நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு: அடுத்த மாதம் 7-ந் தேதி மாளவிகா திருமணம்
நடிகை மாளவிகாவுக்கும் கேரளாவை சேர்ந்த சுமேசுக் கும் திருமணம் நிச்சய மானது.
திருமண தேதியை அறிவிப் பதற்காக மாளவிகா இன்று காலை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர் களை சந்தித்தார். திருமண அழைப்பிதழை தன்கைப்பட நிருபர்களுக்கு வழங்கி அழைத்தார்.
அப்போது மாளவிகா அளித்த பேட்டி வருமாறு:-
எனக்கும் சுமேசுக்கும் மார்ச் 7-ந் தேதி பெங்களூரில் திருமணம் நடக்கிறது. பகல் 12.05 மணிக்கு கோவிலில் முகர்த்தம் நடைபெறும். இரவு 8.00 மணிக்கு திருமண வரவேற்பு நடைபெறும்.
நிறைய நடிகர், நடிகை களை திருமணத்துக்கு அழைத்துள்ளேன். சென்னை யில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
மாப்பிள்ளை சுமேஷ் கேரளாவை சேர்ந்தவர் ஒரு நண்பர் மூலம் எங்களுக்குள் முதல் அறிமுகம் நடந்தது. அப்போது காதலிக்கவில்லை பிறகு அவ்வப்போது விருந்துகளில் சந்தித்தோம் கொஞ்சம் கொஞ்சமாக காதல் துளிர்விட்டது. இரு வீட்டு பெற்றொரும் எங்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
தேனிலவுக்கு எங்கே போவது என்று முடிவு செய்ய வில்லை. எனக்கு பிடித்த நாடு ஐரோப்பா. திருமணத்துக்கு பின் பொருத்தமான பாத்தி ரங்களில் நடிப்பேன். முத்தக் காட்சியில் இது வரை நடிக்க வில்லை. கவர்ச்சியாகவும் நடிக்க வில்லை திருமணத்துக்கு பிறகும் அது மாதிரி நடிக்க மாட்டேன்.
இந்தியில் பல நடிகை கள் திருமணத்துக்கு பிறகும் கதாநாயகிகளாக நடித்து ஜெயித்துள்ளனர் கட்டுவிரியன் என்ற படத்தில் அம்மா, மகள் ஆகிய இரு கேரக்டர்களில் நடிக்கிறேன்.
என்னைப் பற்றி சில கிசு கிசுக்கள் பரவின. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
நடிகைகளில் ரஞ்சிதா, ஜோதிகா, ரீமாசென் ஆகியோர் எனக்கு நெருங்கிய தோழிகள் நடிகர்களில் அப்பாஸ், ஷாம், சிம்பு, நெருக்கமானவர்கள்.
சுமேசுக்கு ஆந்திராவில் வீடு இருக்கிறது. திருமணத்துக்கு பின் அங்கு குடியேறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலத்தீவில் மாளவிகா தேனிலவு
சென்னை, மார்ச்1-
வெற்றிகொடி கட்டு, திருட்டுப்பயலே, உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மாளவிகா. சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் மூலம் மேலும் பிரபலமானவர்.
மாளவிகாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் பெயர் சுரேஷ், மும்பை தொழில் அதிபர். இவர்கள் திருமணம் வருகிற 7ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.
திருமண அழைப்பிதழ்களை மாளவிகா நேரில் கொடுத்து அழைத்து வருகிறார். ஜோதிகா, ரீமாசென், சிம்பு, ரஞ்சிதா, ஷாம் ஆகியோருக்கு அழைப்பிதழை வீட்டில் கொண்டு கொடுத்தார்.
தேனிலவு கொண்டாட மாளவிகா மாலத்தீவு செல்கிறார்.
திருமணத்துக்கு பின் தொடர்ந்து நடிப்பேன் என்று மாளவிகா அறிவித்துள்ளார். தொடர்ந்து நடிக்க சுரேஷ் அனுமதி கொடுத்துள்ளார். அதிக கவர்ச்சி காட்டாமல் நடிப்பது என்று முடிவெடுத்துள்ளார்.
நடிகை மாளவிகா-சுமேஷ் திருமணம் பெங்களூரில் நடந்தது
பெங்களூர், மார்ச் 8: நடிகை மாளவிகாவுக்கும், கேரளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷுக்கும் பெங்களூரில் புதன்கிழமை திருமணம் நடந்தது.
வெற்றிக் கொடி கட்டு, திருட்டுப்பயலே உள்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் மாளவிகா. கேரளத்தைச் சேர்ந்த சுமேஷ் என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார். சுமேஷ் மும்பையில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர்களது காதல் திருமணத்துக்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் மாளவிகா தனது திருமணத் தேதியை கடந்த பிப்ரவரி 20-ம் தேதி சென்னையில் நிருபர்களிடையே அறிவித்தார்.
அதன்படி பெங்களூர் ராணுவ பயிற்சி மையத்தில் (ஏஎஸ்சி) உள்ள கோயிலில் அவர்களது கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் கன்னட திரைப்படத் துறையினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருமணத்துக்கு பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் ஆந்திரத்தில் உள்ள கணவர் சுமேஷுக்கு சொந்தமான வீட்டில் குடியேறவுள்ளதாகவும் மாளவிகா ஏற்கெனவே கூறியிருந்தார்.