Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Major’ Category

RAW book row – CBI Raids: Violation of Official Secrets Act

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2007

நியாயமில்லை, நியாயமேயில்லை…!

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி குறிப்பிட்ட காலவரம்புக்குப் பிறகு தனது அனுபவங்களையும் பதவிக்காலத்தில் சந்தித்த பிரச்னைகள் மற்றும் சம்பவங்களையும் புத்தகமாக எழுதலாமா கூடாதா? எழுதக் கூடாது என்று தனது துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு ( Research and Analysis Wing).  இந்திய அரசின் வெளியுறவு ரகசியப் புலனாய்வுத் துறைதான் “ரா’ ( RAW) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் பிரிவு.

இப்படியோர் உத்தரவு பிறப்பித்ததற்குக் காரணம், இந்தப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வி.கே. சிங் என்பவர் தனது பணிக்கால அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டதுதான். “ரா’ அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் ஊழலையும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்களையும், ரகசியக் கண்காணிப்புக்காக அரசால் ஒதுக்கப்படும் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் தனது புத்தகத்தில் அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்ததுதான் நமது புலனாய்வுத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

புலனாய்வுத் துறையைப் பற்றிய விமர்சனங்கள் எழக்கூடாது என்பதாலும் அதைப் பற்றி பேசினாலோ கேள்வி கேட்டாலோ அது தேசத் துரோகம் என்பதுபோலக் கருதப்படுவதாலும் அதிகாரிகள் எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படாமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர் என்கிற அந்த அதிகாரியின் குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையை எழுப்பியதோ இல்லையோ புலனாய்வுத் துறையினரிடம் கோபத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. மத்திய புலனாய்வுத் துறை ( C.B.I) யின் மூலம், அந்த ஓய்வுபெற்ற அதிகாரி மற்றும் அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் ஆகிய இருவரின் வீடுகளும் சோதனையிடப்பட்டன.

அந்தப் புத்தகத்தில் இரண்டு முக்கியமான பிரச்னைகளை எழுப்பி இருக்கிறார் மேஜர் ஜெனரல் சிங். முதலாவது, “ரா’ அமைப்பு, ஆட்சியாளர்களால் எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பது. மக்கள் வரிப்பணம் புலனாய்வு என்கிற பெயரில் கணக்கு வழக்கே இல்லாமல் செலவழிக்கப்படுவதால், “ரா’ அமைப்பின் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் செலவுகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் சிங் ஆலோசனை கூறியிருக்கிறார்.

மேஜர் ஜெனரல் கூறியிருக்கும் சம்பவங்களும் குற்றச்சாட்டுகளும் தவறு, உண்மைக்குப் புறம்பானவை என்றால், அவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்குத் தொடர்வதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் எழுப்பி இருக்கும் பிரச்னைகளும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களும், அரசு ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் என்கிற வரம்பிற்குள் உட்படாது. இந்த நிலையில், அவர் மீது தொடுக்கப்பட்ட மத்திய புலனாய்வுத் துறை சோதனை, அந்தத் துறை எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், “ரா’ அமைப்பிலுள்ள அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதையும்தான் காட்டுகிறது.

இந்தப் பிரச்னையில் இன்னொரு விஷயமும் அடங்கும். 1923-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் அடிமை இந்தியாவை அடக்கியாள உருவாக்கப்பட்ட அரசின் ரகசியக் காப்புச் சட்டம் ( Official Secrets Act) இப்போதும் தொடர வேண்டிய அவசியம்தான் என்ன? எந்தவிதக் கேள்வியும் இல்லாமல், சாட்சிகள் இல்லாமல், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் தேசநலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறிக் கைது செய்து சிறையிலடைக்கும் வெள்ளையர் கால அரசின் ரகசியக் காப்புச் சட்டம் இப்போதும் தொடர்கிறது என்பதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்தியக் குடியரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்திபடைத்த குடிமகன், அடக்குமுறை ஏகாதிபத்திய ஆட்சிக் கால சட்டங்கள் காரணமாக சுதந்திரமாக நடமாட முடியாது என்றால் அது நியாயமில்லை. எந்தவொரு துறையும் மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருப்பது என்பது நியாயமே இல்லை.

