங்கிய பிறகு கேரள அரசு தானாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து அணையை ஆய்வுசெய்யும்படி கூறியது. இது சட்டவிரோதமானதாகும்.
இந்த நிபுணர் குழு ஆய்வு செய்வதற்குத் தடைவிதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை தமி ழக அரசு அணுகியிருக்க வேண்டும். அவ் வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.

பெரியாறு அணையில் கசிவு அதிகமாக இருக்கிறது என கேரள அரசு நியமித்த நிபு ணர் குழு கூறுவது முற்றிலும் பொய்யான தகவலாகும். கேரள மாநிலத்தில் பல்வேறு அணைகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் கசிவு நீரின் அளவு குறித்து கேரள மாநில அரசினால் அமைக்கப்பட்டுள்ள நீராதார வளர்ச்சி மற்றும் நிர்வாகம் குறித்த மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு: 1895ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெரி யாறு அணையில் அதிகப்பட்ச கசிவு நிமி டத்திற்கு 89.371 லிட்டர் ஆகும். 112 ஆண் டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான அணையில் இந்த அளவுதான் கசிவு ஆகி றது.

1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட குட்டி யாடி அணையில் நிமிடத்திற்கு 249.77 லிட் டர் அளவுக்குக் கசிவு ஏற்படுகிறது. அதா வது 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிய அணையில் இவ்வளவு அதிகமான கசிவு ஏற்படுகிறது.

1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட பம்பா அணையில் நிமிடத்திற்கு 96.00 லிட்டர் அளவுக்குக் கசிவு ஏற்படுகிறது. அதாவது 41 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அணை கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியாறு அணைக்குப் பிறகு கேரள மாநிலத்தில் கட்டப்பட்ட அணைகளில் இவ்வளவு அதிகமான அளவில் கசிவு ஏற்ப டும்போது அந்த அணைகளை இடிக்க வேண்டும் என்று கேரள அரசு கூறவில்லை.
மாறாக மேற்கண்ட அணைகளைவிட மிகக்குறைந்த அளவுக்கே கசியும் பெரி யாறு அணையை இடிக்க வேண்டும் என்று கூசாமல் கூறுகிறது.

கேரள அரசு அமைத்த நிபுணர் குழு எதிர்பார்த்ததுபோல அணை பலவீனமாக இருக்கிறது. அணையில் கசிவு அதிகமாகி யிருக்கிறது. எனவே இந்த அணையை முற் றிலுமாக இடித்துவிட்டு புதிய அணை கட் டவேண்டும் எனப் பரிந்துரை செய்துள் ளது. இந்தப் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக்கொண்ட கேரள அரசு அணை கட் டுவதற்கான அலுவலகத்தையும் திறந்துவிட் டது. இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? புதிய அணை கட்டுவதற்கு கேரள அர சுக்குச் சட்டப்படி உரிமை உண்டு. ஆனால் பழைய அணையும் இரு மாநிலங்களுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட 999 ஆண்டுகால உடன்பாடும் அதன்படி நமக் குள்ள சட்டப்பூர்வமான உரிமைகளும் நீடிக்கிறது என்ற நிலைப்பாட்டை வற்புறுத் தும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் ஏக மனதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண் டும். இதில் தமிழகத்தில் உள்ள சகல கட்சிக ளும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்.

பெரியாறு அணைக்குக் கீழே இடுக்கி அணைக்கு மேலே எந்த இடமும் புதிய அணை கட்டுவதற்கு ஏற்றதல்ல. ஏற்கெ னவே கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் எத்தகைய கட்டட வேலையும் 3 ஆண்டுக ளுக்கு மேற்கொள்ளக்கூடாது என அர சாணை பிறப்பித்துள்ளது. தானே பிறப் பித்த இந்த ஆணையை மீறி அணை கட்ட முடியாது. இது கேரள அரசுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் வேண்டுமென்றே புதிய அணை கட்டப்போவதாக அறிவித்து கேரள மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி நடைபெறுகிறது.

புதிய அணை கட்டப்படுவதற்கு கேரள அரசு தேர்ந்தெடுத்த இடம் வனப்பகுதிக் குள் அமைந்துள்ளது. அப்பகுதியில் அணை கட்டவோ அதற்கான ஆய்வு நடத் தவோ மத்திய வன அமைச்சகத்திடம் அனு மதி பெற வேண்டும். இதற்காக கேரள அரசு கேரள வனத்துறை மூலம் மத்திய வனத்துறை அமைச்சகத்திற்கு அனுமதி வேண்டி நவம்பர் முதல் வாரத்தில் கடிதம் அனுப்பியிருந்தது. மத்திய வனத்துறை அமைச்சகம் அளித்த பதிலில் “”புதிய அணை கட்டுவதற்குத் தேர்வு செய்யப் பட்ட இடம் வனவிலங்கு சரணாலயமாக உள்ளது. வனவிலங்கு சரணாலயத்தில் அணை கட்ட அனுமதிக்க முடியாது.
வனப்பகுதியில் ஆழமாகக் குழிதோண்டி ஆய்வு நடத்தவும் அனுமதிக்க முடியாது” எனத் திட்டவட்டமான பதிலை அனுப்பி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தச் செய்தியை அடியோடு மறைத்து கேரள அரசு புதிய அணை கட்டு வதற்கான அலுவலகத்தைத் திறந்து நாட கம் ஆடியுள்ளது.