Posted in Abuses, Airforce, Army, Author, Books, CBI, Center, Contempt, Experiences, FBI, General, Govt, Intelligence, leak, Major, Military, Navy, Non-fiction, Officer, Oppression, OSA, Politics, Power, Publisher, Raids, RAW, Secrets, Singh, Violation, Writer, Writing | 1 Comment »

Love Story: Salem-1 MLA Ravichandran’s daughter elopes

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

காதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை, ஜன.20: காதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸôரால் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

18 வயது நிரம்பாத அப்பெண்ணை அவரது பெற்றோருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.

சேலம்-1 தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ரவிச்சந்திரனின் மகள் ஆர். கலைவாணி, சேலத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. படித்துவருகிறார்.

கடந்த 25-11-2006 அன்று அவர் காணாமல் போய்விட்டார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார் ரவிச்சந்திரன்.

இதையடுத்து கலைவாணியைத் தேடி கண்டுபிடிக்குமாறு சேலம் போலீஸôருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கலைவாணியும் அவரது காதலன் சிவகுமாரும் ஹைதராபாதில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களை அங்கிருந்து அழைத்து வந்த போலீஸôர், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெண்ணைக் கடத்தியதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸôர் அவரை சிறையில் அடைத்தனர்.

கலைவாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரது பெற்றோரும் நீதிமன்றத்துக்கு வந்தனர். எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் சார்பாக வழக்கறிஞர் பி.எச். மனோஜ்பாண்டியன் ஆஜரானார். கலைவாணிக்கு 18 வயது ஆகவில்லை. எனவே அவரது பெற்றோருடன் அவரை அனுப்ப வேண்டும் என்றார் வழக்கறிஞர்.

கலைவாணியைக் கடத்திச் சென்றதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அரசு வழக்கறிஞர் பாபு முத்து மீரான் கூறினார்.

நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே. மோகன்ராம் ஆகியோர் கலைவாணியிடம் விசாரணை நடத்தினர். சிவகுமார் என்னைக் கடத்தவில்லை என்றும், என் விருப்பத்தின்பேரில்தான் அவருடன் சென்றேன் என்றும் கலைவாணி கூறினார். பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார். அவரது கருத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், அவர் பெற்றோருடன் செல்ல அனுமதி அளித்தனர். வழக்கை இத்துடன் முடிப்பதாகக் கூறினர்.

Posted in 18, ADMK, AIADMK, Arrest, Constituency, Love, Major, MLA, Movie, Police, R Kalaivani, Ravichandran, Salem-1 | Leave a Comment »

Indian Military vs West Bengal Police in Calcutta

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2007

பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய இராணுவத்தினர்- கொல்கத்தாவில் சம்பவம்

இந்திய இராணுவத்தினர்
இந்திய இராணுவத்தினர்

புத்தாண்டுக் கேளிக்கை கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்டத்திர ஒட்டலுக்கு சென்ற இந்திய இராணுவத்தின் மேஜர் மற்றும் கேப்டன் தர அதிகாரிகள் இருவர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த இரண்டு அதிகாரிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு – காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதையறிந்த, அந்த இரு அதிகாரிகள் பணிபுரியும் 3 ஆவது மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப் கேணல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும், சில சிப்பாய்களும், தானியங்கி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று, தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளை விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல் நிலையத்தையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.

இதில் 11 காவலர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்ட வேறு சிலர் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க அரசு இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.

சீரழிந்துவரும் ஒழுங்கு நிலை, பொதுமக்களின் ஏமாற்றம், குற்றப்பிரிவினர் செயற்படாதமை, நாட்டில் குற்றம் புரிந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பது போன்ற நிலைமைகளில் உருவாகின்ற இராணுவத்தினர் மத்தியிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கர்ணல். ஹரிகரன் கூறியுள்ளார்.

இராணுவத்தினர் செய்யும் சில பாதகமான நடவடிக்கைகள் மாத்திரமே செய்திகளாக வெளிவருவதாகவும், அவர்கள் செய்யும் நல்ல செயல்கள் எதுவும் வெளிவருவதில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

Posted in Army, Calcutta, Captain, Captain Mahesh, Colonel, Demolition, Government, Incidents, India, Jail, jawans, Kolkata, Lieutenant-Colonel Pratap Singh, Madras Regiment, Major, Major Chandra Pratap Singh, Major Kavi, Military, Misbehaviour, Molest, Negative, New Year, officers, Park Street, Police, Police Commissioner, Police Station, Prison, Protest, raiders, ransacking, WB, West Bengal | 2 Comments »