இதன் மூலம் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுப்பதற்குத் திட்டமிட்டு கேரள அரசு செயல்படுகிறது.
இதைத் தமிழக அரசும் அனைத்து அரசி யல் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று முறிய டிக்க வேண்டும்.
புதிய அணை கட்டுவதை கேரளம் தொடர்ந்து வற்புறுத்துமானால் பரம்பிக்கு ளம் ஆழியாறு திட்டத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 8 அணைகளுக்கு மேலாக மேலும் 2 அணைகளைக் கட்டும் வேலை யில் தமிழக அரசு ஈடுபடப்போவதாக அறி விக்கவேண்டும். இப்படிப் பதிலடி கொடுப் பதன் மூலம்தான் நாம் கேரளத்தின் தீய நோக்கத்தை முறியடிக்க முடியும்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரள மாநி லத்தில் ஓடும் நதிகளுக்குத் தமிழகம் 93 டி.எம்.சி. நீரை அளிக்கிறது. இதற்குப் பதி லாக கேரளத்தில் உற்பத்தியாகி தமிழகத் திற்கு அளிக்கப்படும் நீரின் அளவு கீழே குறிக்கப்பட்டுள்ளது.
பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக் கப்பட்டால் நமக்கு 10.6 டி.எம்.சி. நீர் மட் டுமே கிடைக்கும்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டப்படி நமக்கு 32.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கி றது.

Posted in Agriculture, Dam, Dinamani, Electricity, Farmer, Farming, Grain Fields, Grains, Growth, Impact, Integration, Irrigation, Karunanidhi, Kerala, Madurai, Malayalam, Monsoon, Mullai, Mullai Periyaar, Mullai Periyar, Mullai Periyaru, Paddy, Paddy Fields, Periyaar, Periyaaru, Periyar, Politics, Power, Rain, Rajaji, rice, River, State, Tamil Nadu, Vaigai, Vaikai, Veera. Jeeva Prabhakaran, Water | 2 Comments »

Mammootty & National Awards – Comment on Balungu Kai Opu

Posted by Snapjudge மேல் ஜனவரி 22, 2007

இருபடங்களில் சிறப்பாக நடித்தும் தேசிய விருதை இழந்து விட்டேன்: மம்முட்டி வருத்தம்

சென்னை, ஜன. 22- மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஏற்கனவே பல படங்களுக்கு சிறந்த நடிக ருக்கான விருது பெற்றுள்ளார். 1989-ல் `ஒரு வடக்கன் வீரகதா’ படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. 1993-ல் மதிலுகள் படத்தில் நடித்ததற்காக விருது கிடைத்தது. `விதாயன் மற்றும் பொந்தன் மாதா‘ ஆகிய படங்களுக்கும் அவருக்கு விருது கள் கிடைத்தன.

1999-ல் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கார் படத்தில் நடித்ததற்காக விருது பெற் றார்.

தற்போது மம்முட்டி நடித்த `பலுங்கு கை ஒப்பு‘ ஆகிய இரு படங்கள் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகின்றன. இந்த படங்களுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் அவர் வருத்தத்தில் உள்ளார்.

இதுகுறித்து மம்முட்டி கூறியதாவது

`பலுங்கு கை ஒப்பு’ படங்கள் சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. இதில் எனது நடிப்பு சிறப்பாக இருந்தது. நிறைய பேரிடம் இருந்து பாராட்டுகள் வந்தன. குறிப்பாக `கை ஒப்பு’ படத்துக்கு அதிக வரவேற்பு இருந்தது. டெலிபோனில் ஏராளம் பேர் பாராட்டினார்கள். ரொம்ப மகிழ்ச்சியடைந்தேன். பலுங்கு படத்துக்கும் பாராட்டுகள் குவிந்தன.

எனவே இப்படங்கள் எனக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் என்று எதிர் பார்த்தேன் அது நடக்கவில்லை. விருதுகளை இழந்து விட்டது. வருத்தமாக உள்ளது.

இவ்வாறு மம்முட்டி கூறினார்.

Posted in Babasaheb Ambedkar, Films, Kerala, Malayalam, Mammootty, Mammooty, Mammutty, Mammuty, Mathilugal, Mollywood, Movies, National Award, Oru Vadakkan Veerakatha, Palungu Kai Oppu, Ponthan Madha, Recognition, Vidhayan | Leave a Comment »

Mohanlal gets Ujala-Asianet Film ‘best actor’ award

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

ஏசியாநெட் விருது: சிறந்த நடிகை-பத்மபிரியா; சிறந்த நடிகர்-மோகன்லால்

திருவனந்தபுரம், ஜன.21-

ஏசியா நெட் நிறுவனம் ஆண்டுதோறும் மலையாள சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகராக மோகன்லாலும், சிறந்த நடிகையாக பத்மபிரியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் விருது வழங்கப்படுகிறது.

சிறந்த படமாக `கிளாஸ் மெட்’ மலையாள படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு மற்றும் விருது வழங்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவை நடிகராக இன்னசென்ட், சிறந்த வில்லன் நடிகராக சித்திக், சிறந்த இசையமைப்பாளராக ரவீந்திரன், சிறந்த டைரக்டராக ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது வழங்கும் விழா வருகிற 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

Posted in Actress, Aran, Army, Asianet, Award, Cinema, Classmate, Films, Jeeva, Keerthicharka, Kerala, Major Ravi, Malayalam, Mohanlal, Movies, Padmapriya, Sobhana Parameshwaran Nair, Ujala | Leave a Comment »